Share

Dec 31, 2022

தாத்தாவ சின்ன பாப்பாவா வரஞ்ச பேத்தி


பூக்குட்டி:
"தாத்தா, இங்க பாரு.. 
ஒன்ன சின்னப்பாப்பாவா
 நான் வரஞ்சிருக்கேன் பாரு"



Dec 25, 2022

Ignored by some design

"You are playing in a league that does not recognise you Mr.R.P.R.

Your writings are really on  top league. Somehow you are ignored by some design.

(I wonder how someone like you would have been in desolation if not for the new age tech driven social media)"

 - Sivakumar Viswanathan

https://m.facebook.com/story.php?story_fbid=3495043614042413&id=100006104256328&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3502122950001146&id=100006104256328&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3496069363939838&id=100006104256328&mibextid=Nif5oz

https://www.facebook.com/100006104256328/posts/3489356294611145/?mibextid=Nif5oz

Dec 21, 2022

கானல் 'பொய்'கை



1986ம் வருடம். என் அப்பா அழைப்பதாக அவருடைய ஆபிஸில் இருந்து போன் வந்தது.
 திருச்சி பாலாஜி தியேட்டரை ஒட்டிய ராஜா காலனி வீட்டில் இருந்து கிளம்பி போனேன்.

 அப்போது சைல்ட் ஜீசஸ் ஆஸ்பிட்டலுக்கு எதிரே இருந்த கஸ்டம்ஸ் ஆபிஸ். 
அப்பா சூப்ரிண்ட் ஆஃப் கஸ்டம்ஸ்.

அப்பாவின் கேபினில் நுழைந்தேன்.
அப்பா முன் ஒருவர் அமர்ந்திருந்தார். 
அப்பா “ இவர் யார் தெரியுமா? 
பாக்யராஜின் அண்ணன் தன்ராஜ்.”

அப்பா காரணத்தோடு தான் என்னை அழைத்திருக்கிறார்.

நான் ஹிண்டு ரங்கராஜன் தயாரித்த ‘அழைத்தால் வருவேன்’ படத்தில் உதவி இயக்குனராய் வேலை பார்த்ததை பாக்யராஜின் அண்ணனிடம் சொல்லியிருக்கிறார்.
 ‘என் பையனை உங்க தம்பியிடம் சேர்த்து விடுங்கள்’ என்று சொன்ன பின்பு தான் என்னை ஆஃபிஸிற்கு வரச்சொல்லியிருக்கிறார்.

தன்ராஜ் உடனே “ இவர் தானா உங்கள் மகன் ராஜநாயஹம். கவலைப்படாதீர்கள். நான் என் தம்பி கிட்ட சொல்லி இவரை அஸிஸ்டண்ட் டைரக்டரா சேத்து விட்டுடுறேன்.”

உடனே தன் தம்பிக்கு என்னை அவருடைய அஸிஸ்டண்டாக சேர்த்துக்கொள்ளச்சொல்லி பிரமாதமான கடிதம் அங்கேயே ஆங்கிலத்தில் எழுதி என்னிடம் கொடுத்தார். 

Rajanayahem’s father is wellknown to me. He is very helpful to me…….. இப்படி..இப்படி.

”நீங்கள் இந்த கடிதத்தை கொடுங்கள். நான் பத்து நாளில் சென்னை வருவேன். அப்போது நேரடியாகவே நானும் தம்பியிடம் சொல்வேன். இனி உங்களுக்கு நல்ல எதிர்காலம்.”

தன்ராஜ் கோவையில் நடத்தி வந்த வீடியோ கேஸட் கடை மீது அப்போது ஒரு கஸ்டம்ஸ் கேஸ்.

தன்ராஜ் ரொம்ப உற்சாகமாக என்னிடம் பேசினார்.
நான் சென்னை போகவில்லை. 
பாக்யராஜிடம் சேரவுமில்லை.

அன்றைய மன நிலை. மீண்டும் சினிமாவுக்கு போக வேண்டுமா? Once bitten twice shy. வேண்டாம்.

....................

