Share

Showing posts with label போர்ஹே. Show all posts
Showing posts with label போர்ஹே. Show all posts

May 29, 2018

போர்ஹே சிறுகதை ‘கடவுள் எழுதியது’


The writing of the God என்று ஒரு சிறுகதை. போர்ஹே எழுதியது. ‘கடவுள் எழுதியது.’
ஷினாக்கான் என்பவன் ஒரு பிரமிடின் பூசாரி. அந்த பிரமிடு கொளுத்தி எரிக்கப்படுகிறது. தீக்கிரையாக்கிய பெட்ரோ டி அல்வரடோ இந்த ஷினாக்கானை சித்திரவதைக்குள்ளாக்குகிறான். சிறையில் இவனை அடைத்து பக்கத்து செல்லில் ஒரு சிறுத்தையை அடைக்கிறான்.
ஷினாக்கான் மந்திரவாதியாக இருந்த கியாஹோலம் பிரமிடில் கல்வெட்டு எழுத்துக்களை எவ்வளவு முறை பார்த்திருக்கிறான்.
எழுதப்படுவது எல்லாம் புரியவா செய்கிறது? வாசிப்பின் தேடல்.

Paradise will be a kind of library என்று போர்ஹே சொல்வார்.

அபூர்வமான தரிசன வரி – ’காலத்தின் முதல் விடியற்காலை’யை எண்ணிப்பார்ப்பது.

கனவில் தோன்றும் ஒரு மணல் துகள் இரண்டு துகளாகி பெருகி பெருகி சிறையறை முழுவதும் நிரம்பி ஷினாக்கானை மூழ்கடித்து இவன் இறந்து விட்டதாக நினைக்கும்படியாவது, ’தண்ணீராலும் நெருப்பாலும் ஆன சக்கரம்’.
சிறை அறை – இறைச்சியும் தண்ணீர்க் குவளைகளும் கீழிறக்கப்படும் போது கொஞ்சம் வெளிச்சம் தெரிகிற அந்த சில துளி நேரத்தில் சிறுத்தைப்புலியின் மஞ்சள் தோலின் மீதுள்ள கருநிற பட்டை வரிகளில் கடவுளின் வாக்கியத்தை தேடும் ஷீனாக்கான்.
The God's Script! முழுமையான வளம் கொண்ட மந்திரம் கடவுளால் எழுதப்பட்டதை புரிந்து கொள்ள தவிக்கும் ஷீனாக்கான்.
அச்சொற்களை அறிந்து கொண்டதாகவே முடிவில் நினைக்கும் ஷீனாக்கான் ஒருபோதும் அதை உச்சரிக்கக்கூடாதென்றே முடிவெடுக்கிறான். சிறுத்தைப்புலி மீது எழுதப்பட்டுள்ள கடவுளின் வாக்கியத்தின் அர்த்தம் தன்னுடனேயே செத்துப்போகட்டும் என்று தீர்மானிக்கிறான்.
மாயர்களின் புராணீகத்தை பேசும் மயன் புனித நூல் Mayan book of the Dawn of life பற்றி இக்கதையில் 'மக்கள் புத்தகம்' என போர்ஹே குறிப்பிடுகிறார்.
....................................................................







Apr 18, 2014

Paradise will be a kind of library

 
1995 செப்டெம்பர் மாதம் கோணங்கியின் கல்குதிரை சிறப்பிதழ் ஒன்று வெளிவந்தது. கேபோவுக்குத் தான். லத்தீன் அமெரிக்க உலகம் அன்போடு கேபிரியல் கார்ஸியா மார்க்வஸ் என்பவரை ”கேபோ” என்று தான் குறிப்பிடும்.

மாஜிக்கல் ரியலிசம்...1982ல் வாங்கிய நோபல் பரிசு... பாப்லோ நெரூடாவின் நண்பர்.. ஃபிடல் காஸ்ட்ரோவின் நெருங்கிய நண்பர் ......

