Share

Apr 27, 2019

மதுரை சோமு நூற்றாண்டு விழாவில் R.P.ராஜநாயஹம்


மதுரையில் நாளை ஏப்ரல் 28ம் தேதி, மாலை 5 மணிக்கு சேம்பர் ஆஃப் காமெர்ஸில் நடக்கவுள்ள
சங்கீத மேதை மதுரை சோமு நூற்றாண்டு விழாவில் 

உயர்நீதிமன்ற நீதியரசர் அரங்க. மகாதேவன் அவர்களுடன் 
நானும் கலந்து கொண்டு உரையாற்றுகிறேன்.
அன்பு இளவல் மதுரை பிரபல வழக்கறிஞர் பா.அசோக் அவர்கள் வரவேற்புரை.

பா.அசோக் அழைப்பின் பேரில் தான் நான் இந்த நல்ல நிகழ்வில் கலந்து கொள்ளும் பெரும்பேறு பெற்றேன். அவருடைய சித்தப்பா பி.வரதராசன் அவர்களுடன் அசோக் இணைந்து நடத்தும் விழா.
’வீடு பேறு’அரங்கநாதனின் புதல்வர் தான் நீதியரசர்.


Apr 23, 2019

பத்மஜா நாராயணன் மொழிபெயர்த்த ”ஷ்’இன் ஒலி”


மன நோயாளிகள் துரதிர்ஷ்டசாலிகள் என்பது மிக மலிவான, மேலோட்டமான, எந்திரத்தனமான தேய்ந்த சொல்.
வேறு எந்த நோய்க்கும் குடும்பத்தாரிடம், சமூகத்திடம் மரியாதையுண்டு. ஆனால் மனநோயாளிக்கு குடும்பத்தாரிடம் புறக்கணிப்பும், வெறுப்பும், சமூகத்திடம் ஒரு கிண்டலும், எள்ளலும் தான். கல்லெறிதல் தான்.
Oh let me not be mad, not mad,
Sweet heaven, keeep me in temper, I would not be mad!
- Shakespeare in King Lear
கிங் லியர் மட்டுமல்ல, லேடி மேக்பெத், ஹேம்லட், ஒஃபீலியா என்று ஷேக்ஸ்பியர் தான் எத்தனை மன நோயாளிகளை காவிய பாத்திரங்களாக சித்தரித்திருக்கிறார்.
டேனியல் லிம் எழுதிய ஆங்கில நாவலை பத்மஜா நாராயணன் தமிழில் ‘ஷ்’ இன் ஒலியாக மொழிபெயர்த்து காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் சமர்ப்பணம் ’தன் எழுத்தின் வழி துயரைத் தங்காது விரட்டி அடிக்கும் அருமை நண்பன் போகன் சங்கருக்கு’

மொழிபெயர்க்கும்போதே பல முறை அழுதிருக்கிறார். அவருக்கே ஆறுதல் சொல்ல வேண்டியிருக்கிறது.
நாவலில் வருகிற செங்க் பரவாயில்லை. Harmless person. ஏதோ ஒரு காதல் தோல்வி. வேலைக்கு போகிறவர். ஆரம்ப கட்டத்திலேயே முறையான மருத்துவத்தின் மூலம் குணப்படுத்தியிருக்க வாய்ப்பிருந்தும் தாயின் மூட நம்பிக்கை மந்திரவாதிகளை தேடுகிறது.

செங்க் மனநிலை பாதிக்கும் போதெல்லாம் அடிக்கடி காணாமல் போகிறவர். ஆனால் அடுத்தவர்களிடம் எந்த வன்முறையையும் பிரயோகித்தவரல்ல. பாவப்பட்ட ஜீவன். அப்படியிருந்தும் ஒரு முறை போலீஸ் மூலம் அவரை கை விலங்கிட்டு காப்பகத்திற்கு அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்திருக்கிறது.

 Trouble maker ஆக, அருவருக்கத்தக்க மனநோயாளியாக தன் தாய் மாமா செங்க் இருந்திருந்தால் டேனியல் லிம் வெறுத்துப்போய் ஒரு வேளை இந்த நாவலையே எழுதியிருந்திருக்க மாட்டார்.

