Share

Showing posts with label ஹேம்லட். Show all posts
Showing posts with label ஹேம்லட். Show all posts

Apr 1, 2016

ஹேம்லெட்


சேக்ஸ்பியரின் துன்பியல் நாடக நாயகன் ஹாம்லெட் பற்றி எழுதப்பட்ட அளவுக்கு வேறெந்த கதாநாயகன் பற்றியாவது எழுதப்பட்டிருக்கவே முடியாது.


ஹேம்லட் ஸ்பெஷலிஸ்ட் என அறியப்பட்ட ஹொரேஸ் ஹோவர்ட் ஃபர்னஸ் நூறு வருடங்களுக்கு முன்னே 1908ல் சலித்துப்போய் எழுந்து சாமானை சொறிந்து விட்டு சொன்னார்: ” கடைசியாக ஒன்று கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து இனிமேல் யாரும் ஹாம்லட் பற்றி எந்த ஒரு கட்டுரையும் எழுத வேண்டாம். என் உயிருக்குயிரான நெருங்கிய நண்பன் ஒருவன் மரணப்படுக்கையில் இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனை உயிர் பிழைக்கச்செய்ய ஒரு வழி இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.அதாவது ஹாம்லெட் பற்றிய தன் தியரியை அவன் வெளிப்படுத்தினால் அவன் பிழைக்க வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர் சொன்னாரென்றால் நான் உடனே பதறி கதறுவேன். “போதும்! ஹாம்லெட் பற்றிய இன்னொரு தியரி வருவதற்குப்பதிலாக என் நண்பன் செத்துப்போகட்டும்.அவன் செத்தாலும் சரிதான்!”


அதன் பின் ஜான் பேரிமோர், லாரன்ஸ் ஒலிவியர், ரிச்சர்ட் பர்ட்டன் என்று எத்தனை பேர் ஹாம்லெட்டாக நடித்திருக்கிறார்கள். திரைப்படமாக ஹாம்லெட் 2015ல் கூட தயாரிக்கப்பட்டு வெளி வந்திருக்கிறது. இந்தியில் ஹாம்லெட் சென்ற வருடம் ’ஹெய்தர்’ ஆக வெளி வந்து நிறைய விருதுகள் பெறுகிறது.


ஹாம்லெட் சாசுவதமான Evergreen காவிய நாயகன்!

“After Jesus, Hamlet is the most cited figure in Western consciousness” என்று சொல்லப்படுகிறது.

சென்ற டிசம்பர் மாதம் கூத்துப்பட்டறை முழு நேர நடிகர்கள் பாண்டிச்சேரியில் ஒரு வொர்க் ஷாப் போன போது அங்கே அரியான் முஷ்கின் என்ற பெண் பிரஞ்சு நாடக அறிஞர் கேட்கிறார்: “How many of you know Shakespeare? If you don’t know Shakespeare, how can you say you are an actor?”
……………..




ஹேம்லெட்டின் அப்பாவின் ஆவி!
Revenge your father’s foul and most unnatural murder! The serpent that did sting your father’s life now wears his crown. But leave your mother to heaven. 

அப்பா ஹாம்லெட்டின் ஆவி ஹாம்லெட்டை ஆக்கிரமித்தது என்பது தெரிந்ததே. ஹாம்லெட்டாக நடித்த நடிகர்களைக்கூட அவர்களுடைய சொந்த அப்பாவின் ஆவி ஆக்கிரமித்த சுவாரசியம் தான் தெரியாததே!


எட்வின் பூத் 1853 துவங்கி1891 வரை ஹாம்லெட்டாக நாடகங்களில் நடித்தவர். இவருடைய அப்பா ப்ரூட்டஸ் பூத் முன்னதாக 1829 முதல்1849 வரை சேக்ஸ்பியரின் ஹாம்லெட்டாக நடித்தவர்.

எட்வின் பூத் சகோதரன் ஜான் பூத் infamous ஆக வரலாற்றில் அறியப்பட்டவன்.

 அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனை 26.04.1865 ல் சுட்டுக்கொன்ற நடிகன் ஜான் பூத்.


இதனால் எட்வின் பூத் ஹாம்லெட்டாக ஒரு ஒன்பது மாதம் நடிக்க முடியாமல் போய் விட்டது. பின்னர் மீண்டும் ஹாம்லெட்டாக மீண்டு, மேடையில் கலக்கு கலக்கென்று கலக்கி விட்டார்!

