Share

Feb 27, 2021

Ignorance with wings



ரொம்ப வசதியான அந்தப் பெரியவர் 

ஒரு சாமியாரின் கண்மூடித்தனமான பக்தர். 


சாமியார் பிரபலமாவதற்கு முன் 

அவரிடம் பழகியவர்.


இவர் இளவயதில் ஏழையாய் இருந்த காலத்தில் அவரைப் பார்த்து விசிறியபடி சாமி சொன்னாராம். “You are a rich man!”

இவர் பணக்காரராகவே ஆகிவிட்டார். 


சாமியாரைப் பார்க்க அந்தக்காலத்தில் ஒரு முறை போனபோது அவருடைய வீட்டில் இருந்து கிளம்பி காலைக்கடன் முடிக்க வெட்ட வெளியில் ஒதுங்கிய போது நடந்ததை அந்தப் பணக்கார பெரியவர் சொன்னார்.

“ சாமி ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமுமாக ஒக்காந்து இருக்கோம். 


சாமி சிகரட்ட பிடிச்சிக்கிட்டே வெளிக்கி போன பின் எந்திரிச்சி நடந்தாரு.


 நான் என்ன செஞ்சேன் தெரியுமா?


 அவர் பேண்ட பீய போய் பாத்தேன். 



கொஞ்சமா பிள்ளையார் மாதிரி இருந்த பீய கையில எடுத்தேன்.ஈரப்பசையே இல்ல. 


மோந்து பார்த்தேன். கொஞ்சம் கூட 

நாத்தமே இல்ல.


பிரசாதம் தான அது.

 கொஞ்சம் வாயில போட்டுக்கிட்டேன்.

கொஞ்சம் கூட கொமட்டவே இல்ல..”


..

https://m.youtube.com/watch?v=dYiA2ND7vVs&feature=share

சுஜாதா

 ராஜேஷ் குமார் அந்தக் கால நாவலுக்கு

 விளம்பரம் - போஸ்டர் கீழ்கண்டவாறு


கல்கிக்கு ஒரு "பொன்னியின் செல்வன் "


தி .ஜானகிராமனுக்கு ஒரு " மோக முள் "


ராஜேஷ் குமாருக்கு ஒரு " ஒரே ரத்தம் "


 கல்கிக்கும் ராஜேஷ் குமாருக்கும் இடையில் கிடுக்கிப்பிடியில் தி.ஜானகிராமன். 


சுஜாதா ஒரு தமிழில் trend setter. 

அவருடைய சிறுகதைகள். அப்புறம் அந்த 'வானமென்னும் வீதியிலே', 'நைலான் கயிறு'


அதோடு வாசகனுக்கு சீரியஸ் வாசிப்புக்கு 

நல்ல வழிகாட்டி. 

அவருடைய 'விருப்பமில்லாத திருப்பங்கள் ' நாயகன் கையில் பூமணியின் "பிறகு".


கணையாழியின் கடைசிப்பக்கங்கள். 


அறிவியல் கட்டுரைகள்.


அவருடைய பத்தி எழுத்து. 


சுஜாதாவை ' கரையெல்லாம் செண்பகப்பூ '

 டப்பிங் போது அவரை மிக அருகில் இருந்து

 ஒரு இரண்டு மணி நேரம் 

கவனித்துக் கொண்டிருந்தேன்.


 மனோரமா வந்தவர் உடனே 

டப்பிங் பேச ஆரம்பித்தார். 

விளக்கை மீண்டும் போட்டவுடன் மனோரமா சுஜாதாவை பார்த்து விட்டு

 'அய்யோயோ சார் நீங்க இங்கேயா உட்கார்ந்திருந்தீங்க? நீங்க இருப்பது தெரிந்திருந்தா பயத்திலே என்னாலே பேசியிருக்கவெ முடிந்திருக்காது.

உளறி கொட்டியிருந்திருப்பேன் ' என்றார். 


பச்சை கட்டம் போட்ட சட்டை

 போட்டிருந்தார் சுஜாதா. 

மனோரமாவிடம் அவர் பார்த்த

 'திருமலை தென்குமரி ' படத்தில்

 அவருடைய நடிப்பில் 

ஒரு குறிப்பிட்ட இடம் பற்றி

 " ஒரு எழுத்தாளருக்குடைய அப்சர்வேசன் அது" என பாராட்டினார்.


மனோரமா எப்போதும் போல் பரவசமாகி 

'சார் உங்க கிட்ட பாராட்டு வாங்க கொடுத்து வச்சிருக்கணும் சார்.' என்றார். 


டப்பிங்குக்காக 

லூப்களை பின்னோக்கி ஓட்டும்போது 

ரிவர்சில் நடிகர்கள் அபத்தமாக விகாரமாக செய்கைகள் மாறுவது பற்றி

 " கொடுமை, கொடுமைங்க. சம்பந்தபட்டவங்க பார்க்கும்போது நொந்து போயிடுவீங்களே" என்று மனோரமா, ஸ்ரீப்ரியா, தப்புத்தாளங்கள் சுந்தர் ஆகியோரை கிண்டல் செய்தார். 


நான் அவரிடம் பேசவே இல்லை.

 இரண்டு மணி நேரமும் அவரை அப்சர்வ் செய்துகொண்டிருந்தேன். 

அவரோடு வாசகனுக்கு பேசும் சூழல் 

இல்லை அது. 

சினிமாக்காரர்கள் சூழ 

சினிமா கனவுகளுடன் அந்த சுஜாதா. 


மேலும் நானும் அப்போது அவரை (அதுவரை அவர் எழுதியிருந்த அத்தனையும் )முழுமையாக படித்திருந்த போதும் ரொம்ப சின்னவயது. 


அன்று அதன் பின் எனக்கு ஒரு ஓட்டை சமாதானம் செய்து தேற்றி கொண்டேன். ஒரு நொண்டி சாக்கு.

அவருடைய வார்த்தைகள் " உண்மையான ரசிகர்கள், வாசகர்கள் நேரில் சந்திக்கிற, 

பேசுகிற ஜாதியில்லை."


... 



Feb 24, 2021

ஆண்டாளே, ரங்கமன்னாரே

 ஒரு காலை. 


கொய்யாப்பழம், சப்போட்டாப்பழம் 

ஒரு தள்ளு வண்டியில் வைத்து 

பழக்காரர் ஒருவர் கிளம்ப ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறார்.


அரைக்கிலோ கொய்யாப்பழம், அரைக்கிலோ சப்போட்டாப்பழம் வாங்கினேன்.


ஐம்பது ரூபாயை கொடுத்தேன்.

 முதல் போணி.

 தள்ளுவண்டிக்காரர் ரொம்ப பக்திமான். 


ஐம்பது ரூபாயை வானத்தில் உயர்த்தி 

ஒரு முறை சுற்றினார். 

மீண்டும் ஐம்பது ரூபாயை கண்களில் ஒற்றினார்.                          பின் மீண்டும் வானத்தைப் பார்த்து

 உரக்க கூவினார்: “ முருகா, முதல் போணி.”


பழங்களை என் கையில் 

அவர் கொடுக்கும் போதும் “ முருகா” என்றார்.


 இந்த வியாபாரியை கனப்படுத்த 

உடனே,உடனே முடிவு செய்தேன்.


பழங்களை கையில் வாங்கியவுடன்

 நான் கண்மூடி வானத்தைப்பார்த்து

“ ஆண்டாளே, பெருமாளே” என்று கூவினேன்.


பின் பழங்களை கையில் வைத்து இன்னொரு கையையும் இணைத்து கும்பிட்டு 

நல்ல சத்தமாக ஒரு கூப்பாடு 

“ ஆண்டாளே, பெருமாளே, 

இன்னைக்கு இவருக்கு அமோகமா 

வியாபாரம் நடக்கணும். 

ஆண்டாளே, ரங்கமன்னாரே”


....

Feb 23, 2021

R. P. ராஜநாயஹம் "மணல் கோடுகளாய்" - யாவரும் வெளியீடு

 யாவரும் வெளியீடு -158,சென்னை புத்தகக்காட்சி சிறப்பு வெளியீடு -15


எழுத்தாளர் R.P.ராஜநாயஹம் அவர்களின் "மணல் கோடுகளாய்..." கட்டுரைகள் தொகுப்பு வெளியாகியுள்ளது.


திருச்செந்தூர் கோவிலுக்கு மறுநாள் மாலை ஆச்சி என்னைகூட்டிக்கொண்டு  போனாள். “முருகா! முருகா!” என்று அதீத 

பரவசத்துடன் சன்னதம் வந்தது போல சாமி கும்பிட்டாள். எனக்கு பயமாகக்கூட இருந்தது. வேண்டுதல்களை எல்லாம் எல்லோருக்கும் 

கேட்கும்படியாக வாய்விட்டே சொன்னாள். 


தனக்கு பிடிக்காத உறவினர் ஒருவருக்கு தண்டனை வேண்டினாள் “பவுண்டு 

வீட்டுக்காரன ஜெயிலுக்கு அனுப்பு முருகா! எப்பவும் எசளி பண்ணிக்கிட்டே இருக்கான். 

அவன் நல்லவனே இல்ல பாத்துக்க” 

.. 


என்றாள்.  (நூலிலிருந்து...)


R.P. ராஜநாயஹம், தான்கடந்து வந்த மிகக் 

கடுமையானபாதையை தமது நீண்ட பயணத்தின் அனுபவத்திலிருந்து 

திரும்பிப்பார்க்கையில் மணல் கோடுகளாய் நீள்கிறது... இரத்தமும் சதையுமான மனிதர்களும், நாம் வியக்கும் 

ஆளுமைகளும் Juxtaposition செய்யப்பட்டு ஒரு கண்காட்சி போன்ற நினைவுச் சுவடுகளை சிறிய கேன்வாஸில் வரைந்து 

வைத்துள்ளார்.


நூலின் விலை Rs.190/- 


நூலினைப் பெற:


Be4Books

#24, Shop No.B, First Floor, S.G.P Naidu Complex, Velachery main road, Velachery, Chennai -600 042.

Conduct & watsup No.90424 61472

www.be4books.com 


வங்கி கணக்கு எண்:


A/c No.34804520231

Yaavarum Publishers 

SBI Bank, Chinamaya Nagar Branch

Ifsc code:SBIN0007990. or


GPAY 9841643380

Watsup :9042461472


அட்டை மற்றும் நூல் வடிவமைப்பு: Gopu Rasuvel



Feb 22, 2021

கவிஞர் ஆத்மார்த்திக்கு பிடித்த தன் கவிதையொன்று

 ஒவ்வொரு கவிஞரின் கவிதைகளில் அந்த கவிஞருக்கே பிடித்த கவிதை எது என்று

 அறிகிற ஆர்வம் எனக்கு உண்டு. 


கவிஞர் ஆத்மார்த்தியிடம் அவருக்கு பிடித்த 

தன் கவிதை கேட்டேன். 


அவர் தந்த கவிதை கீழே :


"எப்போதோ முடிவுற்ற மழை 

இலை நுனியில் நின்றுகொண்டிருப்பதைப் போல்

அன்னிய தேசத்தில் கொல்லப்பட்டவனின் 

பிரேதத்தைப் பெற்றுத் தரச்சொல்லி 

ஒரு அலுவலகத்திலிருந்து 

இன்னொரு அலுவலகத்திற்கு செல்வதற்காய் 

இறங்கி நடக்கிறவர்களின் ஞாபகங்களில் 

எஞ்சுகிறது வாதை


தேவாலயத்துக்கு 

வழியறியாத பார்வையற்றவனை 

அலைக்கழிக்கும் மணிச்சப்தம் போல் 

ஒவ்வொரு மாதமும் 

நாட்கள் தப்பி வரும் விடாய் குறித்துப் 

பகிர்வதற்கு யாருமின்றித்

தன்னுள் குவிந்து 

வலியை முகத்தில் தேக்குகிற இளவரசிக்கு 

இன்றைக்குப் பெரிய மனசுள்ள யாரேனும் 

பேருந்தின் சன்னலோரத்து இருக்கையை 

விட்டுத் தந்தால் பேருபகாரம்.


சமீபத்தில் காலமான யாரையாவது 

நலம் விசாரித்துவிட்டு மன்னிப்புக் கோருகிறவர்களை 

மாத்திரமாவது சந்திப்பினின்றும் 

அகற்றித் தருமாறு பிரார்த்திக்கிறார்கள் 

அன்புக்குரியவர்கள்.


கருவைக் கலைப்பதற்காக

வேற்றூரின் மருத்துவமனையில்

பொய்ப்பெயர் தந்தவள்

தான் அழைக்கப்படுவதறியாமல்

டீவீ பார்த்துக் கொண்டிருக்கிறாள்

"உன்னைத் தான்...போ !" என்கிறான்

கூட வந்தவன்


திராட்சையை எதிர்பாராதவனுக்கு 

ஒயினை அணிவிக்கிறது காலம்.


