Share

Jan 10, 2013

Power is the ultimate aphrodisiac





"I am not an admirer of great people. The few I got to know at close quarters turned out to have feet of clay:they were pretentious, feckless, lying and utterly commonplace."
-Khushwant Singh in 'Truth, Love & a Little Malice'

 
கிருஷ்ணமேனன் பற்றி இந்தியர்களுக்கு ஒரு அதீத பிம்பம் உண்டு.
ஐக்கிய நாடுகள் சபையில் 13 மணி நேரம் மேனன் நிகழ்த்திய பேருரை பற்றி அந்தக் கால பெரிசுகள் கண் விரிய சொல்வார்கள். கிருஷ்ணமேனனும் விஜயலட்சுமி பண்டிட்டும் கட்டிப்பிடித்த படி விமானத்திலிருந்து இறங்கி வரும் புகைப்படம் அந்தக்காலத்தில் பார்க்கக்கிடைத்ததுண்டு. அவர் ராணுவ மந்திரியாய் இருந்தபோது தான் இந்திய சீன யுத்தம். 

இறப்பதற்கு முன் கேசுவலாக ஒரு டீ சாப்பிட்டு விட்டு அவர் படுத்ததை எங்கள் அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கில பேராசிரியர் வசந்தன் சுவாரசியமாக சொன்னபோது பிரமிப்பாய் கூட இருந்தது.

குஷ்வந்த் சிங் காட்டும் கிருஷ்ணமேனன் பற்றிய குறிப்புகள் இந்த விக்கிரகத்தை உடைத்து விடுகிறது. ஒரு முழுமையான வில்லன் போலவே தான் கிருஷ்ணமேனன் பற்றி தெரிய வருகிறது.
13 மணி நேரம் காஷ்மீர் பற்றி பேசியதன் out put என்ன? காஷ்மீர் பற்றிய இந்திய நிலைப்பாட்டிற்கு எதிராகத் தான் ஐக்கிய நாடுகள் சபையில் ஓட்டு போட்டார்கள். A unanimous  vote against India!
சீன சண்டையில் இந்தியாவின் தோல்விக்கு கிருஷ்ணமேனன் தான் பொறுப்பாளி.

எப்படியோ நேருவை கிருஷ்ணமேனன் இன்ஃப்ளூயன்ஸ் செய்ய முடிந்திருக்கிறது. அவர் சுதந்திர இந்தியாவின் இங்கிலாந்து தூதராக ஆக முடிந்திருக்கிறது. 
ஹைகமிஷனராக லண்டனில் அவர் செயல் பாடுகள் பற்றி குஷ்வந்த் சிங் எழுதுவதைப் படிக்கும்போது கோபமே வருகிறது. இப்படிப்பட்டவர்கள் பற்றி அறிய வரும்போது நீட்ஷே சொன்னது தான் எப்போதுமே நினைவில் வருகிறது, ” அவ்வப்போது ஆபாசம் தான் அரியணையில் அமர்கிறது ! அவ்வப்போது அரியணையே ஆபாசத்தின் மேல் !”
கிருஷ்ணமேனன் ஒரு womanizer, sadist and a liar என்றாலும் ஒரு Bachelor.

உண்மையே பேசமாட்டார். தனக்கு பிடிக்காத சுதிர் கோஷ் பற்றி நேருவிடம் இவன் வல்லபாய் படேலுடைய ஆள் என்று போட்டு விட்டு வேலையை காலி பண்ணியிருக்கிறார்.
தூதரகத்தில் வேலை பார்த்த கமலா ஜஸ்பால் என்ற 
மேனாமினுக்கி ( A designing seductress ) இவருடைய mistress.

குஷ்வந்த் சிங் வார்த்தைகள் “Krishna Menon treated the husbands of good-looking women as friends. If he sensed tension between the couple, he became considerate towards them. Menon had great understanding for misunderstood wives. Sheila Lall and my wife fell in that category. Arthur and I became his number one and number two favourites.