அதனாலேயே நாவலில் பெரிய அதிர்ச்சி எதுவும் இல்லை. ’ஷ்’இன் ஒலி ஒரு சாத்வீகமான நாவல்.
அவரை தங்கள் வீட்டிலும் டேனியல் லிம்மின் அம்மா வைத்துக்கொண்டிருக்கவில்லை.
முதலில் தன் தாயுடன் பின் ஒரு கறுத்த மனிதருடன் தங்கியிருக்கும் செங்க் தூக்கத்திலேயே கடைசியில் இறந்து போகிறார்.
நாவல் மனநிலை பாதிக்கப்பட்ட மனிதரை கவனித்துக்கொள்வதில் எதிர்கொள்ள நேர்கிற துயரங்களை பேசுகிறது. செங்கின் சகோதரி படுகிற பாடு. ஒற்றை தலைவலியால் மாத்திரைகள். அதோடு கணவனும் ஒரு ஊதாரி.
இன்னொரு வகையினர் ஆபாசமாக பேசுவது, நிர்வாண கோலத்தில் நடமாடுவது, அராஜக நடவடிக்கைகளில் இறங்குவது, குடும்பத்தினரிடம் மட்டுமல்லாமல் அக்கம்பக்கத்தாரிடம் கூட அருவருக்கத் தக்கவகையில் வம்பு செய்வது. இப்படி இருப்பது தான் அந்த குடும்பத்தாருக்கு மிகப்பெரிய துன்பத்தையும், துயரத்தையும் தரக்கூடியது. இப்படிப்பட்டவர்களை குடும்பமே கைவிட்டு விடும். மருத்துவ முகாம்களில் தள்ளி விட்டு விடுவார்க்ள். அல்லது ரோட்டில் பிச்சைக்காரர்களாக திரிவார்கள்.
நல்ல வேளை அந்த வகையில்
Daniel Lim’s maternal uncle was an honourable man.
இதில் மற்றொரு வகையுண்டு. போதைப்பழக்கத்திற்கு அடிமையானதால் மன நோயாளிகளானவர்கள் அல்லது மனநோயாளி போதைப்பழக்கத்திற்கும் அடிமையாவது.
இவர்கள் அபாய நோயாளிகள். மிகுந்த பிரச்னைக்குரியவர்கள். அவர்கள் குடும்பத்தார்க்கு நரக வேதனையை தருபவர்கள். எப்போதும் குடும்பத்தார் மட்டுமன்றி அவரைச்சுற்றியுள்ளவர்கள் கூட கத்தி மேல் நடப்பது போல தவிக்க வேண்டியது தான்.
செங்கின் அம்மா தள்ளாத முதுமையில் தன் மகளுக்கு தான் தொந்தரவாய் இருக்க விரும்பாமல் மாடியில் இருந்து கீழே குதித்து உயிர் விடுகிறார்.
மருத்துவ செலவு குறித்த பயத்தில் இன்று முதியவர்கள் பலரும் தற்கொலை தான் தன் சாவு என்று இங்கே முடிவு செய்திருக்கிறார்கள்.
வீட்டு வேலைக்கு போகும் ஒரு முதிய பெண்மணி வேதனையுடன் என்னிடம் சொல்லியிருக்கிறார் “ அரளி விதைய ரெடியா வச்சிருக்கேன். ஏதாவது பெரிசா உடம்புக்கு வந்து படுக்கும்படியாச்சின்னா அரைச்சி தின்னுட்டு போயிடுவேன். பிள்ளைகளுக்கும் தொந்தரவு வேண்டாம். ஆஸ்பத்திரிக்கும் அநியாயச் செலவு வேண்டாம்.”
மனநிலை பாதிக்கப்பட்ட தன் மூத்த சகோதரி ஒருவர் பற்றி அசோகமித்திரன் கதையிலேயே குறிப்பிட்டிருக்கிறார். ’மணவாழ்க்கை’ கதையில் வருகிற அக்கா. அந்த சகோதரி கடைசி வரை மனநிலை பாதிக்கப்பட்டவராகவே இருந்திருக்கிறார்.
Sometimes the worst place you can be at is in your own head.
பல மன நலக்காப்பகத்தில் உள்ள நோயாளிகள் பரிதாபத்திற்குரியவர்கள். அவர்களுக்கு எப்போதும் பிரம்புத் தாக்குதல் தான்.
ஒரு மருத்துவமனையிலிருந்து (அந்த காலங்களில் பைத்தியக்கார ஆஸ்பத்திரி என்பார்கள்) இருந்து தப்பித்து யூனிஃபார்முடன் வெளியே வந்து பஸ் ஸ்டாப்பில் பரக்க பரக்க விழித்துக்கொண்டு நின்று கொண்டிருந்த ஒரு மனநோயாளியை அந்த காப்பக காவலர்கள் ஒரு மிருகத்தை கொண்டு செல்வது போல அடித்து இழுத்துச்சென்றதை பார்த்ததுண்டு.
சித்தப்ரமைக்கு ஆளானவர்கள் பாலியல் வன்முறைக்கும் உள்ளாவதுண்டு.
மனநோயாளியான ஒரு பிச்சைக்காரரை தொடர்ந்து வாய்ப்புணர்ச்சிக்கு
passive sex worker ஆக பயன்படுத்தி குறியை சாந்தப்படுத்திக்கொண்ட குழுவான அயோக்கியர்கள் உண்டு. புத்தி சுவாதினமிழந்த பாவப்பட்ட ஜீவனின் போஜன வாயில் சாமானை திணித்த ஈன ஜென்மங்கள்.
பைத்தியம் பிடித்த முகலட்சணம் இல்லாத பெண் ஒருத்தி. “Cover the face and fire the base” என்று அவள் முகத்தில் துண்டை போட்டு மூடி விட்டு போகம் செய்த படித்த மனிதர்கள் கூட பூலோகத்தில் உண்டு.

