Share

Sep 28, 2020

அச்சத்தின் மச்சங்கள்

 'ஷோர்' ரொம்ப பழைய இந்தி படம். 

இரைச்சலால் துன்புறுவது. 

கதாநாயகனாக மனோஜ் குமார். 

மிஸ்டர் பாரத். 

தேச பக்திக்கு இங்கே அர்ஜுன் படங்கள் போலே                   அந்தக் காலத்தில் இவருடைய படங்கள் 

அங்கே இந்தியில். 


ஷோர் படத்தில் வேலை பார்க்கிற ஃபேக்டரி யந்திரங்களின் தாளாத இரைச்சல்.

 ட்ராஃபிக் வாகனங்களின் இரைச்சல், 

வானத்தில் விமான சத்தம்,

 ஜனங்களின் கூப்பாடு. 

கடைசியில் கதாநாயகனின் காதுகள்

 செவிடாகிப் போய் விடும். 

சப்தமில்லாத மௌன உலகை 

விந்தையுடன் கவனிப்பதாக படம் முடியும். 


எம். வி. வெங்கட்ராம் 'காதுகள்' 

 'வெளிச்சந்தடி எனில் காதுகளைப் பொத்திக்கொள்ளலாம். 

காதுகளே கூச்சலிட்டால் என்ன செய்ய முடியும்? '


இன்று விக்கி லீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேக்கு இங்கிலாந்து சிறையில் 

இந்த பிரச்சினை. 


வெங்கட்ராம்  அந்திம காலத்தில் செவிடர் தான். 


கு. ப. ரா வின் சிஷ்ய பரம்பரையில் 

வந்தவர் தான் எம். வி. வி. 


பொதுவாக  அபிப்ராயத்தில் குருவை 

யாரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். 


காதுகள் நாவலில் 

" பிச்சமூர்த்தி, கு. ப. ரா இருவரையும் இரட்டையர்கள் என்கிறார்கள். அண்டை வீட்டுக்காரர்கள், ஏக காலத்தில் ஒரே பத்திரிக்கையில் எழுதிய நண்பர்கள் என்கிற அளவில் அது சரியாக இருக்கலாம். 

ஆனால், 

பிச்சமூர்த்திக்கும், புதுமைப்பித்தனுக்கும்

 அடுத்த இடம் தான் 

நான் கு. ப. ரா வுக்குத் தருவேன் "

என்கிறார். 


(ஒரு விஷயம். ந. பிச்சமூர்த்தி, 

கு. ப. ராஜ கோபாலன் இருவரின் 

குடும்பமும் ஒரே வீட்டில் குடியிருந்திருக்கிறார்கள்.) 


தமிழ் தாத்தா சாமிநாதய்யருக்கு 

 தன் குரு பற்றி 

உள்ள மரியாதையும், பக்தியும் 

எல்லோருக்கும் தெரிந்ததே. 


அவர் ராமசாமி முதலியார் என்பவருடன் 

பழக வாய்த்தது.


ராமசாமி முதலியாரை சந்தித்த உ.வே.சாமிநாதய்யர்

’எங்க வாத்யாருக்கே ( மீனாட்சி சுந்தரம் பிள்ளை) இவ்வளவு விஷயம் தெரியாது’ என்றாராம். 


..... 


கோவிட் 19 காட்டும் திகில். 


வீட்டை விட்டு வெளியே வந்தால்

சகல மனிதர்களின், கடைகளின் 

சோகம், தவிப்பு, தத்தளிப்பு காணக்கிடைக்கிறது. 


ஃப்ரான்சிஸ் கிருபாவின் 

'நகரில் சிக்கியவன்' கவிதையின் கடைசி வரிகள் 


"வளையிலிருந்து வெளியே வந்து, 

பகலில் நகரச்சாலையோரம் 

திடுக்கிட்டுத் திடுக்கிட்டு 

இரை தேடும் எலியின் கண்கள் 

அச்சத்தின் மச்சங்கள் "

காருக்குறிச்சி அருணாசலம்

 'சிங்காரவேலனே தேவா’ ஆபேரி ராக பாடலுக்கு                 நாதசுரம் வாசித்த காருக்குறிச்சி அருணாச்சலம். 


தன் பெயர் ‘கோவில் பட்டி அருணாச்சலம்’  

என்று குறிப்பிடப்பட்டால் விரும்ப மாட்டார்.

 ‘காருக்குறிச்சி அருணாச்சலம்’ என்று குறிக்கப்படவேண்டும் என்பார். 


ஒரு புகைப்படம் அபூர்வமானது. அதில் மூன்று மனைவிகளோடு அவர் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இருக்கிறது. 


தன்னுடைய குருநாதர் டி.என்.ராஜரத்தினம் பிள்ளை போலவே தானும் மூன்று பொண்டாட்டிக்காரன் என்று காருக்குறிச்சி சொல்லிக்கொள்வார்.


1921ம் வருடம் ஏப்ரல் 26ம் தேதி பிறந்த காருக்குறிச்சி 1964ம் வருடம் ஏப்ரல் 7ம் தேதி மறைந்திருக்கிறார்.

 மாரடைப்பால் இறந்தார்.



காருக்குறிச்சியின் முதல் மனைவியின் அப்பா முத்தையா புலவர். 

கி.ராவிற்கு அருணாச்சலத்தின் ஷட்டகர் பொன்னுசாமி மிகவும் பரிச்சயமானவர்.


முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி உடனே மறைந்திருக்கிறார். ஆனதால் முதல் மனைவியின் உறவினரான மற்றொரு    பெண்ணை மணந்தார் காருக்குறிச்சி. அவருக்கு குழந்தைகள் பிறந்தார்கள்.

 பின்னர் நடிகை ஈ.வி.சரோஜாவின் 

ஒன்று விட்ட சகோதரியை கல்யாணம் செய்து கொண்டார். தஞ்சாவூர்க்காரர். இவருக்கும் குழந்தைகள் உண்டு.


எல்லா குழந்தைகளையும் மூத்த முதல் மனைவி அன்போடு வளர்த்து ஆளாக்கினார்.


