Share

Apr 18, 2026

வேடிக்க - 62



மார்லன் ப்ராண்டோவோடு சிவாஜி கணேசன் ஒப்பிடப்படுவது?


மார்லன் ப்ராண்டோவுக்கு,
தான் என்ன செய்கிறோம் என்பது நன்றாகவே தெரியும்.

Apr 16, 2026

ஊட்டி வர்க்கி

ரொம்ப நாளைக்கு பிறகு  பிரமாதமாக
 ருசியான பலகாரம் சாப்பிட கிடைத்தது.
குன்னூர் மாடர்ன் ஸ்டோர்ஸ் மோடிஸ் Moddy's பேக்கரியில் கிடைத்த 
'ஊட்டி வர்க்கி'.
இவ்வளவு காலத்தில் 
 வர்க்கி 
 ரொம்ப ரொம்ப சுவையா இப்ப தான் கிடைத்திருக்கிறது.

Ginger will be hot in the mouth too.
- Shakespeare 

Pleasure is inherent. A refusal to become dull.
Lively, indulgent style.


 சாப்பிட சாப்பிட இன்னும், இன்னும் என்று தான் இருக்கிறது. போதும் என்று தோன்றவேயில்லை.

என்னோடு திருச்சி செயிண்ட் ஜோசப்'ஸில் எட்டாம் வகுப்பில் படித்த குன்னூர் எஸ். சிரில் வின்சென்ட் இப்ப அங்க எப்படி இருக்கிறானோ?

ஊட்டி வர்க்கி ஃபேமஸ் 
ஊட்டியில் Impala Bakery.
இம்பாலா பேக்கரி முதலாளி ஜஃப்பருல்லா பாயிடம செல் பேசினேன்.


https://www.facebook.com/100006104256328/posts/4468910899989008/?app=fbl

Apr 15, 2026

Movie Close up shot

Movie Close up shot 
Dialogue :  "அவ உண்மையிலே 'Queen' தான்டா"

The milestones,
places,
 that you pass in the harsh journey


R.P. Rajanayahem in Younger days 


Apr 13, 2026

சுந்தர ராமசாமியும் R.P. ராஜநாயஹமும்

கல்லூரி தமிழில் பாடத்திட்டத்தில் தி.ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி பாடமாக வைக்கப்பட்டிருந்தது. பின்னாளில் தி.ஜாவின் பரமரசிகனாக முத்திரை குத்தப்பட்ட நான் அப்போது ‘அக்பர் சாஸ்திரி’ சிறுகதைத் தொகுப்பை புரட்டிக் கூட பார்ககவில்லை

பி.ஏ., பட்டப்படிப்பு ஆங்கில இலக்கியம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலாமாண்டிலேயே ஜெயகாந்தனின் ‘ஒரு பிடிச் சோறு’ துவங்கி ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ வரை அத்தனை நூல்களையும் படித்து முடித்து என் இயல்புபடி Revise செய்துவிட்டேன். 

English Fiction என்ற அளவில் James Hadleychase, Alistair Maclean, Denise Robins, Agathachristie என்று படித்துகொண்டிருந்தவன்
 அப்போது தமிழில் மட்டும் ஜெயகாந்தனை முழுமையாக ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்ததை இப்போது நினைத்துப் பார்க்கும் போது முரண் நகையாகத் தோன்றுகிறது.

பி.ஏ. இரண்டாமாண்டு. 
 உடன் பிறந்த தம்பி அப்போது ‘பிரசாதம்’ என்ற புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு வந்திருந்தான். ‘சுந்தர ராமசாமி’ என்று பெயர் போட்டிருந்தது. அந்தப் புத்தகத்தை அசுவாரசியமாகப் புரட்டினேன். 

முன்னுரையை வாசித்தேன். 

‘வாழ்வின் கதி நதியின் பிரவாகம். நம்முடைய திட்டம், தத்துவம், அனுமானம், ஹேஸ்யம், ஜோஸ்யம் இத்தனைக்கும் ‘பெப்பே’ காட்டிவிட்டு ஓடுகிறது. எனக்கு என் வாழ்க்கை என்றாலே என் அனுபவம் மட்டும் தானே. ஆக, இது தான் வாழ்க்கை என்று நான் ‘பிடித்து’ வைத்துக் கோடு கீச்சுகிற போதே நான் சற்றும் எதிர்பாராத விதமாய், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வண்ணமாய் இவ்வுலகம் புதுக்கோலம் கொண்டு இயங்குகிறதே. அது தான் வாழ்க்கையா?’ என்றெல்லாம் விரிந்த அந்த முன்னுரை செயலோயச் செய்துவிட்டது.

முதல் சிறுகதை ‘பிரசாதம்’ படித்தவுடனே உற்சாகம் ஏற்பட்டது. ‘சன்னல்’ கதையைப் படித்து முடித்தபோது பித்துப் பிடித்தாற் போல் ஆகிவிட்டது. எனக்கு அழுகையே வந்துவிட்டது.  கிணற்றுத் தவளை. நம்பிக்கை உடைந்து விட்டது. 

அப்புறம் மறு நாள் தான் ‘லவ்வு’ கதையைப் படித்தேன். கிடாரி, ஒன்றும் புரியவில்லை,வாழ்வும் வசந்தமும் ஆகிய கதைகள் என்னை ஒரு புரட்டு புரட்டிப் போட்டுவிட்டன. எல்லாக் கதைகளுமே ஸ்டாம்பு ஆல்பம், சீதை மார்க் சீயக்காய்த் தூள், மெய்+பொய்=மெய் எல்லாமே ரொம்ப வித்தியாசமான அனுபவத்தைத் தந்தன. எதுவுமே சோடையில்லை.

SERENDIPITIOUS HAPPY DISCOVERY ! யார் இந்த சுந்தர ராமசாமி? ஜெயகாந்தனின் அத்தனை நூல்களிலுமிருந்து மாறுபட்ட உயர்ந்த வாசிப்பு அனுபவத்தை ஒரு சிறுகதைத் தொகுப்பிலேயே தந்து விட்ட சுந்தர ராமசாமி. ஜெயகாந்தனிடம் காணக் கிடைக்காத LITERARY CLEVERNESS வேறு தூக்கலாக இவரிடம் தெரிகிறது. இப்போது நினைக்கிறேன்.  

வாசகனாக TRANSFORMATION 
சுந்தர ராமசாமியின் ‘பிரசாதம்’ மூலமே கிடைத்தது.

......

மீள்பதிவு 2008

2005ல் சௌந்தர சுகன் பத்திரிகையில் வெளி வந்த கட்டுரையில் இருந்து.

22.02.2001ல் திருச்சி தமிழ் நாடு ஹோட்டலில் சுந்தர ராமசாமியிடம் பிரசாதம் செய்த மாயம் பற்றி சொன்ன போது இதை நீங்கள் எழுத வேண்டும் என்றார். ராஜநாயஹம் எழுத்தாளர்களுடனான அனுபவத்தை பதியச் சொன்னார்.

கடிதத்திலும் வலியுறுத்தினார்.
உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக எழுத வேண்டும் என்றார்.

சுந்தர ராமசாமி சொன்ன விஷயம் பற்றி பெரிய பிரமை எதுவும் இல்லை. 
அந்த காலங்களில் இளைய வாசகர்களிடம், பலரிடம் 
எப்போதுமே  "எழுதுங்க" "எழுதுங்க" ன்னு சொல்வார்.

.

சுந்தர ராமசாமி "இறந்த காலம் பெற்ற உயிர்" நூலில் 'திண்ணைக்கு' கட்டுரையில் ராஜநாயஹம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த 'திண்ணைக்கு' கட்டுரை தான் சுந்தர ராமசாமி மீதான கடும் கசப்பு, கடுமையான பகைக்கான காரணமாக ஜெயமோகன் குறிப்பிட்டதுண்டு.

ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை' படித்து விட்டு உடனே சு.ரா எதிர் வினை 
சுந்தர ராமசாமி : Dear R.P. Rajanayahem, 
I am sorry to know that it was your turn this time to Receive Slanderous remarks. 
I am being inflicted with peril and mental Agony 'For the past fifty years by this type of irresponsible remarks.

Apr 9, 2026

எத்தன சாமி வந்தாரோ எத்தன சாமி போனாரோ

கூத்தாடும் நினைவு 

கூத்துப்பட்டறை ந. முத்துசாமியுடன் 
R.P. ராஜநாயஹம் 

எத்தன சாமி வந்தாரோ எத்தனை சாமி போனாரோ 
அத்தன சாமி ஒன்னா சேந்து 
முத்துசாமி 
ஆனாரோ

உங்கள் கொள்கை என்ன என்ற கேள்விக்கு கடைசி வரை 
'திராவிட கொள்கை'
என்ற ந.முத்துசாமி

உயர்திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் R.P. ராஜநாயஹம் பற்றி

உயர்திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 
R.P. ராஜநாயஹம் பற்றி :

"ஒவ்வொருவரையும் கூகுள்செய்து கண்டறிந்து,                         
‘ஓ, இவரா… இவருக்குப்பின் இப்படியொரு கதையா’ என்று ஆச்சரியப்படும் வகையில் திரைத்துறையை ‘சினிமா எனும் பூதம்’ நூலில் அடக்கி நமக்குள் கடத்துகிறார்
 R. P. ராஜநாயஹம். 

