Share

Mar 28, 2019

மாஸ்டர் பிரபாகர்


தேவாலயம் என்பது படப்பெயர். எஸ்.எஸ்.ஆர், கே.ஆர் விஜயா நடித்தார்கள். இது கே.ஆர்.விஜயாவுக்கு முதல் படம் என்று சொன்னால் ’சீ தப்பு..கற்பகம் தான்’ என்பீர்கள். ஆனால் இந்தப்படத்தில் தான் கே.ஆர்.விஜயா முதலில் நடித்தார். படம் முடிக்கப்படவுமில்லை. அதனால் ரிலீஸ் ஆகவுமில்லை. இந்த தேவாலயம் தான் மாஸ்டர் பிரபாகருக்கும் முதல் படம்.
All great performances have a ridiculous beginning.
மதுரை சௌராஷ்ட்ரா குடும்பம். பதினொரு குழந்தைகள் உள்ள குடும்பத்தில் நான்காவதாக பிறந்தவர்.
கே.எஸ்.ஜி இயக்கி பத்மினி நடித்த ’சித்தி’ தான் பிரபாகருக்கு முதல் படம். ’சித்தி கொடுமை பண்ணுவா’ என்று சுந்தரி பாய் பயமுறுத்தியதை நம்பி சித்தி பத்மினியை பார்த்ததும் நடுங்கும் குழந்தைகளில் பிரபாகரும் ஒருவர்.

சாது மிரண்டால் நாகேஷுடனும் குட்டி பத்மினியுடனும் “ A for apple, B for Biscuit,"
டி.ஆர்.ராமச்சந்திரனுடன் “ அருள்வாயே, நீ அருள்வாயே”( பாலமுரளி கிருஷ்ணா பாடல்)

குழந்தை நட்சத்திரங்களில் படு பிசியானவர் பிரபாகர். பால்ய காலம் முழுக்க சினிமாவுலகம் தான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஏன் இந்திபடங்களில் கூட நடித்த பால நடிகர்.
மறக்கமுடியுமா? மறக்க முடியாத காட்சிகள். காகித ஓடம், கடலலை மேலே மறக்க முடியாத பாடல்.
திருவருட்செல்வரில் திருஞானசம்பந்தர் பாத்திரம் பிரமாதமானது.
மாஸ்டர் பிரபாகரை பயன்படுத்திய முக்கிய இயக்குனர்கள் என்றால் ஏ.பி.நாகராஜனும், கே.பாலச்சந்தரும் தான்.
ஸ்டைல் காட்டி நடித்த சுட்டிப்பையன் மாஸ்டர் பிரபாகர்.
பாமாவிஜயம் “வரவு எட்டணா, செலவு பத்தணா” பாடலில் டான்ஸ்.
இருகோடுகள் படத்தில் புத்திசாலி சுட்டியாக துறுதுறு தனத்துடன்.
’புன்னகை மன்னன், பூவிழி கண்ணன் பாட்டின்’ பல்லவி ஆரம்பிக்கு முன் பாலகிருஷ்ணனை வா வா என்று வரவேற்று அழைத்து வரும் அழகு.
தேவரின் ’நேர் வழி’யில் கௌபாய் குதிரை சவாரி, சிங்கத்தின் மீதே உட்கார்ந்த காட்சிகள்.

’வா ராஜா வா’ இன்று உள்ள குழந்தைகளுக்கு கூட பிடித்த படம். மஹாபலிபுரம் பார்க்க போகிறவர்கள் இந்த வா ராஜா வா நினைவில் மூழ்காமல் இருக்கமாட்டார்கள். அதில் கதாநாயகனாக பிரபாகரை நடிக்க வைத்தார் ஏ.பி.நாகராஜன்.
’ராமன் எத்தனை ராமனடி’யில் சிவாஜியை “டேய் சாப்பாட்டு ராமா” என்று கூப்பிடும் சிறுவன். அன்று இது கண்டு பிரமிக்காதவர்கள் கிடையாது.
’எங்க மாமா’ குழந்தைகள் செல்லக்கிளிகளில் ஒன்றாக.
திருமலை தென்குமரியிலும் பிரபாகர் உண்டு.
இளைஞனாக மலையாளப்படம் ’ஈநாடு’.

2009ல் வந்த ’ஈரம்’ த்ரில்லர் படம் தான் அவர் கடைசியாக நடித்த படம்.

இன்று சொன்னால் ஆச்சரியம். மொத்தம் 185 படங்கள்.
ஆனால் ஒரு சிறுவனாக ரொம்ப ரசித்து சந்தோஷமாகத் தான் இத்தனை படங்களிலும் அனுபவித்து நடித்திருக்கிறார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தன்னுடைய ரோல் மாடலாக மாஸ்டர் பிரபாகரை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பாக்யராஜின் ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தில் கதாநாயகியாக நடித்த இவருடைய தங்கை சுமதி இன்று கனடாவில் இருக்கிறார்.

இன்று வடக்கு உஸ்மான் ரோட்டில் மாஸ்டர் ராஜ்குமார் (ராமு) வீட்டிற்கடுத்த க்ரீன் ஹோமில் பெரிய ஜெராக்ஸ் கடையை நடத்திக்கொண்டிருக்கிறார்.

https://www.facebook.com/rprajanayahem/posts/2397103570503095

Mar 27, 2019

மாஸ்டர் ராஜ்குமார்


ஏ.வி.எம் நிறுவனம் எடுத்த அந்த படத்திற்காக நூறு குழந்தைகளை பார்க்க வேண்டியிருந்தது. அவர்களில் மாஸ்டர் ராஜ்குமாரைத் தான் தேர்ந்தெடுத்தார்கள். அந்தப்படம் ’ராமு’. எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் பாடல்கள் காலத்தால் அழியாதவை.