‘கொஞ்சும் சலங்கை‘ யில் நாகஸ்வர வித்வானாக ஜெமினி கணேசன் நடிப்பைப் பார்த்து பிரமித்துப்போய் காருகுறிச்சி

 “அது எப்படிய்யா? நாகஸ்வரம் இந்த இடத்தில் மேலே தூக்கணும், இங்க இறக்கணும், 

சீவாளியை இப்படி இப்படிச் சுத்தம் பண்ணணும் இவ்வளவு நேர்த்தியா உன்னால முடிஞ்சது. எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடேன்” என்று மனம் விட்டுப் பாராட்டியதைப் பற்றிப் புளகாங்கிதத்துடன் என்னிடம் சொன்னபோதே, காருகுறிச்சி பற்றிய நினைவுகளில் மூழ்கி, நெகிழ்ந்து உடைந்த குரலில்,

 ‘ நல்ல மனுஷனெல்லாம் அற்பாயுசிலே

 போய்ச் சேந்துட்டான்’ என்று என்னிடம் ஏங்கினார் ஜெமினி.




நான் காருக்குறிச்சியின் கடைசி மகள் ராஜத்திடம் விசாரித்தேன். 

ஜெமினி கணேசன் பணம் எதுவும் தரவில்லையாம். 

 கோவில்பட்டி செல்லையா தேவர் தான் கோவில்பட்டி காருக்குறிச்சி அருணாசலம் மணிமண்டபம் கட்டுவதற்கு பொருளுதவி செய்திருப்பதாக தெரிகிறது. கமிட்டி தலைவராக வசூல் செய்திருக்கிறார். 


சாவித்திரியோடு வந்து ஜெமினி கணேசன் மணிமண்டபத்தை 

திறந்து வைத்திருக்கிறார். 

கல்வெட்டில் நன்கொடை ஜெமினி கணேசன் - சாவித்திரி என செல்லையா தேவர்                   பெயருக்கு மேலே குறிக்கப்பட்டிருக்கிறது. 


காருக்குறிச்சிக்கு  சரவண பவன் என்று 

ஒரு மகன். 

டாக்டர் ச. வீரப்பிள்ளை என்பவர் கிராவுக்கும் எனக்கும் நல்ல நண்பர். 

சரவண பவனை காரைக்காலில் சந்தித்ததாக கிராவிடம் சொன்னார் வீரப்பிள்ளை.


கி.ரா பழைய நினைவில் மூழ்கி 

என்னிடம் சொன்ன விஷயம் ஒன்று.

காருக்குறிச்சியின் மகனை நாகசுர வித்வானாக்க வேண்டும் என்று கி.ரா வற்புறுத்தியிருக்கிறார். காருக்குறிச்சி அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை.

 மறுத்துத்தலையை ஆட்டினார்.

 ’நாகசுரம் வாசிப்பவனுக்கு சரியான மரியாதையை இந்த சமூகமும் சங்கீத உலகமும் தருவதேயில்லை’ என காரணம் சொன்னாராம்.


காரு குறிச்சியின் 'சகானா' வாசிப்பு 

ஒலி நாடாவில் கேட்கும்போது 

ஒரு தடவை 

எனக்கு 'இப்போதே மரணம் வாய்த்து விடாதா'

 என ஒரு நிறைவு ஏற்பட்டது.

………

Sep 25, 2020

சாவித்திரியம்மாவுக்கு பிடித்த எஸ்.பி.பி பாடல்

 நாற்பது வருடங்களுக்கு முன்பு 

ஒரு வார பத்திரிகை பின்னணி பாடகர்களின் வாழ்க்கைத்துணைவர்களிடம் ஒரு கேள்வியை முன் வைத்து பதில் பெற்று வெளியிட்டது. 


எஸ். பி. பாலசுப்பிரமணியம் மனைவி சாவித்திரி அவர்களிடமும் அந்த கேள்வி கேட்கப்பட்டது. 

'உங்கள் கணவர் பாடிய பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல் எது? '


சாவித்திரியம்மா சொன்ன பதில் 

" 'கேட்டதெல்லாம் நான் தருவேன். 

எனை நீ மறவாதே' என்ற பாடல் "


'திக்கு தெரியாத காட்டில்' என்ற படத்தில்            பாலுவும் சுசிலாவும்,                                 முத்துராமனுக்கும் ஜெயலலிதாவுக்குமாக           பாடிய பாடல் அது. 

1972ல் வந்த வண்ணப் படம். 


இந்த பாடலை விட எத்தனையோ சிறப்பான பாடல்களை அந்த நேரத்தில் எஸ். பி. பி பாடியிருந்தார் தான். ஆனால் அவர் மனைவிக்கு இதன் முத‌ல் இரண்டு வரிகள் 

ரொம்ப முக்கியம் அல்லவா? 

'கேட்டதெல்லாம் நான் தருவேன். 

எனை நீ மறவாதே '


.. 


டி. எம். எஸ் மார்க்கெட் போன பின் ரொம்ப விரக்தியில் இருந்தார். ரொம்ப புலம்ப ஆரம்பித்து விட்டார். மார்க்கெட் போய் ரொம்ப காலமான பின்னும் புலம்பல் நிற்கவில்லை. 

பேட்டி கொடுக்கும் போதெல்லாம் தன்னை பாட யாரும் அழைப்பதில்லை. பாட வாய்ப்பு தருவதில்லை என்று ஆவலாதி சொல்லிக் கொண்டே இருந்தார். 


எஸ். பி. பாலசுப்பிரமணியம் என்ன செய்தார் தெரியுமா? சௌந்தர்ராஜன் வீட்டுக்குப் போய் அவரை சந்தித்தார். 

"நீங்க நெறய்ய சாதிச்சிட்டீங்க. ரொம்ப பெரிய பின்னணி பாடகர் அண்ணே நீங்க. 

ஒங்க பாட்டு எல்லாமே சாகா வரம் பெற்றவை. 

உங்களுக்கு ஒண்ணு சொல்றேன்.

 வெளி நாட்டுல கச்சேரி செய்யப் போகும் போதெல்லாம் நானும் என் மகன் சரணும் இணைந்து 

ஒங்களோட ' பொன்னொன்று  கண்டேன், 

பெண் அங்கு இல்லை, 

என்னென்று நான் சொல்லலாகுமா?' பாடலைப் பாடி கைத்தட்டு வாங்குவோம். 

