Share

Jun 30, 2021

காசன்

 பழ. கருப்பையா மக்கள் நீதி மய்யத்தில்

 இன்னும் இருக்கிறார். 


கடும் வைராக்கியமான தனித்தமிழ் அன்பர். 


தி. மு.க. வில் இருக்கும் போதே இவர் 

இன்றைய முதல்வர் பெயரையே தப்பா தனித்தமிழில் எழுதியவர். 


கமல் ஹாசன் பெயரை தப்பா 'கமல் காசன்' என்று இவரால் எழுதாமல் இருக்க முடியவே முடியாதே. 


கமல் காசன். 


கமல் ஹாசனை கமல் ஹாசனாக ஒத்துக்கொள்ளாமல் கமல் ஹாசனுடன் ஒத்துப்போக சாத்தியமில்லை. 


 எழுதுனா, பேசுனா

சுதாரிப்பா பெயரை சுருக்கி

' தலைவர் கமல்' என்பதாக மட்டுமே

 மய்யத்தில் இருக்கும் வரை சமாளிக்கலாம். 


இல்ல பழ. கருப்பையா திருந்தி, மனம் திரும்பி 

 கமல் ஹாசன் பெயரை அப்படியே 

ஏற்றுக் கொள்வாரா?


..


https://m.facebook.com/story.php?story_fbid=2973322766214503&id=100006104256328


Jun 29, 2021

On the Waterfront

 On the Waterfront  (1954movie)



"I could have had class. 

I could have been a contender. 

I could have been somebody, 

instead of a bum, which is what I am......"


வாழ்வின் முக்கிய தீர்மானங்கள் 

எள்ளி நகையாடப்படும் சூழல்.

 காலம் சொல்லும் திடுக்கிடும் ரகசியங்கள். கானல் நீராகிவிடும் Aim, Ambition. 

 யாரை குற்றம் சொல்வது.

வாழ்வின் திசை மாற்றிய காரணங்கள்.

"நீ தானே என் இன்றைய நிலைக்கு காரணம் ?" என்ற வினா ஒருவரை நோக்கி

 கேட்கின்ற தருணம்.

தன்னிரக்கம் .. சுய பச்சாத்தாபம் ..

வாழ்க்கையை தொலைக்க நேரும் ஒவ்வொருவரும் வேதனையுடன் இந்த வார்த்தைகளை சொல்ல நேர்கிறது. Lamentation. 


மார்லன் பிராண்டோ சொல்லும் 

இந்த வார்த்தைகள் 

On the Waterfront படத்தின் பிரபலமான வசனம்.


எலியா கசன் இயக்கிய படம்.

ஹாலிவுட் கண்ட மிக மகத்தான இயக்குநர். 


இதே மார்லன் பிராண்டோவோடு

 நடிகை விவியன் லீ யை வைத்து எலியா கசன் இயக்கிய இன்னொரு பிரபலமான படம் 

A streetcar named desire (1951 movie).


On the Waterfrontல் ராட் ஸ்டீஜர், பிராண்டோவின் சகோதரன் சார்லியாக நடித்திருப்பார்.

சகோதரர்கள் இருவரும் டாக்சியில் விவாதிக்கும் காட்சி ஹாலிவுட் படங்களில் வந்துள்ள உணர்வுப்பூர்வமான ஒரு திரைக்காட்சி!


 ரிவால்வரை மூத்த சகோதரன் தன் நெஞ்சில் திடீரென்று வைத்து மிரட்டும் போது டெர்ரியாக நடிக்கும் மார்லன் பிராண்டோ முகத்தில் வெளிப்படும் வியாகுலம். 


அப்போது தான் அந்த வார்த்தைகளை பிராண்டோ சொல்கிறார் ."You don't understand. 

I coulda had class. 

I coulda been a contender. 

I coulda been somebody, instead of a bum, 

which is what I am, let's face it. It was you, Charley. "


வில்லன் ரோல் செய்வது லீ ஜே .காப். 

 படத்தில் வில்லன் பெயர் Friendly!


பாதிரியார் பேரி யாக கார்ல் மால்டன்.


"Some people think the Crucifixion only took place on Calvary. Well, they better wise up! "


இவர் பற்றி ஒரு செய்தி.

 அறுபது வருடங்களுக்கு முன் வந்த இந்த படத்தில் நடித்துள்ள கார்ல் மால்டன் 97 வயதில் 2009ல் தான் இறந்தார்.