பலூனை விலை பேசுகையில் 

உள்ளேயிருக்கும் காற்றுக்கு மாத்திரம் 

காசு தந்து 

அபகரித்துச் செல்ல முயல்வது 

மத்யமம்.


வெட்டுப்பட்ட பல்லியின் 

வாலைப் போல் 

துடி துடித்து அடங்குகிறது 

செல்பேசி 


வட்டி கட்டுகிற தினத்தில் துவங்கி 

அதற்கு முன் தினத்தில் 

முடிவடைகிறது 

ஒவ்வொரு நாளும்.


எல்லா நகரமும்

ஏதோ ஒரு நகரம்"


...

Feb 20, 2021

The meaning of Being

 கிழக்கு தாம்பரம் பூண்டி பஜார் பார்க்கில் 

போன வருஷம் இதே நாள் வாக்கிங் போய்க்கொண்டிருந்த போது                                                          வெளிப்பகுதியில் ஒரு காட்சி. 


 படு துடியான கிழவி. 

பேச முயற்சி செய்த போது 

சிடு, சிடு சீற்றம் 

எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. 


"படிச்சிட்டு இருக்கும்போது தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு தெரியாது? "


An Angel speaks to a Man when he goes for a Walk.


முந்தாநாள் காலை இதே கிழவியை இங்கே ஏரிக்கரை சாலையில் 

ஒரு மொபைல் ஷோ ரூம் அருகில் 

 வெற்றுப் பார்வை பார்த்தபடி உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். 


கடந்த வருட கொரோனா கலவரத்தில் இருந்து தப்பித்து விட்ட தேவதை. 


மாஸ்க், ஹேண்ட் வாஷ் எல்லாவற்றையும் புறந்தள்ளி.. 


Survival of the fittest...?!

Existentialism 


.. 



Feb 19, 2021

பிரமிள்


மைலாப்பூர் கற்பகம் லாட்ஜ். 

மாடியில் ஒரு டீலக்ஸ் ஃபேமிலி ரூம்.

நான்,என் மனைவி,மகன் கீர்த்தி 

மூவரும் இருக்கிறோம். 

சின்னவன் அஷ்வத் அப்போது பிறந்திருக்கவில்லை. 

வருடம் 1989.மார்ச் மாதம் 27ம்தேதி.


காலிங்பெல் சத்தம். கதவு தட்டப்படுகிறது. கதவைத்திறக்கிறேன். பிரமிள் நிற்கிறார்.

 கூடவே கைலாஷ் சிவன் பிரமிளின் அடியாராய். பின்னாலேயே ஜெயந்தன்.


’வாங்க வாங்க’ என வரவேற்கிறேன்.


பிரமிளையும் ஜெயந்தனையும் 

தனித்தனியாக சந்திப்பது தான் என் திட்டம்.


உள்ளே வந்த ஜெயந்தனையும் பிரமிளையும் உட்காரச்சொல்கிறேன். 

இருவரும் உட்கார்வதற்கு முன் கைலாஷ் சிவன் சந்தோஷமாக ஒரு சேரில் உட்கார்கிறான். 

 என்றாலும் பிரமிள் இருப்பதால் ரொம்ப பவ்யம்,ரொம்ப,ரொம்ப அடக்கம்.


எனக்கு பிரமிளும் ஜெயந்தனும் ஒன்றாக வந்திருக்க முடியுமா? என்ற குழப்பம்.


 குழப்பம் உடனே முடிவுக்கு வந்தது. ”சார் யார்?” பிரமிளைப் பற்றி ஜெயந்தன் கேட்டார்.


 ஓ! அப்படியானால் இருவரும் ஒரே நேரத்தில் கதவைத்திறந்தவுடன் நின்று கொண்டிருந்தது மிக தற்செயல் தான்.


நான் ஜெயந்தனிடம் பிரமிளை அறிமுகப் படுத்தினேன். 

“ இவர் தர்மு சிவராம்”


 ”அடடே. ராஜநாயஹம். பிரமிளா? நான் அந்த காலத்தில் மதுரை காலேஜ் ஹவுஸில் தங்கியிருந்த வெங்கட்சாமிநாதனையும் இவரையும் சந்தித்திருக்கிறேன். எவ்வளவு காலம் ஆகிவிட்டது” என்கிறார் ஜெயந்தன்.


நான் பிரமிளிடம் “இவர் எழுத்தாளர் ஜெயந்தன்” என்று சொல்கிறேன். 

பிரமிள் எரிச்சலாகி,சலிப்புடன் முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டார்.


ஜெயந்தனை சந்திப்பதை பிரமிள் விரும்பவில்லை.

கைலாஷ் சிவன் பிரமிளின் மனமறிந்து ஜெயந்தனை மேலும் கீழும் பார்த்தான். 


உடனே எனக்கு ஒரு பதற்றம்.ஜெயந்தனுக்கு ஏற்பட்ட அவமானம் குறித்தும் வேதனை.


நான் சூழ்நிலையின் இறுக்கத்தை குறைக்க கேமராவை எடுத்தேன்.


பிரமிளை ஃபோகஸ் செய்தேன். 

பிரமிள் “ என்னை போட்டோ எடுக்கக்கூடாது.” என்று ஆவேசமாக விரல் நீட்டி எச்சரித்தார்.


 ஜெயந்தனை ஃபோகஸ் செய்தேன். 

அவர் அவமானத்தை மறைத்துக்கொண்டு சந்தோஷமாக உட்கார்ந்தவாறே ‘எடுங்கள்’ என்றார்.


நான் வெயிட்டரை உள்ளே அழைத்தேன். “மூன்று பாஸந்தி, மூன்று ஸ்பெஷல் தோசை,சாப்பிட்ட பின் டிகிரி காஃபி கொண்டுவா.” என்றேன்.


ஸ்வீட்,டிபன் காபி சாப்பிட்ட பின் பிரமிள் முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது.


ஜெயந்தன் இயல்பாக சொன்னார்.

” இலக்கிய சிந்தனை அமைப்பில்  சிறந்த சிறுகதை தேர்ந்தெடுக்க அழைக்கப் பட்டிருந்தேன். நான் பிரமிளின் ‘லங்காபுரி ராஜா’வை அந்த ஆண்டிற்கான சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால் அங்கே மற்றவர்கள் இந்துமதி கதையை சிறந்த கதையாகத் தேர்ந்தெடுத்தார்கள். நான் என் எதிர்ப்பைத் தெரிவித்து வெளியேறிவிட்டேன். அதன் பின் இலக்கியசிந்தனை பக்கமே திரும்பிக்கூட பார்க்கவில்லை”


பிரமிள் இப்போது நட்புடன் சிரித்து 

ஜெயந்தனைப் பார்த்தார். கைலாஷ் சிவனும் குறிப்புணர்ந்து புன்னகை சிந்தினான்.

ஜெயந்தன் உட்கார்ந்திருக்க அவர் பின் பிரமிள் நின்று கொண்டு இருவரையும் புகைப்படம் எடுக்கச்சொன்னார்.  பிரமிள்,ஜெயந்தனோடு என்னை சேர்த்து புகைப்படம் எடுக்கசொல்லி உத்தரவிட்டார்.

கைலாஷ் சிரமேற்கொண்டான்.


அங்கிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிளில் இருந்த கண்ணாடி முன் பிரமிள் நின்று கொண்டு, வித்தியாசமாக, புகைப்படம் எடுக்கும் நானும் கண்ணாடியில் தெரியுமாறு புகைப்படம் எடுக்கச் சொன்னார்.


அப்படி ஒரு விஷேச புகைப்படம் எடுத்தேன். 


என் மகன் கீர்த்தியை தூக்கிக்கொண்டு இரண்டு புகைப்படங்கள் என்னை எடுக்கச் சொன்னார்.


(பின்னால் இந்த புகைப்படத்தை ரொம்ப காலம் கோணங்கி தன் பர்ஸில் வைத்துக்கொண்டான். “இரண்டு குழந்தைகள்” என்று காட்டுவான்.)


அவருடைய லங்காபுரி ராஜா, ஆயி, சாது அப்பாத்துரையின் தியானதாரா, ஸ்ரீலங்காவின் தேசீயத்தற்கொலை போன்ற நூல்களில் கையெழுத்து போட்டார்.


தொடர்ந்து இலக்கிய உலகில் அவர் எதிர்கொண்ட துரோகங்கள் குறித்து பிரமிள் பேசினார்.

மௌனி...

லா.ச.ரா...

சுந்தர ராமசாமி..

வெங்கட்சாமிநாதன்..


“பாரதி தாசன் எப்போதும் பாரதியை ஐயர் என்றே குறிப்பிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்

‘ பாரதி ஒருத்தர் தான் ஐயர். மத்தவன்லாம் பாப்பான்’ ” பிரமிள் இதை சொல்லிவிட்டு ரசித்து ஹா..ஹா..என்று சிரித்தார்.


நான்கு வயது கீர்த்தி கதவை திறந்து திறந்து சாத்த ஆரம்பித்தான். 

கதவின் சத்தத்திற்கு பிரமிள் முகத்தில் இடி விழுந்த மாதிரி எக்ஸ்பிரஷன். 

பிரமிள் குழந்தையை தன்னிடம் வருமாறு அழைத்து 

“ இதனால் உனக்கு என்ன பிரயோஜனம். ஏண்டா இப்படி செய்கிறாய்” என்றார். 

கீர்த்தி “போடா” சொன்னான்.


எனக்கு பயம். மதுரை சௌராஸ்டிரா காலேஜ் புரொபசர் ஒருவர் வீட்டுக்கு விருந்தாளியாய்ப் போயிருந்த பிரமிள் அவருடைய குழந்தை சேட்டை செய்த போது 

அடி வெளுத்து விட்டார்.


 இங்கே கீர்த்தியோ பிரமிள் பேசுவதைக் கேட்டு விட்டு அவரைப் பார்த்து விவரம் புரியாமல் சிரிக்கிறான். ’டேய்’ சொல்கிறான். 

கொஞ்ச நேரத்தில் கீர்த்தியும் பிரமிளும் 

ஜாலியாக விளையாட ஆரம்பித்தார்கள்.


(கீர்த்தியை சிட்டி மடியில் வைத்து கொஞ்சியிருக்கிறார்.அவர் இறப்பதற்கு முந்திய வருடம் கூட ஆசி வழங்கினார். 

கி.ரா. கீர்த்தியுடன் விளையாடியிருக்கிறார். 

அவன் சிரிப்பை விவரித்து, தனக்கு அவன் கைகொடுத்த அழகைப் பற்றி கடிதத்தில் கூட குறிப்பிட்டிருக்கிறார். 

இந்திரா பார்த்தசாரதி ஆசி வழங்கியிருக்கிறார்.

ந. முத்துசாமியும் கூட. )


என் ’டேட் ஆஃப் பர்த். விசாரித்த பிரமிள் ரொம்ப சீரியஸாக என் பெயரை R.P.RAJANAYAHEM என்று 37 எண் வரும்படி மாற்றிக்கொள்ளச்சொன்னார்.

’நான் 21 தேதியில் பிறந்தவன். 37ல் மாற்றிக்கொள்ளச்சொல்கிறீர்களே.’


‘ஜே.கிருஷ்ணமூர்த்தி( J.Krishnamurti) 12 தேதியில் பிறந்தவர். கருணாநிதி( M.Karunanidhi) 3ம் தேதி பிறந்தவர்.இருவருக்கும் 37ல் தான் பெயர். அதனால் 21ல் பிறந்த உங்களுக்கும் 37 கைகொடுக்கும். 3 வரிசையில் பிறந்தவர்களுக்கு 37 அதிர்ஷ்ட எண்’ பிரமிள் ஆணித்தரமாக  சொன்னார்.


சம்பிரதாயமாக சொல்லவில்லை.கிளம்பும் வரை R.P.Rajanayahem என்று பெயர் மாற்றம் குறித்து வலியுறுத்தியவர் கடைசியாகக் கூட அதையே சொன்னார்.


அன்று முதல் நான் அவர் சொன்ன பெயரில் தான் இருக்கிறேன். பிரமிள் யாருக்குத்தான் பெயர் மாற்றி வைக்கவில்லை. ஆனால் அவர் சொன்னபடி பெயரைஅப்படியே மாற்றிக் கொண்டவர்கள் என்னைப் போல் எத்தனை பேர்?


அவர் கிளம்பியபின் ஜெயந்தன் கிளம்புமுன் பிரமிள் பற்றிச் சொன்னார்.