எஸ்.வி.சுப்பையா குழந்தை ராமுவின் அன்பில் நெகிழ்ந்து
சொல்லும் பிரபல வசனம் “ தெய்வத்துக்கு ஆயிரம் கை. அதில் ஒரு கை கூட என் கண்ணீரை துடைத்து விட்டதில்லை.”
ராமுவாக டைட்டில் ரோலில் நடித்த ராஜ்குமார் ‘எனக்கு சாகத்தெரியலயே அப்பா’ என்று மணலில் எழுதிக்காட்டும் போது தியேட்டரில் கண் கலங்கி கண்ணீர் விட்டவர்கள் அனேகர்.

ஜனாதிபதி ஜாகிர் உசேன் கையால் அகில இந்தியாவிலும் சிறந்த குழந்தை நட்சத்திரம் தேசிய விருது பெற்றார். ராமுவில் நடிக்கும்போது சிறுவனுக்கு எட்டு வயது.
தமிழில் நூறு நாள் ஓடிய படம். தமிழில் ஜெமினி கணேசன் கதாநாயகன். தெலுங்கில் என்.டி.ராமராவ். ராமுவாக தெலுங்கிலும் மாஸ்டர் ராஜ்குமார் தான் நடித்தார். ஆந்திராவில் முப்பத்தைந்து வாரங்கள் ஓடியது. தெலுங்கில் கோவர்த்தனம் இசையமைத்தார்.
எம்.ஜி.ஆருடன் பெற்றால் தான் பிள்ளையா? ’நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி’ பாடலில் ஆட்டம் போட்ட சிறுவன்.
ராஜ்குமார் ’சபாஷ் தம்பி’ படத்திலும் டைட்டில் ரோல் செய்தார்.
பாலிஷ் பூட் பாலிஷ் பாடல்.
ஜெய்சங்கர் இவரை புகழ்ந்து பாடுவது “ சபாஷ் தம்பி, உன் செய்கையை போற்றுகிறேன்.நீ ஒருவன் மட்டும் துணையாய் இருந்தால் உலகை மாற்றிடுவேன்.”

’அதேகண்கள்’ காஞ்சனாவுடன் ”பூம்பூம்பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி”
இருமலர்களில் நாகேஷின் மகனாக.
தெய்வமகன் படத்தில் ஜுனியர் சிவாஜியாக கலக்கியவர்.
தனிப்பட்ட முறையில் எனக்கு பால்யத்தில் ராஜ்குமாரை வைத்து சில மறக்கமுடியாத நினைவுகள் உண்டு.
அப்பா முதல் முறையாக டேப் ரிக்கார்டர் வாங்கி வந்திருந்த போது அதில் நான் பாடிய பாடல் “பச்சை மரம் ஒன்று, இச்சைக்கிளி ரெண்டு, பாட்டு சொல்லி தூங்கச்செய்வேன் ஆரிராரோ,” ஒரு பாடலில் என் குரல் முதல் முறையாக கேட்ட த்ரில்.
பள்ளியில் நான் குட்டி பத்மினியின் பாடல்கள் பாடியிருக்கிறேன். “குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று,”
“கோழி ஒரு கூட்டிலே, சேவல் ஒரு கூட்டிலே.” பாடிய போது அரங்கமே கை தட்டி அதிர்ந்திருக்கிறது.
பாட்டுப்போட்டியில் நான் பரிசு வாங்கிய பாடல் எம்.ஜி.ஆருடன் ராஜ்குமார் ஆடிய “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி”
சென்னைக்கு சிறுவனாக நான் முதல் முறை வந்திருந்த போது ஒரு வீட்டில் எனக்கு விருந்து. அங்கே இருந்த கிராம போன் ரிக்கார்ட் ப்ளேயரில் நான் கேட்ட பாடல் “ பாலீஷ், பூட் பாலீஷ்”

சாயல் என்பது ஒவ்வொருவர் கண்ணுக்கும் எப்போதும் ஒவ்வொரு மாதிரி தெரியும். பால்யத்தில் என் சாயலில் ராமு முகம் தெரிகிறது என்று சொன்னவர்கள் உண்டு.
அதிகம் பேசாத என் மூத்த மகன் கீர்த்தியின் இயல்பில் ராமுவையே நான் பார்த்திருக்கிறேன்.
ராஜ்குமார் அப்போது நடித்த பிற படங்கள் - ரவிச்சந்திரன், காஞ்சனா நடித்த நாலும் தெரிந்தவன்,
ரவிச்சந்திரன், விஜயகுமாரி ( அபூர்வமான ஜோடி) இணைந்த “செல்வியின் செல்வன்”.
ஏ.வி.எம் ராஜன் நடித்த ’பிரார்த்தனை’ தான் ராஜ்குமார் நடித்த கடைசிப்படம்.

தமிழ் தெலுங்கு படங்கள் மட்டுமின்றி, தாய்மொழி கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார்.
மொத்தம் ஐம்பது படங்கள்.

