ரெண்டு முருக பக்தர்கள்.
ரெண்டு பேருமே திருச்செந்தூர் முருக தரிசனம் மாதா மாதம் செய்பவர்கள். ரெண்டு பேருமே பரம எதிரிகள்.
’இவன் விளங்காத பய’ என்று அவனும்
“ வீணாப்போனவன் ” என்று இவனும் ஒருவரையொருவர் பரஸ்பரம் தூற்றிக்கொள்பவர்கள்.
ஒவ்வொரு தடவையும் புது பொம்பளையோடு தான் திருச்செந்தூர் போவார்கள். முதல் நாளே போய் ரூம் போட்டு தங்குவார்கள்.
‘தெங்கு’வார்கள்.
மறுநாள் காலை சன்னதியில் நின்று முருகா முருகா என்று உருகுவார்கள். பக்கத்தில் நிற்கிற புது பொம்பளையும் கண்மூடி பக்தி வெள்ளத்தில் மிதப்பாள்.
முருகக்கடவுள் “ ஏம்ப்பா… இப்படி கோவிலுக்கு என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் புதுசு புதுசா தள்ளிக்கிட்டு வர்ரீங்களேடா..
இது நல்லாவா இருக்கு..” ன்னு கேட்க மாட்டாரா? என இந்த இரண்டு முருகபக்தர்களை அறிந்தவர்கள் பேசிக்கொள்வார்கள்.
முருகா ஷண்முகா வேலாயுதா
கே.ஆர். விஜயா புருஷா
மீள்
......
இது வேலாயுத நாயர் பற்றிய பதிவு அல்ல.
இவர்கள் இருவருமே சினிமாவில் இருந்தவர்கள் இல்லை.
இரண்டு நகைக்கடை அதிபர்கள்.
சென்னை நகைக்கடை அதிபர்கள் அல்ல.
வேறு ஊர்.
திருச்செந்தூர் சாமியை முருகா ஷண்முகா வேலாயுதா என்றதும் associate memory கே. ஆர். விஜயா பிரபலமான வீட்டுக்காரர் வேலாயுதம் ஞாபகம் இரண்டு முருக பக்தர்களுக்கும் spontaneous ஆக வருகிறது.
R.P. ராஜநாயஹம் எழுதிய பழைய பதிவு.
இப்போது மீண்டும் போட காரணமும் விளக்க வேண்டுமா? அது எல்லோருக்கும் புரியும் என்பதால் சொல்லத்தேவையேயில்லை.
சரி அதையும் விளக்க வேண்டியது தானா?
த்ரிஷா புருஷன் ஜோசப்பின் திருச்செந்தூர் சத்ரு சம்ஹார பூஜை
( செய்வினை ஏவல் வைக்கிற வேலை) செய்தி கேள்விப்பட்டதும் current news க்கு relevance இருக்கிறதே என்று பரணில் இருந்து எடுத்து போடப்பட்டிருக்கிறது.
த்ரிஷா ப்ருஷா. செய்வினை ஏவல் யாருக்கும் தெரியாமல் ரகசியமா வக்கிறதுன்னு கேள்வி. இப்படி இவ்வளவு பகீரங்கமாவா?
https://www.facebook.com/share/p/1aQPUNYF6k/