 குஷ்வந்த்சிங் இந்திய தூதரகத்தின் public relations officer.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரின் முதல் இங்கிலாந்து விஜயம்.
நேருவுடன் அவருடைய செக்ரட்டரி எம்.ஓ.மத்தாய்(!) தான் வருகிறார்.
According to M.O.Matthai Neither Nehru nor Indira Gandhi was sexully inhibited. ஆபாசம் தான் அரியணையில் அமர்கிறது…

நேரு நள்ளிரவில் விமானத்தில் லண்டன் வருகிறார். தான் தங்க வேண்டிய ஹோட்டலுக்கு போவார் என்று பார்த்தால் நேராக லேடி மவுண்ட் பேட்டனைப்பார்க்க செல்லுகிறார். மவுண்ட் பேட்டன் அப்போது லண்டனில் இல்லை. நேருவுக்காக நைட் கவுனோடு லேடி எட்வினா மவுண்ட்பேட்டன் கதவை திறந்து விடுகிற போட்டோ ’தி டெய்லி ஹெரால்ட்’ செய்தித்தாளில் வருகிறது. தலைப்பு “Lady Mountbatten’s Midnight Visitor.’’ லண்டனில் லார்ட் மவுண்ட் பேட்டன் அன்று இல்லை என்பதையும் டெய்லி ஹெரால்ட் சொல்கிறது.
கிருஷ்ணமேனன் அன்று பி.ஆர்.ஓ குஷ்வந்த் சிங்கைப் பார்த்து குரைக்கிறார். “ டெய்லி ஹெரால்ட் பாத்தியாய்யா? நேரு ஒன் மேல ரொம்ப கோபமா இருக்கிறார்”
குஷ்வந்த் சிங் பரிதாபமாக “எனக்கெப்படிங்க தெரியும். நேரு ஹோட்டலுக்குப் போகாம இப்படி அந்தம்மாவைப் பாக்கப்போவாருன்னு.”


பத்திரிக்கையாளர்களுக்கு நேரு தன் ஹோட்டலில் பேட்டி கொடுக்கிற காட்சி.
கிருஷ்ணமேனன் தலையைத்தொங்கப்போட்டு தூங்குகிறார். நேரு உடனே குஷ்வந்த் சிங்கிடம் கோபமாய் சொல்கிறார். “ என்னய்யா இது உங்க ஹை கமிஷனருக்கு உடம்பு சரியில்ல போலருக்கு. You must not expose him to outsiders like this ” ஆனால் கொஞ்ச நேரத்தில் அத்தனை பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நேருவும் தலையை நெஞ்சில தொங்கப்போட்டு நித்திரையில் ஆழ்கிறார்.
 
Pandit Nehru had a couple of days free to indulge in his favourite hobbies, buying books and seeing Lady Mountbatten.

நேரு ஒரு க்ரீக் ரெஸ்டாரெண்ட்டுக்கு வரும்படி லேடி மவுண்ட்பேட்டனை அழைக்கிறார். ரெஸ்டாரண்ட் ஓனர் உடனே பத்திரிக்கைகளுக்கு தொலைபேசி தகவல் கொடுக்கிறார். ரெஸ்டாரெண்ட்டுக்கு பப்ளிசிட்டியாம்! அடுத்த நாள் காலை பேப்பர்களில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின்றன.
பி.ஆர்.ஓ குஷ்வந்த் சிங்கிடம் நேரு எரிச்சலுடன் சொல்கிறார்.” You have strange notions of publicity!”


கிருஷ்ணமேனன் பற்றி குஷ்வந்த் சிங்
Menon was a complex Character, the most unpredictable and prickly I have ever met….Menon’s bad temper and discourtesy had to be experienced to be believed…Menon was full of acid wit and sarcasm…
Next to Nehru, it was Mountbattens that KrishnaMenon relied on to keep him where he was…..Women found him handsome…Menon was not generous with his money, except when it came to his lady friends and children…Menon’s first reaction to any proposal put to him was to reject him…He has a strong streak of sadism…Merit did not matter very much to Menon; Unquestioned loyalty did. Lying was Menon's second nature and came as easily to him as discourtesy.…Why Menon got where he did under the patronage of Pandit Nehru remains, and probably will remain, unexplained.