இயக்குனர் ஏ.சி.திருலோக்சந்தர் தான் நம்பும் நம்பிக்கை நட்சத்திரங்களாக 
கேப்டன் சசிகுமார், அதே கண்கள் வசந்தகுமார், மாஸ்டர் ராஜ்குமார் ஆகியோரை குறிப்பிட்டதுண்டு.
கேப்டன் சசிகுமார் தன் மனைவி நெருப்பில் சிக்கிய போது அவரை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்தார்.
அதே கண்கள் பட வில்லன் வசந்தகுமார் துபாய் பயணம் செய்த போது விமான விபத்தில் மறைந்து விட்டார்.

காலம் காட்டும் விசித்திரம். மாஸ்டர் ராஜ்குமார் இசைக்கருவி வாசிக்கும் கலைஞராக மாறி விட்டார்.
இவருடைய அப்பா ஹனுமந்தாச்சார் ஒரு இசைக்கலைஞர். சிந்தஸைசர் எனப்படும் கீ போர்ட் வாசிப்பவர்.
கோவர்த்தனம் மூலமாக ரீரிக்கார்டிங்கில் வாசிக்க இளைஞன் ராஜ்குமாருக்கு வாய்ப்பு கிடைத்த போது நல்ல எக்ஸ்போசர். அதன் பின் திரையுலக இசைக்கலைஞராக பரிமாணமே மாறியிருக்கிறது.
Life is a walking shadow – Shakespeare in Macbeth.

(மௌனியின் பிரபலமான வரிகள் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்” பற்றி நிறைய பேசி எழுதுகிறீர்கள். ’இது கவிதையா? உரை நடையா? கவிதையும் தான் உரை நடையும் தான்’ என்றெல்லாம் தவித்து தக்காளி விற்கிறீர்கள்.சரி. 
அந்த வரிகள் ஷேக்ஸ்பியரின் மேக்பத் சொல்கிற “Life is but a walking shadow" என்பதிலிருந்து எடுக்கப்பட்டது.)


அக்கார்டியன் பிரமாதமாக ராஜ்குமார் வாசிப்பார்.
அந்த நேர நெருக்கடி பற்றியும் வெள்ளந்தியாக சொல்கிறார். “அப்பாவுக்கு வேலையில்லை. நான் எனக்கு வந்த இசைத்துறை வாய்ப்புகளை கட்டாயமாக பயன்படுத்த வேண்டிய சூழ் நிலை. மீண்டும் நடிக்க போக பயம். அரசனை நம்பி புருஷனை கை விட்டு விடக்கூடாதே”


விட்டோரியா டெசிக்காவின் பைசைக்கிள் தீவ்ஸ் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் பின்னாளில் பள்ளிக்கூட வாத்தியாராகிப்போனார் என்பது நினைவுக்கு வருகிறது.

Fickle and Elusive Popularity.

விந்தை என்னவென்றால் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த அதே ஏ.வி.எம். ஸ்டுடியோ விஜயா வாஹினி, பிரசாத் ஸ்டுடியோவில் தான் ராஜ்குமாரின் பிற்கால வாழ்க்கையும் என்றாகிப்போனது என்பது தான்.
எம்.எஸ்.வி, கே.வி. மஹாதேவன் பாடல்களில் அக்கார்டியன் வாசித்திருக்கிறார்.
இளையராஜாவிடம் 1977 முதல் 1990 வரை பாடல் பதிவில் அக்கார்டியன் இசைக்கலைஞர் ராஜ்குமார் பணி புரிந்திருக்கிறார்.
அன்று ஆரம்பித்த திரை இசைக்கலைஞர் பணி ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்காக “மாற்றான்” படத்தில் கூட அக்கார்டியன் வாசித்தார்.
தேவி பிரசாத் பாடல் “ என்றென்றும் புன்னகை”
’பத்மினியும் பண்ணையாரும்’ படத்தில் ’உனக்காக, உனக்காக’ பாடல்.
ராஜ்குமாருக்கு இரண்டு மகன்கள்.
சமீபத்தில் சென்ற அக்டோபர் மாதம் அவருக்கும் அவர் மனைவிக்கும் மிகப்பெரிய மீளமுடியாத துயரம். மூத்த மகனின் திடீர் மறைவு.
புத்திரசோகம் தான் எத்தகைய கொடியது.
இளைய மகன் பவன் குமார் தான் இன்று அவர்களுக்கு ஆறுதல்.
ராஜ்குமார் முழுமையாக நொறுங்கிப்போய் இருக்கும் நிலையில் தான் அவரை நான் நேரில் சந்திக்க வாய்த்திருக்கிறது.

(இந்த மாஸ்டர் ராஜ்குமார் பதிவை படித்து தெரிந்து கொண்டு குங்குமம் பத்திரிக்கையில் இருந்து என்னை தொடர்பு கொண்ட கதிர்வேலன் ஒரு பேட்டி எடுக்க வேண்டி ராஜ்குமார் மொபைல் எண் கேட்டார். நானும் கொடுத்திருக்கிறேன். குங்குமத்தில் பேட்டி வெளியாக இருக்கிறது.)

........






Mar 22, 2019

Singapore Elangovan's comment in Facebook


Thank you Rajanayahem. I have always followed your enlightening blog articles. It is my great pleasure to hear from you about GODSE.


