Share

Showing posts with label சிவகுமார். Show all posts
Showing posts with label சிவகுமார். Show all posts

Oct 28, 2020

சிவகுமாருக்கு பாலு பாடல்கள்

 பாலுவின் முதல் பாடல் ஓட்டல் ரம்பா படத்தில். 

எல். ஆர். ஈஸ்வரியுடன் பாடிய "அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு" பாடல்

 படம் ரிலீஸ் ஆகாததால் 

காணாமலே போய் விட்டது. 

எஸ். பி. பி. முயன்று தேடியும் 

கிடைக்காமல் போய் விட்டது. 


இப்போது நடிகர் சிவகுமார் இதை சொல்வதை 

ஒரு வீடீயோ பதிவில் பார்த்தேன். 


சாந்தி நிலையம் ' இயற்கை எனும் இளைய கன்னி'

முதலில் ரிக்கார்ட் செய்யப்பட்டு விட்டது. 


 பால் குடம் படம்  1969, ஜனவரி பொங்கலிலேயே வெளிவந்தது. 

அப்படி பார்த்தால் பாலுவுக்கு தமிழில் முதல் பாடல்

' மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் ' தான். 


 நானும் இப்படித்தான் சொல்லுவேன். 


ஆனால் அதே பொங்கலில் தான் ஜெமினியின் குழந்தையுள்ளமும் ரிலீஸ். "முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு" பாலு பாடல். 


சாந்தி நிலையமும், அடிமைப்பெண்ணும் 

 1969 மே மாதம் தான் ரிலீஸ் ஆகின.


அதே 1969ல் செப்டம்பரில் 'கன்னிப்பெண்' 

சூப்பர் ஹிட் பாடல் "பௌர்ணமி நிலவில், பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா?" சிவகுமாருக்கு இரண்டாவதாக எஸ். பி. பி. 


1970ல் நவக்கிரகம் படத்தில் "உன்னை தொட்ட காற்று வந்து என்னை தொட்டது" சுசிலா பாடலில்

 எஸ் பி பி பிரமாதமாக சிவகுமாருக்கு ஹம்மிங் கொடுத்தார். 


1971ல் கண்காட்சியில் 'அனங்கன் அங்கஜன் அன்பன்' அருமையான சந்தப்பாடல். 

இந்த பாடலை நான் ஏ. பி. என் தொகையறாவுடன்

"வெண்ணிலவை  குடை பிடித்து " துவங்கி உச்சரிப்புக்காக  நடிப்பு பயிற்சி மாணவர்களுக்கு சொல்லி தந்திருக்கிறேன். 


அதே வருடம் 'மூன்று தெய்வங்கள்' முள்ளில்லா ரோஜா பாடல். (ஆனால் இது தான் தனக்கு பாலு பாடிய முதல் பாடல் என்று அவர் சீரியஸாக இருக்கும் போது சிவகுமார் சொன்னார்) 

பாலு இறந்த பிறகு "மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்" தனக்கு முதல் பாடல் என்றார். 

இது தான் உண்மை. 


அதன் பிறகு சிவகுமாருக்கு எத்தனையோ பாடல்கள் பாலு பாடி விட்டார். 

"உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி "

குறிப்பிடத்தக்கது. 

ஒரு பெரிய பட்டியலாக பாடல்கள். 


நடிகர் சிவகுமார் எண்பத்தேழு நடிகைகளுக்கு ஜோடியாக நடித்தவர். 

அவருடைய திரையுலக வாழ்க்கை 

ஒரு வித்யாசமான 'சீர்த்தன்மை' கொண்டது. 


அனுபவங்கள் விசேஷமானவை. 

'இது ராஜபாட்டை அல்ல ' என்ற நூல் அவரை எழுத்தாளராக அடையாளம் காட்டுகிறது. 


 காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் ஓவியர். 

ஒரு ஹீரோவுக்கு இசைந்து வராத இயல்பு ஓவியம் வரைவது. அந்த வகையில் மற்ற கதாநாயக நடிகர்களிடமிருந்து வேறுபட்டவர். 


நல்ல வாசகர். 

நவீன தமிழ் இலக்கிய பரிச்சயமுள்ளவர். 

ஓவியர்களில் வாசக குணம் அபூர்வம். 

நடிகர்களிலும் வாசிப்பு என்பது அரிதான விஷயம். 


பேச்சாளர். 


இதெல்லாமே சிவகுமாரின் ஆளுமைக்கு

 சிறப்பான அந்தஸ்தைப் பெற்றுத் தருகின்றன. 


இரண்டு பிரபல நடிகர்களின் தந்தை. 

அவருடைய மருமகள் கூட பெருமைக்குரிய நடிகை. 


கொடுத்து வைத்தவர் என்று

 எல்லோரும் மலைக்கும்படியான வாழ்க்கை.