எதைப்பற்றியும் கவலைப்படாம நீங்க சந்தோஷமா இருங்கண்ணே. நீங்க எவ்வளவு பெரிய ஆளு "


டி. எம். எஸ்ஸிற்கு பிரமாதமாக கவுன்சலிங் செய்து உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

கமல் - பாலு

 அமிதாப் பச்சன் தாதா சாகேப் விருது பெற்றிருக்கிறார் எனும் போது 

அடுத்து இந்த விருது பெற தகுதியானவர்

 கமல் ஹாசன். 


 ஒரு டி. வி. நிகழ்ச்சியில் 

எஸ். பி. பாலசுப்பிரமணியம்,

 கமலுடன் கலந்து கொண்ட போது 

'கம்பன் ஏமாந்தான்' பல்லவியை பாடினார். 

கமல் அதற்கு நேர்த்தியாக உடன்  வாயசைத்தார். 

பாலு உணர்ச்சி வசப்பட்டு  சொன்னார். 

"The one and only actor, with whom 

I always feel comfortable when I sing "


கவலைக்கிடமாக இருந்த எஸ். பி. பி. உடல் நிலை பற்றி விசாரிக்க மருத்துவ மனைக்கு சென்ற கமல்ஹாசன். 


இன்று பாலு போய் விட்டார். 


கமல் பாரத ரத்னா பெறவும் தகுதியானவர். 

ஏழு வருடம் முன்னரே எழுதியிருக்கிறேன்.


இன்று அரசியலில் இறங்கியிருக்கிற நிலையில் அவருக்கு இந்த கௌரவங்கள் 

கொடுக்க முன் வர மாட்டார்கள். 


.. 


பரோட்டா சூரி சொல்வது " மற்ற நடிகர்கள் 

எந்த மொழியிலும் நடித்து விடலாம். 

காமெடி நடிகர்கள் பிற மொழிகளில் 

நடிக்க முடியாது" 


நகைச்சுவைக்கு வட்டார வழக்கு முக்கியம். தாய்மொழி வட்டார வழக்கு பேச்சு மொழி. 


இதையும் கூட ஒரு காமெடி நடிகர் உடைத்திருக்கிறார். 


இயக்குநர் ராதா மோகன் படம் 'மொழி' படத்தில் நடித்த பிரம்மானந்தம். 

"எனக்கு ஒர்த்தர பிடிக்கலன்னா மூஞ்சயே

 நான் பாக்க மாட்டேன்.. " 


விஷேச திறமை கொண்ட பிரம்மானந்தம் 

பல தமிழ் படங்களில் கலக்கியிருக்கிறார். 

Scene Stealer. 


.. 


 ஹிண்டு பார்க்கும் போது ஆபிச்சுவரி எப்போதுமே கவனிப்பேன்.

 இன்று பார்த்துக் கொண்டிருக்கும் போது பழசானதெல்லாம் ஞாபகம் வந்தது. 


1992ல Hindu Obituary column பார்த்து இந்திரா மாமி மறைந்த விஷயம் தற்செயலாக தெரிய வந்தது. இந்திரா பார்த்தசாரதியின் மனைவி. 


1999ம் ஆண்டு ஹிண்டு ஆபிச்சுவரியில் தான் நடிகை சந்திர கலா மரணம் பற்றி பார்த்தேன்.


 அந்த இரங்கலில் இன்னொரு செய்தி தெரிந்தது. சந்திர கலா முஸ்லிமாக மதம் மாறி வாழ்ந்தவர். அந்த முஸ்லிம் பெயர் அதில் இருந்தது. 


பிராப்தம் எல் ஆர் ஈஸ்வரி பாடல் 'இது மார்கழி மாதம், முன் பனி காலம், கண்ண மயக்குது மோகம், ஏன் நடுங்குது தேகம் ' சந்திர கலா. 


'வசந்தத்தில் ஓர் நாள், மணவறை கோலம், 

வைதேகி காத்திருந்தாளாம் '

 மூன்று தெய்வங்கள் 


எம். ஜி. ஆருடன் 'தங்கத்தோணியிலே, 

தவழும்  பெண்ணழகே' 


புகுந்த வீடு ஏ. எம். ராஜா, ஜிக்கி 'செந்தாமரையே, செந்தேன் இதழே' 


சந்திர கலா வீடும், 

இயக்குநர் புட்டன்னா வீடும்

 சென்னையில் 

அடுத்தடுத்து இருந்து, 

முன்னே நான் பார்த்த நினைவு. 


..

Sep 23, 2020

ஜூலியன் அசாஞ்சே

 ஜூலியன் அசாஞ்சே 

விரக்தி நிலை 


Auditory hallucination பாதிப்புக்குள்ளாகி 

தன்னையே கொல்கிற மனநிலையில். 


நூறு முறைக்கு மேல் தற்கொலை முயற்சியில். 


ராணுவ ரகசியங்களை கசிய விட்டதற்காக அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படும் சூழலில் 

முற்றிலும் மனமுடைந்திருக்கும் அசாஞ்சே. 


இரண்டு மாதங்களுக்கு முன்பு Single Cell ல போடப்பட்ட பின் மனச்சிதைவு 


காதுகளுக்குள் ' நீ குப்பைடா, நீ செத்த, 

இந்தா வர்ரோம்டா' 


எம். வி. வெங்கட்ராம் இதனால் 

கொஞ்சம் பாடா பட்டார். 

அருமையான 'காதுகள்' நாவலாக

 அவருடைய துயரம் பரிமளித்தது. 


"பணம் இருந்த போது ஒரு வகைத் துன்பம். 

பணம் இல்லாத போது வேறு வகைத் துன்பம்.                


வருகிற துன்பம் சந்தடி செய்யாமல் வருவதில்லை. பெரிய கோஷத்துடன் பிரமாதமாய் 

 விளம்பரம்  செய்து கொண்டு வரும்.

 ஊரில் நிமிர முடியாத படி 

தலையில் ஓங்கிக் குட்டும்.


 சேர்ந்தாற் போல் சில ஆண்டுகள் 

நான் நிம்மதியாக இருந்ததாய்க் கூற முடியுமா? 


மனிதனைப் புழுவாய் நெளியவும் துடிக்கவும் வைக்க வறுமை ஒன்று போதாதா? 