Apr 22, 2019

கட்டக்காலும் குழாக்கார காவாலிகளும்


ஃபுட் பாயிசன் தான் சாவுக்கு காரணம்? 
அழுகுன பன்னிக்கறிய ஒரு பொம்பள புத்தருக்கு கொடுத்துட்டாளாமே. அத சாப்பிட்டுத் தான் செத்தாராம்.
மதுரையில கறுப்பு பன்னிக்கறிய ’கட்டக்கால்’னு கம்மாக்கரையில சொல்வாய்ங்கே. மூல வியாதிக்கு மருந்து இந்த ’கட்டக்கால்’னு பேச்சு உண்டும்.
ஆரப்பாளையம் ரிக்‌ஷாக்காரன் நெட்ட ஆலமரத்தான் முள்ளுக்காட்டில வெளிக்கு போகும்போது பன்னிங்க மேஞ்சிக்கிட்டிருக்கும்.
இவன் குத்த வச்சிக்கிட்டே ஒரு பார்வை பாப்பான். பன்னி வளக்கிற ஆளுங்க பக்கத்தில இல்லன்னு தெரிஞ்சிக்க. எந்திரிச்சி ஒரு ரெண்டடி தள்ளி ஒக்காருவான்.
இவன் பேண்ட பீயில வாய வக்க வரும் சின்ன பன்னிக்குட்டிங்க.கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு பன்னிக்குட்டிய நாலு காலையும் சேத்துப்பிடிச்சி ஓங்கி தரையில் அடிப்பான். அத கைலிக்குள்ள போட்டு மடித்து கட்டிக்கொண்டு வீட்டுக்கு போயிருவான். அன்னக்கி ஆல வீட்டில கட்டக்கால் கறி கொழம்பு வாசன தூக்கி அடிக்கும்.
மதுர சல்லிங்க அப்பெல்லாம் பேண்ட் போட்ட கல்லூரி மாணவர்களை அடையாளமிட “ குழாகார காவாலிக”னு ஒரு வார்த்தையால சொல்வதுண்டு.
நல்லா ஸ்மார்ட்டா ஒரு கல்லூரி மாணவனை பாத்தா உடனே வாயில் வரும் வார்த்தை “ தாழன் ’சைஸ்’ சரியில்ல”.
வேட்டி கட்டாம, கைலி கட்டாம,
கால் சராய் குழாய் மாதிரி நீளமா மாட்டிக்கொண்டு கையில் ஒரு புத்தகம், நோட் புக்கோட கல்லூரிக்கு போகிறவன் “ குழாகார காவாலி”
”அப்பு டேய், குழாக்கார காவாலிங்க டேஞ்சர் டயாபாலிக்குடா. ஒன்னாம் நம்பர் பிக்காலிக.. சூதானமா பழகனும். நம்மள வில்லங்கத்துல மாட்டி விட்டுடுவானக” எச்சரிக்கை மணியடிப்பான் ஆட்டு மூக்கன்.
ஒத்தக்காதன் கையில நூறு ரூபா கொடுத்து ஒரு குழாகார காவாலி சில்லற மாத்திட்டு வரச்சொல்லியிருக்கான். ஆஹா.. அடிச்சிது லாட்டரின்னு கிளம்புன ஒத்தகாதன் ஆசைக்கனவில் மண்.
அடுத்த அரை மணி நேரத்தில் பி6 போலீஸ் ஸ்டேசனில் சந்தேகக் கேஸில் லாக் அப்பில் இருந்தான். “ ஏட்டயா, அடிக்காதீங்க ஏட்டயா” என்று மன்றாடும்படியாகி விட்டது.
’ஏதுடா உங்கிட்ட இந்த நூறு ரூபா.எங்க ஆட்டய போட்ட, உள்ளத சொல்லு’ விசாரணை கமிசன்.
ச்சே..குழாகார காவாலிக டேஞ்சர் டயாபாலிக்கு.
குழாக்கார காவாலி சினேகிதத்தை பெருமையாக நினைக்கிற சல்லிகளும் அன்று இல்லாமல் இல்லை.
கட்டக்கால் குழம்பு கறி கொடுத்து சல்லிகள் அன்னாரை கௌரவிப்பார்கள்.

Apr 18, 2019

ஒட்டு கேக்கறதும் ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி


பரபரப்பான செய்தி சேகரிப்பில் மீடியாவும்
விறுவிறுப்பாக தேர்தல் வாக்குப்பதிவும் நடந்து கொண்டிருக்கும் போது
ஒரு சேனலில் இருவர் உள்ளம் எம்.ஆர்.ராதா வசனம்

“இந்த நாட்டுல ஒட்டு கேக்கறதும், ஓட்டு கேக்கறதும் ஓவரா போச்சி’

......................
Rajanayahem in Harem pant and T-shirt.
Koothuppattarai Swing



Transformative Acting
Performance of R.P.Rajanayahem
in Elliot's beach SPACES on 31st March
....