எண்ணிலடங்கா தகவல்களை எளிமையாக நேர்த்தியாக எப்படிச்சொல்ல முடிகிறது என மலைத்தேன் 

இதில் ‘கலைந்த ஒப்பனை’ என்றொரு பகுதி. வேறொருவர் நடிக்க வேண்டியது, அவர் திடீரென இறந்ததால் அவ்வாய்ப்பு இவருக்கு வரும். நடித்துவிடுவார். அக்காட்சிகள் எடிட்டிங்கில் போய்விடும். அதைப் படிக்கும்போது ஒரு பக்கம் நகைச்சுவையாகவும், மறுபக்கம் எவ்வளவு போராட்டம் என்று வருத்தமாகவும் இருந்தது.

இதில் ‘movie connoisseur’ என்ற வார்த்தை பிரயோகம் வரும். அதாவது சினிமா வல்லுநர். உண்மையில் R. P. ராஜநாயஹம் ஒரு movie connoisseur. சினிமா குறித்து பலர் எழுதியிருந்தாலும் பலரும் மறந்த கலைஞர்களை நினைவுகூர்கிறீர்கள். வாழ்த்துகள் சார். நிறைய எழுதுங்கள்!"

...

மீள்பதிவு

Apr 8, 2026

எத்தன சாமி வந்தாரோ எத்தன சாமி போனாரோ

கூத்தாடும் நினைவு 

கூத்துப்பட்டறை ந. முத்துசாமியுடன் 
R.P. ராஜநாயஹம் 

எத்தன சாமி வந்தாரோ எத்தனை சாமி போனாரோ 
அத்தன சாமி ஒன்னா சேந்து 
முத்துசாமி 
ஆனாரோ

உங்கள் கொள்கை என்ன என்ற கேள்விக்கு கடைசி வரை 
'திராவிட கொள்கை'
என்ற ந.முத்துசாமி

Apr 6, 2026

ஜெய்சங்கரிடம் ஃபோட்டோ வாங்கிய எம்ஜிஆர் ரசிகனான பொடியன்


ஜெய்சங்கரிடம் 'அன்புள்ள மான்விழியே' யில் இருந்த துறு துறுப்பு, Smartness ஹரநாத் ராஜாவிடம் 'அந்தால ஓ சிலக்கா'வில் கொஞ்சம் கூட இல்லை. 

தமிழ் தெலுங்கு இரண்டிலுமே
 ஜமுனா பூரணம் தான். Graceful .இயல்பான நளினம்.

பொடியனாக இருக்கும் போது ஜெய்சங்கருக்கு காலேஜ் ரோடு விலாசத்திற்கு கடிதம் எழுதியதுண்டு.
அவருடைய பதில் printed letter
 " அன்புடையீர் வணக்கம். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி. என் கையொப்பமிட்ட புகைப்படம் இத்துடன் அனுப்பியிருக்கிறேன்.

அன்புடன்
ஜெய்சங்கர் 

புகைப்படத்தில் கையெழுத்தும் அச்சிடப்பட்டிருந்தது.

திருச்சி செயிண்ட் ஜோசப்'ஸில் 
ஜெய்சங்கரிடம் ஃபோட்டோ வாங்கினவன் என்ற பிரபலம்.

அப்போது எம்ஜிஆர் ரசிகன். 
திமுக என்பதால் பாதிரியார் ஆண்டனி ராஜ் கோபமாக கேட்டார்" உன் தலைவன் கடவுளே இல்லை என்று சொல்பவர். தெரியுமாடா? அந்தோ, மனிதன் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக்கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்து போனால் என்ன பயன்? " 

" சின்னப்பையனா இருக்கும்போதே சினிமா நடிகருக்கு கடிதம் எழுதினாயாமே?" 
பத்தாம் வகுப்பு படிக்கையில் கேட்டார்.

https://youtu.be/f-fL8CVz-HU?si=shUe9pTS7E8iXd_P

https://youtu.be/pLsSfxOEZ1g?si=w9Fa4XiNiZIrvGsN&sfnsn=wiwspwa

Apr 3, 2026

Bilal 'Bun Muska'

Bilal 'Bun Maska'

 
இதுவரை எத்தனை பன் மஸ்கா என்று கணக்கே எடுக்க முடியாது.
ரொம்ப பிடிக்கும்.

Chewing the food of sweet and bitter fancy.

William Shakespeare

சென்னைக்கு  கலைஞர் டிவில 'சினிமா எனும் பூதம்' ஷூட்டிங் போனா break fast எப்பவுமே பிலால் பன் மஸ்கா தான்.

சுகர், பிரஸர் எதுவும் கிடையாது.
குழந்தைங்க சாப்ட்ற மாதிரி ஸ்வீட் ரசிச்சி சாப்டுறது வழக்கம்.
வித்தியாசமான விசித்திரமான விஷயம். 
காஃபி டீ சுகர் இல்லாம இருந்தா தான் பிடிக்கும்

அரவிந்தன்

கூத்துப்பட்டறை நாடகம் பார்க்க 2017ல் வந்திருந்த அரவிந்தனை கடைசியாக பார்க்க வாய்த்தது.
கர்நாடக இசைக்கலைஞர் சஞ்சய் சுப்ரமணியத்திடம்  சுருக்கமாக 
" ராஜநாயஹம் ரைட்டர்" என்றார்.

சென்னைக்கு 2015ல் வந்த தமிழ் இந்து பத்திரிகையில் ராஜநாயஹத்தின் சிலகட்டுரைகள் வெளியிட்டார். மேட்டிமைத்தன்மையுடன் அவர் பேச்சு.
பிரபலமான ஏப்பி நாகராஜன் ஆர்ட்டிக்கள் ஆரம்ப வரி " ஸ்த்ரீபார்ட் வேடம் போட்டவர்" பற்றி 'கட்டுரையோட ஃபார்ம் இல்லை' என்றார். சினிமா எனும் பூதத்தில் மிக பிரபலமானது. 
கட்டுரை என்ற வடிவத்தை உடைத்த ராஜநாயஹம் எழுத்து..

சினிமா எனும் பூதம் எம்ஜிராமச்சந்திரன் இந்துவில் நிராகரித்து மட்டமான ஏதோ ஒன்றை பதிப்பித்தார்.

சுந்தர ராமசாமியின் பிரசாதம் தொகுப்பை சாதாரணமாக குறிப்பிட்டு அதற்கு பிறகு தான் பல்லக்கு தூக்கிகள் தொகுப்பிலிருந்து அவர் கதைகள் சிறப்பானதென்ற அர்த்தத்தில் எழுதியவர் அரவிந்தன் எனும் போது என்ன சொல்ல?

சுந்தர ராமசாமி 'பிரசாதம்' படித்து 
பிரமித்து தான் நவீன தமிழ் இலக்கிய வாசகன் ஆனவன் ராஜநாயஹம் என்பதை நீங்கள் எழுத வேண்டும் என்று சுந்தர் ராமசாமி கேட்டுக் கொண்டதால் சௌந்தரசுகன் பத்திரிகையில் 2005ல் 'பிரசாதம் செய்த மாயம்' எழுதினேன்.

2004ல் திருப்பூர் காமாட்சி கல்யாண மண்டபத்தில் நடந்த காலச்சுவடு கனிமொழி கவிதை நிகழ்ச்சியில் காலச்சுவடு இதழ்கள் பற்றி ராஜநாயஹம் பேசிய போது அரவிந்தன் பதில் கொடுத்தார்.

அது தான் முதல் சந்திப்பு.
ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை பற்றி சிலாகித்து சொன்னார்.
பின்னர் நடந்த விஷயம்  சம்பந்தமாக அரவிந்தன் 'நாஞ்சில் நாடனிடம் calibre இல்லைன்னு தெரியிது'

பன்முகத்தில் 2005ல் ராஜநாயஹம் மீதான பின் அரசியல் தொட்டு 'விலங்கும் நாணி கண் புதைக்கும் ' எழுதிய போது அரவிந்தன் 
" உங்கள் ஞாபக சக்தி பிரமிக்க வைக்கிறது."  

அன்பளிப்பாக அவருக்கு டீ சர்ட் அனுப்பிய போது நெகிழ்ந்தார்.

ஜெயமோகனிடம் நெருக்கமாக இருந்து பகையானவர். 
உரையாடல்களில் ஜெயமோகன் பேசும் போது " ஜெய் என்ன சொல்றார்னா" என்று ஆரம்பித்து நண்பராக இருந்த காலத்தில் டப்பிங் பேசியவர் அரவிந்தன்.