1992ம் வருடம் மார்ச் மாதம் பள்ளபட்டி பெரிய சேட்டு என்னை ஃபெமினா ஹோட்டலில் ரிஸப்சனிஸ்டாக பார்க்கிறார்.
“ Gabie! It’s a pleasant surprise.”
சென்னை போனவுடன் பெரிய சேட்டு போன் “ எனக்கு உன்னை ரிஸப்சனிஸ்டாக பார்த்தது பிடிக்கவில்லை.”
நான் வேலைக்கு சேர்ந்து அந்த ஐந்தாவது மாதம் ரிஸைன் செய்து விட்டேன்.
அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘ There is always trial and error.’

அந்த கடிதத்தை அவருடைய நண்பர் போலீஸ் டெபுடி கமிஷனர் பாஸ்கர் படித்திருக்கிறார். திரும்ப திரும்ப அந்த கடிதத்தை ரசித்து படித்திருக்கிறார்.

மே மாதம் முதல் வாரம் மீண்டும் பெரிய சேட்டு போன்.

“ நீ உடனே கிளம்பி சென்னை வா. பாக்யராஜ் உன்னை சந்திக்க விரும்புகிறார்.”

டெபுடி கமிஷனருக்கும், பெரிய சேட்டு ஃப்ரூக் இருவருக்குமே பாக்யராஜ் நண்பர். 

மூன்று பேரும் பேசிக்கொண்டிருக்கும் போது பாக்யராஜ் “ பாக்யா பத்திரிக்கையிலிருந்து சஞ்சீவி விலகி விட்டார். எம்.ஜி.வல்லபனை எடிட்டோரியலில் போட்டிருக்கிறேன். ஒரு நல்ல ஆள் பத்திரிக்கைக்கு தேவை.”

உடனே ஃபரூக் ” என் தம்பியுடைய க்ளாஸ்மேட் ஒருவன் இருக்கிறான். ராஜநாயஹம். இலக்கியமெல்லாம் கரைத்து குடித்தவன்.”

உடனே பாஸ்கர் “யாரை சொல்றீங்க?”
ஃபரூக் “ அந்த ட்ரையல் அண்ட் எர்ரர் கடிதம் எழுதியிருந்தானே”

“ ஓ அந்த பையனா? 
பாக்யராஜ், நானே ரெகமண்ட் செய்கிறேன்.
 அவன் எழுதிய கடிதம் நான் படித்து அசந்து போனேன். அப்படி ஆள் தான் பாக்யாவுக்கு தேவை.”. 

பாக்யராஜ் “ உடனே ராஜநாயஹத்தை அழைத்து வாருங்கள். பத்திரிக்கை எடிட்டிங் லைனில் சேர்த்துக்கொள்கிறேன்.”

பாக்யா பத்திரிக்கை பார்த்திருக்கிறேன். கணையாழி, நடை, கசடதபற, பிரக்ஞை, ஞானரதம் போன்ற பத்திரிக்கைகளின் வாசகன் நான். பாக்யா பத்திரிக்கையில் சேர்வதா?

முடியாது. மறுத்து விட்டேன். 

அவரிடம் அசிஸ்டண்ட் டைரக்டராக வேண்டுமானால் சேர்கிறேன்.

 பெரிய சேட்டு விடவில்லை. “ வாப்பா நீ மொதல்ல.”

மே 19ம் தேதி சென்னை போய் விட்டேன். 

பெரிய சேட்டு என்னிடம் சொன்னார் “ பாக்யராஜ் ‘அம்மா வந்தாச்சு’ ஷூட்டிங்குக்காக பாம்பே போயிருக்கிறார். எப்ப வருவாரோ? பொறுமையா இரு. ஒரு வேளை அவரை நீ சந்திக்க ஒரு மாசம் கூட ஆகலாம்.”

மறு நாள் பரபரப்பான திருப்பம். பாக்யராஜ் சென்னை வந்து விட்டார். 
அது கூட திருப்பம் என்று சொல்ல முடியாது. 