கொலம்பியா பிக்சர்ஸ் எடுத்த படங்களில் 

மிக சிறந்தது என்றும் ஹாலிவுட் கண்ட மகத்தான படம் என்றும் கருதப்படும் On the Waterfront இத்தனை வருடங்களிலும் புகழ் வளர்ந்து கொண்டே தான் போகிறது. அருமையை அறுபத்தேழு ஆண்டு காலம் ஆன பின்னும்

 இன்று கூட உணர முடிகிறது.


..

Jun 28, 2021

தி. ஜா. வும், பிரபஞ்சனும், ராஜநாயஹமும்

புதுவையில் நான் இருந்த போது பிரபஞ்சனுடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.


தி.ஜானகிராமனுக்கு நினைவு மதிப்பீட்டு மடல் நான் வெளியிட்டிருந்தேன். புதுவை பல்கலைக்கழகத்தில் இதன் காரணமாகவே 

ஒரு தி.ஜா கருத்தரங்கம் நடந்திருந்தது.

தி.ஜா எழுதி என்னிடமிருந்த அத்தனை புத்தகங்களும் கருத்தரங்க அரங்கில் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.


அப்போது சென்னை வாழ்வுக்கு 

ஒரு சின்ன ப்ரேக் விட்டு புதுவையில் 

பிரபஞ்சன் இருந்தார். புதுவை பல்கலைக் கழகத்தில் நாடகத்துறையில் அவருக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் வேலை போட்டுக் கொடுத்திருந்தார்.


அன்று நாடகத்துறைக்கு தலைவர் இந்திரா பார்த்தசாரதி. கே.ஏ.குணசேகரன் நாடகத்துறையில் ஆசிரியர். 


முன்னதாக 1989 துவக்கத்தில் நக்கீரனில் 

“ தி.ஜா. ஆபாச எழுத்தாளர். இன்று தமிழில் இருக்கிற ஆபாச வக்கிரத்திற்கெல்லாம் ஜானகிராமன் தான் காரணம். ஆல் இந்தியா ரேடியோவில் உயர் பதவி வகித்தவர் என்பதால் மேட்டுக்குடி மனோபாவம் கொண்டவர். அவருக்குபல பெண்களோடு படுக்க ஆசை. அதனால் தான் ‘மரப்பசு’ நாவல் எழுதினார்” – இப்படி கடுமையாக பிரபஞ்சன் 

சாடி எழுதியிருந்தார்.


நாடகத்துறைக்கு இ.பாவை நான் பார்க்க போயிருந்த போது ”இப்ப பிரபஞ்சன் வந்திருந்தார். ’ராஜநாயஹத்துக்கு என் மேல் கோபம் இருக்கும்’னு சொன்னாரே"ன்னு சொன்னார்.


அப்போது நான் பிரபஞ்சனை சந்தித்திருக்கவேயில்லை.

அடுத்த நாளே புதுவை நாடகத்துறையிலேயே பிரபஞ்சனை பார்த்தேன். 

அதன் காரணமாக ஒரு Instant,temporary friendship.


ஜானகிராமன் பற்றிய அவதூறு பற்றி பிரபஞ்சனிடம் நான் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவர் சொன்ன ஒரு விஷயம்.

 “ ராஜநாயஹம், எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படும் போது நான் எப்போதும் இரவில் தி.ஜாவின் மோகமுள் நாவலை எடுத்து படிக்க ஆரம்பிப்பேன். தூங்காமல் முழு இரவும் விடிய,விடிய முழு நாவலை படித்து முடித்து விடுவேன்.”

மேலும் சொன்னார்: என்னுடைய எழுத்தில் நிறைய ஜானகிராமனின் வார்த்தைகளை பயன்படுத்துவேன். உதாரணத்திற்கு “ எட்டுக்கண்ணும் விட்டெறியாப்ல”


எனக்குள் நான் மனதிற்குள் கேட்டுக்கொண்டேன் “இவ்வளவு சொல்லும் இவர் ஏன் ஜானகிராமனை அப்படி கடுமையாக நக்கீரனில் தாக்கி எழுதினார்?’’


