தி.ஜா கட்டிய தாலி
1989ல் ஒரு கடிதம். டெல்லியிலிருந்து சாகேத ராமன் இதை ராஜநாயஹத்திற்கு எழுதியிருந்தார்.
தி.ஜானகி ராமனின் மூத்த மகன்.
" அப்பா இறந்து ஏழு வருடமாகி விட்டது . ஆனால் இன்னும் க .நா .சு வும் இந்திரா பார்த்தசாரதி யும் எங்களிடம் துக்கம் விசாரிக்க வரவே இல்லை '' என்று ரொம்ப வருத்தப்பட்டு எழுதியிருந்தார். Irony என்னவென்றால் க.நா.சு. இறந்து (டெல்லியிலே தான் ) அப்போது ஒரு வருடம் ஓடிவிட்டது என்பது தான்.
உடனே "சான்சேஇல்லை . க.நா.சு .இறந்துவிட்டார்''என்று சாகேத ராமனுக்கு கடிதம் மூலம் தெரியபடுத்தினேன்.
சாகேத ராமனின் வருத்தம் பற்றி அப்போது புதுவையிலிருந்த இந்திரா பார்த்தசாரதியிடம் கேட்டேன்." எனக்கு இந்த சம்பிரதாயங்களில் எல்லாம் நம்பிக்கையே கிடையாது"என்று சொல்லிவிட்டார் .
இன்னொரு சம்பிரதாய மீறல்.
திருமதி தி.ஜா தன் கணவர் இறந்த பின் தாலியை கழுத்திலிருந்து கழட்டித்தர மறுத்து விட்டாராம்.
"அவர் கொடுத்ததை நான் எதற்காக கழட்டி தரனும் . நான் மாட்டேன்" என்று பிடிவாதமாக ராஜலட்சுமி மாமி மறுத்து விட்டாராம். இறக்கும் வரை தன் தாலியோடு தான் இருந்தாராம்.
சாகேதராமன் இறந்த விஷயம் சிட்டி சொல்லித்தான் எனக்கு தெரிய வந்தது.
தி.ஜானகிராமனை நேரில்
R.P. ராஜநாயஹம் சந்தித்ததில்லை.
தி.ஜா. நினைவு மதிப்பீட்டு மடல் ராஜநாயஹம் வெளியிட்டு அதன்காரணமாகவே புதுவை பல்கலைக்கழகத்தில் தி.ஜா. கருத்தரங்கம் நடைபெற்றது.
அந்த கருத்தரங்கம் பற்றி விரிவாக விவரங்கள் சாகேதராமனுக்கு தபாலில் அனுப்பி வைத்த போது ராஜநாயஹத்திற்கு தன் ஆசியை ராஜலட்சுமி மாமி
தன் மகன் சாகேதராமன் மூலமாக தெரிவித்திருந்தார்.
புகைப்படத்தில்
ராஜலட்சுமி மாமி. திருப்பூர் கிருஷ்ணன் பதிவில் புகைப்படம் பார்த்தேன்.
தெளிவில்லாமல் இருந்ததால் Chatgptயில் Enhance செய்து தி.ஜா மகள் உமா சங்கரி அக்காவுக்கு அனுப்பினேன்.
அவரிடம் தாயின் புகைப்படம் வேறு எதுவும் இல்லை. அவருக்கு ரொம்ப மகிழ்ச்சி.
ராஜநாயஹம் அனுப்பிய இந்த புகைப்படத்தை பெரிதாக்கி ஃபிரேம் செய்து வீட்டில் வைக்க இருக்கிறார்.