அன்று மாலை அவர் அண்ணன் தன்ராஜை கோவையில் வீடியோ கேஸில் அரஸ்ட் செய்து விட்ட செய்தி பாக்யராஜுக்கு வந்தது. 

உடனே சென்னையில் தன் நண்பர் 
டெபுடி கமிஷனருக்கு போன் போட்டு சொல்கிறார்.
 பாக்யராஜ் ரொம்ப மன உளைச்சலில். 

காரணம் அரெஸ்ட் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தான் பாக்யராஜின் அண்ணன் என்பதை தனராஜ் வெளிப்படுத்தியிருக்கிறார்.

 ஆனால் அந்த இன்ஸ்பெக்டர்
 “ நீ எவனா இருந்தா எனக்கென்ன?” என்று சொல்லி விட்டார்.

பாக்யராஜ் புலம்பல் – “ இந்த வீடியோ கடை பிஸினஸ் வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னேன். என் அண்ணன் கேட்கவில்லை. இப்போது இப்படியாகி விட்டதே.”

இங்கிருந்து பாஸ்கர் கோவைக்கு போன் செய்து ஒரு வழியாக தன்ராஜ் லாக் அப்பில் இருந்து வெளிவர நள்ளிரவு தாண்டி விட்டது.

பாஸ்கரும் ஃபரூக்கும் பாக்யராஜை தேற்ற விரும்பியிருக்கிறார்கள். 
பாஸ்கர் தன் ஆஃபிஸிற்கே வரச்சொல்லியிருக்கிறார்.

நள்ளிரவில் பாக்யராஜ் பாஸ்கரையும் ஃபரூக்கையும் சந்தித்தவுடன் கொஞ்ச நேரத்தில் பாஸ்கரே சொல்லியிருக்கிறார்.“ ராஜநாயஹம் வந்தாச்சு. “

பாக்யராஜ் என்ன சொல்ல முடியும்! ”நாளை காலை பத்து மணிக்கு பாக்யா ஆஃபிஸ்க்கு அழைத்து வாருங்கள்.”

21ம் தேதி காலை ஃபரூக் பைக்கில் 
தி. நகர் கிளம்பிப் போனோம். 

அங்கே உடனே வள்ளுவர் கோட்டத்தையொட்டியிருக்கும் லேக் ஏரியா வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.

“ உங்களை பாக்யா பத்திரிக்கைக்காகத்தான் அழைத்தேன்.”

நான் “ இல்ல சார். நான் மூவி மீடியாவிற்குத் தான் வர விரும்புகிறேன்.”

”நிறைய அஸிஸ்டண்ட்ஸ் இருக்காங்க.”

”பால்ல சக்கரை மாதிரி கரைஞ்சிடுறேன்.”

இரண்டு மணி நேரத்திற்கு மேல் என்னை பரிசோதித்தார்.
பின் அவருடைய பிரபல டயலாக்கில் சொன்னார் – “ சரி. ஜோதியில ஐக்கியமாகிடுங்க”

மீண்டும் 23ம் தேதி மாலை ஐந்து மணி முதல் பதினொரு மணி வரை என்னை பேச விட்டு கேட்டுக்கொண்டிருந்தார்.

வேறு யாரையும் அப்போது சந்திக்க மறுத்தார். கவிஞர் வாலி வந்திருப்பதாக தகவல் சொல்லப்பட்ட போது அவரை மறு நாள் சந்திப்பதாக சொல்ல சொன்னார்.

 அப்போது ஆஃபிஸில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ( பழைய ’முந்தானை முடிச்சு’ அசோசியேட் டைரக்டர்)  இளமுருகு, தன் மனைவி, மாமனாருடன் சந்திக்க முயன்றார். “ம்ஹூம்.” மறுத்து விட்டார்.

பாக்யா ஆஃபிஸில் எல்லோரும் இதை ஆச்சரியத்துடன் கவனித்துக்கொண்டிருந்தார்கள். 

இளமுருகு கமெண்ட்
“ராஜநாயஹத்தை நம்ம டைரக்டர் பம்ப் செட் போட்டு உறிஞ்சிக்கொண்டிருக்கிறார்!”

