Share

Showing posts with label Khushwant Singh. Show all posts
Showing posts with label Khushwant Singh. Show all posts

May 23, 2020

Khushwant Singh ''s Farewell to The Illustrated Weekly

Khushwant Singh ''s farewell to The Illustrated Weekly

ஒன்பது வருடங்கள். 1969 ஜுன் துவங்கி 1978 ஜுலை வரை.
அன்றைய பம்பாயில் ஆங்கில வார பத்திரிக்கையின் ஆசிரியராக கொடி கட்டினார் என்று சொன்னால்
அது சாதாரண வார்த்தை.

இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி பத்திரிக்கையின் சர்க்குலேசன் அறுபத்தைந்தாயிரம் என்று இருந்ததை நான்கு லட்சம் பிரதியாக உயர்த்திய சாதனை அவருடையது.

அந்த ஜுலை மாத கடைசி நாளில் சுமுகமாக ஓய்வு பெறுவதாகத் தான் இருந்தார். ஆனால் ஒரு வாரம் முன்னதாக 25ம் தேதி திடீரென்று வெளியேறும் நிர்ப்பந்தம்.
He was abruptly asked to leave 'with immediate effect'

ஆசிரியர் அறையில் அமர்ந்திருந்தவர் நாற்காலியில் இருந்து அமைதியாக எழுந்தார். தன் குடையை எடுத்துக் கொண்டார். அவருடைய அலுவலக ஊழியரிடம்
 ஒரு வார்த்தையும் பேசாமல்,
டைம்ஸ் ஆஃப் இண்டியா கட்டடத்தில்
இருந்து வெளியேறி விட்டார்.
ஒன்பது வருடங்களாக உழைத்த அலுவலகம்.
He was fired.

ஒரு Farewell கட்டுரை அடுத்த வார பிரசாரத்திற்காக எழுதியிருந்தார். அது பிரசுரிக்கப்படவில்லை என்பதை சொல்லத் தேவையில்லை.
The new edition was installed the same day, and ordered by The Illustrated Weekly's management to kill the 'Farewell' column of Khushwant Singh.

Discourtesy.

குஷ்வந்த் தன் சுயசரிதையில் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி கால அனுபவங்களுக்காக
ஐம்பது பக்கங்கள் ஒதுக்கியிருக்கிறார்.

பத்திரிக்கை துறையில் உள்ள அத்தனை பேரும் அவசியம் படிக்க வேண்டிய பக்கங்கள் அவை.

எவ்வளவோ சிறந்த பத்திரிக்கையாளர்களை துச்சமாக நடத்தி அந்த ஜெயின் முதலாளித்துவம் விரட்டியிருக்கிறது.

குஷ்வந்த் சிங் உடனடியாக நினைக்கிறார்.
'சரி,அப்போது எழுதிக்கொண்டிருந்த 'டெல்லி' நாவலின் அடுத்த அத்தியாயத்தை
 எழுத ஆரம்பிப்போம்' என்று.

(என்ன ஒரு நாவல் 'டெல்லி')

உருது கவிஞர் அல்லாமா இக்பால் வரிகளை               நினைவு கூர்கிறார்.

In this world, men of faith and self - confidence are like the sun,

They go down on one side to come up
 on the other.

https://m.facebook.com/story.php?story_fbid=2712264555653660&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=2644714052408711&id=100006104256328

https://m.facebook.com/story.php?story_fbid=2641552762724840&id=100006104256328

.............