விஷயம் என்னவென்றால் ஹாம்லெட்டாக நடித்த எட்வின் பூத்துடன் அப்பா ப்ரூட்டஸின் குரல், ஹாம்லெட் அப்பா ஃபாதர் ஹாம்லெட்டின் ஆவி மூலம் எப்போதும் பேசுவதாக உறுதியாக சொல்லிக்கொண்டே இருந்தார். நாடகத்திலேயே அப்பா ப்ரூட்டஸ் பூத் சிறு உருவம் ஒன்றை ஹேம்லெட் அப்பாவின் ஆவி வரும் காட்சிகளுக்கு எட்வின் பயன்படுத்தினார்.
இதெல்லாம் 150 வருடங்களுக்கு முந்தைய சமாச்சாரம் என்று ஒதுக்கலாம்.


டேனியல் டே லூயிஸ் ஹாலிவுட் நடிகர். ஹாலிவுட் சரித்திரத்தில் ஹீரோவாக மூன்று படங்களுக்கு ஆஸ்கார் அவார்ட் வென்ற ஒரே நடிகர்.
My left foot, There will be blood, Lincoln ஆகிய படங்கள் தான் அவருக்கு ஆஸ்கார் பரிசு வாங்கிக்கொடுத்தன.
இவர் My left foot படம் நடித்த 1989ம் வருடம் ஹாம்லெட்டாக ஒரு மேடையில் நடித்துக்கொண்டிருந்தார். அவருடைய அப்பா கவிஞர் சிசில் டே லூயிஸ் 1972ல் இறந்து விட்டார். எப்போதோ மறைந்து விட்ட  தன் அப்பா சிசில் ’ஆவி’யை 1989ல் மேடையில் டேனியல் பார்த்து விட்டு அலறி நாடகத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் இடையிலேயே வெளியேறி விட்டார்!

“Tell why your canonized bones hearsed in death have burst their cerements, why the sepulchre wherein we saw you quietly interred has oped ponderous and marble jaws to cast you up again.( The tomb is personified here as vomiting the Ghost from it’s mouth!) What may this mean? Say why is this?”


“சவப்பெட்டியில் பூஜை செய்து அடக்கம் செய்யப்பட்ட உமது எலும்புகள், பெட்டியை உடைத்துக்கொண்டு இப்படி ஏன் தான் வெளியேறி விட்டதோ? உம்மை அமைதிப்படுத்தத்தானே கல்லறையில் புதைத்தோம்? அந்தக் கல்லறை, தன் பளிங்கு வாயைத் திறந்து ஏன் உம்மை வாந்தியெடுத்து விட்டது!”

…………………………..

http://rprajanayahem.blogspot.in/2013/04/blog-post_18.html


http://rprajanayahem.blogspot.in/2013/03/blog-post_27.html


http://rprajanayahem.blogspot.in/2010/01/blog-post_11.html


http://rprajanayahem.blogspot.in/2009/09/blog-post_02.html

http://rprajanayahem.blogspot.in/2008/09/blog-post_26.html


..........................................



Apr 30, 2015

Cock a snook at Mother




 அல்டாப்பு வலம்புரி ஜான் ஒரு பத்திரிக்கைக்கு ஆசிரியராய் இருந்தார். பத்திரிக்கையின் பெயர் "தாய்"!  எம்.ஜி.ஆர் – ஜானகியின் வளர்ப்பு மகன் அப்பு என்ற ரவீந்திரன் தான் பத்திரிக்கை அதிபர்.
 ஜெயகாந்தன் மடத்திற்கு போயிருந்த வக்கீல் ஹபீப் ராஜா (’ஏழாவது மனிதன்’ படத்தின் அசிஸ்டண்ட் டைரக்டர்) ஜெயகாந்தனின் அடைமழை பிரசங்கத்தின் இடையில் கொஞ்சம்  கேப் கிடைத்த போது “இந்த ‘தாய்’ பத்திரிக்கையில ஒங்களைப் பத்தி..” 

ஜெயகாந்தனோ வாக்கியம் முடியுமுன்னே மின்னலாக சீறினார் “அந்த  ‘த்தாயோளி’ பத்திரிக்கையெல்லாம் நீங்க ஏன் படிக்கிறீங்க?”
.............................

