Share

Jan 28, 2023

கண்ணன் மீதே காதல் கொண்ட பாஞ்சாலி

கண்ணன் மீதே 
காதல் கொண்ட பாஞ்சாலி?
- R.P. ராஜநாயஹம் 

சிவனுக்கும் பார்வதிக்கும் 
மிக பிரபலமான இருவர் தவிர 
இன்னொரு மகனும் உண்டு?

”ஒரிய எழுத்தாளரான பிரதிபா ரேயுடைய ’யக்ஞசேனி’ மகாபாரதத்தை மாறு பட்ட கோணத்தில் சொல்கிறது. 
திரௌபதியாகப்பட்டவள் கர்ணன் மீது மட்டுமல்ல, கண்ணன் மீதே காதல் கொண்டதாக இவரது பார்வை கூறுகிறது.” 



 சிற்பி பாலசுப்ரமண்யம் 
இப்படி சில வருடங்களுக்கு முன்
 ‘தி இந்து’வில் எழுதியிருந்ததை படித்த போது
கிரா சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது

 “கதைக்கு ஆயுள் கூடக் கூட 
சுவாரசியம் அதிகமாக 
வளர ஆரம்பித்து விடும். 
இப்படித் தான் மகாபாரதம் 
விரிந்து கொண்டே இருக்கிறது.”

இப்போது இங்கே ஜெயமோகன் தலையணை, தலையணை, தலையணகளாக மகாபாரதத்தை ’விளக்கெண்ணெயை எடுத்து குண்டி கழுவுவது போல’ எழுதுவது பற்றி நான் முன்னர் குறிப்பிட்டது நினைவிருக்கலாம்.
“ இது கலி காலம். கலிகாலத்தில் வியாசர், பரந்தாமன், பீமன், அர்ஜுனன், திரௌபதி, துரியோதனன் ஆகியவர்களை விட மகாபாரதத்தில் ஜெயமோகனுக்குத்தான் வேலை அதிகம்.”

பார்வதிக்கும் பரமசிவனுக்கும் பிள்ளைகளாக பிள்ளையாரையும்,முருகனையும் தான் தெரியும்.

திருச்சூர் குட்டிச்சாத்தான் கோவில் பற்றி 
அறிந்த விஷயம். 

சிவனுக்கும் பார்வதிக்கும் தான் 
குட்டிச்சாத்தான் பிறந்தானாம்.

 பெற்றோர் ஏன் குழந்தையை கை விட்டார்கள். 

எதனால் குட்டிச் சாத்தான் பிறந்ததை மறைக்க வேண்டும்.

An abondened, forsaken child?

திருச்சூர் குட்டிச் சாத்தானுக்கு பெயர் ’விஷ்ணு மாயா’ 

  பெயர்க்காரணம் சுவாரசியமாயிருக்கிறது. குட்டிச்சாத்தான் தன் ஏழாவது வயதில் 
தன் பெற்றோர் யாரென்று கண்டு பிடிக்க வேண்டி மஹா விஷ்ணு வேடம் பூண்டு 
சிவன் பார்வதியிருக்கிற கைலாசத்திற்கே 
வந்து விட்டானாம். 

அதனால் தான் பெயர் 
விஷ்ணு மாயா.

Identity Crisis.


...

மீள் பதிவாக

https://m.facebook.com/story.php?story_fbid=2639375216275928&id=100006104256328&mibextid=Nif5oz

Jan 27, 2023

ஜமுனா

மூன்று நாட்கள் முன் 
24ம் தேதி செவ்வாய் கிழமை 
'சினிமா எனும் பூதம்' ஷுட்டிங்கில் 
ஜமுனா பற்றி தான் பேசினேன்.
 27ம் தேதி ஜமுனா மரணம்.

(முரசு டிவியில் ஞாயிற்றுக்கிழமை காலை
எட்டரை மணிக்கு 'சினிமா எனும் பூதம்'
R.P. Rajanayahem one man show.)

போர்க்குணம் கொண்டவர்.
ஜெமினியை சாவித்திரி திருமணம் செய்த போது உரிமையோடு 
இது சரி வராது என எதிர்த்தவர்.

தெலுங்கு திரை நாயகர்கள் 
என்.டி. ராமராவோடும் நாகேஸ்வர் ராவோடும் மனக்கசப்பு ஏற்பட்ட போது இனி இவர்களோடு  நடிக்க மாட்டேன் என தைரியமாக சொன்னவர்.