அது போதாது என்று

 புலன்களையும் மனத்தையும் குழப்பும் 

இந்த மர்மமான தாக்குதல்."


- எம். வி. வெங்கட்ராம் 'காதுகள்'  நாவலில்.


https://m.facebook.com/story.php?story_fbid=2729770660569716&id=100006104256328

மஹி ஆதிரன் கவிதைகள்

 மஹி ஆதிரன் கவிதை 


நிஜத்திலிருந்து நெசத்திற்கு


இன்றொரு விரல் சாலையில் கிடந்தது


கால் சற்று தொலைவில்

தலை சக்கரங்கள் இடையே


ரத்த ச் சாலை கவுச்சி மணம்


குப்பை கொட்ட சாலை கடந்தவனின்

மூளை மிக மிகச் சின்னது

அவனது உள்ளங்கை அளவு


அப்பன் அடித்த அடியில்

 சிதறிக் கிடக்கும்

குழந்தையை மறந்து விட்டாள்


பால் சுரப்பிகள் வெறும் உறுப்பு

தானாய் ஒழுகுகிறது


இன்றிரவு அவள் முலைகளுக்கு

காவலிருப்பாள் கொற்றவை 


வெயிலின் பொருட்டு

பாலும் குருதியும் ஒன்றாய் மணக்கிறது


அந்த குழந்தை உடலுக்கு ஆம்புலன்ஸ்

மிகப் பெரியது


நின்று போன மழைக்கு ஒரு மயிரும் அறிவில்லை


பிணச் சாலையில்

அம்மா என்ற ஒரு குரலை

ஒரு கவ்வியால் பிடுங்கி

நீர் நிறைந்த பாத்திரத்தில் இடும்

மருத்துவர் 


சாவதற்கு பதில் இருமுகிறார்

எனது குளியலறையில்


சம்பவத்திற்கு ஒரு பகா எண்ணை

ஒதுக்கும் நானே அந்த சிறு குழந்தை.


https://m.facebook.com/story.php?story_fbid=2818560615024053&id=100006104256328


மஹி ஆதிரன் கவிதை 


"நகங்களை

கடித்து

உங்கள்

மேல்

துப்புகிறான்

கவிஞன் 


நிலவுத் துணுக்குகள்

என்று பதறும்

திருவாசகர்

உள்ளாடை

மறந்து

குதிக்கின்றனர்


கவிஞன்

திருவாசகர்

தனித்திருக்க


கரையில்

வேட்டியுடன்

சாலையோரச் சிறுமியின்

தலையில்

முத்தமிட்டு

தனதுதட்டின்

ரத்தத்தைத் துடைக்கிறது

வாழ்வு."

Sep 22, 2020

Gift and Concession

 


கனிவான குரல். 

அவருடைய சொந்தக் குரல் தானா? 


" Free Gift பார்த்து ஏமாறாதீங்க. 

லலிதா ஜூவல்லரியில 

First installment free, 50%சேதாரம் free."


His second sentence cancels first sentence. 

Unreasonable and illogical. A senseless contradiction. 


'Advertising is legalized lying'

- H.G. Wells


http://rprajanayahem.blogspot.com/2019/05/blog-post_29.html?m=0

Sep 21, 2020

செருகளத்தூர் சாமா

 செருகளத்தூர் சாமா 


தஞ்சை மாவட்ட கிராமம் செருகளத்தூர். 


சென்னை காங்கிரஸ் அலுவலகத்தில் 

ஒரு ரெண்டு மாதம் குமாஸ்தா. 

அதன் பின் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் குமாஸ்தா. 


இவருக்கு மூன்று பெண் புத்திரங்கள். 


இந்த செக்கு மாட்டு குமாஸ்தா வேலையில் இருந்து விடுபட்டு 

தமிழ் திரையுலகில் 1930களில் நுழைகிற வாய்ப்பு. 


சாஸ்த்ரீய சங்கீத ஞானமிக்கவர். 


முதல் படத்தில் நாரதராக நடித்தார். 

கிருஷ்ணர் வேடத்தில் மூன்று படங்கள். 


1937ல் சிந்தாமணியில் கிருஷ்ணராக

 இவர் பாடினார். 


அம்பிகாபதியில் கம்பராக 

செருகளத்தூர் சாமா. 


அப்புறம் மூன்று படங்கள் தானே தயாரித்து இயக்கி, முக்கிய பாத்திரத்தில் நடித்தவர். 

ஷேக்ஸ்பியர் மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ் 

'ஷைலக்' 1940ல்


'சுபத்ரா அர்ஜுனா' 1941 


' ராஜ சூயம்' 1942 


சொந்தமாய் தயாரித்த படங்கள் கை கொடுக்கவில்லை. 


1942ல் நந்தனாராக நடித்த தண்டபாணி தேசிகருக்கு இணையான கதாபாத்திரத்தில் வேதியராக சாமா நடித்தார். 

மயிலாப்பூர் ரமணி 

 ஒரு காட்சியில் பரம சிவனாக தலை காட்டினார். மயிலாப்பூர் ரமணி யார் தெரியுமா? நடிகர் ரஞ்சன். கொத்தமங்கலம் சுப்பு, அவர் துணைவி சுந்தரி பாய் கூட நந்தனார் படத்தில் நடித்திருந்தார்கள். 


ஜெமினி வாசன் தயாரித்த இந்த படத்தில் 

நந்தன் சரித்திரத்தை திரைக்கு எழுதியவர் மணிக்கொடி எழுத்தாளர் கி. ராமச்சந்திரன். 

A. K. ராமச்சந்திரன் என்ற கி. ரா.


தாடியோடு படங்களில் சாமா வர ஆரம்பித்தார். 


செருகளத்தூர் சாமா தாடி பிரபலம். 


தியாக ராஜ பாகவதரின் சிவ கவியில் நடித்துள்ளார். 


பின்னால் ஏழை படும் பாடு, 


எம். ஜி.ஆரின் மர்ம யோகியில் இவர் யோகி. 


மாயா பஜார் 


1962 ல் பட்டினத்தாராக பின்னணி பாடகர் 

டி. எம். எஸ் நடித்த படத்திலும் செருகளத்தூர் சாமா 

நடித்தார். 


