Share

Oct 29, 2020

இந்த வார ஆனந்த விகடனில் சுகுணா திவாகர்

 இந்த வார ஆனந்த விகடனில் 

சுகுணா திவாகர் 


"திருமணத்திற்கு முன்பான உறவில் ஈடுபட நேர்ந்தால் பெண்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க இருக்க வேண்டும் " என்று குஷ்பு தெரிவித்த கருத்தை 'ஒட்டு மொத்தமாகத் தமிழ்ப் பெண்களை இழிவு படுத்தி விட்டார்' என்று போராட்டங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள், வழக்குகள் தொடுக்கப்பட்டன. அப்போது விடுதலைச் சிறுத்தைகள் குஷ்புவுக்கு எதிராக இருந்தார்கள். 


இப்போது மனுஸ்மிருதியில் உள்ள ஆணாதிக்கம் குறித்து திருமாவளவன் தெரிவித்த கருத்துகளை, 

"ஒட்டு மொத்தமாக இந்துப் பெண்களைத் திருமாவளவன் இழிவு படுத்தி விட்டார் " என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் இந்துத்துவ வாதிகள். 

இப்போது குஷ்பு எதிர்த்தரப்பில் நின்று திருமாவளவனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். 


கருத்துச் சுதந்திரம் என்பது வசதிக்கேற்ப 'பயன்படுத்தப் படுவதற்கு' இது ஒரு சமீபத்திய, சரியான உதாரணம்.



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.