Share

May 20, 2025

வேடிக்க - 41


வேடிக்க - 41


மே 19ம் தேதி பாக்யராஜ் சார் அழைத்ததால் அவர் வீட்டிற்கு சென்ற போது சந்திக்க வாய்த்த ஜோன் ஃபெர்ணான்டோ. தூத்துக்குடி பூர்வீகம்.
அப்பா சென்னையில் இண்டியன் ஓவர்சீஸ் பேங்க்கில் பணியாற்றி ஆறு வருடங்கள் முன்பு ஓய்வு பெற்றிருக்கிறார். அம்மா டீச்சர் வேலை பார்த்தவர்.

ஜோன் ஃபெர்ணான்டோ 
டி.வி. சீரியல்களில் 
எடிட்டர் அசோக் மேத்தாவிடம் அசிஸ்டென்ட். 

தூத்துக்குடி ஃபெர்ணான்டோ என்றாலே சந்திரபாபு ஞாபகம் வரும். சாதாரணமாக தூத்துக்குடிக்காரர்கள் யாரை சந்திக்க நேரும் போதும்  சந்திரபாபு பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள். 
தூத்துக்குடி ஃபெர்ணான்டோ என்றால் உணர்ச்சி வசப்பட்டு, கண்கலங்குவதைக்கூட பார்த்ததுண்டு.

ஜோன் ஃபெர்ணான்டோ வயது 35.

"சந்திரபாபு தெரியுமா? தூத்துக்குடி  ஃபெர்ணான்டோ தான்."என்று சொன்னபோது 
ஜோன் தெளிவான பதில் 
" தெரியாது சார் "


May 17, 2025

பாடுவது சுகம்

பாடுவது சுகம் 
- R.P. ராஜநாயஹம் 

 'வளர் பிறை'யில் சௌந்தர்ராஜன் பாடிய பாடலை  பள்ளி, கல்லூரி படிக்கும் போதே பாடுவேன். 
Favourite பாடல்களில் இதுவும் உண்டு.

'பூஜ்ஜியத்துக்குள்ளே 
ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனைப் புரிந்து கொண்டால்
அவன் தான் இறைவன்'

'பச்சை மாமலை போல் மேனி,
பவளவாய் கமலச்செங்கண், அச்சுதா'

'மலர்களிலே பல நிறம் கண்டேன், 
திருமாலவன் வடிவம் அதில் கண்டேன்'

'கோபியர் கொஞ்சும் ரமணா,
கோபாலகிருஷ்ணா'

 ' அம்பலத்து நடராஜா, உன் பலத்தை காட்டுதற்கு என் குலத்தை தேர்ந்தெடுத்ததேனய்யா?'

' பாஞ்சாலி உன்னிடத்தில்
சேலை கேட்டாள்
அந்த பார்த்தனவன் உன்னிடத்தில்
கீதை கேட்டான் '

இப்போதும்  தான் இருபது வருடங்களாக கடவுள் நம்பிக்கை கிடையாது என்றாலும் இப்படி பாடல்களை பாடுவேன்.

பத்து வருடங்களுக்கு முன்பு பள்ளியில் communicative trainer (2013 to 2015)ஆக இருக்கும் போது வெள்ளிக்கிழமை பிரார்த்தனை கூட்டத்தில் பாடிய போது ஆசிரியர்களும் குழந்தைகளும் பாராட்டியதுண்டு. 

நெகிழ்ந்து அழுத குழந்தைகள் நிறைய்ய 

பள்ளியில் கூட்டிப் பெருக்கும் பெண்களும் கூட ' நீங்க பாடும் போது கண் கலங்கி விட்டது, அழுகை வருகிறது' என்பார்கள்.

CBSE பள்ளியில் ரம்ஜான் கொண்டாடிய போது 'கூன் பிறையை போற்றிடுவோம், குர் ஆனை ஓதிடுவோம்' (மு.க. முத்து பாடல்) பாடினேன். நான்காவது படிக்கும் முஸ்லிம் குழந்தை தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டான்.

Morning prayerல் ' பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம், தெய்வம்
அது பேசுகின்ற வார்த்தை என்றும் மெளனம், மெளனம் ' பாடும் போது உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் கண் கலங்கி குரல் தளுதளுத்தது.
பல குழந்தைகள் கண்களில் கண்ணீர்.