Mar 22, 2018

The relentless march of time


பாலாவின் "நாச்சியார்" படத்தின் கடைசி காட்சி ஒரு பழைய நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தியது.
நானும் என் மனைவியும் பாண்டிச்சேரி போவதற்காக திண்டுக்கல்லில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ட்ரையினில் பயணம். கீர்த்தி பழனியில் எல்.கே.ஜி முடித்திருந்தான். அப்போது அஷ்வத் பிறந்திருக்கவில்லை.
விழுப்புரத்தில் இறங்கி புதுவைக்கு போக வேண்டும்.
ஏசி கோச்சில் எங்கள் எதிரில் ஒரு வயதான தம்பதியர். ஒரு ஓய்வு பெற்ற பஞ்சாயத்து கமிஷனர், அவருடைய மனைவி இருவரும் சென்னை செல்கிறார்கள்.
அந்த அம்மையார் சுகவீனமான நிலையில். எங்களை பார்த்ததில் கொஞ்சம் உடல் உபாதை மறந்திருந்தார். எங்களை பற்றி தன் கணவரிடம் சொன்னார்: ”என்னங்க... இதுங்க ரெண்டுமே கொழந்தைகள். இதுங்களுக்கு ஒரு மூணு வயசு கொழந்தை.”

பஞ்சாயத்து கமிஷனர் என்னிடம் கேட்டார் :” இப்பவே சின்னப்பையனா இருக்கியேப்பா...கல்யாணத்தப்ப எப்படி இருந்திருப்ப. டவுசர் போட்டிருக்கும்போதே கல்யாணம் பண்ணிட்டியா?”

The relentless march of time.
காலம் தான் எப்படி ரயில் மாதிரி யாருக்கும் காத்திராமல் ஓடி விடுகிறது.

“ You can't do very much about old age. It creeps up on you at a snail's pace to start with, then gathers speed in your middle age, and before you know it, you are an old man."
- Khushwant Singh

”இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவுமறியாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர்காலம்”
- கவிஞர் கண்ணதாசன்
...........................................


I always avoid compulsive talkers.
I do not appreciate rhetorical comments. In fact I do not expect or await any comment for my write-ups.
...................................

"I get easily bored with people and would rather read a book or listen to music than converse with anyone for too long.
I do not have many friends because I do not set much store by friendship.
I have found that friends, however nice and friendly they may be, demand more time than I am willing to spare.
I have had a few very close friends in my time. When some of them dropped me, instead of being upset, I felt relieved."
- Khushwant Singh

Aug 8, 2016

எடுத்துக்கூறுவது



ஸ்பெயின் நாட்டில் 65 வயதிற்கு அதிகமானவர்கள் உடலுறவு கொள்வதில் தீவிரமாக உள்ளதாக ஒரு செய்தி. ஏன் இது எல்லா நாட்டிற்கும் பொருந்தக்கூடியதாகவே இருக்கக்கூடாதா?

சந்தோஷம் என்பது ஒவ்வொரு காலத்திற்கும் வெவ்வேறாக இருக்கும். குஷ்வந்த் சிங் 90 வயது வாக்கில் தெளிவாகச் சொன்னார்: ’குசு விடுவது தான் ஆகச்சிறந்த ஆனந்தம். நீண்ட, திருப்தியான குசு விடுகிற பாக்கியம்! I do not desire sex; instead I pray for a long, satisfying fart. Farting is one of the greatest joys of life. Farting now tops my list of life’s pleasures.’
Art is fart! இது ஒரு புறமிருக்க குஷ்வந்த்சிங்குக்கு Fart is art!


ஒரு விஷயத்தை தீர்மானமாகச் சொன்ன பிறகு கடும் எதிர்ப்பு கிளம்பினால் அதே விஷயத்தை தீர்மானமாக அப்படியே சொல்வது சிரமம். கடும் எதிர்ப்புக்கு மன்னிப்பு கேட்டாலும் கூட, தான் முன்னர் சொன்னதிலிருந்து மாறாமல் கருத்தை வெளியிட முடியுமா?

ஆங்கில நாடகாசிரியர் ஷெரிடன் இதனை கவனமாக செய்தார்.
நாடாளுமன்றத்தில் ஒருமுறை பேசிய போது ‘இந்த நாடாளுமன்றத்தில் உள்ளவர்களில் பாதி பேர் கழுதைகள்’ என்றார்.
’நீ பேசியதை வாபஸ் வாங்கு,மன்னிப்பு கேள் ’ – கூச்சல்
ஷெரிடன் அமைதியாக “ மன்னிக்கவேண்டும். இந்த நாடாளுமன்றத்தில் உள்ளவர்களில் பாதி பேர் கழுதைகள் அல்ல.”