பின்னாளில் ஒரு பத்து வருடத்தில்  தீராநதி முதல் இதழில்

 ” தமிழில் தி.ஜானகிராமனை மிஞ்ச ஆளேயில்லை” என்று பிரபஞ்சன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தி. ஜா. வுக்கு ஆராதனை செய்திருந்தார். பிராயச்சித்தம் தான். 


இது பற்றி சுந்தர ராமசாமியிடமும் 

நான் போனில் பேசியிருக்கிறேன்.

அவரும் பிரபஞ்சன் “ தி.ஜானகிராமனை மிஞ்ச யாருமே இல்லை” என்று சொல்வதை உறுதிப்படுத்தி சொன்னார்.


அதன் பிறகு பிரபஞ்சன் எப்போதும் ஜானகிராமனை தூக்கிப்பிடித்தார். 

 தி.ஜா பற்றிய பிரபஞ்சனின்  இந்த அபிப்ராய மாற்றம் 

எனக்கு  சந்தோஷத்தை தந்தது.


... 

Jun 26, 2021

பூ முடிப்பாள் இந்த பூங்குழலி

 ரொம்ப சின்னப் பையனாய் இருக்கும் போது சங்கரன் கோவிலில் ஒரு திருமணத்திற்கு போய் இருந்தேன். திருமணங்கள் எவ்வளவோ உண்டு தான். 

இந்த திருமணம் மறக்கவே முடியாது. அதைப் பற்றிய வித விதமான நினைவுகள். 


நான் ஒரு பாட்டு பாடினேன்.

"பொல்லாத புன்சிரிப்பு, போதும் போதும் உன் சிரிப்பு, யார் வீட்டுத் தோட்டத்திலே பூத்ததிந்த ரோசாப்பூ? "

 'தொர பாடுறான்' , 'தொர பாடுறான்' என்று பெரியவர்கள், குழந்தைகள் எல்லோருமே உற்சாகமாக ரசித்தார்கள். 


என் பெரிய மாமனார், அப்போது அவர் புது மாப்பிள்ளை, காரில், (அது அவருடைய அப்பா கார். அவர் தான் சங்கரன் கோவில் திருமணத்தை 

தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

என் மனைவியின் தாத்தா. )

 என் அப்பாவும், பெரியப்பாவும் (பெரியப்பா மகள் - ராஜம்  அக்கா தான் கல்யாணப் பெண். நான் தான் மாப்பிள்ளை ஊர்வலத்தில் அத்தான் ராமகிருஷ்ணன்  கையைப் பிடித்து அழைத்து வந்தேன். ) குற்றாலம் போனோம். 


அங்கே என் அப்பாவுடன் நான்காம் வகுப்பு முதல் இன்டர்மீடியட் வரை செயின்ட் சேவியர்ஸில் ஒன்றாக படித்த ஜி. ஆர். எட்மண்ட் அவர்களை

 என் தந்தை தற்செயலாக மெயின் ஃபால்ஸில் சந்தித்தார். இருவரும் பள்ளி, கல்லூரி கால நினைவுகளில் பரவசமானார்கள். 

அப்போது எட்மண்ட் தி. மு. க. வில் உதவி சபாநாயகர். 


(பின்னால் இவர் அ.தி. மு. க வில் எம்ஜியார் அமைச்சரவையில் உணவு அமைச்சராகவும் இருந்தார். 


சுயமரியாதை மிகுந்த எட்மண்ட் அமைச்சராக இருக்கும் போது மகள் கல்யாணத்துக்கு தோட்டத்திற்கு முதல்வருக்கு பத்திரிகை வைக்கப் போன போது அவரை எம். ஜி.ஆர் நேரில் சந்திக்காமல் இன்டர்காமில் பேசி, கல்யாண பத்திரிகையை ஹாலிலேயே வைத்து விட்டு போக சொல்லியிருக்கிறார். எட்மண்ட் தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.) 


சங்கரன் கோவில் திருமண வைபவம் நிறைவுற்றது. சங்கரன் கோவிலில் இருந்து திருச்சிக்கு ரயிலில் செல்லும் போது

 ரயிலில்

 ஒரு பாடகன். என்னை விட நான்கைந்து வயது மூத்தவனாயிருப்பான். ரயிலில் பாடி யாசகம் பெறுபவன். தன் கையில் இருந்த தாளக்கட்டையை தட்டிக் கொண்டு அற்புதமாக பாடினான். 