ஜெயமோகனிடம் தெறிக்கும் sadism பற்றி அவரிடமே அரவிந்தன் கேட்ட போது பதில்
" அது என் அப்பாவிடம் இருந்து வந்த விஷயம்"

பிரமிள் சமாதியில் பூக்களை அபிஷேகம் செய்தவர் இன்னொருவர். அதை அவர் சொல்வதை கேட்டு விட்டு 
எஸ்ரா தானே கூடைப்பூக்கள் தூவியதாக எழுதியது அப்பட்டமான பொய் என்று அரவிந்தன் செல் பேச்சில் சொன்னார்.

"It is a vile thing to die, 
When men are unprepared and look not for it." 

- Shakespeare

Apr 1, 2026

சினிமா எனும் பூதம் 212, 213 Episodes

212, 213 Episodes 

R.P. ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம் 

1. சின்மயி ஸ்ரீபாதா

2. ஆண்ட்ரியா ஜெரமியா 

05.04.2026 ஞாயிற்றுக்கிழமை 
12.04.2026 ஞாயிற்றுக்கிழமை 
முரசு டிவியில் 
காலை எட்டரை மணிக்கு 
ஒளி பரப்பு

......

R.P.ராஜநாயஹம் 
'சினிமா எனும் பூதம்' 
தொலைக்காட்சி தொடர் 

R.P. ராஜநாயஹம்
'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

Mar 28, 2026

ஆளுமைகளால் சிலாகிக்கப்பட்ட ராஜநாயஹம்





R.P. ராஜநாயஹம் பற்றி 

Palanivel Venkat :
 
ஆளுமைகளால் சிலாகிக்கப் படுகிறீர்கள் என்பதும் மற்ற பண்புக்கூறுகள் நிறைந்து காணப்படுபவைகளாலும் மனதுக்குள் இதமாய் சிம்மாசனமிடுகிறீர்கள்
என்பதும் மற்ற பண்புக்கூறுகள் நிறைந்து காணப்படுபவைகளாலும் மனதுக்குள் இதமாய் சிம்மாசனமிடுகிறீர்கள்.
மேன்மை மேலும் வசப்படட்டும்.

சிலர் சிரித்துக்கொண்டே அழுதான்

சினிமாவிலயே சிவாஜிய கமல் ஓவர்டேக் பண்ணிட்டாரு

கமல் அரசியல்ல கூட ஒடச்சி சொல்லிட்டாரே மக்கள் தோக்கடிக்கலயாமே. அரசியல் தான் தோக்கடிச்சிருச்சாம்.

சிலர் சிரித்தான் சிலர் அழுதான்
 சிலர் சிரித்துக்கொண்டே அழுதான்

https://www.facebook.com/share/p/18bTRHBh3z/

R.P. ராஜநாயஹம் விமர்சனம்

இந்திரா பார்த்தசாரதி 'கிருஷ்ணா கிருஷ்ணா' நாவலுக்கு 
R.P.ராஜநாயஹம்
எழுதிய விமர்சனம் பற்றி 

Krishnamoorthy Sundara :நான் இந்த நாவலைப் படித்ததில்லை.  ராஜநாயஹத்தின் விமர்சனமே கதைதைச் சொல்லி விடுகிறது.  ராஜநாயஹத்தின் பார்வை வித்தியாசமானது.  அது கோணலும் இல்லை குறும்பும் இல்லை. வித்தியாசமான இலக்கியப் பார்வை.  அவர் விகாரத்திலும் அழகு காண்பார்.  அழகிலும் விகாரத்தைக் காண்பார்.  விமர்சனம் என்பது ஒற்றை அடிப்பாதை அல்ல என்பதை அவர் எழுத்தில் காணலாம்.  க.நா.சு. போல தனித்துவம் கொண்டவர் என்பது என் கருத்து.

Aathmaarthi Rs : இதைப் படித்திருக்கிறேன் ஆழமான பார்வை உங்கள் தனித்துவமான விமர்சனம் 

Saravana Kumar Ayyavu :

சார், ஒரு விமர்சனத்தில் எவ்வளவு விஷயங்களை இயல்பாக சொல்லி செல்கிறீர்கள். எவ்வளவு பரந்துபட்ட வாசிப்பு உங்களுடையது. பலரைப் போல் நான் செக்குமாட்டு விமர்சனம் செய்ய மாட்டேன் என்ற உங்கள் பேச்சு எவ்வளவு உண்மையானது. உங்களின் தீவிர வாசகன் என்பது எவ்வளவு பெருமை எனக்கு. வியக்கிறேன் சார்.

https://www.facebook.com/share/p/1YsvXuvKdT/

https://www.facebook.com/share/p/1MrhhWQKMA/

https://www.facebook.com/share/p/18LC6ARAjR/

https://www.facebook.com/share/p/18MCYxi4nK/

https://www.facebook.com/share/p/1G3JrZpFPQ/

Mar 16, 2026

வேடிக்க - 61

வேடிக்க - 61

முன்பு 'எடப்பாடியின் சிரிப்பு எம்ஜிஆர் சிரிப்பது போலவே இருக்கிறது' என்று சரோஜா தேவி ஒப்பீடு செய்ததுண்டு.

இப்போது 'எடப்பாடி எளிமையில் காந்தியார் போல' என்ற ஒப்பீட்டை 
பழ கருப்பையா செய்திருக்கிறார்.

Hyperion to a satyr

Mar 13, 2026

தர்மாதிகாரி

நியாய தர்மம்

பெயர் பொருத்தமாக 
கன கச்சிதமாக 
அமைவது விசேஷம்.
"தர்மாதிகாரி".

Mar 9, 2026

R.P. ராஜநாயஹம் இயக்கத்தில் ந.முத்துசாமி "வண்டிச்சோடை"


Aug 21, 2016
R.P.ராஜநாயஹம் இயக்கத்தில் ந.முத்துசாமியின் ‘வண்டிச்சோடை’


R.P.Rajanayahem's interview on Shri .Na.Muthuswamy's Vandichodai in 'The Hindu' (Tamil) daily 
21.08.2016

தி இந்து நாடக விழா
தி இந்து – ஞாயிறு ஆகஸ்ட் 21, 2016

அவநம்பிக்கையை உடைத்தெறியும் கற்பனை
-    என்.கௌரி

தி இந்து நாடக விழாவில் இடம்பெற்றிருக்கும் மூன்று தமிழ் நாடகங்களில் ‘வண்டிச்சோடை’ நாடகத்துக்கு ஒரு சிறப்புண்டு. தமிழின் சமகால நாடக ஆளுமைகளில் முக்கியமானவரான ந.முத்துசாமி 1968ல் எழுதிய நாடகம் இது. கூத்துப்பட்டறைக்குழுவின் சார்பாக ஆகஸ்ட் 28 அன்று இந் நாடகம் முதன்முறையாக ‘தி இந்து’ நாடக விழாவில் மேடையேறவிருக்கிறது.

’வண்டிச்சோடை’  நாடகத்தைத் திரிபான தர்க்கங்களைப்
( Perverted Logic) பேசும் நாடகம் என்று சொல்லலாம். தொடக்கத்திலிருந்து முடிவு வரை இந்த நாடகம் புதிர்களுடன் அற்புதமான கற்பனை வெளியில் பயணப்படுகிறது.
“ மருத்துவத் துறை இப்போது முழுக்க முழுக்க வியாபாரம் ஆகி விட்டது. பாரம்பரியமான இந்திய நாட்டு வைத்தியம் ஒரு காலத்தில் செழிப்பானதாக இருந்தது. அது குரு – சிஷ்ய அமைப்பால் எப்படிச் சரிவைச் சந்தித்தது என்பதை இந் நாடகம் பதிவு செய்கிறது.” என்கிறார் இந்நாடகத்தின் இயக்குனர் R.P.ராஜநாயஹம்.

குரு – சிஷ்ய அமைப்பு மட்டுமல்லாமல் கடைமட்டத் தொழிலாளர்கள் வழிவழியாக எப்படிச் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும் ‘வண்டிச்சோடை’ நாடகம் அலசுகிறது. தார்ச்சாலை போடும் தொழிலாளர்கள், போரில் பலிகொடுக்கப்படும் சிப்பாய்கள், கட்சிக்காக உயிரைக் கொடுக்கும் தொண்டர்கள் போன்றவர்களை விழிப்படைய வைக்கும் கேள்விகள் இந்நாடகத்தில் இடம்பெற்றிருக்கின்றன. தனிமனித வழிபாடு என்பது எப்படி இந்தச் சமூகத்தைப் பாதிக்கிறது என்பதை இந்நாடகம் வலிமையுடன் பேசியிருக்கிறது.

“பொதுவாக எதிர்காலத்தை நோக்கி வயதடைவதைப் பற்றி நாம் யோசிப்போம். இறந்த காலத்தை நோக்கி வயதடைந்தால் என்ன என்ற பயணத்தை ‘ வண்டிச்சோடை’ மேற்கொள்ளவிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ‘கலைடாஸ்கோப்’ அனுபவத்தைப் பார்வையாளர்களுக்கு இந்நாடகம் கொடுக்கும்.”
 என்கிறார் R.P. ராஜநாயஹம்.

