Share

Showing posts with label நகுலன். Show all posts
Showing posts with label நகுலன். Show all posts

Jan 28, 2021

A melancholic strain



"முடிவற்று 

நீளும் பாதையில் 

சிறு நத்தையென நகர்கிறதென் 

தனிமை.. "

- பரமேசுவரி 


பரமேசுவரியின் கவிதையைத் தொடர்ந்த 

எண்ண ஓட்டத்தில்... 


சிறுவனாக இருக்கும்போது

 ஏழாம் வகுப்பில் படித்த 

William Wordsworth 's The Solitary Reaper. 


Behold her, single in the field,

Yon solitary Highland Lass!

Reaping and singing by herself;


Alone she cuts and binds the grain,

And sings a melancholy strain.. 


O listen! 


No Nightingale did ever chaunt

More welcome notes... 

 

A voice so thrilling ne'er was heard

In spring-time from the Cuckoo bird.. 


Will no one tell me what she sings?


Some natural sorrow, loss, or pain,

That has been, and may be again?


Whate'er the theme, the Maiden sang

As if her song could have no ending... 


எந்த பெரிய அனுபவமுமில்லாத 

பன்னிரெண்டு வயதில், 

நெஞ்சில் நிறைந்த துக்கத்தை 

இந்த கவிதை ஏன் ஏற்படுத்தியது?


இன்று இப்போது

 ஒன்றுமில்லாமல் புத்தி வறண்டிருப்பது

 தி. ஜானகிராமன் வார்த்தைகளில் 

இதமாகத் தான் இருக்கிறது. 

The bliss of solitude. 


உறைந்து போன நிலை. 


எட்டயபுரம் தலப்பா கட்டி தந்த சிட்சை - 

'நெஞ்சம் துவளாதிருத்தல் சுகம்'


Man is left alone in this world 

ஜோஷ் வண்டேலு 'அபாயம்' நாவலில் வருகிறது. 


ஜோஷ் சொன்னதையும் தாண்டி, 

நகுலன் 

" எனக்கு யாருமே இல்லை. 

நான் கூட " என வேதனைப்பட்டவர்.


இன்னொரு associate memory.. ஒரு சிறுகதை. வண்ணநிலவன் சிறுகதை.' மிருகம் '. பன்முக விவரணை. சிவனு நாடார் நாயை எதிர் கொள்ளும் மிருக இயல்பு. வறுமை. தனிமை.         

 பயங்கர தனிமையை சித்திரமாக்கிய கலைஞன் வண்ணநிலவன்.


..

Nov 4, 2020

Dangerously dysfunctional

 அச்சரங்களுடைய நகரம் கோட்டயம். 

பூரங்களுடைய நகரம் திருச்சூர். 

After effects ஊர்களுக்கும் உண்டாகும். 


நந்தியின் மகன் தான் விநாயகன் 

என்று ஒரு குறிப்பு. 


நகுலனின் குட்டியான ஆங்கிலக் கவிதை 

What is birth? 

We are the after - effect. 


சிவ வாக்கியர் ' மரணம் - அது ஜனனத்தின் பயன்.' 


 டெம்பஸ்ட்டில் சேக்ஸ்பியர் : Hell is empty, and all the devils are here. 


ஓ, அப்படியா. Dangerously dysfunctional. 


To spell this out in black and white - 

அதனால் தானா The devil has better chance in this world. 


ஆயிரம் வருஷ பழைய கோயில்களை பார்ப்பதில் எப்போதும் ஒரு கிளர்ச்சி, பரவசம் உண்டு. 

மூன்று வருடங்களுக்கு முன் குறுங்காளீஸ்வரர் கோயில் பார்க்க  போயிருந்த போது 

குருக்களின் lip service "இந்த கோயிலுக்கு வந்துட்டாலே நல்ல காலம் பொறந்துட்டதுன்னு அர்த்தம். நல்ல காலம் ஆரம்பிச்சா தான் இந்த கோயிலுக்கு வர முடியும்." 


ஒரு  நாடகத்தில் பகவான் க்ருஷ்ணராக 

க்ரேஸி மோகன். 

க்ரேஸி க்ருஷ்ணருக்கு போன். 

" க்ருஷ்ணா, போன்ல உங்க அம்மா "


" நான் இல்லேன்னு சொல்லிடு "


" நீ இல்லேன்னு சொன்னா

 அது நாத்திகம் இல்லையா? "


" நான் ஆத்துல இல்லேன்னு சொல்லிடு. 

அது ஆத்திகம் "


... 

Oct 8, 2020

வார்த்தைகள் விரைந்து செல்லும் எறும்புகள்

 'நினைவுப்பாதை' 

நாவலில் நகுலன் சொல்வார் 

"காகிதத்தின் மீது 

விரைந்து செல்லும் எறும்புகள் தானே வார்த்தைகள்" 


இப்போது லேப்டாப், மொபைலில் வாசிக்க காணும் வலைத்தள எழுத்தும் கூட நகுலன் சொல்வது போல 

" கொசுக்கள் பந்து போல் திரளாக 'நொய்' என்று சப்திப்பது போல் வார்த்தைகள் சப்திக்கின்றன. விரைந்து செல்லும் எறும்புகள். 

வலைத்தள தட்டச்சில் பிறந்து கணினியில் சலிக்கும் உருவங்கள்."

.. 


இருக்கிறபடி பார்த்த புரிதல்படி 

அப்படியெல்லாம் கூப்பிடக்கூடாது என்று

 இங்கே கொஞ்ச காலம் 

அரசியல் மிதப்பில் சொக்கிக்கொண்டிருந்த 

ஜெ. தீபா சொல்லிச்சு. 

" என்னுடைய டிரைவர் ராஜாவை

 டிரைவர் என்று யாரும் சொல்லக்கூடாது "


இல் பொருள் உவமை அணி. 


தீபாவின் பேரவை கட்சி முக்கிய பதவி கூட 

அந்த டிரைவருக்கு கிடைத்தது. 

தீபா கணவரிடம் அந்த டிரைவர் சீற்றத்துடன் 

" நகைய தூக்கிட்டுப் போன

 திருடன் தானடா நீ"ன்னு 

சண்டை போட்டதை

 டிவி செய்தியில் காட்டினார்கள். 

இல் வாழ்க்கை 

பிறன் பழிப்பதில்லாயின் நன்று. 


பாசம் படத்துல தன்னைச் சுற்றியுள்ள மூன்று அனுகூல சத்ருக்களைப் பார்த்து எம். ஆர். ராதா சொல்வார் : 'நீங்கள்ளாம் எதிரி இல்ல. திரி.' 