லண்டனில் ரெஸ்டாரண்ட்களில் வெயிட்டராக வேலை பார்த்த மேனன் பின்னர் அதே லண்டனில் இங்கிலாந்தின் இந்திய தூதராக ஆகி, இந்திய எம்.பி ஆகி இந்திய ராணுவ மந்திரியாகி…..ஆகா சினிமாவாக எடுத்தால் கூட சற்று மிகையாகத் தான் தெரியும்.

பின்னால் லண்டனில் இந்தியா ஆபீஸ் லைப்ரரியில் வேலை பார்த்த குஷ்வந்த் அப்போது ஷீலா லாலுடன் தங்கியிருந்த காலத்தில் ’ நான் உன்னை ரகசியமா வைப்பாட்டியா வச்சுக்கிறேன்’ என்று ஷீலாவை கிருஷ்ணமேனன் தொந்தரவு செய்து கொண்டிருந்திருக்கிறார். போனில் வந்த மேனனிடம் “பாஸ்டர்ட்..நீ யாருன்னு எனக்கு தெரியும்டா..நேரங்கெட்ட நேரத்தில போன் பண்றதெ நிறுத்திக்க. இல்லன்னா ரொம்ப அசிங்கமா 
பேசிடுவன்டா”ன்னு குஷ்வந்த்சிங் கத்தியிருக்கிறார்.

ஜெனரல் சிவ் வர்மா கிருஷ்ணமேனனைப்பற்றி சொன்னது நூத்துக்கு நூறு சரி என்று குஷ்வந்த் சொல்வது சுவாரசியம்.
“KrishnaMenon was a bachelor, the same as his father.”





2 comments:

  1. எனக்கிது புதிய தகவலுங்க. குஷ்வந்த் சிங் புத்தகம் படிக்கணும்.

    ReplyDelete
  2. இந்தியாவின் பாதுகாப்புத்துறை மந்திரிகளைப் பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்... ஒரு காலத்தில் வாத்தியாருக்குப் படித்து வேலை செய்த பல்பீர் சிங் பாதுகாப்புத்துறை மந்திரி..இங்கிலாந்தில் லேபர் பார்ட்டியின் பிரதிநிதியாக எலக்சனின் நிற்கும் அளவுக்கு வெள்ளைக்காரனுடன் நட்பு பாராட்டிய வி.கே.கே.மேனன்(கிருஷ்ண மேனன்) ஓர் பாதுகாப்பு மந்திரி...விளங்குமா??? அங்கே வி.கே.கே.மேனன் பாதுகாப்பு மந்திரியாக இருப்பதால்தான், இங்கே காமராஜ் முத்தையா செட்டியாரையும், சர் அண்ணாமலை செட்டியாரையும் பார்லிமண்ட்,எம்.எல்.ஏ பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கும் சின்னத்தனம் நடக்கிறது, மத்தியில் பெரிய ஊழல் இருப்பதால்..

    அங்கே வி.கே.கே.மேனன் போன்ற பிரகஸ்பதிகள் பாதுகாப்புத்துறை மந்திரியாக முடியுமென்றால், இங்கே ராஜா சர் முத்தையா செட்டியின் வர்க்கம், டி.டி.கிருஷ்ணமாச்சாரியின்(காந்தியை முட்டாள் என்று கேட்டவர்) வர்க்கம், பார்லிமெண்ட் எம்.எல்.ஏ பதவிகளை அடைவதில் ஒன்றும் ஆபத்து வந்துவிடாது.. அவ்வளவு மானங்கெட்ட முறை இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது...

    // இதைச் சொன்னது ஓர் பரிசுத்தமான பேச்சிலர்... ஐயா திரு.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், தமுக்கம் மைதானத்தில்....

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.