பிறகு பாக்யா ஆஃபிஸில் ஒரு நாள் 
தன்ராஜை சந்தித்தேன். 

அவர் கொடுத்த கடிதம் பற்றி ஞாபகப்படுத்தினேன். ஆர்வமாக கேட்டார். ”அப்பா எப்படியிருக்காங்க!”

இப்போது டெபுடி கமிஷனர் பாஸ்கர் மூலமாக பாக்யராஜிடம் சேர்ந்திருக்கிற விஷயத்தை சொன்னேன்.

தன்ராஜ் “ எல்லாத்துக்குமே ஒரு நேரம் வர வேண்டியிருக்குதுல்லங்க”

அப்போது பாக்யராஜின் கார் ஆஃபீஸில் நுழைந்தது.
பாக்யராஜ் காரில் இருந்து மனைவி பூர்ணிமாவுடன் இறங்கியதும் என்னுடன் நின்ற தன் அண்ணனைப் பார்த்து விட்டு கேட்ட கேள்வி
“ தனம், நீ எப்ப வந்த?”

ஓ, தன்ராஜ் சென்னை வந்தால் பாக்யராஜ் பங்களாவிற்கு வருவதில்லை போலிருக்கிறது. ஹோட்டலில் தான் தங்குகிறாரா?

ஐந்து மாதம் ’ராசுக்குட்டி’யில் குப்பை கொட்டி விட்டு நான் கிளம்பும்படியானது. சினிமாவில் என்னுடைய இரண்டாவது எண்ட்ரி பிரமாதமான தோல்வி. 
A successful failure!

ஆறு வருடங்களுக்கு முன் தன்ராஜ் கொடுத்த கடிதத்தை ராசுக்குட்டி தீபாவளி ரிலீஸுக்குப் பின் டிசம்பர் மாதம் ’கடைசியாக’ பாக்யராஜை அவர் வீட்டில் சந்தித்த போது தான் கொடுத்தேன். 
படித்துப் பார்த்து விட்டு சிந்தனையில் சில நிமிடம் கழித்த பின் திருவாய் மலர்ந்தார் “ அது தான் வந்துட்டிங்களே”
திரும்ப பாக்யராஜை சந்தித்ததேயில்லை.

...........

2006ல் திருப்பூரில் கார்மெண்ட்ஸில் வேலை செய்து கொண்டிருந்த போது 
மதியம் சாப்பிட்டு விட்டு ஆஃபிஸ் திரும்பும்போது ராக்கியாபாளையம் பிரிவில் 
பாக்யராஜ் வேனில் நின்றவாறு மைக் பிடித்து பேசிக்கொண்டிருந்தார். தி.மு.க தேர்தல் பிரச்சாரம். திருப்பூர் மாநகராட்சி தேர்தல்.
 பிரச்சார வேனை சுற்றி சின்ன கும்பல்.

நான் ஸ்கூட்டரில் சென்றவாறே 
மிக அருகில் பாக்யராஜை பார்த்துக்கொண்டே 
சினி பார்க் ரோட்டில் திரும்பினேன். 
அந்த ரோட்டில் ஸ்கூட்டர் திரும்புவதற்கு 
பாக்யராஜ் நின்று பேசிக்கொண்டிருந்த வேனையொட்டித்தான் செல்ல வேண்டியிருந்தது.

..... 

http://rprajanayahem.blogspot.com/2012/07/blog-post_29.html?m=1

https://m.facebook.com/story.php?story_fbid=2545541742325943&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=2600457206834396&id=100006104256328

https://www.facebook.com/100006104256328/posts/2602308816649235/?mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=2602432963303487&id=100006104256328&mibextid=Nif5oz

...............

Dec 18, 2022

ஊத்துக்காடு சைவ கீர்த்தனை

ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் கிருஷ்ண பக்தி ஜெகப்பிரசித்தம்.


வெங்கட சுப்பையரின் 
சுத்த சைவ கீர்த்தனை -
அறுபத்து மூன்று நாயன்மார்களின் பெயர்களும் வரும்.