உருமாற்றம் என்னும் அம்சம் இந்த நாடகத்தின் முக்கியமான திருப்புமுனையாக இருக்கும். ஓர் ஆடு, ஆட்டுக்காரனாக மாறுகிறது. மூலிகைச் செடிகளைத் தொடர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் ஓர் ஆடு மனித சிரஞ்சீவியாக மாறி விடுகிறது. “இப்படி, இந்த நாடகத்தில் எழுதப்பட்டிருக்கும் கற்பனை என்பது நம்முடைய அவநம்பிக்கையை உடைத்தெறிவதாக இருக்கும். இந்த நாடகம் நேரடியாக எந்தவொரு விஷயத்தைய்ம் விளக்கியிருக்காது. ஆனால், மறைபொருளாக இந்நாடகத்தில் பல விஷயங்கள் பொதிந்திருக்கின்றன. பார்வையாளர்களுக்கு ஒரு விஷேசமான அனுபவத்தை ‘ வண்டிச்சோடை’ நாடகம் அளிக்கும் என்கிறார் ராஜநாயஹம்.

…...

Mar 8, 2026

வேடிக்க - 60

வேடிக்க - 60
- R.P. ராஜநாயஹம் 

R. சுந்தர்ராஜன் self standing ஆக கொடி கட்டி நாலு சில்வர் ஜூபிலி படங்கள் குடுத்தார். சக்கப்போடு 

சாமி போட்ட முடிச்சு, ஒயிலாட்டம் காரணமாக தள்ளாட்டம். 

பாக்யராஜிடம் வந்தார். " நான் தற்கொல பண்ணிக்கறத தவிர வேற வழியேயில்ல". சரணாகதி.
உடைந்து போன சுந்தர்ராஜனுக்கு
 கை கொடுப்பதற்காக அவர் இயக்கத்தில் படம் தயாரித்து கதாநாயகனாக நடிக்க ஒப்புக்கொள்கிறார். சில லட்சம் பணம் சுந்தர்ராஜனுக்கு  உடனே அட்வான்ஸ் கொடுக்கிறார். 
குஷ்பு கதாநாயகி. 
படத்தின் பெயர் " மிஸ் மைலாப்பூர்".

 குஷ்புவுடன் போனில் பேசியிருக்கிறார். 
கதாநாயகிக்கு சுந்தர்ராஜன் பேச்சே சுத்தமாக பிடிக்கவில்லை. இவரோடு பேசவே பிடிக்கவில்லை என்பதை பாக்யராஜிடம் குஷ்பு தெரிவிக்கிறார். 
"என்னா வாய்"

இப்படி இன்னும் என்னென்னவோ. தெரியவில்லை.

படம் தயாரிப்பதில்லை என்று முடிவு.
சுந்தர்ராஜனுக்கு கொடுத்த அட்வான்ஸை பழனிசாமி போய் சுந்தர்ராஜனிடம் கேட்கிறார். 
அவர் பதில் " பாக்யராஜ் பணத்த எவ்வளவோ பேர் சாப்பிட்டுருக்காங்க. அந்த தர்ம கணக்கில நான் வாங்குன பணத்தையும் எழுதிக்க சொல்லு. என்னால தரமுடியாது. "

அந்தப் படத்தின் பூஜை இன்விட்டேசன் பின்னால் ராசுக்குட்டி ஷுட்டிங் சமயத்தில் பாக்யா ஆஃபிஸில் கவனிப்பாரற்று கிடந்த மிஸ் மைலாப்பூர் இன்விடேசன் 
(பெரிதாக அச்சடிக்கப்பட்ட Grand invitation) 
பார்க்க கிடைத்தது. Dropped movie.

சுந்தர்ராஜன் வாய் விசேஷமானது.

ரொம்ப ரொம்ப முன்னால பாக்யராஜ் 
" இர்றா, ஒன்ன பாரதிராஜா கிட்ட சேத்து விட்றேன். பொறுமையா இரு"
சுந்தர்ராஜன் சரின்னு தான் சொல்லியிருக்கிறார்.

அந்த நேரம் பாக்யராஜை பார்க்க பாரதிராஜா மாடியேறிப்போனால் அங்க சுந்தர்ராஜன். 
" சார். ஒங்க அந்த படத்ல க்ளைமாக்ஸ் சரியில்ல. அத நானாயிருந்தா வேற மாதிரி பண்ணியிருப்பேன்." இப்படி..அப்படி வளவளப்பு. சுந்தர்ராஜன் வெளக்கெண்ணயால குண்டி கழுவி விட ஆரம்பித்திருக்கிறார்.

பாரதி ராஜா ரூமை விட்டு கிளம்பி கீழே வருகிறார். பாக்யராஜ் எதிரே. 
" யோவ் யார்யா அவன் ஒன் ஃப்ரண்டு. என்னா வாயி. ஒக்கார முடியல. எரிச்சல கிளப்புறான். என்னய்யா" கிளம்பி விடுகிறார்.

பாக்யராஜ் மாடியேறி " ஏண்டா, ஒன் வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கவே மாட்டியா? அவருக்கிட்ட உன்ன சேத்து விடலாம்னு நெனச்சா இப்டி கெடுத்துட்டியே"

சென்ற வருடம் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் பாக்யராஜ் தலைமையில் பிரசாத் கலர் லேபில் பட்டி மன்றம்.

எங்க டைரக்டர் பாக்யராஜ் அழைத்து அவருடன் போய் வேடிக்க பாத்தேன்.
பாக்யராஜ் சாரை தவிர மற்றவர்கள் சொதப்பல். நெறய நேரம் பேசி பேசி வறுத்து..
சுந்தர்ராஜனும் கட்சியெடுத்து மிக நீண்ட நேரம்.

பட்டி மன்ற நிகழ்வை பாக்யராஜ் எடிட் செய்த போதும் அவர் அழைப்பின் பேரில் 'ரெண்டு நாளு' வீட்டுக்கு போயிருந்தேன்.

டைரக்டர் பாக்யராஜ் வேதனையும் ஆயாசமும் " சப்ஜெக்ட உட்டுட்டு என்னன்னமோ பேசியிருக்கிறானே"

208, 209 Episodes Cinema Enum Bootham

208, 209 Episodes 

R.P. ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம் 
தொலைக்காட்சி தொடர் 
முரசு டிவியில் 
வரும் அடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் 
காலை எட்டரை மணிக்கு 

08.03.2026

15.03.2026


விஜய் சேதுபதி 

சிவ கார்த்திகேயன்

.....

R.P. ராஜநாயஹம்
'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 3ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

Feb 28, 2026

TrumPeace via Iran

Oct 1, 2025
வேடிக்க - 51
வேடிக்க - 51

Donald Trump Half Century 

அம்பது தடவ சொல்லிட்டாராம்.
இதல்லாம் யாரு வேல? மெனக்கெட்டு எத்தன தடவன்னு எண்ணிப்பாத்துக்கிட்டே, எண்ணி எண்ணி பாத்துக்கிட்டே இருக்கிறதோ?

அமைதிக்கான நோபல் பரிசு கடும் முயற்சி.
தும்பிக்கய ஊனி நாலு காலயும் மேல தூக்கி சங்கு சக்கரமா சுத்துறாரு.

"நான் தான  இந்தியா பாகிஸ்தான் போர நிறுத்துனேன். என்ன நாஞ்சொறது.."

இதுல மந்திரவாதி யாரு? 
ரத்தங்கக்கறது யாரு?

Conflictional resolution  TrumPeace
பிடிவாதம் 

விட்டனா பார் 
TrumPeace 

 ஒன்னு நெனச்சு கெடக்காட்டி..
நோபல் 'நோ'ன்னா விட்ருவனா?
 ட்ரம்ப்பா கொக்கான்னேன். ஓஹோன்னானாம்.
விட்டேனா பார்.

Conflictional resolution.

"One Of The Greatest Honours Of My Life": Trump On FIFA Peace Prize Award

இப்ப ஈரான் மேல கடுங்கோபம்

அடுத்த  Nobel award for peace வேணும்னு கூச்சமில்லாம கூப்பாடு உண்டு.

TrumPeace via Iran 

Feb 24, 2026

வேடிக்க - 59

வேடிக்க - 59

இப்போது தான் தெரிகிறது. எதையும் தேட வேண்டாம். அவ்வப்போது வருகிறதைப் பார்த்துக் கொண்டேயிருக்கத்
தோன்றுகிறது 
- தி. ஜானகிராமன்

Go with the flow
- R.P. ராஜநாயஹம் 

பஞ்ச பாண்டவர் எத்தனை பேர் என்பது கேள்வி.
ஒருத்தன் ’கட்டில் காலு’ போல ’மூனு பேர்’னு சொல்லி ’ரெண்டு விரலை’ நீட்டி ஆட்டிக்காட்டினான்.
இதில் எத்தனை தப்பு?
அவன் விளக்கமாக ’கட்டில் கால்’
எனும்போதே தப்பு.
நாலுன்னு சொல்வான்னு பாத்தா கட்டில் காலு போல மூனு பேர் என்கிறான்.
அதை இன்னும் விரிவாக தன் இரண்டு விரல்களை விரித்து செயல்முறை விளக்கம்.
அப்ப ரெண்டு பேர்ங்கிறான்.
நாட்டில் பல பல Citizenship act ’பப்பள பள பள’ விளக்கங்களை கேட்கும்போது
இந்த 'கட்டில் கால் போல மூனுபேர்னு சொல்லி ரெண்டு விரலைக்காட்டுறது' தான் ஞாபகத்துக்கு வருகிறது.