GODSE play-text is available in my latest collection of plays ALAMAK, published by Zerodegree Publishing in Chennai. Available online in Zerodegree, Panuval and other websites.
I gave the text as pdf to Muthusamy when he was in Singapore at his son Ravi's house. That was the last meeting and hearty conversations.

Had plans to meet him in Chennai again but he has passed on. A Koothu-p-Pattarai without him is like visiting an empty palace. Our relationship lasted from 1989, when I brought him down to stage NAARKAALIKKARAR to change the Singapore Tamil theatre scene. It further continued with his participation with Purisai Kannappath Thambiran group's performance in 1990, and KPP's doublebill - England & Macbett in 1998 and Singapore Writers Week 1991.
I did not know that he had wanted to really stage GODSE against all the odds in the Tamilnadu political sphere. If he had informed me then, I would have translated the play for KPP and could have met him again in Chennai.
Once again, thank you so much for bringing the memories.
Elangovan

Mar 20, 2019

Singapore Elangovan’s play “GODSE”


சிங்கப்பூர் இளங்கோவன். நாடக இயக்கத்தில் முதுகலை பட்டம் இங்கிலாந்தில் பெற்றவர். கவிஞரும் கூட. ’விழிச்சன்னல்களின் பின்னால் இருந்து’, ’மௌன வதம்’ கவிதைத்தொகுப்புகள்.

இவருடைய நாடகங்கள் சர்ச்சைக்குரியவை. பல நாடகங்கள் சிங்கப்பூர் அரசால் தடை செய்யப்பட்டவை. அவருக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வந்திருக்கிறது.

இவருடைய ”GODSE” ஆங்கில நாடகம் 2015ம் ஆண்டு படிக்க ந.முத்துசாமி கொடுத்தார். டவுன் லோட் செய்யப்பட்டு ஸ்பைரல் பைண்டிங் செய்யப்பட்ட பிரதி.
படித்து விட்டு அதை கூத்துப்பட்டறை முழுநேர நடிகர்களுக்கு வாசித்துச்சொல்லி விளக்கும்படி என்னை பணித்தார்.அந்த கடமையை நவம்பர் 23,24,25 தேதிகளில் அப்போது நிறைவேற்றினேன். முத்துசாமியும் முழு நிகழ்விலும் கலந்து கொண்டு உடனிருந்தார்.

சிங்கப்பூர் இளங்கோவனின் கோட்சே நாடகம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு கூத்துப்பட்டறையால் மேடையேற்றப்பட வேண்டும் என்று முத்துசாமி சார் விரும்பினார். நடக்கவில்லை.
நாடகம் மிகவும் வீரியம் வாய்ந்ததாய் இருந்தது.
இரண்டே கதாபாத்திரங்கள். கோட்சே, காந்தியார். இருவருமே உண்மையையே தேடியவர்கள்.
மரணத்திற்கு பின் இருவரும் திரிசங்கு சொர்க்கத்தில் சந்திக்கிறார்கள்.
காந்தியை சுட்ட துப்பாக்கி ஒரு குண்டு மீதமான நிலையில் அவர்கள் முன்.
திரிசங்கு சொர்க்கத்தில் இருந்து விடுபட அவர்கள் இருவருமே ரஷ்யன் ரௌலட் கேம் விளையாடும்படியான நிர்ப்பந்தம்.
நாடகத்தில் கோட்சே தான் பெரும்பாலும் protagonist. காந்தியாருடன் தர்க்கம் செய்யும் கோட்சே.
Godse’s Memoryscape. சரித்திர தகவல்களை புரட்டிப்போடும் வசனங்கள்.
எம்.ஓ.மத்தாய், குஷ்வந்த் சிங் போன்றோர் மவுண்ட்பேட்டன் மனைவிக்கும், நேருவுக்கும் இருந்த Extra- marital relationship பற்றி எழுதியிருக்கிறார்கள்.
இன்று இந்த விஷயம் எல்லோரும் கண் விரிய பேசுகிற cliché.
இளங்கோவன் இந்த கோட்சே நாடகத்தில் நேருவுக்கும் மவுண்ட் பேட்டன் பிரபுவுக்குமிடையிலேயே கூட ஹோமோசெக்சுவல் உறவு இருந்ததாக எழுதியிருக்கிறார்.
காந்தி முதிய வயதில் ஆத்ம சோதனையாக இளம்பெண்களுடன் படுத்துறங்கின விஷயம் மிகவும் விவாதிக்கப்பட்ட விஷயம்.
காந்தி கேட்கிறார். ’நான் இளம்பெண்களோடு படுத்தேன். இப்படி ஆம்பளையோடு படுத்திருக்கிறார்களே.’
According to Justice Gopal Das Khosla, one of Godse’s judges, who did play a role in convicting him: “… the audience was visibly and audibly moved. There was a deep silence when he ceased speaking. Many women were in tears and men were coughing and searching for their handkerchiefs. I have, however, no doubt that had the audience on that day been constituted into a jury and entrusted with the task of deciding Godse’s appeal, they would have brought in a verdict of ‘not guilty’ by an overwhelming majority.”
ஒரு விஷயம் கவனிக்கலாம்.
Godse என்ற அவருடைய பெயரின் துவக்கத்திலேயே கடவுள் துருத்திக்கொண்டிருக்கிறார். அவரை Godsend என நம்புகிற காவி அரசியலும் இன்று எட்டுக்கண்ணும் விட்டெரிகிறது.

