Share

Showing posts with label Shakespeare. Show all posts
Showing posts with label Shakespeare. Show all posts

Nov 28, 2020

Words, words, words

 Polonius :What do you read, My Lord?


Hamlet : Words, words, words. 


'பூச்சி டயலாக் ' ஜானகிராமன் கதை. 


ஒரு கரப்பான் பூச்சி ஒரு கறுப்பு எறும்பிடம்

' என்சைக்ளோப்பிடியா பிரிட்டானிக்கா வாசிச்சதுண்டா? 

புக் ஆஃப் நாலெட்ஜ் படிச்சிருக்கியா? ' ன்னு கேட்கும். 


கறுப்பு எறும்பு பீற்றலாக "எங்களை என்ன வேலை மெனக்கெட்ட ஜாதின்னு நெனச்சியா, இப்படிப் புஸ்தகம் புஸ்தகம்னு அலையறதுக்கு? 

நாங்க என்ன கரையானா, ஒன்ன மாதிரி கரப்பானா? இல்ல மனுஷனா?" 


கரப்பு பதிலடி " ஞானசூன்யத்தைக் கௌரவமாச் சொல்லிக்கிற"


.. 


1972ல் டெல்லியில் 

தி. ஜானகிராமனை சந்திக்க வேண்டி செ.ரவீந்திரனை அழைத்துக்கொண்டு போனவர் பொன் ராஜாராம். 


தி. ஜானகிராமன் அப்போது 

ரவீந்திரனை

 கூர்ந்து பார்த்து கேட்டிருக்கிறார்.

 "உங்கள் வயதென்ன?" 


ரவி : "இருபத்தெட்டு" 


தி. ஜா : "முப்பத்தைந்து வயதிற்குள்ள நீங்க

 உலக இலக்கியம் படிச்சி முடிங்க."


..


இந்த புகைப்படம் இந்த 2020 ஜனவரியில். 

என்னுடைய நூல் 'சினிமா எனும் பூதம்' 


2019 புக்ஃபேர்ல சாரு நிவேதிதாவை 

ஏதோ ஒரு சேனலுக்காக காயத்ரி பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். 


சாரு : பெண்கள் இருந்தாலும் 

உளவியல் நெருக்கடி. 

இல்லாவிட்டாலும் உளவியல் நெருக்கடி. 


காயத்ரி : அது Likewise. 

ஆண்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும்.. 

Likewise.



Nov 4, 2020

Dangerously dysfunctional

 அச்சரங்களுடைய நகரம் கோட்டயம். 

பூரங்களுடைய நகரம் திருச்சூர். 

After effects ஊர்களுக்கும் உண்டாகும். 


நந்தியின் மகன் தான் விநாயகன் 

என்று ஒரு குறிப்பு. 


நகுலனின் குட்டியான ஆங்கிலக் கவிதை 

What is birth? 

We are the after - effect. 


சிவ வாக்கியர் ' மரணம் - அது ஜனனத்தின் பயன்.' 


 டெம்பஸ்ட்டில் சேக்ஸ்பியர் : Hell is empty, and all the devils are here. 


ஓ, அப்படியா. Dangerously dysfunctional. 


To spell this out in black and white - 

அதனால் தானா The devil has better chance in this world. 


ஆயிரம் வருஷ பழைய கோயில்களை பார்ப்பதில் எப்போதும் ஒரு கிளர்ச்சி, பரவசம் உண்டு. 

மூன்று வருடங்களுக்கு முன் குறுங்காளீஸ்வரர் கோயில் பார்க்க  போயிருந்த போது 

குருக்களின் lip service "இந்த கோயிலுக்கு வந்துட்டாலே நல்ல காலம் பொறந்துட்டதுன்னு அர்த்தம். நல்ல காலம் ஆரம்பிச்சா தான் இந்த கோயிலுக்கு வர முடியும்." 