லட்சுமி கல்யாணம் என்ற ஒரு படத்தில் சிவாஜி பாடல் “யாரடா மனிதன் இங்கே, கூட்டி வா அவனை இங்கே, இறைவன் படைப்பில் விலங்கு தான் மீதி இங்கே”
’நான் ஏன் பிறந்தேன்’ எம்.ஜி.ஆர் பாடலில் “ ஒரு மேதை பகல் வேளை கையில் விளக்குடன் சென்றானாம். மனிதன் எங்கே காணவில்லை. தேடுகிறேன் நான் என்றானாம்”


’ஏழையாய் இருந்தால் என்ன? ஏழைக்கு கிடைக்கிற சந்தோஷம் பணக்காரனுக்கு கிடைக்காது’ என்பதை நம்பவே கூடாது. ’Poor but happy’ is not a phrase invented by a poor person.
பெர்டோல்ட் ப்ரக்ட் அபிப்ராயப்படுகிறார்: ‘Poverty makes you wise, but it’s a curse.’
ஆமாம் Curse தான்.
Tragedy does make me more sensitive, but it also makes me more cautious.
“கடந்து போன நாட்களைப் பற்றி நினைத்துப் பார்க்க ஒவ்வொரு காலத்திலும் ஒரு தனிச்சின்னம் கிடைக்கிறது” – அசோகமித்திரனால் இப்படி தெளிவாக எழுத முடிகிறது.



பார்ப்பதை எழுதும் ஒரு கவிஞன். கற்பனையால் உருவகித்து எழுதும் கவிஞன்.

கீட்ஸ் வித்துவச் செருக்கோடு தன்னையும் பைரனையும் வகைப்படுத்துவது இப்படி – “You speak of Lord Byron and me!? There is this great differnce between us. He describes what he sees – I describe what I imagine – Mine is the hardest task.”



பெயர் சொல்லிக்கூப்பிட்டவுடன் வருகிற ஒரே பறவை காக்கா!
கவிஞர் ஞானக்கூத்தன் எழுதிய கவிதை “அயர்ச்சியில் ஒரு காக்கை”

’கடலின் அலைகளுக்குக் கிட்டும் தொலைவில்
கிடந்தது ஒரு பெரிய மாட்டின் எலும்புக்கூடு
எலும்புக்கூட்டின் மேல் வந்தமர்ந்த
காக்கைக்குத் திகைப்பு
யார் தான் தின்றார்கள் முழுமாட்டை?’


கவிஞனைப் பற்றி ‘பல மரணஸ்தர்’ என்பார் ஞானக்கூத்தன்.
‘இரு முறை பிறப்பதாய் சொல்லப்படுகின்ற
அந்தணர் கூட ஒரு முறை தான் இறப்பார்.
ஆனால் கவிஞனோ பலமுறை இறக்கிறான்.
எல்லோரையும் போல ஒரு முறை. மற்றவர்
படிக்கப் படிக்கப் பலமுறை பலமுறை’


சமீபத்தில் மூன்று பதிவுகளில் ஞானக்கூத்தனின் கவிதைகளை குறிப்பிட நேர்ந்த போது அவரது மரணம் மிக, மிக சமீபத்தில் இருக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை.
…………………………………….

Mar 22, 2015

Amrita Sher - Gil's self portrait






அம்ரிதா ஷெர்-கில். 




இவளை 1913ல்பெற்ற தாய் ஹங்கேரிய யூதப்பெண். பெறுவதற்கு ஒத்துழைத்த அப்பா பஞ்சாப் சீக்கியர்.
ஃபிரான்ஸில் ஓவியம் பயின்ற போது தங்க மெடல் வாங்கியப்பெண்.
தன் இருபத்தொரு வயதில் இந்தியா தான் தன் தேசம் என்ற உணர்வு மேலோங்கி இந்தியா வந்தவள்.பெற்றோர் அப்போது சிம்லாவில்.
லாகூர் வந்தால் ஃபேலட்டிஸ் ஓட்டலில் தங்கி தன் காதல் காளைகளுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு இரண்டு மணி நேர இடைவெளி விட்டு ஒரு நாளில் அஞ்சாறு பேரை எதிர்கொண்ட பெண்.
தன்னையே  ஓவியங்களாக வரைந்து கொண்டவள். 