‘அம்மா வந்தாள்’ நாவல் தி.ஜானகிராமனின் மிகப்பிரபலமான நாவல்.
‘மோகமுள்’ நாவலை பிரமாதமாக புகழ்ந்த க.நா.சுவுக்கு ‘அம்மா வந்தாள்’ பிடிக்கவில்லை. 

டெல்லியில் ‘THOUGHT’ ஆங்கிலப்பத்திரிக்கையில் அம்மா வந்தாளுக்கு எழுதிய விமரிசனத்திற்கு க.நா.சு கொடுத்த தலைப்பு ‘Janakiraman’s Mother’. அம்மா வந்தாள் படித்திருந்தால் தான் இந்த தலைப்பின் வக்கிரம் புரியும்.
.....................

ஹேம்லட் தன் தாய் மீதான வெறுப்பை உமிழ்ந்த போது சொன்ன வார்த்தை - "Frailty! Thy name is woman!" - One of the mighty lines of Shakespeare - one of the memorable expressions. 

..............................................


த்ரூஃபோ ( Francois Truffaut ) எடுத்த படம் Bed and Board.  படம் பார்க்கும்போது அதில் ஒரு சுவாரசியமான தகவல். “Mother’s day” was invented by the German Nazis, During  the second world war!

Sep 15, 2012

Art is vice


Sep 4, 2009

'சாந்தி நிலையம் ' படத்தில் நாகேஷிடம் வீட்டுக்கு வந்த விருந்தாளி உற்சாகமாக " மகாலிங்கம் புல்லாங்குழல் கேட்டிங்களா '' என்பார் .
நாகேஷ் பதில் :" கேட்டுப்பார்த்தேன் . தரமாட்டேன்னுட்டார் . இப்பல்லாம் யாருக்கும் தர்றதில்லயாம்."

மாலி புல்லாங்குழல் வாசிப்பு பற்றி அந்தகால ரசிகர்கள் சிலாகித்து சொல்வது :
'மாலி 'காத்து '(காற்று ) யாருக்கும் வராது.'

மாலியின் Eccentricity பற்றி பல கதைகள் உண்டு .
மாலி புல்லாங்குழல் எப்போதும் கேட்கும்போது பிரஞ்சு ஓவியன் எட்கர் டிகா வார்த்தைகள் உடனே ஞாபகம் வரும் .
“Art is vice.You don't marry it legitimately, you rape it.”

மௌனி யின் வரிகள் : விரல்களின்றியும் வீணையில் சங்கீதம் வியாபகம் கொள்ளும் போலும் . சுருதி ,விலகி நின்று எட்டியா நின்று இடைவிடாது முணுமுணுக்கிறது. சப்தத்தினின்றும் சங்கீதம் விடுதலை பெற்று எட்டிய வெளியில் மெளனமாக வியாபகம் கொள்கிறது"

மாலியின் புல்லாங்குழலில் இப்படி பிரமை ஏற்படவே செய்யும். ஆழ்ந்து காது கொடுத்த பின் ஒருநீண்ட பெருமூச்சு வெளிப்படும் .

மைக்கேல் ஜாக்சன் பாடுவதும் , ஆடுவதும் பிரஞ்சு ஓவியனின் இந்த வார்த்தைகளுக்கு பொருந்தும் .“Art is vice.You don't marry it legitimately, you rape it.”

இருபது வருடங்களுக்கு முன்

'Thriller'
'Bad'
'Dangerous'

கேசட்களை கேட்காத நாளே எனக்கு கிடையாது . இன்றைக்கு டி .வி செய்தியில் மைக்கேல் ஜாக்சன் இறுதிச்சடங்கு நடந்தது பற்றி காட்டப்பட்டது .

..


லா .ச .ரா வின் கதையில் அம்மா தயார் செய்யும்
பாயசம் : சமையலறையைக் குங்குமப் பூவின் மனம் தூக்கிற்று. யாகக் குண்டம் போல தொட்டி முற்றத்தில் ஆவி புகைந்தது. முந்திரியும் ,வறுத்த திராட்சை பழங்களும் அத்தனை முழிகளாய் விழித்தன. சேமியா , ஆவியின் அசைவில் நெளிந்தது. அம்மாவின் கூந்தல் முடிச்சிலிருந்து ஒரு மல்லிப்பூ அதில் உதிர்ந்திருந்தது.