ஒரு  நாடகத்தில் பகவான் க்ருஷ்ணராக 

க்ரேஸி மோகன். 

க்ரேஸி க்ருஷ்ணருக்கு போன். 

" க்ருஷ்ணா, போன்ல உங்க அம்மா "


" நான் இல்லேன்னு சொல்லிடு "


" நீ இல்லேன்னு சொன்னா

 அது நாத்திகம் இல்லையா? "


" நான் ஆத்துல இல்லேன்னு சொல்லிடு. 

அது ஆத்திகம் "


... 

Oct 27, 2020

அந்திம காலம்



எழுத்தாளர் சுஜாதா தான் மறைவதற்கு சில வருடங்களுக்கு முன் தன் அந்திம காலம் பற்றிய துக்கத்தை வெளிப்படுத்தினார் :

" நீண்ட வாழ்வின் இறுதியில் உள்ள சோகங்கள் சற்றே துருத்தி நிற்கின்றன.

வானவில் கனவுகள் 

நிறமிழந்து விட்டது தெரிகிறது."


'To view with hollow eye and wrinkled brow

An age of poverty.'

- Shakespeare - The Merchant of Venice 


" மீனோட்டம் " சிறுகதை தொகுப்பு முன்னுரையில் லா.ச.ரா வாழ்க்கையின் மாலையில் தான் இருப்பதாக குறிப்பிட்டு விட்டு ' மாலை என்ன ..அந்தியே வந்தாச்சு " என்பார். 

இப்படி சொன்னது 

லா.ச.ரா இறப்பதற்கு

 கால் நூற்றாண்டுக்கு முன்னரே. 


"Age, with his stealing steps,

Hath clawed me in his clutch." 

- Hamlet


இளமையில் உலகின்பக்கேணியில் மூழ்கி முக்களித்த பின் அந்திம காலம் தரும் துயரம். 

' அந்தி ' என்ற தலைப்பில் ஆதவன்

 ஒரு அருமையான கதை எழுதியிருக்கிறார். 


முதுமை மரணம் பற்றி ' கழுகு ' என்ற கதை தி .ஜானகிராமன் எழுதியிருக்கிறார். 


முதுமையின் வக்கிரம் பற்றி 'பாயசம் ' என்ற கதை, 'அவலும் உமியும்' குறுநாவல் எழுதியிருக்கிறார்.


"And as with age his body uglier grows,

So his mind cankers."

- The Tempest


 முதுமையின் அவலம் " விளையாட்டு பொம்மை '' என்ற திஜாவின் அபூர்வமான சிறுகதை.

பிராயமான காலத்தில் பிரகாசிக்கும் கூர்ந்த ஊடுருவும் புத்தி சக்தி 

கடைசியில் எப்படியெல்லாம் மழுங்கி விடுகிறது. 


" Sir, I am too old to learn."

- King Lear 


இந்திரா பார்த்தசாரதியின் 'வெய்யில் 'மறுபக்கம் ' என்று திரைப்படமானது .


பல எழுத்தாளர்கள் கடைசியில் வயதான காலத்தில் குருவிமுட்டைகளை போடடுத்தளளுவார்கள். மழுங்கிய எழுத்து.

"When the age is in, the wit is out"

- The Merchant of Venice 


கடைசி காலம் தன் தோல்விகள் பற்றி 

அசை போடும்போது தான் காணாத

 வெற்றிகளை தன் புத்திரன் காணவேண்டும்

 என மனித மனம் ஏங்கும். 

ஒருவர் தன்னை மற்றவர் ஜெயிக்கவேண்டும் என்று விரும்புவது தன் மகன் விஷயத்தில் தான். 

 " புத்ராத் இச்சேத் பராஜயம் "


ஆர்தர் ரைம்போ நல்ல இளமையில் இருக்கும்போதே முதுமை பற்றி கவிதை எழுதிவிட்டான் - நாகார்ஜுனன் மொழிபெயர்ப்பு :

புறப்பாடு

"போதும்

பார்த்தாகி விட்டது. 