ராஜ்குமார் பற்றிய என் பதிவை பார்த்ததன் விளைவு - குங்குமத்தில் அவர் பேட்டி.
”முகநூல் பதிவர் R.P.ராஜநாயஹம் எழுதிய பதிவு ஒன்று தான் மாஸ்டர் ராஜ்குமாரின் நினைவை மீட்டித்தந்தது” என்ற கதிர்வேலனின் குறிப்புடன். 


Apr 14, 2019

Funny and Wacky I.S.Johar


ஜோஹர் இந்தி நடிகர். ஹாலிவுட் படங்களில் கூட சின்ன ரோலில் தலை காட்டியிருக்கிறார். லாரன்ஸ் ஆஃப் அரேபியாவில் ஜோஹர் உண்டு.
கடைசி காலங்களில் ஃபிலிம் ஃபேர் பத்திரிக்கையில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி பிரபலம்.
His life was funny, weird and wacky.

இந்தர் செய்ன் ஜோஹர். தேவையில்லாமல் கரண் ஜோஹர் அப்பாவா இவர் என்று குழப்பிக்கொள்ள வேண்டாம். அப்படியெல்லாம் கிடையாது.
ஐ.எஸ். ஜோஹர் தம்பி யாஷ் ஜோஹர் மகன்
தான் கரண் ஜோஹர்.  
தேவ் ஆனந்த் ஜானி மேரா நாம் தமிழில் ராஜா வாக சிவாஜி நடித்து ரீமேக் செய்யப்பட்டது. அதில் இந்தியில் ஜோஹர் செய்த மூன்று சகோதரர்கள் ரோலை தமிழில் சந்திரபாபு செய்திருந்தார்.
ஜோஹர் பெரும்பாலும் இந்தி படங்களில் ஜோக்கர் தான்.
பாகிஸ்தானியான ஜோஹர் லாகூரில் இருக்கும்போதே ரமாவை மணந்து கொண்டு மும்பைக்கு இருவரும் வந்தவர்கள். சினிமாவுக்காக தான்.
குஷ்வந்த் சிங்கிற்கு லாகூரிலேயே அறிமுகமானவர்கள்.
ரமாவுக்கு ஜோஹர் வாழ்வு சலித்து, விவாகரத்து செய்து கொண்டு ஒரு உறவினரை திருமணம் செய்து கொண்டு அவரையும் ஒதுக்கி விட்டு மீண்டும் ஜோஹருடன் இணையாமல் தொடர்ந்து சந்தித்துக்கொண்டதுண்டு.
குஷ்வந்த் சிங் அப்போது இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் ஆசிரியராக இருந்த நேரம்.