கல்குதிரைக்கு GABRIEL என்ற பெயரைக் குறிப்பிடுவதிலேயே ரொம்ப சிரமம் இருந்தது. அட்டையில் ’காப்ரியல்’.  முதல் பக்கத்தில் ’காப்ரியேல்’ என்று சந்தேகத்துடன் இரண்டு விதமாக அச்சேற்றியிருந்தார்கள். இத்தனைக்கும் கேபிரியல் என்ற கிறிஸ்தவப் பெயர் ஒன்றும் அன்னியமானது ஒன்றும் இல்லை.
அதோடு அதற்கு பல வருடங்களுக்கு முன்னாலே GABRIEL Shock absorbers விளம்பரம் மிகவும் பிரபலம்.

பைபிளில் கன்னி மேரியிடம் காட்சி தரும் ஏஞ்சல் “ I am Gabriel! The angel of God!" என்று தன்னை சுய அறிமுகம் செய்து கொள்கிற காட்சி உண்டு.

 நவீன தமிழ் இலக்கிய கர்த்தாக்களுக்கு இவ்வளவு குழப்பம் கேபிரியல் என்ற பெயரில் இருந்த போது கல்குதிரை அவர் படைப்புகளை ஆங்கில வழியாக தமிழில் மொழி பெயர்ப்பதில் எத்தகைய துயர அனுபவமாய் இருந்திருக்கும் என்பதை சொல்லவேண்டியதே இல்லை.


 அப்போதெல்லாம் கல்குதிரை ஒவ்வொரு இதழுக்கும் கணிசமான தொகை நான் நன்கொடையாக கொடுப்பது வழக்கம். முதல் இதழை கோணங்கி என்னிடம் கொடுத்த போது, நான் ஒரு நன்கொடை கொடுத்தேன்.அவன் சொன்னான்.- “ வண்ணதாசன் கூட இவ்வளவு பெரிய தொகை தரவில்லை.”

கேபிரியல் கார்ஸியா மார்க்வஸ் சிறப்பிதழ் கல்குதிரையின் 12 வது இதழ்.


GABRIEL என்ற பெயரை கேப்ரியல் என்று எழுதுவதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ”ப்” என்பது ”B” உச்சரிப்பாக இல்லாமல்  ”P” உச்சரிப்பாக அதாவது GAPRIEL என்று மாற வாய்ப்பு அதிகம் என்பதால் ’கேப்ரியல்’ என்று எழுதாமல் ’கேபிரியல்’ என்றே எழுத வேண்டியுள்ளது.
கிறிஸ்தவர்களிலும் ப்ராட்டஸ்டண்ட் இனத்தவர்கள் சரியாக ’கேபிரியல்’ என்று சரியாக உச்சரிக்கிறார்கள். ஆனால் ரோமன் கத்தோலிக்க பிரிவினர் GABRIEL என்பதை தமிழ்ப் படுத்தி ”கபிரியேல்” என்று பாடாய் படுத்துகிறார்கள்.

இப்போது காலச்சுவடு க்ளாசிக் வரிசையில் வரிசை வெளியீடு “தனிமையின் நூறாண்டுகள்” நூலில் “ காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். மொழிபெயர்ப்பு : சுகுமாரன்.



  
ஆல்பர் காம்யூ பெயரை ஒவ்வொருவரும் ஒவ்வோர் விதமாக உச்சரிப்பதைப் பற்றி சுந்தர ராமசாமி ’ஜேஜே சில குறிப்புகள்’நாவலில் குறிப்பிட்டு விட்டு தன் அத்தை மகள் பெயர் காமு என்பதால் ’ நான் வசதிக்காக  காமு என்று சொல்ல ஆரம்பித்தேன்’ என்பார்.


