Share

Showing posts with label ராஜாஜி. Show all posts
Showing posts with label ராஜாஜி. Show all posts

Feb 27, 2017

பழைய கணக்கு


ராஜாஜிக்கு 1930களில் காங்கிரஸ் கட்சியில் தமிழகத்தைப்பொருத்தவரை தீரர் சத்தியமூர்த்தி தான் rival. சத்தியமூர்த்தியின் சீடர் தான் காமராஜர் என்பதால் 1950,60களில் எப்போதும் இருவருக்கும் ஏழாம்பொருத்தம் தான்.


காமராஜர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராயிருந்த போது
ராஜாஜி "காமராஜர் ஆட்சி ஊழல் ஆட்சி" என்றார்.
காமராஜர் அப்போது சொன்னார் " இவர் என்ன பெரிய பரசுராமரா?"
"காமராஜர் திட்டம்" பக்தவத்சலத்தை பின் தமிழக முதல்வராக்கியது.
.................

1967 ல் காங்கிரசை எதிர்த்து ராஜாஜியின் சுதந்திரா கட்சி தி.மு.கவுடன் கூட்டு.
ராஜாஜி சொன்னார் : "பிராமணர்கள் ஒரு கையால் பூணூலை பிடித்து கொண்டு மறுகையால் தி.மு.க வுக்கு ஓட்டு போடுங்கள். "

காமராஜர் பற்றி ராஜாஜியின் கடுமையான தாக்குதல்
”அந்த கறுப்பு காக்காயை வீழ்த்துங்கள்!”

பெரியார் காங்கிரஸுக்கு பிரசாரம் செய்தார். காமராஜருக்கு புகழாரம் சூட்டினார் : 'பச்சை தமிழன் காமராஜ்.கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் இந்த பூமியில் தோண்றியிராத அதிசய மனிதர் காமராஜ்! '

தேர்தல் முடிந்து திமுக ஆட்சிக்கு வந்தது. (ஹிந்தி எதிர்ப்பு , காங்கிரஸ் வெறுப்பு என்று காரணம் யாரும் இங்கே தயவு செய்து சுட்டி காட்ட கிளம்பி விட வேண்டாம்.)

கொஞ்ச நாளில் ராஜாஜி சொன்னார்
" திமுக வுடன் தேனிலவு முடிந்து விட்டது."
அண்ணாதுரை விடவில்லை "ஆம். தேனிலவு முடிந்து குடும்ப வாழ்க்கை ஆரம்பமாகியுள்ளது!"

1971ல் அண்ணா இல்லாத திமுகவை எதிர்த்து பெருந்தலைவர் காமராஜரும் மூதறிஞர் ராஜாஜியும் இணைந்து கருணாநிதியை எதிர்த்து மிக மோசமான படு தோல்வியை தழுவினர்.( பங்களா தேஷ் வெற்றி என்று காரணங்களை அடுக்குவது இரண்டாவது பட்சம்.)


எம்ஜியாரின் எழுச்சியில் ஸ்தாபன காங்கிரசும் சுதந்திரா கட்சியும் காணாமல் போனது.


எம்ஜியார் இருக்கும் வரை கருணாநிதி பருப்பு வேகவில்லை. எம்ஜியாரின் மரணம் மீண்டும் கருணாநிதிக்கு ஆட்சி கிடைத்து கொஞ்ச நாளில் மீண்டும் இழப்பு.

மூதறிஞர் ராஜாஜி , காலா காந்திகாமராஜர் இருவரையும் தோற்கடித்த கருணாநிதிக்கு 20 வருடத்தில் ஜெயலலிதாவிடம் 1991ல் மிக மோசமான தோல்வி ஏற்பட்டது .(ராஜீவ் கொலை தான் என்ற காரணம் இங்கு முக்கியப்படுத்த வேண்டியதில்லை.அது உள்ளங்கை நெல்லிக்கனி.)

கருணாநிதியிடம் ராஜாஜி, காமராஜர் தோல்வி மகத்தான சோகம். ஜெயலலிதாவிடம் கருணாநிதி தோற்றது கேலி கூத்து.

வரலாற்றின் குரங்குத்தனம்!
“Hegal remarks somewhere that history tends to repeat itself. He forgot to add: the first time as tragedy, the second time as farce”
-Karl Marx
............................................

http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post.html

http://rprajanayahem.blogspot.in/2012/10/1971.html

http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_3740.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_9319.html

 

Oct 1, 2009

Nobleness


ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாகாண முதல்வராக
(23 March, 1947 to 6 April,1949) இருந்தவர்.அப்போது அவருடைய மந்திரிசபையில் மூன்றே மந்திரிகள் தான்.
(பக்தவத்சலம், அவினாசிலிங்கம் செட்டியார், TSS.ராஜன்)

இப்போதெல்லாம் எல்லா மாகாணங்களிலும் பன்னிப்படை மாதிரி.


ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அன்றைக்கு அவர் தங்கியிருந்த T .V .ஸ்டேசன் பக்கத்துலே கூவம் ஹவுஸ் வீட்டுக்கு அரசாங்கக் காரை உபயோகப்படுத்தாமல் நடந்தே வீட்டுக்கு வந்தார். இந்த அதிசய நிகழ்வை அந்த தெருவே ஆச்சரியத்தில் வியந்து போய் பார்த்தது.
நேர்மை, நாணயம் நம்மிடத்திலிருந்து தான் வரணும்னு ஓமந்தூரார் சொல்வாராம். சொன்னது மட்டுமல்ல . அப்படியே வாழ்ந்து காட்டியவர்.

....................



ஈ . எம் . எஸ் . நம்பூதிரிபாட் . முன்னாள் கேரளா முதல்வர். அவருக்கு பல்வலி . திருவனந்த புரம் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார் . துணைக்கு அவருடைய மருமகள் . க்யூவில் நிற்கிறார் ஈ .எம் .எஸ் . டாக்டரைப் பார்ப்பதற்காக. விஷயத்தை கேள்விப்பட்ட தலைமை டாக்டர் பதறிப் போய் ஓடி வந்து முன்னாள் முதல்வரிடம் க்யூவில் நிற்கவேண்டாம் என்று மன்றாடி , உள்ளே வர அழைக்கிறார் . இவர் மறுத்து விட்டார் . ஒரு மணி நேரம் க்யூவில் நிற்கும்படியாகிறது . பிறகு தான் பல்வலிக்கு சிகிச்சை பெறுகிறார் . இது நடந்தது மார்ச் 18,1998 அன்று . அவர் மரணமடைவதற்கு இரண்டே நாள் முன்னதாகத்தான் இந்த சம்பவம் .
..................


ராஜாஜி முதல் அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாச விளைவுகள் . மந்திரிகள் உடனே கஜதுஜபதாதிகளோடு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிளம்ப யத்தனித்த போது ' நீங்கள் யாரும் போகவேண்டாம் . உங்களை வரவேற்கவும் , வசதி செய்து தரவும் , பாதுகாப்பு அளிக்கவும் தான் அதிகாரிகள் கவனம் செலுத்த முடியுமே தவிர ,பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் அல்ல ' என்று தன் சக அமைச்சர்களுக்கு தடை உத்தரவு விதித்து விட்டார் ராஜாஜி . அமைச்சர் பெருமக்கள் வராததால் மிச்சமாகும் பணத்தைக்கொண்டு , கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழைகளுக்குத் தாராளமாக,சிறப்பான உதவிகளை செய்யமுடியும் என்று மூதறிஞர் முடிவு செய்தார் .