ரமா நடத்திக்கொண்டிருந்த ஹெல்த் க்ளப்புக்கு குஷ்வந்த்சிங் போவார். அங்கிருந்து ஜோஹர் வீட்டுக்கு ரமாவுடன் செல்வார். குஷ்வந்த்சிங்குக்காக ஸ்காட்ச், மூவருக்கும் சாப்பிடுவதற்காக சைனிஷ் வகை உணவு வாங்கிக்கொண்டு ஜோஹர் வர வேண்டியிருக்கும். ஜோஹர் மனைவி ரமா அப்போது மனைவியல்ல. இரண்டாவது கணவரும் சலித்து வெறுத்திருந்த நிலை. ஒரு பெண் நாய் ஜோஹருடைய கம்பானியன் அப்போது. செல்ல நாய் பீனோ. அவருடைய மகள் போல.
ஜோஹர் தான் எழுதிய சுயசரிதை ஒன்றை இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் தொடராக வெளியிட முடியுமா? என்று கேட்டு குஷ்வந்த்சிங்கிடம் கொடுத்திருக்கிறார்.
ரொம்ப வேடிக்கையான சுயசரிதை. முதலாவதாக அதில் முதல் மனைவி ரமா பற்றி எதுவுமே எழுதப்பட்டிருக்கவில்லை.
12 வயதில் அவருக்கு செக்ஸ் அனுபவம் அவருடைய அத்தை முறையுள்ள ஒரு அம்மணியுடன். அத்தை இவரை குளிப்பாட்டி விட்ட போது சக்கரை வெடைத்து விரைத்து அதை எப்படி சாந்தப்படுத்த வேண்டும் என்ற வழி முறையை சொல்லித் தந்திருக்கிறாள்.
அந்த சுய சரிதையில் ஜோஹர் சொல்லும் மற்றொரு விஷயம் – வயதில் மூத்த பையன்கள் இவரை குண்டியடித்ததைப் பற்றி. குண்டியடிக்கப்பட்டது மிகப்பெரிய சுகானுபவமாய் ஜோஹருக்கு இருந்திருக்கிறது.
ஒரு பெண்ணோடு கொண்ட உடல் உறவு. அதன் பின் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட அவள் தங்கையை புணர்ந்தது. அதோடு இந்த சகோதரிகளின் தாயார் விருப்பப்பட்டு அம்மணமாய் இவருடைய படுக்கைக்கு வந்து விரக தாபத்தை வெளிப்படுத்தி பிச்சை கேட்ட போது அந்த அம்மணிக்கும் பரோபகாரமாக நெம்புகோலை விளக்கிய நிர்ப்பந்த நிகழ்வு.
இப்படி..இப்படி..
குஷ்வந்த்சிங்கிற்கு வியர்த்து விறுவிறுத்து விட்டது. ஒரு பத்திரிக்கையாசிரியராக அவர் இதை தொடராக வெளியிட்டால் பத்திரிக்கை உரிமையாளர்களின் கோபாக்னி எத்தகையதாய் இருக்க நேரும் என்று அவர் உணர்ந்ததால் ஜோஹரிடம் “ம்ஹும்..நான் மாட்டேன்..போ..” என்று தலையை மறுதலிக்கும் விதமாக ஆட்டியிருக்கிறார்.
“ச்சீ பச்சை துரோகி.. நீ ஒரு கோழை” என்று ஜோஹர் பொங்கியிருக்கிறார்.
இந்தி நடிகர் கபீர் பேடியும், அவருடைய மனைவி ஒடிஸ்ஸி நடனக்கலைஞர் ப்ரோதிமாவும் கலாச்சார மீறலுக்கு பெயர் போனவர்கள்.
ப்ரோதிமா பேடி ஜூஹு பீச்சில் நிர்வாணமாக ஓடுவார்.
”என் மனைவி ப்ரோதிமா ஒரு விபச்சாரி” என்று பகீரங்கமாக கபீர் பேடி பெருமைப்படுவார்.
பூஜா பேடியின் பெற்றோர்.
கபீர் பேடியை ஜேம்ஸ்பாண்ட் ரோஜர் மூரின் ஆக்டோபஸ்ஸியில் பார்க்கலாம்.
கபீர் பேடி, ப்ரோதிமா விவாகரத்து பெற்றார்கள்.
ஒரு நாள் ஐ.எஸ்.ஜோஹரிடமிருந்து உடனே தன்னுடைய வீட்டுக்கு வரச்சொல்லி குஷ்வந்திற்கு போன்.

ப்ரோதிமா பேடியுடன் ஜோஹர். வீட்டில் நிறைய பத்திரிக்கையாளர்கள். தகவல் கொடுத்து வரவழைத்திருக்கிறார்.
ப்ரோதிமா பேடியுடன் விரைவில் திருமணம். இருவருக்கும் அன்று நிச்சயதார்த்தம். ஐ.எஸ்.ஜோஹரை விட 28 வயது இளையவர் ப்ரோதிமா.
மறு நாள் பத்திரிக்கைகளின் அலறல் எப்படியிருந்திருக்கும்?
ஏன் ஜோஹர் உறவு என்பது பற்றி அப்போது ப்ரோதிமா சொன்ன வார்த்தைகள் “ It is nice to have Johar at my beck and call."
ஆனால் அந்த திருமணம் நடக்கவேயில்லை. Public Stunt.
ஜோஹர் ரமாவை தவிர நடிகை சோனியா சஹானியையும் திருமணம் செய்ததுண்டு.
அறுபத்து நான்கு வயதில் 1984ல் ஜோஹர் இறந்தார்.
ப்ரோதிமா ஆன்மீக வேட்கையில் சன்னியாசியாக மாறிவிட்டதாக சொன்னார். தலையை மொட்டை போட்டுக்கொண்டார். இமய மலை தன்னை அழைப்பதாகவே நம்பினார். ஆறுமுறை இமயமலை பயணம் செய்தவர். கடைசியில் 1998ல் ஐம்பதாவது வயதில் கைலாஷ் மான்சரோவர் யாத்திரையின் போது நிலச்சரிவில் சிக்கியவரின் உடல் கிடைக்கவில்லை.
ப்ரோதிமா பேடியை விவாகரத்து செய்த பின் கபீர் பேடி பரபரப்பான நடிகை பர்வீன் பாபியுடன் இருந்தார். அப்புறம் இன்னொரு பெண்.


 மூன்று வருடங்களுக்கு முன் தன் எழுபது வயதில், பர்வீண் துசாஞ்ச் என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். கபீர் பேடியை விட இவர் 29 வயது இளையவர்.