Mar 19, 2019

Mar 15, 2019

நிர்பய துச்சாதனம்



காலத்தின் பெருந்துயர நிகழ்வுகள் வெளிச்சப்படுத்தப்படும்போது நொறுங்கிப்போன இதயம் எந்த நிவாரண மருந்துமின்றி தான் ஸ்தம்பித்துப்போய் விடுகிறது. சமூக பொது புத்தி வலைத்தளம், பத்திரிக்கை, தொலைக்காட்சி பொங்கி சீறும் போது ஒதுக்கமாக இருப்பது அறம் சம்பந்தப்பட்டது. யார் வேண்டுமானாலும் தர்ம அடி கொடுக்கலாம்.

இந்த சமீபத்திய பொள்ளாச்சி நிகழ்வில் புகார் கொடுத்த வீராங்கனை பற்றிய பெயர், குடும்ப விவரங்கள் காவல் துறையால் பகீரங்கப்படுத்தப்பட்டதென்பதும், அரசாணையிலும் கூட அச்சிடப்பட்டிருப்பதும் தான் உச்ச பட்ச துச்சாதனம்.
கொடுமையான அந்த அரக்கச்செயல்களையும் விட கொடூரமான துச்சாதனம் இது தான். நிர்பய துச்சாதனம்.
இந்த துச்சாதனத்திற்கு என்ன தண்டனை? இதற்கு பிராயச்சித்தம் வேண்டாமா?

டெல்லி நிர்பயா பிரச்னை தமிழக காவல் துறைக்கும், அரசாணை வெளியிட்டிருப்பவர்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. பொது அறிவு இல்லையா? இது அடிப்படை அறிவு கூட இல்லையா?

அந்தப் பெண் பற்றிய விவரங்கள் பகீரங்கப்படுத்தப்பட்டதே அவளுக்கு மட்டுமல்லாமல் மற்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்குமான தெளிவான மிரட்டல். புகார் கொடுத்த பெண் உடனே சல்லித்தனத்தால் பாதிக்கப்பட்ட செய்தியையும் கவனிக்கிறோம். காவல் துறையில் புகார் கொடுப்பவர்கள் காயப்படுத்தப்படுவார்கள் என்பதும் அயோக்கியத்தனம்.

காவல் துறை கண்காணிப்பாளரிடம் ஏன் இப்படி அந்த பெண்ணின் பெயர், குடும்ப விபரங்களை வெளியிட்டீர்கள் என்ற கேள்விக்கு அவரது ஒற்றை வரி பதில்: ’தவறு தான்’

ம்ஹும் ..ச்சே…
………….

Mar 13, 2019

ராகுலம்


ஸ்டெல்லா மாரிஸ்
Call me Rahul, not sir என்று ராகுல்காந்தி சொன்னவுடன் அந்த மாணவி வெட்கப்பட்டு நாக்கை நீட்டிய அழகு காட்சியின்பம்.
சற்று நிதானித்து “ ராகுல்” சொல்லி தன் கேள்விக்கிடையிலும்
“ ராகுல் “ என்று இழுத்து மீண்டும் கேள்வியை தொடர்ந்தது அற்புதம்.
எந்த சினிமாவிலும் காண முடியாத நேர்த்தியான காட்சி. ஆஹா.

நாகர்கோவில்
’சத்தியமேவ ஜெயதே’ என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்பது ராகுல் காந்தி சொல்லித் தான் தெரியும்.
என்னே என் அறிவின்மை! எனக்கிதுவே வெட்கமில்லாமல் வேறே வெட்கமில்லை.
'Mea culpa,Mea culpa,mea maxima culpa'
(மேயா குல்பா, மேயா குல்பா, மேயா மாக்சிமா குல்பா)
என் பாவமே என் பாவமே, என் பெரும்பாவமே
380 அறத்துப்பால் குறள்களில் ஒன்றிலாவது நிச்சயம் இதை சொல்லாமலா விட்டிருப்பார்?
சிந்தனை தெளிவடைந்தேன்.


’சிடுமூஞ்சி’ சீதாலட்சுமி



எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீரை எல்லோருக்கும் தெரியும். எம்.ஆர்.ஆர் வாசு, ராதாரவி இருவரும் ரத்தக்கண்ணீர் நாடகத்தில் எம்.ஆர்.ராதா பாத்திரத்தை நடித்து மேடையேற்றியிருக்கிறார்கள்.
ரத்தக்கண்ணீர் நாடகம் முழுக்க முழுக்க பெண்கள் நடித்து மேடையேற்றப்பட்டிருக்கிறது. 
ராதா நடித்த வேடத்தில் பி.எஸ் சீதாலட்சுமி நடித்திருந்திருக்கிறார். அவர் நடிப்பை பார்த்த ராதா பிரமித்துப்போய் சீதாலட்சுமியிடம் சொல்லியிருக்கிறார்
 “ சீதா, என்னையே நான் இந்த நாடகத்தில் பார்த்தேன்.”


எம்.ஜி.ஆர் நாடகங்களிலும் நடித்தவர். சிவாஜி நாடகங்களிலும் நடித்தவர்.

வீர பாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் சீதாலட்சுமி “வெள்ளையம்மா” ரோலில் நடித்தவர். படத்தில் பத்மினி வெள்ளையம்மாவாக நடித்தார். 'வெள்ளையம்மா, வந்துதுடியம்மா ஒன் காளைக்கு ஆபத்து.'

