Share

Jan 10, 2011

ராஜநாயஹம் எழுத்து

பல படங்களில் வயதானவராக நடித்த ரங்காராவ் தனது முதுமையை அடையும் முன்பே இறந்து போய்விட்டார் என்ற தகவலை நண்பர் ராஜநாயஹம் வலைப்பக்கத்தில் ஒரு முறை வாசித்த போது அதிர்ச்சியாக இருந்தது.
திருப்பூரில் வாழும் எழுத்தாளர் ராஜநாயஹம் கறுப்பு வெள்ளைக் கால தமிழ் திரையுலகின் ஒரு நடமாடும் ஆவணக்காப்பகம். அவர் தனது வலைப்பக்கத்தில் எழுதியுள்ள சுவாரஸ்யமான திரைக்குறிப்புகள் தனித்து நூலாக வரவேண்டியவை.
- எஸ்.ராமகிருஷ்ணன்
www.sramakrishnan.com

..........................................................

எனக்குத் தெரிந்து R.P.ராஜநாயஹம் அவர்கள் தமிழ் படங்கள் பற்றியும், உலகப் படங்கள் பற்றியும் தெளிவான அறிவு உடையவர். அவர் பாலைய்யா, சுப்பைய்யா பற்றியும் பேசுவார், பெட்ரிக்கோ பெல்லினி பற்றியும் பேசுவார். ரோமன் பொலன்ஸ்கி படத்தையோ,பெட்ரொ அல்மொடொவர் படத்தையோ முன்வைத்து நம்ம ஊர் படத்தை விமர்சனம் செய்யமாட்டார்.
-குட்டிபிசாசு
kuttipisasu.blogspot.com

............................................................................


wandererwaves.blogspot.com
பதின்மவயதுச்சுயதிருப்திக்கு ஈடானதாக நாகார்ஜுனனின் இடுகையொன்றும் ராஜநாயஹத்தின் சில இடுகைகளும் எனக்கு;
அண்மைக்காலம்வரை ஜெயமோகனை அடிக்க காலச்சுவடு உசுப்பேத்திவிடும் அடியாள் என்ற அபிப்பிராய அறியாமை மட்டுமே R.P.ராஜநாயஹம் பற்றி எனக்கு இருந்ததென்பதற்கு, இவரை முதலிலே அறிய நேர்ந்த இவரது இலக்கியபத்தி+பக்தி எழுத்துகளும் காரணம். அப்படியான தப்பபிப்பிராயம்மட்டும் இப்போது மாறவில்லை; இவரை எதிர்_ஜெயமோகன் கருத்துப்பிம்பவடையாளமாக வைத்திருந்தது(ம்) மாறி, மாற்று_ஜெயமோகன்(_would be) கருத்துப்பிம்பவடையாளமாக மாற்றிக்கொண்டுவிட்டேன்; இலக்கியமென்பது உருகிப்பருகி ஆனந்திக்கமட்டுமே என்ற அமுதகலசமதுவந்திகளாக இரண்டுபேரும் தோன்றுகின்றார்கள்.


.......................................................................


என்னைப் பொறுத்தவரை சுஜாதாவின் இடத்தைப் பிடிக்கும் தகுதியும், எழுத்து வன்மையும் கொண்டவர் தமிழ் பதிவுலகத்தில் மட்டுமல்ல எழுத்துலகத்தில் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் ராஜநாயஹம். மிகச் சமீபத்தில் அவரின் பதிவுகளை வாசகர் ஒருவர் மெயில் மூலம் அறிமுகப்படுத்தி இருந்தார். வாசிக்க ஆரம்பித்தவன் முடித்து விட்டுதான் மற்ற வேலைகளையே பார்க்க ஆரம்பித்தேன். ஹ்யூமர் எழுத்துக்கும், விஷய ஞானத்திற்கும் ராஜநாயஹம் எழுத்து உதாரணம் என்றே சொல்லலாம்.
- பஞ்சரு பலராமன்
Velichathil.wordpresscom

.........................................................................

NARAIN frind feed :சுவாரஸ்யம் என்னைக்
கும் நிஜமாகாது. ஆனா, R .P R யோட 2 வருஷ பதிவுகளை பாருங்க.இது வெறும் சுவாரஸ்யம் மட்டும் கிடையாது, அதுக்கு மேல!
ராஜநாயஹம் மாதிரி ஒரு ஆளை நாம இன்னமும் சரியான இடத்துல வைக்கலன்னு தோணுது

.....................





பிடித்ததை படித்ததில்...1
writerprc.blogspot.com


தமிழில் எழுதுபவர்கள் மிக குறைவு என்றே நினைத்தேன், ஆனால் தேடியதில் சில புதுமையான, இனிமையான தளங்கள் என் திறையில் அகப்பட்டது. அவைகளில் சில..

http://rprajanayahem.blogspot.com/

http://jyovramsundar.blogspot.com/

http://vijisekar.wordpress.com/

http://nizhalkal.blogspot.com/

http://nagarjunan.blogspot.com/