Share

Jun 30, 2025

வேடிக்க - 42

Age withers everybody. Nothing serious in mortality.

Left Chennai permanently on 21st June, 2025 and Settled in Coimbatore.

2015 September, 13 to 2025 June 21

பத்து வருட சென்னை வாழ்க்கை முடிந்தது.

கலைஞர் டிவிக்கு மாதம் இருமுறை 
சினிமா எனும் பூதம் தொலைக்காட்சி தொடர் ஷூட்டிங்கிற்காக
 வர வேண்டியிருக்கிறது 

இளைய மகனுடன் கோவையில்.

வெளியே போயிருந்த போது வேலை முடிந்து காரில் ஏறி பத்து நிமிடமாக அமர்ந்த பிறகு பார்த்தால் அஷ்வத் இன்னொரு காரில். அதில் தான் ஏறியிருக்க வேண்டும்.தவறாக வேறு காரில் அமர்ந்த விஷயம் புரிந்து இறங்கப் பார்த்தால் திறப்பதில் பிரச்சினை. ஒரு வழியாக இறங்கும் போது சென்ஸர் அலாரம். 
கார் ஓனர் வந்து விட்டார்.

" Sorry sir. எங்க கார்ல ஏறுறேன்னு நெனச்சேன்"

அவர் பெருந்தன்மையாக 
" பரவால்ல சார்"

.....

 ப்ளாக் டீ, ப்ளாக் காஃபி சகஜமான சூழல்.

டீ மாஸ்டரிடம் " சார், பால் போட்டு டீ கொடுங்க"

யாராயிருந்தாலும் சார் தான்.

எழுத்தாள நடிகரிடம் "சார்"  
விளித்த போது " என்ன 'சார்'? நீங்கல்லாம் சார்னு யாரையும் சொல்லக்கூடாது. பேர சொல்லுங்க. சார்னா என்ன அர்த்தம்? மத்தவங்கள எதுக்கு சார் சொல்லனும். அது அநாவசியம். தேவையேயில்ல' னு இருபது நிமிஷம் லெக்சர்.
அப்போதிருந்து யாராயிருந்தாலும் சார் தான்.

கடைநிலை ஊழியர் என்று சமூகம் கருதுகிற யாராயிருந்தாலும் விளிப்பது "சார்" தான்.

டீ மாஸ்டர் " நீங்க உள்ள ஒக்காருங்க ஐயா. நான் கொண்டு வரேன்"

சேரில் உட்கார்ந்ததும் டேபிளில் வைத்தார்.

குடித்த பிறகு " சார், 
டீ ரொம்ப லைட்டா போட்டுட்டீங்களே"

டீ மாஸ்டர் "ஐயா, நான் கொடுத்தது பால். டீ இல்லீங்க "

Senility's prologue.
A decline in mental sharpness with age. Losing the sense and becoming the rock.

"When the age is in, 
the wit is out"
Much Ado About Nothing

"With mirth and laughter let old wrinkles come"
Merchant of Venice

Jun 25, 2025

ராஜநாயஹம் நூல்கள்

R.P. ராஜநாயஹம் எழுதிய நூல்கள் 

சினிமா எனும் பூதம் 1

சினிமா எனும் பூதம் 2

அரசியல் பிழைத்தோர் 

மணல் கோடுகளாய்..

காரணச்செறிவு 

தழல் வீரம் 

கிளர்ந்தெழும் தாபம் 

அதி மதுர மதுர

Jun 22, 2025

Children express rare fairy tales

கோவையில் பக்கத்து வீட்டு ஐந்து வயது குழந்தை ஹரன் அபினவ்.
இரண்டு வயதிலே அம்மாவை இழந்த துர்பாக்கியம்.

This child looks for a magic.

ஹரன் அபினவ் : "அம்மா இப்ப moon ல இருக்காங்க.
ராக்கெட்ல மூனுக்கு போனாங்க. ராக்கெட் ரிப்பேர் ஆயிடுச்சு. அதனால தான் மூன்லயே இருக்காங்க. 
நான் சீக்கிரம் பெரிய பையனாகி 
இன்னொரு ராக்கெட்ல போய் 
அம்மாவ வீட்டுக்கு
கூட்டிட்டு வந்துடுவேன்."

Children seldom misquote.

Children express rare fairy tales.