'பூ முடிப்பாள் இந்த பூங்குழலி ' 

ஸ்ரீதரின் நெஞ்சிருக்கும் வரை படப்பாடல். சிவாஜி, கே. ஆர். விஜயா மேக் அப் இல்லாமல் நடித்த படம் நெஞ்சிருக்கும் வரை. 

பாடலில் நடிப்பில் சிவாஜி கணேசன், குரலில் சௌந்தர் ராஜன், இசையில் விஸ்வநாதன் மூவருமே கொடி கட்டினார்கள்! 

பாடலின் சரணங்கள் எல்லாம் மாறுபட்ட வித்தியாசமான பாடல். கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் அந்த பையன் அற்புதமாக பாடிய பாங்கு. 


' நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணி திங்கள் இருபதாம் நாள் .. ' என்று கல்யாணப் பத்திரிகையே ஒரு சரணம். 


அடுத்து சரண வரிகள் முகூர்த்த நிகழ்வு 

' மாதரார் தங்கள் மகள் என்று பார்த்திருக்க, 

மாப்பிள்ளை முன் வந்து

 மணவறையில் காத்திருக்க... 

கொட்டியது மேளம்,  குவிந்தது கோடி மலர், 

கட்டினான் மாங்கல்யம்....... '


அடுத்த விச்ராந்தியான சரண வரிகள் 

' .... கண்மணி வாழ்க, கடமை முடிந்தது கல்யாணம் ஆக.... '


அந்த முழுப் பாடலையும் சொக்கிப்போய் 

கேட்கும் படி அந்த அண்ணா பாடினான். 


கண்ணுக்குள் முகமும், செவிகளில் அந்த குரலும் 

இன்றைக்கும் மறக்கவே முடியாது.

Jun 24, 2021

Lofty Scenes

 2005 post in Pathivukal.com 


LOFTY SCENES!

- R.P.RAJANAYAHEM


UNSUNG UNHONOURED UNWEPT--GIANTS TURNED INTO PIGMIES--- CELEBRITIES TURNED INTO POOR CREATURES


Eknath Solkar, a forward short leg fielder in Indian cricket 30 years back in the 1970s is no more. With his poor educational qualification, he raised himself to a level as a player in Indian cricket team. He was one of the rare cricketers who took delight in being a fielder to chase and catch cricket balls. Bishen singh Bedi says " We would not have been the same bowlers without EKNATH SOLKAR. "It's an irony that he was a day drunkard even before he was dropped from the national team. By the time he breathed his last, Solkar weighed just 45 kgs and reduced to being a merebag of bones.


When this year began, in January, the glamour qeeen of the 1970's Parveen Babi's body was found in a Mumbai Martuary with a token as an unclaimed body No.16


Giants turned into pigmies!

Celebrities turned into poor creatures!!

Time is a cruel thing, indeed.


EVERY ACTION HAS A REACTION


Vinod mehta wrote this in OUTLOOK june 20,2005.

I was appalled to read this peculiar news. let me give the message briefly.

Tony Blair,British Prime minister, a father of four grown-up kids declared in an interview " I am still SEXUALLY ACTIVE. I am a FIVE-TIMES-A-NIGHT MAN "

Miserably,One month after this interview,it was a pity to note, POMPOUS TONY BLAIR was admitted in hospital with a SEVERELY STRAINED BACK!!!


EVERY DELIBERATE, INTENTIONAL ACTION IS HAVING A REACTION.

YOU MUST REAP WHAT YOU HAVE SOWN.


WHO LOSES, WHO WINS. WHO IS IN WHO IS OUT


An ardent follower of Khomeini, AHMADINEJAD, The newly elected President of Iran had done a leading role in the occupation of the American Embassy in Tehran in the year 1979. This incident was the major cause of President Jimmy Carter's defeat by Ronald Reagan. It is obviously revealed that Reagan's employee had influenced the rebels against King Shah, not to free the embassy hostages until the election and as the protagonist of that operation, Ahmedinejad is reprehensible for the change in the American Presidential Order.

Now it is learnt, U.S is not pleased with the victory of Ahmedinejad. Was he a real King maker or not?


Who loses, who wins

Who is in and who is out.


