Share

Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

Jun 22, 2018

வில்லுப்பாட்டு


பள்ளிப்படிப்பின் போது அடிக்கடி வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறேன். ஒவ்வொரு வருடமும். மொத்தத்தில் ஒரு இருபது தடவைகளாவது வில்லுப்பாட்டு நிகழ்த்தியிருக்கிறேன்.
சிறுவனாக நான் வில்லுப்பாட்டு பிரமாதமாக பாடி பேசி நடிப்பதாக எல்லோரும் அப்போது சொல்வார்கள்

கல்லூரி காலத்தில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் நான் பங்கேற்க வாய்ப்பே கிட்டவில்லை. அந்நியமாகி விட்டது.
 பால் பருவத்து என் வில்லுப்பாட்டு அப்படியே பசுமையாக நினைவில் இருக்கிறது. பாடல் வரிகள்.

“தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினில் பாட வந்தருள் சந்தான தெய்வமே
சந்தத்தோடு பானை தாளம்
சித்துடுக்கை பம்பையுடன்
பஞ்ச பூதங்கள் அழித்த
பரமன் கதை நானுரைக்க
பாதக மானிடன் மீட்பை
பாங்குடனே நான் விளக்க
வந்தெனக்கு துணையிருப்பாள்
துர்க்கையம்மனே
அந்த வடிவழகி பாதம் போற்றி!”

” பாடறியேன் படிப்பறியேன்
அந்த பாட்டிலுள்ள பொருளறியேன்
பாடறியா நாளையிலே
என்னை படிக்க வைத்தார்
என் தாய் தந்தையர்
படிக்காமலே தறுதலையாய்
நான் ஊர் சுற்றினால் என்ன செய்வார்?
நான் ஒரு நாள் மறந்தாலும், மறந்தாலும்
என் நினைவொரு நாள் மறப்பதில்லே
என் நினைவொரு நாள் மறந்தாலும், மறந்தாலும்
என் நெஞ்சொரு நாள் மறப்பதில்லே”

இந்த ’பாடறியேன் படிப்பறியேன்’ பின்னால் இளையராஜாவால் 'சிந்து பைரவி' படத்தில் நாட்டுப்புற பாடலாக பிரபலமானது.

பழங்காலத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வில்லுப்பாட்டு பற்றி நிறைய சொல்வார்கள்.

நடிகர் எஸ்.எஸ்.ஆர் பல காலம் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். ஆனால் எனக்கு அவருடைய நிகழ்ச்சி பார்க்க கிடைத்ததில்லை. எஸ்.எஸ்.ஆரையே நான் நேரில் பார்த்ததில்லை.


’வில்லடிச்சான் கோவிலிலே விளக்கு வைக்க நேரமில்லை’ என்ற அளவிற்கு கோவில்களில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி ரொம்ப காலத்திற்கு இருந்திருக்கிறது.



May 13, 2017

தமிழக அரசு இலச்சினை


சில விஷயம் பரவலாக ஆழமாக பதிந்து போய் விடும். அது உண்மையல்ல என்பதாகவோ மாற்றுக்கருத்தோ வரும்போது அதை ஏற்றுக்கொள்வது மிகவும் சிரமமாய் இருக்கும்.

ராஜபாளையம் ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தில் பணிபுரியும் பலரையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்த போது அவர்கள் கூறிய விஷயமொன்று - தங்கள் கம்பெனி லோகோ ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம்.
இதைச் சொல்லும்போதே அவர்கள் தமிழக அரசு லோகோவும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தான் என்ற பரவலாக அறியப்பட்ட விஷயத்தையும் சொல்கிறார்கள்.

ராம்கோ லோகோ ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் என்பது இங்கே முக்கியமில்லை. அது அந்த நிறுவண விஷயம்.

ஸ்ரீவில்லிபுத்தூர்காரர்கள் எப்போதும் இது குறித்து பெருமைப்படுவார்கள். ’எங்க கோபுரம் தான் தமிழக அரசு முத்திரையில் இருக்கு!’