இவருடைய மரணம் பற்றி தெரியவில்லை. 


அசோகமித்திரனின் சிறுகதை 'சுண்டல்'. 


அதில் மூன்று பாத்திரங்கள். 


பெருங்களத்தூர் சம்பு, 

நீலகண்டன், 

நாதன். 


மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ் 

'ஷைலக்' என்பதை அசோகமித்திரன் 

'கிங்லியர்' ஆக மாற்றி புனைந்திருக்கிறார். 


"நீ சினிமாக் காரன். தாடியை உருவிண்டு வந்தா ஊரே உன் பின்னால் வரும் "


அன்றைய திரையுலகம் பற்றிய

 ஒரு குறுக்கு வெட்டு தோற்றம் 'சுண்டல்' 

சிறுகதை. 


உதவிக் கரம் நீட்டும் நாதனால் காணக்கிடைக்கும் லாப பணம். 


இன்றைக்கும், புதிய அமைப்பிலும் 

சினிமாவுலகில் நடக்க கூடிய,

 நடக்கிற சாத்தியப்பாடு உண்டு. 


'கிங்லியர் திரைப்பட உலகில் மிகக் குறைந்த இடங்களில் - மிகக் குறைந்த காட்சிகள் காட்டப்பட்ட படங்களில் ஒரு சிறப்பிடம் சம்பாதித்துக் கொண்டது. ' என்ற வரிகளையடுத்து விரிகிற 

நீலகண்டன், சம்பு, நாதன் மூவரின் 

பிந்தைய வாழ்க்கை காட்சி விவரங்கள். 


நான் இந்த கதையை மட்டுமே 

ஒரு பத்து தடவை படித்திருக்கிறேன். 

ஈர்ப்பான சிறுகதை. 

நாவலாக எழுத வேண்டிய

 கரு, களம். 


குமாஸ்தா வேலை பார்த்தவரை பள்ளிக்கூட தலைமையாசிரியராக மாற்றி புனைந்திருப்பார் படைப்பாளி அசோகமித்திரன். 


'எல்லாமே கதைகள். அதே நேரத்தில் உண்மையைச் சாராம்சமாகக் கொண்டவை.'

என்பார் அசோகமித்திரன்.

Chinese torture

 Chinese torture 



Courtesy : The Hindu 


Torture, not firing, behind 

China border deaths in 1975 


இன்றைய 'ஹிண்டு' பேப்பரில்  45 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் ஒன்றை 

கர்னல் பி. ஆர். ஷா கவனப்படுத்தியிருக்கிறார். 


1975 


துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட நான்கு அஸ்ஸாம் ஜவான்களின் உடல்களை பெற்றுக் கொள்ள சென்ற அனுபவம். 


பிரதமர் இந்திராவிடம் இருந்து வந்த செய்தி 

'19 வீரர்களுடன் சென்று சீனர்களை சந்திக்க வேண்டும்'


சிக்கல்' தேசீய கொடியை கொண்டு செல்லக்கூடாது. நீல நிறக் கொடியேந்தி செல்ல வேண்டும். நிராயுதபாணியாக செல்ல வேண்டும். '


அந்த இந்திய வீரர்கள் மன நிலை எப்படி இருந்திருக்கும். 


கர்னலிடம் ஒரு வெள்ளை போர்வை. 

அவர் அங்கிருந்த ஒவ்வொருவரிடமும் தங்கள் பேனாவிலுள்ள இங்க் முழுவதையும் அந்த பெட்ஷீட்டில் ஊற்றச் சொல்லியிருக்கிறார். 


நீல நிறமான பெட்ஷீட்டை கொடியாக ஏந்தியவாறு கர்னல் சென்றிருக்கிறார். 


The shock and horror 


"When I  saw bodies, I knew immediately, there were marks from cigarette burns all over, and at odd places, they had been punctured by bayonets."


https://m.facebook.com/story.php?story_fbid=2738484656364983&id=100006104256328


https://m.facebook.com/story.php?story_fbid=2825248411021940&id=100006104256328

Sep 17, 2020

R. P. ராஜநாயஹத்திற்கு கிரா கடிதம் - 2

 ராஜநாயஹத்திற்கு கிரா கடிதம் - 2


ஆத்ம அன்பருக்கு, 

நலமாகுக. 


உங்கள் முகவரி மாற்றக் கடிதத்துக்கும் பதில் கடிதமாக இந்த எனது முகவரி மாற்றக் கடிதம் வருகிறது. 


எப்படி இருக்கிறீர்கள். 

எப்பவாவது திடீரென்று உங்கள் ஞாபகம் வரும். 


என்னோடு வந்து பழகியவர்களில் நீங்கள் ஒரு வித்தியாசமானவர் தான். 


நீங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு அனுபவங்கள் புதைந்து கிடக்கிறது உங்களிடம். 

அதே பேச்சை நீங்கள் எழுத்தில் கொண்டுவர ஆரம்பித்து விட்டால் நாங்களெல்லாம் கதையைக் கட்ட வேண்டியது தான். 


கதை எழுத வேண்டுமென்றில்லை, அனுபவங்களை சுவாரஸ்யமாக - எழுத்தில் - சொன்னாலே போதும். 

நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாக  ஒரு வித ஜாலக்கோடு சொல்ல வேண்டும், அவ்வளவு தான். 


அது கிடக்கு. 


உங்கள் பையன் - மூடி மூடிச் சிரிப்பானே - அவன் 

எப்படி இருக்கிறான்? 


கிரா 

9 - 11- 91


.... 

https://m.facebook.com/story.php?story_fbid=2832278793652235&id=100006104256328

Sep 14, 2020

அன்ன விசாரம்

 ரயில் பிரயாணம் வருகிற 

தி. ஜானகிராமன் கதைகள் என்றால் 

'சிலிர்ப்பு',

 'மனதிற்கு... '

' அக்பர் சாஸ்திரி' எல்லாம் 

கண் முன் வந்து நிற்கிறது. 


ரயில் பிரயாணத்தில் நடக்கிற மற்றொரு 

தி. ஜா. கதை 

'அன்ன விசாரம் அட்டகாசம். 


'கச்சேரி'தொகுப்பில் உள்ள கதை. 