பரஸ் ராகம்

" ஆளாவதென்னாளோ? 
சிவமே, 
உன் அடியார்க்கு அடியார்க்கு அடியனாய் ஆளாவதென்னாளோ?"

அருணா சாய்ராம் பாடி பிரபலப்படுத்திய பாடலை 
வழக்கறிஞர் சுமதி கவனப்படுத்தியதற்கு மகிழ்ச்சி.
முதல் முறையாக
இப்போது கேட்டுத் திளைத்தேன்.


'GABIE' alias R.P.Rajanayahem - Prof Late. Fazlullah Khan

'GABIE' alias R.P. Rajanayahem
Linguistic Scholar
 Professor Late. Fazlullah Khan :

"He was fondly known as Gabie among us friends. He would make us all laugh, and everyone used to enjoy his company. He was a treasure trove of information. 
 He knew to sing and dance and speak long dialogues of famous actors. 
He was cut out for the field of entertainment. 

Now I see him active on FB, a very resourceful and entertaining writer, with a unique style. Bravo Gabie."

- Fazlullah Khan

https://rprajanayahem.blogspot.com/2020/03/mohamed-fazlulla-khan-on-rprajanayahem.html?m=1

Dec 16, 2022

R.P.ராஜநாயஹம் 'காரணச்செறிவு' நூல் முன்னுரை - சரவணன் மாணிக்கவாசகம்


சரவணன் மாணிக்கவாசகம்:

'காரணச்செறிவு' என்ற தலைப்பில் தோழர் R.P. ராஜநாயஹத்தின் அடுத்த நூல் விரைவில் வர இருக்கிறது. மேலதிகத் தகவல்கள் விரைவில் பகிரப்படும்  அந்த நூலுக்கான எனது முன்னுரை உங்கள் பார்வைக்கு:



அசைவறு மதிகேட்டேன்.

நல்ல கவிதைகள் அடையாளம் கண்டுபிடிக்கப்படாமல் போவதன் காரணம், கும்பலில் தொலைந்து போவது.  சமீபகாலத்தில் சிறுகதைகளும், நாவல்களும் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் சராசரிக்கு மேலிருப்பதைக் கண்டுபிடித்தல் எளிது. எது எப்படியாயினும் இந்த மூன்றையும் எழுதுபவர்கள், எழுத்தின் தரம் பார்க்கப்படாமலேயே கவிஞர், எழுத்தாளர் என்று பெயரிடப்படுகிறார்கள். 
 

R.P. ராஜநாயஹம்  முப்பது வருடங்களுக்கு மேலாக  எழுதிக் கொண்டிருக்கிறார். 

 இலக்கியம், தத்துவம், அரசியல், கலை, சினிமா போன்று, இவர் எழுதாத விஷயங்களே இல்லை என்று சொல்லலாம்.  எழுத்திலும் தனக்கென தனித்துவ மொழியில்,  நினைவுகளின் அழகியலைக் கொண்டு வருபவர். முக்கிய எழுத்தாளர்கள் என்று யார் பட்டியல் கொண்டு வந்தாலும் அதில் ராஜநாயஹத்தின் பெயர் இல்லாதிருப்பது ஒரு முரண். இவ்வளவிற்கும் பல எழுத்தாளர்கள், ராஜநாயஹத்தின் எழுத்தைப் பலமுறை பாராட்டியிருக்கிறார்கள். உள்ளடக்கத்தை மட்டும் வைத்து, தரம் நிர்ணயிக்கும் வாசகர்கள் கணிசமான அளவு சேரும்பொழுது, ராஜநாயஹத்தின் இலக்கியஇடம் வேறாக இருக்கும்.