குஷ்வந்த் சிங் இவளைப்பற்றி : Pandit Nehru was supposed to have succumbed to her charms.
 நிம்ஃபோ மானியாக் என்று அறியப்பட்டவள்.


குளிர்காலத்தில சிம்லாவில ஒருத்தன் டின்னருக்கு கூப்பிடறான். அம்ரிதா போனா அங்க அப்படியே 
படு சூப்பரா 'ரூப்பு தேரா மஸ்தானா பியாரு மேரா தீவானா' இன்ஃப்ராஸ்ட்ரக்சர். ஆனா அவன் வெஸ்டர்ன் கிளாசிக் ரிக்கார்டை போட்டு விட்டுட்டு பேசறான்,பேசறான்...இலக்கியம்..இசைன்னு பேசிக்கிட்டே இருக்கிறான்!...வள,வளன்னு விளக்கெண்ணெய எடுத்து குண்டி கழுவன மாதிரி....ஓலப்பாயில நாய் மோண்ட மாதிரி சல..சலன்னு.... ச்சே..அசமஞ்சம்...பேச்ச நிறுத்துடா டேய்!
இன்னொரு நாள் டின்னருக்கு கூப்பிட்டான்.. இவ போனவுடனே – 
உடனே,உடனே டிரஸ்சை கலட்டிட்டு அம்மணமா கார்ப்பெட்ல படுத்திட்டா!


பிரபலஎழுத்தாளர் மால்கம் மக்கரிட்ஜ் வாலிபனாய் இருக்கும்போது அவனை ஒரே வாரத்தில் சக்கையாய் பிழிந்து குப்பையில் எறிந்த பெருமையும் அம்ரிதாவுக்கு உண்டு. 

வனத்தில மேஞ்ச்சாலும் இனத்தில அடையனும் என்று நினைத்தாளோ என்னமோ தன் தாய் வழியில் சொந்தக்கார டாக்டர் விக்டர் இகன் என்பவனைத்திருமணம் செய்து கொண்டிருக்கிறாள். 

டாக்டர் விக்டர் லாகூரில் ப்ராக்டிஸ் செய்ய ஆசைப்பட்டதால் லாகூரும் அப்போது இந்தியாவில் தானே என்று சிம்லாவிலிருந்து லாகூர் வந்தவள்.
லாகூரில் வக்கீலாக சும்மா ஈயோட்டிக்கொண்டிருந்த குஷ்வந்த் சிங் வீட்டிற்கு வந்து விசாரித்திருக்கிறாள்.“நான் இங்க புதுசா குடி வந்திருக்கேன். இங்க டெய்லர் யாரு, கார்பெண்டர் எங்க இருக்கான்,ப்ளம்பர் வேலைக்கெல்லாம் ஆள் கிடைப்பானா?”
குஷ்வந்த் சிங்கிற்கு ஏற்கனவே இந்தப்பெண் பற்றிய சகலமும் தெரியும்.

பின் சில வாரத்தில் சிம்லா அருகில் உள்ள மசோப்ராவில்  குழந்தையாய் இருந்த ராகுல் சிங்கைப்பார்த்து முகம் சுளித்தாள் “What an ugly little boy!”  . இதனால் கோபப்பட்டு குஷ்வந்த் மனைவி “ இந்த பொட்ட நாய என் வீட்டுக்குள்ள இனிமே விடவே மாட்டேன்”
பதிலுக்கு அம்ரிதா : “இவ புருஷன் குஷ்வந்த என் கூட படுக்க வைக்காம விடமாட்டேன்.”
குஷ்வந்த் ஆசையோடு எதிர்பார்த்திருந்தார்.
ஒரு நாள் அம்ரிதாவின் அப்பா வழி சொந்தக்கார சிங் ஒருவன் குஷ்வந்த் வீட்டிற்கு வந்து :‘ அம்ரிதாவிற்கு ஒடம்பு சரியில்ல. இன்னிக்கு இங்க தங்கிக்கறேன்”
மறு நாள் அம்ரிதா செத்துப்போய் விட்டாள். 