எல்லாவிதமும்

சந்தித்தாகி விட்டது

பார்வையதை. 

போதும். 

நகரங்களின்

மாலையின்

கதிரவனின்

சந்தடி போதும் எப்போதுமாக. 

போதும்

அறிந்தாகிவிட்டது

வாழ்க்கையின் நிறுத்தம் பல

ஓசை பல

பார்வையும்


இனி புறப்பாடு."


இக்கட்டான சோகமான நிலையை,

பரிதவிப்பான நிலையை

Moment of Calvary என சொல்வார்கள்.                    முதுமைக்கால மன நிலையே,

மரணத்தை மட்டுமே எதிர்கொள்ளும் நிலையே Moment of Calvary தானே.

.. 

Oct 9, 2020

Disgrace and Discomfort

 Lady Macbeth : "It is the eye 

of the childhood

 that fears a painted devil" 


A ruffian says "You fear, there fore I am" 


கவி ஒரு குழந்தை. 


'கனவின் மனிதன்' தலைப்பிடப்பட்ட இந்த கவிதை 

குழம்பிய ஞானக்கூத்தன் 


"ஒருவனைக் கனவில் கண்டேன் 

உதடுகள் பற்கள் கண்கள் 

தலைமயிர் நகங்கள் கை கால் 

அனைத்துமே மனிதன் போல 

இருந்திடும் அவனைக் கண்டேன் 

கனவிலும் மனிதன் போலத்

தோன்றினால் மனிதன் தானா? "


வைத்தீஸ்வரன் கவிதையில் கடவுளின் விசாரம் 

' மரங்களை நம்பி 

பறவைகளைப் படைத்தேன்... 

அப்போது மனிதர்களை யோசிக்கவில்லை!'


Why be a  man when you can be a success? 

என்று திகைக்க வைக்கும்

 பெர்டோல்ட் ப்ரெக்ட் கேள்வி. 

தோற்பவன் தான் மனிதன்? 

அல்லது ஜெயிக்க முடிகிற போது

 மனிதத்தையும் கைவிடாமல்

இருக்க வேண்டியதன் அவசியம். 


மனிதன் பற்றி ப்ரெக்ட். 

" மனிதன் ரொம்ப உபயோகமானவன். 

அவனால் பறக்க முடியும் 

கொலை செய்யக்கூடியவன் 

ஆனால் அவன் ஒரு குறையுள்ளவன். 

அவனால் சிந்திக்க முடியும்."


திரும்பவும் ஷேக்ஸ்பியர் " There is no art to find 

the mind's construction in the face" 


Looks can be deceiving. 

மூடருக்கும் மனிதர் போல முகமிருக்குதடா 

- கண்ணதாசன் ஆதங்கம். 


குறள் - மக்களே போல்வர் கயவர் 


What power shapes a human's way. 

Disgrace and Discomfort.


May 18, 2020

Corona Lockdown

The wait doesn't seem to end

Beckett's 'Waiting for Godat'

Nothing to be done.

You are on Earth. There is no cure for that.

The tears of the World are a constant quantity.

......

The importance of washing hands

"Out, damned spot! Out, I say

Will these hands never be clean?
All the perfumes of Arabia will not sweeten this hand"

Feeling like Lady Macbeth
with all the frequent and Compulsive handwashing.
The state of loneliness.
Fighting against an irresistible fate.

Out damned Corona, Out, I say

Out aggravation, Out contamination

Washing hands are caring hands.

....

Present fears are less than horrible imaginings.
Come what may,
Time and the hour runs through the roughest day.
- Macbeth

..

Apr 1, 2016

ஹேம்லெட்


சேக்ஸ்பியரின் துன்பியல் நாடக நாயகன் ஹாம்லெட் பற்றி எழுதப்பட்ட அளவுக்கு வேறெந்த கதாநாயகன் பற்றியாவது எழுதப்பட்டிருக்கவே முடியாது.


