Share

Showing posts with label Yann Martel. Show all posts
Showing posts with label Yann Martel. Show all posts

Nov 12, 2012

Miracles never cease !


 ஊரோடி ரகு போனில் அவர்கள் குடும்பம் மெஸ் நடத்துவதை -அந்த தொழில் தந்த அனுபவம் ஆக சொன்ன விஷயம்: ’சாப்பாடு இருக்கும்..பசிக்கிற நேரம் சாப்பிடவே முடியாது’
மெஸ் நடத்துவது எப்பேர்ப்பட்ட சவால்.ஊருக்கு உணவு தரமுடியும். அன்னலட்சுமி அருள் உணவுக்கூடம் நடத்துபவர்களுக்கு வாய்க்காது.

Life of Pi நாவலில் வரும் படேல் என்னும் சிறுவனின் குடும்பம் பாண்டிச்சேரியில் ஒரு zoo நடத்துபவர்கள்.அந்த தொழில் அனுபவம்- ஒரு மிருகக்காட்சிசாலையில் மிக பயங்கரமான மிருகம் என்ன தெரியுமா?
Pi says " In our trade,the most dangerous animal in a zoo is MAN.” வேடிக்கை பார்க்க வருகிற மனிதர்கள் தான் அங்குள்ள மிருகங்களின் கொடூரமான எதிரிகள்.
ஒரு ஆண் யானை குடலில் ரத்தம் கசிந்து துடித்து இறந்தது.காரணம் என்னவென்றால் பார்வையாளன் தந்திரமாக ஒரு உடைந்த பீர் பாட்டிலை அதற்கு உண்ணக்கொடுத்துவிட்டான்.
ஒரு மனிதன் கத்தியோடு ஒரு மான் கூண்டுக்குள் பாய்ந்து விட்டான்.
அவனுக்கு ராமாயணம்,சீதை கடத்தப்படுவது,மான் எல்லாம் நினைவில் வந்திருக்கிறது.ராமாயணகதையை அதன் போக்கில் போக விடாமல் சீதையைக் காக்க இவன் 'குறுக்க' கிளம்பிட்டான்!அடப்பாவி...
’எங்கு கண்டாலும் ராமன்கள் தட்டுப்பட்டால் ராமாயணம் செல்லாக்காசு’ - கி.ராஜநாராயணன் சொன்னது!

இந்த Yaan Martel எழுதிய Life of Pi நாவலைப் பற்றி 2004ம்  ஆண்டு திருப்பூர் சென்ட்ரல் லயன்ஸ் கிளப்பில் நான் ஒரு மணி நேரம் பேசினேன்.

 இப்போது என்.சொக்கன் ட்விட்ட்ரில் இதைப்பற்றி குறிப்பிட்டு இருந்தார் இப்படி-’தீபாவளிக்கு விஜய் டிவியில் ’Life Of Pi’ படத்தைப் பற்றி கமலஹாசன் பேசுகிறாராம்.’


நாளை தீபாவளி.
இன்று சந்தோஷம் தந்த நிகழ்வு ஆஸ்ட்ரேலியாவிலிருந்து வந்துள்ள கானா பிரபாவை திருப்பூரில் சந்திக்க கிடைத்த வாய்ப்பு.என்னுடைய ப்ளாக் இன்று இப்படி ஜெகஜ்ஜோதியாய் இருப்பதற்கு காரணம் கானா பிரபா தான்.Nothing beats the feeling of getting a real nice gift!
தொரகுனா இட்டுவன்டி சேவா என்ற தியாகபிரும்மத்தின் பிலஹரி ராக கீர்த்தனை தான் நினைவுக்கு வருகிறது.பிலஹரி ராகம் பற்றி தெரியுமா? கவலையைத்தீர்க்கிற மூலிகை.
குட்டீஸ்களோடு வந்த பரிசல்காரன் போனில் வந்த தோட்டா ஜெகன் என்னுடனும் உற்சாகமாக பேசினார்.

இன்று இரவு பெங்களூரு B.கணேஷுடன் போனில் பேசினேன்.
குழந்தை மனம்...தெய்வத்துளி!

The funny thing about 'Miracles' is that they happen!


..............................

http://rprajanayahem.blogspot.in/2008/10/blog-post_24.html


Oct 24, 2008

விஷாதம்

மனக்குழப்பம் !
மனிதனோடு எப்போதும் இருப்பது .
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷாதம் . அதனால் விசாரம் . வித்தையுள்ளவனுக்கும் விசாரமுள்ளவனுக்கும் தூக்கம் ஏது ?
'கவலையில்லாத மனிதன் 'என்ற பெயரில் சந்தோசமாக படம் எடுக்க ஆரம்பித்த கண்ணதாசன் அந்த படத்தின் கதாநாயகன் சந்திர பாபு செய்த அடாவடியால் படம் முடிவதற்குள்ளும் , முடிந்த பின்னும் ரொம்ப கவலைக்குள்ளானார்.

ஒரு நாள் சிட்டி மகன் விஷ்வேஷ்வரம் அவர்களின் முதிர்ந்த நண்பர்குழுவுக்கு ஒரு விஷாதம் .
"சாமியாருக்கும் போலி சாமியாருக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?"
விஷ்வேஷ்வரம் தான் தீர்வு சொல்லியிருக்கிறார் .
" முதல்ல சாமியார் ! மாட்டிகிட்டா போலி சாமியார் !!"

ஒரு பிரஞ்சு படம் .படத்தின் ஆங்கில தலைப்பு “For the life of a cop”. அதில் ஒரு பெண்ணை கடத்திக்கொண்டு போய்விடுவார்கள் .
கடத்தியவர்கள் அந்த பெண்ணை கற்பழித்து , பின் சித்திரவதையை தொடர்ந்து அவளை கொலை செய்யுமுன் அவளை காப்பாற்றிவிடுவார்கள் . காப்பாற்றியவர்களில் ஒருவனுக்கு ஒரு மனகுழப்பம் . அவன் அந்த பெண்ணை பார்த்து கேட்பான் .
“I think we were in time?”
நொந்து நூலாகிப்போன அந்த பெண் ஈன ஸ்வரத்தில் சொல்வாள் .
“Rapewise, you were not in time”

மனக்குழப்பத்திற்கு காரணம் என்ன ?
ரஸ்ஸல் க்ரொவ் நடித்த “A beautiful Mind” படத்தில் பதில் சொல்லப்படுகிறது .
Everybody is haunted by their Past!
.......

Yann Martel’s Life of Pi

Why do people Move? What makes them uproot and leave everything they have known for a great unknown beyond the horizon ?

The answer is the same the world over: People move in the hope of a better life.