Fotos 


1. Sivakumar 


2, 3. S. P. Balasubramaniam


https://m.facebook.com/story.php?story_fbid=2808815829331865&id=100006104256328

Oct 21, 2008

சிவகுமாரும் குமாரர்களும்

"ஒரு நடிகன் அவனோட கேரியரில் அஞ்சு படமாவது பெயர் சொல்லும்படியா பண்ணனும்டா " ன்னு அப்பா சொல்வார் ! இப்படி மே மாத ஆனந்த விகடனொன்றில் சிவகுமாரின் சின்ன மகன் பருத்தி வீரன் கார்த்தி சொல்லியிருந்தார் .
" நீங்க ஏம்ப்பா அப்படி ஒரு அஞ்சு படம் பண்ணவே இல்லை பெயர் சொல்லும்படியா " ன்னு சூரியாவும் கார்த்தியும் கேக்கலையா ?

'சொல்லத்தான் நினைக்கிறேன் 'படத்தில் இவர் கதாபாத்திரம் இன்றும் நினைத்து பார்க்கும்படியா இருக்கு . ஆனா வேறு சொல்லும்படியா சிந்து பைரவி யை கூட சேர்க்க முடியுமா ? சும்மா நல்லா நடிச்சிருந்தாரு ன்னு சொல்ல நிறைய பேர் வரலாம் . வண்டிச்சக்கரம் குண்டிச்சக்கரம்னு ஆரம்பிச்சி பட்டியல் தயவு செய்து போடாதிங்க .
பிள்ளைகள் சூரியா , கார்த்தி இருவரும் நல்ல நடிகர்கள் என்பதை அருமையாக நிரூபித்து விட்டார்கள் . கார்த்திக்கு ஒரு படம் தான் வந்திருக்கு என்றாலும் கூட பிரமாதமான ஆரம்பம் . சூரியா முதலில் திறமையை வெளிப்படுத்தவில்லை என்றாலும் பின்னர் செமையா பிதாமகன் , கஜினி இரண்டிலும் தூள் பண்ணி விட்டார் .

பாவம் அந்த காலத்தில் ஜெய்சங்கர் வத வதன்னு நடிச்சி ஒன்னும் பண்ணலை . சினிமா படம் போர் அடிக்கும் என்பதே ஜனங்களுக்கு ஜெய் சங்கர் படம் பார்த்தப்ப தான் தெரிய வந்தது . அது மாதிரி தான் சிவகுமாரும் ஒரே குப்பை படங்கள் தான் . தாமதமாக ரொம்ப தாமதமாக கதாநாயகன் ஆனவர் . ஆனபின்பு சுதாரிக்கவே இல்லை .Monotonous acting! படங்களும் தரமில்லாதவை .ஒரு இருநூறு படம் நடித்திருப்பார் . டான்ஸ் செயற்கையாக ஆடுவார் . நடிப்பு நாடக பாணி .ஆனால் ஒரு ஐந்து நல்ல படம் .... சான்சே இல்லை !
அவர் ராகம் போட்டு இழுத்து உருக்கமாக பேசுவதை இப்போது பலரும் மிமிக்ரி செய்து காட்டுகிறார்கள் . ஸ்டீரியோ டைப் . கமல் ,ரஜினி எழுபதுகளில் சிவகுமாரை ரொம்ப சுலபமாக ஓவர் டேக் செய்து விட்டார்கள் .
புவனா ஒரு கேள்விகுறி படத்தில் நல்லவனாக நடிக்காமல் வில்லன் ரோல் செய்தார் . ரஜனிக்கு அந்த படத்தில் நல்ல க்ளாப்ஸ் !உடனே இவர் வருத்தப்பட்டு 'வில்லன் ரோல் செய்தது தப்பு . இனிமேல் கவனமாய் இருப்பேன் ' என பேட்டி கொடுத்தது நல்ல ஜோக். ரஜனி எந்த ரோல் செய்தாலும் சிவகுமார் அவர் பக்கத்தில்நிற்கவே முடியாது என்பதை அடுத்த சில வருடங்களில் புரிந்து கொண்டிருப்பார் .

சிவகுமார் மீது ஒரு விசயத்தில் எனக்கு மரியாதை. வாசிப்பவர். நல்ல வாசகர். தி .ஜானகிராமன் , கிரா என்று துவங்கி இன்றைய சாரு நிவேதிதா எழுத்து வரை வாசிக்கிறார். அதற்காக அவரை பாராட்டலாம்.
” இது ராஜபாட்டை  அல்ல” என்ற அவருடைய நூலுக்காகவும் ரொம்ப பாராட்டலாம். நடிப்புக்காக ...சான்சே இல்லை!

ஒரு Irony! சிவாஜி கணேசன் மகன் பிரபு பெரிய சாதனை செய்ய முடியவில்லை .
முத்து ராமன் மகன் கார்த்திக் மிக சிறந்த நடிகர் . ஆனால் தன் பழக்கவழக்கங்களால் வீணாக கெடுத்து கொண்டார் .
ஆனால் சாதாரண நடிகர் சிவகுமார் மகன்கள் சூரியா , கார்த்தி நட்சத்திர அந்தஸ்து பெற்று விட்டார்கள் .
ஹிந்தி யில் ராகேஷ் ரோஷன் சாதாரண நடிகர் . அவர் மகன் ஹ்ரித்திக் ரோஷன் நட்சத்திர அந்தஸ்து பெற முடிந்தது . ஷாருக் கான் இருக்கும் வரை அமிதாப் பச்சன் மகன் நல்ல அருமையான நடிகர் என்றாலும் அபிஷேக் முதலிடத்திற்கு வியாபார ரீதியில் வரவே முடியாது.