ஹேம்லட் ஸ்பெஷலிஸ்ட் என அறியப்பட்ட ஹொரேஸ் ஹோவர்ட் ஃபர்னஸ் நூறு வருடங்களுக்கு முன்னே 1908ல் சலித்துப்போய் எழுந்து சாமானை சொறிந்து விட்டு சொன்னார்: ” கடைசியாக ஒன்று கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து இனிமேல் யாரும் ஹாம்லட் பற்றி எந்த ஒரு கட்டுரையும் எழுத வேண்டாம். என் உயிருக்குயிரான நெருங்கிய நண்பன் ஒருவன் மரணப்படுக்கையில் இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனை உயிர் பிழைக்கச்செய்ய ஒரு வழி இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.அதாவது ஹாம்லெட் பற்றிய தன் தியரியை அவன் வெளிப்படுத்தினால் அவன் பிழைக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர் சொன்னாரென்றால் நான் உடனே பதறி கதறுவேன். “போதும்! ஹாம்லெட் பற்றிய இன்னொரு தியரி வருவதற்குப்பதிலாக என் நண்பன் செத்துப்போகட்டும்.அவன் செத்தாலும் சரிதான்!”


அதன் பின் ஜான் பேரிமோர், லாரன்ஸ் ஒலிவியர், ரிச்சர்ட் பர்ட்டன் என்று எத்தனை பேர் ஹாம்லெட்டாக நடித்திருக்கிறார்கள். திரைப்படமாக ஹாம்லெட் 2015ல் கூட தயாரிக்கப்பட்டு வெளி வந்திருக்கிறது. இந்தியில் ஹாம்லெட் சென்ற வருடம் ’ஹெய்தர்’ ஆக வெளி வந்து நிறைய விருதுகள் பெறுகிறது.


ஹாம்லெட் சாசுவதமான Evergreen காவிய நாயகன்!

“After Jesus, Hamlet is the most cited figure in Western consciousness” என்று சொல்லப்படுகிறது.

சென்ற டிசம்பர் மாதம் கூத்துப்பட்டறை முழு நேர நடிகர்கள் பாண்டிச்சேரியில் ஒரு வொர்க் ஷாப் போன போது அங்கே அரியான் முஷ்கின் என்ற பெண் பிரஞ்சு நாடக அறிஞர் கேட்கிறார்: “How many of you know Shakespeare? If you don’t know Shakespeare, how can you say you are an actor?”
……………..




ஹேம்லெட்டின் அப்பாவின் ஆவி!
Revenge your father’s foul and most unnatural murder! The serpent that did sting your father’s life now wears his crown. But leave your mother to heaven. 

அப்பா ஹாம்லெட்டின் ஆவி ஹாம்லெட்டை ஆக்கிரமித்தது என்பது தெரிந்ததே. ஹாம்லெட்டாக நடித்த நடிகர்களைக்கூட அவர்களுடைய சொந்த அப்பாவின் ஆவி ஆக்கிரமித்த சுவாரசியம் தான் தெரியாததே!


எட்வின் பூத் 1853 துவங்கி1891 வரை ஹாம்லெட்டாக நாடகங்களில் நடித்தவர். இவருடைய அப்பா ப்ரூட்டஸ் பூத் முன்னதாக 1829 முதல்1849 வரை சேக்ஸ்பியரின் ஹாம்லெட்டாக நடித்தவர்.

எட்வின் பூத் சகோதரன் ஜான் பூத் infamous ஆக வரலாற்றில் அறியப்பட்டவன்.

 அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனை 26.04.1865 ல் சுட்டுக்கொன்ற நடிகன் ஜான் பூத்.


இதனால் எட்வின் பூத் ஹாம்லெட்டாக ஒரு ஒன்பது மாதம் நடிக்க முடியாமல் போய் விட்டது. பின்னர் மீண்டும் ஹாம்லெட்டாக மீண்டு, மேடையில் கலக்கு கலக்கென்று கலக்கி விட்டார்!