ASHOKAMITRAN'S LETTER WRITTEN TO R.P.RAJANAYAHEM -

A REJOINDER TO OUTLOOK POLEMICS


When Ashokamitran wrote me a letter and wanted me to type it and arrange to publish it in pathivukal.com, I thought of giving a resounding,booming TITLE to that historical letter and chose a sentence from the letter itself because "NOT A WORD IS WRITTEN BY THE INTERVIEWEE!" sounds a decree and verdict in it and this line has an assertive forceful claim and while pronouncing, it becomes an articulate, expressive declaration.


Now when I find this TITLE has become popular in Raayar Kaapiklub I feel great.


But this letter also raised a row among the libertarian writers(!) around Tamil nadu. 

Why should Ashokamitran write this letter to R.P.RAJANAYAHEM ?

That's the question. 


JEALOUSY, RESENTMENT, DISTRUST, SUSPICION, HATRED


Heated discussions going on and now

ASHOKAMITRAN'S LETTER TO R.P.RAJANAYAHEM IS AT ODDS !

So this letter is being rejcted and ignored.


"How many ages hence

Shall this our'LOFTY SCENE'be acted over

In States unborn and accents yet unknown!"

- Shakespeare in Julius Caesar


.. 


http://rprajanayahem.blogspot.com/2017/03/ashokamitrans-letter-to-rprajanayahem.html?m=0

Excessive Creativity

 

An Entry dt 13th August, 2005

 in R.P.Rajanayahem’s Yahoo Blog


EXCESSIVE CREATIVITY - - ...


"Eureka! Eureka!! 


Except R.P.Rajanayahem,

all other Tamil men and women are writing poems.

 Either poems or stories. 

Out here almost everybody says

'I am writing a novel' or 'I have an idea to write a novel.'  "


A comment from 'Raayarkaapiklub' Balasubramanian natarajan alias Nahupolian


" Not to worry, Mr rprajanayahem sir. 

Your 'Eureka! Eureka!' itself - is far more creative poetry than all these other Tamil men and women!Really! You have demonstrated 

how a great poem can be composed 

with just two words!"


- N.Balu


"Dear Nahupolian,

I feel extremely happy to note your greetings with open arms.

It's ironical that jokes contain more truths

 than the Bible. 

You know very well a true poem contains a truth in it and so you have transformed my joke as a poem generously. "


thanks and regards,


R. P. Rajanayahem 


( Nahupolian is no more now)

நெஞ்சமே வெந்து பெத்தடின் ஊசி

 Pethidine Injection

- R.P.ராஜநாயஹம்


இன்றைக்கு தூத்துக்குடிக்காரர்கள் யாரோடு பேசினாலும் உடன் அவர்கள் 

மிகுந்த பரவசத்துடன் 

“சந்திரபாபு எங்க ஊர்க்காரர்” என்று 

ஒரு வார்த்தை சொல்லாமல் போவதேயில்லை.


சந்திரபாபு பெத்தடின் இஞ்சக்ஸன் போதையில் மூழ்கியிருந்தவர்.

கவிஞர் கண்ணதாசனும் பெத்தடின் அடிக்ஸனில் இருந்து மீள முடியாமல் தவித்தவர்.


Addiction is a destructivie disease.

 Simply devastating.


சந்திரபாபு தன் சொந்த ஊரான தூத்துக்குடியில் ரயில்வே ஸ்டேசனில் ஏதோ தகராறில் ஈடுபட்டபோது கடுமையாக தாக்கப்பட்டார். 

He was a trouble maker.


கவனியுங்கள். அவருடைய சொந்த ஊரில்.


 அவருடைய ஃபெர்ணான்டோ சமூகத்தை சேர்ந்தவர்கள் தூத்துக்குடியில் அதிகம். அப்படியிருந்தும் தாக்கப்பட்டார். 


சந்திரபாபு ஒரு தமிழ் திரைப்பட நடிகர் என்று தெரிந்து தான் அவரை அடித்தார்கள். 

’ஏன்டா நீ பெரிய நடிகன்னா என்னா வேண்ணாலும் செய்வியா?’ என்று 

சொல்லி சொல்லி அடித்திருக்கிறார்கள். Disgrace.


முகமெல்லாம் வீங்கிப்போய். உதட்டில் கூட காயத்தோடு வந்த சந்திரபாபுவை சென்னையில் பார்த்து விட்டுத் தான், மிகவும் அதிர்ந்து போய் கண்ணதாசன் தன் பெத்தடின் போதைப் பழக்கத்தை உடனடியாக கைவிட்டார்.