 ’ இவர்களுக்கு மூளை ஒரு பக்கம் கூர்மையாகும்போது இன்னொரு பக்கம் பழுதாகிவிடும்.”


கொஞ்ச நேரத்தில் கைலாஷ் சிவன் 

மீண்டும் இரைத்துக்கொண்டு வந்தான்

.” ராஜநாயஹம்,பிரமிளை பஸ் ஏற்றி அனுப்பி விட்டேன். ஒரு விஷயம்.பிரமிள் மூன்று நாளாக எதுவும் சாப்பிட இல்லாமல் பட்டினி. ”


 எனக்கு கோபம். என்னிடம் இவன் 

அவர் இருக்கும்போதே இதை தனியாக ரகசியமாக சொல்லியிருக்கவேண்டும்.

நான் அவர் புத்தகங்கள் அனுப்பி வைக்கச் சொல்லியாவது கணிசமாக பணம் கொடுத்திருப்பேன்.

இன்னும் அவரை நன்றாக சாப்பிடச்செய்திருப்பேன். பண உதவி நேரடியாக செய்தால்

 ‘ நான் பிச்சைக்காரனா?’ என்று கோபப்பட்டுவிடக்கூடியவர்.


அதன் பின் அவருக்கு,

ஜெயந்தனுக்கு அன்று எடுத்த புகைப்படங்கள் அனுப்பி வைத்தேன்.


 பதில் கடிதத்தில் புகைப்படம் எடுத்த நானும் அவருடன்கண்ணாடியில் தெரியும்படி உள்ள படத்தை இன்னும் சிறப்பாக எடுத்திருக்க முடியும் என்று அபிப்ராயம் தெரிவித்திருந்தார்.


 தொடர்ந்து கடிதம் எழுதியிருக்கிறார்.


பாண்டிச்சேரியில் இருக்கும்போது அவர் ஒரு முறை தனக்கு டைப் ரைட்டர் வாங்க கொஞ்சம் பணம் அனுப்ப முடியுமா? என்று கடிதம் எழுதினார். ஒரு நல்ல தொகை அனுப்பினேன்.


பொங்கல் வாழ்த்து கூட அனுப்பியிருக்கிறார்.Write on your heart that every day is the best day of the year!


புதுவை பல்கலைக் கழக துணைவேந்தர் என் எதிர் வீட்டுக்காரர். அவரிடம் பிரமிளின் நூல்களைக் கொடுத்து, பிரமிளுக்கு ஏதேனும் கௌரவமாக உதவ முடியுமா என்று மிகவும் வேண்டிக்கேட்டேன்.


மீண்டும் மீண்டும் ஞாபகப் படுத்தினேன். 

அவர் சொன்னார்” கட்டாயம் நான் ஏதாவது செய்கிறேன். அவரை பல்கலைக் கழகத்தில் பயன்படுத்த முடியுமா என்று நீங்கள் சொன்னதிலிருந்து யோசித்துக்கொண்டு தான் இருக்கிறேன்.”


க.நா.சுவையும் கிராவையும் வருகை தரு பேராசிரியராக ஆக்கியவர். 


இந்திரா பார்த்த சாரதியை நாடகத்துறை தலைவராக்கி, பின் துனணவேந்தருக்கு அடுத்த பதவியில் அமர்த்தியவர்.


பிரபஞ்சனுக்கு நாடகத்துறையில் வேலை கொடுத்தவர்.


பிரமிளுக்கு நேரம் சரியில்லை என்று சொல்வது அபத்தம். 

யாருடைய உதவியையும் அபத்தமாக்கிவிடும் TROUBLE MAKER என்றே அவரைப் பற்றி வேண்டியவர்கள் கூட அபிப்ராயம் கொண்டிருக்கும் போது என்ன சொல்ல?


என்னையே அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ளாதீர்கள் என்று         ரொம்பப்பெரியவர்கள் அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார்கள். 

அவர் மீது கொண்ட வெறுப்பு என்பதை விட என் மீது உள்ள அக்கறையினால்.

Feb 18, 2021

நாகூர் ஹனிஃபா

 “இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்வதில்லை” பாடல் அறியாதவர் கிடையாது.


‘எல்லோரும் கொண்டாடுவோம்,அல்லாவின் பேரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி’ பாவமன்னிப்பு பாடலில் சௌந்தர்ராஜனுடன் சேர்ந்து ‘கறுப்பில்ல வெளுப்பும் இல்லே

கனவுக்கு உருவமில்லே

கடலுக்குள் பிரிவும் இல்லை

கடவுளில் பேதமில்லை’ பாடிய ஹனிஃபா


அவர் பாடிய கழக பாடல்கள் ரொம்ப பிரபலம். 


‘அழைக்கின்றார்,அழைக்கின்றார்,அழைக்கின்றார் அண்ணா’


'ஓடி வருகிறான் உதய சூரியன்'


‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’


திமுக வில் எம்ஜிஆர் இருந்த போது ஆஹா ஓஹோ புகழ் பாட்டையும் ஹனிஃபா உற்சாகமாக பாடியிருக்கிறார். 


‘எங்கள் வீட்டுப்பிள்ளை,

ஏழைகளின் தோழன், 

தங்க குணம் கொண்ட கலை மன்னன்,

 மக்கள் திலகம் எங்கள் எம்ஜியார் அண்ணன்’


எம்.ஜி.ஆர் அதிமுக ஆரம்பித்து பின், 

1973 திண்டுக்கல் இடைத்தேர்தலின் போது 

நாகூர் ஹனிஃபா தி.மு.க பிரச்சாரத்தில்

 பாடிய சவால் பாடல்


“நன்றி கெட்ட கிழவனுக்கும் 

நாணயமில்லா குள்ளனுக்கும்

நாங்கள் ஒன்று சொல்லுகிறோம்.

வந்து பாரும், திண்டுக்கலில் நின்று பாரும்


நன்றி கெட்ட மோகனுக்கும் நாணயமில்லா சுப்பனுக்கும்

நாங்கள் ஒன்று சொல்லுகிறோம்

வந்து பாரும், திண்டுக்கலில் நின்று பாரும்”


இந்த பாடலில் குறிப்பிடப்படுபவர்கள்

கிழவன் = எம்ஜியார்


குள்ளன் = மதியழகன் ( எம்.ஜி.ஆர் பிரிந்த போது சட்டமன்ற சபாநாயகர்)


மோகன் = மோகன் குமாரமங்கலம்

( அப்போது மத்திய அமைச்சர் )


சுப்பன் = சி.சுப்பிரமணியம் 

( அப்போது மத்திய அமைச்சர் )


இந்த தேர்தலில் நான்கு முனைப்போட்டி. 

வாக்கு எண்ணிக்கையில் இரண்டாம் இடம் பெற்ற ஸ்தாபன காங்கிரஸ் மீது கூட மூன்றாமிடம் பெற்ற ஆளும் கட்சி தி.மு.க.விற்கு கோபமில்லை. 


அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அ.தி.மு,க. மீதும் நான்காமிடத்தில் படுதோல்வியடைந்த இந்திரா காங்கிரஸ் மீதும் தான் கடும் வெறுப்பு.


.... 

Feb 17, 2021

தமிழக சட்டசபையில் இப்படியெல்லாம்


1972ல் அக்டோபர் 10ம்தேதி 

எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்ட போது 

கலைஞர் மு. கருணாநிதியுடன் தான் எம்.எல்.ஏக்கள்.


 எட்மண்ட், காளிமுத்து போல இரண்டு மூன்று எம்.எல்.ஏக்கள் எம்.ஜி.ஆரிடம் வந்தார்கள்.


ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான சபாநாயகர் ‘மேதை’ மதியழகன் 

அப்போது எம்.ஜி.ஆர் ஆதரவாளர். 


சபாநாயகர்

இப்படி செய்த அதிசயம் 

அன்று மிக அபூர்வ நிகழ்வு தான்.

டிசம்பர் 2ம் தேதி தமிழக சட்டசபை

 ஒரு விசித்திர சரித்திர நிகழ்வைப் பார்த்தது.


சபாநாயகர் மதியழகன் சபையை கொண்டு செலுத்த முயன்ற போது 

உதவி சபாநாயகர் விருதுநகர் பெ.சீனிவாசன் ப்ரமோஷனில் நான் தான் சபாநாயகர் என்று அவரும் சபையை 

கலைஞர் மு.கருணாநிதிக்கு சாதகமாக 

நடத்த ஆரம்பித்தார்.


 மதியழகன் செய்ததையெல்லாம்

 சீனிவாசன் நிராகரித்தார். 

சீனிவாசன் செய்ததையெல்லாம் 

மதியழகன் புறந்தள்ளினார். 


குழப்பம் மிகுந்த நிலையில் மதியழகன் 

சபையை ஒத்தி வைத்து விட்டு 

சட்டசபையிலிருந்து வெளியேறினார்.

 உடனே முதல்வர் கலைஞர் ஒரு தீர்மானத்தை நெடுஞ்செழியனை கொண்டு வரச்செய்து சபாநாயகர் பதவியிலிருந்து

 மதியழகனை நீக்கி விட்டார்.

 தற்காலிக சபாநாயகராக 

சீனிவாசன் ஆக்கப்பட்டார்.


அமளியில் எம்.ஜி.ஆர் மீது செருப்பு வீச்சு.

எம்.ஜி.ஆரின் பிரபலமான வசனம் “ சட்டசபை செத்து விட்டது.”

இந்த விஷயம் செய்தித்தாள்களுக்கு நல்ல தீனி. 


.. 


எம்.ஜி.ஆர் மறைந்த பின் 

முதலமைச்சர் ஆக்கப்பட்ட ஜானகியிடம் தான்      பெரும்பாலான எம்.எல்.ஏக்களும் அமைச்சர்களும்.( 98 பேரா? 96?) 


1988 ஜனவரி 28ம்தேதி சட்டசபையில் பி.ஹெச்.பாண்டியன் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை வெற்றி பெறச்செய்ய எதிரணி எம்.எல்.ஏக்களை டிஸ்மிஸ் செய்தார்.

  தீர்மானத்தை கவனிக்காமல்  

சபையை ஒத்தி வைத்தார். Sky is my limit!


அன்று சட்டசபை அதிமுக எம்.எல்.ஏக்கள் அடிதடி.

 மைக்கை கழட்டி அடித்தவர்கள் உண்டு.


சட்டசபையில் வால்டர் தேவாரம் நுழைந்து

 காவல் துறை எம்.எல்.ஏக்கள் மீதே லத்தி சார்ஜ் செய்ய நேர்ந்துள்ளது. 


 அன்று ஒரு ஜானகி அணி எம்.எல்.ஏ. சட்டசபையில் பலரை மைக்கால் பதம் பார்த்து விட்டு வேறு யாராவது சிக்குகிறார்களா என்று மைக்கோடு நடக்கிற காட்சி புகைப்படமாக 

பத்திரிக்கையில் சந்தி சிரித்தது.


A horse! A horse! My Kingdom for a Horse!

- Richard the third

Shakespeare

...........

Feb 16, 2021

சரவணன் மாணிக்கவாசகம்

 மகத்தான வாசகர் ஒருவர் சிறந்த எழுத்தாளர் ஆக உருவாகியிருக்கிறார். 

இன்றைக்கு இலக்கிய உலகில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க செய்திருக்கிற சரவணன் மாணிக்கவாசகம். 


சரவணனை அசுர வாசகனாக 

நான் காண வாய்த்தது. 


'சாண்டில்யன் தமிழ் கொஞ்சும் ' என்று என்னிடம் சரவணன் மாணிக்கவாசகம் சொல்லும் போது நான் சாண்டில்யன் முக்கிய பெருங்கதை 

'யவணராணி' கூட படித்ததேயில்லை. கல்கி நாவல்களும் படித்ததேயில்லை. 

இன்று வரை இந்த எழுத்தாளர்கள் விஷயத்தில் அஞ்ஞானம் தான். 


ஒரு கவிதை சரவணன் எழுதியதை படிக்க கொடுத்ததையும் மறக்க முடியவில்லை. 

அது சரவணன் காதலிக்கு எழுதிய ஒரு கவிதை. 

'என்னடி அலைக்கழிக்கிறாய்? 'என்பது முதல் வரி. 

கடுங் கோபத்துடன் எழுதப்பட்ட கவிதை. 

' நீ என்ன பெரிய ஓவியமோ? இவ்வளவு தலைக்கனம் ஆகாதுடி. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? '

சரவணனின் இயல்பான பண்பு காரணமாக கவிதையில் எந்த கெட்டவார்த்தை அர்ச்சனையுமே காணக்கிடைக்கவில்லை. (இன்றும் அதை சரவணன் மெய்ன்டைன் செய்யும் கண்ணியம் காண முடியும்) 


சரவணனுக்கு முதன் முதலாக கொடுத்த புத்தகம் 

' கடல் புரத்தில்' வண்ணநிலவன் நாவல். 