விஷயம் என்னவென்றால் ஹாம்லெட்டாக நடித்த எட்வின் பூத்துடன் அப்பா ப்ரூட்டஸின் குரல், ஹாம்லெட் அப்பா ஃபாதர் ஹாம்லெட்டின் ஆவி மூலம் எப்போதும் பேசுவதாக உறுதியாக சொல்லிக்கொண்டே இருந்தார். நாடகத்திலேயே அப்பா ப்ரூட்டஸ் பூத் சிறு உருவம் ஒன்றை ஹேம்லெட் அப்பாவின் ஆவி வரும் காட்சிகளுக்கு எட்வின் பயன்படுத்தினார்.
இதெல்லாம் 150 வருடங்களுக்கு முந்தைய சமாச்சாரம் என்று ஒதுக்கலாம்.


டேனியல் டே லூயிஸ் ஹாலிவுட் நடிகர். ஹாலிவுட் சரித்திரத்தில் ஹீரோவாக மூன்று படங்களுக்கு ஆஸ்கார் அவார்ட் வென்ற ஒரே நடிகர்.
My left foot, There will be blood, Lincoln ஆகிய படங்கள் தான் அவருக்கு ஆஸ்கார் பரிசு வாங்கிக்கொடுத்தன.
இவர் My left foot படம் நடித்த 1989ம் வருடம் ஹாம்லெட்டாக ஒரு மேடையில் நடித்துக்கொண்டிருந்தார். அவருடைய அப்பா கவிஞர் சிசில் டே லூயிஸ் 1972ல் இறந்து விட்டார். எப்போதோ மறைந்து விட்ட  தன் அப்பா சிசில் ’ஆவி’யை 1989ல் மேடையில் டேனியல் பார்த்து விட்டு அலறி நாடகத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் இடையிலேயே வெளியேறி விட்டார்!

“Tell why your canonized bones hearsed in death have burst their cerements, why the sepulchre wherein we saw you quietly interred has oped ponderous and marble jaws to cast you up again.( The tomb is personified here as vomiting the Ghost from it’s mouth!) What may this mean? Say why is this?”


“சவப்பெட்டியில் பூஜை செய்து அடக்கம் செய்யப்பட்ட உமது எலும்புகள், பெட்டியை உடைத்துக்கொண்டு இப்படி ஏன் தான் வெளியேறி விட்டதோ? உம்மை அமைதிப்படுத்தத்தானே கல்லறையில் புதைத்தோம்? அந்தக் கல்லறை, தன் பளிங்கு வாயைத் திறந்து ஏன் உம்மை வாந்தியெடுத்து விட்டது!”

…………………………..

http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html


http://rprajanayahem.blogspot.in/2013/03/blog-post_27.html


http://rprajanayahem.blogspot.in/2010/01/blog-post_11.html


http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_02.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_26.html


..........................................



Mar 27, 2013

அசோகமித்திரனின் ‘கோயில்’ சிறுகதை


அசோகமித்திரனின் ‘கோயில்’ கதை செயலோயச்செய்து விட்டது.

 

இந்த ‘கோயில்’ கதை அவருடைய சமீபத்திய சிறுகதைத்தொகுதி  ‘1945 இல் இப்படியெல்லாம் இருந்தது’ காலச்சுவடு வெளியீட்டில் இருக்கிறது.

அசோகமித்திரன் படைப்புகளை முழுமையாய் படித்தவர்களுக்கு இந்தக் கதை தரும் அனுபவம் புதிதாய் படிப்பவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

க.நா.சு., சுந்தர ராமசாமி இருவரையும் தகப்பனார் உறவு மிகவும் ஆக்கிரமித்திருக்கிறது. ஆனால் இந்த இருவரின் நாற்பதையொட்டிய மத்திய வயது வரை தகப்பனார் உயிரோடிருந்திருக்கிறார். ஆனால் அசோகமித்திரன் இருபதையொட்டி தகப்பனாரை இழந்தவர்.