"சத்தியம் தவறும் கூட்டம்

தருமத்தை மறந்த கூட்டம்

வித்தைகள் காட்டும் கூட்டம்

வேதனை வளர்க்கும் கூட்டம்

நித்தியம் பார்த்துப் பார்த்து

நெஞ்சமே வெந்து வெந்து

பெத்தடின் ஊசி போட்டேன்

பிறிதென்னைக் காப்பவர் யார்


சந்திக்கும் மனித ரெல்லாம்

தலையையே தின்கின்றார்

வந்தித்து வாழ்த்துச் சொல்ல

வழியிலே ஒருவ ரில்லை

நிந்தித்தே பழகிப் போன

நீசரைத் தினமும் கண்டேன்

சிந்தித்தே ஊசி போட்டேன்

சிறிதென்னைக் காக்க வேண்டி"


              -  கவியரசு கண்ணதாசன்

Jun 22, 2021

ந. முத்துசாமி நாடகங்கள் பற்றி

 https://m.facebook.com/story.php?story_fbid=3084798668400245&id=100006104256328


மார்ட்டின் எஸ்லின் Theater of the Absurd என்கிற வகைமையை 1962ல் சொன்னார். 

இது பற்றிய பிரக்ஞையில்லாமலேயே 

ந. முத்துசாமி தமிழில் முதல் Absurd play 

 'காலம் காலமாக' எழுதி நடை பத்திரிகையில் 1969ல் வெளிவந்து விட்டது. 

'நாற்காலிக்காரர் ' 1970ல் கசடதபற பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது. 


இதற்கு பிறகு 1971ல் தான் இந்திரா பார்த்தசாரதியின் முதல் நாடகம் 

' மழை ' கசடதபற இதழில் பொழிந்தது. 


இந்திரா பார்த்தசாரதியை விட ஐந்து வயது இளையவர் ந. முத்துசாமி என்றாலும் நாடகத்தைப் பொறுத்தவரை சீனியர் என்பதை தூக்கிப் பிடித்து இப்படி காட்ட வேண்டியிருக்கிறது. 


மேற்கண்ட காலம் காலமாக, நாற்காலிக்காரர் ரெண்டு நாடகம் தான் முத்துசாமி எழுதினார் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். 

யூஜின் அயனெஸ்கோ தரத்தில் இந்த நாடகங்கள் இருக்கின்றன என்று சொல்லப்பட்ட போது தான் அயனெஸ்கோவை தெரிந்து கொண்டார். 


முத்துசாமியின் பிரபலமான நாடகங்களில் இங்கிலாந்து ஒன்று. இதற்கு 'நூல் கண்டு' என்றும் பெயர் உண்டு. 

நாடகத்தின் பெயர் இங்கிலாந்து என்பதால் மொழிபெயர்ப்பு என்று நினைத்து விட வேண்டாம். 

அப்படி யாராவது சொன்னால் நம்பக்கூடாது. 

முத்துசாமி எழுதிய தமிழ் நாடகம் தான். 


நான் இந்து தியேட்டர் ஃபெஸ்டிவலில் இயக்கிய வண்டிச்சோடை,  சுவரொட்டிகள், உந்திச்சுழி, (உந்திச்சுழி நாடகத்தின் மூலம் பேராசிரியர் செ.ரவீந்திரன் ஒளியமைப்பாளராக பிள்ளையார் சுழி போட்டார்) கட்டியக்காரன், நற்றிணையப்பன், அப்பாவும் பிள்ளையும், படுகளம், காண்டவ வன தகனம், பிரஹன்னளை உள்பட இருபத்தியொரு நாடகங்கள் எழுதியிருக்கிறார். 

இந்த இருபத்தியொரு நாடகங்களுமே 

ஒவ்வொரு வகையில் விசேஷமானது. 

கே. எஸ். கருணாப்ரசாத் வெளியீடாக இன்று கிடைக்கிறது. 


கூத்துப்பட்டறை பல மொழி பெயர்ப்பு நாடகங்கள் போட்டிருக்கிறது என்பதற்காக முத்துசாமி தான் மொழிபெயர்ப்பு செய்துள்ளார் என்று தவறாக கருதி விடக் கூடாது.


வெ.ஸ்ரீராம் மொழி பெயர்த்த மீளமுடியுமா சார்த்தர் நாடகத்தில் நடேஷ், கலைராணி நடித்தார்கள். 