சின்ன புத்தகம். மிரண்டு விடக்கூடாது. 

சரவணன் படித்து விட்டு 'முடிவு சரியில்லை' 

என உதடு பிதுக்கிய போது சொன்னேன். 

'No story ends in the end '

சாண்டில்யன் கதைகள் சுவாரசியமாக முடியும் போல. 

அடுத்து தி. ஜானகிராமன் 'அம்மா வந்தாள்' கொடுத்தேன். அதுவும் ஒரு சின்ன புத்தகம். 

வண்ண நிலவன் ரெயினிஸ் ஐயர் தெரு, எஸ்தர் 

இப்படித் தான் சரவணனுக்கு நவீன இலக்கிய அறிமுகம் ஆரம்பம். 


பெரிய transformation சரவணன் மாணிக்கவாசகத்திற்கு ஏற்பட்டதை காண முடிந்தது.


புதுமைப்பித்தன் அன்று இரவு, காஞ்சனை, பிறமொழி சிறுகதைகள், உயிராசை


ஜானகிராமன் மோக முள், மலர் மஞ்சம், உயிர்த் தேன், சிறுகதை தொகுப்புகள், 

சுந்தர ராமசாமி

 புளிய மரத்தின் கதை, ஜே. ஜே. சில குறிப்புகள், 

பிரசாதம் சிறுகதைகள், 

அசோகமித்திரன் வாழ்விலே ஒரு முறை, உண்மை வேட்கை, விமோசனம் சிறுகதைகள், விடுதலை குறுநாவல், 

கிரா கதவு, கோபல்லகிராமம், வேட்டி, அப்பா பிள்ளை அம்மா பிள்ளை. 

லா. ச. ரா அபிதா, ஜனனி, புத்ர, மீனோட்டம் 

நீல பத்மநாபன் தலைமுறைகள், பகவதிபுரம் கேட், 

ஆதவன் காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன் நாவல்கள், இரவுக்கு முன் வருவது மாலை குறுநாவல்கள், சிறுகதைகள். 

கிருத்திகா நேற்றிருந்தோம், 

அம்பை சிறகுகள் முறியும். 


கிருஷ்ணன் நம்பி நீலக்கடல். 

வெங்கட் சாமிநாதன் எதிர் காலத்தின் அங்கீகாரத்தை நோக்கி ஒரு குரல். 

சா.கந்தசாமி சாயாவனம், அவன் ஆனது, 

ஆ. மாதவன் கிருஷ்ண பருந்து, 

ஜெயந்தன் அரும்புகளை, 

ஹெப்சீபா ஜேசுதாசன் மானி, 

ஐசக் அருமைராஜன் கீறல்கள்


முதல் நாள் கொடுத்த புத்தகம் மறு நாள் திருப்பிக் கொடுக்கும் போது அதில் இருந்து பல கேள்விகள் கேட்டு செக் பண்ணும் போது சரவணனின் 'டான் டான்' பதில்கள் திகைக்க வைத்திருக்கிறது. 


என்னிடம் இருந்த அத்தனை நூல்களையும் சரவணன் வேகமாக படித்து முடித்தாகி விட்டது. 

நான் வாங்கிய புதிய நூல்களையும் எனக்கு முன்னரே படிக்கிற வேகம். 

உ.வே. சாமிநாதய்யர் என் சரித்திரம் நான் வாசிக்கு முன்னரே சரவணன் படித்து முடித்த விஷயம் இன்றும் நினைவிருக்கிறது. இது போல பல புத்தகங்கள் சரவணன் படித்த பின்னர் தான் நான் படித்தேன். 

என் கூடவே ஒரு அற்புத வாசகன் படிக்க கிடைத்ததால் நானும் புத்தகங்கள் வாங்கி குவித்தேன். 


ஒவ்வொரு படைப்பாளியின் அனைத்து நூல்களையும் முழுமையாக படித்து விடுவோம். 

மறு வாசிப்பு செய்வோம். 


அப்போது கிடைக்காத மௌனி, கு. ப. ரா, வண்ணதாசன் கதைகள் பிறரிடம் வாங்கி படித்தோம். 


அப்போது அன்னம் நவ கவிதை வரிசை 

கல்யாண்ஜியின் புலரி, வண்ணநிலவன் மெய்ப்பொருள், விக்ரமாதித்யன் ஆகாசம் நீல நிறம்.


கலாப்ரியா மற்றாங்கே, நீலமணி தீர்க்க ரேகைகள்.. 


சரவணன் படித்த என் நூல்களையெல்லாம் அவருடைய தாயாரும் படித்தார். 

அந்தப் பழைய புத்தகங்களில் இன்னும் பில்கள் இப்போதும் இருப்பதை காணும் போது கண்கள் பனிக்கும். 

கடந்த காலங்களில் எவ்வளவு பொருள், நிலம், நகை இழந்திருக்கிறேன். இந்த புத்தகங்கள், பில்கள் பத்திரமாக இருப்பது Irony. 


சரவணன் சொந்த விஷயங்கள் பற்றி பேசப் புகுந்தால் புனைவை

மிஞ்சிய விஷயங்கள். 


இவ்வளவிலும் சரவணன் வாசகனாக இருந்தது அதிசயம். 

வாசிப்பு எப்பேர்ப்பட்ட தவம். 

இன்று உலகின் தலை சிறந்த வாசகர்களில் சரவணனுக்கு முதல் வரிசையில் இடம். 


ஒரு வேடிக்கை. 

2019 புக்ஃபேர்ல எழுத்தாளர் திலீப் குமார் என்னுடன் பேசுகையில் தனக்கு அறிமுகம் இல்லாத சரவணனைப் பார்த்து "மௌனின்னு ஒரு எழுத்தாளர்ங்க" என்றார். 

நான் உடனே, உடனே "சார், சரவணன் மௌனி மட்டுமில்ல, நீங்க உட்பட எல்லா முக்கிய எழுத்தாளர்களையும் எப்போதோ படித்து விட்டவர். உலக இலக்கியங்களின் வாசகர்" என்றவுடன் 

சரவணனிடம் திலீப் சாரி சொன்னார். 


சரவணன் எனக்கு ஈமெயிலில் எழுதி அனுப்பியதையெல்லாம் பார்த்து விட்டு இங்கே ஃபேஸ்புக்கில் எழுத வைக்க பெரும் பாடு பட்டு வற்புறுத்த வேண்டியிருந்தது. 


சரவணன் எழுத்து நிறைய வாசகர்களை ஈர்ப்பது பெருமையாக இருக்கிறது. 

பெரும்பான்மை எழுத்தாளர்களின் நூல்களையெல்லாம் சரவணன் படிப்பதோடு அவற்றைப் பற்றி எழுதுவதால் பரந்த கவனம் பெற்று, இன்று எழுத்தாளர்களின், கவிஞர்களின் நட்புக்கும், அன்பு, அபிமானத்திற்கும் உரியவராக இருக்கிறார். 


Go ahead and make your day, Saravana.


http://rprajanayahem.blogspot.com/2012/11/m.html?m=0

Feb 15, 2021

Che sara sara கே சரா, சரா

ஹிட்ச்காக்கின் படம் The Man who knew too much. இதில் டோரிஸ் டே பாடிய பாடல் Que Sera, Sera   -              Spanish words 


படிக்கிற காலத்தில் பள்ளியிலும் கல்லூரியிலும்  நான் எப்போதும் பாடியிருக்கிறேன்.


இந்தப் பாடலை நான் ஸ்போக்கன் இங்க்லீஷ் டீச்சராய் இருந்த போது கொஞ்சம் மாற்றி பாடுவேன். 

திருப்பூர் விகாஸ் வித்யாலயா பள்ளி குழந்தைகள், கிட்ஸ் க்ளப் மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.இ. ஸ்கூல் குழந்தைகள் அனைவருக்கும் நான் பாடி இந்த ’கே சரா,சரா’ பாடல் ரொம்ப பிரபலம்.


திருப்பூரில் இருந்து இப்போது கூட மாணவ மாணவியர் என் பாடல்களை நினைவில் வைத்திருப்பதாக என்னிடம் கூறுகிறார்கள்.

சென்னையிலும் கூத்துப்பட்டறையிலும் கே சரா, சரா பிரபலமாகி விட்டது.

Che sara, sara என்ற இந்த வார்த்தை கிறிஸ்டோபர் மார்லோவின் டாக்டர் ஃபாஸ்டஸில் வரும் வார்த்தை.

Che sara, sara is a latin world which means What ever will be will be. என்ன நடக்குமோ அது தான் நடக்கும்.


என்னுடைய வெர்சன் இது.


When I was just a child

I asked my mama what will I be?

Will I be a doctor? Will I be an actor?

This what she said to me

Che sara, sara

Whatever will be will be

Future is not ours to see

Che sara, sara


When I just entered school

I asked my teacher

What will I be?

Will I be a major

Will I be a Colonel

This what she said to me

Che sara, sara

Whatever will be will be

Future is not ours to see

Che sara, sara Che sara sara


When I just entered teens

I asked my sweet heart 

What will I be?

Will I be a rainbow day after day

This what she said to me

Che sara, sara

What ever will be will be

Future is not ours to see

Che sara, sara

Che sara, sara, Che sara, sara


’ஆரவல்லி’ படத்தில் எஸ்.ஜி.ஈஸ்வர், 

மைனாவதி ( பண்டரி பாய் தங்கை) இருவரும் பாடுவதாக வரும் பாடல்


”சின்னப்பெண் ஆன போதிலே என் அன்னையிடம் நான் ஒரு நாளிலே எண்ணம் போல் வாழ்வு ஈடேறுமா? அம்மா நீ சொல் என்றேன்.

வெண்ணிலா, நிலா என் கண்ணல்லவா கலா

உன் எண்ணம் போல் வாழ்விலே இன்பம் காண் நிலா.”


Che sara மெட்டிலேயே அமைந்த பாடல்.


.. 


2014லில் ஆறு மாதம் வேலையில்லாமல், 

என் அம்மா இறந்த அன்று தான் 

புதிய வேலைக்கு சேர்ந்திருந்தேன்.

'அம்மா எறந்துட்டாங்க. 'அலை பேசி செய்தி. அம்மாவே போன பிறகு யார் முகத்தை போய் பார்க்க வேண்டும்?


வகுப்புக்கு போய் பாடம் நடத்தினேன்.


குழந்தைகள் முன் அம்மா இறந்த அன்றும் கூட பாடினேன்


When I was just a child I asked my mama

What will I be?

Will I be a doctor?

Will I be an actor?


This what she said to me.

'Che Sara, sara

What ever will be,

Future is not ours to see

Che Sara, sara


அடக்க முடியாமல் பீறிட்டு கலங்கியழுத போது குழந்தைகள் 'Why do you Cry sir?' என குழம்பிக்கேட்ட போது நான் 'I have no father and mother'


All the children consoled me : 'Don't cry sir. We are all with you. 

Don't cry sir '


....


............


https://www.facebook.com/rprajanayahem/videos/2131653567048098/


https://www.facebook.com/rprajanayahem/posts/2129016603978461

Feb 14, 2021

மீண்டும் ராஜநாயஹம் பதிவு திருடப்பட்டுள்ளது

 நான் 2008 ல ப்ளாக்கில் எழுதிய "ஜம்பம்" பதிவை திருடி 

மத்யமர் குழு பக்கத்தில் முழுக்க ஈயடிச்சான் காப்பி செய்யப்பட்டுள்ளது. 

Rajesh Rock என்கிற நபர் தான் எழுதியதாக செய்திருக்கும் அயோக்கியத்தனம். 


ஃபேஸ்புக்கிலும் பல முறை பகிர்ந்திருக்கிறேன். 

சென்ற வருடத்தில் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி கூட இங்கே பகிர்ந்திருக்கிறேன். 

அந்த லிங்க் இதோ

https://m.facebook.com/story.php?story_fbid=2815497985330316&id=100006104256328


திருடப்பட்ட பதிவில் தேவையில்லாமல் கடைசியில் ஒரு வரி  சகிக்க முடியாத படி  எழுதப்பட்டிருக்கிறது. 

"ஜம்பம் பதிவின் சாரத்தையே கெடுக்கும் வகையில். 