18 வது அட்சக்கோடு நாவலில் அவருடைய அப்பா உயிரோடு வருவார். அப்பா வரும் கதைகள் என்றால் சட்டென்று லீவு லெட்டர், மண வாழ்க்கை,, திருநீலகண்டர், இன்ஸ்பெக்டர் செண்பக ராமன் போன்ற கதைகள் நினைவுக்கு வருகிறது.

அவருடைய லேட்டஸ்ட் நாவல் ‘ யுத்தங்களுக்கிடையில்’- அப்பா மாயவரத்திலிருந்து செகந்திரா பாத்  போய் பிழைப்புச்சவாலை ஏற்பார். இப்படி ஒரு அன்னியப் பிரதேசத்திற்கு எது அவரை உந்தியது.

அப்பாவின் மரணத்தையொட்டி நடந்தவைகளைப் பேசும் ’அப்பாவின் சிநேகிதர்’ ‘ முனீரின் ஸ்பான்னர்கள்’ போன்ற சிறுகதைகள்.

செத்துப்போன அப்பா பற்றி எத்தனை தடவை பிரஸ்தாபித்திருக்கிறார்!
.... என் அப்பா செத்துப்போய் விட்டார்.....
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டிருக்கிறார் அசோகமித்திரன்.

அசோகமித்திரனைத் தொடர்ந்து படிப்பவர்கள் அந்த அப்பா கேரக்டரை முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அறிவர். முழுமையாக படித்தவர்களும் அந்த அப்பாவின் கதாபாத்திரத்துடன் பரிச்சயம் கொண்டிருப்பர். அப்படிப்பட்டவர்கள் இந்த ’கோயில்’ கதை படிக்கும்போது சிலிர்ப்புக்குள்ளாகாமல் இருக்க முடியாது.

கண்டதையும் கேட்டதையும் அனுபவித்ததையும் வரிசை மாறிக் கூறுவது தானே கதை என்பார் அசோகமித்திரன்.

‘யார் எழுதினாலும் கதைகளை வாசித்துவிட்டு வாசித்ததைக் கவனத்திலிருந்து விலக்கி விடுபவர்களுக்கு இச்சங்கடம் நேராது; ஆனால் தொடர்ச்சியான வாசிப்பு தரும் அனுபவத்தைக் கவனத்தில் இருத்தும் வாசகருக்கு ஒரு கேள்வி எழவே செய்யும். ஒரு எழுத்தாளனின் படைப்புகளில் திரும்பத் திரும்ப வரும் சில பாத்திரங்களும் சம்பவங்களும் உண்மையானதாலன்றி இப்படி மீண்டும் மீண்டும் வெவ்வேறு படைப்புகளில் இடம் பெறுமா?’ என்ற வாசகனின்  தவிப்பையும் அசோகமித்திரன் அறிந்து சொன்னவர் தான்.


அப்பா செகந்திராபாத்தில் இறந்து இருபது வருடங்கள் ஆகி விட்டது.
அப்பா பிறந்து வளர்ந்த ஊர் மாயவரத்திற்கு தன் நாற்பதையொட்டிய வயதில் சென்னையில் இருந்து கதை சொல்லி வருகிறார். அப்பா இந்த ஊரில் தான் இருபத்திரண்டு வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்.

அவருடைய கஸின் சிஸ்டர் காமாட்சி வசிக்கும் பூர்வீக வீடு.

 உள்ளூரில் பார்க்க வேண்டிய வேலையை இவர் முடிக்கிறார்.
 மாயவரம் காமாட்சி கோயிலுக்கு கஸின் போகிறாள்.
இவரும் கொஞ்ச நேரம் கழித்து அந்த காமாட்சி கோயிலுக்குப் போகிறார்.