உதயசூரியன் நாடகத்தில் மு.கருணாநிதியுடன் நடித்திருக்கிறார்.

அவர் பழம்பெரும் நடிகை பி.எஸ். சீதாலட்சுமியென்றாலும் 1960களில் தான் மிகவும் பிரபலம். 
தனுஷ் நடித்த ’சீடன்’ வரை நடித்திருக்கிறார்.

அப்போது சுந்தரிபாய், சி.கே.சரஸ்வதி போன்றவர்கள் போல வில்லி நடிப்பில் தனித்துவம் காட்டியவர். அவருடைய நடிப்பு காரணமாக ‘சிடு மூஞ்சி சீதாலட்சுமி’ என்று இவரை திரையில் பார்த்தவுடன் ரசிகர்கள் கத்துவார்கள். வெடு, வெடு என்று வசனம் பேசுவார்.
பாசமலரில் பி.எஸ்.ஞானத்தை பார்த்தவுடன் பெண்கள் திட்டுவார்கள். அது போல பி.எஸ்.சீதாலட்சுமியும் சினிமா தியேட்டரில் படம் ஓடும்போது திட்டு வாங்குவார். சீதாலட்சுமி சாயல் எஸ்.என்.லட்சுமிக்கு சகோதரியா என்று பலரை குழம்ப வைத்திருக்கிறது.
நவராத்திரியில் சாவித்திரி சந்திக்கும் பல பாத்திரங்களில் சீதாலட்சுமியும் ஒருவர்.

எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் நம்பியாருக்கு அக்காவாக வருபவர் சீதாலட்சுமி தான். அதே வருடம் ’அன்புக்கரங்கள்’ படத்தில் சிவாஜிக்கு அம்மாவாக படு சீரியஸ் ரோல் செய்தார். “காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓடவிட்டேன். மணலெடுத்து வீடு கட்டி மழை நீரில் நனைய விட்டேன்… அம்மா நீ கொடுத்த நிழலை விட்டு யார் நிழலில் போய் இருப்பேன்.” – உருக்கமான பாடல் காட்சியில் சிவாஜி நெகிழ்த்துவார்.
பணம் படைத்தவன் படத்தில் டி.எஸ்.பாலையாவுக்கு மனைவியாக, எம்.ஜி.ஆரின் அம்மாவாக சீதாலட்சுமி.
உயர்ந்த மனிதனில் சிவகுமாரிடம் சிடுமூஞ்சியை காட்டினாலும் அன்பை பாந்தமாக வெளிப்படுத்துவார். கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பதை நடிப்பில் இயல்பாக காட்டியவர்.


இவருடைய கணவர் பிரபல எடிட்டர் கே.பெருமாள். இயக்குனர் ஏ.காசிலிங்கத்தை குருவாக சொல்வார்.
எம்.ஜி.ஆர் படங்களில் எடிட்டராக இருந்தவர் கே.பெருமாள். நாடோடி மன்னனுக்கே இவர் தான் எடிட்டர்.

சீதாலட்சுமியம்மாளுக்கு குழந்தைகள் இல்லை. இவர் ஒரு ஆலமரம். டி.ஆர்.ராஜகுமாரி போல சொந்தங்களுக்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர். தம்பி, தங்கை பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவர்.

இவருடைய தங்கை மகள் டான்ஸ் மாஸ்டர் ராதிகா. இவர் மூத்த சகோதரர் டான்ஸர் கார்த்திக். சீதாலட்சுமியை அம்மாவாக பார்த்தவர்கள். ஹேர் டிரஸ்ஸர் புஷ்பா இவருடைய இன்னொரு தங்கை மகள்.
மிஸ்கினின் முகமூடியில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்திருக்கிறார். மரியான், 555, சிகரம் தொடு, ரோமியோ ஜூலியட்,  தாரை தப்பட்டை, விஷாலின் கத்திச்சண்டை, விஜய் சேதுபதியின் தர்மதுரை, உதயநிதியின் கண்ணே கலைமானே போன்ற படங்களிலும் டான்ஸ் மாஸ்டர் ராதிகா தான். ராதிகாவின் கணவர் இளையராஜா இசைக்குழுவில் இருப்பவர். வயலினிஸ்ட் பழனியப்பன்.

இதை ஏன் சொல்ல வேண்டியிருக்கிறதென்றால் ஒரு கலைப்பரம்பரை இவரில் தொடர்கிறது.


திருநங்கை சுதாவுக்கு கலைமாமணி விருது

திருநங்கை சுதாவுக்கு கலைமாமணி விருது.
இதை கொண்டாட கஃபே சிசிலியாவில் நேற்று கேக் வெட்டிய போது கேக்கின் முதல் துண்டை எனக்கு ஊட்டி விட்டு என் காலை தொட்டு வணங்கினார் சுதா.
முந்தைய தினம் நான் அவரிடம் சொல்லியிருந்தேன்.
“ நீ உயர்ந்த சிறப்பை உன் வாழ்வில் காண்பாய்” .
நேற்று ரெஸ்ட்ரெண்ட்டில் ஷூட்டிங் லஞ்ச் ப்ரேக்கில் “சார், நேற்று தான் நீங்கள் ஆசி வழங்கினீர்கள். இன்று எனக்கு கலைமாமணி விருது கிடைத்திருக்கிறது!” என்று உணர்ச்சி பொங்க கூறினார்.
அவருடன் நானும் ஒரு feature filmல் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
சகோதரி, உன்னுடைய ஏற்றத்தில் இந்த சமூகத்தின் மேன்மை இருக்கிறதம்மா.