பாடம் நடத்த மூன்றாம் வகுப்பு போன போது பெண் குழந்தையொன்று " Sir, when you sang about mother, I controlled my tears. I went to the rest room and cried"

2002ல் திருச்சியில் இருந்த போது பள்ளி நண்பன் ஒருவனை பார்க்க போயிருந்தேன். அங்கே ஒருவர் வந்தார். அவரிடம்  அறிமுகம் செய்யப்பட்ட போது அவர் முக மலர்ந்து " நீ சின்னப் பையனாக Saint Joseph's ல்  'அன்பு என்பது தெய்வமானது ' பாடியதை  மறக்க முடியுமா?" என்றார்.
சிறுவனாக Saint Joseph's ல் ஏழாம் வகுப்பு படித்த போது
அவர்  அங்கே பத்தாம் வகுப்பு படித்தவராம். 

கூத்து பட்டறையில் மாஸ்டராக நான்கு வருடங்கள் இருந்த போதும் பாடியிருக்கிறேன்.

ஆடிய காலும் பாடிய வாயும் எப்போதும் நிறுத்தாது.

.....

மீள்பதிவு 

https://www.facebook.com/share/p/WJiQraRnAJv7E9yz/?mibextid=oFDknk

https://www.facebook.com/share/p/186xyFpJui/

May 13, 2025

வேடிக்க - 40 Unhap

வேடிக்க 40
Unhap 


I have no hope for what may not be done" 
- Shakespeare 
Hamlet

- அப்பா இறந்த போது 
வேலையில்லாமல் வறுமை, சிறுமையில் இருந்த ராஜநாயஹம். உடனடி நிவாரண உதவி தேவையான துர்பாக்கிய நிலை.

நீண்ட காலமாக தன் மகனிடம் மனஸ்தாபத்தால் பேச்சு வார்த்தையோ உறவோ இல்லாமல் இருந்த அம்மா விசித்திரமாக, ஏக்கத்துடன் சொன்னாள் : 
" நான் போறதுக்குள்ள உனக்கு ஏதாவது குடுத்துட்டு போக மாட்டேனாப்பா"
எதுவுமே தர முடியாமல் தான் மறு வருடம் இறந்தாள்.

இந்து டாக்கீஸில் ராஜநாயஹம் கட்டுரை பிரசுரமானதை பார்த்து விட்டு அவராகவே 
96 வயது பிரபலம் ஆசுவாசமாக சொன்ன வார்த்தைகள் 
" எப்ப எங்க சொல்லணுமோ அங்க சொல்ல வேண்டிய நேரத்தில நிச்சயம் சொல்லுவேன்"
பிரபல பத்திரிகைகளுக்கு ராஜநாயஹத்தை சிபாரிசு செய்வாராம்.
மூன்று வருடத்தில் அகால மரணமடைந்து விட்டார்.
அடடா, தள்ளாதவர் 
இன்னும் நெடுங்காலம் பூலோகத்தில் இருந்திருந்தால் ஆனந்த விகடனில்
 R.P. ராஜநாயஹம் தொடர் எழுத சிபாரிசு செய்திருப்பாராயிருந்திருக்கும். 
ஓஹோன்னானாம்.

May 8, 2025

வேடிக்க 39 - The Old man and the Shooting

ஜூனியர் மோஸ்ட் அசிஸ்டென்ட் டைரக்டர் ராஜநாயஹம்.

அந்த வயதான பெரியவர் வந்தார்.
" காம்ரேட், இந்த காட்சியில் நான் நிற்கும் போது என்னுடைய இந்த புத்தகங்களை தயவுசெய்து நீங்கள் பார்த்துக்கொள்ள முடியுமா?"

முழுமனதோடு கைகளில் வாங்கிக்கொண்டேன்.

அவுட் டோர் ஷூட்டிங். வயல் காட்டில் நாற்று நடும் பெண்களிடம் கதாநாயகி விதண்டாவாதம் செய்வதாக காட்சி.
பெரியவரும் அங்கே கூட்டத்தோடு நிற்க வேண்டும்.
அவர் கமல் ஹே ராமில் ஒரே காட்சியில் தலை காட்டியிருந்தார் என்பது நினைவில் மின்னியது.
எப்போதும் ஷூட்டிங் பார்க்க கூட்டம். சரியான முன்பகல் ஏறு வெயில்.

முதல் ஷாட் முடிந்தவுடன் சீனியர் அசிஸ்டெண்ட்கள் அந்த பெரியவரை கூப்பிட்டு சத்தம் போட்டு " அசிஸ்டெண்ட் டைரக்டரிடம் எப்படி நீ புத்தகங்களை கொடுக்கலாம்."

" ராஜநாயஹம், என்னங்க இந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சொன்னா நீங்க சரின்னு அந்தாளு புத்தகத்த வாங்கி எடுபிடி மாதிரி கையில வச்சிக்கிறீங்க. நம்ம ஸ்டேட்டஸ் ரொம்ப முக்கியம். அத ஞாபகம் வச்சிக்கங்க "
 கௌரவ பங்கமாம்.