..


புதுமைப்பித்தன் ஏழையின் குடிசை வீடு பற்றி :'வறுமையின் இருள் அடித்த கர்ப்பக்கிரகம். '


கோபி கிருஷ்ணனின் "இனிமையான வக்கிரம் "கதை எழுத்துக்கலையின் உக்கிரம் . இவருடைய எல்லா எழுத்தும் உக்கிரம் . அலுப்பு என்பதை பதிவு செய்தார் .
" அலுப்பு " ( Ennui )கோபி கிருஷ்ணனை கலைஞன் ஆக்கிவிட்டது .

Art is vice.

கு .ப .ரா .வின் 'சபரியின் பிரேமை ' சிறுகதை பற்றி கோபி கிருஷ்ணன் சொன்ன விஷயம் நினைவுக்கு வருகிறது -"சபரியின் பிரேமை இயற்கைக்கு எதிராக இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதனால் ஏற்படும் துயரை எடுத்துச் சொல்கிறது ."
கோபி கிருஷ்ணனின் ' இனிமையான வக்கிரம் ' கதையை படித்தால் அந்த நேர் எதிர் 'Child'(!) பற்றி புரிந்து கொள்ளமுடியும் . கோபியின் Black Humour !

...................

Sep 2, 2009



மனித மண்டைஓடு

"ஆயிரத்தில் ஒருவன் " எம்ஜியார் படத்தில் மண்டை ஓடு ஒன்றை பார்த்துவிட்டு நாகேஷ் சொல்வார்
" எவனோ ஒருத்தன் சிரிச்சிக்கிட்டே செத்துருக்கான்!"


Human skull is always smiling!


சுஜாதா இருபது வருடங்களுக்கு முன் எழுதினார் " மண்டை ஓடுகள் சிரிப்பதற்கு காரணம் 'சாவின் ரகசியம் ' தெரிந்து விட்டதால்."

தொன்ம ரகசியம் ஒன்று - பரமேஸ்வரன் கழுத்தில் மண்டைஒட்டு மாலை அணிபவர் . அந்த மண்டை ஓடுகள் - அவருடைய பிரிய சகி பார்வதியின் முந்தைய பிறப்புகளின் உடல்களுடைய கபாலங்களை தான் பித்தன் சிவன் மாலையாக கோர்த்து அணிந்துள்ளாராம்.


Human Skull – The Contemplation of Human Mortality.

ஷேக்ஸ்பியரின் ஹேம்லட் கல்லறை ஒன்றில் ஒரு மண்டையோட்டை பார்த்து சொல்கிறான் "Alas, poor Yorick. I knew him ..A fellow of infinite jest".
Yorick was once the court fool.

ஹேம்லட் தன்னை சிறுவனாய் இருக்கும்போது உப்பு மூட்டை தூக்கி விளையாடி, சிரிக்கவைத்து ஆசுவாசப்படுத்திய பால்ய நண்பன் இந்த கோமாளி யோரிக் கின் மண்டை ஓடு கண்டு உணர்ச்சி வசப்படுகிறான்.
A sentimental affection for the deceased jester.
Yorick is a reminder that all of life is not meloncholic and sour, that there was a happier time in even Hamlet's dark, morose life

.............


Aug 22, 2009



சாமுவேல் பெக்கெட்- நகுலன் கவிதையில்


No, I regret nothing, all I regret is having been born,
dying is such a long tiresome business I always found.
-Samuel Beckett.

இருத்தலின் குறிக்கோள் அற்ற தன்மை பற்றி பெக்கெட் கவலைப்பட்டவர்.
The futility of man's aspirations!
அவருடைய நாடகம்
“Waiting for Godot” என்ற பெக்கெட்டின்
Absurd Drama காத்திருத்தல் பற்றிய துயரத்தின் உச்சம் .
We're all born mad. Some remain so.
“Waiting for Godot”
Mr. Godot told me to tell you he won't come this evening but surely tomorrow.
இங்கே குறிப்பிட வருவது நகுலனின் ஆங்கில கவிதை :

Death
Also waits
It has
infinite Patience.

இந்த கவிதைக்கு
inspiration பெக்கெட்டின் வரிகள் Dying is such a long tiresome business I always found.

பெக்கெட் பற்றி நகுலன் தன்னுடைய நாவல்களில் எப்போதும் பேசுவார்.
......