Jump-cut method இவர் எழுத்துகளில் அதிகம் காணப்படுவது. உதாரணத்திற்கு எழுத்து-புரிதல் என்ற கட்டுரையை எடுத்துக் கொண்டால், ஹெகல்-கான்ட்- கான்ராட்- Mann- பார்த்- பூக்கோ- தெரிதா என்று கடந்து ழாக் லக்கானில் நிறைவுறுகிறது.  இவ்வளவிற்கும் இது பத்து வரிகளில் அடங்கும் கட்டுரை.  அநேகமாக இவரது எல்லாக் கட்டுரைகளிலுமே நினைவுகளின் தாவல் இயல்பாக நடந்து கொண்டே இருக்கிறது.

நகைச்சுவை இவரது எழுத்துகளில் எப்போதும் விரவிக் கிடப்பது.  'கெட்ட வார்த்த ஏசு சாமி' போல வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை, எவனோ சிரிச்சுக்கிட்டே செத்திருக்கிறான் என்ற நாகேஷின் புன்னகைக்க வைக்கும் நகைச்சுவை,  அசோகமித்ரனின் 'என்ன ஒரு உழைப்பு' என்ற நுட்பமான நகைச்சுவை  என்று எல்லாவிதமானவையும் இவரது எழுத்துகளில் தோரணமாகி இருக்கும்.

Quotes இவரது எழுத்துகளை அலங்கரிக்க அங்கங்கே கலந்து இருக்கும். எமிலியின்
'Proud people breed sad sorrows' ஆக இருக்கட்டும், பூமித்தோலில் அழகுத்தேமல் என்ற பிரமிளின் கவிதை வரிகளாகட்டும், 
Life is a walking shadow என்ற ஷேக்ஸ்பியரின்
மேற்கோள்கள், 'வானவில் கனவுகள் நிறமிழந்து விட்டது தெரிகிறது' என்ற சுஜாதாவின் வரிகள் என்று ஏராளமான Quotes இவர் எழுத்தினிடையே வந்து கொண்டே இருக்கும்.

தத்துவார்த்தத்தையும், இலக்கியத்தையும் இவரிடமிருந்து பிரிக்கவே இயலாது.  Profanityஐ நகைச்சுவையின் அழுத்தத்தைக்கூட்ட உபயோகிப்பது இவரது வழக்கம்.  காரணச்செறிவு என்ற இந்த நூல் இவரது கலவையான எழுத்துகளின் சோற்றின் பதமாக எடுத்துக் கொள்ளலாம். எல்லாமும் இருக்கின்றன இந்த நூலில். எல்லாவற்றிற்கும் மேல் ராஜநாயஹம் தெளிவாகத் தெரிகிறார்.


http://saravananmanickavasagam.in/2022/12/16/%e0%ae%85%e0%ae%9a%e0%af%88%e0%ae%b5%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%87%e0%ae%a9%e0%af%8d/

Australian cousins visited us

Cousins in our home.

My Australian cousins visited us.

 A pleasant, joyful meeting
 after so many years.

Dec 14, 2022

Hail Chinnavar!

Hail Chinnavar!

Success is a journey and not a destination.
Beautiful things are in store for you, Udhayanithi Stalin Sir.
Go ahead and make your Day.

Dec 11, 2022

அத்த மக்க மாமன் மக்க

C.V.ஸ்ரீதர் - 
C.V. ராஜேந்திரன்

ராஜேந்திரனின் சொந்த அத்தை மகன் ஸ்ரீதர். எனவே இயக்குநர் ஸ்ரீதருக்கு அவர் சொந்த மாமா மகன்.

இனிஷியல் 'C.V.' என்பதால் இருவரும் உடன் பிறந்த சகோதரர்கள் என பரவலாக அந்த காலத்தில் இருந்தே திரை ரசிகர்கள் தவறாக நம்புகிறார்கள்.

ஸ்ரீதரிடம் அஸிஸ்டென்ட் ஆக சேர்த்து விடும்படி அவருடைய நண்பர் கோபுவிடம் ராஜேந்திரன் கேட்டிருக்கிறார். 

கோபு பதில் "ஸ்ரீதர் உனக்கு சொந்த அத்தை மகன் தானே , நீயே அவரிடம் கேட்கலாமே?"

