Share

Jul 13, 2026

பூமணி

1982 ல் படித்த நாவல் 'பிறகு' 
மீண்டும் மீண்டும் பலமுறை.
1983ல் படித்த 'வெக்கை' 

2008 அக்டோபர் ராஜநாயஹம் பதிவில்

பூமணியின் "பிறகு" நாவலில் ஒரு காட்சி

சக்கணன் அத்துவான காட்டில்
 நல்ல வெய்யிலில்
 தாங்க முடியாத தாகத்துடன் நீரை தேடுகிறான்.
 நல்ல வறட்டு தாகம். 

அங்கே ஒரு குட்டை தென்படுகிறது.
குட்டையை நெருங்கி குத்த வைத்து குந்தி குனிந்து அப்படியே வாயை நீரில் அமிழ்த்தி நீரை உறிகிறான். 
தேவாம்ருதம். 
நல்ல கடுமையான தாகத்துடன் இருப்பவன் எப்படி நீரை உள் வாங்குவான். சொக்கிப்போய் நீரை மடக்கு மடக்கு என அருந்துகிறான். கண்ணை மூடிக்கொண்டு சுவைத்து நீரை குடிக்கிறான்.
தாகம் முழுதும் தீர்ந்தவுடன் நிதானமாக கண்ணை திறக்கிறான்.
 அப்படியே பார்க்கிறான்.

கண்ணுக்கு க்ளோஸ்-அப் காட்சி.
நீரில் அவன் வாயை யொட்டி மனித மலம் கோபுரம் போல மிதக்கிறது.
 ஆடி ஆடி மிதக்கிறது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.