லத்தீன் அமெரிக்கப் படைப்புகளை ஆங்கில மொழிபெயர்ப்பாகப் படிப்பது தான் ஓரளவு நல்லது.  தமிழ் மொழிபெயர்ப்புகளில் படிப்பது தலைவிதி தான். ஆங்கிலம் தெரியாத வாசகர்களும், எழுத்தாளர்களும் தமிழ் இலக்கிய உலகில் மிக, மிக அதிகம். மொழி பெயர்ப்பே மூல ஆசிரியரை சிதைக்கிற விஷயம் என்கிறபோது ஆங்கிலமொழிபெயர்ப்பின் வழியாக தமிழில் மொழிபெயர்த்து, அதை படிப்பதென்பது ஒருவகை ’ஊனம்’.


  

ஆல்பர் காம்யூ வின் ’அந்நியன்’ பிரஞ்சு மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டதால் விசேஷமானதாய் இருந்தது.

நாகார்ஜுனன் பிரஞ்சு மொழியிலிருந்து ரைம்போ, பாதலேர் கவிதைகளை ஆங்கில வழியாக அல்லாது தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

சாதாரணமாக ஒரு முதியவர் இறப்பென்பது அனுபவச்செறிவு காரணமாக துயரமானது. ஒரு நூலகம் மறைந்து போவதைப் போன்றது.
  I have always imagined that Paradise will be a kind of library.

போர்ஹே சொல்வார்: சொர்க்கம் என்பது எப்படி இருக்கும்? எனக்கென்னவோ சொர்க்கம் என்பது ஒரு வகையான லைப்ரரி தான் என்பார்.

87 வயதில் கேபிரியல் கார்ஸியா மார்க்வெஸ் இறந்திருக்கிறார்.

ஒரு முதிய எழுத்தாளரின் மறைவு நிஜமாகவே மிக மகத்தான இழப்பு தான். ஒரு பிரமாதமான, பிரமிப்புக்குரிய அற்புத நூலகம் திடீரென்று காணாமல் போய் விடுகிறது என்றால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வேதனையின் பரிமாணம் கூடிப்போய் விடுகிறது.

Jul 30, 2012

Christ never laughed

"Hell is heaven seen from the other side" - இந்த வார்த்தைகள் உம்பர்ட்டோ ஈக்கோ 'Name of the Rose' நாவலில் எழுதியது.
'Christ never laughed' என்ற விஷயம் குறித்து அந்த நாவலில் வரும் வில்லியம் என்ற பாதிரி சொல்வது “Laughter is proper to man,it is a sign of his rationality."
Men are animals but rational,and the property of man is the capacity for laughing.

Library - The place of Forbidden Knowledge!

ஈடன் தோட்டத்து ஆப்பிள்  விலக்கப்பட்ட கனி.

Heaven எப்படிப்பட்ட இடம் என்று தீர்க்கமாய் யோசித்து அது நிச்சயம் ஒரு Library யாகத்தான் இருக்க முடியும் என்றே அனுமானித்தார் போர்ஹே.


பஸோலினி  1964ல் எடுத்த  இத்தாலிய படம் “The Gospel According to St.Matthew" பார்ப்பது ஏதோ கால யந்திரத்தில் ஏறியது போல ஒரு விஷேச அனுபவம். இந்தப் படத்தில் கூட ஜீசஸ் வாய் விட்டு ஒரு முறை கூட சிரிக்கவே இல்லை.
 பஸோலினி ஏன் மேத்யு எழுதிய சுவிஷேசத்தை தேர்ந்தெடுக்கவேண்டும்? அவர் கண்ணோட்டத்தில் லூக் எழுதிய சுவிஷேசம் ரொம்ப sentimental. மார்க் எழுதிய சுவிஷேசமோ ரொம்ப vulgar.ஜான் எழுதியது மிகையான mystical சுவிஷேசம்.

Jesus was alright, but his disciples were thick and ordinary.It's them twisting it that ruins it for me.
-John Lennon

Christmas eve eve என்றால்’ டிசம்பர் 23ந்தேதி.’ The day before Christmas Eve.
கிறிஸ்தவ மேலைய நாடுகளில்  எல்லோருமே கிருஸ்துமஸ் ஷாப்பிங் டிசம்பர் 23ந்தேதி தான் செய்வார்கள். டிசம்பர் 24ந்தேதி கடை வீதி ரொம்ப கூட்டமும் நெருக்கடியும் பற்கடிப்புமாய் இருக்கும் என்ற பதற்றம் காரணமாக..அதனால் அந்த23ந்தேதி தான் Busiest shopping day of the year!