1989ம் ஆண்டு ராஜமுந்திரி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்.
பின்னாளில் பா.ஜ.க. பிரச்சாரமும் செய்தார்.

சாவித்திரி biopic ல் எப்படி தெலுங்கு பெண் அல்லாத கீர்த்தி சுரேஷ் நடிக்கலாம்? என கோபப்பட்டார்.
சாவித்திரி பற்றி முழுமையாக அறிந்தவர் தானே தான் என்று ஜமுனா சொல்வார். தன்னை கலந்து கொள்ளாமல் சாவித்திரி கதை படமானதில் கடும் அதிருப்தி.

ஜமுனா biopic எடுப்பதற்காக கேட்ட போது
என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ் இவர்களுடனான தன் மோதல் பற்றியும் biopicல் பதிவு செய்ய முடியாவிட்டால் தேவையேயில்லை என்றவர் ஜமுனா 

சாவித்திரியை விட ஒன்பது மாதம் இளையவர். இளமைக்கால தோழி.

'அமுதைப்பொழியும் நிலவே,
நீ அருகில் வராததேனோ'
எப்போதும் திகட்டாத பாடல்.
கண்ணழகி ஜமுனா. தெற்றுப் பல்லும் அழகு.

தமிழில் 
எம். ஜி. ஆருடன் 
தாய் மகளுக்கு கட்டிய தாலி,
' சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம், இனி ஒரு 
பிரிவுமில்லை , இன்பம் பெற தடையுமுண்டோ'

சிவாஜியுடன் நிச்சய தாம்பூலம்,
'பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?'
' மாலை சூடும் மணநாள், இளமங்கையின் வாழ்வில் திருநாள்,

ஜெய்சங்கருடன் 
குழந்தையும் தெய்வமும் 
' அன்புள்ள மான் விழியே,
ஆசையில் ஓர் கடிதம் '
' நான் நன்றி சொல்வேன்
 என் கண்களுக்கு'

சிகை அலங்காரத்தில்
பன் கொண்டை என்பதை சிறப்பாக பயன்படுத்தியவர் ஜமுனா.
இந்த பன் கொண்டை 
சரோஜாதேவிக்கும் ஸ்பெஷல்.

மிஸ்ஸியம்மாவில் 
பாவாடை தாவணியில் ரெட்டைஜடை.

எட்டு வருடங்களுக்கு முன் மறைந்த கணவர் ரமணாராவ் பேராசிரியர்.

மகன் வம்ஸியும் இப்போது பேராசிரியர்.
மகளும் உண்டு. இன்னொரு மகனும்.

1970 வரை சென்னையில் திருமலை பிள்ளை ரோட்டில் இருந்தவர் கணவர் ( திருமணம் 1965) பொருட்டு ஹைதராபாத்தில் 
நிலை பெற்றார்.

கணவர் மறைந்த போது ஜமுனாவின் வியாகுலம் இப்போதும் காணக்கிடைக்கிறது.

முதுமையில் தள்ளாமை காரணமாக தலை ஆடும். 
தலை நடுக்கம்
கடைசி காலக்கொடை. 
ஜமுனாவை வீடியோக்களில் அப்படி காண நேர்ந்தது.

 இருகோடுகள், புன்னகை ஜெயந்திக்கு 
ஜமுனா சாயல் கொஞ்சம் உண்டு.

https://m.facebook.com/story.php?story_fbid=3527334877479953&id=100006104256328&mibextid=Nif5oz

Jan 26, 2023

'Cinema Enum Boodham'60 episodes so far


R.P. Rajanayahem
'Cinema Enum Boodham'
In Murasu TV 
60 episodes so far.

வருகிற ஞாயிறன்று
முரசு டிவியில்
காலை எட்டரை மணிக்கு 
ஒளிபரப்பாக இருப்பது
61வது நிகழ்ச்சி.
...

R.P. ராஜநாயஹம்
'சினிமா எனும் பூதம்'
தொலைக்காட்சி தொடர்

'முரசு டிவி'யில்

 ஞாயிறு தோறும்
காலை எட்டரை மணிக்கு

Jan 25, 2023

பச்சை குழந்தையின் பார்வை

Sep 22, 2008

பச்சை குழந்தையின் பார்வை
- R.P. ராஜநாயஹம் 

பத்து வயதிலேயே காதல்.
 Love and Romance.
பெண்கள் என் வாழ்வில்.