" In a false quarrel, there is no true valour"
- Shakespeare 
'Much ado about nothing' 

பெரியவரிடம் " யோவ் மன்னிப்பு கேளுய்யா "

பெரியவர் நா தளுதளுக்க " என்னய மன்னிச்சிக்கங்க காம்ரேட். தெரியாம இப்படி பண்ணிட்டேன்." புத்தகங்களை வாங்கிக் கொண்டு நகர்ந்தார்.

......

பன்னிரண்டு வருடங்களுக்குப் பின் 
திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ் கிளப்பில் 
Oldman and the Sea ( Ernest Hemingway) பற்றி உரை நிகழ்த்திக்கொண்டிருந்த போது அந்த பெரியவர் அங்கு கூட்டத்தில் அமர்ந்திருப்பதை பார்த்து உடனே " காம்ரேட், நலம் தானே? " என கேட்ட போது அவர் குழம்பிப்போய் பார்த்தார்.
அவருக்கு அடையாளம் தெரியவில்லை.
வயல் காட்டு ஷூட்டிங்கில் நடந்ததை அங்கு வந்திருந்தவர்கள் கேட்கும்படியாக பழைய சம்பவத்தை சொன்ன போது பெரியவர் 
முக மலர்ந்து வாய் மலர்ந்தார் 
" காம்ரேட் நீங்களா?"

...........

https://www.facebook.com/share/r/18fLP6TYuP/

172nd 173rd Episodes done

172nd 173rd Episodes done

R.P.ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம்
முரசு டிவியில் 

11. 05. 2025 ஞாயிற்றுக்கிழமை 

18. 05. 2025. ஞாயிற்றுக்கிழமை

காலையில் எட்டரை மணிக்கு 

1.  T.R. சுந்தரம் 
மாடர்ன் தியேட்டர்ஸ் 

2.  A.L. சீனிவாசன்
சாரதா ஸ்டுடியோ 

......

'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல்                                                                   ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
R.P. ராஜநாயஹம் 
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது.

172nd 173rd Episodes done

172nd 173rd Episodes done

R.P.ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம்
முரசு டிவியில் 

11. 05. 2025 ஞாயிற்றுக்கிழமை 

18. 05. 2025. ஞாயிற்றுக்கிழமை

காலையில் எட்டரை மணிக்கு 

1.  T.R. சுந்தரம் 
மாடர்ன் தியேட்டர்ஸ் 

2.  A.L. சீனிவாசன்
சாரதா ஸ்டுடியோ 

......

'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல்                                                                   ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
R.P. ராஜநாயஹம் 
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது.

May 5, 2025

மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி

மாண்பமை உயர்நீதிமன்ற நீதிபதி 
விக்டோரியா கௌரி
R.P. ராஜநாயஹம் பற்றி:

"I enjoyed the entire meeting with full spirit.Everything is governed by intelligence not by chance என்று சொல்லிவிட்டு தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றபோது ஆச்சரியமாக இருந்தது.பின்னர் இது குறித்து உங்களிடம் கேட்ட போது ..ஆமா...ஆனாலும் ஆயாசமா இருக்கும் போதெல்லாம் இப்பவும் ஆண்டாளே ..முருகா என்று தான் வாயில் வர்றது..அதென்னவோ தெரியல கடவுள் நம்பிக்கை வரவேயில்லைமா... ஆனா அசோகமித்திரன் BJP காரர் தெரியுமா என்று நீங்கள் சொன்ன போது
 "I found a child in you as well sir".
It was an awesome meeting sir.Thank you"

2019ல் மதுரை சோமு நூற்றாண்டு விழாவின் போது

May 4, 2025

Frederick Arthur Bridgman Paintings

Frederick Arthur Bridgman paintings


1. An Afternoon in Algeria

2. Street Scene in Algeria

3. Funeral Procession of a Mummy on the Nile, 1877.

வேடிக்க 38

https://www.facebook.com/100006104256328/posts/pfbid0myVa1Uadm17zsAq6Ejv7VfwaqPgBf9a9s4mNGsUzFvt2iCHgb5RKy3bMBBGFFS3hl/?app=fbl

இந்த மூணு படமும் "வேடிக்க" பாத்தாச்சு

Apr 29, 2025

பெசண்ட் நகர் மயானத்தில்

27.04.2025
பகல் 
மயானத்தில் கண்ட காட்சி 

ராகுலன் அத்தை மகன் பாபு சேதுராமன் மறைந்து உடல் பெசண்ட் நகர் மயானத்தில் எரியூட்டப்பட்ட மறு நாள் மயானத்தில் பால் ஊற்றி சடங்கு நிகழ்ச்சி.