'The last five seconds of Mahatma Gandhi' கூட தமிழில் கூத்துப்பட்டறை நடிகர்கள் நடிப்பில் அரங்கேறியுள்ளது.

.. 

தி. ஜானகிராமன் எனும் உன்னத அதி மானிடன்

 தி. ஜானகிராமன் எனும் உன்னத அதி மானிடன் 

- R.P. ராஜநாயஹம் 


அப்போது நான் தி.ஜானகிராமனுக்காக ஒரு நினைவு மதிப்பீட்டு மடல் வெளியிட்டிருந்தேன்.

புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் 

கி வேங்கட சுப்ரமணியன் என் எதிர் வீட்டில் அப்போது இருந்தார். அவர் ஆச்சரியப்பட்டு 

ஆள் அனுப்பி என்னை அவர் வீட்டுக்கு அழைத்து என்னை வைத்து உடனே தி.ஜா வுக்காக ஒரு கருத்தரங்கம் நடத்த உத்தரவிட்டார்.


க .ப .அறவாணன் அப்போது தமிழ் துறை தலைவர்.


'தி.சானகி ராமன் கருத்தரங்கம் ' என்று அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது.என் பெயர் ஆர்பி.ராசநாயகம்! கிரா (அப்போது புதுவை பல்கலைக்கழக 

வருகை தரு பேராசிரியர் )பெயர் கி 'ராச'நாராயணன்.


விழாவுக்கு போனவுடன் இபா 'என்ன ராச நாயகம் , ராச நாராயணன்'என்று கிண்டல் செய்தார். கிரா " நான் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறேன் !"என்று பட்டிகாட்டானாக மாறி இந்திரா பார்த்த சாரதியை பார்த்து சிரித்தார். தி.ஜா படத்திலும்' தி சானகி ராமன்' என்று எழுதியிருந்தார்கள்.


பூனைக்கு யார் மணி கட்டுவது ? 

பாரதி தாசனின் சிஷ்யர்கள் என்று பலர் அந்த சபையில்.

நான் பேசும்போது இந்த தமிழ்  குறிப்பிடாமல் விடவில்லை. 

I broke the ice!


" தமிழில் 'ஷ் ,ஹ ஜ'போன்ற வார்த்தைகள் இல்லை என்று சொல்வதை கேட்கும்போது நம்ம கன்னத்திலேயே இரண்டு கைகளாலும் அடித்து கொள்ள வேண்டும் போல் தோன்றுகிறது. இருக்கிற சிறகை பிய்த்து விட்டு தனி தமிழ் சிறகு ஒட்டவைப்பது அபத்தம் - இப்படி தி ஜானகிராமன் சொல்வார். அவர் பெயரையே அவர் படத்திலும் அவர் பற்றிய கருத்தரங்க அழைப்பிதழில் அபத்தமாக ஆபாசமாக எழுதிவிட்டீர்கள் " என்று என் எதிர்ப்பை கடுமையாக தெரிவித்தேன்.

 தனி தமிழ் அன்பர்கள்  எல்லோரும் எழுந்து விட்டார்கள். உடனே க.ப .அறவாணன் மேடைக்கு வந்து மன்றாடினார்

 ' தயவு செய்து எல்லோரும் அமருங்கள்.உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன் '


தமிழ் பேராசிரியர் அறிவு நம்பி ' தயவு செய்து ராசநாயகத்திடம் சானகிராமன் பற்றி மட்டும் கேளுங்கள். தனித்தமிழ் பற்றி தயவு செய்து கேட்கவேண்டாம்.  '


விழா முடிந்த பிறகு புதுவை தமிழ் துறைக்கு பல 'கன்னட' கடிதங்கள் அது என்ன அது ஆங் .. கண்டன கடிதங்கள். 

"தமிழ் துறை நடத்திய விழாவில் ஒருவன் தமிழை பழிக்கிறான். எங்கள் கையையும் வாயையும் கட்டிப்போட்டு விட்டீர்களே "


டெல்லியில் இருந்து திஜாவின் மகன் சாகேத ராமன் எனக்கு ஒரு கடிதம் நொந்து எழுதினார்.

"சாணி உலகம்! இந்த சாணியில் 'சானகிராமன்'தான் நிற்க முடியும் "

..............


