Share

Showing posts with label மோகமுள். Show all posts
Showing posts with label மோகமுள். Show all posts

Sep 29, 2009

காந்தியார் மரணம் மோகமுள் நாவலில்


மோகமுள் நாவலில் கதைநாயகன் பாபுவும் கதைநாயகி யமுனாவும் காந்தி மரணம் மீதான உணர்வுகளை பேசுகிறார்கள்.


பாபு : மனுஷன் போய் எட்டுமாதமாகி விட்டது... இந்த மனிதன் போய்விட்டார் என்று கேட்டதில் இருந்து வேண்டியவர்களைப் பார்க்கிற போதெல்லாம் அழுகை குமுறி,குமுறி வந்தது . டவுனில் ( சென்னை ) தியாகராஜ ஆராதனை அன்று சாயங்காலம் கச்சேரி நடக்கிறபோது யாரோ ஒரு இளைஞன் வந்தான் . கச்சேரிக்கு நடுவில் ஓடி வந்து முகம் பேயறைந்தாற்போல் கோண , " அண்ணா " என்று வித்வானைப் பார்த்து ஒரு சத்தம் போட்டான் .திடீரென்று வாத்யம் , பாட்டு எல்லாம் நின்று விட்டது . " காந்தி செத்துப் போயிட்டாராம் அண்ணா " என்று விசித்து அழத்தொடங்கி விட்டான் .
"என்னது "
" எப்ப "
" என்னடாது .... ஏய் பாலு .."
" யார்ரா சொன்னா ?"
" ரேடியோவிலே அண்ணா ''
ஒரே கலவரம். வெளியே கடைகளை அவசரமாக அடைத்துக் கொண்டிருந்தார்கள் .பார்க்கிற முகம் எல்லாம் அழுதுகொண்டிருந்தது .

யமுனா : ஆமாம் பாபு . நானும் அம்மாவும் திருவையாத்திலே அன்னிக்கு , கச்சேரி கேட்டுக்கொண்டிருந்தோம் .திடீர்னு ஒருத்தர் வந்து சொன்னார் . பந்தல் முழுக்க எழுந்து விட்டது . ஒரே அழுகை. ஒரு போலீஸ்காரன் குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதான். அம்மா மூச்சை போட்டு விழுந்துவிட்டாள்.

பாபு : புத்ரா என்று சுகனைப் பார்த்து கூப்பிட்டாராம் வியாசர் . பிரிவு தாங்காமல் மரங்கள் கூட ஓலைமிட்டதாம் . கூலிக்கு விழுந்த அடி மதுரை முழுவதும் விழுந்தது . இந்த உயிரை மரணம் பிடுங்கும்போது ஜீவராசி எல்லாம் நொந்து துடிச்சது.