(புகைப்படம் சுதா எடுத்த செல்ஃபி.)

https://rprajanayahem.blogspot.com/2012/07/blog-post_27.html

Mar 8, 2019

நண்டு வளையில நானும் தான் இருக்கேன்


நிஜமாலுமே கமல் பாராளுமன்ற தேர்தலில் தனி ஆவர்த்தனம் தானா?
’நண்டு வளையில நானும் தான் இருக்கேன்னு மூக்க நொளச்சி’ அவர் தேமுதிகவுடன் கூட்டணிக்கு தயார் என்ற அர்த்தத்தில் சொன்ன வார்த்தைகள் தேர்தல் சலசலப்பில் கவனம் பெற்றதா?
சறுக்கல்.

’எல்லோரையும் போலத்தான் நானும்’னு தானே இதற்கு அர்த்தம். நம்பகத்தன்மையை இழக்கிறார். இவர் அரசியலை சுத்தம் செய்ய புறப்பட்டவர்!
கமல் நீட்டிய நேசக்கரத்தை தே.மு.தி.க. மதித்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. Rejection. It's a disgrace.
ரஜினி கிட்ட சப்போர்ட் கேட்பேன் என்கிறார். கட்சி சவலப்பிள்ளை போலத்தான். கமலுக்கே புரிந்து விட்டது. தாங்குவார் இல்லன்னு தவித்து தக்காளி விக்கிறார்.
சித்திரக்குள்ளன் சினேகன் கூடவே இருப்பது வேறு அபஸ்வரம் போல தோற்றம் தருகிறதே.

அரசியலுக்கு வந்து பிரசங்கம் ஆரம்பித்த போது மய்யமாக இவர் ஏதோ பேசியதற்கே முகத்தில் அடித்தார் வைகோ “ Mr.Kamal, mind your words.”
யார்,யாரையோ போய் பார்த்த கமல் தன்னை வந்து பார்க்கவில்லை என்ற ஆதங்கம் ஒரு புறம் இருக்கத்தான் செய்யும்.
முன்னயே சாரு ஹாசன் ஆசீர்வாதம் கமல் கட்சி ஆரம்பிக்க நினைப்பது பற்றி இளக்காரமாக.
தமிழகத்த முன்னேற்ற முன்னெடுத்த பழைய முயற்சியெல்லாம் இங்கே எடுபட்டதில்லை.
ஆனா ஒன்னு. இந்த தேர்தல்ல நின்னு தோத்து ஓட்டுக்கணக்கு போட்டு, இவ்வளவு ஓட்டு வாங்கியிருக்கோம்னு காட்டி அடுத்த சட்ட சபை தேர்தலில் பெரிய கட்சிகளிடம் பா.ம.க. தே.மு.தி.க. ம.தி.மு.க, விடுதலைச்சிறுத்தைகள் போல சீட்டுக்கு சின்ன பேரம் பேச வசதியுண்டு.
மற்றொரு உதிரிக்கட்சி மக்கள் நீதி மய்யம்? இல்ல.இல்ல. மற்றுமொரு கார்ப்பரேட் நிறுவனம்.


Mar 7, 2019

மாற்றமில்லா சாசுவத அரசியல்


”தே.மு.தி.க கட்சிய கூட்டணியில சேர்க்க திமுக, அண்ணா திமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பிஜேபி எல்லா கட்சியுமே போட்டி போடுவாங்க!”
2010ல் நான் சொன்னது.’இங்கே நிறைய ஸ்டீபனோக்கள்’ என்ற பதிவில். கீழே லிங்க் கொடுத்திருக்கிறேன். இன்றும் நான் சொன்ன வார்த்தைகள் சாசுவத நிலையில் தான்.
இன்றும் 2019ல் அதை அரசியல் கட்சிகள் நடத்திக்காட்டியிருக்கிறார்கள். ’உடல் நலம் விசாரிப்பு மத்தாப்பூ’
'Look like the innocent flower,
But be a serpent under it.'
- Shakespeare in Macbeth

”தே.மு.தி.க அரசியல் ஆரோக்கியமானதல்ல. தனித்துவமில்லாதது. மனைவி, மைத்துனர், இப்போது மகன் இவர்களை உள்ளடக்கிய குடும்ப கட்சி. மக்கள் செல்வாக்கேயில்லாத மற்றொரு குடும்ப கட்சி.
ஆண்டவனோடும் மக்களோடும் மட்டும் கூட்டணி என்று சொல்லி விட்டு, பின்னால் அவர் அரசியல் கட்சிகளை தவிக்க விட்டு நடத்திய சந்தர்ப்ப வாத கூட்டணி கண்ணாமூச்சி..” - இப்படி இந்த வருட ஜனவரி மாதம் ‘விஜய்காந்த்’ பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.
கண்ணாமூச்சி இந்த பாராளுமன்ற கூட்டணி விஷயத்திலும் தொடர்ந்திருக்கிறது.
’துரைமுருகன் தான் தே.மு.தி.க மூக்கை அறுத்து விட்டாரே’ என்ற பீற்றல் கேலிக்குரியது.ச்சீ இந்த பழம் புளிக்கும் முக சுளிப்பு.
ஸ்டாலின் தேமுதிக தலைவர் வீட்டுக்கு போனதை, நல்ல பதில் வரும் என்று திமுக காத்திருந்ததை சுலபமாக புறம் தள்ளும் Selective Amnesia.
அதிமுக பாஜக கூட்டணி கதவு தேமுதிக இன்னும் சாத்தப்படவில்லை. (இங்கே எழுதும்போது பா.ம.க பெயர் விடுபட்டது பிரக்ஞைபூர்வமானது தான்.மறதியல்ல.)
தே.மு.தி.கவுக்கு திரி சங்கு நிலை இப்போதும் கிடையாது.
அதிமுக மன்னார்குடி குடும்பத்தில் இருந்து விடுதலை என்பது சரி. ஜெயலலிதா மரணத்திற்கு முன் நினைத்தே பார்த்திருக்க முடியாத விஷயம் தான். அதற்காக மீதியெல்லாம் சரி என்று ஏற்க முடியுமா?
சட்டியில் இருப்பது தான் அகப்பையில். ஸ்டாலின் கூட்டணி வெற்றி பெறுவது அவசியம்.