சித்ராலயா கோபு மகன் நரசிம்மன் இதையெல்லாம் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

 நரசிம்மனே இது பற்றி எழுதியிருப்பதாக சொன்னார்.

ஸ்ரீதரும் ராஜேந்திரனும் உடன் பிறந்த சகோதரர்கள் அல்ல அல்ல என்று நானும் எழுதியிருக்கிறேன்.

சில நாட்களுக்கு முன்
 நரசிம்மனுடன் பேசினேன். 

சில வருடங்களுக்கு முன்பு நரசிம்மனுடன் மொபைலில் பேசிய போது 'உங்களுக்கு ஒரு pleasant surprise' என்றார். என்னவென்று பார்த்தால் அவருடைய தந்தை சித்ராலயா கோபு பேசினார். 
உற்சாகமாக பேசியவர் என்னை சந்திக்க விரும்பினார். வீட்டிற்கு உடனே வரச்சொன்னார். 

 சந்திப்பு வாய்க்கவில்லை.

..

Dec 10, 2022

ராஜநாயஹம் எழுத்து

R.P. ராஜநாயஹம் எழுத்து

சித்ரா சம்பத்:

"உங்கள் ரசனைக்கும், நுட்பத்திற்கும், ஆழ்ந்த நினைவாற்றலுக்கும், மிகச் சிறந்த அறிவாற்றலுக்கும், விஷயங்களை மிகப் பொருத்தமாக பொருத்தமான இடத்தில், நேரத்தில் விளக்குவதற்கும், பரந்து பட்ட உங்கள் இலக்கிய, ஆங்கில, சினிமா புலமைக்கும் யாரையும் உதாரணம் கூற முடியாது. நான் கவிஞனோ, எழுத்தாளனோ இல்லை. எனக்கு இதற்கு மேல் சொல்ல தெரியவில்லை 🙏"

https://m.facebook.com/story.php?story_fbid=3409253185954790&id=100006104256328&mibextid=Nif5oz

Dec 9, 2022

பிராபல்யம்..வித்வத்..

30.11.2022

சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்ல Pearl City Express ல் இரவு பயணம்.

அறுபத்தொரு வயது தங்கம் என்ற அம்மாள். பாமரத் தோற்றம்.
 முரசு டிவியில் சினிமா எனும் பூதம் நிகழ்ச்சி பற்றி, இடம் பெற்ற நடிகர் நடிகைகள் பற்றி தெளிவாக வரிசையாக நினைவில் வைத்திருக்கிறார்.
அவருடைய தங்கை தான் சினிமா எனும் பூதம் நிகழ்ச்சி பற்றி இவருக்கு சொல்லியிருக்கிறார்.
அந்த தங்கைக்கு உடனே, உடனே மொபைலில் கூப்பிட்டு
 முரசு டிவியில் ஞாயிற்றுக்கிழமை காலை எட்டரை மணிக்கு 'சினிமா எனும் பூதம்' நிகழ்ச்சி நடத்தும் ராஜநாயஹம் ரயிலில் வருவது பற்றி உற்சாகமாக சொல்ல ஆரம்பித்து விட்டார்.

ஞாயிறு காலையில் சில சமயம் பைப்பில் தண்ணீர் பிடிக்கும் போது சினிமா எனும் பூதம் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போயிருக்கிறது என்று வருத்தப்பட்டார்.


திருமுல்லைவாயிலில் இருக்கிற மகள் வீட்டில் இருந்து தூத்துக்குடி புதிய முத்தூருக்கு மகன் வீட்டிற்கு பயணப்பட்ட  அம்மையார் தங்கம்.

தங்கம் பெர்த்துக்கு மேலே அப்பர் பெர்த்தில் படுத்துக்கொண்டு இருந்த முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன்
திருவண்ணாமலை குமரேசன். ஆந்திராவில் வேலை.
திருச்செந்தூர் கோவிலுக்கு போவதற்காக ரயில் பயணம்.
காதில் headphone.