மக்கள் பாவம்.
'ஆடு வளக்கறவன நம்பாது.
அறுக்கறவன தான் நம்புமாம்'னு சொலவடை.

கொஞ்சம் விபரமானவர்களாக தங்களை நினைத்துக்கொள்ளும் படித்த நடுத்தர வர்க்கத்தவர்களுக்கு ’வேடிக்க பாக்கற வேல’ தான் அதிகபட்ச சாத்தியம்.

இவர்களுக்கு ஓஷோ சொல்லியிருக்கிற விஷயம் ஒன்றை சுட்டிக்காட்டினால் மேலும் குற்றவுணர்வின்றி விச்ராந்தியாக இருப்பார்கள்:
” நீ எதுவும் செய்ய வேண்டாம்
என்று அஷ்டவக்கிரர் கூறுகிறார்.
எது நடந்து கொண்டிருக்கிறதோ அது நடந்து கொண்டிருக்கிறது.
அதனோடு நீ ஐக்கியமாகி விடு.
சும்மா பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம் சாட்சித்தன்மையில் இருப்பதன் மூலம்
நீ முக்தி பெறுகிறாய்.
எந்தப்பயிற்சி முறைகளிலும் சிக்கி விடாதே.”

Even if you feel guilty, go with the flow.
In the future, the priest is not needed,
neither is the psychoanalyst needed.
Both those professions are anti-human;
But they can go
only if man is freed of guilt;
otherwise they cannot go.
Even if you feel guilty, go with the flow.
- Osho

அடைய வேண்டிய அந்தஸ்தை இழந்து, தகுதிக்கேற்ற அங்கீகாரத்தையும் இழந்து பொருள், பொன் இழந்தவர்கள்
தங்களைப் பற்றிய சுய தரிசனமாக
‘வலிமையின்றி சிறுமையில் வாழ்வான் காலம் வந்து கை கூடுமப்போதிலோர் கணக்கிலே புதிதாக விளங்குவான்’ (கண்ணன் என் அரசன்) என்ற பாரதியின் வரிகளை வாய்விட்டுச்சொல்லிக்கொள்ளலாம்.

பொறுமையா உன் வேலைய செஞ்சிக்கிட்டே இரு.
உன் மதிப்பு புரியும்போது பெரும்புகழ் கிடைக்கும்.
”கண்டதெல்லாம் கடிய விலையானால் இந்திராணிப் பட்டு
இருந்த விலையாகும்.”


’ஒவ்வொரு நாள் காலையிலும் நம்பிக்கைகளை அரற்றியவாறு அறுந்து தொங்கும் மனதின் நாண்களை இழுத்துக் கட்டினாலும் மாலைக்குள் அது தொய்ந்து போய்விடுகிறது’ என்று சுந்தர ராமசாமி ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலில் சொல்லும் யதார்த்தம் இன்றைய லோகாயுத சிக்கல்கள் மூலம் தெளிவுபடுகிறது.


வீட்டு வாசலில் கோலம் போடுவதற்கு கூட
சாஸ்திரம் இருக்கிறது,
போடுகிற கோலம் தெற்கு நோக்கி முடியக்கூடாதாம்.
ஆனால் இன்று தலையாய முக்கியப்பிரச்னைகளில் கூட ’அள்ளித்தெளித்த அவசரக்கோலம்’.

கோலம் விஷேச அரசியல் அந்தஸ்து பெறுகிறது.
’புளித்த மாவு’ கூடத்தான் இலக்கிய அந்தஸ்து அடைந்தது.

மிச்சல் ஃபூக்கோ சொல்வதை சொல்லி முடிக்கலாம்: “ஒன்றை எழுத ஆரம்பிக்கும்போது
அதன் முடிவில் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால்
அதை எழுதுவதற்கான தைரியம் தான்
உங்களுக்கு வந்து விடுமா?
முடிவு என்னவென்று தெரியாமல்
 இருக்கும்போது தான்                                                     
 இந்த விளையாட்டுக்கு அர்த்தமுண்டு.”

......

மீள் பதிவு 


Feb 19, 2026

தாழன் சைஸ் சரியில்ல

தாழன் சைஸ் சரியில்ல 

https://www.facebook.com/share/v/182qXFc6oW/

எம்ஜிஆரின் அமெரிக்கையான நடிப்பு.

பழைய படமாக டூரிங் தியேட்டரில் பார்க்கும்  "மதுர தர டிக்கட்" ரசிகர்கள் 
அசோகன் விரல் சுண்டும் ரீயாக்ஸனுக்கு 'ஹீரோவிற்கெதிரான வில்லன் மைண்ட் வாய்ஸ்' ஆக கோரஸாக கூப்பாடு 
" தாழன் சைஸ் சரியில்ல"

Feb 12, 2026

R.P. Rajanayahem 205th episode


R.P. ராஜநாயஹம்
'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 3ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

வருகிற ஞாயிற்றுக்கிழமை
15.02.2026
205 வது நிகழ்ச்சி

https://www.facebook.com/share/p/17sEQ8g7Bk/

Feb 10, 2026

தீப்பொறி ஆறுமுகம் வேடிக்க - 57


தீப்பொறி ஆறுமுகம் 
- R.P. ராஜநாயஹம் 

தீப்பொறி ஆறுமுகம் இரண்டு விஷயங்களை மறைக்கிறார். காமராஜர் காலத்தில் ஸ்தாபன காங்கிரஸில் பேச்சாளராக தீப்பொறி இருந்த விஷயம். மற்றொன்று 15 வருடங்களுக்கு முன் அதிமுகவுக்கு தாவியதைப் பற்றி.. காலம் காலமாக அவர் தி.மு.கவிலேயே இருந்து கொண்டு இருப்பது போல இந்த பேட்டிகளில் பேசியிருக்கிறார்.

ஸ்தாபன காங்கிரஸில் தீப்பொறி பேச்சாளராக இருந்த போது “பெருந்தலைவர் எப்போதும் என்னைப் பார்க்கும்போதெல்லாம் “டேய்…பேச்ச கொறை. அடாவடியா பேசாதேன்னு திட்டறாரு”ன்னு பேசியதை அறிந்தவர்கள் இன்றும் உண்டு.

அவர் அதிமுகவுக்கு தாவுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் இரவு திருச்சி உறையூரில் “என் தலைவன் கலைஞர்” என்று உரக்கக்கூறும்போதெல்லாம் தன் தலையை இரண்டு கைகளால் அழுந்தப்பிடித்தவாறு கூப்பாடு போடுவதை நான் கேட்டிருக்கிறேன். அப்படி அவர் தலையைப் பிடிக்கும்போது இந்த வார்த்தைகளைச் சொல்வது ஏதோ மலையைப் புரட்டுகிற விஷயமாக்கும் என்ற ஒரு தோரணையும் பிரயாசையும் தெரியச் செய்வார்.

ஜூவி முதல் பேட்டியில் ஸ்டாலின் வந்து பார்ப்பார் என்கிறார்.
அடுத்த பேட்டியில் ஸ்டாலின் வந்து பார்த்து பொருளுதவி செய்த விஷயம் தெரிய வருகிறது.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராய் இருந்த காலத்தில் தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் போக மற்ற பொழுது போக்குகளில் தீப்பொறி ஆறுமுகம் பேச்சும் முக்கிய இடம் பெற்று இருந்தது.

தீப்பொறியார் ஒரு ஊரில் பேசுகிறார் என்றால் கடையை சற்று முன்னதாகவே அடைத்து விட்டு வியாபாரிகள் மீட்டிங்கிற்கு அவசர,அவசரமாக ஓடுவார்கள். இரவு ஒன்பது மணிக்கே ஊரில் பரபரப்பு தெரியும். அன்று சினிமா தியேட்டர்களில் செகண்ட் ஷோவுக்கு கூட்டம் குறைவாகத்தான் இருக்கும்.
எல்லா ஊர்களிலும் தீப்பொறி பேச்சுக்கு நல்ல கூட்டம் கூடும்.

எம்.ஜி.ஆரை கிழித்த கிழி….

1977ல் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக ஆகியிருந்த போது…
அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் இந்தியா வந்து விட்டுப்போனார். ஒரு வேளை சென்னைக்கு கார்ட்டர் வர நேர்ந்திருந்தால்… என்ன நடந்திருக்கும்? என்று தீப்பொறி காட்சிப்படுத்திய விதம்!