இதனை நண்பர் கணேஷ் நாராயன் கவனப்படுத்தினார்


https://m.facebook.com/story.php?story_fbid=2967663323447114&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=2964218407124939&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=2967741006772679&id=100006104256328

Feb 13, 2021

Amoura 's chat - Love lost in a Valantine day

 Love lost in a Valantine day 

It was an unhappy, miserable 'Valentine's day'

 


13.02.2014

Dear..I love you

I can’t control my self even when I introduce my hubby to you

'This is my fifth sms to you 

When you are talking with my husband'

Dear…dear..dear…dear


14.02.2014


Your Amoura is shocked when you send an SMS 

By mistake you have sent it to me meant for my worst enemy

Addressing her in your erotic style


The chariot of Yudhistra which was in sky

While he was in war front

Came down and touched the earth 

As he proved to be dishonoured

(You may say ‘Nothing is unfair in love and war!’

and

 "Love means never having to say you are sorry.")


It’s the Irony that to day is The Valantine’s day!

‘A nice day for Love

A memorable day for Departure’


...............


Amoura's SMS love and romance


Amoura's Brief Encounter! ( 05 - 12 - 2013 to 14 - 02 - 2014)


I feel very sad as I lost the chance to sit closely locking our hands.


If I come close to you, it will hurt you in many ways. You think that I am tantalizing you. That is why I try to be away. Dear… I hurt you always.

I never abondon you dear

We will definitely hug

I wish that be in your chest for sometime

Please don’t break me that time.. I’m so soft


02.01.2014 

I swear I’m not a fraud

Believe me I have genuine love

I don’t know how to tell this.

Believe me, you never believe me I think

Superb moments you presented me

While singing wonderful


03.01.2014

Don’t know when..

I know I’ll hug

This is the most rarest decision for me

10.01.2014

Yesterday when you received my two messages,

You asked me many times what I want to tell you

I wish to tell you one thing

We dare not harm any one in both family

Then there should be a calm affair between us

Instead of carnal desire


I can be quiet..

Don’t feel anything if my eyes follow you

You are totally disturbed by me

Mentally and physically you are disturbed my Dear

That pains me a lot

I’m unable to fulfil your wish my dear..

That is why I tell you

I never my dear I can’t do like that

Whatever you say, I don’t do

Hug and Kiss..That I agree 

But how? When and Where?

Even without your consent

I will do that

No..I will run towards you 

And keep myself very close to your chest

I will keep my face with closed eyes

Fuck?? That’s why I dare not take steps to hug


Becoming bold is better than 

Becoming pretty and nervous

You will just become emotional 

And try to quench this desire 

But when problem comes

We cannot face it

But you are more fearful than me

More nervous and emotional

I gained courage 

As I thought and observed myself

During each step 

Of the development of our relation

You just felt my presence 

And became emotional

You are far away from reality

I understand your capacity of mind

When facing the problem

You are the best man but not bold


I’m not fine

No dear…but I don’t say

You will be more emotional

I’m not sick… mind kills me

Enakku pakkanumda kanna..

Ayyo venda

How, when and where..?

Venda.. dear It will create more problems

Which we can never solve

I’m afraid da kanna

I don’t know how to maintain the secrets 

Of this matter

I’m unable to be like that


15.01.2014


Good Morning Dear!

You can send SMS 

But don’t dial my number

Someone in my family may attend the call

In my absence

But they don’t check my mobile messages


Feel very sleepy

The dream of last night was dangerous

I didn’t sleep well

I cut my vein after our tryst

It was the nightmare

In the dream 

You didn’t hear me and fucked


This is not love..Just lust

I always fear that…Vendaa..

I will not tell anything

I can tell you only what is in my mind

But you blame me always

I keep quiet

You focus on one thing

That is not love..only hunger

I’m a prey


24.01.2014


Will you have enough patience

To make me sleep in your chest?

Will you request your heart to beat

Without sound as your beloved

Is sleeping in your chest

Kannaa ..Sing a song

Till I reach the threshold of sleep


That dream…

I found us in a bed room

You invited me towards your chest

I felt shyness and 

I stood where I had been in the same room

You walked towards me 

Touched my shoulder

I immediately fell upon your chest

You kissed my lips and cheeks

When your hands moved through me

I tried to hold your hand

But I was weaker and you become stronger

You lifted me and then I begin to protest

You said ‘nothing darling nothing, be cool’

I kept on weeping 

You kept me in bed


My eyes and brain are tired

But they sympathize with my paining heart

As it is craving and searching 

Her sweet man everywhere

Like the winds of the sea shore

My heart is tired but

She sympathizes with my eyes and brain

As they share her

Sleepless and restless length of time

In pursuit of her First man

You are my First Man


I saw you dear….

Like the wave of a holy river you moved


Dear.. you didn’t slip anything. You are always with me.

And whenever I can’t see you .. become restless..

What it means?

It is new to me  I don’t know how to deal me in this matter.

That’s the reason for fear.


Wish to hear you.. Can I call? When?


Lend atleast 5 minutes..


“Mayakkunna mayil peeli

Mizhiyinakkal

Manmadhante

Malarambin

Avanazhikal”

Meaning of this movie song follows

Your eyes which are like the peacock feathers ( they are mesmerising too)

Are the container of arrows owned by Kamadeva

Mizhiyinakal – pair of eyes

Aavanazhikal – the container to keep arrows of a warrior ( Kamadeva)


01.02.2014

Dear ! I can’t stand in front of you

I may hug you unknowingly

Your today’s shirt is excellent

This is my favourite colour

Can’t control my wish to hug

Don’t come near dear… Hug..

Hug so forcefully and deeply


Love you so deeply

I’m so romantic and lovable

When I’m in bed attending your phone

I’m becoming even erotic

That time I wish 

So seriously to hug my dear

So..So..deeply

Want to be crushed by you my dear


Evide Ente Sneha Gayakan?

Where is my Singer of Love?


Though you don’t love me 

I don’t stop loving

It is related to my heart

It will not depend on you

I found I love and didn’t come across this kind of love

But it happens in me 

So I experience

I’m unable to explain you ‘what and how’

It’s it’s something rare


I think that I keep the pearl of

This love and the proper casket


Do you feel my love a disturbance

Sometimes I think that I disturb you

I should not have revealed my love

That’s why You suffer

Otherwise I would be someone for you


12.02.2014


See.. how school children react 

When they see us together

This is due to the body language

Children are clever

You are like a child

I don’t feel anything 

Except a fear when I’m near you

Anyone can read the MahaKavya of Love

From your eyes when I’m in front of you


They look at both of us dear..

You are lovelorn 

They look at us and I’m fearful


13.02.2014

Dear..I love you

I can’t control my self even when I introduce my hubby to you

'This is my fifth sms to you 

When you are talking with my husband'

Dear…dear..dear…dear…


14.02.2014

Your Amoura is shocked when you send an SMS 

By mistake you have sent it to me meant for my worst enemy

Addressing her in your erotic style


The chariot of Yudhistra which was in sky

While he was in war front

Came down and touched the earth 

As he proved to be dishonoured

(You may say ‘Nothing is unfair in love and war!’

and

 "Love means never having to say you are sorry.")


It’s the Irony that to day is The Valantine’s day!

‘A nice day for Love

A memorable day for Departure’


That’s God’s grace to acknowledge me 

By mistake about your secret crush 

With the worst one I have ever seen

I Thank God


That mistaken message tells something about you

Which can’t be tolerated by a lover

That’s all

I don’t interfere in your wish 

As I have the best option to quit

Thank you for all and everything


We may never love like this again

This little FLIRTATION is over..

A silly and undignified flirting with a complete stranger. 

A chance meeting between two happily married strangers. 

A brief encounter! No more happiness..  prepare for tears..


Ok.. we will stop talking about this

Let me be just a person who knows you

That’s enough

For this relief, much thanks


..................

Feb 12, 2021

The importance of R. P. Rajanayahem' 's write ups


Durai Padmanaban :

R. P. ராஜநாயஹம் பதிவுகள் அதிதீவிர வாசகர்கள் மட்டுமல்ல , சாமானிய வாசகர்களும் மனதிற்கு நெருக்கமாக உணர காரணம் -யாரும் உணர்ந்தாலும் வெளிக்காட்டாத உணர்வுகளை தயக்கமின்றி மனம் நோகா வண்ணம் திடமாக எழுதுவதே.

அனைத்து தரப்பினருக்கான அனுபவங்களும் தன்னிடம் நிறைந்ததொரு நல்நூலகம் தாங்கள்.


If I am given an option to follow only one person in fb, without any thoughts, I will choose only you 

R.P. Rajanayahem sir. 


Chitra Sampath :

R. P. ராஜநாயஹம், நீங்கள் ஒரு ஆழமான உளவியலாளரும் கூட. 

எண்ணமும் எழுத்தும் 

உங்களிடம் ஊழியம் செய்கின்றன 

besides your every day struggles. 

உங்க ஒருத்தர்க்காகவே இந்த கெரகம் பிடிச்ச FBல இருக்கலாம்னு தோணுது. 

Vasudevan Kathamuthu :

பொதுவாக நாவல்கள் தான் திரும்பத் திரும்பப் படிக்கும் ஆவலைத் தூண்டுபவை. 

அதைப் போலத் தான் ராஜநாயஹம் சாரின் கட்டுரைகள். அபூர்வமான மணிகளைக் கோர்த்து செய்த ஆரம் போல. 

மழை பொழிவதை பார்த்துக் கொண்டே இருக்க மனம் லயிக்கும். அட, அதற்குள் மழை நின்று விட்டதேயென நினைப்போமல்லவா?

 அப்படித் தான் இந்த நடை. 


Ragulan Kadiresan :                                                                        எந்த பழக்கத்திற்கும் அடிமையாய் (addict)  இருப்பதை விட ராஜநாயஹம் follower ஆக இருப்பதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. நன்றிகள் பல.                         உங்கள் மூளையின் நினைவு மற்றும் தகவல் சேகரிப்பு பகுதி எதனால் ஆனது. கூகுள் சர்வரே தோற்றுவிடும் போலிருக்கிறதே. விலகாத பிரம்மிப்பை விதைத்துக்கொண்டே இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்     

Ravi Kathiresan :                                                                            ராஜநாயஹம் எழுத்தின் சிறப்பே 'தான்' என்ற வஸ்து துருத்திக் கொண்டிராமல் நம்மோடு கை குலுக்கிப் பின் மனசுக்குள் சென்று அமர்ந்து கொள்வது தான். 

 Baskar M. :

நிஜமான சினிமா உலகம் நாம் நினைப்பதற்கும் உள்ளத்தில் உருவகப் படுத்தி வைத்திருக்கும் பிம்பத்திற்கும் எதிரானது என்பதை எந்த நாளிலும் ராஜநாயஹம் பதிவுகள் சத்தமிட்டுச் சொல்லுது.

.. 

போர்ஹேஸ் எழுதிய இரண்டு கதைகள்

 போர்ஹேஸ் எழுதிய இரண்டு கதைகள் 


1.“Dr.Brodie’s Report” கதையில் வரும்

 யாஹூ இன பழங்குடி மக்கள்

 பழங்குடிக்கே உரிய நம்பிக்கை 

பல கொண்டவர்கள். 


பில்லி சூனியக்காரர்கள் விரும்பினால் யாரையும் கடல் ஆமைகளாக, எறும்புகளாக மாற்றக்கூடிய சக்தி படைத்தவர்கள்.

இப்படி யாஹூக்கள் உறுதியாக நம்பினார்கள்.


இதை பிராடி நம்ப மறுக்கும் போது ஒருவன்

உடனே பரபரப்பாக தேடி 

அவருக்கு ஒரு எறும்பு புற்றை காட்டுவான். 

ஏதோ அது தான் பிராடி நம்புவதற்கு 

ஆதாரம், நிரூபணம் என்பதாக!


போர்ஹேஸ் சொற்ப கதைகள் தான் எழுதினார்.

ஒரு 24,25 கதைகள். 

பெரும்பாலும் பேச்சில் தான் காலத்தை வீணடித்தார்.


2. The writing of the God என்று ஒரு சிறுகதை. போர்ஹேஸ் எழுதியது. 

‘கடவுள் எழுதியது.’


ஷினாக்கான் என்பவன் ஒரு பிரமிடின் பூசாரி. அந்த பிரமிடு கொளுத்தி எரிக்கப்படுகிறது.

 தீக்கிரையாக்கிய பெட்ரோ டி அல்வரடோ இந்த ஷினாக்கானை சித்திரவதைக்குள்ளாக்குகிறான்.


 சிறையில் இவனை அடைத்து

 பக்கத்து செல்லில்

 ஒரு சிறுத்தையை அடைக்கிறான்.


ஷினாக்கான் மந்திரவாதியாக இருந்த கியாஹோலம் பிரமிடில் 

கல்வெட்டு எழுத்துக்களை 

எவ்வளவு முறை பார்த்திருக்கிறான்.

எழுதப்படுவது எல்லாம் புரியவா செய்கிறது? வாசிப்பின் தேடல்.


Paradise will be a kind of library என்று 

போர்ஹேஸ் சொல்வார்.


