Share

Showing posts with label Edward Albee. Show all posts
Showing posts with label Edward Albee. Show all posts

May 12, 2020

Virginia Woolf

Virginia Woolf- arguably the major lyrical novelist
 in the English Language.

வெர்ஜினியா வூல்ஃப்  1925 ல் எழுதிய நாவல்
Mrs Dalloway.

1999ல் புலிட்சர் விருது வாங்கிய நாவல்
The Hours.

மைக்கல் கன்னிங்காம் எழுதிய நாவல் The Hours.
இந்தTheHours நாவல் 'மிசஸ் டாலோவே'நாவல்
எப்படி மூன்று வெவ்வேறு தலைமுறை பெண்களை
பாதிக்கிறது என்பதை  மையப்படுத்தி எழுதப்பட்டது, வெர்ஜினியா வூல்ப் அந்த மூன்று பெண்களில் ஒருவர்.

1997 ல் Mrs Dalloway திரைப்படமாக
வானசா ரெட்க்ரேவ் முக்கிய பாத்திரத்தில்
நடித்து வெளிவந்தது.
வானசா ரெட்க்ரேவ் எப்போதுமே வித்தியாசமான ரோல் செய்வதில் ஆர்வமுள்ளவர்.
 Django பிராங்கோ நீரோவின் மனைவி.

இவர் நடித்த Blow up(1966) பார்த்தவர்கள் மறக்கவே முடியாது.

2002 ல்  TheHoursதிரைப்படமாக ஆனபோது
மூன்று பெண்களில் ஒருவராக
 மெரில்  ஸ்ட்ரீப் நடித்தார்.
  வெர்ஜினியா வூல்ப் கதாபாத்திரத்தில் நிகோல் கிட்மன் நடித்திருந்தார். ஆஸ்கார் விருது பெற்றார்.

இன்னொரு படம் பற்றி குறிப்பிட வேண்டும் .
1966 ல் ரிச்சர்ட் பர்டன் -எலிசபெத் டைலர் இணைந்து நடித்த  Who is afraid of Virginia Woolf?

இந்த படத்தில் இந்த பெண் எழுத்தாளர் பெயர் தலைப்பில் இடம் பெற்றிருந்தது.
ஆனால் கதைக்கும் வெர்ஜினியா வூல்ப்க்கும் தொடர்பு கிடையாது.
Zoo story நாடகாசிரியர் எட்வர்ட் அல்பீ எழுதிய ஒரு நாடகத்தை தான் படமாக்கியிருந்தார்கள்.

இந்த படத்தில் ரிச்சர்ட் பர்ட்டனுடைய
ஒரு டயலாக் பிரபலம்

 “Good, Better, Best, Bested”

....

கன்னத்தில் கைவைத்துக்கொண்டு இருக்கும் வெர்ஜினியா வூல்ப் புகைப்படம்
அவள் சோகத்தை சொல்லும்.

அவளுடைய  ஆங்கில அம்மா இந்தியாவில் பிறந்தவள்.

அம்மாவுக்கு முதல்  கணவன் மூலம்
பிறந்த மகன் தன் half sister வெர்ஜினியாவிடம் செக்ஸ் விளையாட்டு நடத்தியவன்.

'Between the Acts'
என்ற கடைசி நாவலை எழுதிவிட்டு
தன்னுடைய ஓவர்கோட்டை எடுத்து
அணிந்து கொண்டு
அதன் பாக்கெட்களில் நிறைய கற்களை நிரப்பிக்கொண்டு
வீட்டுப்பக்கத்தில் உள்ள
நதியில் இறங்கி மூழ்கி
தற்கொலை செய்துகொண்டு
இறந்துபோனவள் வெர்ஜினியா வூல்ப்.

..

Mar 17, 2016

Edward Albee's "The Zoo story"




எட்வர்ட் அல்பீ எழுதிய  நாடகம் “The zoo story.”
 
எட்வர்ட் அல்பீ 12 வயதிலேயே ஒரு பாலியல் பகடி நாடகம் எழுதியவர்.
 அவர் அதன் பின் எழுதிய இரண்டாவது  நாடகம் தான் இந்த ”மிருகக்காட்சி சாலை கதை”. முப்பது வயது அப்போது. அமெரிக்க நாடகாசிரியர்.

பீட்டர் – ஜெர்ரி என்று இரண்டே கதாபாத்திரங்கள் தான் இந்த நாடகத்தில். நியூயார்க் நகரத்தின் சென்ட்ரல் பார்க். அங்கே பீட்டர் அமர்ந்திருக்கிறான். ஒரு நடுத்தர வர்க்க மனிதனுக்கு மனைவி, இரண்டு மகள்கள், இரண்டு பூனைகள், கிளிகள் என்று பப்ளிஷிங் எக்ஸிக்யூடிவ் தான் பீட்டர். சலிப்பாக கேட்கிறான் :”Am I the guinea pig for today?” நான் தான் இன்று உனக்கு பலியாடா? இன்று உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?


 ஜெர்ரி ஒரு ஏகாந்தி. மனம் தளர்ந்த மனிதன். அர்த்தப்பூர்வமான உரையாடல் நடத்த ஏங்குபவன். பீட்டரை அணுகி “ நான் மிருகக்காட்சி சாலைக்குப் போனேன்..”என்று ஆரம்பிக்கிறான். அவன் சொந்த வாழ்க்கை பற்றிய விவரங்களை பீட்டரிடம் வலிந்து திணிக்கிறான். “ I don’t like to use words that are too harsh in describing people. I don’t like to. But the landlady is a fat, ugly, mean, stupid, unwashed, misanthropic, cheap, drunken bag of garbage.”
 
 ’நான் ஏன் ஜூவுக்குப்போனேன்’ என்று வள,வள என்று சொல்லி …..அதன் பின் கடைசியில் கத்தியை எடுக்கிறான். கத்தியை பீட்டர் எடுக்கும்படி கீழே போடுகிறான். கத்தியை பீட்டர் தன்னை பாது காத்துக்கொள்ள நினைத்து கையில் எடுக்கும்போது ஜெர்ரி கத்தி தன் நெஞ்சில் பாயும்படி ஓடி வந்து மோதுகிறான். பீட்டர் தான் ’ஐயோ கடவுளே! ஐயோ கடவுளே!” என்று கதறுகிறான். ஜெர்ரி ஒரே தடவை தான் ”ஐயோ கடவுளே!” என்று கடைசியாக சொல்லி விட்டு செத்துப்போகிறான்.
Habit is the ballast  that chains the dog to his vomit, Breathing is habit, Life is habit.


 நாடகத்தில் இரண்டு கதா பாத்திரங்கள். ஆனால் எட்வர்ட் அல்பீ சொல்வார் “ என்னுடைய நாடகத்தில் ஒன்றரை கதாபாத்திரங்கள் தான். ஜெர்ரி முழுமையாக உருவான, முப்பரிமாண கதாபாத்திரம். ஆனால் பீட்டர் குறைபட்ட பாதியான கதாபாத்திரம். முக்கிய பாத்திரமாக்கப்பட்டவன்.