அறுபத்தெட்டு வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்கிறார். 


எழுபத்து நான்கு வயது கிழவர் சரியான glutton. 


மனிதன் தூங்குகிறதும், சாப்பிடுகிறதும் கோரமான காட்சிகள். சாப்பிடுகிற போது மன்மதனை, ரதியை கூட பார்க்க விரும்ப முடியாது. 


ஆனால் கிழவரின் தோரணை, அடுக்கடுக்காக பிரமிக்க அடித்த சம்பிரமம். 


' கறந்த படிக்கே காய்ச்சின பாலு. தண்ணி உடாம காச்சினா, மாட்டுக் காம்பு வெடிச்சிப் பூடும்னு பால்ல ஒரு பொட்டு தண்ணீரைத் தெளிச்சு இருப்பாங்க. '


' தயிருன்னா கத்தி போட்டு அறுக்கணும், தெரிஞ்சதுங்களா?'


'உப்புமா, தோசை, பொங்கல், வடை 

எண்ணெய் வாடையே வீசப்படாது. எல்லாம் நெய். 

கத்திரிக்காயும், வாழைக்காயும் சேர்த்து கொத்ஸு பண்ணுவாங்களே, அதுக்கு ஈடாச் சாப்பிட்டதே கிடையாது 

ராத்திரி சாப்பாடு ஒரு சாம்பார், கறி, கூட்டு, ரசம், பப்படம், வறுவல். படுக்கறப்ப பசும்பால் சுண்டச் சுண்டக் காய்ச்சி, ஜாதிக்காயும், குங்குமப்பூவுமா மணத்துக்கிட்டு மஞ்ச மஞ்சேருன்னிட்டு, அமிர்தமாப் பொங்கும். '


' மைசூர் பாகு, ஜிலேபி, கோதுமை அல்வா, தக்காளிப் பழ பஜ்ஜி, காபி எல்லாம் முரட்டுத்தனமாத்தான் இருக்கும். 

நெய்யைக் கக்கும் '


வெங்கடபதி வீட்டில் தான் சாப்பிட்ட கதையை விலாவாரியாக பேசும் அந்த கிழப் பயணி. 


ரயில் பயணத்திலும் கிடைப்பதையெல்லாம் சாப்பிட்டு வெளுத்து விரியக்கட்டி விட்டு

 அந்தப் பெரியவர் சொல்கிறார் :

"ஒரு அஞ்சாறு மாசமா வயிறு மந்தமா இருந்து வருது. ருசிக்க எதையும் சாப்பிட முடியல. அன்னத் திரேஷம் மாதிரியா இருக்கு "


.. 


DINNER! MUSIC!


விருந்து என்றால் இதற்கு மேல் கிடையாது. Dinner. 

இதற்கு மேல் வித விதமாக பரிமாற முடியாது.                        Dinner Items. 


இதற்கு மேல் எப்படி சாப்பிட முடியும். 

அப்படி ஒரு விருந்து. 


பர் லாகர் க்விஸ்ட் எழுதிய

"THE DWARF" நாவலில். 


இந்த ஸ்வீடிஷ் நாவலை 

தி.ஜானகிராமன் ஆங்கிலம் வழி தமிழில்

' குள்ளன் ' என்ற பெயரில் மொழிபெயர்த்திருந்தார்.


.. 


Music with dinner is an insult

 both to the cook and the violinist.

- G. K. Chesterton 


Dinner. Dinner Items. 

Music. 

விருந்து, இசை இரண்டையும் 

ஜேம்ஸ் ஜாய்ஸ் 

மிக அழகாக தன்னுடைய' The Dead' கதையில் நேர்த்தியாக ஓவியம் போல வரைந்திருப்பார்.

உணவு, இசை இரண்டும் சுவையில் தோய்ந்தது. 


தி.ஜானகிராமன்

 இசைக்காக "மோகமுள்" மட்டுமல்ல 

சமையலை கௌரவித்து "நளபாகம்" நாவலும் எழுதினார். 


....................

புலி வால்

 

ஃபேஸ்புக் ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட் ஐயாயிரம் தாண்டி ஒன்றேகால் வருடமாகிறது. (ஜூன் 2019). 


யோசிக்காம  கையில் அகப்பட்டவர்களை அன்ஃப்ரண்ட் செய்து கொண்டு இருக்கும் போதே தினமும் புது ஃப்ரண்ட் ரிக்வஸட் வந்து கொண்டே தான் இருக்கிறது. 

களையெடுக்கும் போது பயிரும் அடி வாங்குவது நடக்காமலிருக்குமா? 


ஐயாயிரம் மீ்ண்டும் மீண்டும் நிரம்பி வழிகிறது. 


போன வாரம் அன்ஃப்ரண்ட் செய்யும் போது  Stress. 


ஐயாயிரம் ஃப்ரண்ட்ஸ் ல நாலாயிரத்து தொள்ளாயிரம் பேர் யாரென்றே தெரியாது. இவர்களில் பெரும் பகுதி dead account என்பதும் தெரிந்தது தானே. 


கணக்கிலடங்காத முகவர்களை block செய்தாகி விட்டது. 


மீண்டும் மீண்டும் ஐயாயிரம் லிஸ்டில் வந்து விடுகிறது.


 ஃப்ரண்ட் லிஸ்ட்டில் இல்லாதவர்கள் பலர் 

என்னை வாசிக்கிறார்கள். சிலர் கமெண்ட் போடவும் செய்கிறார்கள். 


ஃப்ரண்ட் லிஸ்டில் இருப்பவர்களிலும்

 லைக் கொடுக்காமல்,

 கமெண்ட் போடாமல் 

வாசிக்கிறவர்கள் இருக்கிறார்கள். 

படிக்காமலே லைக் கொடுக்கிறவர்கள் கூட. 


 ஃபேஸ்புக்கில் என்னை மட்டுமே படிக்கும்

 சிலர் உண்டு.  ஒவ்வொரு பதிவு பற்றியும் சொல்வார்கள். லைக் கொடுப்பதில்லை. 

ஏன் லைக் கொடுக்கவில்லை, கமெண்ட் போடுவதில்லை என்று நான் கேட்டதேயில்லை.

