Share

Oct 8, 2020

வார்த்தைகள் விரைந்து செல்லும் எறும்புகள்

 'நினைவுப்பாதை' 

நாவலில் நகுலன் சொல்வார் 

"காகிதத்தின் மீது 

விரைந்து செல்லும் எறும்புகள் தானே வார்த்தைகள்" 


இப்போது லேப்டாப், மொபைலில் வாசிக்க காணும் வலைத்தள எழுத்தும் கூட நகுலன் சொல்வது போல 

" கொசுக்கள் பந்து போல் திரளாக 'நொய்' என்று சப்திப்பது போல் வார்த்தைகள் சப்திக்கின்றன. விரைந்து செல்லும் எறும்புகள். 

வலைத்தள தட்டச்சில் பிறந்து கணினியில் சலிக்கும் உருவங்கள்."

.. 


இருக்கிறபடி பார்த்த புரிதல்படி 

அப்படியெல்லாம் கூப்பிடக்கூடாது என்று

 இங்கே கொஞ்ச காலம் 

அரசியல் மிதப்பில் சொக்கிக்கொண்டிருந்த 

ஜெ. தீபா சொல்லிச்சு. 

" என்னுடைய டிரைவர் ராஜாவை

 டிரைவர் என்று யாரும் சொல்லக்கூடாது "


இல் பொருள் உவமை அணி. 


தீபாவின் பேரவை கட்சி முக்கிய பதவி கூட 

அந்த டிரைவருக்கு கிடைத்தது. 

தீபா கணவரிடம் அந்த டிரைவர் சீற்றத்துடன் 

" நகைய தூக்கிட்டுப் போன

 திருடன் தானடா நீ"ன்னு 

சண்டை போட்டதை

 டிவி செய்தியில் காட்டினார்கள். 

இல் வாழ்க்கை 

பிறன் பழிப்பதில்லாயின் நன்று. 


பாசம் படத்துல தன்னைச் சுற்றியுள்ள மூன்று அனுகூல சத்ருக்களைப் பார்த்து எம். ஆர். ராதா சொல்வார் : 'நீங்கள்ளாம் எதிரி இல்ல. திரி.' 


திரி டிரைவரா? கணவரா? 


மன நிலை பொறுத்து 

ஒரு நேரம் திரி, மறு நேரம் எதிரி. 


கொஞ்ச காலம் தான் என்றாலும் 

மறக்க முடியாத Funny Politician தீபா. 


.. 


எப்போதும் இருக்கும் யதார்த்த பழமொழி 

 இந்த கோவிட் 19 காலத்தில் 

முழு அர்த்தம் கொள்கிறது. 

ஜீவிதம், ஜீவனம் இரண்டுமே 

கடுமையான சவாலாகியுள்ளது. 

'மனுஷ்ய ஜீவிதம் அநித்யம். 

மனுஷ்ய ஜீவனம் அசத்யம்'


குறள் - சாதலின் இன்னாததில்லை 


There is a cure for everything except death. 


ஃப்ரான்சிஸ் கிருபா கவிதை 


'படைச்சி படைச்சி 

சலிச்சி போச்சி என்றான் 

கடவுள் 


அழிச்சி அழிச்சி 

சடைஞ்சி போச்சி என்றான் 

சாத்தான்


வாழ்ந்து வாழ்ந்து 

புளிச்சிப் போச்சி என்றான் 

ஒரு மனிதன் '

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.