கார்ட்டர், இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் இருவரும் மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்து இறங்குகிறார்கள். எம்.ஜி.ஆர் வரவேற்கிறார். மொரார்ஜி தமிழக முதலமைச்சரை கார்ட்டருக்கு அறிமுகப்படுத்துகிறார். எம்.ஜி.ஆர் அமெரிக்க ஜனாதிபதியுடன் கைகுலுக்குகிறார்.

கார்ட்டர்,தேசாய்,எம்.ஜி.ஆர் மூவரும் ஒரே காரில். கார் வெளியே வருகிறது. அங்கே எதிரே எம்.ஜி.ஆர் நடித்த ’மீனவ நண்பன்’ கட் அவுட். லதாவின் தொடையில் தன் தலையை வைத்திருக்கும் எம்.ஜி.ஆர்!

கார்ட்டர் அந்த கட் அவுட்டை பார்க்கிறார். காரில் உட்கார்ந்திருக்கும் எம்.ஜி.ஆரைப் பார்க்கிறார். கட் அவுட்டைப்பார்க்கிறார். எம்.ஜி.ஆரை உற்றுப்பார்க்கிறார். மீண்டும் கட் அவுட் பார்க்கிறார். காரில் உட்கார்ந்திருக்கும் எம்.ஜி.ஆரைப் பதற்றத்துடன் பார்க்கிறார். எம்.ஜி.ஆர் புன்னகைக்கிறார். மொரார்ஜி நெளிகிறார். பிரதமருக்கு தர்மசங்கட நிலை. கார்ட்டர் அதிர்ச்சியுடன் மொரார்ஜியிடம் கட் அவுட்டை காட்டி காரில் உட்கார்ந்திருக்கும் எம்.ஜி.ஆரையும் விரலால் சுட்டி கேட்கிறார்: ’என்ன இது?! அவன மாதிரியே இவன் இருக்கிறான்! இவன மாதிரியே அவன் இருக்கிறான். அவன மாதிரியே இவன்! இவன மாதிரியே அவன்!’
பெருமையான புன்னகையுடன் காரில் உட்கார்ந்திருக்கும் எம்.ஜி.ஆரை எரிச்சலுடன் பார்த்துவிட்டு பாரதப் பிரதமர் அமெரிக்க ஜனாதிபதியிடம் சொல்கிறார் : ’இவன் தான் அவன்…. அவன் தான் இவன்….’

கார்ட்டர் காறித்துப்பியிருக்க மாட்டானா? நல்ல வேளை அவன் தமிழ் நாட்டுக்கு வரல!

இதை வார்த்தைகளால் எப்படி எழுதினாலும் ஆறுமுகம் இதைச் சொல்லுவதும், செய்யும் கொணஷ்டைகளும் நேரில் பார்த்தால் தான் புரியும். எழுதியெல்லாம் விளக்க முடியவே முடியாது.

மேட்டூர் டேமில் தண்ணீர் முழுவதுமாக வற்றிப்போய் விட்டதை தீப்பொறி விளக்குவது – “ டேம்ல தண்ணீ கொறஞ்சி..கொறஞ்சி.. 100 அடி… அதுவும் கொறைஞ்சி 80 அடி.. அப்புறம் 50 அடி.. 30 அடி உயரம் தான் தண்ணி… அதுவும் வத்தி 10 அடி..5 அடின்னு ஆகி கடைசியில டேம் எம்.ஜி.ஆரா ஆயிடுச்சி.. டேய்.. டேம் எம்.ஜி.ஆரா ஆயிடுச்சி.. புரிஞ்சா புரிஞ்சுக்க..புரிஞ்சா புரிஞ்சிக்க… புரியலன்னா பக்கத்தில ஒக்கார்ந்திருக்கிறவன கேட்டுத் தெரிஞ்சிக்க..”

’எம்.ஆர்.ராதா சுத்தமா வேல செய்யத்தெரியாதவன்…அரை குறையா…….அவன் மட்டும் சரியா இவன் தொண்டயில போட்டிருந்தான்னா எவ்வளவு நல்லாயிருந்திருக்கும்! தமிழ் நாடு தப்பிச்சிருக்கும்.’

(ஒரு விஷயம். எம்.ஆர் ராதா சிறையில் இருந்த போது ராதாவின் மகன் எம்.ஆர்.ஆர்.வாசு ரத்தக்கண்ணீர் நாடகம் போடுவார். தி.மு.கவில் உறுப்பினராக இருந்த வாசு ரத்தக்கண்ணீர் வசனம்பேசும்போதே சொல்வது: ’சுடத்தெரியாதவனெல்லாம் சுட்டுப்புட்டு உள்ள போய் ஒக்காந்துகிட்டான்!’)

அ.தி.மு.கவிலும் மதுரை லோக்கல் பேச்சாளன் தீப்பொறிக்கு மதுரையிலேயே கொடுத்த பதிலடி: “ டேய்! தீப்பொறி.. பாவம்டா நீ… நீ பாட்டுக்கு மீட்டிங்,மீட்டிங்னு ஊர் ஊரா போயிடுற..ஒன் பொண்டாட்டிய பக்கத்து வீட்டு கோனான் டொல்த்திக்கிட்டு இருக்கான் அது தெரியுமாடா உனக்கு?!”

இன்று விக்கிரகங்களாக ஆகி விட்ட இளையராஜா, ரஜினி காந்த் பற்றியெல்லாம் மிக ஏளனமான தொனியில் தான் தீப்பொறி பேசுவார்.
“ ’ஏய்..ஆத்தா.. ஆத்தோரமா வாறியா…’ டேய் ஆத்தாளயே ஆத்தாரமா வான்னு கூப்புடுறியேடா …….உங்கோத்தாளயெ கூப்பிடிறியெ…நீ விளங்குவியா..”

ரஜினிய ‘இந்த மெண்டல் பய பேச்ச, நடிப்ப படத்துல எப்படிடா ரசிக்கிறீங்க..’
’எனக்கு ஒரு ஆச.. இந்த மெண்டல் பய ரஜினிக்கும், கொன்னவாயன் நெடுமாறனுக்கும் (பழ.நெடுமாறன்) பேச்சி போட்டி வைக்கணும்..ரெண்டு பயல்ல எவன் ஜெயிக்கிறான்னு பாக்கணும்.’

இடது கம்யூனிஸ்ட் பி.ராமமூர்த்தி கால் ஊனமுற்றவர். அதிமுக முசிறிபுத்தன் வீல் சேரில் தான் இருப்பவர்.
“ எனக்கு ஒரு ஆச… இந்த பி.ராமமூர்த்திக்கும் முசிறிபுத்தனுக்கும் ஓட்டப் பந்தயம் வெக்கணும்.. எவன் ஜெயிக்கிறான்னு பாக்கணும்”

முசிறி புத்தன் கொந்தளித்து அதிமுக மேடையில் “ தீப்பொறி ஆறுமுகம் என் வீட்டுக்கு வந்தப்ப வெள்ளி டம்ளர்ல பால் கொடுத்தோம்…குடிச்சான்.. டம்ளரை காணல… திருடிட்டுப்போயிட்டான். திருட்டுப்பய..”
இதற்கு தீப்பொறியின் பதில் “ நான் முசிறிபுத்தன் வீட்டுக்குபோனது நிஜம்.. பால் குடிச்சதும் நிஜம்…பால் குடிச்சேன்…பால் குடிச்சேன்.. ஆனா டம்ளர்ல இல்ல… டம்ளர்ல இல்ல..டம்ளர்ல இல்ல! புரிஞ்சுக்க..கூட்டத்தில இருக்கிறவன் புரிஞ்சா புரிஞ்சிக்க… புரிஞ்சா புரிஞ்சிக்க… இல்லன்னா பக்கத்தில இருக்கிறவன கேட்டுத் தெரிஞ்சிக்க..உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் ஓய்ஞ்சி போயிடுவன்டா”

சினிமாக்காரர்கள் யாரையும் பற்றி நையாண்டி தான்.
விசு படங்கள் “மணல் கயிறு”, ”குடும்பம் ஒரு கதம்பம்” வந்திருந்த நேரம்.
”இப்ப ஒர்த்தன் வந்திருக்கான்யா..! விசு… நல்ல வேளை! அவன் பேரு ’குசு’ இல்ல..!”

மக்வானா மத்திய அமைச்சராயிருந்தவர். அவர் பெயரை தீப்பொறி சொல்லும்போது ”மக்வானா, மக்குவானா, நக்குவானா, நக்குவானா”

காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்று ஒரு கட்சியை குமரி அனந்தன் நடத்திக்கொண்டிருந்தார். கா.கா.தே.கா!
குமரி அனந்தன் கட்சிப்பெயரை பழைய சினிமா பாட்டாகத்தான் ஆறுமுகம் பாடுவார்! _ “ஈனா, மீனா, டீகா, காகா காகா தேகா, ஈனா, மீனா, டீகா! காகா காகா தேகா! (இந்த பொன்ன கண்டதும் போத உண்டாகுதே!)”