தமிழ் நாட்டில் எந்த ஊர்க்காரராக இருந்தாலும் பொது அறிவு விஷயமாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் பற்றி இதை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஐந்து வருடங்களுக்கு முன் குமுதத்தில் ”ராசாவின் மனசிலே” தலைப்பில் இளையராஜா ஒரு கேள்விக்கு பதில் சொல்லியிருந்தார்.

எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கும் இந்த விஷயத்தை ஆணித்தரமாக மறுத்திருந்தார்.
“ தமிழக அரசு இலச்சினையில் தமிழக முத்திரையில் இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரமே அல்ல. மதுரை மேற்கு கோபுரத்தின் தோற்றம் தான் அது.”


இது குறித்து ஆதாரபூர்வமான உண்மை என்ன? இளையராஜா சொல்வது சரி தானா? இளையராஜா சொல்வதற்கு யாரேனும் பெரிதாய் எதிர்வினையாற்றினார்களா?

We must be more concerned with truths than opinions. Stick to truths.
It is important that such information should be double-checked for authenticity and credibility.
………………………..

http://epaperbeta.timesofindia.com/Article.aspx…


http://rprajanayahem.blogspot.in/2008/11/blog-post_9130.html

Nov 19, 2008

பெருவங்கியம்

பல நூற்றாண்டுகளுக்கு முன் பெருவங்கியம் என்று ஒரு வாத்தியத்திற்கு பெயர் .
அது தான் நாகஸ்வரம் !
நாகஸ்வரம் ,தவில் இரண்டும் ராட்சச வாத்தியம் .அசாத்திய திறமை யுடன் கையாளவேண்டிய இசைக்கருவிகள் . அனைத்து இசைக்கருவிகளையும் கையாண்ட பிராம்மணர்கள் இதை கேட்டு ரசிக்க மட்டும் செய்தார்கள் . இசை வேளாளர்கள் தான் நாகஸ்வரம் மீது கண் வைத்தார்கள் . காருகுறிச்சி தெற்கே பிறந்த பூ கட்டுகிற பண்டார ஜாதி . ஸ்ரீ ரங்கம் ஷேக் சின்ன மௌலானா முஸ்லீம் . இவர் வீட்டில் இந்து தெய்வங்களின் படங்கள் இருக்கும் .
இளைய ராஜா ஒரு முறை சொன்னார் 'திரைஇசைக்குழுவில் 81இசைக்கருவிகள் உண்டு . ஆனால் அவற்றில் ஒன்று கூட நாகஸ்வரத்துக்கு ஈடாகாது .'
ஷெனாய் பிஷ்மில்லா கான் நாகஸ்வரத்தின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் . நாகஸ்வரத்தில் வாசிக்கக்கூடிய பல ராகங்கள் , சங்கதிகள் ஷெனாய் யில் வாசிக்கவே முடியாது என சொல்வார் .
காரு குறிச்சியின் சகானா வாசிப்பு கேட்கும்போது ஒரு தடவை எனக்கு 'இப்போதே மரணம் வாய்த்து விடாதா' என ஒரு நிறைவு ஏற்பட்டது .

நாகஸ்வர மேதை திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை 80வயது வரை வாழ்ந்தவர் . அவரது தொண்ணூறாவது வயது நினைவு நாள் சென்னையில் கொண்டாடப்பட்ட போது , செம்மங்குடி பேசினார் .
" நான் திருவிடை மருதூரில் குருகுலத்தில் இருந்த போது முதல் முதலாக திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை அவர்களை பார்த்தேன் . அப்போது அவருககு ஒரு 16,17 வயதிருக்கும் . ஆண் மோகினி போல் இருப்பார் !"
.........

ஒரு விஷயம் .
நாகஸ்வரம் வாசிப்பவர் முன் நின்று ஊறுகாய் சாப்பிடக்கூடாது .வித்வான் அப்புறம் ரொம்ப சிரமப்படுவார் . சாமி புறப்பாடு ,கல்யாண வீடுகளில் சில குறும்புக்கார சிறுவர்கள் நாகஸ்வர வித்வான் வாசிக்கும் போது அவர் முன் ஊறுகாய் பாக்கெட்டை சப்பிகொண்டு நிற்பார்கள் .