எதிரே கோயிலுக்குப் போய் விட்டுத்திரும்பும் காமாட்சி “ இன்னக்கென்னமோ எனக்கு ஏதோ பயமாயிருந்தது.” என்று சொல்கிறாள்.


 கோயிலுக்குள் வெளிச்சம் போதாது.
அவருடைய முன்னோர்கள் இந்தக் கோயிலுக்கு தினமும் போயிருப்பார்கள். இருட்டில் எதிலோ இடித்து காலில் இவருக்கு இப்போது ரத்தக்காயம்.
சுற்றி கடைசிப்பக்கத்தை அடைகிறார்.


அவ்வளவு நீளப்பிரகாரத்திற்கு ஒரு விளக்கு கூட கிடையாது.பயமாகத்தான் இருக்கிறது. தூரத்தில் ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவர் அசோகமித்திரனையே பார்த்தபடியே முன்னேறி வந்து கொண்டிருக்கிறார்.
இருவரும் எதிரும் புதிருமாக நிற்கிறார்கள். யார் அது? யார்?
கன்னத்தில் அறைந்தது போல அடையாளம் தெரிகிறது! இருபது ஆண்டுகளுக்கு முன் இறந்த அப்பா தான் இவர் முன்னே நின்று கொண்டிருக்கிறார். ‘அப்பா!’ என்று அசோகமித்திரன் கத்துகிறார்.

கோயிலாக இருந்தாலென்ன? பழைய கட்டிடங்களுக்கெல்லாம் தனியாகப் போகக்கூடாது.

You tremble and look pale:
Is not this something more than fantasy?
.....What may this mean?.... Why is this?..

- Shakespeare in Hamlet


........................................

http://rprajanayahem.blogspot.in/2012/07/blog-post_17.html

http://rprajanayahem.blogspot.in/2012/07/1948.html

http://rprajanayahem.blogspot.in/2010/01/blog-post_13.html

Sep 2, 2009

மனித மண்டைஓடு

"ஆயிரத்தில் ஒருவன் " எம்ஜியார் படத்தில் மண்டை ஓடு ஒன்றை பார்த்துவிட்டு நாகேஷ் சொல்வார்
" எவனோ ஒருத்தன் சிரிச்சிக்கிட்டே செத்துருக்கான்!"


Human skull is always smiling!


சுஜாதா இருபது வருடங்களுக்கு முன் எழுதினார் " மண்டை ஓடுகள் சிரிப்பதற்கு காரணம் 'சாவின் ரகசியம் ' தெரிந்து விட்டதால் ."

தொன்ம ரகசியம் ஒன்று - பரமேஸ்வரன் கழுத்தில் மண்டைஒட்டு மாலை அணிபவர் . அந்த மண்டை ஓடுகள் - அவருடைய பிரிய சகி பார்வதியின் முந்தைய பிறப்புகளின் உடல்களுடைய கபாலங்களை தான் பித்தன் சிவன் மாலையாக கோர்த்து அணிந்துள்ளாராம்.



Human Skull – The Contemplation of Human Mortality.

ஷேக்ஸ்பியரின் ஹேம்லட் கல்லறை ஒன்றில் ஒரு மண்டையோட்டை ப்பார்த்து சொல்கிறான் "Alas, poor Yorick. I knew him ..A fellow of infinite jest".
Yorick was once the court fool .

ஹேம்லட் தன்னை சிறுவனாய் இருக்கும்போது உப்பு மூட்டை தூக்கி விளையாடி , சிரிக்கவைத்து ஆசுவாசப்படுத்திய பால்ய நண்பன் இந்த கோமாளி யோரிக் கின் மண்டை ஓடு கண்டு உணர்ச்சி வசப்படுகிறான் .
A sentimental affection for the deceased jester.

Yorick is a reminder that all of life is not meloncholic and sour, that there was a happier time in even Hamlet's dark, morose life.
..