Share

Showing posts with label ஜெனேட். Show all posts
Showing posts with label ஜெனேட். Show all posts

Aug 26, 2008

ழார் பத்தாய் .... ழான் ஜெனே ......

ழார் பத்தாய்(Georges Bataille) எழுதிய Story of the Eye நாவலை பற்றி ஒரு சின்ன குறிப்பு எழுதலாமா என நினைத்ததுண்டு . இதை படித்த போது தோன்றியது .பத்தாய் நல்ல வேளை இதை புனை பெயரில் எழுதினார். சும்மா தொண்ணூறு வருடத்திற்கு முன் பிரான்சாகவே இருந்தாலும் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் .அப்போது புனை பெயர் அவசியம் தான். பத்தாய் மீது தூற்றுதல் , அருவருப்பு எல்லாம் இருந்தது தான் .
இந்த நாவலை யாரோ eureka (?!)தமிழில் மொழிபெயர்த்து தொடராக நாகார்ஜுனன் இணையத்தில் வெளி வருகிறது . உண்மையில் மொழிபெயர்ப்பு என்றால் இது தான் மொழிபெயர்ப்பு . தமிழில் Story of the Eye வருகிறது என்றால் Miracles never cease in this world ! ஒரு பெரிய புரட்சி !
சென்ற 17 தேதி யில் கௌதம சித்தார்த்தனை சந்தித்தேன் ! ழான் ஜெனே(Jean Genet) யின் “Thief Journal” நாவலை தேவ தாஸ் மொழிபெயர்ப்பில் பிரசுரம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார் . நான் 1989 ல் அதை படித்த சுவாரசியமான கதையை சொன்னேன் . ஆமாம் அந்த நாவலை நான் படித்ததை பற்றியே ஒரு கதை எழுதலாம் .
ழார் பத்தாய் - story of the eye
ழான் ஜெனே - “Thief Journal”
இரண்டு பிரஞ்சு நாவல்கள் தமிழில் வரப்போகின்றன . கலாச்சார காவலர்கள் வெந்து நூலாகபோகிறார்கள் பாவம்.
"கற்றது தமிழ்" பட விமர்சனத்தில் ழார் பத்தாய் மேற்கோள்கள் பலவற்றை சாரு நிவேதிதா குறிப்பிட்டிருந்தார். ராசலீலா நாவலில் பத்தாய் பற்றி சாரு வின் குறிப்புகளை காணலாம் .
கௌதம சித்தார்த்தனை சந்தித்த போது அவருடன் கற்றது தமிழ் இயக்குனர் ராம் இருந்தார் . அந்த படம் சம்பந்தமான நிகழ்ச்சிக்காகத்தான் இருவரும்
திருப்பூர் வந்திருந்தார்கள் . நான் இன்னமும் "கற்றது தமிழ் " பார்க்கவில்லை .கட்டாயம் பார்ப்பதாக உத்தேசம் . இயக்குனரின் பேச்சு இந்த முடிவுக்கு வர வைத்திருக்கிறது .
குற்றவுணர்வை சொல்லாமல் இருக்க முடியவில்லை .FELLINIயின் eight and half வாங்கி வைத்திருக்கிறேன் . இன்னும் அதை பார்க்க முடியவில்லை . திரைப்படம் பார்க்க நேரம் வேண்டும் . மன நிலையும் ஓரளவு சீராக இருக்க வேண்டும் .


கௌதம சித்தார்த்தன் திரைப்பட முயற்சியிலிருக்கிறார் .
"புதுமைப்பித்தன் துவங்கி கௌதம சித்தார்த்தன் வரை" கோடம்பாக்கம் முயற்சி தொடர்கிறது ....."
நீட்ஷே யின் “The eternal recurrence of the same events” நினைவிற்கு வருகிறது. சரி
கௌதம சித்தார்த்தனாவது ஜெயிக்க வேண்டும் .