”இந்த கம்யூனிஸ்ட்காரன் இருக்கானே.. விஞ்ஞானி தகரத்தை என்னக்கி கண்டுபிடிச்சானோ அன்னக்கே…அன்னக்கே..அன்னக்கே தகரத்தை இப்படி நெளிச்சி..அப்படி நெளிச்சி கம்யூனிஸ்ட்காரன் உண்டியல கண்டு பிடிச்சுட்டான்யா.. உடனே உண்டியல ஆட்டி ஆட்டி குலுக்கி..” உண்டியல் குலுக்குவதை மேடையில் தீப்பொறி நடித்தே காட்டும்போது கம்யூனிஸ்ட்களே அடக்க முடியாமல் சிரிக்க வேண்டியிருக்கும்.

சட்ட சபையில் உறுப்பினராய் இருந்தார் பழ நெடுமாறன்.
கேரளாவுக்கு எருமை மாடுகள் கடத்தப்படுவதை பேசிய
நெடுமாறன் பற்றி ” சட்ட சபையில இவன்.. இந்த கொன்னவாயன் பேசறான் – ’கே…கே..ஏ…ரளாவுக்கு எ…எ..எ..எருமை மாட்ட… க..க..கடத்துறாங்கே..’ எரும மாட்டுப்பய… சட்டசபையில இதயாடா பேசுறது?”

மதுரை முன்னாள் மேயர் மதுரை எஸ்.முத்து பற்றி “ நான் அவன மதிக்கிறேன். முத்துக்கிட்ட எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.. தண்ணியடிக்க மாட்டான்…சிகரெட் கிடையாது.. சூதாட மாட்டான்.. பொம்பள விஷயத்துலயும் சுத்தமானவன். ஆனா ஒன்னு.. பக்கத்தில ஒர்த்தன் பாக்கெட்ல ஒரு பத்து ரூபா வச்சிருந்தான்னா எப்படியாவது அத அடிச்சிடுவான்.பத்து ரூபாய லவட்டாம விட மாட்டான். விடவே மாட்டான்.”

"ராஜீவ் காந்திய நல்லா கவனிச்சுப்பாருங்க..உத்துப்பாருங்க… சோன் பப்டி விக்கிறவன் மாதிரியே இல்ல!?"

ஜெயலலிதா ஓவர் கோட் போட்டிருந்த சமயத்தில் “ இடுப்புல தான பாவாட. ஆனா கழுத்துல பாவாடைய கட்டிக்கிற ஒரே பொம்பள ஜெயலலிதா தான்.”

இன்று கவுண்டமணி, வடிவேலு ஜோக்குகளை எப்போதும் பலரும் பேசி, நினைவு கூர்ந்து மகிழ்கிறார்கள் இல்லையா? அது போல அன்று நாகேஷ், சுருளிராஜன் ஜோக்குகளை உரையாடல்களில் நினைவு கூர்ந்து ரசிப்பது போல தீப்பொறி ஜோக்குகளும் திரும்பத்திரும்ப பேசி ரசிக்கப்பட்ட நிலை. Indecent, improper, bawdy pleasantries!
தீப்பொறி ஆறுமுகத்துக்கு நடிகர்களுக்கு ஈடான நட்சத்திர அந்தஸ்து இருந்தது.
…...

மீள் பதிவு

https://www.facebook.com/share/p/1DztdtL8SZ/


வெற்றி கொண்டான் வேடிக்க - 58


வெற்றிகொண்டான்
- R.P. ராஜநாயஹம் 

" LIVE IN SECLUSION. SHOW NO INTEREST IN POLITICS AND THE COMMUNITY.”
- EPICURUS

1940களில்எம்ஜியார் கதர் உடுத்தி காங்கிரஸ்காரராக, ருத்ராட்ச மாலை, நெற்றியில் திருமண் என்று இருந்தவர் தான்.
ஆனால் அவருக்கு பெரிதாய் அரசியல் ஆர்வம், ஈடுபாடு, நோக்கம் ஏதும் கிடையாது என எம் .ஆர் .ராதா சொல்வார். 

எம்ஜிஆருக்கு சினிமாவில் எப்படியாவது முன்னுக்கு வர ஆர்வம் இருந்தது .உடம்பை மிகவும் கவனமாக பேணுவதில் அக்கறை இருந்தது. மது,சிகரட் கிடையாது.

அப்போது மராட்டிய சிவாஜியாக எம்ஜியாரை நாடகத்தில் நடிக்க வைக்க வேண்டி பெரியார் விரும்பி சொல்லி விட்டாராம். எம்ஜியாருக்கு அரசியல் சாயம் பூசிக்கொள்ள விருப்பமில்லாததால் மறுத்து விட்டார். 
பின்னர் ஈ.வி . கே சம்பத் தான் சிவாஜியாக நாடகத்தில் நடித்தாராம்.
அதன் பின்னர் வி.சி.கணேசன் அந்த நாடகத்தில் சிவாஜியாக நடித்து பெரியார் வாயால் சிவாஜி கணேசன் என அழைக்கப்பட்டு பிரபலமாகி திரையுலகிலும் சிவாஜி கணேசன் ஆனார்.

எம்ஜியார் முதல் முறையாக முதல்வர் ஆனபோது நடந்த விஷயம்.
எம்ஜியார் தன் அரசியல் பிரக்ஞை ரொம்ப பழைமையானது என வலியுறுத்த வேண்டி ' அன்றைய தினம் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது, மகாத்மா காந்தி அவர்கள் உண்ணாவிரதம் இருந்த போது, நானும் உண்ணாவிரதம் இருந்தேன் ' என என்னத்தையோ உளறினார். 

தீப்பொறி ஆறுமுகத்தோடு ஒப்பிட முடியாத ரொம்ப வித்தியாசமான விசேஷ தன்மை கொண்ட பிரமாத வக்கிர பேச்சாளர் வெற்றி கொண்டான். பேச்சு அடர்த்தியாக இருக்கும்.

உடனே வெற்றிகொண்டான் இதை தன் பாணி தாக்குதலுக்கு பயன்படுத்திக்கொண்டது இப்படி.
" குல்லாக்காரப்பய வாயத்தொறந்தாலே புழுகித்தள்ளுறான். காந்தியும் நானும் ஒண்ணா ஒரே மேடையிலே உண்ணாவிரதம் இருந்தேன்னு சொல்லுறாய்யா. இவன் பொய்யுக்கு அளவே இல்லாம போயிடிச்சே. நான் கூட நம்ம கோடம்பாக்கம் காந்தி கிட்டே " ஏலே, நீயாடா? உன்னோட குல்லாக்காரன் சேர்ந்து ஏதும் உண்ணாவிரதம் இருந்தானாடா?"ன்னு கேட்கிறேன்.அவன் பதறிப் போய் " சத்தியமா நான் இல்லே அண்ணே ..." ன்னு புலம்புறான். குல்லாக்காரப்பய மகாத்மா காந்தியாத்தான்யா சொல்றான்."

(காந்தியார் உண்ணாவிரதம் இருக்கிறபோதெல்லாம் நாடெங்கும் பலரும் அப்போது உண்ணாவிரதம் இருப்பார்கள் தான்.)

குல்லாக்காரப்பய.... குல்லாக்காரப்பய என்று எம்ஜியாரை கோமாளியாக சித்தரித்து வெற்றி கொண்டான் அப்போது கூட்டத்தை சிரிக்கவைத்து பலருக்கு வயிறே புண்ணாகி விடும்.

எம்ஜியார் திடீரென்று " நான் மன்றாடியார் பரம்பரை " என்றார். 
கலைஞர் கருணாநிதி தன் பதிலாக 
" ஆம். டெல்லியில் மன்றாடிய 
பரம்பரை" என்றார்.

அப்போது திமுக மேடைகளில் 
வெற்றி கொண்டான் செய்த கலாட்டா-
" நான் பக்தவத்சலத்தை பார்க்கப் போயிருந்தேன். அவர் அழுது கொண்டே சொன்னார்.
" இந்த குல்லாக்காரப்பய என்ன நிம்மதியா சாக விடமாட்டான் போல இருக்குப்பா.''

" ஏன்யா இப்படி கவலைப்படுகிறீர்கள் ?" என்று நான் கேட்டேன்.

பெரியவர் பக்தவத்சலம் விம்மிக்கொண்டே சொன்னார் 
" திடீர்னு குல்லாக்காரன் 'நான் முதலியார். பக்தவத்சலம் தான் எங்க அப்பா' ன்னு சொல்லிட்டா 
என்ன செய்யறது?"

தமிழக முதல்வர் ஆக இருந்த காலத்தில் பத்திரிகைகளில் கார்ட்டூனில் பக்தவத்சலத்தை குரங்கு போலவே வரைவார்கள்.ஜெயந்தி நடராஜனின் தாத்தா.

மோகன் குமாரமங்கலம் விமான விபத்தில் மறைந்த மறு நாள் மதுரை ஆரப்பாளயத்தில் நடந்த திமுக கூட்டத்தில் வெற்றி கொண்டான் பேசியது :
கடவுள் மோகன் குமாரமங்கலத்திடம் கேட்டார் " மோகன்,  நீ கலைஞரை ரொம்ப திட்டுற .