திரி டிரைவரா? கணவரா? 


மன நிலை பொறுத்து 

ஒரு நேரம் திரி, மறு நேரம் எதிரி. 


கொஞ்ச காலம் தான் என்றாலும் 

மறக்க முடியாத Funny Politician தீபா. 


.. 


எப்போதும் இருக்கும் யதார்த்த பழமொழி 

 இந்த கோவிட் 19 காலத்தில் 

முழு அர்த்தம் கொள்கிறது. 

ஜீவிதம், ஜீவனம் இரண்டுமே 

கடுமையான சவாலாகியுள்ளது. 

'மனுஷ்ய ஜீவிதம் அநித்யம். 

மனுஷ்ய ஜீவனம் அசத்யம்'


குறள் - சாதலின் இன்னாததில்லை 


There is a cure for everything except death. 


ஃப்ரான்சிஸ் கிருபா கவிதை 


'படைச்சி படைச்சி 

சலிச்சி போச்சி என்றான் 

கடவுள் 


அழிச்சி அழிச்சி 

சடைஞ்சி போச்சி என்றான் 

சாத்தான்


வாழ்ந்து வாழ்ந்து 

புளிச்சிப் போச்சி என்றான் 

ஒரு மனிதன் '

Aug 31, 2019

Obsolete Soft drinks Ads


The theatre 
Is womb dark
The picture is bright.

- Nakulan

நகுலனின் ஆங்கில கவிதைகளெல்லாம் ரொம்ப சிக்கனமானவை.
பால்யத்தில் திரைப்பட அரங்குக்கு எந்த படம் பார்க்க போனாலும் சில விளம்பரங்கள் பொதுவானவை.
அரங்க இருட்டில் வெளிச்சத்திரையில்.
பசுமரத்தாணி போல விளம்பர பாடல்கள் மனதில் பதிந்தது அதனால் தான்.
நல்ல வண்ணத்தில் விளம்பரங்கள்.
Coca Cola
லேசான சாரல் மழையில்
ஒரு தாழன் தாட்டிய அணைஞ்சுகிட்டே பாடுவான்.
“ கண் காணும் சந்தோஷமே
எல்லோர்க்கும் கொண்டாட்டமே
கையோடு கை மாறுமே
கண்ணோடு உறவாடுமே
ஏங்கும் கண்களிலே தேங்கும் சந்தோஷமே
இன்பம் எங்கும் தங்கும்
கோக்க கோலா சுகம்
இன்பம் மூட்டிடும் கோக்க கோலா,
கோக்க கோலா ஜோர்.

Fanta 
பருகிடுவீரே,
தினமும் மகிழ்ந்திட பருகிடுவீர்
ஃபேண்ட்டா ஆரஞ்ச் பருகிடுவீர்
ஃபேண்ட்டா ஆரஞ்ச் பருகிடுவீர்


I had watched what attracted me and 
sometimes it was an Ad.
இப்போதும் கூட என்னையறியாமல் இந்த விளம்பரப்பாடல்களை குரலெடுத்து பாடுவதுண்டு.

Double Seven

1977ல் இந்திரா காந்தி அரசாங்கம் போய் ஜனதா அரசாங்கம் வந்து கோகா கோலாவையும் ஃபாண்டாவையும் தடை செய்து அரசாங்கமே தயாரித்த ’டபுள் செவன்” சாஃப்ட் டிரிங்க் விளம்பரப்படுத்தப்பட்டு மார்க்கெட் செய்யப்பட்டது.
இந்திராகாந்தி 1980ல் ஜெயித்த போது தன் காங்கிரஸ் தோல்வியை ஞாபகப்படுத்தும் 77 கூல்ட்ரிங்க் எப்படி தொடர முடியும்? சட்டத்தால் அகற்றப்பட்டது.


Jun 18, 2019

கெட்ட கெட்ட வார்த்தைகள்


முந்தாநாள் ஜுன் 16ம் தேதி கிருஷ்ணன் நம்பி நினைவு நாள்.
போன மாதம் நம்பியின் “தங்க ஒரு...” சிறுகதையை கூத்துப்பட்டறையில் வாசித்து விளக்கி பேசினேன்.
மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியதை அப்போது கண் கூடாக கண்டேன்.
சென்னையில் வாடகை வீட்டு பிரச்னையின் மீதான அங்கதம் இந்த மாய யதார்த்த கதையில் வெளிப்பட்டிருக்கிறது.
நகுலன் இந்த கதை பற்றி “ ’ தங்க ஒரு...’ இடம் கிடைக்கவில்லை என்பதில் ஒரு இலக்கியத்தன்மை இருக்கிறது. இது ஸ்விஃப்ட் எழுதிய கலிவரின் யாத்திரையைப் பின்பற்றுகிறது. கேலிச் சுவையைக் கலாபூர்வமாக ஆள்வதில் புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’ கதையை விட சிறப்பாக வந்திருக்கிறது “ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கிருஷ்ணன் நம்பியின்’விளையாட்டுத் தோழர்கள்’ கதை பற்றி அவருடைய தம்பி கிருஷ்ணன் வெங்கடாசலம் ஒரு விஷயம் சொன்னார்.
குட்டிப்பையன் சங்கா பள்ளிக்கூட விடுமுறை நாளில் விளையாட தவிப்பான். விளையாண்டு கொண்டிருக்கும் தோழர்களிடம் “ நானும் வடேன்டா” என்று கெஞ்சுவான். 

கிருஷ்ணன் நம்பி இதற்கு ஒரு சிறுவன் சொல்லும் பதிலாக “ போலே தாயோளி, நீ ஒன்னும் வாண்டாம் ” என்று எழுதியிருந்திருக்கிறார். பத்திரிக்கையாசிரியர் ‘போலே தாயோளி’ என்பதை நீக்கி வெளியிட்டாராம். விஜய பாஸ்கரன் ஆசிரியராய் இருந்த ’சரஸ்வதி’ யில் 1961ல் வந்த கதை ’விளையாட்டுத்தோழர்கள்’.
சுந்தர ராமசாமியிடம் “ உங்க கதையில் வர்ற ’முலை’ய மட்டும் வெட்டிடறேனே “ என்று ட்ரங்க் கால் போட்டு சத்தமாக கூப்பாடு போட்டு பேசியவர் விஜய பாஸ்கரனாய் தான் இருக்குமோ? சு.ராவின் கதைகள் சரஸ்வதியில் பிரசுரமாகியிருக்கிறது. அவருடைய நாவல் “ புளிய மரத்தின் கதை” யின் ஆரம்ப அத்தியாயங்கள் கூட ‘சரஸ்வதி’யில் வந்தது.
இப்போது கூட கெட்ட வார்த்தை எழுத்தில் வரக்கூடாது என்கிற கூச்சம் நிறைய பேருக்கு இருக்கிறது.
என்னை முப்பது வருடங்களுக்கு பின் தேடி கண்டு பிடித்த என் காதலியொருவர் என் எழுத்தில் நிறைய கெட்ட வார்த்தைகள் இருப்பதாக அதிருப்தி தெரிவித்தார். கெட்ட வார்த்தைகள் எழுதுவதை நிறுத்துமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