என்னுடைய மிகச்சிறந்த வாசகர்கள் சிலர் கமெண்ட், லைக் ஒரு தடவை கூட போட்டதேயில்லை தெரியுமா? 

என் ஃப்ரண்ட் லிஸ்டிலும் அவர்கள் கிடையாது. 

 சிலர் இங்கே படித்து விட்டு வாட்ஸ் அப்பில் கமெண்ட் போடுவார்கள். 

பதிவு போட்ட அந்த சில நிமிடங்களில் படிப்பவர்களை அறிவேன்.


எனக்கு லைக், கமெண்ட் தேவையில்லை என்று   இரண்டு ஸ்டேட்டஸாக 

கடந்த நான்கு வருடங்களில் போட்டிருக்கிறேன். 


ராஜநாயஹம் blog hit முப்பத்திரெண்டு லட்சத்தை நெருங்குகிறது . Blog 24 மணி நேரம் வாசிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில். 


ட்விட்டரில் படிக்கிறார்கள்.


ஃபேஸ்புக் என்பதே 


புலி வால புடிச்ச கத.


தினமும் என் மொபைல் நம்பர் ஃபேஸ்புக் மெஸஞ்சர் பாக்ஸில் கேட்கிறார்கள். 

ஃபேஸ்புக் மெஸஞ்சர் மூலமாக கால் போட முயற்சிக்கிறார்கள். 


போன் போட்டவர்கள் ரெண்டு மணி நேரம் 

பேசி விட்டு 'சாரி சார், போன்ல சார்ஜ் போயிடுச்சி' 


தன் வலைத்தளத்தை படிக்க வேண்டும் என்று நூற்றுக்கணக்கில் கேட்கிறார்கள். 


வீடீயோ தினமும் அனுப்பி, அதை பார்க்கச் சொல்கிறார்கள். அபிப்ராயம் சொல்லவில்லை என்று சடைக்கிறார்கள். 


எழுத்தாளர்கள், கவிஞர்கள் தங்கள் புத்தகங்கள் 

அனுப்ப வேண்டி, விலாசம் கேட்கிறார்கள். 


'ராஜநாயஹம் நீங்க நல்லா எழுதுறீங்க. 

உங்க விலாசம் கொடுங்க. என்னோட அஞ்சு புத்தகங்கள அனுப்புறேன்.. '


புத்தகங்கள் அனுப்பியவர்கள் 'இன்னேரம் நொறுங்கியிருக்கணுமே' என்று 'ஏன் இன்னும் விமர்சனம் செய்யவில்லை' என்ற எரிச்சலில். 


ஏதோ நான் கடன் வாங்கி விட்டாற் போல. 


Internet magazines : 'எங்களுக்கு ஒரு ஆர்ட்டிக்கிள் எழுதியனுப்பவும். நீங்கள் புதிதாக எழுதியதாக இருக்க வேண்டும்.' 


தங்களின் எதிர்பார்ப்பை நான் ஈடேற்றாததால் 

வருத்தத்திலும் கோபத்திலும் வேறுவிதமாக வினையாற்றுகிறார்கள். 

எதிரிகளாகிறார்கள். 


'ராஜநாயஹம் தலக்கனம் பிடிச்ச ஆளு.' 


என் போராட்டமான வாழ்க்கை முறை, 

மற்றவர்கள் எதிர் பார்ப்புக்கு ஈடு கொடுக்கும் 

நிலையிலெல்லாம் இல்லை. 


இவர்கள் யாரையுமே' என்னை படியுங்கள் ' என்று நான் கேட்டதேயில்லை. 


எல்லோருமே என்னை படித்தவர்கள். 

பரஸ்பரம் வேண்டுகிறார்கள்.


ம்ஹூம். மாட்டேன், போ. 


..

Sep 13, 2020

எம். ஜி.ஆர் அண்ணன் மகனும் ஜெயலலிதா அண்ணன் மகளும்

 


ஜூனியர் விகடன் கழுகார் நோட் 

- எம். ஜி.ஆர் அண்ணன் சக்ரபாணியின் மகன் சந்திரன் கரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவு‌ம் அரசு தரப்பிடம் சில உதவிகள் கேட்டும் யாருமே கண்டு கொள்ளவில்லையாம். 


இதை பார்த்த நேற்றே ஹிண்டு பேப்பரில் 

Obituary column அவருடைய இறப்பு செய்தி பார்க்க கிடைத்தது. 


எம். ஜி.ஆர் வாழ்க்கையின் பிஸியான 1950, 60 களில் அவருடைய பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் தன் தோள் கொடுத்தவர் பெரியவர் சக்ரபாணி. 


வரவு செலவு விவகாரங்களில், கால்ஷீட் விஷயங்களிலெல்லாம் அந்த சின்னவர் செய்த தவறுக்கெல்லாம் பெரியவர் தான் பொறுப்பேற்று கெட்ட பெயர் வாங்கியவர். 

நல்லது எல்லாம் சின்னவருக்கு 

கெட்டதெல்லாம் தனக்கு என்று பெரியவர் ஏற்றார். 


ஜானகியம்மாள் கை ஓங்கிய பின் பெரியவர் ஏமாந்து நின்ற நிலை என்று சொல்வார் உண்டு. 


தனக்கு கிட்னி கொடுத்தவர் பெரியவர் மகள் லீலாவதி என்பதே சின்னவருக்கு 

ரொம்ப பின்னால் தான் 

தெரிய வந்திருக்கிறது. 


பெரியவர் மகனுக்கு இப்படி அலட்சியம் காட்டியிருக்க வேண்டாம். 


... 


ஆனந்த விகடனில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா 


" என் தனிப்பட்ட விருப்பத்துக்கு எதிராத்தான் நான் அரசியலுக்குள்ள வந்தேன். அது தப்பான முடிவுன்னு தாமதமாத்தான் புரிஞ்சிக்கிட்டேன். "


நல்லது. For this relief much thanks. 


தீபாவின் அடுத்த அகலக்கால் 


" என்னோட கனவு ஒருஎழுத்தாளரா ஆகணும்கிறது தான். இனி அதை நோக்கித் தான் 

என் பயணம் இருக்கும் "


எழுத்துலகம் பராக் பராக்

For never was a story of more woe than this

 For never was a story of more woe than this 


- Shakespeare on teen age suicide. 


