Share

Showing posts with label Macbeth. Show all posts
Showing posts with label Macbeth. Show all posts

Aug 26, 2017

வீடு பேறு


Present fears are less than horrible imaginings.
Come what may, Time and the hour runs through the roughest day.
- Macbeth


வீடு தேடுதல் படலம் முடிந்து வீடு மாற்றும் நேரம் இது. Shifting itself is a nightmare.
இரண்டு வருடங்களுக்கு முன் சென்னை வந்து குடியேறிய வீட்டில் இருந்து பத்தொன்பது நாட்களில் வேறு வீடு மாற்ற வேண்டியிருந்த துர்பாக்கியம் நேர்ந்தது. இப்போது மீண்டும் வேறு வீடு.
ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் குடி போகிறேன்.

வீடு தேடிய போது தெரிய வருகிற விஷயம். பெரும்பாலும் வீடு வாடகைக்கு விடுகிற நிர்வாகம் பெண்கள் கையில். Women house owners.எல்லோரும் லேடி மாக்பெத்தின் பேராசையுடன். A  Lady can never be a Gentleman.


Property is theft - மார்க்ஸ் வார்த்தைகள்.

பதற்றத்துடன் கேட்கிறார்கள். “ நீங்கள் இந்து தானே?”

வாடகைக்கு குடியிருப்பவர்களை அடிமைப்படுத்தி பிழியும்படியான, நரக வேதனைக்குட்படுத்தும் சண்டித்தனங்கள்.

இருக்கிறதிலே ஈசியான விஷயம் - Violence and Anger.


No more laughters. Prepare for tears.


”நான் என்ன தெய்வமா? யானையைப் ப்ராக்கெட்டில் போட்டு அஸ்வத்தாமாவின் உயிர் போய் விட்டது என்று ஜகப்புரட்டு பண்ண? சாதாரண மனிதன.” தி.ஜானகிராமன் “ போர்ஷன் காலி” கதையில்.



காலோ ஹய்யம் நிரவதி: விபுலாச ப்ருத்வி.

........................

http://rprajanayahem.blogspot.in/2017/04/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/2017/06/blog-post_19.html



Sep 8, 2009

புல்லை நகையுறுத்தி

புல்லை நகையுறுத்தி , பூவை வியப்பாக்கி விந்தை செய்யும் ஜோதி என்று குயில் பாட்டில் பாரதி சூரிய நமஸ்காரம் செய்வார் .
' புல்லை நகையுறுத்தி '
சூரியோதயம் புல்லை நகையாக்குகிறது . அல்லது புல்லுக்கு நகை தருகிறது .பாரதி புல்லை நகையாக்கினார் .
தாணு பிச்சையா என்ற தங்க நகை செய்யும் ஆசாரி ,தங்கத்தொழிலாளியின் கவிதை தொகுப்பு 'உறை மெழுகின் மஞ்சாடிப் பொன் '. அதில் ஒரு தங்கமான கவிதை -
காதில் தங்கத்தில் தொங்கட்டான் போட்டுக்கொள்ள வசதியில்லாத ஏழைப்பெண் . என்றாவது காதில் தொங்கட்டான் போட்டுக்கொள்ள முடியும் என்ற ஆசையும் நம்பிக்கையும் போகுமோ ? காதின் துளை மூடிவிடாமல் இருக்க வேப்பங்குச்சியை ஒடித்து சொருகியிருக்கிறாள் . மழை பெய்கிறது . மழைத்துளிகள் ஏழைப்பெண் காதில் வழிகிறது . காதில் உள்ள வேப்பங்குச்சியிலிருந்து சொட்டு சொட்டாக தொங்கட்டான் ஆகி .....
" ஓடித்துரசி போட்டுக்கொண்ட
வேப்பங்குச்சியால் உகுக்கிறாள்
தொங்கட்டானைப் போலுள்ள
மழைத்துளிகளை "

விவசாய எதிர்பார்ப்பை பொய்க்க வைத்த மழை பற்றி தேர்ந்த முதிர்ந்த விவசாயி " நேத்து பெஞ்சது என்ன மழையா ? மாமியா செத்ததுக்கு மருமக அழுத மாதிரில்லே இருந்துச்சு . மழைன்னா புருஷன் செத்தா பொண்டாட்டி அழுதமாதிரி இருக்கணும் ."
எஸ்.வைத்தீஸ்வரன் கவிதை - மேகங்களின் சேட்டை பற்றி :
வானம் கட்டுப்பாடற்று
பெற்றுத் திரியவிட்ட
மேகங்கள் ,
பொல்லா வாண்டுகள் .
நினைத்த இடத்தில் ,கவலையற்று ,
நின்று தலையில் பெய்துவிட்டு ,
மூலைக்கொன்றாய் மறையுதுகள்
வெள்ளை வால்கள் !"

மழை ,மேகங்கள் எனும்போது மின்னல் பளிச்சிடும் .
பிரமிளின் மின்னல் படிமங்கள் - ககனப் பறவை நீட்டும் அலகு, கடலில் வழியும் அமிர்த தாரை
'யது நாத்தின் குருபக்தி 'சிறுகதையில் தி.ஜானகி ராமன் :மின்னலின் அழகைக் காண ஒரு கணம் போதாதா ? ஒரு கணத்திற்கு மேல் தான் கிடைக்குமா ?'
மேக்பெத் நாடகத்தின் முதல் வசனம்
“When shall we three meet again?
In thunder,lightning or in rain