https://rprajanayahem.blogspot.com/2019/05/blog-post_27.html






May 30, 2019

கிருஷ்ணன் நம்பி எனும் குழந்தைமை கலைஞன்


தகவல் பிழை எழுத்தில் வந்து விடக்கூடாது என்பதில் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டாலும் அதையும் மீறி ஏற்படவே செய்கிறது.
கிருஷ்ணன் நம்பி ஆக்கங்களில் அவருடைய நீலக்கடல் முகவுரை இல்லை என்றே எனக்கு தோன்றியது. அதை கிருஷ்ணன் நம்பி பற்றிய பதிவில் குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.
ஆனால் அந்த ’நானும் கடவுளும் அறிஞனும்’ என்ற முகவுரை காலச்சுவடு வெளியிட்ட கிருஷ்ணன் நம்பி ஆக்கங்களில் இடம்பெற்றிருக்கிறது என்பதை நம்பியின் தம்பி கிருஷ்ணன் வெங்கடாச்சலம் எனக்கு கவனப்படுத்தினார்.
என்னுடைய ‘ இலக்கியம், இசை, ஹாலிவுட் பதிவுகள்’ நூலை படித்து விட்டு தொலைபேசியில் பேசி அவர் வீட்டுக்கு வரச்சொன்னார். அவரை சந்தித்த போது என் தகவல் பிழை பற்றி சுட்டிக்காட்டினார்.
அதை உடனே ப்ளாக் பதிவில் திருத்தி விட்டேன். ஆனால் நூலில் இடம் பெற்றிருக்கிறது.
இது போல் சென்ற மாதம் என்னுடைய மற்றொரு தகவல் பிழை பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய பாடலொன்று ’நாளைய தீர்ப்பு’ படத்தில் இடம்பெற்றிருந்ததாக பி.பி.எஸ் பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அந்த படம் ‘நாளைய செய்தி’ என்பதை அறியவந்தேன். இதையும் ப்ளாக்கில் திருத்தினேன்.
நம்பி எழுதிய முகவுரை சிறப்பான ஒன்று. எனக்கு ’குட்டி இளவரசன்’ பிரஞ்சு புனைவில் அந்த்வான் செந்த் எக்சுபெரி எழுதிய குட்டி முகவுரைக்கு ஈடான அற்புதமான ஒன்று.
’நானும் கடவுளும் அறிஞனும்’ படிக்கும்போதெல்லாம் நம்பி தான் சந்திரன் என்றும் சுந்தர ராமசாமி தான் சூரியன் என்பதாகவுமே எண்ணுவேன்.
மீண்டும் அந்த முகவுரையை இங்கே தருவதில் தவறில்லை.

கிருஷ்ணன் நம்பி ’நீலக்கடல்’ சிறுகதைத் தொகுப்புக்கு அந்த எழுதிய முகவுரை.
நானும் கடவுளும் அறிஞனும்
நான் உள்ளத்தாலேயே சிந்திக்கிறேன்; உணர்ச்சியாலேயே சிந்திக்கிறேன். என் புத்தி தன் போக்கில் இயங்கி, அதிலிருந்து அறிவின் சாரம் -அறிவு ரஸம் - ( ’ஸீரம்’) என் உள்ளத்தில் இறங்கி என் உணர்ச்சிகளில் கலக்கிறது. கவியின் அறிவுக்கேந்திரம் உணர்ச்சி தான். அறிஞனுக்கு உணர்ச்சி வேலைக்காரன் என்றால், கவிக்கு அறிவு வேலைக்காரன். அறிவின் தீட்சண்யம் கதிரவன் என்றால், உணர்ச்சியின் தீட்சண்யம் சந்திரன். சந்திரன் தண்மை நிறைந்தது; மென்மை நிறைந்தது. மக்கள் மனத்தில் கனவுகளையும், காதலையும் எழுப்பவல்லது. இன்பமயமானது; இனிமையானது. ஓ, அறிஞனே, நீ சூரியன். நீ உஷ்ணமானவன். உன் உஷ்ணம், உன் வெம்மை, அத்தியாவசியமானது எனினும், சக்தி வாய்ந்தது எனினும், நீ இன்பமானவன் அல்ல. உன் தழுவல் சுறுசுறுப்பை, உழைப்பை, செயலைத் தூண்டும் எனின், சந்திரனாகிய என் தழுவல் இன்பத்தை, கனவை, கவியை, போதையைத் தூண்டும். உனக்கு மாபெரும் வெற்றிகள் சித்திக்கலாம். ஆனாலும் உன் வெற்றியை ஒப்புக்கொள்ள எனக்குப் பிடிக்காது. சூரியனே சந்திரனுக்கு ஆதாரம் என்றாலும் சூரியன் சூரியன் சூரியன் தான்; சந்திரன் சந்திரன் தான்! நான் பலவீனமானவன் என்றாலும் நான் உன்னதமானவன். நான் கடவுளின் செல்லக்குழந்தை. நீ கடவுளின் போர்வீரன். உன்னைக் கண்டு நான் அஞ்சி ஓடக்கூடும் எனினும், நான் கடவுளின் மார்பில் கொடியாய்த் தவழக்கூடிய செல்ல மதலை. நீயோ கடவுளருகில் கம்பீரமாய் நிற்கவேண்டிய காவல் வீரன். நீ அழுதால் சினந்து சீறும் கடவுள், நான் அழுதால் என்னைத் தோளில் போட்டுத் தழுவுவான். முத்த வெள்ளம் சொரிவான். உன்னை அழைத்து, “ ஓ, போர் வீரா! ஓடிப்போய் இந்தப் பயலுக்குப் பாரிஜாத மலர்கள் பறித்து வா; ஓடிப்போ!” என்பான் ஈசன்.
கிருஷ்ணன் நம்பி பற்றி நகுலன் பிரமாதமாக சொல்லியிருக்கிறார்.
“நாஞ்சில் நாட்டிலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் – ஒரு என்று சொல்வதை விட ‘ஒரே’ என்று சொல்லும் அளவுக்கு – ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஸ்ரீ கிருஷ்ணன் நம்பி”
’நம்பி ஓர் உண்மையான கலைஞன்’ என்பது நகுலனின் ஆணித்தரமான அபிப்ராயம். ‘ஒரு எழுத்தாளன் என்ற வகையில் நம்பியைப்போல் தோல்வி ( இது தோல்வி என்றால்) அடைவதையே நான் மதிக்கிறேன்’ என்றார்.
குழந்தைமை மனவார்ப்பு அற்புதமாக கொண்டிருந்த எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி.
நீலக்கடல், விளையாட்டுத்தோழர்கள் போல எத்தனை குழந்தை கதைகள்.
நீலக்கடல் 1952ல் எழுதஆரம்பித்து அரைகுறையாக அப்படியே போட்டு விட்டு 1961ல் தான் முடித்தாராம்.
இதில் பாட்டி சொல்லும் கதை - பாலகிருஷ்ணன், பாலமுருகன், பிள்ளையார் கிட்டிப்புள் விளையாண்ட கதையை நான் ஸ்போக்கன் இங்க்ளீஷ் டீச்சராய் இருந்த போது குழந்தைகளுக்கு நான் ஆங்கிலத்தில் எப்போதும் சொல்லியிருக்கிறேன்.
மருமகள் வாக்கு, அவனும் ஒரு மரநாயும், தங்க ஒரு .. வருகை, போன்ற கதைகளெல்லாம் பெருஞ்சாதனை.
ஆதவன் மரணம் தந்த துக்கம் அளவிற்கு நம்பி அகாலமாய் இறந்திருக்கக்கூடாது என்ற தவிப்பும் எப்போதும் இருக்கிறது.