இரண்டாவதாக அமர்ந்திருப்பவர் விசாகன் ரஜினியின் இரண்டாவது மருமகன். மூன்றாவதாக சொர்ணா சேதுராமன். விசாகனின் தாய்மாமா. காங்கிரஸ் கட்சி துணைப் பொதுச் செயலாளர்.
ராகுலன் வெள்ளை சட்டை அணிந்து வலது ஓரத்தில் அமர்ந்திருக்கிறார்.

https://www.facebook.com/share/p/165wWBoV3B/

Ragulan Kadiresan

Apr 28, 2025

வேடிக்க - 37

சுப்பையா ஏ.ஏ. ரோட்டில் சைக்கிள் கடை வைத்திருந்தான். பெரிய மீசை. அந்த பகுதியில் ரௌடி இமேஜ் வேண்டி போராடியவன்.

போலீஸ் கேஸ்ல வகையா சிக்குனப்ப எஸ்.ஐ. 
'இவன் மீசை மசுர புடுங்குங்கடா ' ன்னு கான்ஸ்டபிள்களை ஏவியதுண்டு.
காவல் துறை பெரிய மீசை வச்சிக்கலாம். 'காவாலி'க்கு மீசை பெரிசா இருந்தா சகிச்சிக்க மாட்டாங்க. மொதல்ல சிக்குன சல்லியோட மீசைக்கு தான் உடனடி டார்ச்சர்.

பிரமலைக்கள்ளன் என்றால் ஏரியாவில் பயமும் மரியாதையும் உண்டு என்பதால் தன்னை அப்படியே கூவி கூவி கூறிக்கொள்வான். 
பிரமலைக்கள்ளர்களை முறை செப்பி விளிப்பான். 'என்ன மாமா', 'என்னா பங்காளி'

 ஆனால் அவன் தேவரே கிடையாது. வேறு ஜாதி என்று உறுதியாக பலரும் சொல்வதுண்டு. அந்த ஜாதி என்னவென்றும் சொல்வார்கள். 
'வேஷம் போட்டுத்திரியறான்ப்பு'

சலம்பல்களில் தேவமாருக்குத் தான் சப்போர்ட் பண்ணுவான்.

சோலை சிலம்பம் கற்றவன். இவன ரௌண்டு கட்டி நின்ன ஆரப்பாளையம் சல்லிகளை கையில் இருந்த கம்பை சுழற்றி நெருங்க விடாமல் செய்த போது 
 " சோல, இருடா டேய்"னு நைசா பேசி கம்பை வாங்கி விட்டான். உடனே சல்லிகளால் சோலை சுலபமாக பொரித்து, புரட்டி எடுக்கப்பட்டு விட்டான்.
சுப்பையா " ஆமா அம்ம இனத்தான்கள எதுத்தா நான் சும்மா இருப்பனா?"

கறிக்கடை தங்கப் பல்லு தங்காத்துக்கு சுப்பையாவை அறவே பிடிக்காது.
" சுப்பையா நட்டுத்தாழன். பிறமலை கள்ளனே கெடயாது, தொர."

சினிமா நட்சத்திரங்கள் பலர் பற்றி நெறய்ய gossips தவிர்க்க முடியாத விஷயம்.

குறிப்பிட்ட மூத்த பிரபல நாயகி பற்றிய பிரபல gossip : அந்த நடிகைக்கு கொங்கைகளில் ஒன்று எடுப்பா இருக்காது. சூம்பிப் போய் இருக்கும். 
கடத்திக் கொண்டு போன துஷ்டர்களில் ஒருவன் கடித்து விட்டான் என்று வதந்தி.

மற்றொரு Rumour :  அற்பாயுளில் பல வருடங்களுக்கு முன் மறைந்து விட்ட பிரபல பணக்கார மைனர் செய்த வேலை அது என்று நேரில் பார்த்த மாதிரியே, பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரியே கண்ணை விரித்து விவரமாக சொல்பவர்களும் உண்டு.

சுப்பையா declaration. ' அந்த நடிகயோட மொலைய கடிச்சவன் நான் தான். வெறியில காம்ப கடிச்சு துப்பிட்டேன் '

சகஜமாக இதை எல்லோரிடமும் எப்போதும் விரிவாக விலாவரியாக விவரித்து சொல்வான். ஒவ்வொரு தடவையும் சம்பவம் நடந்த லொக்கேஷன மாத்தி மாத்தி சொல்வான்.

