Share

Showing posts with label 'Hindu' N.Raghunatha iyer. Show all posts
Showing posts with label 'Hindu' N.Raghunatha iyer. Show all posts

Sep 2, 2019

'ரஸிகன்' என்ற ஹிண்டு நா. ரகுநாதய்யர்


ஸ்டீபன் ஸ்பெண்டரும் ஹிண்டு எடிட்டர் நா. ரகுநாதய்யரும் பற்றி க. நா. சு வின் நினைவுகள் பற்றிய என் பதிவை படிக்கிற யாராவது ரகுநாய்யர் தான் தமிழில் சிறுகதைகள், ஏன் நாடகங்களும் எழுதிய ’ரஸிகன்’ என்ற எழுத்தாளர் என்பதை கண்டு கமெண்ட் செய்ய மாட்டார்களா என்று நினைத்தேன்.

 அப்படி பின்னூட்டம் தான் என் பதிவுகளுக்கு என் எதிர்பார்ப்பு. 
                               
1939ல் கே.எஸ் வேங்கடரமணி ஆரம்பித்து ஒரு வருடம் நடத்திய பாரத மணி பத்திரிக்கையில் அவருடன் கு. ப. ரா. வும் இணைந்து எழுதிய போது அதில் ரஸிகன் என்ற புனைபெயரில் ரகுநாதய்யரும் கதை, நாடகம் பல தரமாக எழுதியிருக்கிறார். புத்தகமாகவும் அவை வெளிவந்து பரவலாக கவனம் பெற்றன. க. நா. சு. வின் அபிப்ராயத்தில் 'தரையில் காலூன்றி எழுதிய லட்சியவாதியாக' ரஸிகன் தோற்றம் தந்திருக்கிறார்.

அவர் மனைவியுடன் வாழ முடியாத நிலையில் தனியாக இருக்க நேர்ந்திருக்கிறது.

                      அவருடன் அளவளாவிய போதெல்லாம் அளவற்ற பொக்கிஷங்கள் தான் கிடைக்கப்பெற்றதாக க. நா. சு. 'இலக்கியச் சாதனையாளர்கள்' நூலில் பெருமிதமாக நினைவு கூர்ந்தார்.

https://m.facebook.com/story.php?story_fbid=2504298563116928&id=100006104256328

Aug 30, 2019

What is precious, is never to forget


“I think continually of those who were truly great.” 

மிகவும் சிறப்பாக துவங்கும் இந்த கவிதையை எழுதிய ஸ்டீபன் ஸ்பெண்டர் இரண்டாம் முறையாக 1956ல் வந்த போது அவரோடு க.நா.சு. நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
டி.எஸ்.எலியட்டை தன் முன்னோடியாக நம்பியவர் ஸ்டீபன் ஸ்பெண்டர். ஜெர்மானிய யூத பூர்வீகம். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த ஆங்கிலக் கவி.
 
I think continually of those who were truly great.

’எந்தரோ மஹானுபாவலு’ தியாக ப்ரும்மத்தின் ஸ்ரீராக கீர்த்தனை போன்றே தான் முதல் வரி.

ஸ்டீபன் ஸ்பெண்டரிடம் “ முதல் தடவையாக சென்னைக்கு வந்த போது உங்களை கவர்ந்த விஷயம் எது?” என்று க.நா.சு  கேட்ட போது அவர் பதில் “ மெரினா பீச்”

”இரண்டாவது சென்னையின் முக்கிய விஷயமாக அவர் எதைச் சொல்வார்” என்பது க.நா.சு கேட்ட இரண்டாவது கேள்வி.
ஸ்பெண்டர் பதில் : “போன தடவை நான் வந்த போது என் கூட்டங்கல் மூன்றுக்கு சற்றும் அழகில்லாத முகத்துடன் ஒரு வயசானவர் தலைமை வகித்தார். ஒவ்வொரு தடவையும் அவர் வாயைத் திறந்தபோது அழகான ஆங்கிலத்தில், மிகவும் அற்புதமாக, அறிவு தொனிக்கப் பேசினார். அவர் பெயர் நினைவில்லை”
க.நா.சு. அந்தப்பெரியவர் தான் இம்முறையும் ஸ்பெண்டரின் நிகழ்ச்சிகள் இரண்டிற்காவது தலைமை தாங்க இருப்பவர் என்று சொல்கிறார்.
அவர் ஹிண்டுவில் Defacto editor ஆக இருந்த நா.ரகுநாதய்யர். 

Truly Great. 
இவரைப்பற்றி தான் அந்த ஆங்கிலக்கவி பெருமையாக நினைவு கூர்ந்திருக்கிறார். 
Defacto editor? ஹிண்டு பத்திரிக்கையில் இப்படி ஒரு வேலை? defacto = Actual, Real.  Actual Editor! 
ஸ்பெண்டரின் கவிதையின் இரண்டாவது பேராவின் முதல் வரி
What is precious, is never to forget
ஸ்பெண்டருக்கு ஜெமினி ஸ்டுடியோவில் வாசன் ஒரு விருந்து கொடுத்திருக்கிறார். விருந்தின் போது ஆர்.பாஸ்கரன் என்பவர் ஸ்டீபன் ஸ்பெண்டரை சந்தித்திருக்கிறார்.
 பித்தப்பூ நாவலில் தியாகராஜன் என்பவரை முக்கிய  கதாபாத்திரமாக க.நா.சு. எழுதியிருப்பார்.
 தஞ்சை ப்ரகாஷ் வெளியிட்ட நாவல் பித்தப்பூ.
நாவலில் ஸ்டீபன் ஸ்பெண்டரும் வருவார். 

வாசன் ஔவையார் படம் போட்டு காட்டியிருக்கிறார். ஸ்பெண்டருக்கு முழு படமும் பார்க்க பொறுமையிருக்கவில்லை. வாசன் விளக்க முற்பட்டது பலன் தரவில்லை.
ஔவையார் பற்றி ஸ்பெண்டர்
“ Magical picture” என்று க.நா.சுவிடம் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார்.  ரசிக்க முடியவில்லை. பாதி படத்தில் க.நா.சு.வுடன் பிடிவாதமாக கிளம்பி விட்டார்.
அப்புறம் ஆங்கில கவி பம்பாய்க்கு போன போதும் ஔவையார் விரட்டிக்கொண்டு வந்திருக்கிறார். ஜெமினி வாசன் நிர்ப்பந்தப்படுத்தி அந்தப்படத்தை ஸ்பெண்டர் பார்க்கும்படி செய்து விட்டார்.
ஆனால் ஹிண்டு நா.ரகுநாதய்யர் was precious, was never to forget. Truly great. எந்தரோ மஹானுபாவலு, அந்தரிக்கி வந்தனமு.

க.நா.சுவையும் ஸ்பெண்டரால் மறந்திருக்க முடிந்திருக்காது.