மோகன் குமாரமங்கலம் பதில் : ஆமா கடவுளே . அது தான என் வேலை. திமுக வை எம்ஜியாரை வைத்து உடைத்ததே என் வேலை தான் . இந்திராகாந்தி இந்த மாதிரி வேலை செய்யறதுக்காகவே என்ன மத்திய மந்திரியாக்கி வச்சிருக்கு கடவுளே.

கடவுள் : மோகன், நீ இந்த மாதிரி வேலையை நிறுத்து . கலைஞரை திட்டாதே.

மோகன் : முடியாது கடவுளே 

கடவுள் : அப்ப நீ கலைஞரை திட்டுவே?

மோகன் : ஆமா கடவுளே 

கடவுள் : திட்டுவ நீ?

மோகன் : ஆமா திட்டுவேன் .

கடவுள் : சரி, நீ ஏறு ப்ளேன்ல.

எம்ஜியார் ஆட்சியில் முதல் முறையாக கருணாநிதி கைது செய்யப்பட்ட நிகழ்வைப் பற்றி வெற்றி கொண்டான் : மாஜிஸ்ட்ரேட் சொன்னார் ' கருணாநிதியை கைது செய்ய உத்தரவிடுகிறேன் '. அப்படி சொன்னது தான் தாமதம். 
அந்த கோர்ட்டுக்கு எதிரே 
ஒரு ஓட்டல். நல்ல பெரிய ஓட்டல் . நீங்க ஓட்டல்காரன் கிட்டே இப்ப கேளுங்க. இன்னைக்குப் போயி கேளுங்களேன். 
அவன் சொல்வான் ." இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி " 
ஓட்டல் இருந்த இடத்த கை நீட்டி காட்டி இன்னைக்கும் சொல்றான் ." இந்த இடத்திலே தான் என் ஓட்டல் இருந்துச்சி "

( கருணாநிதி கைது உத்தரவைக் கேட்டவுடன் கொதித்துப்போய் ஆவேசத்தில், உடனே ,உடனே
 உடன் பிறப்புகள் ஓட்டலை அடித்து நொறுக்கி விட்டார்களாம்..இப்போ வெறும் பொட்டல் தான். ஓட்டல் கட்டிடம் தூள் தூளாகி விட்டது என்று அர்த்தம்)

நாவலர் நெடுஞ்செழியன் பற்றி வெற்றி கொண்டான் : அது ஒன்னு இருந்துச்சுய்யா எங்க கிட்டே. 
நல்லா நெடு,நெடுன்னு, கொழு, கொழுன்னு .. 
அடிச்சி பிரியாணி பண்ணியிருந்தா அம்பது பேர் சாப்பிட்டிருக்கலாம். விட்டுப்புட்டோம்.

திருச்சி திமுக கூட்டமொன்றில் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் ஜெயலலிதாவின் வீடு பற்றி வெற்றி கொண்டான் : டே, உன் தலைவி ஜெயலலிதா வீட்டுக்கு வேதா நிலையம்னு பேர் எப்படி வந்துச்சி தெரியுமா. வேதாசலம் முதலியார்னு மதுராந்தகத்துலே ஒர்த்தன். 
அவன் தான் ஜெயலலிதா அம்மா சந்தியாவை கொஞ்ச நாள் 
அந்த காலத்திலே ஓட்டிக்கிட்டு இருந்தான். அவன் கிட்ட இருந்து புடுங்குன வீடு தான்  உன் தலைவியோட ' வேதா நிலையம் '

உடனே கூட்டத்தின் முன் வரிசையில் சேரில் உட்கார்ந்திருந்த அத்தனை திமுக பெண்களும் கூட்டத்தை விட்டு அவசரமாக வெளியேறி விட்டனர்.

......................................
மீள் பதிவு 2009

https://www.facebook.com/share/p/1GfEdGyBJn/

Te Quiero


Te Quiero 

Te quiero"
அப்போது பதினெட்டு வயது. படித்துக்கொண்டிருந்த டெனிஸ் ராபின்ஸ் நாவல் 'Brief Ecstasy'ல் படித்த
"Te quiero".
 ஸ்பானிஷ் மொழியில் 
"Te quiero" என்பது “I love you”.
இந்த ஸ்பானிஷ் "Te quiero" வை கடிதத்தில் பல இடங்களில் மீண்டும் மீண்டும் தெளித்தேன். குழம்பட்டுமே. தவிக்கட்டுமே. இது என்ன வார்த்தை, என்ன அர்த்தம்…
...

கடந்த காலங்களில் 
 பல முறை பல சந்தர்ப்பங்களில்
 Te Quiero எப்போதுமே உபயோகப்படுத்த வேண்டியிருந்திருக்கிறது 

Nov 16, 2017
Memory is my fate

கருத்தழிவின் கழிவு காதலன் பிதற்றல்
- பிரமிள்

Gabie Dear, Nothing to dance with the pen?
என்று குறிப்பு எழுதிய காதலிக்கு உடனே, உடனே
”என் இதய கீதமே!
இதோ என் பேனா தா, தை, தக்க தை போட ஆரம்பித்து விட்டது” என கடிதம் எழுதினேன்.
மீராவின் ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’ கவிதைத்தொகுப்பில் இருந்து கவிதையெடுத்து கடிதத்தில் திணித்தேன்.
“ நீ முதல் முறையாக தலை சாய்த்து கடைக்கண்ணால் பார்த்த பார்வை என் நெஞ்சில் முள்ளாய் தைத்து விட்டது. முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும். இன்னொரு முறை பார்”

"Te quiero"
அப்போது நான் படித்துக்கொண்டிருந்த டெனிஸ் ராபின்ஸ் நாவல் 'Brief Ecstasy'ல் படித்த
"Te quiero".
 ஸ்பானிஷ் மொழியில் 
"Te quiero" என்பது                         “I love you”.
இந்த ஸ்பானிஷ் "Te quiero" வை கடிதத்தில் பல இடங்களில் மீண்டும் மீண்டும் தெளித்தேன். குழம்பட்டுமே. தவிக்கட்டுமே. இது என்ன வார்த்தை, என்ன அர்த்தம்…

ஒரு பாட்டு எழுதி பாடி பாட்டு போட்டிகளில் பரிசு வாங்கியிருக்கிறேன்.
”மாங்குயில் பாடிடும் கீதம் கேளாய் வாழிய மாதவளே
வாழ்வினில் புதுமை வளமே காண வருகை தந்தோய் வாழி
சிரிக்கவைத்தேன் அது தவறென்றால்
உன்னை அழுக வைத்தேன் அது சரிதானா?
நீ இல்லை என்றால் காலமெல்லாம்
உன் நினைவு வந்து மொழி சொல்லுமே
நினைவு வந்து மொழி சொல்லுமே
இருக்கின்ற நீ எனக்கில்லையென்றால்
அந்த இல்லாத இறைவனும் இருக்கட்டுமே
உன் மனம் புண்பட இறைஞ்சுகிறேன்
என் அகமே நெகிழ மறந்து விடு
அகமே நெகிழ மறந்து விடு”

Benchmark Love.

Love is a resurrection.

.....

இப்ப "With Love" ல
Te quiero பயன்படுத்தப்பட்டுள்ளது

With Love ஹீரோ இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ரசிகன். 
யுவனின் போஸ்டர் பார்த்த போது
ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்' சீரியலில் இப்போது ஒளிபரப்பான 204 வது எபிசோட் "யுவன் ஷங்கர் ராஜா" தான் என்பது நினைவுக்கு வருகிறது.

Feb 8, 2026

சிங்காநல்லூர் ரோட்ல

சிங்காநல்லூர் ரோட்ல ராமானுஜ நகர் அருகே " சார், நீங்க ராஜநாயஹம் தான?"
மாஸ்க் அணிந்திருந்தும் அடையாளம் கண்டு பிடித்து கேட்டார்.
V. முருகேசன். TNCD Building construction ல் வேலை பார்க்கிறார்.
அருமையான வாசகர்.

R.P.ராஜநாயஹம் எழுத்தை 15 வருடமாக 
வாசித்துக்கொண்டிருக்கிறார்.நேற்றைய பதிவை கூட படித்திருக்கிறார். அன்போடு பேரன் பேத்திகள் பற்றி கூட விசாரித்தார்.

 முரசு டிவியில்"சினிமா எனும் பூதம்" சீரியல் இருநூறு தாண்டி விட்டது பற்றி பாராட்டி முருகேசன் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.

Feb 6, 2026

204, 205 Episodes

204, 205 episodes 

R.P. ராஜநாயஹம் 
"சினிமா எனும் பூதம்"
தொலைக்காட்சி தொடர் 

1. யுவன் ஷங்கர் ராஜா 

2. G.V. பிரகாஷ் குமார்

வருகிற ஞாயிற்றுக்கிழமைகளில் 

முரசு டிவியில் 
காலை எட்டரை மணிக்கு

.....

R.P. ராஜநாயஹம்
'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 3ம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.

.....