Jun 19, 2025

177 and 178th Episodes

177 and 178 th Episodes 

R P. ராஜநாயஹம் 

சினிமா எனும் பூதம் தொலைக்காட்சி தொடர்,

முரசு டிவியில் 

22.06.2025 ஞாயிற்றுக்கிழமை 

29. 06. 2025 ஞாயிற்றுக்கிழமை 

காலை எட்டரை மணிக்கு 

1. விக்ரம் 

2. ப்ரசாந்த்

Jun 15, 2025

ஜனாப் ராஜா ஹஸன்


பேரன்புக்குரிய அருமை நண்பர், 
மதிப்பிற்குரிய ராஜா ஹஸன் 
இன்று 
ராஜநாயஹம் வீட்டிற்கு வருகை தந்தார்.


Jun 12, 2025

ரவா இட்லி சிக்கல்

ரவா இட்லி சிக்கல் 
- R.P. ராஜநாயஹம் 

" உங்க தம்பி எப்படி இருக்காரு?"

திரைப்பட நடிகர் " நான் தான் அவனுக்கு என் வீட்ல தங்க எடம் கொடுத்திருக்கேன்."

"அவருக்கு கல்யாணமே ஆகலியா?"

" இவனுக்கு யாருங்க பொண்ணு குடுப்பா? வேல வெட்டியில்லாதவனுக்கு யாரு பொண்ணு குடுப்பாங்கெ?
தெனம் பதினாலு மணி நேரம் தூங்குறான். அஞ்சு வேளெ நல்லா சாப்பிடுறான். "

மீண்டும் அழுத்தமாக சொன்னார் "அஞ்சு வேளெ சாப்பாடு. பதினாலு மணி நேரம் தூக்கம்."

இந்த திரைப்பட நடிகரின் தம்பிக்கே வயசு இப்ப எழுபது இருக்கும். இந்த வயசுல நல்லா சாப்பிடுறதும், நெறஞ்ச தூக்கமும் எவ்வளவு பெரிய பாக்கியம். கொடுத்து வக்ற விஷயமா இது?

அந்த தம்பியும் நடிகர். அண்ணனுக்கு செல்வமும் செல்வாக்கும் கூடிய மாதிரி இவருக்கு அமையவில்லை.

அண்ணன் நடிகரின் ஜாதக நம்பிக்கை "கட்டம் சரியில்லன்னா திட்டம் எதுவும் நடக்காதே" 

My concern has been always with the 
not so successful people.

தம்பி நடிகர் பற்றிய பழைய நினைவு.
ஸ்ரீதர், பாலசந்தர் படங்களில் நடித்திருந்தும் பலன் பெரிதாய் காணமுடியாமல் போயிருக்கிறது.

அருணாசலம் ஸ்டுடியோவில் ராஜநாயஹம் சீன் ஷூட்டிங் 'ராசுக்குட்டி'க்காக நடக்கும் போது அங்கு இன்னொரு நடிகருடன் வந்திருந்தார்.
ஷாட் ப்ரேக்கில் ராஜநாயஹம் நடிப்பு பற்றி "சார், ஹ்யூமர் ப்ரமாதமா பண்றீங்க.  பெரிய விஷயம். என்னால ஒங்க மாதிரி பண்ணவே முடியாது"

செல் போனில் பேசிக்கொண்டிருந்த அண்ணன் நடிகருக்கு இரவு உணவு வந்திருக்கிறது. 
பேசும்போதே " ஒரு நிமிஷம்"

"Take your time, sir"

உணவு கொண்டு வந்த சமையல்காரம்மாவிடம் பேசுகிறார்.

"நான் ரவா இட்லி தான கேட்டேன்?"

"இட்லின்னு நெனச்சிட்டேன்யா. இது இட்லி."

" முண்ட, முண்ட.."

தொடர்ந்து ரொம்ப கோபமா கத்த ஆரம்பிச்சிட்டார்.  Abusive language.
"போடி வெளிய. "

போனில் " ரவா இட்லின்னு தெளிவா சொல்லியிருக்கேன். இப்டி பண்றான்னா எம்புட்டு திமிரு.."

காதால் கேட்க நேர்ந்த தர்ம சங்கடம்.

My concern is always with the not so brilliant people.

Jun 11, 2025

பச்சை குழந்தையின் பார்வை

பச்சை குழந்தையின் பார்வை
Sep 22, 2008
பச்சை குழந்தையின் பார்வை
- R.P. ராஜநாயஹம் 

Love and Romance.

