சஸ்தி ப்ராதா (Sasthi Brata) எழுதிய சுயசரிதை "My God Died Young'' நாற்பது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது.
சஸ்தி ப்ராதா சிறுவனாயிருக்கையில் அவர் வீட்டில் வேலைக்காரன் ஒருவன், சிறுவன் சஸ்தியை homosexualஉறவுக்கு பயன் படுத்தியதை குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் Homosexuality பரவலானதில் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களையும் காரணமாக சஸ்தி குறிப்பிடுவார்.மற்ற இரண்டு தளங்கள் ராணுவம், சிறைச்சாலை.
எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே கண்டு புதுமைப் பித்தன்
" புதிய நந்தன் ", "அவதாரம் " ஆகிய சிறுகதைகளில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் Homosexuality பற்றி எழுதியிருக்கிறார். புதுமைப் பித்தன் இறந்தே அறுபது வருடங்களுக்கு மேல் ஆகிறது.
புதிய நந்தன் சிறுகதையில்
பாவாடை என்ற தானியேல் ஜான் என்ற தோழர் நரசிங்கம் எனப்பட்ட புதிய நந்தனின் படிப்படியான evolutionபற்றி
"ரெவரண்ட் ஜான் ஐயர் வேளாளக் கிறிஸ்தவர்.
( புராட்டஸ்டன்ட் மதகுருக்களை ஐயர் என்று சொல்வார்கள் ) ஜான் ஐயருக்கு ஒரு பெண் உண்டு. மேரி லல்லி என்ற பெயர் . நல்ல அழகு...... பாவாடையிடம் ( தானியேல் ஜான் ) சிறிது பிரியம்.நட்பு வர காதலாக மாறியது. கிறிஸ்தவ சமுதாயத்தில் இந்துக்கொடுமைகள் இல்லையென்று ஜான்ஐயர் போதித்ததை நம்பி மனப் பால் குடித்த தானியேல் ஒரு நாள் ஐயரிடம் நேரிலேயே தன் கருத்தை வெளியிட்டான். ஜான் ஐயருக்கு வந்துவிட்டது பெரிய கோபம். " பறக்கழுதை,வீட்டை விட்டு வெளியே இறங்கு " என்று கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளினார்.
சுவாமியாராகப் போய் விடவேண்டுமென்று அடுத்து கத்தோலிக்க மதத்தை தழுவி,சுவாமியார் பரீட்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட (Novice) நாவிஸ் ப்ரதராகி,
Fatherஞானப் பிரகாசம் மேற்பார்த்த மடத்தில் இரண்டு வருடங்கள் கழித்தான். சுற்றி நடக்கும் அபத்தங்களும், சில சுவாமியார்களின் இயற்கைக்கு விரோதமான இச்சைகளும், மனதிற்கு சற்றும் சாந்தி தராத இரும்புச்சட்டம போன்ற கொள்கைகளும் அவன் மனத்தில் உலகக் கட்டுப் பாடே பெரிய புரட்டு என்ற நம்பிக்கைகளைக் கிளப்பி விட்டன. அதனிடமும் விடைபெற்றுக் கொண்டு திரு ராமசாமிப் பெரியாரின் சுய மரியாதை இயக்கத்தில் ஈடுபட்டு விட்டான். பெரும் தீவிரவாதி. இப்போது தோழர் நரசிங்கம் என்ற பெயருடன் தனக்குத் தெரிந்த உண்மைகளை, அதில் பைத்தியம் பிடித்தது போல் பிரச்சாரம் செய்து கொண்டு வந்தான்."
"அவதாரம் '' சிறுகதையில் புதுமைப் பித்தன்
" ஈராயிர வருஷங்களாக மதப் பிரச்சாரமும் செய்து பழுத்து முதிர்ந்து போன ஒரு ஸ்தாபனத்தின் கோளாறுகள் அவனைத் திடீரென்று சந்தித்தன. ஒரு லட்சியமோ,கொள்கையோ இல்லாதவர்களும், அல்லது இலட்சியத்திலோ,கொள்கையிலோ நம்பிக்கையில்லாதவர்களும் பிரம்மச்சரிய விரதத்தை அனுஷ்டிக்க முயல்வதும், அனுஷ்டிக்கும்படி கட்டாயப் படுத்தப் படுவதும் ரொம்ப அபாயகரமான விஷயம். தீயுடன் விளையாடுவதாகும்.இது மனவிகாரங்கள் புகுத்தும் சுழிப்புகள். அந்த மனிதனுக்கு ஆபத்தை விளைவிப்பதுடன் நின்று விடாமல் ஸ்தாபன பலத்திற்கே உலை வைத்து விடுகின்றன.