அவளுக்கு கொள்ளி போட்ட அவள் புருஷன் வீட்டிற்கு வந்தவுடன் போலீஸ் அவனை கைது செய்தது. ஹங்கேரி அப்போது ஹிட்லருக்கு சப்போர்ட் என்பதால் பிரிட்டிசார் இங்கே ஹங்கேரியன் டாக்டர் விக்டரை கைது செய்து விட்டது. டாக்டர் விக்டர் ஜெயிலுக்கு போனது ஒரு வகையில் நல்லது தான். ஏனென்றால் இவன் தான் என் மகள் சாவுக்கு காரணம் என்று மாமியார் குற்றம் சாட்டினாள்.
ஆனால் அவள் மரணம் கொலையல்ல. அவளை ட்ரீட் செய்ய மற்றொரு டாக்டரும் வீட்டிற்கு போயிருக்கிறார். டாக்டர் விக்டர் இந்த டாக்டரிடம் உடனெ என் பெஞ்சாதிக்கு என் ரத்த த்தை தரேன் – பிடிவாதம் செய்த போது அந்த டாக்டர் ‘ இருப்பா! ப்ளட் க்ரூப் பாக்க வேண்டாமா?  நான் டயக்னோஸ் செய்து பின் தான் ஒரு முடிவு செய்ய முடியும். குழந்தை வேண்டாம்னு அபார்ஷன் பண்ணியிருக்கிறே...” விவாதம் நடந்திருக்கிறது. ரெண்டு டாக்டர்கள்!விவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே அம்ரிதா மூச்சை நிறுத்தி விட்டாள்.
அவளுடைய மரணம் அசட்டையினாலும், அலட்சியத்தினாலும் தான் நடந்திருக்கிறது.
அம்ரிதா 1941ல்இறந்த போது இருபத்தெட்டு வயது. 

இவளுடைய தங்கை இந்திராவின் கணவர் சுந்தரம் இந்தியாவின் தலைமை தேர்தல் கமிஷனர் ஆக இருந்தவர். மகன் ராகுல் சிங் பதின்பருவத்தில் இருக்கும்போது குஷ்வந்த் சிங் அப்போது அம்ரிதா பற்றி அவர் பாணியில் எழுதியிருந்திருக்கிறார்.ராகுல் சிங்கை அழைத்துக்கொண்டு ஒரு பார்ட்டிக்கு போயிருக்கிறார். அங்கே இந்திராவும் சுந்தரமும் வந்திருக்கிறார்கள். “ நீ எப்படி என் கொழுந்தியா பற்றி இப்படியெல்லாம் எழுதலாம்? எங்க குடும்ப கௌரவம் என்னாவது?” என்று சுந்தரம் கத்த பதிலுக்கு குஷ்வந்த் கத்த, பார்ட்டியை விட்டே குஷ்வந்த் வெளி நடப்பு செய்திருக்கிறார். ஆனால் பலவருடங்கள் கழித்து இவரும் மகனும் இந்திராவை கசவ்லியில் விட்டு விட்டு அனாதையாய் இந்திரா அங்கே செத்து மறு நாள் பால்காரன் கண்டு பிடித்திருக்கிறான்.

சுந்தரத்தின் மகன் விவன் கூட ஓவியர் தான். விவன் குடும்ப கௌரவமெல்லாம் பார்க்காமல் “ என் பெரியம்மா அம்ரிதா ஒரு லெஸ்பியன்!” என்று சொன்னது மற்றொரு Irony.
 




AMRITA’s self-portraits were excercises in NARCISSISM – Khushwant Singh


இன்று அம்ரிதா இறந்து 74 வருடங்கள் கழித்து அமெரிக்கா நியூயார்க்கில் அவளுடைய Self- portrait  ஏலத்தில் 18.2 கோடி ரூபாய் மதிப்பில் விலை போயிருக்கிறது.



 ..............................................................................