Share

Showing posts with label ஈ.எம்.எஸ்.. Show all posts
Showing posts with label ஈ.எம்.எஸ்.. Show all posts

Oct 1, 2009

Nobleness


ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாகாண முதல்வராக
(23 March, 1947 to 6 April,1949) இருந்தவர்.அப்போது அவருடைய மந்திரிசபையில் மூன்றே மந்திரிகள் தான்.
(பக்தவத்சலம், அவினாசிலிங்கம் செட்டியார், TSS.ராஜன்)

இப்போதெல்லாம் எல்லா மாகாணங்களிலும் பன்னிப்படை மாதிரி.


ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அன்றைக்கு அவர் தங்கியிருந்த T .V .ஸ்டேசன் பக்கத்துலே கூவம் ஹவுஸ் வீட்டுக்கு அரசாங்கக் காரை உபயோகப்படுத்தாமல் நடந்தே வீட்டுக்கு வந்தார். இந்த அதிசய நிகழ்வை அந்த தெருவே ஆச்சரியத்தில் வியந்து போய் பார்த்தது.
நேர்மை, நாணயம் நம்மிடத்திலிருந்து தான் வரணும்னு ஓமந்தூரார் சொல்வாராம். சொன்னது மட்டுமல்ல . அப்படியே வாழ்ந்து காட்டியவர்.

....................



ஈ . எம் . எஸ் . நம்பூதிரிபாட் . முன்னாள் கேரளா முதல்வர். அவருக்கு பல்வலி . திருவனந்த புரம் அரசு மருத்துவமனைக்கு செல்கிறார் . துணைக்கு அவருடைய மருமகள் . க்யூவில் நிற்கிறார் ஈ .எம் .எஸ் . டாக்டரைப் பார்ப்பதற்காக. விஷயத்தை கேள்விப்பட்ட தலைமை டாக்டர் பதறிப் போய் ஓடி வந்து முன்னாள் முதல்வரிடம் க்யூவில் நிற்கவேண்டாம் என்று மன்றாடி , உள்ளே வர அழைக்கிறார் . இவர் மறுத்து விட்டார் . ஒரு மணி நேரம் க்யூவில் நிற்கும்படியாகிறது . பிறகு தான் பல்வலிக்கு சிகிச்சை பெறுகிறார் . இது நடந்தது மார்ச் 18,1998 அன்று . அவர் மரணமடைவதற்கு இரண்டே நாள் முன்னதாகத்தான் இந்த சம்பவம் .
..................


ராஜாஜி முதல் அமைச்சராக இருந்த போது தமிழகத்தில் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாச விளைவுகள் . மந்திரிகள் உடனே கஜதுஜபதாதிகளோடு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கிளம்ப யத்தனித்த போது ' நீங்கள் யாரும் போகவேண்டாம் . உங்களை வரவேற்கவும் , வசதி செய்து தரவும் , பாதுகாப்பு அளிக்கவும் தான் அதிகாரிகள் கவனம் செலுத்த முடியுமே தவிர ,பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் அல்ல ' என்று தன் சக அமைச்சர்களுக்கு தடை உத்தரவு விதித்து விட்டார் ராஜாஜி . அமைச்சர் பெருமக்கள் வராததால் மிச்சமாகும் பணத்தைக்கொண்டு , கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழைகளுக்குத் தாராளமாக,சிறப்பான உதவிகளை செய்யமுடியும் என்று மூதறிஞர் முடிவு செய்தார் .