Share

Dec 3, 2023

'தழல் வீரம்' 'காரணச்செறிவு' R.P. ராஜநாயஹம்


உன்னத உள்ளங்கள்

பா. அசோக்  : உங்கள் பாதங்களை முத்தமிடுகிறேன்... உங்கள் பரந்த வாசிப்புக்கும் வியாபித்த அறிவுக்கும்... எளியனின் மரியாதை.
குடத்திலிடப்பட்ட விளக்கல்ல நீங்கள் ... உண்மையில் குடத்திலடைபட்ட மின்னல்.. 
அதே பிரமிப்பு இன்றும் இனியும்!

Siva Kumar Kanagaraj : பல வருடங்களுக்கு முன் ஹோட்டல்களில் இலை போட்டு இட்லி வைப்பார்கள்.சாப்பிட சாப்பிட வைத்துக்கொண்டே இருப்பார்கள்.கூடவே சட்னி/கொத்ஸு/சாம்பார் இத்யாதி.எவ்வளவு சாப்பிட்டோம் என்ற கணக்கே நமக்கு தெரியாது.உங்கள் எழுத்தை எவ்வளவு படித்தாலும் இப்படி ஒரு உணர்வுதான் வருகிறது..

Umamaheshvaran Panneerselvam:  If I can write half as versatile as thyself I will pat myself sir. Always an admirer of your writings ..

Ilangovan Chanemouganandam : நான் முகநூலில் மிகவும் விரும்பிப் படிக்கும் பதிவுகள் R.p. Rajanayahem னுடையவை. A versatile personality. ஒருநாள் என்னத்த கன்னையா பற்றி எழுதுவார். திடீரென்று Cary Grant பற்றி எழுதுவார். சிலசமயம் மௌனி பற்றி பதிவார். அடுத்தநாள் Silvia Plath பற்றி அலசுவார். கூத்துப்பட்டறை ந. முத்துசாமி பற்றி எழுதிவிட்டு , பார்த்தால் Something is rotten in the state of Denmark (Hamlet) பற்றி கலக்குவார். impressionism -Paul Cezanne, Van Gogh, Rembrandt ...அப்பாடா.

சித்ரா சம்பத் : எனக்கு உண்மையிலேயே உங்களிடம் ஒரு நெகிழ்ச்சியும், பரிவும் இனந்தெரியா தவிப்புமுண்டு. வாராது வந்துதித்த மாமணியை தோற்போமோ என்பது போன்ற வேதனையும் உண்டு. சான்றோர்களை, அறவோர்களை போற்றாத, காப்பாற்றாத சமுதாயத்தின் ஓர் அங்கம் நான் என்ற வெட்கமும் உண்டு.

...............

Dec 1, 2023

R.P. ராஜநாயஹம் "தழல் வீரம்" பற்றி சுரேஷ் கண்ணன்


சுரேஷ் கண்ணன்:

ஜெய்ரிகி பதிப்பகம் வெளியிட்டிருக்கும், R.P..ராஜநாயஹத்தின் இரண்டாவது கட்டுரைத் தொகுப்பான 'காரணச் செறிவு' நூல் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இந்தப் பிரதியை அனுப்பியிருந்தார், பதிப்பாளர் அசோக். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. 

*
R.P..ராஜநாயஹம் அவர்களின் முதல் கட்டுரைத் தொகுப்பான 'தழல் வீரம்' நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவருடைய எழுத்தை 'மினி ரோலர் கோஸ்டர்' பயணம் எனலாம். அப்படி தவளைப் பாய்ச்சலில் தாவித் தாவி விரைந்து பயணிக்கும் தனித்துவமான எழுத்து. கலைடாஸ்கோப் வழியே காணும் காட்சிகள் போல் எழுத்தின் தொனி சட்சட்டென்று மாறுகிறது.

அவர் உபயோகிக்கும் பிரத்யேகமான ஆங்கில வார்த்கைளுக்கு டிக்ஷனரியைத் தேட வேண்டியதாக இருக்கிறது. ஆங்கில இலக்கியம் படித்தவர் அல்லவா? எனவே மேற்கோள்களிலும் வார்த்தைகளிலும் பின்னியெடுக்கிறார். இதுவே ஒரு தனியான ருசியைத் தருகிறது. 

இலக்கியம்,  இலக்கியப் பூசல்கள், எழுத்தாளர்கள், பிரபலங்கள் போன்ற ஆளுமைகள், தத்துவம், சினிமா என்று ஒரு வசீகரமான கலவையில் சுவாரசியமான பத்தி எழுத்தாக இந்தக் கட்டுரைகள் மலர்ந்திருக்கின்றன. 

குஷ்வந்த் சிங் என்கிற ரகளையான எழுத்தாளரைப் பற்றி அறிந்திருப்போம். ஆனால் அவருடைய மனைவியான
  Kawal Malik பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? அவருக்கு இருந்த காதல்களும், அதனால் குஷ்வந்த் சிங்கிற்கு இருந்த மனக்கசப்புகள் பற்றி?!

இப்படி பலரும் அறியாத தகவல்களை விதம் விதமான கோணங்களில் சுவாரசியமான எழுத்தில் கட்டுரைகளாக எழுதியிருக்கும் இந்த இரண்டு நூல்களும் வாசிக்கத் தவறாதவை என்றே சொல்லுவேன். 

*

(பின்குறிப்பு: சந்தையில் நன்றாக விற்பனையாகும் சரக்குகளை பதிப்பித்தோமா, லைப்ரரி ஆர்டர் எடுத்து கல்லா கட்டினோமா என்றெல்லாம் இல்லாமல், காலத்தில் மறைந்து போன சிறந்த எழுத்தாளர்களை, நூல்களை மெனக்கெட்டு தேடி புதிய வாசகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் சிரத்தையுடன் பதிப்பிக்கும் நண்பர் அசோக்கை 'பிழைக்கத் தெரியாதவர்' என்றே சொல்லுவேன். ;) அவருடைய பணி தொடர வேண்டுமானால் ஜெய்ரிகி பதிப்பகத்தின் நூல்களை வாங்கி ஆதரவளியுங்கள்)