May 9, 2019

கு.அழகிரிசாமி


”கு.அழகிரிசாமியின் சிறுகதைகளை தனித்தனியாக பத்திரிக்கைகளில் அவ்வப்போது படித்துப் பார்த்தபோது அவை அப்படி ஒன்றும் பிரமாதமானவையாகத் தோன்றவில்லை. ஆனால் சேர்த்து புஸ்தக ரூபத்தில் ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கும் போது, சங்கீத ரஸிகர்கள் சொல்கிறார்களே அது போல் ‘ஐயோ!’வென்றிருக்கிறது. எப்படித்தான் இந்தச் சிறுகதையாசிரியர் இப்படியெல்லாம் எழுதினாரோ? என்றிருக்கிறது” என்று க.நா.சு 1959லேயே மலைத்துப் போயிருக்கிறார்.

நகுலன் “அழகிரிசாமியின் கதைகள் மனநிலைகளை நுணுக்கமாக விவரிப்பதிலும் சௌந்தரிய உணர்ச்சியின் பரிணாமத்தையும் உள் வளைவுகளையும் தாங்கியிருப்பதிலும் இவ்வளவு இருந்தும் பிரத்தியட்ச உலகின் தொடர்பு அறாமலிருப்பதிலும் நம்மைக் கவர்கின்றன, ஆனால் கு.அழகிரிசாமி கலையைப் புரிந்துகொண்டு அனுபவிப்பதற்கு வாசகனும் நுண்ணுணர்வு பெற்றவனாக இருக்கவேண்டும்.”
மேலும் நகுலன் 1961ல் சொன்னார் “ புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, இவர்களுடன் உடன் வைத்துப் பேசக்கூடிய தகுதி வாய்ந்தவர் கு.அழகிரிசாமி. சொல்லப்போனால் இக்குறிப்பிட்ட ஆசிரியர்களின் சாயை அழகிரிசாமியிடம் ஒரு நூதன ரூபமெடுத்திருக்கின்றன. இவர்கள் அனைவரிடமிருந்தும் தனித்து நிற்கும் ஒரு பண்பும் கலைத்திறனும் அவருடைய கதைகளுக்கு உண்டு. அவருடைய கதைகளை ஒருமுறைக்கு இரு முறையாக படிப்பவர்களுக்கு சௌந்தரிய உணர்ச்சி என்பதன் தனி அர்த்தம் தெளிவாக விளங்கும்.
கதைத்தொகுதிகளை இன்று மூன்றாவது முறையாகப்படிக்கும் போது வட்டமிடும் உணர்ச்சி என்னவென்றால் அவர் கதைகளில் காணப்படும் ஒரு நூதனமான ’நகைச்சுவை’. விளக்கமாகச் சொல்லப்போனால் அவருடைய கதைகளுக்கெல்லாம் அர்த்தம் கொடுப்பது ஒரு தனிவிதச் சிரிப்புத்தன்மை. ஆனால் அவரை நாம் ஒரு பொழுதும் ஒரு நகைச்சுவை ஆசிரியராகச் சாதாரணமான அர்த்தத்தில் கருத முடியாது. ஒரு மேல்நாட்டு ஆசிரியர் ஆனந்த பாஷ்பத்தின் அடித்தளத்தில் நாம் துக்கக் கண்ணீரின் உலர்ந்த சுவட்டைக் காணலாம் என்று சொன்னார். அந்த அர்த்தத்திலும் நாம் அழகிரிசாமியின் நகைச்சுவைக்கு வியாக்கியானம் அளிக்க முடியாது. இதைச் சற்று வார்த்தைகளில் விவரிப்பது கடினம் தான்.”
அழகிரிசாமி செய்த ஒரு சபதம் “குழந்தைகளை அடிக்க மாட்டேன். கம்ப ராமாயணத்தின் மீது சத்தியம்.”
அவருடைய பிள்ளைகள் அதிர்ஷ்டக்காரர்கள். சாரங்கன் தன் அப்பா கையால் அடிவாங்காத மகன். கம்பராமாயணத்தின் மீது சபதம்.

அழகிரிசாமிக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் ஆகியோர். He was having some strong likes and dislikes. மௌனியையும் லா.ச.ராவையும் சுத்தமாக பிடிக்காது. இவர்கள் இருவரும் எழுதியவை கதைகளாகவே தனக்குத்தோன்றவில்லை என்று கடுமையாக பேசினார்.
அழகிரிசாமி சிறுகதைகள் முழு புத்தகமாக பதிப்பாசிரியர் பழ அதியமான் அவர்களின் சீரிய முயற்சியில் காலச்சுவடு வெளியீடாக எட்டு வருடங்களுக்கு முன் வந்திருக்கிறது.


