Share

Showing posts with label மு. நடேஷ். Show all posts
Showing posts with label மு. நடேஷ். Show all posts

Oct 14, 2020

மு. நடேஷ்

 தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் பக்கமா     தாண்டி போக வேண்டியிருந்த போது 

ஒரு Associate memory 


மு. நடேஷ் சொன்ன விஷயம். 

கே. சி மணவேந்த்ர நாத் பற்றியது 

கிறிஸ்டியன் காலேஜ்ல ஒரு நாடகம். 

கே. சி நடிக்கும் போது நாய் ஒன்று நுழைந்து அவனை பார்க்கிறது. உடனே கலைஞன் கே. சி 

அந்த நாயிடம் பேசுகிறான். அதனிடம் டயலாக்.

 அது ஏதோ புரிந்து விட்டது போல கவனமாக கேட்டு விட்டு அந்த இடத்தை விட்டு போய் விடுகிறது.                  நாடகம் தொடர்ந்து நடக்கிறது 


நடேஷ் : சாதாரண விஜயங்கள்ள, வார்த்தைகள்ள மாட்டிக்கிட்டு இருக்கிறே. அதிலிருந்து வெளியே வந்தா தான் அனுபவம் கெடைக்கும்.


ஆசைய கையால பிடிக்க முடியுமா? 


Dynamic meditation. 


Inception படத்துல 

மனைவி போயிட்டா. ரொம்ப அறிவானவ. அவள மெமரிக்குள்ள போய் பாக்குறான். Dynamic meditation. 


போதை 

உயிரோட இருக்கிறதே ஒரு போதை. 


போதை 

ஒரு விஷயத்துக்குள்ள போய்

 அதுக்குள்ள இருக்கிறது தான் போதை. 


Body - mind ரெண்டும் சேர்ந்து தான் வேலை செய்யுது 


நடேஷ் பேசியதெல்லாம் இப்பவும் கேட்கிறது. 

சற்றும் அயர்ச்சி தராத, 

ஒவ்வொரு தடவையும் 

புதியதாக இருக்கும் நடேஷ் வார்த்தைகள். 


பயிற்சி மாணவர்களுக்கு நடேஷ் சொன்னது


பேச்ச சினிமாவும் சீரியலும் ஒழிச்சி கட்டியிருக்கு. 

கதையம்சம் விவரணையா கொண்டு வா. 

Sub Text ஆ படி. அப்ப வந்துடும் பேச்சு. Do it freely. 

சொல்லின் உள்ளர்த்தம் தொனியிலே ஏறனும். 


வெள்ளையும் கருப்பும் நெறமில்ல. இந்த ரெண்டு நெறத்தில எழுதிய வரிகளுக்கு உயிர் உண்டு. 


ஆலந்தூர் வருகிறது. 

அப்போது எனக்கு 

ந. முத்துசாமி நினைவு வருகிறது. 


அன்று ஆலந்தூரில இருந்த காலை 

தினமும்  குஞ்சலி மாமி ஆஃபிஸ் போன பின்

 இளைஞன் முத்துசாமி 

எழுதிக்கொண்டே தான் இருப்பார். 

'எமக்கு தொழில் எழுத்து, இமைப்பொழுதும் சோராதிருத்தல்'

May 13, 2018

Rajanayahem is a Transformative Actor




வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம்
மூன்று வார சனிக்கிழமைகளில்
( ஏப்ரல் 28, மே 5, மே 12)
என் நடிப்பை பார்த்த

 கூத்துப்பட்டறை ’அரசன்’

மு. நடேஷ் 

என்னை பற்றி நேற்று சொன்னார்.
“ Rajanayahem is a Transformative Actor!"
A declaration, indeed.
அவருடைய பரவசத்தை முத்துசாமி சாரிடமும் மாமியிடமும் கூட உற்சாகமாக பகிர்ந்து கொண்டார்.

சிங்கப்பூரில் இருந்து ’இளவரசர்’ ரவி சாரின் வாழ்த்துக்களை இன்று பெற்றேன்
நன்றி நடேஷ் சார்! Thank you for your kindness.
I can hold the audience spellbound. I have the guts.

https://www.youtube.com/watch?v=dYiA2ND7vVs&t=48s






............................................................

http://rprajanayahem.blogspot.in/2016/08/blog-post_5.html


Aug 12, 2016

’வண்டிச்சோடை’க்கு மு. நடேஷ் ஓவியம்



 அப்பா  ந.முத்துசாமியின் ‘வண்டிச்சோடை’க்கு மகன்
மு. நடேஷின் ஓவியம் இது.




நாடகத்தின் விசேஷமான சில வசனங்கள்  கீழே:

 இந்த சம்பிரதாய முதல்வர் சொன்ன அதே வார்த்தைகளோட என் குருவும் துவங்கினார். ’அனேகமா எனக்குத் தெரிஞ்சது எல்லாத்தையும் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்துட்டேன். நீங்க போகலாம். குருகுலவாசம் இதோட முடிஞ்சி போச்சு.
சிஷ்யர்கள் எல்லாம் எழுந்து போய்ட்டாங்க. நான் மட்டும் உட்கார்ந்துக்கிட்டிருந்தேன். குரு ’என்ன விஷயம்’னு என்னைப் பார்த்துக் கேட்டார். நான் சொன்னேன், ’நீங்க சொன்னது எனக்கு விளங்கலே’ன்னு.
‘ என்ன விளங்கலே?’