குமரேசன் " சார், நான் உங்க 'அரசியல் பிழைத்தோர்'  'மணல் கோடுகளாய்'
ரெண்டு புத்தகமும்
 படித்திருக்கிறேன் '


...

https://www.facebook.com/100006104256328/posts/3486535571559884/?mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3484088925137882&id=100006104256328&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3484925341720907&id=100006104256328&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3485135498366558&id=100006104256328&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3483496918530416&id=100006104256328&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3481537428726365&id=100006104256328&mibextid=Nif5oz

https://m.facebook.com/story.php?story_fbid=3483352031878238&id=100006104256328&mibextid=Nif5oz

Dec 8, 2022

சங்கரன் கோவில் அத்தை

சங்கரன் கோவில் அத்தை.
அப்பாவின் மூத்த சகோதரி.

95 வயது.
செஞ்சுரியடிக்க இன்னும் ஐந்தே வருடம்.

தாத்தா செய்துங்கநல்லூர் சாராயக் கடை ராஜநாயஹம் பிள்ளை
 நூறு வயதைத் தாண்டி வாழ்ந்தவர்.

அத்தையின் தகப்பனார் போலவே இவரும் கூட
நூறு வயதைத்தாண்டுவார். ததாஸ்து!

அபாரமான ஞாபகசக்தி.
செய்துங்கநல்லூர் தாத்தா, ஆச்சி, பெரியப்பா, அப்பா பற்றி இயல்பாக நினைவுகளை 
அத்தை
அசை போட்டார்.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன் குலதெய்வம் குறித்து நான் கேட்ட கேள்வியை இப்போது நினைவில் வைத்து  அதற்கு ஆலோசனையும் கூட சொன்னார்.

அத்தை கணவர் 
ரத்தினம் பிள்ளை மாமா செக்கச்செவேல்னு ஹாலிவுட் ஆக்டர் போல இருப்பார்.
அந்த கால சங்கரன்கோவில்
S.R.S. transport பங்கு தாரர்.
சங்கரன் கோவில் நடராஜ பிள்ளையின் இளைய சகோதரர்.

46 வருடங்களுக்கு முன் ரத்தினம் பிள்ளை மாமா 1976ல் மறைந்து விட்டார்.

டிசம்பர் நான்காம் தேதி  
 பல வருடங்களுக்குப் பின் அத்தையை சந்தித்திருக்கிறேன்.

https://www.facebook.com/100006104256328/posts/3213525762194201/?mibextid=Nif5oz

https://www.facebook.com/100006104256328/posts/3088026201410825/?mibextid=Nif5oz

Dec 1, 2022

ஆட்டோட காது

தூத்துக்குடி அண்ணா நகர் ஏழாவது தெருவில் காணக்கிடைத்த
காது நீளமான ஆடு.
பாகிஸ்தான் ஜமுனாபாரி ஆடு.


நின்னு போஸ் கொடுத்துட்டு 'வரட்டுமா'ன்னு மேல நடந்துச்சு.

அம்மா சொன்ன சொலவடைகள்ள ஒன்னு..

"ஆட்ட அறுக்கறதுக்கு முன்ன காத எனக்கு சுட்டுக்குடுன்னானாம்"

..

அதி மதுர 'மதுர'

சட்டி மண்டயன் உதாரு :
"டேய் ஆட்டு மூக்கா, 
'தோராஹா' அணில் தாவனும்
'குஸ்தேன் கே பியார் கே' படத்தில நடிச்ச ஆடு தாவனும் சொந்த அண்ணந்தம்பிங்க, ஒனக்கு தெரியுமாடா?"

தெரியாதுன்னு சொன்னா 'தாப்பு'ல எவனும் மதிக்க மாட்டானே.

ஆட்டு மூக்கன் : "நல்லா தெரியும்டா. 'குஸ்தேன் கே பியாருக்கே' பரமேஸ்வரி தேட்டர்ல பாத்திருக்கேன். 
ஆடு தாவன் அவன் அண்ணன் அணில் தாவனெ விட நல்லா நடிப்பான்டா."

https://www.facebook.com/100006104256328/posts/1567343190145808/?mibextid=Nif5oz