அழகிரிசாமியின் சில கதைகள் படித்து எவ்வளவு காலம் ஆனாலும் கூட சட்டென்று சிரமமின்றி நினைவின் மேலெழும்பி வரக்கூடியவை.
திரிபுரம், அன்பளிப்பு, ராஜா வந்திருக்கிறார், அழகம்மாள், திரிவேணி, குமாரபுரம் ஸ்டேசன்,சுயரூபம் ஆகிய கதைகள். சில கதைகளை குறிப்பிடுவதால் கொஞ்சம் நல்ல கதைகள் தான் போல என்று யாருமே எண்ணி விட வேண்டாம்.
கி.ராவுக்கு அழகிரிசாமி எழுதிய கடிதங்கள் காட்டும் உலகம்.

கு.அழகிரி சாமி இசையறிஞர் விளாத்திகுளம் சுவாமிகளைப் பார்த்தவுடன் கி.ராவிடம் சொன்னாராம் " கம்பர் இப்படித்தான் இருந்திருப்பார்!"
இதே போல கு.அழகிரி சாமி ரசிகமணி டி.கே.சி யைப் பார்த்தவுடன் உடனே,உடனே சொல்லியிருக்கிறார் "அடையா நெடுங்கதவு வீடுகொண்ட சடையப்ப வள்ளல் இப்படித்தான் இருந்திருப்பார்!"
 1990ல் புதுவையில் ஒரு கட்டடத்தில் புத்தகக்கண்காட்சி. கி.ராவுடன் நான் உள்ளே நுழையும்போது செருப்பை வெளியே விட வேண்டியிருந்தது. உடனே கி.ரா
“இப்படி செருப்பை கழற்றி விட்டு செல்ல வேண்டியிருக்கும் போது அழகிரிசாமி என்ன செய்வான் தெரியுமா? ஒரு செருப்ப இங்கன போடுவான். இன்னொரு செருப்ப அங்கன போடுவான்.”
திருடு போய்விடக்கூடாது என்பதற்காக!
இப்படி அழகிரிசாமி பற்றி கி.ரா. நினைவில் இருந்து அள்ளித் தெளிக்கும் விஷயங்களை கேட்கும்போது அவரை பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லையே என்ற ஏக்கம் தான் ஏற்படும்.

திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தில் அமுதன் அடிகள் என்னிடம் கு.அழகிரிசாமியின் சிறுகதைகளை அங்கே ஒரு பிரபலத்திற்கு தந்துதவும்படி சொன்னார். ”புத்தகங்கள் திரும்ப கிடைக்கும். நான் பொறுப்பு” என்றார்.
அதன் படி அந்த மனிதர் என் வீட்டுக்கு வந்து என்னிடம் இருந்த அனைத்து அழகிரிசாமி சிறுகதை தொகுப்புகளையும் வாங்கிச்சென்றார்.
அவருக்கு அழகிரிசாமி கதைகள் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்கிறதாம். ஒரே மாதத்தில் திருப்பித்தருவதாக சொன்னார்.ஆறு மாதமாக தரவேயில்லை.
அமுதன் தர்மசங்கடத்துடன் கையை பிசைந்தார். என்ன இந்த மனிதர் இப்படியிருக்கிறார் என்று வேதனைப்பட்டார்.
நான் மனந்தளரவில்லை. அவருடைய வீட்டுக்குப் போய் விட்டேன். அவருடைய மனைவி தான் இருந்தார். புத்தகத்தை திருப்பித்தர நினைவு படுத்தி விட்டு வந்தேன்.
ஒரு வாரம் கழித்து அவர் தன் மகளை அழைத்துக்கொண்டு வந்தார். முகம் விளங்கவில்லை. புத்தகங்களை திருப்பி கேட்டு அவரை அவமானப்படுத்தி விட்டதாக கருதுகிறார் என்பது அவர் முக விலாசத்தில் தெளிவாக தெரிந்தது. “நானெல்லாம் ரொம்ப கௌரவமானவன். ரோஷமானவன்.” என்று சொல்லி புத்தகங்களை திருப்பி தந்து விட்டு நன்றி சொல்லாமலே திரும்பிச் சென்று விட்டார்.

Sep 26, 2017

Classic Versatile


என்னுடைய ப்ளாக்கில் இது ஆயிரமாவது பதிவு

"என் நினைவில் பதிந்த முதல் மரம் பாதாம் மரம். நான் படித்த எலிமெண்டரி ஸ்கூலில் ஒரு வாதா மரம் இருந்தது. பாதாம் பருப்பு கிடைக்குமோன்னு உடைச்சி,உடைச்சி பார்ப்போம். பெரிசா ஒன்னும் இருக்காது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் மரம்” இப்படி ந.முத்துசாமி என்னிடம் சொல்லியிருக்கிறார்.


ந.முத்துசாமி எலிமெண்டரி ஸ்கூல் சிறுவனாயிருக்கும் போது தர்மபுர ஆதீன தோட்டத்தில் ஒரு மாமரம். அந்த மரம் பற்றியும் சொல்லுவார். அந்த மரமாம்பழம் பாதிரி பழம். பறித்த பிறகு தோல் சுருங்கிக்கிட்டே இருக்கும். சிவப்பாய் இருக்கும். அழுகாது. ரொம்ப ருசியாய் இருக்கும்.


இப்போது நான் குடியேறியுள்ள ஆலப்பாக்கம் வீட்டின் ஃப்ரன்ச் விண்டோவை ஒட்டி ஒரு பாதாம் மரம். அணில்கள் அந்த வாதா மரத்தில் இருந்து பாதாம்பழம் பழுக்கு முன்னே துருவித்துருவி தின்னும் அழகை தினம் பார்க்கக்கிடைக்கிறது.

…………………………………..

1970களில் இலக்கிய அரசியல் காரசாரமாகவே இருந்திருக்கிறது.
ஒரு சாம்ப்பிள்

ஞானக்கூத்தன் : தூக்கிக்காட்டுறேன்..தெரியுதா பாரு

ந.முத்துசாமி: இவருக்கென்ன தங்கத்திலா தொங்குது?

………………………………………


’Neither – Nor’
 Said
 To ’Either – Or’
 From here
Where do we go?

- Nakulan's English poem in his small booklet of poems " Non - Being"

நகுலன் ஒரு சின்னஞ்சிறிய ஆங்கிலக்கவிதை இப்படி எழுதியிருக்கிறார். "What is right? What is left."

…………………

பல வருடங்களுக்கு முன் டி.வி. நிகழ்ச்சியில் கேள்வி.
”நீங்கள் நன்றி சொல்ல விரும்பும் ஒருவர் யார்?”