இசக்கிமுத்துக்கு ஏழாவது வகுப்பில் ஏற்பட்ட பெர்னாண்டஸ் சாமியார் விபரீத ஆசையைக் கொண்டவர். பையனுடைய அழகு அவருடைய நேர்மையற்ற காம விகாரத்திற்கு இலக்காகியது. பையன் திடுக்கிட்டான். தலைமைச் சாமியாரிடம் ஓடித் தெரிவித்தும் நிவாரணமோ ஆறுதலோ கிடைக்க வழியில்லாமல் போக, சிறுகுழந்தைத்தனத்தின் அனுபவ சாத்தியமற்ற முறைகளைக் கையாண்டு பள்ளிக் கூடத்திலிருந்து விரட்டப்பட்டான்."
"ஆமென் " ஒரு கன்யாஸ்த்ரீயுட ஆத்மகதா சுயசரிதை ( Amen-An Autobiography of a nun) சென்ற பிப்ரவரி 2008ல் வெளிவந்த நூல். புதுமைப் பித்தன் ' அவதாரம் ' கதையில் இசக்கி முத்து - பாதிரி பெர்னாண்டஸ் சம்பவத்தில் தலைமைச்சாமியாரிடம் ஓடித் தெரிவித்தபோதும் நிவாரணமோ ,ஆறுதலோ கிடைக்க வழியில்லாமல் போனது போல சிஸ்டர் ஜெஸ்மியுடைய நிஜ அனுபவம் இருக்கிறது. Eternal recurrence of the same event!
சிஸ்டர் ஜெஸ்மியை ஒரு சக கன்யாஸ்த்ரீ lesbianஉறவுக்கு வற்புறுத்தியபோது மூத்த கன்னியாஸ்த்ரீயிடம் கம்ப்ளைன்ட் செய்திருக்கிறார். ஆனால் ஜெஸ்மியின் கம்ப்ளைன்ட் IGNORE செய்யப் படுகிறது .
புதுமைப்பித்தன் எழுத்தின் நுட்பம்,சாசுவதத்தன்மையை பாருங்கள்!
சஸ்தி ப்ராதா சிறுவனாயிருக்கையில் அவர் வீட்டில் வேலைக்காரன் ஒருவன், சிறுவன் சஸ்தியை homosexualஉறவுக்கு பயன் படுத்தியதை குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் Homosexuality பரவலானதில் கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களையும் காரணமாக சஸ்தி குறிப்பிடுவார்.மற்ற இரண்டு தளங்கள் ராணுவம், சிறைச்சாலை.
எழுபது ஆண்டுகளுக்கு முன்னரே கண்டு புதுமைப் பித்தன்
" புதிய நந்தன் ", "அவதாரம் " ஆகிய சிறுகதைகளில் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் Homosexuality பற்றி எழுதியிருக்கிறார். புதுமைப் பித்தன் இறந்தே அறுபது வருடங்களுக்கு மேல் ஆகிறது.
புதிய நந்தன் சிறுகதையில்
பாவாடை என்ற தானியேல் ஜான் என்ற தோழர் நரசிங்கம் எனப்பட்ட புதிய நந்தனின் படிப்படியான evolutionபற்றி
"ரெவரண்ட் ஜான் ஐயர் வேளாளக் கிறிஸ்தவர்.
( புராட்டஸ்டன்ட் மதகுருக்களை ஐயர் என்று சொல்வார்கள் ) ஜான் ஐயருக்கு ஒரு பெண் உண்டு. மேரி லல்லி என்ற பெயர் . நல்ல அழகு...... பாவாடையிடம் ( தானியேல் ஜான் ) சிறிது பிரியம்.நட்பு வர காதலாக மாறியது. கிறிஸ்தவ சமுதாயத்தில் இந்துக்கொடுமைகள் இல்லையென்று ஜான்ஐயர் போதித்ததை நம்பி மனப் பால் குடித்த தானியேல் ஒரு நாள் ஐயரிடம் நேரிலேயே தன் கருத்தை வெளியிட்டான். ஜான் ஐயருக்கு வந்துவிட்டது பெரிய கோபம். " பறக்கழுதை,வீட்டை விட்டு வெளியே இறங்கு " என்று கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளினார்.