அபூர்வமான தரிசன வரி – ’காலத்தின் முதல் விடியற்காலை’யை எண்ணிப்பார்ப்பது.


கனவில் தோன்றும் ஒரு மணல் துகள்

 இரண்டு துகளாகி பெருகி பெருகி 

சிறையறை முழுவதும் நிரம்பி ஷினாக்கானை மூழ்கடித்து இவன் இறந்து விட்டதாக நினைக்கும்படியாவது, ’தண்ணீராலும் நெருப்பாலும் ஆன சக்கரம்’.


சிறை அறை – இறைச்சியும் தண்ணீர்க் குவளைகளும் கீழிறக்கப்படும் போது 

கொஞ்சம் வெளிச்சம் தெரிகிற 

அந்த சில துளி நேரத்தில்

 சிறுத்தைப்புலியின் 

மஞ்சள் தோலின் மீதுள்ள 

கருநிற பட்டை வரிகளில் 

கடவுளின் வாக்கியத்தை தேடும் ஷீனாக்கான்.


The God's Script! முழுமையான 

வளம் கொண்ட மந்திரம் 

கடவுளால் எழுதப்பட்டதை புரிந்து கொள்ள தவிக்கும் ஷீனாக்கான்.


அச்சொற்களை அறிந்து கொண்டதாகவே 

முடிவில் நினைக்கும் ஷீனாக்கான் 

ஒருபோதும் அதை உச்சரிக்கக்கூடாதென்றே முடிவெடுக்கிறான். 


சிறுத்தைப்புலி மீது எழுதப்பட்டுள்ள 

கடவுளின் வாக்கியத்தின் அர்த்தம் 

தன்னுடனேயே செத்துப்போகட்டும் 

என்று தீர்மானிக்கிறான்.


மாயர்களின் புராணீகத்தை பேசும்

 மயன் புனித நூல் 

Mayan book of the Dawn of life பற்றி 

இக்கதையில் 

'மக்கள் புத்தகம்' என போர்ஹேஸ் குறிப்பிடுகிறார். 


Heath Ledger

 ரெண்டு ஜோக்கர் கொலை வெறி தாண்டவமும் கோதம் சிட்டியில தான். This city deserves a better class of criminal. 


இந்த ஜோக்கர் ஃபீனிக்ஸ் 

பெஸ்ட் ஆக்டர் ஆஸ்கர் விருது பெறுவது மிடில் ஏஜ்ல. 


ஹீத் லெட்ஜர் இருபத்தெட்டு வயசுல செத்தப்பறம் டார்க் நைட் படமே ஆறு மாதம் கழிச்சி தான் 

ரிலீஸ் ஆச்சி. 


நோலன் படத்தில  சப்போர்ட்டிங் ஆக்டருக்கான ஆஸ்கர் விருத வாங்கிக் கொள்ள 

லெட்ஜரோட அப்பா, அம்மா, தங்கச்சி மேடையேறிய காட்சி மறக்கவே முடியாது. 


கொஞ்சங்கூட அழுகாச்சி கிடையாது. 

அழகொட்ட ஆம்பிள பிள்ளைய பறி கொடுத்த 

புத்ர சோகம் சாதாரணமானதா? 


Heath was an outstanding, unique son. 

But the parents stayed strong. They controlled emotions. 

Placid manner. 

 

தகப்பனும், தாயும், தங்கையும் உணர்வை உள்ளடக்கி ஹீத் பற்றி ஆஸ்கர் மேடையில் பேசிய பேச்சைப் பற்றி சொல்ல அந்த கருப்பு வீரன் படத்தின் ஜோக்கர் டயலாக் தான். 

" Very poor choice of words" 


Heath Ledger's unforgettable different performances in Brokeback Mountain and The Dark Knight. 


A very promising future had been cut short.


Feb 9, 2021

ரெண்டாம் ஊழம்



'Aim at heaven and you will get earth thrown in.

 Aim at earth and you get neither'

இது கிறிஸ்தவ நெறியாழ்கை, கோட்பாடு சம்பந்தப்பட்ட விஷயம். 


ராமண்ணா படம் 'உங்க வீட்டுப் பிள்ளை'. கனகசண்முகத்தை இயக்க விட்டு அண்ணா நெறியாழ்கை செய்தார். 


அதில் என்னத்த கன்னையா ஒரு டயலாக் அடிக்கடி சொல்வார். 

"கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு"


துர்வாச முனிவர் ஸ்லோகம் சொல்லியவாறு காட்டில் வந்து கொண்டிருந்திருக்கிறார். 

சேட்டக்கார சிறுவன் பீமன் ஒரு கவட்டையில் கல் வைத்து மரம் ஒன்றிலிருந்த குருவியை குறி பார்த்து வீசியிருக்கிறான். அவன் தம்பி அர்ஜுனன் தானே குறி தவறாமல் அடிக்கக் கூடியவன். 


பீமன் பாவம், குறி தப்பி விட்டது. குருவிக்கு இடப்பக்கமாக கல் 'விஷ்' என்று போனது. 

"ங்கோத்தா, கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு.. ச்சே"


துர்வாச முனி சாந்தமாக பீமனைப் பார்த்து பகர்ந்த வார்த்தைகள் 

"தடிப்பயலே, குருவியை கொல்வது பாவம்டா.. அதோட நீ ஏதோ கெட்ட வார்த்தை சொல்கிறாய். இது தப்பு. " 


பீமன் 'போய்யா' சைகை அவரைப் பார்த்து செய்து விட்டு மீண்டும் குருவியை குறி பார்த்து கவட்டைக்கல் எறிந்திருக்கிறான். குறி தப்பி விட்டது. 


இந்த இடத்தில் வாசகர் ஒரு விஷயத்தை நினைவில் கொள்க. இதுவே அர்ஜுனனாக இருக்கும் பட்சத்தில் குறியும் தப்பாது. 

அதோடு கூட அவன் 

கெட்ட வார்த்தை சொல்பவனும் அல்லவே. 

இந்தக் கதையே நடந்திருக்கப் போவதில்லை. 

அந்தோ! 


இந்த முறையும் பீமன் குறி தவறவே அவன் இயல்பான தன்மைப்படியே இன்னும் அழுத்தமாக, சப்தமாக கத்தியிருக்கிறான். 

"ங்ங்க்க்கோத்தா, 

கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சே.. ச்சை"


துர்வாசருக்கு கண்ணு செவேல்னு ஆயிடுச்சு. 


அந்த கோபக்கார சந்யாசி 'இனி பொறுப்பதில்லை' என்று தீர்மானித்து, 

வானத்தைப் பார்த்து ஒரு பெருங்கூப்பாடு போட்டார் 

    "பகவானே,

 இந்த படுக்காளி குண்டுப்பயல

 ஒடனே துவம்சம் பண்ணு" 


வானத்தில் இருந்து ஒடனே, ஒடனே 

ஒரு பெரும் மின்னலும் இடியும் பலமாக. 


அந்தக் கணத்தில் துர்வாரசர் சுருண்டு விழுந்து கருகிப் போய் விட்டார். 


வானத்தில் இருந்து பலத்த அசரிரி 

" ங்கோத்தா, ச்சே.. கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு "


...

Feb 7, 2021

அருந்ததியருக்காக இலக்கிய வெளி வட்டம் நடராஜன்

 அருந்ததியருக்காக இலக்கிய வெளிவட்டம் நடராஜன்


வில்லிபுத்தூர் பகுதியில் உள்ள 

அருந்ததிய இனம் பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். மற்ற இனங்களில் ஊடுருவிய கிறித்துவ மதம் இவர்களை அசைக்கவே முடியவில்லை. 

சொல்லப்போனால் பிராமணர் துவங்கி அனைத்து ஜாதியினரிலும் கிறித்துவ மதம் ஊடுருவி பலரை மதமாற்றம் கடந்த நூற்றாண்டுகளில் செய்திருக்கிறது. 

அப்படி ஒரு வைராக்கியம் அருந்ததிய மக்களிடம் இருந்திருக்கிறதே. இதைப்பற்றி அறிய வந்தபோது "நிஜமாகவா நிஜமாகவா " 

- ஆச்சரியமாக இருக்கிறது.


1996 ம் வருடம் ராஜபாளையத்தில்

 ஜஸ்டிஸ் மோகன் கமிசன் முன் இந்த அருந்ததிய மக்களுக்காக ஆஜர் ஆகி தன்னையே ஒரு அருந்ததிய பிரஜை ஆகவும் மாற்றிக் கொண்டு அதனால் அவர்களின் பிரதிநிதி எனவும் முன்னின்று இலக்கிய வெளி வட்டம் நடராஜன் அண்ணாச்சி ( ஜனகப்ரியா )பேசினார். 


- "அய்யா, வணக்கமுங்க. ஊருலே 18 ஜாதி இருந்தா அந்த பதினெட்டிலும் கீழானவங்க நாங்க. நீங்க கீழ்சாதின்னு சொல்றவங்க கூட 

எங்களுக்கு தண்ணி குடுக்க மாட்டங்க. பள்ளர் பறையர் எல்லாம் எங்களுக்கு எஜமான் தானுங்க.


எல்லோரிடமும் நாங்க அனுபவிக்கிற கொடுமை கொஞ்சநஞ்சமா. பீ அள்ளுறதை நாங்க செய்றோம். ஊரிலே யாரும் செத்தா நாங்க தான் வெட்டியானா நின்னு எரிக்கிறோம்.எங்க மேல வீச்சம் அடிக்குதன்னா எப்படிங்க? நாத்தம் அடிக்குதுன்னு மூக்க மூடிக்கிறாங்க. 


நாங்க சோப் போட்டு குளிக்கிறது கிடையாதுன்னா? சோப் குடுங்க, வீடு கொடுங்க, எங்க பிள்ளைகளை படிக்க வையுங்க " 

இப்படி ஆரம்பித்து வாங்கு வாங்கு என்று அருந்ததிய இனத்து அவமானங்களையும், சிறுமை,வாழ்க்கை போராட்டங்களையும் பிட்டு பிட்டு வைத்த போது நீதிபதி அருகில் இருந்த தாசில்தாரும், சப் - கலக்டர் இருவரும்

 சில விஷயங்களை ஆட்சேபிக்க முயன்ற போது ஜஸ்டிஸ் மோகன் அவர்களை கடிந்து கொண்டு

 " அவர்கள் பிரச்சனைகளை பேச விடுங்க "என நடராஜனை தொடர்ந்து பேச அனுமதித்து இருக்கிறார். 


அருந்ததிய இனத்துடன் நெருங்கிப்பழகி அவர்களின் உறவினராகவே ஆகி விட்டவர் நடராஜன் அண்ணாச்சி. சிலவருடம் முன் மாற்கு உடன் பணியாற்றி அருந்ததிய மக்களின் குழந்தை களுக்கு கல்வி கற்பித்த போது அவர்களின் பிரச்சினை அனைத்தையும் அறிய அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால் 

தன்னையே அருந்ததியர் மக்களில் ஒருவர் ஆக்கி மோகன் கமிசன் முன் ஆஜர் ஆனார்.


..

Perverted Art Cinema

 R. P. ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்' புத்தகத்தில் :


சாண்டோ சின்னப்பா தேவர் ' தெய்வச்செயல்' படம் மேஜர் சுந்தர் ராஜனை 

கதாநாயகனாக்கி எடுத்தார்.


' பழகும் விதத்தில் பழகிப் பார்த்தால் 

மிருகம் கூட நண்பனே '


கொஞ்ச நாளில் அதை தூசி தட்டி ஹிந்தியில் அப்போது உச்சத்தில் இருந்த ராஜேஷ் கன்னா கதாநாயகனாக 'ஹாத்தி மேரே சாத்தி 'யாக்கி 

படம் அகில இந்தியாவிலும் சூப்பெர் ஹிட். 


அதையே மீண்டும் தமிழில் எம்ஜியாரை வைத்து

' நல்ல நேரம் ' வியாபார ரீதியில் நல்ல லாபம்.


பொதுவாகவே தேவர் பிலிம்ஸ் படங்கள் எல்லாமே ஒரே மாதிரியானவை தான். 


இதில் மேஜர் -ராஜேஷ் கண்ணா -எம்ஜியார் மூவருமே எவ்வளவு மாறுபட்டவர்கள். 

மூவரும் ஒரே கதையின் நாயகர்கள். 


தெலுங்கில் என்.டி.ராமராவ் நடித்த ’ராமுடு,பீமுடு’ படத்தை நாகிரெட்டி தமிழில்  'எங்க வீட்டு பிள்ளை'யாக எம்ஜியாரை வைத்து,

ஹிந்தியில்' ராம் அவ்ர் ஷியாம் ' - திலிப் குமார் கதாநாயகனாக வைத்து தயாரித்தார். 