 நடிகர் சுரேஷ் பதில் : ”ஜான். என் முன்னாள் மனைவி அனிதாவின் இன்றைய கணவர். எனக்கும் அனிதாவுக்கும் பிறந்த குழந்தையை தன் பிள்ளையாய் ஏற்றுக்கொண்டு வளர்ப்பதற்கு ஜான் எப்போதும் என் நன்றிக்குரியவர்.”

……………………………….





Sep 15, 2012

Art is vice


Sep 4, 2009

'சாந்தி நிலையம் ' படத்தில் நாகேஷிடம் வீட்டுக்கு வந்த விருந்தாளி உற்சாகமாக " மகாலிங்கம் புல்லாங்குழல் கேட்டிங்களா '' என்பார் .
நாகேஷ் பதில் :" கேட்டுப்பார்த்தேன் . தரமாட்டேன்னுட்டார் . இப்பல்லாம் யாருக்கும் தர்றதில்லயாம்."

மாலி புல்லாங்குழல் வாசிப்பு பற்றி அந்தகால ரசிகர்கள் சிலாகித்து சொல்வது :
'மாலி 'காத்து '(காற்று ) யாருக்கும் வராது.'

மாலியின் Eccentricity பற்றி பல கதைகள் உண்டு .
மாலி புல்லாங்குழல் எப்போதும் கேட்கும்போது பிரஞ்சு ஓவியன் எட்கர் டிகா வார்த்தைகள் உடனே ஞாபகம் வரும் .
“Art is vice.You don't marry it legitimately, you rape it.”

மௌனி யின் வரிகள் : விரல்களின்றியும் வீணையில் சங்கீதம் வியாபகம் கொள்ளும் போலும் . சுருதி ,விலகி நின்று எட்டியா நின்று இடைவிடாது முணுமுணுக்கிறது. சப்தத்தினின்றும் சங்கீதம் விடுதலை பெற்று எட்டிய வெளியில் மெளனமாக வியாபகம் கொள்கிறது"

மாலியின் புல்லாங்குழலில் இப்படி பிரமை ஏற்படவே செய்யும். ஆழ்ந்து காது கொடுத்த பின் ஒருநீண்ட பெருமூச்சு வெளிப்படும் .

மைக்கேல் ஜாக்சன் பாடுவதும் , ஆடுவதும் பிரஞ்சு ஓவியனின் இந்த வார்த்தைகளுக்கு பொருந்தும் .“Art is vice.You don't marry it legitimately, you rape it.”

இருபது வருடங்களுக்கு முன்

'Thriller'
'Bad'
'Dangerous'

கேசட்களை கேட்காத நாளே எனக்கு கிடையாது . இன்றைக்கு டி .வி செய்தியில் மைக்கேல் ஜாக்சன் இறுதிச்சடங்கு நடந்தது பற்றி காட்டப்பட்டது .

..


லா .ச .ரா வின் கதையில் அம்மா தயார் செய்யும்
பாயசம் : சமையலறையைக் குங்குமப் பூவின் மனம் தூக்கிற்று. யாகக் குண்டம் போல தொட்டி முற்றத்தில் ஆவி புகைந்தது. முந்திரியும் ,வறுத்த திராட்சை பழங்களும் அத்தனை முழிகளாய் விழித்தன. சேமியா , ஆவியின் அசைவில் நெளிந்தது. அம்மாவின் கூந்தல் முடிச்சிலிருந்து ஒரு மல்லிப்பூ அதில் உதிர்ந்திருந்தது.

..


புதுமைப்பித்தன் ஏழையின் குடிசை வீடு பற்றி :'வறுமையின் இருள் அடித்த கர்ப்பக்கிரகம். '


கோபி கிருஷ்ணனின் "இனிமையான வக்கிரம் "கதை எழுத்துக்கலையின் உக்கிரம் . இவருடைய எல்லா எழுத்தும் உக்கிரம் . அலுப்பு என்பதை பதிவு செய்தார் .
" அலுப்பு " ( Ennui )கோபி கிருஷ்ணனை கலைஞன் ஆக்கிவிட்டது .

Art is vice.

கு .ப .ரா .வின் 'சபரியின் பிரேமை ' சிறுகதை பற்றி கோபி கிருஷ்ணன் சொன்ன விஷயம் நினைவுக்கு வருகிறது -"சபரியின் பிரேமை இயற்கைக்கு எதிராக இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதனால் ஏற்படும் துயரை எடுத்துச் சொல்கிறது ."
கோபி கிருஷ்ணனின் ' இனிமையான வக்கிரம் ' கதையை படித்தால் அந்த நேர் எதிர் 'Child'(!) பற்றி புரிந்து கொள்ளமுடியும் . கோபியின் Black Humour !

...................

Sep 2, 2009



மனித மண்டைஓடு

"ஆயிரத்தில் ஒருவன் " எம்ஜியார் படத்தில் மண்டை ஓடு ஒன்றை பார்த்துவிட்டு நாகேஷ் சொல்வார்
" எவனோ ஒருத்தன் சிரிச்சிக்கிட்டே செத்துருக்கான்!"


Human skull is always smiling!


சுஜாதா இருபது வருடங்களுக்கு முன் எழுதினார் " மண்டை ஓடுகள் சிரிப்பதற்கு காரணம் 'சாவின் ரகசியம் ' தெரிந்து விட்டதால்."

தொன்ம ரகசியம் ஒன்று - பரமேஸ்வரன் கழுத்தில் மண்டைஒட்டு மாலை அணிபவர் . அந்த மண்டை ஓடுகள் - அவருடைய பிரிய சகி பார்வதியின் முந்தைய பிறப்புகளின் உடல்களுடைய கபாலங்களை தான் பித்தன் சிவன் மாலையாக கோர்த்து அணிந்துள்ளாராம்.


Human Skull – The Contemplation of Human Mortality.

ஷேக்ஸ்பியரின் ஹேம்லட் கல்லறை ஒன்றில் ஒரு மண்டையோட்டை பார்த்து சொல்கிறான் "Alas, poor Yorick. I knew him ..A fellow of infinite jest".
Yorick was once the court fool.

ஹேம்லட் தன்னை சிறுவனாய் இருக்கும்போது உப்பு மூட்டை தூக்கி விளையாடி, சிரிக்கவைத்து ஆசுவாசப்படுத்திய பால்ய நண்பன் இந்த கோமாளி யோரிக் கின் மண்டை ஓடு கண்டு உணர்ச்சி வசப்படுகிறான்.
A sentimental affection for the deceased jester.
Yorick is a reminder that all of life is not meloncholic and sour, that there was a happier time in even Hamlet's dark, morose life

.............