Mar 6, 2019

Carnal Thoughts -46

பொன்னகர புனிதை
மதுரை சென்ட்ரல் தியேட்டர் சந்தில் sex work செய்துகொண்டிருந்த அமரர் பாப்புவின் ஆளுகையில் இருந்தவள் தான் கவரி மிளா. காலத்தின் காற்றில் கம்மாக்கரைக்கு வந்து சேர்ந்திருந்தாள்.
“காற்றடிக்கும் திசையினிலே காற்றாடி போகுதம்மா. போகுமிடம் சேருமிடம் யார் அறியக்கூடுமம்மா.” சீர்காழியின் உருக்கத்துடன் குருவி மண்டையனின் விம்மல்.
ஆட்டு மூக்கனுக்கு மூக்கு நுனியில் வியர்த்து விட்டது. 
ஓசி ஓலு ஒச்சுக்கும் விஷயம் எட்டி விட்டது.
காராச்சேவு, காராபூந்தி என்று வாங்கிக்கொண்டு
கவரி மிளா வீடு ஏகினர். 
வீடென்று எதைச்சொல்வீரோ, அப்படியான இலக்கணத்திற்கெல்லாம் கட்டுப்படாத வீடென்று சொல்ல வேண்டும்.
ஒரு நாள் தொல்லை ( இவனால் பல தொல்லைகள் விளைந்தன என்பதால் தொல்லை எனவே அறியப்பட்டான். இயற்பெயர் யாரறிவாரோ?) அதிகாலையிலேயே அவள் ’வீடு பேறு’ வேண்டிச் சென்றான்.
பொல, பொலவென்று விடிந்து விட்ட பின்னரே ஆட்டு மூக்கன் போனான். கையில் ரண்டு வட்டமான பேக்கரி பன்.
கவரி மிளா “தொல்ல ரொம்ப தொல்ல பண்றாம்ப்பா. இங்க பாரு ஓத்து ஒழுக விட்டு போயிருக்கறத.”
வீட்டு தரையில் விந்து சிந்தியிருப்பதை காட்டினாள். “கஞ்சி வரும் போது உருவி தொடயில விட்டுட்டேன். வீட்டு தரையிலல்லாம் வடிச்சிட்டு ஓடுறான். ஒரு டீக்கு தான் காசு கொடுத்தான். அதா ’ஆ..’ன்னு அவன் முனகும்போதே உருவி சாமான தொடயில விட்டுட்டேன்.”
இவன் பரவால்லப்பா.. நேத்து குருவிமண்டையன் வந்தான். அடுப்படியில குத்த வச்சி பாத்திரம் கழுவிக்கிட்டிருந்தேன். அப்படியே பின்னால நாய் மாதிரி குண்டியில ஏர்றான். மூச்சி எறச்சிக்கிட்டே எந்திரிச்சான். உடனே கவிதை சொல்றான் எங்கிட்ட.
“ குறியினை குதம் விட்டு எடுக்குங்கால் மொட்டில் காண் பித்தளைப்பூண்”னு அவன் சாமான் மொட்டில ஒட்டியிருந்த என் பீயை எனக்கே காட்டுறான்.
பேசிக்கொண்டே ரெண்டு பன்னையும் ஒன்றொன்றாக சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அவள் வாயில் இவன் சாமான விட்டு இயங்க ஆரம்பித்தான். அவள் சாப்பிட்டுக்கொண்டே சப்பிக்கொண்டும் கன்னல் மொழி பேசினாள் “ இந்த ஒச்சுக்கிட்ட சொல்லிடு. இங்க என்னண்ட வரவே கூடாதுன்னு. அவன் வாயும் கூட நாத்தமான நாத்தம். நாறித்தொலையுது. கொமட்டுது. எம்புட்டு நேரம் மூச்சி பிடிச்சிக்கிட்டு கண்ண மூடிக்கிட்டே நான் கிடக்கறது. நாரவாயன் அடுத்த தடவ காசு தர்றேன்னு தான் எப்பவும் சொல்வான்.”
ஆட்டு மூக்கன் வடித்த விந்தை, விந்தையென சொல்லும் விதமே, தான் மென்று கொண்டிருந்த பன்னோடு அய்யரவின்றி கவரி மிளா மடக் மடக் என்று விழுங்கும்போது தொண்டகுழி ஏறி இறங்கியது.

https://www.youtube.com/watch?v=-KILVvA8rgk