தமிழ் தெலுங்கு போல் ஹிந்தி பெரிய ஹிட்.


கொஞ்ச வருடம் கழித்து முக்கிய ரெட்டை கதாபாத்திரங்களை பெண்ணாக்கி 

ஹேமா மாலினி நடிக்க ' சீதா அவ்ர் கீதா' ஹிந்தியில் சூப்பர் ஹிட்.


 உடனே தமிழில் வாணி-ராணி என்று எடுக்கப்பட்டது.


'சீதா அவ்ர் கீதா ' ஹிட் ஆகியிருந்த நேரம்.


 மற்றொரு ஹிந்தி படத்தில் ஹேமா மாலினி, ஜிதேந்திரா, அமிதாப் பச்சன் நடித்துக்கொண்டிருந்தார்கள். 


கிளைமாக்ஸ் கடைசி சண்டைக்காக 

ஹேமா மாலினியை 

மோசமானவர்களிடம் இருந்து காப்பாற்ற அமிதாப்பும், ஜிதேந்திராவும் 

கடுமையாக ரிகர்சல் பார்த்து விட்டு 

செட்டுக்கு போனார்கள். 


அங்கே இவர்களை கட்டிப்போட்டார் இயக்குனர். ஹேமா மாலினி 

மோசமானவர்களிடம் "கட்டி புரண்டு, கட்டி கட்டி புரண்டு புரண்டு "

கடுமையாக சண்டையிட்டு 

அமிதாப்பையும் ஜிதேந்திராவையும் காப்பாற்றினார். 


கதை மாற்றப்பட்டுவிட்டது.


'சீதா அவ்ர் கீதா' ஹேமா மாலினி சண்டை        மக்களுக்கு

 ரொம்ப, ரொம்ப பிடித்துப்போய் விட்டது. 

அதனால் இந்த படத்தில் 

கிளைமாக்ஸ் மாற்றப்பட்டு ஹேமா சண்டை. 


'ஆங்கிரி எங் மேன் ' அமிதாப் பச்சன் 

மனம் அன்று என்ன பாடு பட்டிருக்கும்.


வழக்கமா கதாநாயகன் தான் 

கிளைமாக்ஸ் காட்சியில 

"தும்பிக்கைய தரையிலே ஊனி,

நாலு காலையும் மேலே தூக்கி 

சங்கு சக்கரமா சுத்துவான். "


...

Feb 5, 2021

தி. ஜானகிராமன் 'மரப்பசு' பால சந்யாசி

 

பெரியம்மா என்னை ஒரு முறை திருச்சிக்குப் பக்கத்தில் ஏதோ ஊருக்கு அழைத்துப் போயிருக்கிறாள். 

அங்கே ஒரு மடத்து சந்யாசி 

தனக்குப் பின்னால் குட்டி அதிபதியாக 

ஒருவரைத் தேர்ந்தெடுத்துப் பட்டம் கட்டினார்.


 கிழ சந்யாசி ஒரு பத்து வயதுப்பையனை அதற்காகத் தேர்ந்தெடுத்திருந்தார். 

பையன் பளபளவென்றிருந்தான்.

 சிறு பிராயத்தின் பூத்தோல். 


அவனுக்கு மொட்டையடித்து,

 ஒரு குளத்தில் முழுகச் சொல்லி, 

தண்ணீர் காலில் படப் படித்துறையில் 

நிற்க வைத்து, 

காவித்துணியையும், தண்டத்தையும் 

அவனிடம் கொடுத்துத் தீட்சை கொடுத்தார் கிழத்துறவி. 


அதைப் பார்த்து விட்டு என்னமோ 

எனக்கு அழுகை அழுகையாக வந்தது. 


அவன் இனிமேல் வீட்டுக்குப் போகக் கூடாதாம். 

அப்பா அம்மாவைப் பார்க்கக் கூடாதாம். 

விளையாடப் போகக் கூடாது. 

சாப்பாடு கிழவர் சொன்னபடி தானாம். 

சினிமா, டிராமாவெல்லாம் 

அவன் போகக் கூடாதாம். 


தினமும் மூன்று நான்கு வேளை குளிக்க வேண்டுமாம். கடைக்குப் போக முடியாது. 

காசு கொடுத்து பெப்பர்மிட் சாக்லேட் வாங்கித் தின்ன முடியாது. 

பள்ளிக்கூடம் போக முடியாது.

 காசைத் தொட முடியாது. 


இதையெல்லாம் விட அந்தச் சின்னக் குழந்தை மயிரையும் வெள்ளை வேட்டியையும்

 நிஜாரையும் இழந்தது என்னைக் குலுக்கிற்று. பெரியம்மாவையும் குலுக்கி விட்டது.


 பெரியம்மா சுதாரித்துக் கொண்டு அவன் கரையேறி வந்ததும், வயசைப் பார்க்காமல், 

தெரு மண்ணில் விழுந்து கும்பிட்டாள். 

நானும் கும்பிட்டேன். 


" இது தான்டி அந்தப் பையனோட தாயார்! " என்று தெரு மூலையில் நின்று கொண்டிருந்த 

ஒரு அம்மாளை விழுந்து கும்பிட்டாள். கும்பிடும் போதும் கண்ணீர். நானும் விழுந்து கும்பிட்டேன். 


- தி. ஜானகிராமன் 'மரப்பசு'  அம்மணி 


இந்த மரப்பசு anecdote பல வருடங்களுக்கு முன்பு மளையாள குறும் படமாக தயாரிக்கப் பட்டு தேசத்தின் கவனம் பெற்றது. ஜானகிராமனுக்கு எந்த க்ரெடிட்டும் தரப்பட்டிருக்கவில்லை. 

அவார்ட் வாங்கிய படம். 


படத்தில் அந்த பாலகன்

 ஒரு நாள் மடத்திலிருந்து தப்பித்து வீட்டுக்கு ஓடிப் போய் அம்மாவைக் கட்டிக் கொண்டு தூங்கிக் கொண்டிருப்பான். 


தமிழின் முக்கியப் பத்திரிக்கை அந்த  படம் பற்றி விசேஷ கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தது. 


 பார்த்தவர்களையெல்லாம்  கலங்கி கண்ணீர் விடச்செய்தது. 


படத்தின் ஸ்பெஷல் ஷோவில் படம் முடிந்து விளக்கைப் போட்ட போது அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த எல்லோர் கண்களிலும் கண்ணீர். 


அப்போது அந்தப் பால சந்யாசியாக நடித்திருந்த சிறுவன் சூழ்நிலை இறுக்கத்தை நிராகரித்து, வெகு இயல்பான குழந்தைத் தனத்துடன் 

அங்கே கலகலப்பாக சிரித்து 

விளையாட ஆரம்பித்து விட்டான்.


..

Feb 4, 2021

Francisco Goya painting - Saturn devouring son

 "Saturn devouring one of his son" 


A horrible painting by 

Spanish artist Francisco Goya - popular for his upsetting paintings 


இந்த ரோமானிய புராணீக தொன்மங்களை இங்கே ஜோதிட கிரகங்களோடு, சனி, சூரிய வியாழனோடு 

சேர்த்து நினைத்துக்குழம்பக் கூடாது. 


இந்த ரோமானிய அரக்கன் சேட்டர்ன் அவனுடைய அப்பா சீலஸ் ஆட்சியைக் கவிழ்த்து அரியணையேறியவன். 


இவனுடைய குழந்தைகளில் ஒன்று பின்னால் இவன் தன் தகப்பனுக்கு செய்த அதே துரோகத்தையே செய்யும் என்று எச்சரிக்கப்பட்டதால் தனக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் தின்று தீர்த்து விடுவதை வழக்கமாக கொண்டவன். 

சேட்டர்னின் மனைவி ஒப்ஸ். ஒப்ஸ் மூன்றாவது குழந்தையை மட்டும் இவன் கடித்துத் தின்று விடாமல் மறைத்து காப்பாற்றி விடுவாள். அந்த மூன்றாவது குழந்தை ஜூபிட்டர் பின்னால் 

தன் தந்தையை கவிழ்த்து சிம்மாசனத்தில் ஏறுகிறான். 


நம்ம கிருஷ்ணன், அவன் மாமன் கம்சனை ஞாபகப்படுத்தும் ரோமானிய, கிரேக்க மித்தாலஜி. 

பலராமன் எப்படி கம்சன் கிட்ட இருந்து தப்பிச்சார்னு தி. ஜானகிராமன் 'மரப்பசு' ல சொல்றார். 


"பலராமன் ஒருத்தர் தான் ரெண்டு பொம்மனாட்டி வயித்திலெ இருந்தார். தேவகி வயித்திலே ஏழு மாசமோ என்னமோ இருந்தாராம். அப்புறம் பகவான் அந்த கர்ப்பத்தை இழுத்து, வசுதேவரோட முதல் பெண்டாட்டி ரோகினி கோகுலத்திலெ, நந்தன் பாதுகாப்பிலே வளர்ந்திண்டிருந்தாளாமே, அவ வயித்திலெ கொண்டு வச்சாராம். "

தன் பிள்ளைக் கறியை தானே சாப்பிட்டவன் சேட்டர்ன். 

ஓவியர் ஃப்ரான்சிஸ்கோ கோயா இந்த ஓவியத்தை வரைந்து தன்னுடைய dining room லயே மாட்டி வைத்திருந்தது ஏனோ?


https://m.facebook.com/story.php?story_fbid=2986818048198308&id=100006104256328


Feb 3, 2021

நாத்திகமும் ஒரு சித்தி நிலை தான்

 

எழுத்தாளர் கர்ணன் சென்ற வருடம்

 இறப்பதற்கு முன் என்னுடன் 

செல் பேசிய போது அமெரிக்கன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் மறைந்த இல. பொன் தினகரன் தன்னுடைய நல்ல நண்பர் என்று குறிப்பிட்டார்.


 நாங்கள் அவரை L. P. T. என்போம். 

எல்ப்பிட்டி கம்பீரமாக திருகி விடப்பட்ட மீசையுடன் ஜிப்பா, வேட்டியுடன், தோளில் ஒரு நீளமான துண்டு போட்டுக்கொண்டு, 

கண், மூக்கு திருத்தமாக, ஓவியம் வரைய, சிலையாய் வடிக்க ஆசையுண்டாக்கும் உருவம் கொண்டவர். உயரம் கொஞ்சம் குறைவு தான். 


ஏனோ எனக்கு மதுரையில் யு. சி. ஹைஸ்கூல் முன்புள்ள பிஸியான ரோட்டில் கட்ட பொம்மன் சிலையைப் பார்க்கும் போதெல்லாம் 

பேராசிரியர் இல. பொன். தினகரன் 

ஞாபகம் வரும். 


மீசையைத் தடவிக்கொண்டே சிரித்த முகமாக                  வகுப்பு எடுப்பார். 


ஃப்ளின்ட் ஹவுஸ் முன்னால் நானும், ரவியும், 

என் வகுப்புத் தோழன் முபாரக்கும் நின்று கொண்டிருக்கிறோம். 

தமிழ் பேராசிரியர் எல்ப்பிட்டி ஒரு நண்பருடன் 

ஃபேக்கல்ட்டி அறையில் இருந்து வெளிப்பட்டு வந்து கொண்டிருந்தார். 


எங்களைப் பார்த்தவுடன் 

'அய்யா ' என முகமன் கூறினோம். எல்ப்பிட்டி எப்போதும் ' என்னய்யா ' என்பார். 


அருகே வந்த நண்பரைப் பற்றி அறிமுகம் செய்தார். 

அவர் பெயர் S. D. விவேகி. திராவிடர் கழகம். 

எஸ். தாவூத் இயற்பெயர் என்பதை எங்கள் தமிழ் பேராசிரியர் சொன்னவுடன் ஆர்வத்துடன் நான் கவனித்தேன். 

மிக எளிமையான தோற்றத்துடன் இருந்த விவேகியிடம் ஒரு தேஜஸ் இருந்தது.

 நாத்திகமும் ஒரு சித்தி நிலை தான். 


அந்தக் காலத்தில் ஒரு முசல்மான் திராவிடர் கழகத்தில். பெரும் ஆச்சரியம். எப்படி சாத்தியமாயிற்றோ என்று இன்றும் கூட எண்ணிப்பார்க்க மலைப்பாக இருக்கிறது. 


 முபாரக்கைக் காட்டி விவேகியிடம் எல்ப்பிட்டி சொன்னார் 

'இவர் உங்களைப் போல ஒரு பகுத்தறிவு வாதி தான்.' 


உண்மையில் முபாரக் அப்படியெல்லாம் கிடையாது. ஆனால் ஏனோ ரேசனலிஸ்ட் என்று தான் என்னைப் போலவே சொல்லிக்கொள்வான். 