Aug 22, 2009



சாமுவேல் பெக்கெட்- நகுலன் கவிதையில்


No, I regret nothing, all I regret is having been born,
dying is such a long tiresome business I always found.
-Samuel Beckett.

இருத்தலின் குறிக்கோள் அற்ற தன்மை பற்றி பெக்கெட் கவலைப்பட்டவர்.
The futility of man's aspirations!
அவருடைய நாடகம்
“Waiting for Godot” என்ற பெக்கெட்டின்
Absurd Drama காத்திருத்தல் பற்றிய துயரத்தின் உச்சம் .
We're all born mad. Some remain so.
“Waiting for Godot”
Mr. Godot told me to tell you he won't come this evening but surely tomorrow.
இங்கே குறிப்பிட வருவது நகுலனின் ஆங்கில கவிதை :

Death
Also waits
It has
infinite Patience.

இந்த கவிதைக்கு
inspiration பெக்கெட்டின் வரிகள் Dying is such a long tiresome business I always found.

பெக்கெட் பற்றி நகுலன் தன்னுடைய நாவல்களில் எப்போதும் பேசுவார்.
......

Sep 11, 2012

ஜோஷ் வண்டேலூ எழுதிய ' அபாயம்'

Jan 11, 2009


  ஜோஷ் வண்டேலூ எழுதிய 'அபாயம் ' நாவல் தமிழில் க்ரியா பதிப்பகம் வெளியிட்டது . மறக்க முடியாத நாவல்.
A Flemish Novel translated from English to Tamil
By N.Sivaraman.

‘Man is left alone in this world.’ இந்த மேற்கோள் கேள்விப்பட்டிருப்பீர்கள் . அது இந்த நாவலில் தான் வருகிறது .
நகுலன் பாருங்க ! ஜோஷ் சொன்னதையும் தாண்டி " எனக்கு யாருமே இல்லை . நான் கூட " என வேதனைப்பட்டவர் !!

' கடைசியில் பார்க்கப்போனால் , என்ன செய்வதென்பதை நாமே தான் முடிவு செய்ய வேண்டும் . மனிதன் கடைசியில் தனித்தே தான் நிற்கிறான் . யாரும் அவனுக்கு உதவி செய்ய முடியாது .' என்று ஜோஷ் வண்டேலூ சொல்வார் .
'தப்பி ஓடுவது என்பது ஒரு முடிவற்ற பிரமைக்கு ஒருவர் ஆட்படுவது தான் . அமைதியாக வசிப்பதற்கு இடமே இல்லை .'
' எங்க போனாலும் ஒன் நிழல் ஒன் கூட தான் வரும் ' என்று நம்ம ஊர் கிழவிகள் சொல்வது இதை தான் !

'நம்பிக்கை' - ' நம்பிக்கை என்பது மெதுவாக ச்செல்லும் இரவு நேர வண்டி . அது நகருக்குள் தேடியவாறு குலுங்கிகுலுங்கி ச்சென்று ஒவ்வொரு நிறுத்தத்திலும் அசைவற்று நிற்கிறது . எல்லா நிறுத்தங்களிலும் ஜனங்கள் காத்திருக்கிறார்கள் . கண்டக்டர் கத்துகிறான் . ' இடமில்லை , அடுத்த வண்டி வருகிறது .......' நாம் அடுத்த வண்டிக்காக எப்போதுமே காத்திருக்கிறோம் ! நமக்கு இடம் கிடைக்கும் வகையில் ஒருவரும் ஒரு போதும் வண்டிகளிலிருந்து இறங்குவதே இல்லை !!

கதிரியக்கப் பாதிப்புகளுக்கு உள்ளாகி,சுவாரஸ்யத்துக்குரிய மருத்துவ ஆராய்ச்சிப்பொருள்களாக மாறிவிட்ட பெண்ட்டிங்,துபோன்,மார்ட்டின் மோலினார்.

சிலர் பலிகடா ஆவது நிச்சயம் என்ற தெளிவுடன் தான் அரசாங்கம் முடிவுகள் எடுக்கப்படுகிறது என்பது உண்மை.

பொறியோடு சேர்த்துக்கட்டியிருக்கும் கால்களை சில மிருகங்கள் கடித்துப் போட்டுவிடும்.

அன்பு,இரக்கம், சமூகத்தில் எல்லோரது பாதுகாப்பு பற்றிய அக்கறை ,நேர்மை ஆகியவற்றை விட விஞ்ஞான முன்னேற்றமும்,பொருளாதார மேம்பாடும் முக்கியமானவை என்று கருதும் சமூகத்தில் 'அபாயம் ' என்பது ஒரு தனித்த நிகழ்வல்ல.

நாவலின் கசப்பான யதார்த்தம் ' முன்னேற்றம் என்று அழைக்கப்படுவது
' அபாயம்' தானே?'

அபாயம் படித்த போது நிஜமாகவே ரொம்ப நாள் ரொம்ப ரொம்ப பயமாக இருந்தது . பாதிப்பு சொல்லி முடியாது .

.............

 

SEP 11,2012


 “நாட்டு மாந்தரெல்லாம்- தம்போல் நரர்களென்று கருதார்
ஆட்டு மந்தையாமென்று
அரசர் எண்ணி விட்டார்”

- பாஞ்சாலி சபதத்தில் ’முண்டாசுக் கவிஞன்’
அட  இன்று தான் சிரஞ்சீவி பாரதி செத்த நாள்!
 செப்டம்பர் 11 !
We all have an aweful time to be alive.

 

Aug 22, 2009

சாமுவேல் பெக்கெட்- நகுலன் கவிதையில்


No, I regret nothing, all I regret is having been born,
dying is such a long tiresome business I always found.
-Samuel Beckett.

இருத்தலின் குறிக்கோள் அற்ற தன்மை பற்றி பெக்கெட் கவலைப்பட்டவர்.
The futility of man's aspirations !
அவருடைய நாடகம்
“Waiting for Godot” என்ற பெக்கெட்டின்
Absurd Drama காத்திருத்தல் பற்றிய துயரத்தின் உச்சம் . We're all born mad. Some remain so.
“Waiting for Godot”
Mr. Godot told me to tell you he won't come this evening but surely tomorrow.
இங்கே குறிப்பிட வருவது நகுலனின் ஆங்கில கவிதை :

Death
Also waits
It has
infinite Patience.