’வைத்தியம் செஞ்சு பொழைக்க இது போதும்னீங்களே, அது’

‘ஆமாம். வைத்தியம் செஞ்சி பொழைக்க இது போதும்’
‘இல்லே. போதாது’

’போதும்’

’போதாதுங்காணும் ஓய். போதாது. நான் தொழில் செஞ்சு பொழைக்கப் போறதில்ல. அதனாலே போதாது’

‘பின்னே என்ன செய்யப் போறே?’

’வைத்தியம் செய்யப் போறேன்’

‘அப்படின்னா? வைத்தியம் தொழில் ’இல்லையா..உனக்குத்தெரிஞ்சவரைக்கும் செய் போ’

திடீர்னு எம்பி நான் அவர் சிண்டே புடிச்சுக்கிட்டேன். அவர் அற்பமா போயிட்டார். ’விடுடா சிண்டை விடுடா’ன்னார்.

‘ நான் வைத்தியம் செய்யப் போறேன். அது தொழிலா இருக்கப் போறதுங்கறது உண்மை தான். ஆனா அது தொழில் இல்லைங்காணும் ஓய். அது வைத்தியம். ஒமக்குத் தெரிஞ்ச வரைக்கும் எனக்கும் தெரியணும். அந்த உபகாரத்தை நீர் செய்யணும்.’
அவர் சொன்னார்; ’என் குருவுக்குத் தெரிஞ்ச அளவுக்கு எனக்குத்தெரியாதுடா’ன்னு.

‘அதுக்கு நான் என்ன செய்யறது? அது உம்ம குற்றம். எட்டி அவர் சிண்டைப் பிடிச்சிருக்கறது? அது என்னவோ? உமக்குத் தெரிஞ்ச அளவு எனக்குத் தெரிஞ்சாகணும். நீர் வெளிக்கு வாசலுக்குப் போறது. பொண்டாட்டிக்கிட்டே படுத்துக்கறது ஆகிய நேரத்தைத் தவிர மற்ற நேரத்துலே நான் உம்மோட இருப்பேன். எனக்குச் சொல்லித்தந்தாகணும்’

……………….

தார்ச்சாலைத் தொழிலாளி : போதும். போதும். எனக்காக யாரும் வாரிசு அவதாரம் எடுக்கப் போறதில்லே. என் முடியைக் காண அன்னப்பறவையா யாரும் மாறப் போறதில்லே. என் முண்டாசில் தாழம்பூ இல்லே. தார்க்கறை தான் இருக்கு.

………………………………………………………………………………………………………………………………..



ந.முத்துசாமி சார், நடேஷ் சார் மேற்பார்வையில் பிரமாதமாக ‘வண்டிச்சோடை’ நாடக ஒத்திகை நடந்து கொண்டு இருக்கிறது.

Performance has permission to make mistakes.That is called Rehearsal!
      Rehearsal -  ‘learning through mistakes’

  ’வண்டிச்சோடை’க்காக ஹிந்துஸ்தானி க்ளாசிக்கல் மெட்டில்  நாடக வசனங்களாலேயே சாரம் தெளித்து ராஜநாயஹம் தயாரித்திருக்கும் பாடல் ஒன்று!



’வண்டியின் சோடை வண்டி சென்ற பாதையே
காளை வண்டி மண்ணில் ஓடி
அதனால் சோடை தோன்றலாச்சு

போருக்கு வீரன், தேருக்கு ஆளு,
கட்சிக்குத் தொண்டன் தேவை
பெத்து தான் கொடுத்து இடுப்பு நொந்து போச்சு
விந்து சிந்தி முளைச்சது ஆளாய்
நாற்றங்காலாய் ஆனாள்
சேரி ஒப்பாரி பத்தி இங்கே எரியுது
எரியுது பாரு

சிரஞ்சீவி ஆடு மூலிகை மேஞ்சி
மனுஷனா மாறுது பாரு
கசாப்புக்கு தப்பி மூலிகை மேஞ்சி
மனுஷனா மாறுது பாரு
அடையாளம் கெட்டு அத்தனை பேரும்
ஒத்த சாயலில் ஒத்தனே போலும்
அப்பாவென்று எவனையும் எவனும்
அழைக்க அடையாளம் ஒத்துப் போச்சு’
…………………………………………………………………………………………………..


 ந.முத்துசாமியின் ‘வண்டிச்சோடை’ நாடகம்
R.P.ராஜநாயஹம் இயக்கத்தில்
ஹிண்டு நாடக விழாவிற்காக
சென்னை எக்மோர் மியூசியம் தியேட்டரில்
ஆகஸ்ட் 28ம் தேதி, 7.30 pm

அரங்க அமைப்பும் ஒளியமைப்பும் : மு. நடேஷ்
……………………………………………………………….


 (Shri N.Muthuswamy's younger son shri Ravi - a strong pillar of Koothuppattarai)

..................................