பதிலி


இல்லத்தரசி கவன ஈர்ப்பு.
" பெஞ்சாதி சமையல் பண்ணிக்கிட்டு இருக்காங்க. பக்கத்தில
 SPB பாத்திரங்கள கழுவறாரு. பாருங்க."

உடனே உஷாராகி ராஜநாயஹம் 
முகத்தை சோகமாக்கி
 " என்னைக்காவது எப்பவாவது 
இப்படி உதவி 
உனக்கு செய்திருக்கேனா?"

Apr 26, 2025

நடிகவேளும் இரும்பு மனிதரும்

நடிகவேள் ராதா மகளுக்கு கல்யாணம். கல்யாண பத்திரிகை கொடுக்க மதுரை முன்னாள் மேயர் முத்துவைப் பார்க்க வந்திருக்கிறார்.

திராவிட இயக்கத்தின் இரும்பு மனிதர், பேரறிஞர் அண்ணாவின் முரட்டுப்பிள்ளை மதுரை முத்து. 'மதுரை முத்து எங்கள் சொத்து' என்று கலைஞர் பூரிப்பாக சொல்வார்.

ராதாவும் துடியான சாமி.

முத்து : வா மாப்ள.

ராதா: நீ பரவால்ல. மாப்ளன்னு சொல்ற.
ஒர்த்தன் கல்யாண பத்திரிகைல 'ராதாகிருஷ்ண நாயுடு' ன்னு என் பேர போட்டு கொடுக்கிறான்யா. 'இது என்னாடா நாய உடு?' ன்னு கேட்டேன். 
பேரு என்னடான்னா 
ராஜாராம் நாய உடு.. நாராயணசாமி நாய உடு, ராதா கிருஷ்ண நாய உடு? ன்னு பேர சொல்றானுங்க. 

மகள் கல்யாண பத்திரிகையை கொடுத்து விட்டு ராதா சட்டை மேல் பகுதியில் கையை பனியனுக்குள்  விட்டிருக்கிறார்.

மதுரை முத்து நகைச்சுவை உணர்வு மிக்கவர்.
சட்டென்று செயற்கை பதற்றத்துடன் 
 " எதுக்கு கைய உள்ள விடுற? ஒங்கிட்ட கவனமால்ல இருக்கணும். துப்பாக்கிய எடுக்றியா?"

Apr 23, 2025

170th and 171st Episodes of R.P. Rajanayahem

170th and 171st Episodes 
R.P. ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம்

முரசு டிவியில் 
ஞாயிற்றுக்கிழமைகளில் 
காலை எட்டரை மணிக்கு

27.04.2025 
B. நாகிரெட்டி

04.05.2025
L.V. பிரசாத்

Apr 20, 2025

வேடிக்க - 36 அழகே ஆபத்தாகி விட்டதே

R. நாராயணசாமி என்ற சுகுமார்.
 தம்பி என்று அன்போடு விளிப்பார். கும்பகோணம் சிட்டி யூனியன் பேங்க் ஹெட் ஆபிஸில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்றார்.
1981ம் ஆண்டிற்கு பிறகு பார்த்ததில்லை.

2024ல் மீண்டும் சந்திப்பு.

பெரிய குளத்தில் மத்திய அரசு துறை பணியில் இருந்த போது 
சுகுமார் சிட்டி யூனியன் பேங்க்.
இருவரும் ஒரே அறையில் இருந்தோம்.

வேலை முடிந்த பின் மாலையில் நகருலா, சினிமா என்று பொழுது போக்கு. தீப்பொறி ஆறுமுகம், வெற்றி கொண்டான் அரசியல் கூட்டம் போனதுண்டு.
வடுகப்பட்டி தியேட்டரில் சோட்டி சி பாத் (அப்போதே பழைய படம்)
பரவசமாக பார்த்திருக்கிறோம். 

கண்காட்சி நடக்கும் போது நாடகங்கள் பார்க்கப் போவோம்.

அப்படி எக்ஸிபிசனில் சுகுமார் சாருடன்  நாடகம் வேடிக்க பார்க்க போன போது
அங்கே வெள்ளசிங்கம். அப்ப நடுத்தர வயது குடும்பஸ்தர். ரொம்ப மூத்தவர்.
குடும்பம் கிராமத்தில்.
இவர் தெற்கு அக்ரஹாரத்தில் ஆறேழு பேருடன் ஜாகை.

அவரும் கூட்டம் அவ்வளவாக இல்லாத நாடகத்தை எங்கள் இருவரோடும் சேர்ந்து நின்று வேடிக்க பார்த்தார்.
வெள்ளை சிங்கம் நல்ல கருப்பாக இருப்பார்.  Funny ஆன தோற்றம்.