’பைபிளுக்கு இதுவரை மிகச் சரியான மொழிபெயர்ப்பு வரவில்லை.’ - டி.என்.ராமச்சந்திரன்.

.......
(”டிசம்பர் 23 அதிக சேல்ஸ் நடக்கும் நாள் என்று எழுதி இருந்தார். அது தவறு என்று அந்த டேடாவை நான்கு வருடம் அனலைஸ் செய்தவன் என்று எனக்கு தெரியும்” என்று கிருஷ்ணமூர்த்தி.எஸ் ப்ளாகில்  Dyno buoy எழுதியிருக்கிறார்.
Dyno buoy அனலைஸ் நியூ ஜெர்சிக்கு மட்டுமானதா? அல்லது ஒட்டுமொத்த U.S., மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சேர்ந்தே தானா?)

Dyno buoy's Reply:" நான் டேடா அனலைஸ் செய்தது உலகின் பெரிய க்ரெடிட் கார்ட் நிறுவனத்திற்காக. உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சேர்த்துதான். உலகின் அதிக சேல்ஸ் ஆகும் நாள் க்ருத்துமஸுக்கு முந்தைய சனி. நாங்கள் அனலைஸ் செய்யும் போது வாரயிறுதி முழுவதற்கும் கணக்கிடுவோம்.
அதுதவிர அதிக மக்கள் கடைகளுக்கு போகும் நாள் தாங்ஸ் க்விங் டேக்கு அடுத்து வரும் ப்ளாக் ப்ரைடே. Lot of people usually get confused between most traffic and most sales. During Black Friday we have more people walking into store and not all of them translate to sale. Where as the Saturday before Christmas translates into sales and hence the highest sale world over. இது உலகம் முழுவதற்கும். அமேரிக்காவில் கடத்த பத்தாண்டுகளில் (2010க்கு முன்) மூன்று முறை ப்ளாக் ப்ரைடே சேல்ஸ் க்ருஸ்துமஸுக்கு முந்திய சனிக்கிழமை சேல்ஸை ஓவர்டேக் செய்துள்ளது."





http://rprajanayahem.blogspot.in/2012/07/carnal-thoughts-33.html

http://rprajanayahem.blogspot.in/2012/04/blog-post_21.html

http://rprajanayahem.blogspot.in/2010/01/sasthi-brata-my-god-died-young.html

http://rprajanayahem.blogspot.in/2009/07/ailing-popes-are-not-unusual.html


Nov 16, 2008

“Dr.Brodie’s Report”

போர்ஹே எழுதிய கதை “Dr.Brodie’s Report”
எஸ் ராமகிருஷ்ணனின் ' பதினெட்டாம் நூற்றாண்டின் மழை ' அருமையான சிறுகதை . அதை படிக்கும் போது போர்ஹே யின் டாக்டர் ப்ராடி யின் அறிக்கை கதை ஞாபகம் வந்தது. உடனே நான் எஸ் ராமகிருஷ்ணன் கதை காப்பி என சொல்வதாக நினைக்கவேண்டாம் . Inspiration ஆக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன் . ஒரு நல்ல கதையை படிக்கையில் இன்னொரு கதை ஞாபகம் வருவது இயல்பானது .ஏனென்றால் எஸ் ரா வின் கதை உலகத்தரமானது . அற்புதமானது. உயிர்மையில் சென்ற ஆண்டு வெளி வந்த 'பதினெட்டாம் நூற்றாண்டின் மழை ' படிக்காதவர்கள் அவசியம் படிக்கவேண்டும் .