சுவாமியாராகப் போய் விடவேண்டுமென்று அடுத்து கத்தோலிக்க மதத்தை தழுவி,சுவாமியார் பரீட்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட (Novice) நாவிஸ் ப்ரதராகி,
Fatherஞானப் பிரகாசம் மேற்பார்த்த மடத்தில் இரண்டு வருடங்கள் கழித்தான். சுற்றி நடக்கும் அபத்தங்களும், சில சுவாமியார்களின் இயற்கைக்கு விரோதமான இச்சைகளும், மனதிற்கு சற்றும் சாந்தி தராத இரும்புச்சட்டம போன்ற கொள்கைகளும் அவன் மனத்தில் உலகக் கட்டுப் பாடே பெரிய புரட்டு என்ற நம்பிக்கைகளைக் கிளப்பி விட்டன. அதனிடமும் விடைபெற்றுக் கொண்டு திரு ராமசாமிப் பெரியாரின் சுய மரியாதை இயக்கத்தில் ஈடுபட்டு விட்டான். பெரும் தீவிரவாதி. இப்போது தோழர் நரசிங்கம் என்ற பெயருடன் தனக்குத் தெரிந்த உண்மைகளை, அதில் பைத்தியம் பிடித்தது போல் பிரச்சாரம் செய்து கொண்டு வந்தான்."
"அவதாரம் '' சிறுகதையில் புதுமைப் பித்தன்
" ஈராயிர வருஷங்களாக மதப் பிரச்சாரமும் செய்து பழுத்து முதிர்ந்து போன ஒரு ஸ்தாபனத்தின் கோளாறுகள் அவனைத் திடீரென்று சந்தித்தன. ஒரு லட்சியமோ,கொள்கையோ இல்லாதவர்களும், அல்லது இலட்சியத்திலோ,கொள்கையிலோ நம்பிக்கையில்லாதவர்களும் பிரம்மச்சரிய விரதத்தை அனுஷ்டிக்க முயல்வதும், அனுஷ்டிக்கும்படி கட்டாயப் படுத்தப் படுவதும் ரொம்ப அபாயகரமான விஷயம். தீயுடன் விளையாடுவதாகும்.இது மனவிகாரங்கள் புகுத்தும் சுழிப்புகள். அந்த மனிதனுக்கு ஆபத்தை விளைவிப்பதுடன் நின்று விடாமல் ஸ்தாபன பலத்திற்கே உலை வைத்து விடுகின்றன.
இசக்கிமுத்துக்கு ஏழாவது வகுப்பில் ஏற்பட்ட பெர்னாண்டஸ் சாமியார் விபரீத ஆசையைக் கொண்டவர். பையனுடைய அழகு அவருடைய நேர்மையற்ற காம விகாரத்திற்கு இலக்காகியது. பையன் திடுக்கிட்டான். தலைமைச் சாமியாரிடம் ஓடித் தெரிவித்தும் நிவாரணமோ ஆறுதலோ கிடைக்க வழியில்லாமல் போக, சிறுகுழந்தைத்தனத்தின் அனுபவ சாத்தியமற்ற முறைகளைக் கையாண்டு பள்ளிக் கூடத்திலிருந்து விரட்டப்பட்டான்."
"ஆமென் " ஒரு கன்யாஸ்த்ரீயுட ஆத்மகதா சுயசரிதை ( Amen-An Autobiography of a nun) சென்ற பிப்ரவரி 2008ல் வெளிவந்த நூல். புதுமைப் பித்தன் ' அவதாரம் ' கதையில் இசக்கி முத்து - பாதிரி பெர்னாண்டஸ் சம்பவத்தில் தலைமைச்சாமியாரிடம் ஓடித் தெரிவித்தபோதும் நிவாரணமோ ,ஆறுதலோ கிடைக்க வழியில்லாமல் போனது போல சிஸ்டர் ஜெஸ்மியுடைய நிஜ அனுபவம் இருக்கிறது. Eternal recurrence of the same event!
சிஸ்டர் ஜெஸ்மியை ஒரு சக கன்யாஸ்த்ரீ lesbianஉறவுக்கு வற்புறுத்தியபோது மூத்த கன்னியாஸ்த்ரீயிடம் கம்ப்ளைன்ட் செய்திருக்கிறார். ஆனால் ஜெஸ்மியின் கம்ப்ளைன்ட் IGNORE செய்யப் படுகிறது .
புதுமைப்பித்தன் எழுத்தின் நுட்பம்,சாசுவதத்தன்மையை பாருங்கள்!