மேடை முன்னாலே மிக அருகில் நாடகத்தை 
 பார்த்த போது
கையில் சிகரெட்டோடு 
வெள்ள சிங்கம்.

நாடகத்தில் கதாநாயகி சேலை முனையை கையால் சுற்றிக்கொண்டவாறு பேசிய வசனம் 
"என்னிடம் அழகில்லையா? அறிவில்லையா? ஆனால் என்னுடைய அழகே எனக்கு ஆபத்தாக ஆகி விட்டதே" 

கார்ட்டூன் போல இருந்த வெள்ள சிங்கம் நல்ல சத்தமாக கூடியிருந்த கூட்டத்திற்கு கேட்கும்படியாக கத்தி கூப்பாடு போட்டார் 
" மாமா, என்ன மாமா, 
 இவ எனக்கு பொம்பள வேஷம் போட்ட மாதிரி இருக்கா?"

Apr 17, 2025

லிங்குசாமி பாக்யா ஆஃபிஸில் 1992ம் ஆண்டு


17.04.2025 பதிவு



1992ல் நடந்த சம்பவம்.

பாக்யா ஆஃபிஸ் 

ராசுக்குட்டி காலம்.

பாக்யராஜ் அசிஸ்டெண்ட் வெங்கடேஷின் சொந்த ஊரிலிருந்து வந்த ஒருவர். கூடவே அதே ஊரைச் சேர்ந்த இரு நபர்கள்.
சினிமா கனவுகளுடன் 
பாக்யராஜ் கிட்ட சேரமுடியுமான்னு
முயற்சி.

வெங்கடேஷ் உதட்டை பிதுக்கி வழியில்லை என்பதை எதிர்மறையாக 
உணர்த்துவதைப் பார்த்து 
அவர் வெங்கடேஷிடம் "நம்ம ஊர்ல இருந்து நாங்க கிளம்பி டிக்கெட் எடுக்கும் போது 'மெட்ராஸ்'னு டிக்கெட் எடுக்கல. 'வெங்கடேஷ்' னு தான் டிக்கெட் எடுத்தோம்"

'உன்ன நம்பித்தான் வந்திருக்கேன்' என்பதை..
அந்த வார்த்தைகள் நாடகீயமாக என்பதால் இவ்வளவு காலம் கழித்தும் நினைவில் நிற்கிறது. 

தற்செயலாக பக்கத்தில் இருந்து பார்த்த இந்த குட்டி நிகழ்வு கண்ணில் பசுமையாக.

அப்படி சொன்ன லிங்குசாமி 'ஆனந்தம்' இயக்கி திரையில் 
கொடி கட்டி 'ரன்' 'பையா' 'வேட்டை' 'அஞ்சான்'..

கமலோடு சேர்ந்து 'உத்தம வில்லன்' தயாரித்து.. 
கொடவாசல்ல இருந்து வந்து..சாதாரண சாதனையா?

இன்று கடும் பொருளாதார சிக்கலில் கலங்கும் லிங்கு.

....

Jun 11, 2024

சுரேஷ் கோபி - ப்ரசாந்த் நந்தா

பாக்யராஜ் ஆபிஸில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்த

சுரேஷ் கோபியை 

இயக்குநரை சந்திக்கவே விடாமல் அவருடைய அசிஸ்டெண்ட்கள் ரொம்ப அவமானப்படுத்தியதைப்பற்றி கேள்விப்பட்டதுண்டு.

இப்போது அவர் மத்திய அமைச்சர் ஆகி விட்டார். 

பாக்யராஜிடம் இது பற்றி பாண்டிச்சேரியில் சொன்ன போது

அவர் "உங்கள  அவமானப்படுத்தினாங்கெள்ள, 

சுரேஷ் கோபியையும் அப்டி பண்ணியிருக்கானுங்க."

ராஜநாயஹம் அனுபவித்த துயரமெல்லாம்
பாக்யராஜின் உதவி இயக்குனராக ஆன பிறகு ஐந்து மாதங்கள்.

அப்போது பாக்யராஜ் இன்னொரு சமாச்சாரம் சொன்னார்.

பாக்யராஜின் பெரும் ரசிகர்

 ஒடிசா நடிகர் இயக்குநர் ப்ரசாந்த் நந்தா.

இவர் ஒடிசா முன்னாள் அமைச்சர். இப்போது பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர். 

இவர் 'அந்தஸ்தோடு' பாக்யராஜை தேடி வந்து சந்தித்திருக்கிறார்.