Apr 10, 2019

குட்டி பாப்பா


கி.ராஜநாராயணன் என்னிடம் சொன்னார் : ’குழந்தைய கவனிச்சிக்கிறதுக்கு பதிலா பிச்சையெடுக்கப்போகலாம்.’
ஆங்கிலத்தில் ஒரு இடியம் உண்டு.
Left holding the baby - அசௌகரியப்படுத்தப்படுவது. கூடுதல் வேலைப்பளுவால் சிரமப்படுத்தப்படுதல்.
கைக்குழந்தைகளை கவனித்துக்கொள்பவர் is made a scapegoat என்கிற அர்த்தம்.
இன்றைக்கு சீனியர் சிட்டிசன்களுக்கு தலை மேல் பாரம் பேரக்குழந்தைகளை கவனித்துக்கொள்வது.
இப்படி கி.ரா.வின் ஒரு சஹிருதயர் தன் இரு மகன்களும், மருமகள்களும் வேலைக்கு செல்வதால் தானும் தன் மனைவியும் கூடுதல் பளுவால் அனுபவிக்கும் பெருந்துயராக, அவர்களின் கைக்குழந்தைகளை கவனிக்க வேண்டிய பெரும் பொறுப்பைப்பற்றி சொன்னதை என்னிடம் விவரித்தார். ஆயாச பெருமூச்சுடன் அந்த பெரிய மனிதர் ஈனஸ்வரத்தில் நொந்து கொண்டாராம். 
கி.ரா பட்டென்று உடைத்து, வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டாக (அவரிடம் சொல்லாமல்), என்னிடம் சொன்னார்” குழந்தைய கவனிச்சிக்கிறதுக்கு பதிலா பிச்சையெடுக்கப் போகலாம்.”
எனக்கும் தெரிந்தவர் தான். அவர் இப்போது உயிரோடு இல்லை.
நன்றாக நினைவிருக்கிறது. தன் பிள்ளைகளுக்கு கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்த விஷயத்தையெல்லாம் என்னிடம் எவ்வளவோ சந்தோஷமாக சொல்லியிருக்கிறார்.
கிருஷ்ணன் நம்பி எழுதிய ‘விளையாட்டுத்தோழர்கள்’ கதையில் ஒரு குட்டிப் பாப்பா தான் வில்லன்.
சிறுவன் சங்காவின் இடது கால் குதிரைச் சதையில் பாப்பாவின் ஐந்து பற்கள். அழுந்த நெரித்து இறுக்கிய பிடிவாத பாப்பாவின் பற்கள்.

’பாட்டியா வீட்டில் குழந்தை காட்சி’ சுவாரசியமான தி.ஜானகிராமனின் சிறுகதை.
எழுத்தாளர் சி.ஆர். ராஜம்மா பெற்ற ஒரு பச்சைக்குழந்தை,தாயின் பூ விழுந்த கண்ணை பிய்த்து வெளியே எடுத்து விட்டது.
சும்மா ’சுகமான சுமை’ என்று பீற்றிக்கொண்டு பேரப்பிள்ளைப்பீய அள்ளலாம்.ஆனால் யதார்த்தம் வேறு.
சாரு நிவேதிதா ‘குழந்தைகளை எனக்குப் பிடிக்காது’ என்று ஒரு கட்டுரை எழுதியதுண்டு.



Apr 9, 2019

Don't get their goat


பாண்டிச்சேரியில் முப்பது வருடங்களுக்கு முன் நான்கைந்து பேராக பேசிக்கொண்டிருந்த வேளையில்
ஒரு சனாதனி துவேசத்துடன் சுள்ளென்று முகம் சுண்டி கொப்பளித்தார் “ அவன் மாட்டுக்கறி சாப்பிடுறவன். மாட்டுக்கறி சாப்பிட்டா மாட்டுப்புத்தி தானே இருக்கும். மனுஷன் புத்திய மாட்டுக்கறி சாப்பிடறவன் கிட்ட எப்படி எதிர் பார்க்க முடியும்? “
நான் அவரிடம் கேட்டேன்: மாட்டு பால், மாட்டு தயிர், மாட்டு நெய், மாட்டு மோர், இதெல்லாம் சாப்பிடறவனுக்கெல்லாம் மாட்டு புத்தி வராதா?. கோமியம்னு மாட்டு மூத்திரத்த கொண்டாடி கொடமொடக்கிறவனுக்கெல்லாம் மாட்டு புத்தி வரவே வராதா?”
Why do you get their goat?



Apr 4, 2019

கமலும் அவலும் உமியும்


கமல் தன் கட்சி திரினாமுல் காங்கிரஸோட கூட்டு சேர்ந்திருப்பதாக அறிவித்த விஷயம்..
Strange!
பலருக்கு நினைவிருக்குமா என்பது சந்தேகம். அப்படியா என்று கேட்பவர்களும் நிறைய.

மம்தா பானர்ஜி கூந்தல விரிச்சிப் போட்டு,சிலம்பை தூக்கிப் போட்டு  உடைச்சி,
ஒத்த முலையை பிச்சி வீசி 
"புரபசர் அம்பிகேஷ் மகாபத்ரா ஈமெயிலில் சர்குலேட் செய்த கார்ட்டூன்  எனக்கு விடப்பட்ட ஒரு கொலை மிரட்டல்"ன்னு
 ஒப்பாரி வச்சத இன்னிக்கும் மறக்க முடியுமா?
தொகுதி உடன்பாடுக்கு வழியே இல்லாத வினோத கூட்டணி. வாக்கு பொறுக்கவாவது வழியுண்டா?
கமல் தனக்குன்னு ஒரு பாணி வச்சு முத்திரைய குத்தியிருக்கார்?
எதற்கு கூட்டணி? என்ன பயன்பாடு?
He must get his head out of the clouds.