 குறிப்பிட்ட 
 காதலியை  தேடி கண்டு  பிடிக்க முடிந்தது.
கால் நூற்றாண்டுக்கு பின். 

Winsome angel தனிமரமாக ...
அவளிடம் முதலில் தொலைபேசியில் பேச்சு. உடனே போய் பார்க்க வில்லை. தினமும் இரண்டு முறை தொலைபேசியில்.மூன்று மாதம் முப்பது கடிதம் ஒவ்வொன்றும் இருபதுபக்க கடிதம்.
அப்புறம் போய் பார்த்தேன்.

தேவதையின் பார்வையில் ரொமான்ஸ் இல்லவே இல்லை. அதிசயம். ஆனால் பச்சை குழந்தை பார்ப்பது போலவே இருந்தது.


”நான் பழுத்திருக்கும்போது வராமல்
உளுத்துப் போனபின்
புழு கொத்த வரும் மனம் கொத்தி நீ”
இது கல்யாண்ஜியின் கவிதை. அபிதா.

இதழ்களின் லேசான குமிழில் ‘அ’, இதழ்களின் சந்திப்பில் ’பி’, உதடுகளின் தெறிப்பில் ’தா’. லா.ச.ராவின் அபிதா.
ஹைமவதி, ஹிமவான் புத்ரி, 
பர்வத ராஜகுமாரி.

கண்ணீர் வற்றி விட்டது.
..

முழு இரவுவிடியும் வரை 
தனி அறையில் தனிமையில்.
 நிமிடம் கூட தூங்கவில்லை. ஆனால் ......
No Physical Love.

..

'சோரம் போவது அவ்வளவு சுலபம் இல்லை'  -அசோகமித்திரன் சொல்வார்.

அசோகமித்திரன் புதுவை வந்திருந்தபோது இலக்கிய விவாதத்தில் சற்று வேகமாகவே  சொன்னார் 'சோரம் போவது அவ்வளவு சுலபம் இல்லை.'
அப்போது புரிந்து கொள்ள குழப்பமாகத்தான் தோன்றியது.

..

Winsome angel.
So long, Farewell.

இன்று மீண்டும் பிரிவு.
  காலம் உள்ளவரை  நினைவு  கண்ணில் கசிந்து கொண்டிருக்கும்.

"If I should meet you after a long time
How should I greet thee?
With silence and tears."
- Byron


https://www.facebook.com/100006104256328/posts/2594420420771408/?app=fbl

https://www.facebook.com/share/r/16djWkYbgG/

Jun 9, 2025

இந்திராணி



இந்திராணி ஒருத்தி மட்டும்.
தேவேந்திரன் மாறிக்கொண்டே இருப்பார்கள்.
தக் லைஃப்பில் இதை புரிந்து ரசிக்க முடிந்தது.
நல்லா தான இருக்கு.


ராபர்ட்டோ கலாஸ்ஸோ  'க'நாவலில் 
பரகீயமானது - 
முறையற்றது, சோரமானது தான் உயர்வானது என்பார்.

வலது கண்ணில் இந்திரன் இருக்கிறான்.

இடது கண்ணில் இந்திராணி. 
இதயம் தான் பள்ளியறை.

உறங்கும்போது இந்திரனுக்கும் இந்திராணிக்கும் கலவி நடக்கிறது. இந்த காதற்கலவியை தொந்திரவு செய்யக்கூடாது. அதனால் தான் உறங்குபவர்களைச் சட்டென்று எழுப்பவே கூடாது. அவ்வாறு எழுப்பப் பட்டவரின் வாய் ’பிசுபிசு’வென இருப்பதும் அந்த இந்திர,இந்திராணியின் இந்திரியங்கள் பெய்யப்பட்டதால் தான். இருவரின் திரவங்கள் உறங்குபவரின் வாயில் ஒன்று கலப்பதால் தான்.

இந்திரன் பற்றி ஒரு சுவாரசியமான செய்தி.
எல்லோரும் யோனித்துவாரத்தின் வழி தான் பிறந்தாக வேண்டும். ஆனால் இந்திரன் மட்டும் யோனியிலிருந்து பிறக்க மறுத்து விட்டானாம்.அது அசிங்கமான வழியென்று சொன்னான். அரிதாக அவன் தன் தாயின் பக்கவாட்டிலிருந்து,விலாவிலிருந்து சமாளித்துப் பிறந்து விட்டானாம்.

