Share

Showing posts with label ரைம்போ. Show all posts
Showing posts with label ரைம்போ. Show all posts

Aug 1, 2008

கவிதை எழுதுவதை நிறுத்திய கவிஞன்

பிரஞ்சு கவிஞன் ஆர்தர் ரைம்போ 16 லிருந்து 19 வயது வரை தான் கவிதை எழுதினான் . குழந்தை ஷேக்ஸ்பியர் என்ற பெயர் பெற்றவன் . 37 வயது வாழ்ந்து "கவிதை எழுதுவதை நிறுத்திய கவிஞன் "என்று அடையாளமும் காணப்பட்டவன் .

ஆங்கில கவிஞன் கீட்ஸ் அவன் எழுதிய மொத்த கவிதைகளில் அவன் புகழுக்கு காரணமான கவிதைகளை எல்லாம் ஒரு ஒன்பது மாதத்திற்குள் தான் எழுதினான் . Baby of the poets !26 வயதிற்குள் இவன் வாழ்வே முடிந்துவிட்டது .

இங்கே தமிழில்" ஆடு புழுக்கை போடுவது போல அப்பப்ப மொத்தம் மொத்தமா தொடர்ந்து போடும் "கவிஞர்கள் எப்போ நிறுத்தபோறான்களோ?

பால் பருவத்தில் எழுதுவதாக பூரித்து புளகாங்கிதமடையும் மடையன் எல்லாம்

ரைம்போ , கீட்ஸ் பற்றி எப்போ தான் தெரிந்துகொள்ளபோறான் ?

"நான் இருக்கேனே பல விதமான கற்பனையை அப்படியே மனதில வச்சுகிட்டு

தவிக்கிறேன் யா . அதையெல்லாம் எடுத்து வெளியே விட வேண்டாம் ."

என்று

அல்லாடுறான்களே . சான்சே இல்லை .