’நானும் மத்தவங்க மாதிரி ஒரு கூட்டணி போட்டிருக்கேன் பாருங்க. நானும் தான் நண்டு வலையில இருக்கேன்.’
தே.மு.தி.க வோட கூட்டணி சேரத்தயார் என்று சொன்னவர் தானே. 
டி.டி.வி. தினகரனோடு கூட சேர நினைத்தார் என்றெல்லாம் அரசல் புரசலாக காதில் விழுந்தது. அதுவும் உண்மையென்றால்
Yoo too Kamal?
அந்த மமதா அம்மாவாவது ‘போப்பா, போ. ஒன் துருத்திய நீ ஊது. என் துருத்திய நான் ஊதிக்கிறேன்.போ’ன்னு சொல்லிச்சான்னா, அது இல்ல.
அந்தமானுக்கு போய் திரினாமுல் காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்யப்போவதாகவும் உற்சாகமாக கூறி விட்டார்.
ஒரு கேள்வி. மமதா பானர்ஜி சென்னப்பட்டணத்திற்கு ஒரு நாள் மக்கள் நீதி மய்யத்திற்காக பிரச்சாரம் செய்ய வருவாரா? ’வருவார், பிரச்சாரம் என் கட்சிக்காக செய்வார்’ என்று கமல் கூற முடிந்தால் சந்தோஷம். இல்லையென்றால் கூட்டணி ஒரு வான வேடிக்கை stunt தான்.
மமதா : ”நீ அவல் கொண்டு வா. நான் உமி தர்றேன். ரெண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடுவோம்.”
கமல் வேட்பாளராக தானே களத்தில் இறங்கியிருக்க வேண்டும். வெற்றி இல்லாமல் போய் விட்டாலும் வாக்கு சதவீதம் கட்சிக்கு இதனால் அதிகரிக்க வாய்ப்பு இருந்திருக்கும்.
Politicians are shameless with their deeds, they exploit each other and the people in their own way.

Apr 3, 2019

Ongoing

வடிவேலு தீர்க்கதரிசனம்
எண்ணமும் செயலும் நல்லாயிருந்தா கன்னம் ‘பன்னு’ மாதிரியாகி தேஜஸாயிடும்டா
....

Vadivelu Black humour

வர வர உங்க வேர்டல்லாம் ரொம்ப பேடா இருக்குடா

.....


அந்தமானை பாருங்கள் அழகு
கூரையேறி கோழி பிடிக்கறத விட வானமேறி வைகுண்டம் போறது தான் சௌகரியம்
ரொம்ப முக்கியம்


............

அதிகார பிச்சை
இது தாங்க அதிகார பிச்சை!

’ஓட்டு போட்டா போடுங்க..போடாட்டி போங்க’

Apr 2, 2019

இயக்குநர் மகேந்திரன்


1989ம் வருடம். தி.ஜானகிராமனின் மோகமுள் நாவலை படமாக்க வேண்டும் என்ற வேட்கையில் பல காலமாக இருந்த மகேந்திரன் அதற்கான முயற்சியில் தி.ஜாவின் மூத்த மகன் சாகேதராமனை சந்திக்க சென்னை வரும்படி சொன்னார். 

சாகேதராமன் இது குறித்து மணிக்கொடி சிட்டியிடம் ஆலோசனை கேட்டார். தன்னுடன் மகேந்திரனை சந்திக்க சிட்டி உடன் வரமுடியுமா? என்று கேட்டார். நாவலை படமெடுக்க மகேந்திரனிடம் என்ன தொகை கேட்கலாம் என்று அவருக்கு குழப்பம் இருந்திருக்கிறது. சிட்டி “ monetary groundsல் நீ பேச வேண்டியிருப்பதால் நான் வர விரும்பவில்லை” என்று சொல்லி விட்டார். இதை அப்போது சிட்டி என்னிடம் தெரிவித்தார்.
சாகேதராமன் டெல்லியில் இருந்து சென்னை வந்து மகேந்திரனை சந்தித்தார். முப்பதாயிரம் தொகை நாவலுக்காக தரப்பட்டிருக்கிறது.
இதையும் சிட்டி என்னிடம் சொன்னார்.