மூன்று குழந்தைகள் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டிருப்பது பெருந்துயரம். 


An act of despair. 


ஜோதிஸ்ரீ துர்கா ஆடியோவில் 

   தன் பெற்றோருக்கு  டாட்டா சொல்கிறாள். 

The most painful good bye. 


There is no painful experience

 like losing a child to suicide. 

Kids today don't think about their suicide's consequences. 


இன்று நீட் தேர்வு எழுதுகிற மாணவ செல்வங்களை மாலையில் இருந்து பெற்றோர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். 


பரிட்சை சரியாக எழுத முடியாமல் போய் விட்டதே என்று ஏதேனும் விபரீதம் நிகழ்ந்து விடக் கூடாது. 


குழந்தைகளுக்கு எப்படி புரிய வைக்கப் போகிறோம். 

This is not the end of the world என்பதை எந்த நெருக்கடியிலும் மாணவர்கள் உணர்வது அவசியம். 

May be my path is different, 

may be other things are in store for me 

என்கிற attitude இருக்க வேண்டும். 


அரசாங்கம் நீட் விஷயத்தை 

முடிவு கொண்டு வர வேண்டும்.


"இனி பொறுப்பதில்லை"

- பாஞ்சாலி சபதத்தில் 

எட்டயபுரம் தலப்பா கட்டி

.. 

Sep 3, 2020

சேவல் முட்டை



அசோகமித்திரனுக்கு கொடுத்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், மளையாள சினிமா பாடலாசிரியர் ஒருவருக்கு ஞானபீடப் பரிசு கொடுக்கப்பட்டது.                                                 அசோகமித்திரனிடம் அப்போது 

அலை பேசி உரையாடிய போது சொன்னார்                       'இங்கே செல்வாக்கு மிகுந்த திரை பாடலாசிரியருக்கு இந்த விஷயம் மிகுந்த ஊக்கம் ஏற்படுத்தும். தனக்கான முயற்சிக்கு வேகமாக செயல் பட வைக்கும்.'


கி. ராஜநாராயணனுக்காவது அடுத்து ஞான பீட விருது கிடைத்து விடாதா? எதிர்பார்ப்பில் வருடங்கள் ஓடுகின்றன. 


' தமிழில் ஞான பீட பரிசு பெற்ற 

அகிலனை காட்டிலும் மிகப் பெரும் தகுதி

 தி. ஜானகிராமனுக்கு இருந்தும் அநீதி நடந்தது.

 பின்னர் இதே விருதைப் பெற்ற ஜெயகாந்தனை விடவும் கூட தி. ஜானகிராமன் பேரிலக்கிவாதி. அசோகமித்திரனும, கிராவும் கூட

 ஜெயகாந்தனை விட சாதனையாளர்கள் தான்.'

என்று நான் ஆதங்கப்பட்டு சொன்ன போது 

பதிலாக சரவணன் மாணிக்கவாசகத்தின்              குறும்பான பகடி :

'சித்திரப்பாவைக்கு கொடுத்தது அநீதி. வேங்கையின் மைந்தனுக்குக் கொடுத்திருக்கலாம். அதில் குதிரையெல்லாம் வந்தது.'


 போன வருஷம் ஒரு செய்தி கண்ணில் விழுந்தது.  

ஒரு முன்னணி தமிழ் திரை நடிகர் ஏதோ 

ஒரு மளையாளப் படத்துக்கு பாடல் எழுதுவதாக. 


                அதிர்ஷ்டக்காரனுடைய சேவல் முட்டையிடும்.

Sep 1, 2020

பிரணாப் முகர்ஜி

 பிரணாப் முகர்ஜிக்கு இரங்கல் தெரிவிக்கும் நேரத்தில் அவருடைய inconsistency பற்றி நினைவுக்கு வருகிறது. 

காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து 

விசுவாசமாக இருந்தவர் அல்ல. 


இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது 

ராஜீவ் காந்தியிடமே " இப்போது நான் தானே உடனடியாக பிரதமராக பதவியேற்க வேண்டும்?         சீனியர் மோஸ்ட் காபினெட் மினிஸ்டர் நான்.. " சந்தேகம் கேட்டவர். 


ராஜீவ் எரிச்சலாகி "இப்படி ஒரு நெனப்பா" என்று  அவரே பிரதமரானார். 

அப்புறம் மத்திய மந்திரிசபையிலும் பிரணாப்புக்கு இடமில்லை. 


தொடர்ந்து நடந்ததெல்லாம் வேடிக்கை. 


தன் சொந்த மாநிலத்தில் செல்வாக்கில்லாதவர். 

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தனிக் கட்சி ஆரம்பித்தார். அப்புறம் மீண்டும் காங்கிரஸில் வேறு வழியில்லாமல் இணைந்தார். 


மன்மோகன் சிங் பிரதமரான போது கூட 

பிரணாப் முகர்ஜிக்கு "வட போச்சே" தவிப்பு தான். ஏனென்றால் இவர் நிதியமைச்சராயிருந்த போது மன்மோகன் சிங் ரிசர்வ் பேங்க் கவர்னர். 


ஜனாதிபதியான பின் காங்கிரஸ் தோல்வி. 

பி. ஜே. பி. அரசு வந்த பிறகு இவருடைய செயல்பாடுகள் பற்றி காங்கிரசுக்கு 

வருத்தம் இருந்தது. 


பாரத ரத்னா விருது கூட வாங்கி விட்டார். 


இந்திய அரசியலில் இந்திராகாந்தி காலத்திலிருந்து பாரதீய ஜனதா ஆட்சி வரை நிறைய தாக்கங்களை காட்சிப் படுத்தியவர் பிரணாப் முகர்ஜி.


மேலோட்டமாக வெவ்வேறு காலகட்டங்களில் மேற்கு வங்க அரசியலில் ஜோதி பாசு, மம்தா பானர்ஜி இருவரின் ஆளுமை மிக்க ஸ்தானங்களை பார்த்தாலே 

பிரணாப் முகர்ஜி மக்கள் செல்வாக்கு இல்லாத பலஹீனமான வங்க அரசியல் வாதி 

என்பது தெரியும். 

இவரால் அந்த மாநிலத்தில் 

காங்கிரஸ் கண்ட பலன்?