ரவி தெய்வ நம்பிக்கை இன்று வரை சீரானது. 

நான் இடைப்பட்ட வாழ்க்கையில் ஆத்திகம் கொஞ்சம் பார்த்தவன் தான். 


முபாரக் அப்போதெல்லாம் இப்படி யாராவது சொல்லிவிட்டால் பெருமிதமாக இறும்பூதெய்தி விடுவான். விவேகியின் கையைப் பிடித்து குலுக்கினான். 


நான் தமிழயயாவிடம் 'அய்யா, நானும் பகுத்தறிவு வாதி தான்ய்யா' என்ற போது 

அவர் தன் மீசையைத் தடவிக்கொண்டே

 'ஆ.. கேபி, நீ ஒரு விளையாட்டுப் பிள்ளையய்யா' 


எஸ். டி. விவேகி எழுதிய நூல் ஒன்று அப்போது பிரபலமானது. 'வேதங்களின் வண்டவாளம்'.  திராவிடர் கழக வெளியீடு. 


எல்ப்பிட்டி அடையாளமிட்டார். 


கோரிப்பாளையத்தில் அப்போது திராவிடர் கழக புத்தக நிலையம் ஒன்று உண்டு. இப்போதும் இருக்கிறதா? 


உடனே, உடனே அங்கே போய் அந்த நூலை நானும், முபாரக்கும் வாங்கினோம். 

ரவி ' ஏன்டா இதெல்லாம்' 

ரவி ஒரு புத்தகப் புழு. அந்த புத்தகத்தைப் படிக்காமல் விடவில்லை. 


முபாரக் கேன்சரில் அற்பாயுளில் இறந்த போது முழுமையாக  இஸ்லாமிய முறைப்படி 

பள்ளி வாசலில் தொழுகை நடத்தப் பட்டு தான் அடக்கம் செய்யப்பட்டான். 


முபாரக் மவுத்துக்கு ஆங்கிலப் பேராசிரியரும், மொழியியல் வல்லுநருமான ஃபஸ்லுல்லா கான் வந்திருந்தார் என்பது நன்றாக நினைவிலிருக்கிறது. 


ரவியும் நானும் விம்மி, விம்மி, 

தேம்பித் தேம்பி அழுதோம். 

முபாரக் உடல் இறக்கப்பட்ட குழியில் 

மண் அள்ளிப் போட்டு விட்டு,            

மற்ற யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், 

விறு விறு வேகமாக நடக்க ஆரம்பித்தோம். 


..

Feb 1, 2021

வண்ணநிலவன் பதிவும் R. P. ராஜநாயஹம் எதிர் வினையும்

 வண்ண நிலவன் பதிவும்

 R. P. ராஜநாயஹம் பதிலும் 


"மோகமுள், தலைமுறைகள்,சாயாவனம்,புத்தம் வீடு,கோபல்லகிராமம் இப்படிச் சில அபூர்வமான நாவல்கள் தமிழில் இருக்கின்றன.ஆனால் மலையாளத்திலும்,வங்கமொழியிலும் இந்த எண்ணிக்கை அதிகம்.தகழி,கேசவதேவ்,உரூபு,வாசுதேவன் நாயர்,வங்கத்துவிபூதி பூஷண்,தாராசங்கர் பானர்ஜி போல எழுதியவர்கள் தமிழில் யாருமே இல்லை. நீலகண்டபறவையைத்தேடி, சோரட் பெருகும் .... ,கினு கோனார் சந்து போன்றோ,அக்னி நதி போன்றோ தமிழில் எந்த நாவலும் இல்லை.டால்ஸ்டாயையும், சமீப காலத்தில் மிக அதிகமாக தாஸ்தாவ்ஸ்கியையும் கொண்டாடுகிறோம்.அவர்களின் தரத்துக்கு ஒரு நாவலாசிரியர் கூட தமிழில் இல்லை. ஜானகிராமன்,நீல.பத்மநாபன் கி.ராஜநாராயணன் எல்லோரையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.ஆனால் சளைக்காமல் இலக்கியம் பேசித்திரிகிறோம்."


- வண்ண நிலவன் 


R. P. ராஜநாயஹம் எதிர் வினை:


இந்தப் பதிவில் நிறைய நான் முரண் படுகிறேன். 

மோக முள் பெரும் சாதனை. அதனோடு நீங்கள் எழுபதுகளில் போடும் பட்டியல் நாவல்களை சேர்த்துள்ளீர்கள். 

டால்ஸ்டாய், தாஸ்தயேவ்ஸ்கி இருவரை ஜானகிராமனோடு ஒப்பிடத் தேவை கிடையாது. 


அசோகமித்திரனை விட நீல பத்மநாபனோ,

 சா. கந்தசாமியோ, ஹெப்சீபாவோ தகுதியில் உயர்ந்தவர்கள் கிடையாது. 

அசோகமித்திரன் நாவல்கள் 18ம் அட்சக்கோடு, கரைந்த நிழல்கள், தண்ணீர் நாவல்களை ஒதுக்குவதில் உங்கள் பதிவு குறைப்பட்டு போகிறது.


கடைசி வரி புண்படுத்துகிறது. 


ஞான பீட பரிசு பெற்ற தாராசங்கர் பானர்ஜி, கிஷன் சந்தர் உட்பட எவருமே சாதிக்காததை மோக முள்ளில் தி. ஜானகிராமன் மோக முள்ளில் சாதித்துள்ளார். ஜானகிராமனின் சிகர சாதனை கணிக்கப்படாதது தமிழின் துரதிஷ்டம் என்று 

வெ. சா. ஐம்பது வருடங்களுக்கு முன்பு கூறியது பற்றி இங்கே நினைவூட்டலாமா என்பதற்கே தயங்க வேண்டுமா?


அடக்கத்தோடு உங்கள் கடல் புரத்தில், கம்பா நதி பற்றி எழுதாமல் விடுகிறீர்களா? 


க. நா.சு இப்படித் தான். 

தன்னுடைய மகத்தான படைப்புகளான சர்மாவின் உயில், பொய்த்தேவு, ஒரு நாள், அசுர கணம், வாழ்ந்தவர் கெட்டால் நாவல்களில் ஒன்றைக் கூட தன் பட்டியலில் எப்போதுமே சேர்த்ததேயில்லை.


தோளோடு தோள் நிற்கக் கூடிய இருபது நாவல்கள் தமிழில் இருக்கின்றன. அவை எதனையும் மேலைய இலக்கியங்களோடும், மலையாள, வங்க இலக்கியத்தோடெல்லாம் வைத்து யோசிப்பதை நிறுத்துவது நல்லது. 


தமிழ்ல ஒரு மயிரும் புடுங்கவில்லை என்ற டயலாக் கூட அர்தப் பழசு. மௌனியின் cliche பல இலக்கிய அரசியல் வாதிகளின் தேய்ந்து போன ரிக்கார்டு. 


இந்த மாதிரி ஃபர்னிச்சர்களை ஒடைக்கணும்.


Literary cleverness காட்டியதற்காக சுந்தர ராமசாமியின், இந்திரா பார்த்தசாரதியின் நாவல்களை ஒதுக்குவது அராஜக தண்டனை. 


ஆதவன் காகித மலர்கள், என் பெயர் ராமசேஷன்.. 

Sailing the same boat என்பீர்கள். 


நகுலனின் நினைவுப்பாதை, நாய்கள், வாக்குமூலம்.... ஓ நகுலனுடையதும் புத்திசாலி எழுத்தோ. 


எம். வி. வெங்கட்ராம் உண்மையைத் தான் இலக்கியத்தில் தேடினார் என்று முப்பது வருடங்களுக்கு முன் நீங்கள் எழுதியதைப் படித்த போது உங்களுக்கு அவரைப் பிடிக்கும் என்று நினைத்தேன்.


அண்ணா, உலக இலக்கியம் படிக்காதவர்களிடம் தான் உங்கள் 'இங்கே காவியத்தன்மை இல்லை' என்கிற வார்த்தை செல்லுபடியாகும். 


I insist ஒப்பிடத் தேவையேயில்லை. ஒப்பிட்டு ஒதுக்குவதே Snobbery. 


வண்ண நிலவன் :

 நீங்கள் தாராளமாக முரண்படலாம்.தமிழில் குறிப்பிடத்தக்க நாவல்கள் பல இருக்கின்றன. அவைகளில் காவியம் போல் விரியும் நாவல்கள் இல்லை.


R. P. ராஜநாயஹம் :

இதிலும் முரண் பட வேண்டியிருக்கிறது. 

நாவல்களில் காவியத்தன்மை இல்லாமல் இயல்புத் தன்மை, எளிமை இருக்கக் கூடாதா? 


தலையணை, தலையணையாக, வண்டி, வண்டியா எழுதுனாத்தான் காவியம், ஓவியம் என்ற பிரமை கொண்டவர்கள் இங்கே மமதையோடு உண்டு.


ஜானகிராமன், அசோகமித்திரன், கி.ரா விடமெல்லாம் இருக்கிற இலக்கிய உன்னதத்தில் காவியத்தன்மை யைக் காண முடியவில்லை

 என்ற சட்டாம்பிள்ளை உதட்டுப்பிதுக்கல்? 


வண்ண நிலவன் :

தகழியின் கயிறு, சிவராம கராந்தின் மண்ணும் மக்களும் (சிறு நினைவுப் பிசகு)போல் அகண்ட வாழ்வைச் சொல்லும் நாவலைத்தான் காவியம் என்று குறிப்பிட முயற்சிக்கிறேன்


 R. P. ராஜநாயஹம் :

தகழி சிவசங்கரம்பிள்ளை எழுத்தின் இலக்கியத் தகுதி பற்றி மலையாளிகளே சந்தேகம் கொண்டிருக்கிறார்கள்.

சுந்தர ராமசாமி மொழிபெயர்த்த செம்மீன் நாவல் படித்தேன். முன்னதாக செம்மீன் படம் பார்த்திருந்தேன். 


 சிவராம காரந்தின் முக்கியப் படைப்பு மூக்கஜ்ஜிய கனஸுகளு என்று கன்னடர்கள் பலர் சொல்லுவார்கள். 

அதன் மொழிபெயர்ப்பு 'பாட்டியின் கனவுகள்' படித்திருக்கிறேன். 

அது மோக முள், புயலிலே தோணி 

நாவல்களை நெருங்க முடியவில்லை.


சாதிக்கிறேன் பார்த்தாயா என்ற அகம்பாவமே இல்லாத ஒரு வித அலட்சியம் ஜானகிராமனிடம் ஒவ்வொரு வரியிலும் உண்டு. 

மொத்தமாக சேரும் போது அவருடைய  எளிமையான எழுத்து விஸ்வரூப சாதனையாகிறது.


வண்ண நிலவன் நாவல் சாதனையும் தனித்துவமும் எளிமை, இயல்புத் தன்மை சார்ந்த உண்மை. 


ஒரு காவியம், காப்பியம் என்ற பெருமிதப் பெருமை இல்லாத எழுத்து என்பதில்

 இலக்கியம் சாசுவதத்தன்மையை 

காலம் கடந்தும் காணும்.

சமயவேல்

 'நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்’ என்றான்                எட்டயபுரம் தலப்பா கட்டி. 


ஆனால் கவிஞர் சமயவேல் சொல்வது போல

“ஏதேனும் ஒரு காரணத்தின் நிமித்தம் திடுமென மனது உறையத்தொடங்குகிறது.”


அந்தக் கவிதை முடிவது இப்படி-

”எதிரெதிர் வண்ணங்களின் இழுப்பில் 

என் தூரிகை நகர்கிறது.”


... 


It is the possibility of having a dream come true

 that makes life interesting.

 Never stop dreaming.”


Alchemist நாவலை 1988ல் பவுலோ கொயலோ எழுதியிருக்கிறார்.


“ஏதேனும் ஒரு அழகிய கனவு

என்றும் என்னுடன் இருந்து வருகிறது.........

கனவுகள் உடைந்து தகர்வதைப் பற்றி

கவலைப்படக் கூட முடியாமல்

மீண்டும் மீண்டும்

புதிது புதிதாய் முளைக்கும் கனவுகள்


கனவாற்றின் கரைகளில் தானே

வாழ்க்கை கொஞ்சம் தலைசீவி அழகு கொள்கிறது


கனவுகளற்ற பாலை நாட்கள்

வரவே வேண்டாம்

ஏதேனும் ஒரு அழகிய கனவு

என்றும் என்னுடன் இருக்கட்டும்.”


சமயவேலின் மேற்கண்ட கவிதை இடம்பெற்றுள்ள

’காற்றின் பாடல்’ கவிதைத் தொகுப்பு 1987ம் ஆண்டு வெளி வந்திருக்கிறது.


,,,,,,,,,,,,,,,