“Dr.Brodie’s Report” கதையில் வரும் யாஹூ இன பழங்குடி மக்கள் பழங்குடிக்கே உரிய நம்பிக்கை பல கொண்டவர்கள் .
பில்லி சூனியக்காரர்கள் விரும்பினால் யாரையும் கடல் ஆமைகளாக , எறும்புகளாக மாற்றக்கூடிய சக்தி படைத்தவர்கள் .யாஹூக்கள் உறுதியாக நம்பினார்கள் .
இதை பிராடி நம்ப மறுக்கும் போது ஒருவன்உடனே பரபரப்பாக தேடி அவருக்கு ஒரு எறும்பு புற்றை காட்டுவான். ஏதோ அது தான் பிராடி நம்புவதற்கு ஆதாரம் நிரூபணம் என்பதாக !

போர்ஹே சொற்ப கதைகள் தான் எழுதினார் .ஒரு 24,25 கதைகள் இருக்கலாம் .பெரும்பாலும் பேச்சில் தான் காலத்தை வீணடித்தார் . ஆனால் போர்ஹே யின் எழுத்து சாதனை பற்றி பேசிகொண்டே இருக்கலாம் .போர்ஹே பற்றி எழுதிகொண்டே இருக்கலாம் .

Aug 12, 2008

அபினவ் பிந்த்ரா சாதனையும் கருணாநிதியின் சோதனையும்

ஒலிம்பிக்கில் அபினவ் பிந்த்ரா( இலுப்பம்பூ சக்கரை! )இந்தியா வுக்கு தங்கம் வாங்கித்தந்த சந்தோசத்தை அனுபவித்த அதே நேரத்தில் ஒரு சோக செய்தியையும் கேட்கும் துர்பாக்கியம் ஏற்பட்டதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
பழைய பல்லவி தான்.ஆனால் பாவம் இந்த முறை இவர்களிடம் ஷேக்ஸ்பியர் சிக்கி விட்டார். 
தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா  'திரு. கருணாநிதி அவர்கள் ஷேக்ஸ்பியரை தாண்டிபோய்விட்டார். அதனால் அவருக்கு உடனே நோபெல் பரிசு உடனே உடனே தந்தேயாக வேண்டும்' என்று பிரகடனபடுத்தியுள்ளார். கிட்டத்தட்ட நோபல் கமிட்டிக்கு விடப்பட்டுள்ள மிரட்டல்!

The possession of power , unavoidably spoils the free use of reason
-Immanuel Kant


எதிர்காலத்தில் எப்படியெல்லாம்கருணாநிதி மீசையில் மண் ஒட்டவில்லை என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும். அதற்கு சில டிப்ஸ் தர விரும்புகிறேன் .
நோபல் கமிட்டீ பரிசு கொடுக்க தவறிய எழுத்தாளர்கள் வரிசையில் கருணாநிதியையும் சேர்த்து நோபல் கமிட்டீ யின் திறமையின்மையை, மெத்தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவது அவரது மகத்துவத்தை வெளிப்படுத்தும்.
லியோ டால்ஸ்டாய், ஜாய்ஸ், போர்ஹே ஆகிய மகத்தானவர்களுக்கும் நோபல் பரிசு கிடைக்காததை சுட்டிக்காட்டி கருணாநிதியை அவர்கள் தோளோடு நிறுத்தி கழக கண்மணிகளுக்கு ஆறுதல் சொல்லலாம்.

இவ்வளவு ஏன் ? மஹாத்மா காந்தியின் பெயர் அவர் உயிரோடு இருந்த காலத்தில் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பதுகளில், நாற்பதுகளில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஐந்து முறை சிபாரிசு செய்யப்பட்டும் நோபல் கமிட்டீ காந்தியாருக்கு பரிசு தர மறுத்த அவலத்தை சுட்டிக்காட்டி கழகத்தின் இரண்டாம் மட்ட தலைவர்களும், மூன்றாம் மட்டமான தலைவர்களும் தங்களை தேற்றிகொள்ளலாம்.