 குறிப்பிட்ட என்னுடைய
 காதலியை நானே தேடி கண்டு  பிடித்துவிட்டேன்.
கால் நூற்றாண்டுக்கு பின். ஆமாம். 
25 வருடங்களுக்கு பின்.

My winsome angel தனிமரமாக ...
அவளிடம் முதலில் தொலைபேசியில் பேசினேன். உடனே போய் பார்க்க வில்லை. தினமும் இரண்டு முறை தொலைபேசியில்.மூன்று மாதம் முப்பது கடிதம் ஒவ்வொன்றும் இருபதுபக்க கடிதம் எழுதினேன்.
அப்புறம் போய் பார்த்தேன்.

என் தேவதையின் பார்வையில் ரொமான்ஸ் இல்லவே இல்லை. அதிசயம். ஆனால் பச்சை குழந்தை பார்ப்பது போலவே இருந்தது அவள் பார்வை. குழந்தையின் பார்வை.
”நான் பழுத்திருக்கும்போது வராமல்
உளுத்துப் போனபின்
புழு கொத்த வரும் மனம் கொத்தி நீ”
இது கல்யாண்ஜியின் கவிதை. அபிதா.

இதழ்களின் லேசான குமிழில் ‘அ’, இதழ்களின் சந்திப்பில் ’பி’, உதடுகளின் தெறிப்பில் ’தா’. லா.ச.ராவின் அபிதா.
ஹைமவதி, ஹிமவான் புத்ரி, 
பர்வத ராஜகுமாரி.

என் கண்ணீர் வற்றி விட்டது.
..

ஒரு முழு இரவுவிடியும் வரை 
நானும் அவளும் தனி அறையில் தனிமையில்.
ஒரு நிமிடம் கூட தூங்கவில்லை. ஆனால் ......
No Physical Love.

..

சோரம் போவது அவ்வளவு சுலபம் இல்லை என்று அசோகமித்திரன் சொல்வார்.
ஒரு முறை அசோக மித்திரன் புதுவை வந்திருந்தபோது இலக்கிய விவாதத்தில் சற்று வேகமாகவே என்னிடம் சொன்னார் 'சோரம் போவது அவ்வளவு சுலபம் இல்லை.'
அப்போது புரிந்து கொள்ள குழப்பமாகத்தான் தோன்றியது.

..

My winsome angel.
So long, Farewell.

இன்று நாம் மீண்டும் பிரிந்து விட்டோம். என் காலம் உள்ளவரை உன் நினைவு என் கண்ணில் கசிந்து கொண்டிருக்கும்.

"If I should meet you after a long time
How should I greet thee?
With silence and tears."
-Byron

..


2008 post

Jan 20, 2023

High Court Justice Victoria Gowri

இந்த இரண்டு படங்களிலும் பின்னாலே ஒரு பெண் முகம் தெரிவதை காணமுடியும்.

அவர் வழக்கறிஞர் விக்டோரியா கௌரி.

மதுரையில் உயர்நீதிமன்றத்தில் டெபுடி சொலிசிட்டர் ஜெனரல்.

நேற்று உயர்நீதிமன்ற நீதியரசராக உயர்ந்திருக்கிறார்.

மதுரையில் இசைப் பேரறிஞர் மதுரை சோமு நூற்றாண்டு விழாவில் வழக்கறிஞர் பா. அசோக் அழைப்பின் பேரில் நீதியரசர் மகாதேவனுடன் நானும் கலந்து கொண்ட போது சந்தித்தேன்.

அசோக்கின் சட்டக்கல்லூரி க்ளாஸ் மேட். 
 கல்லூரியில் படிக்கிற காலத்திலேயே
அசோக் மற்றவர்களுக்காக பணம் விஷயத்தில் பெரிய செலவாளி என்று
ஃபேஸ்புக்கில் மூன்று வருடங்களுக்கு முன்
விக்டோரியா கெளரி தன் பதிவில் எழுதியிருந்ததை படித்திருக்கிறேன்.

மறுநாள் மதிய உணவு சாப்பிட இன்று நீதியரசராகியிருக்கும் விக்டோரியா கெளரி  எங்களுடன் இருந்தார். அருமையான கான்வர்சேஷனலிஸ்ட்.
அப்போது அத்வானி குறித்து 
அவர் சொன்ன விஷயம் 
என் நினைவில்.