அப்போது மகேந்திரனுக்கு விநியோகஸ்தர்களிடம், ஃபைனான்சியர்களிடம், தயாரிப்பாளர்களிடம் பெரும் மதிப்பு ஏதும் இருந்திருக்கவில்லை. அவரால் மோகமுள் படத்தை இயக்கவே சூழல் வாய்க்காமல் போய் விட்டது.
அதன் பின்னர் ஞான ராஜசேகரன் இயக்கத்தில் மோகமுள் வெளி வந்த போது அந்தப் படத்தை மகேந்திரன் பார்க்கவில்லை.
அவருடைய மன அவசம். “ நான் திரைப்படமாக உருவாக்கியிருக்க ஏங்கியிருந்த ஒரு நாவல் தி.ஜானகிராமனின் மோகமுள். அதை எப்படியெல்லாம் காட்சிப்படுத்த வேண்டும் என்று எவ்வளவு திட்டம் தீட்டியிருப்பேன். அந்த காவியத்தை இன்னொருவர் இயக்கத்தில் பார்க்க என் மனம் ஒப்பவில்லை.”
அலெக்ஸாண்டர் என்ற மகேந்திரன்.

 நாம் மூவர், சபாஷ் தம்பி,  பணக்காரப்பிள்ளை படங்களுக்கெல்லாம் கதை பங்களிப்பு இவருடையது தான். ஜம்பு இயக்கிய பாலன் பிக்சர்ஸ் படங்கள். 
 சோ திரைக்கதை வசனம் எழுதிய நிறைகுடம் படத்தின் மூலக்கதை மகேந்திரன் தான்.
இவர் வசனம் எழுதிய வெற்றிகரமான நாடகம் ’தங்கப்பதக்கம்’ திரைப்படமானது.
மகேந்திரன் ஒரு ஜர்னலிஸ்ட். சோவின் துக்ளக் பத்திரிக்கையில் பணி புரிந்திருக்கிறார்.
அவர் ஒருமுறை சொன்ன ஒரு ஆங்கில வாக்கியம். அவரே யோசித்து சொன்னாரா? ஒரு மேற்கோளா? தெரியவில்லை.
“ Life is like a snooker game. You hit one. That ball hits another. Ultimately some other ball gets into the pocket.”
பாரதிராஜாவுக்கும் பாக்யராஜுக்கும், எஸ்.பி.முத்துராமனுக்கும் இருந்த கமெர்சியல் வேல்யு மகேந்திரனுக்கு இருந்ததில்லை. கை கொடுக்கும் கையாக ரஜினி தந்த வாய்ப்பும் சோபிக்கவில்லை.
ரொம்ப காலம் கழித்து கே.பாலச்சந்தர் “ உனக்குப்பிடித்த இயக்குநர்?” கேள்விக்கு
“மகேந்திரன்” என்று ரஜினி உடனே, உடனே சொன்னதை எல்லோரும் பார்க்க முடிந்தது. பாலச்சந்தர் “ பாத்தியா? என் பேர சொல்ல மாட்டேங்கிற.”
ரஜினி இன்னும்  கூட  கொஞ்சம் கை கொடுத்து தூக்கி விட்டிருக்கலாமே. IFS and BUTS.
ரொம்ப வருடங்களுக்கு முன் ’விண் நாயகன்’ என்ற பத்திரிக்கையில் அனைத்து ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சத்யநாராயணன் என்பவர் ‘ரஜினிக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் தி.ஜானகிராமன். அவருடைய எல்லா நாவல்களையும் ரஜினி படித்திருக்கிறார்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது உண்மை தானா?

கமலும் மகேந்திரனும் ஏன் இணையவில்லை. 
கமலின் நிராகரிப்பா? மகேந்திரனின் புறக்கணிப்பா? அல்லது இணைந்து செயலாற்ற நினைத்தும் ஈடேறவில்லையா?
மகேந்திரனின் உறவினர் தான் ராஜேஷ். தன்னை மகேந்திரன் நிராகரித்து புறக்கணிப்பதாக வருத்தப்படாமல் இருந்திருக்க முடியாது. நடிக்க வாய்ப்பு ரொம்ப காலம் கழித்து ’மெட்டி’யில் தான் கொடுத்தார்.
முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள் எத்தனை முறை சலிக்காமல் பார்க்க முடிந்திருக்கிறது. இன்று கணக்கெடுக்க முடியவில்லை. ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே கூட.

Apr 1, 2019

Sad Sorrows

Proud and rich people breed sad sorrows not only for themselves.
வறுமையும் ஏழ்மையும் எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டங்கள் பல.
கவித இல்லீங்க்க்கங்க்க்க்கோ..
துன்பக்கத, துலாபாரம்..
சொந்தக் கத, சோகக்கத
’ஏழை எளியவர்களுக்கு
கொடுத்து வைக்காத
பல விஷயங்களில் ஒன்று
ஐ.ட்டி ரெய்டு ’

...

டி.விய ஆன் பண்ணாலே மொட்டயன் ரொம்ப கனிவா 
உழச்ச பணத்துக்கு கவனமா நகை வாங்க சொல்லி அனத்துறான்.
போடா.. ஒழச்சா சாப்பாட்டுக்கு, வீட்டு வாடகைக்கு தான் பட்ஜெட் சரியாருக்கு. வயித்தெரிச்சல். 
நகை சீட்டு கட்ட பணம் எங்கடா இருக்கு?

https://rprajanayahem.blogspot.com/…/we-have-aweful-time-to