Apr 16, 2025

உச்ச நீதிமன்ற நீதியரசர் அரங்க. மகாதேவன்

R.P. ராஜநாயஹம் மூன்று நூல்கள் 

காரணச்செறிவு 

தழல் வீரம் 

மணல் கோடுகளாய்..

(ஜெய்ரிகி வெளியீடு)

மாண்பமைஉச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் 
அவர்களிடம் 
கொடுத்த போது
16.04.2025 மாலை 
6.30 pm
ராணி சீதை ஹால்

மஞ்சள் சட்டையில் முகம் காட்டாமல் ராஜநாயஹம் 
மலர்ந்த முகத்துடன் உச்ச நீதிமன்ற நீதியரசர் 
" ஓ, ராஜநாயஹம்.. ராஜநாயஹம்!"


 Ashok Sai Ramana Thamburaj

Apr 13, 2025

வேடிக்க - 35

ரிக் ஷா ராசுக்குட்டி 

ரிக் ஷாக்காரன் கணேசன் 

செகண்ட் ஷோ பார்த்து விட்டு வரும் போது கணேசன் ஏ.ஏ. ரோட்டில்  டீக்கடையில் 
" தொர வாங்க,
நம்ம பலகாரம் சாப்பிட்டு வீட்டுக்கு போங்க"

டீக்கடையில் மூன்று 'பன்' வாங்கி, பன்ன பிச்சிப்போட்டு பால் சேர்த்து அடுப்பில் வைத்து, ஜீனி போட்டு கிண்டி சுட சுட உண்ணத்தந்திருக்கிறான்.
ருசி பிரமாதம்.
பல தடவை இப்படி மறக்க முடியாத பின்னிரவு உபசரிப்பு. 

ஆரப்பாளையத்தில் 
குடிசை வீட்டில் பட்டதாரி கவுன் போட்ட போட்டுக்கொண்டு கணேசன் எடுத்த போட்டோ, டாக்டர் ஸ்டெதாஸ்கோப் போட்டு கணேசன், போலீஸ் அதிகாரி யூனிபார்மில் அதே கணேசன். ஃப்ரேம் போட்டு சுவற்றில்.
குடிசைக்குள் குனிந்து  நுழைந்து பார்த்த போது ரிக் ஷா கணேசன் விசித்திர ரசனை மறக்கிற விஷயமா?
ரிக்ஷா கணேசன் படித்து, பின் எம்ஜிஆர் போல ஷேக்ஸ்பியர் படித்து விட்டு 
ரிக் ஷா ஓட்டிக்கொண்டிருந்தார் போல என்று எண்ணி விட வேண்டாம்.

அவர் படித்தவரல்ல.

 ஆசையோடு போட்டோ ஸ்டுடியோவிற்குப் போய் வித விதமாக தன்னை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டவர்.
உளவியல் பின்னணி விசித்திரமானது.
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஏக்கம் கொண்டிருந்தார்.


ரொம்ப வருஷம் கழிச்சி ராசுக்குட்டி படத்தில் அசிஸ்டென்ட் டைரக்டராக இருந்த போது யாரிடமும் கணேசன் பற்றி சொல்லவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு (11.04.2025) டைரக்டர் பாக்யராஜ் சாரிடம் கணேசன் பற்றி சொன்னேன்.


There are so many Rasukkuttis around here. Bhagyaraj always portrayed sparks of such lively characters in his movies

Apr 9, 2025

168th 169th Episodes in Murasu TV

R.P. Rajanayahem 168th 169th Episodes 
R.P. ராஜநாயஹம் 
சினிமா எனும் பூதம் 

முரசு டிவியில் 

13.04. 2025 ஞாயிற்றுக்கிழமை 

20.04.2025 ஞாயிற்றுக்கிழமை 

காலை எட்டரை மணிக்கு 

ஜெமினி ஸ்டூடியோஸ் S.S. வாசன் 

ஏ.வி. எம்  ஸ்டுடியோஸ் A.V. மெய்யப்பன் 
......

'முரசு டிவி'யில்
ஞாயிற்றுக்கிழமைகளில்
காலை எட்டரை மணிக்கு

2021 டிசம்பர் 5ம் தேதி முதல்                                                                   ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று
R.P. ராஜநாயஹம் 
'சினிமா எனும் பூதம்' 
தொடர்ந்து ஒளிபரப்பாகிக்
கொண்டிருக்கிறது.

......