பின் மதுரை ஜங்ஷனுக்கு அவருடைய காரில் தான் வந்து பின்னர் 
என் சென்னை பயணம்.

வாழ்த்துகளும் பாராட்டும்
உயர்நீதிமன்ற நீதியரசராக பதவியேற்கும்
 விக்டோரியா கெளரி அவர்களுக்கு.

Jan 18, 2023

Fifty great heroes - Filmfare magazine 1984

1984ம் வருடம் ஃபில்ம் ஃபேர் மாகசின்
" Fifty great heroes" என்று ஹிந்தி கதாநாயகர்கள் குறித்து ஒரு ஸ்பெஷல் இதழ் வெளியிட்டது.
அந்த ஐம்பது ஹீரோக்களில் 
வெள்ளி விழா கதாநாயகன் ராஜேந்திரகுமாருக்கு இடம் தரப்படவில்லை. நிராகரிப்பு.

பிஸ்வஜித் சேர்க்கப்படவில்லை. மனோஜ் குமாரும் இல்லை. ரந்திர் கபூரும் பட்டியலில் இல்லை.
ரிஷிகபூர் ஐம்பது ஹீரோக்களில் ஒருவர்.

அடுத்த இதழில் நிராகரிக்கப்பட்ட நடிகர்களுக்கு ஆதரவாக
 பல கடிதங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

ஒரு வாசகர் கடிதம்: 'ரேகாவின் தந்தை ஜெமினி கணேஷ் ஏன் ஐம்பது ஹீரோஸ் பட்டியலில் இல்லை?'

ஜெமினி கணேஷ் ஹிந்தியில் மிஸ்ஸியம்மா(Miss Mary), கணவனே கண் கண்ட தெய்வம்(Devta), வஞ்சிக்கோட்டை வாலிபன்(RajTilak)
ரீமேக் படங்களிலெல்லாம் கதாநாயகனாக நடித்திருந்தார்.
டப்பிங் குரல் தான்.

கணவனே கண் கண்ட தெய்வம்(Devta) இந்தியில் குரூபியான 
கூன் கிழவனாக வருகிற காட்சிகளுக்கு 
ஜெமினியே தான் குரல் கொடுத்திருந்தார். இளைஞனாக வருகிற காட்சிகளுக்கு டப்பிங் குரல்.
அந்த பட விமர்சனம் ஒன்றில் 'கிழவனாக வருகிற காட்சிகளில் தான் இந்தி உச்சரிப்பு நன்றாக இருக்கிறது' என்று குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது.


தலாஷ் படத்தில் இடம் பெற்ற பாடல்கள்
கீழே..
ஷர்மிளா டாகூர், ராஜேந்திர குமார்

Talaash 1969 - the costliest movie
of the day
"One Crore"


https://youtu.be/BkgK5-T5WNY

https://m.youtube.com/watch?v=6KTPBHlr31k&feature=youtu.be

Jan 17, 2023

சுமதி என் வீட்டில்

Advocate Sumathi met me.
14 Jan, 2023

"It was a wonderful conversation 
that we had sir"


https://m.facebook.com/story.php?story_fbid=3409253185954790&id=100006104256328&mibextid=Nif5oz

Clothed from the waist down

Times of India 17.01. 2023

400 - year old hero stone found near Pappapatti in Madurai.
The man and woman are clothed from the waist down.

Stone of a man brandishing a sword and holding a boomerang. 
A woman with a bouquet of flowers.

Rock art expert Dr K.T. Gandhirajan found this

Jan 13, 2023

முதல்வரின் புன்னகை


அற்புதமான தலைவர்
தளபதி 
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

Rejection, Negligence என்பதை அசெம்பிளியில் முதல்வர்
 துயர புன்னகையால் 
அந்த நொடியில் எதிர் கொண்ட விதத்தைப் பார்த்து..

 அதிர்ந்து போய்..

Jan 7, 2023

Apne Pyar ke Sapne such huye

"Your love dreams come true"

Kishore and Lata

Amitabh and Rakhee

'Apne pyar ke Sapne such huye'

https://m.youtube.com/watch?v=A8wDakVTNGk&feature=share

முதல லேசா பழைய ஜெயலலிதா ஜெய்சங்கர் பாட்ட மாதிரி இருக்கு
T.M.S and Sushila 
'ஒரு நாள் பழகிய பழக்கம் அல்ல, மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல'

https://youtu.be/TxcCcTtTVw4