தி. ஜானகிராமனை விட
தான் மூன்று வயது மூத்தவர் என்று
எம். வி. வெங்கட்ராம் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
ஜானகிராமனிடம் காணப்படும் சொற்சிக்கனம் எழுத்தில் இவரிடம் கிடையாது. நிறைய வார்த்தைகளை பயன்படுத்தி எழுதுவார்.
தேனீ என்ற பத்திரிகை நடத்துவதில் முழுக்கவனம் செலுத்தியதில் ஒரு வருடத்தில் எம். வி. வியின் பட்டு நூல் தொழில் பெரும் சரிவை காணும் படியானது.
அவருக்கு நேர்ந்த Hearing hallucination காரணமாக அவர் பட்ட பாடு 'காதுகள்' நாவலுக்கு உந்து சக்தி.
.....
காதுகள் நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்த போது லா. ச. ரா உற்சாகமாக அவரைப் பற்றி இந்தியா டுடேயில் எழுதியிருந்தார்.
எழுதியவர் மகா புருஷர் என்றால் எழுதப்பட்டவர் மகத்தானவர். இருவரையும் கௌரவப்படுத்திய எழுத்து. அதன் ஒவ்வொரு வரியும்
எனக்கு மனப்பாடம்.
வெங்கட்ராம் கும்பகோணம் வீட்டில் சில தினங்கள் லா.ச.ரா தங்கியிருந்திருக்கிறார்.
எம். வி. வெங்கட்ராம் பற்றி லா. ச. ரா வின் வர்ணனை. பட்டுத்துணி போட்டு வாசித்தாற் போல, அப்படியா குரல் ம்ருது என்பார்.
எம். வி. வியுடன் கும்பகோணத்தின் ஐக்கிய பாவம். அதற்காகவே வாழலாம் என்று ஏங்கி எழுதியுள்ளார்.
முந்தைய வருடம் எம். வி. வியை கோவையில் சந்தித்த நிகழ்வை குறிப்பிடும் போது லா. ச. ரா
'தளர்ந்திருக்கிறார் ' (நாங்கள் வேறு எப்படி இருக்க முடியும்) என்று ப்ராக்கெட் போட்டதை 26 வருடங்களுக்கு முன் நல்ல இளமையில் நான் படித்த போதே, முதுமையின் சோகம் பற்றிய கனம் காரணமாக கண் கலங்கியது.
பரிசு பெற்ற எம். வி. வி ' காதுகள் ' நாவல் பற்றியும் அதே இந்தியா டுடே இதழில் அமர்க்களமான ஒரு விமர்சனம் எழுதியிருந்தார் லா. ச. ரா.
'எம். வி. வெங்கட்ராம் நடை பதட்டமற்றது.
ஆனால் அழுத்தம் கொண்டது. '
- லா. ச. ரா
காதுகள் நாவலில் முன்னுரை தஞ்சை ப்ரகாஷ்.
..
1. எப்போதோ குமுதத்தில் வந்த படம்.
எம். வி. வியுடன் தஞ்சை ப்ரகாஷ், தேனுகா.
தேனுகாவை பார்க்க க்ளிக் செய்ய வேண்டும். வலது ஓரத்தில் சிரிக்கிறார்.
2. இந்தியா டுடேயில் எம். வி. வி, காதுகள் நாவல் பற்றியெல்லாம் லா. ச. ராமாமிர்தம் எழுதிய பக்கங்கள்