Apr 4, 2025

போக் ரோடு சிவாஜி வீடு

08. 01. 1994 


ஜெமினி கணேசனுடன்
 சில மணி நேரங்கள் அளவளாவிக்கொண்டிருந்த போது
சிந்திய சுவாரசியமான விஷயம்
" சிவாஜி கணேசன் இப்ப இருக்கற 
போக் ரோடு வீடு முன்னால விலைக்கு வந்தப்ப எங்கிட்ட தான் வந்தாங்க. எனக்கு வேண்டாம்னு சொல்லிட்டேன். அப்புறம் தான் சிவாஜி கிட்ட கேட்டாங்க. அவர் வாங்கினாரு."
Loose words are gold coins.

ஜெமினி கணேசன் அப்ப அந்த வீட்ட விக்க வந்த ஹவுஸ் ஓனர் யாருன்னு கூட சொன்னாரு. 
இப்ப ஞாபகத்தில வரல.

பாரம்பரியமான பழமையான வீட்டுக்கு  mystic fictional nature உண்டு. 
எமிலி ப்ரான்ட்டியின் 'உதரிங்க் ஹைட்ஸ்' நாவல் நினைவுக்கு வருகிறது.
"blowing with a dull roaring sound". 

Emily Bronte 's Wuthering heights.

Apr 1, 2025

Fool and April 1st

Fool and April 1st

"பக்கத்து தெருவில சேவல்குட்டி இருக்காமே"

"இன்னக்கி யார் என்ன சொன்னாலும் நம்பாம கவனமாயில்லன்னா முட்டாக்கழுத  ஆயிடுவோம்"





Shakespeare's "A Midsummer Night's Dream," 

The most  quote involving a donkey (or "ass") is Bottom's transformation into an ass-headed creature,
 with his companions reacting with fear and humor, as seen in lines like "O Bottom, thou art changed! What do I see on thee?" and "You see an ass head of your own, do you?". 

Puck, a mischievous fairy, casts a spell that changes Bottom, a weaver and amateur actor, into an ass-headed creature. 

Recollect Another Shakespeare's two different quotes below on 'Fool' and 'April'

"Better a witty fool than a foolish wit."

"April hath put a spirit of youth in everything."

Mar 26, 2025

Cat And Mouse strategy

Who will bell the Cat? 
Cat And Mouse strategy

Mouse nail polishing the Cat.
The cat's claws may be sharp, but it's the mouse's wits that keep it safe.
In the game of life, even the smallest creature can outsmart the mightiest predator.

அமெரிக்கன் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் ஜான் சகாயம்

ஜான் சகாயம் இறந்து விட்டாரா?

Dr. Faustus என்றாலே நினைவுக்கு வரும் ஜான் சகாயமா? அடையாளம் தெரியவில்லையே.

"ஊட்டியில் தளையசிங்கத்திற்கு நடந்த தொழுகை" கட்டுரையில் பேராசிரியர் ஜான் சகாயத்தையும் குறிப்பிட்டிருக்கிறேன்.
"ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் மிகவும் விசேஷமானவர்கள். வசந்தன் தான் எனக்கு ஹேம்லட். நெடுமாறன்தான் மார்க் ஆண்டனி. ஜான்சகாயம் தான் 
டாக்டர் ஃபாஸ்டஸ். 
தமிழ் சாலமன் பாப்பையாவின் வகுப்பைவிட வெளியேதான் அவர் பேச்சு சுவாரசியமாயிருக்கும்."

அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில இலக்கிய பேராசிரியர்களில் மறக்கவே முடியாத ஆளுமை.

வகுப்பில் மிகவும் கண்டிப்பாக இருப்பார்.
பல முறை கண்டிக்கப்பட்டிருக்கிற ராஜநாயஹம்.

குறும்பு ராஜநாயஹம் பற்றிய
 ஜான் சகாயம் sarcastic satire 
"Gabie , Try to get a degree. You won't be handcuffed when you get a degree."

 ஜான் சகாயமா புகைப்படத்தில்?

வகுப்பெடுக்கும் போது சீரியஸ் ஆக இருக்கிறார் என்று தோன்றியதுண்டு. 
ஆனால் இடையிடையே subjectக்கு relevant ஆக இல்லாவிடினும்  inconsequential remarks he was making as part of a polite lecture.

This 'மல்லிகை மன்னன் மயங்கும்' business 
என்று ஜான் சகாயம் சார் சொன்னது பசுமையாக மனதில் பதிந்திருக்கிறது.

நான் எடிட் செய்த ( A book of blank verses composed underneath a bough,
 edited by Gabie) "மரத்தடி மகாராஜாக்கள்" நூலில் 
என் காதல் வசன கவிதையை('கூடுமானால் இந்த பாத்திரம் என்னை விட்டு விலகட்டும்') வரிக்கு வரி ரசித்து படித்துப் பாராட்டினார்.