இந்த கவிதைக்கு
inspiration பெக்கெட்டின் வரிகள் Dying is such a long tiresome business I always found.
பெக்கெட் பற்றி நகுலன் தன்னுடைய நாவல்களில் எப்போதும் பேசுவார்.
......



Nov 11, 2008

நகுலனின் ராமச்சந்திரன்

நகுலன் கவிதை ஒன்று .
"ராமச்சந்திரனா என்று கேட்டேன் .
ராமச்சந்திரன் தான் என்றார் .
எந்த ராமச்சந்திரன் என்று நானும் கேட்கவில்லை .
அவரும் சொல்லவில்லை ."
எழுத்தாளரின் எழுத்தாளர் நகுலன் !
தன்னை பார்க்க வருகிறவர்களிடம் " என்னுடைய ராமச்சந்திரன் கவிதை படித்திருக்கிறீர்களா ? உங்களுக்கு ஏதாவது புரிகிறதா ?" என்பார் .
உதட்டை பிதுக்கி இல்லை என்று சொல்வார் வந்தவர் ."நீங்களே சொல்லுங்களேன் "
நகுலன்வருத்தத்துடன் சொல்வார் " எனக்கும் புரியவில்லை . அவர் அதை என்னிடம் சொல்லியிருக்க வேண்டாமா?சொல்லவே இல்லை !"
பல சகோதர சகோதரிகளுடன் பிறந்தவர் நகுலன் .
ஏன் நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை ?
"நானும் திருமணம் செய்து கொண்டால் அம்மா அப்பாவை யார் பார்த்துக்கொள்வது " நகுலன் பதில் .
கவிஞர் திரிசடை இவரது சகோதரி .
" மரணத்தை நினைத்தால் எனக்கு பயமாக இருக்கிறது . சாவுரதுன்னா எனக்கு ரொம்ப பயம் .."-நகுலன்
Literature…. Is the rediscovery of Childhood
- Georges Bataille

Nov 4, 2008

A joke is a very serious thing!


மூக்கு கண்ணாடி கைவசம் இல்லாததால் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் மெனு கார்டை சர்வரையே வாசித்து காட்ட சொன்ன போது அந்த சர்வர் தன்னிரக்கம் மிகுந்து வழிய வருத்தத்துடன் சொன்னான் . " நானும் உங்களை மாதிரி எழுதபடிக்க தெரியாதவன் தாங்க . எனக்கும் படிப்பு எல்லாம் கிடையாது "

........
இந்தியாவின் முதல் ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத் பற்றி அதிகம் கேள்விபட்டிருக்க மாட்டீர்கள் . நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அவர் பற்றி ஒரு சுவாரசியம் மிக்க செய்தி படித்தேன் .
அவர் பள்ளியில் படிக்கும் போது ஆண்டு தேர்வில் பத்து கேள்விகள் கொடுத்து ஏதேனும் ஐந்து கேள்விகளுக்கு பதில் எழுதினால் போதுமானது என்று கொஸ்டின் பேப்பரில் எழுதப்பட்டிருந்ததாம் . சிறுவன் ராஜேந்திர பிரசாத் பத்து கேள்விகளுக்கும் பதில் எழுதி விட்டு மேலே ஏதேனும் ஐந்து பதில்களுக்கு மார்க் போட்டால் போதுமானது என குறிப்பிட்டாராம் !

...
அருந்ததி ராய் நாவலில் ஒரு Anecdote:
ஒரு தகப்பன் . அவனுக்கு இரட்டை குழந்தைகள் . பீட் ஒரு Optimist. ஸ்டுவேர்ட் ஒரு Pessimist. இருவருக்கும் பிறந்த நாள் வந்தது . அப்பா ஸ்டூ வேர்ட் க்கு ஒரு வாட்ச் , சைக்கிள் பரிசு கொடுத்தார் . அந்த பையனுக்கு வாட்ச் மாடல் பிடிக்கவில்லை . சைக்கிள் கூட அவனுக்கு பல குறைகள் உள்ளதாக தோன்றியது . அவன் அழுது புலம்பி கொண்டிருந்தான் .

பீட்டுக்கு பிறந்த நாள் பரிசாக அவன் அறை முழுவதும் குதிரை சாணத்தை அப்பா நிரப்பி வைத்து விட்டார் .
சரி . பீட் என்ன செய்கிறான் . அப்பா அவன் ரூமுக்கு போன போது
அந்த அறையிலிருந்த சாணத்தை அள்ளி அள்ளி வீசிகொண்டிருந்தான் பீட் . இவர் ஆர்வத்துடன் 'பீட் ! என்ன செய்கிறாய்?' என கேட்டதற்கு
உற்சாகமாக பீட் சொன்னான் ' குதிரை யை தேடிகொண்டிருக்கிறேன் அப்பா ! இவ்வளவு சாணம் இங்கே இருக்கிறதென்றால் இங்கே நிச்சயம் ஒரு குதிரை இருக்கும் தானே !'

......

கிரா பேசும்போது ஒரு நடைமுறை யதார்த்தம் பற்றி சொன்னார் .
"குற்றாலத்தில் உள்ளூர்க்காரன் அருவியில் குளிக்கமாட்டான் தெரியுமா !"

........

'முப்பத்தைந்து வயதான எந்த குடிமகனும் இந்தியக்குடியரசு தலைவராகும் வாய்ப்பு இருப்பது போல ,
மு மேத்தாவும் எதிர்காலத்தில் என்றாவது கவிதை எழுதக்கூடும் !'
-வெங்கட் சாமிநாதன்

......

"நான் செத்த பிறகு தயவுசெய்து எனக்காக இரங்கல் கூட்டம் நடத்தாதீர்கள் . என்னால் வர முடியாது ."
- நகுலன்

..............

சாரு நிவேதிதா கோணல் பக்கங்களில் அடித்த ஒரு ஜோக் .
ஒரு சர்தாரிணி ப்ரா வாங்க கடைக்கு கிளம்பினாள் .
சர்தார்ஜி ' உனக்கு தான் அந்த இடத்தில் ஒன்றுமே இல்லையே ! உனக்கு எதற்கு ப்ரா ?'
சர்தாரிணி ' யோவ் , போன வாரம் நீர் ஜட்டி வாங்கினீர் ! நான் ஏதேனும் கேட்டேனா ?'

..............
A lot of lies are going around the world and the worst of it is
Half of them are true !
- Winston Churchill.
ஒரு விஷயம் . இந்த பதிவின் தலைப்பை சொன்னது கூட சர்ச்சில் தான் !