இதை ராஜநாயஹம் "கிளர்ந்தெழும் தாபம்" நூலில் குறிப்பிட்டதுண்டு.

"கண்டதெல்லாம் கடிய விலையானால்
இந்திராணி பட்டு இருந்த விலையாகும்"
என்ற சொலவடையை தேவைப்பட்ட இடத்தில் பயன்படுத்தியதுண்டு.

சரீர சம்பந்தம் இல்லாவிட்டாலும் பல கதாநாயகர்களுடன் நடிக்கும் நடிகைகள் குறியீடாக இந்திராணி தான்.

நடிகையர் திலகம் சாவித்திரி கட்டுரையில் 
அவரது 'வெற்றிகரமான கதாநாயகி' பிம்பம் பற்றி 
ராஜநாயஹம் 'சினிமா எனும் பூதம்' நூலில் 
"தெலுங்கு தமிழ் திரையுலகங்களில் கதாநாயக தேவேந்திரர்களின் இந்திராணியாக சாவித்திரி எட்டுக்கண்ணும் விட்டெரிய வலம் வந்தார்."

......


Jun 6, 2025

மாங்குயில் பாடிடும் கீதம் கேளாய்

https://www.facebook.com/share/p/16kRRwn2uL/

அமெரிக்கன் கல்லூரி பாட்டுப் போட்டியிலும் அனைத்து கல்லூரி பாட்டு போட்டியிலும்
 R.P. ராஜநாயஹம் பாடி பரிசு பெற்ற பாடல் 

காதலிக்கு சமர்ப்பிக்க ராஜநாயஹம் எழுதிய கவிதை 

https://www.facebook.com/share/p/16kRRwn2uL/

Jun 5, 2025

எஸ்.எஸ் சிவசூரியன் - பூச்சி முருகன்

ராமாவரம் தோட்டத்தில் 
எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும் போது காத்திருந்த பிரபலங்கள் பற்றி பட்டியல் போட்டு  முடியாது.
முதல் தடவை முதல்வராக இருக்கும் போதே 'இவரா?இவர் கூடவா? என்று புருவத்தை உயர்த்தி வியக்குமளவு.
அசந்தர்ப்ப நிர்ப்பந்தங்கள்.

ராஜநாயஹம் மாமனார் S.M.T. சந்திரன் சொல்வார் : மாப்ள, எம். ஜி‌. ஆர பாக்கனும்னு சிவாஜி கணேசன் மணிக்கணக்கில 
 காத்துக்கெடக்கறத பாத்திருக்கேன்.

கலைஞரின் 'மந்திரி குமாரி'யில் ராஜாவாக நடித்த எஸ்.எஸ். சிவசூரியன். இவருக்கு ராஜநாயஹத்தின் மாமனார் நல்ல நண்பர்.
எம்ஜிஆரை பார்க்க சென்னை வரும் போதெல்லாம் அதிமுகவிலிருந்த 
சிவ சூரியனை கட்டாயம் சந்திரன் சந்திப்பார். 

சிவசூரியன் பற்றி இன்னொரு ஞாபகம்.

எஸ்.எஸ். ராஜேந்திரன் தம்பி பாஸ்கர் பெரிய குளத்தில் சொன்ன விஷயம்.
"நடிகர் எஸ். எஸ். சிவசூரியன் மகன்கள்ள ஒருத்தர் ஆக்ஸிடெண்ட்ல எறந்துட்டார் தம்பி. மதுரைக்கு வந்திருந்த எங்கண்ணன் இத கேள்விப்பட்டதுனால அப்செட் ஆகி, பெரியகுளம் வராமலே சென்னைக்கு ஒடனே போயிட்டாரு. ரொம்ப நல்ல மனுஷன் சிவசூரியன். இப்படி கஷ்டம். நெறய்ய பிள்ளைங்க அவருக்கு."

அஞ்சாறு வருஷங்கழிச்சி 1986ல திருச்சி எக்ஸிபிசன்ல நடந்த நாடகத்தில் நடிக்கிற சிவசூரியனை பார்த்தது நினைவில் இருக்கிறது.


அறிவாலயம் நிர்வாக பொறுப்பில் இருக்கும் பூச்சி முருகனின் தகப்பனார் 
எஸ்.எஸ் சிவசூரியன்.

நடிகர் சங்கத்திலும் கலக்கியவர்