17.04.2025 பதிவு
1992ல் நடந்த சம்பவம்.
பாக்யா ஆஃபிஸ்
ராசுக்குட்டி காலம்.
பாக்யராஜ் அசிஸ்டெண்ட் வெங்கடேஷின் சொந்த ஊரிலிருந்து வந்த ஒருவர். கூடவே அதே ஊரைச் சேர்ந்த இரு நபர்கள்.
சினிமா கனவுகளுடன்
பாக்யராஜ் கிட்ட சேரமுடியுமான்னு
முயற்சி.
வெங்கடேஷ் உதட்டை பிதுக்கி வழியில்லை என்பதை எதிர்மறையாக
உணர்த்துவதைப் பார்த்து
அவர் வெங்கடேஷிடம் "நம்ம ஊர்ல இருந்து நாங்க கிளம்பி டிக்கெட் எடுக்கும் போது 'மெட்ராஸ்'னு டிக்கெட் எடுக்கல. 'வெங்கடேஷ்' னு தான் டிக்கெட் எடுத்தோம்"
'உன்ன நம்பித்தான் வந்திருக்கேன்' என்பதை..
அந்த வார்த்தைகள் நாடகீயமாக என்பதால் இவ்வளவு காலம் கழித்தும் நினைவில் நிற்கிறது.
தற்செயலாக பக்கத்தில் இருந்து பார்த்த இந்த குட்டி நிகழ்வு கண்ணில் பசுமையாக.
அப்படி சொன்ன லிங்குசாமி 'ஆனந்தம்' இயக்கி திரையில்
கொடி கட்டி 'ரன்' 'பையா' 'வேட்டை' 'அஞ்சான்'..
கமலோடு சேர்ந்து 'உத்தம வில்லன்' தயாரித்து..
கொடவாசல்ல இருந்து வந்து..சாதாரண சாதனையா?
இன்று கடும் பொருளாதார சிக்கலில் கலங்கும் லிங்கு.
....
Jun 11, 2024
சுரேஷ் கோபி - ப்ரசாந்த் நந்தா
பாக்யராஜ் ஆபிஸில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்த
சுரேஷ் கோபியை
இயக்குநரை சந்திக்கவே விடாமல் அவருடைய அசிஸ்டெண்ட்கள் ரொம்ப அவமானப்படுத்தியதைப்பற்றி கேள்விப்பட்டதுண்டு.
இப்போது அவர் மத்திய அமைச்சர் ஆகி விட்டார்.
பாக்யராஜிடம் இது பற்றி பாண்டிச்சேரியில் சொன்ன போது
அவர் "உங்கள அவமானப்படுத்தினாங்கெள்ள,
சுரேஷ் கோபியையும் அப்டி பண்ணியிருக்கானுங்க."
ராஜநாயஹம் அனுபவித்த துயரமெல்லாம்
பாக்யராஜின் உதவி இயக்குனராக ஆன பிறகு ஐந்து மாதங்கள்.
அப்போது பாக்யராஜ் இன்னொரு சமாச்சாரம் சொன்னார்.
பாக்யராஜின் பெரும் ரசிகர்
ஒடிசா நடிகர் இயக்குநர் ப்ரசாந்த் நந்தா.
இவர் ஒடிசா முன்னாள் அமைச்சர். இப்போது பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர்.
இவர் 'அந்தஸ்தோடு' பாக்யராஜை தேடி வந்து சந்தித்திருக்கிறார்.