கருத்தரங்கம் நடந்த போது அந்த ஊரில் பிரமுகர், தியேட்டர்கள், கல்யாண மண்டபம் போன்றவற்றிற்கு அதிபதி ஒரு பெரியவர். 

அவர் புரவலர் ந. கோவிந்தசாமி அந்த நிகழ்ச்சிக்கு நிதி தந்திருக்கலாம்.

 விழா மலரை இந்திரா பார்த்தசாரதியிடம் இருந்து நான் பெற்ற போது பார்த்தார். ராஜநாயஹம் ஒரு இளைஞன் என்று கண்டு கொண்டார். 


விழா ஆரம்பித்த பிறகு அதன் பின்னர் வந்த திருப்பூர் கிருஷ்ணன் அந்த புரவலர் தான் ராஜநாயஹம் என்று தவறாக  நினைத்திருக்கிறார். 


அப்புறம் புரவலர் பேச எழுந்த போது தான் நான் இல்லை என்பதை புரிந்து கொண்டாராம். 


ராஜநாயஹம் என்ற பெயர் பெரியவர் என்பதாக தன்னை கருத வைத்து விட்டதாக விழா முடிந்த பிறகு திருப்பூர் கிருஷ்ணன் கூறினார். 


நான் தான் முதல் கட்டுரை வாசித்தேன். திருப்பூர் கிருஷ்ணனும் வாசித்தார். 


முன்னதாக புரவலர் பேசும் போது 'ராஜநாயஹம் போன்ற இளம் உள்ளங்களை கவர்ந்திருக்கிறார் என்றால் ஜானகிராமன் எப்பேர்ப்பட்ட எழுத்தாளர் என்பது புரிகிறது' என்றார். 


உடனே எழுதப்பட்ட ஒரு காகிதத்தில் இருந்து சிரத்தையாக வாசித்தார். 'ஜானகிராமன் பெரிய எழுத்தாளர். அவருக்கு மனைவி இரண்டு.' - pause.. 

இந்திரா பார்த்தசாரதி உடனே என்னைப் பார்த்து அதிர்ச்சியை தன் உடலை ஒரு குலுக்கு குலுக்கி வெளிப்படுத்திய காட்சி இப்போதும் மறக்க முடியாதது. 


புரவலர் தொடர்ந்தார் '.. மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள் ' 


'அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள் ' என்று எழுதிக்கொடுத்ததை அப்படி விபரீதமாக வாசித்திருக்கிறார். 


என்னிடம் ஒரு மாணவர் கேட்ட கேள்விக்கு ' நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் புதுமைப்பித்தன்,

 கு. ப. ரா, ந.பிச்சமூர்த்தி, மௌனி, க. நா. சு துவங்கி அழகிரி சாமி, லாசரா, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கரிச்சான்குஞ்சு, வெங்கட்ராம், 

கி. ராஜநாராயணன், இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, வண்ணநிலவன், வண்ணதாசன், பிரபஞ்சன் என்று கோணங்கி வரை  படித்தவன் நான். யாரை படித்தாலும் தி. ஜானகிராமன் தான் விசுவரூபம் எடுத்து தெரிகிறார் 'என்று பயமறியா இளங்கன்றாக சொன்னேன். 

கிராவும், இ. பாவும் விழாவில் இருந்தார்கள். 


திருப்பூர் கிருஷ்ணன் கேட்ட கேள்வி கூட நினைவிருக்கிறது.' அன்பே ஆரமுதே குறைப்பட்டுப் போன நாவல் என்று எப்படி சொல்கிறீர்கள் ' என்றார். அவருக்கு பிடித்த பெண் பாத்திரம் அன்பே ஆரமுதே ருக்மணி. 

தொடர்கதையாக எழுதப்பட்ட நாவல்களில் அன்பே ஆரமுதே மட்டும் பாதிக்கப்பட்டது என்பது 

என் துணிபு. 


விழா முடிந்ததும் இந்திரா பார்த்தசாரதியுடன் திருப்பூர் கிருஷ்ணனும், நானும் அவர் வீட்டுக்கு சென்றோம். இந்திரா மாமியின் அன்பான உபசரனை. 


வீட்டில் இருந்து வெளியே வந்ததும் திருப்பூர் கிருஷ்ணன் என்னிடம் சொன்னார் :

" நீங்கள் கருத்தரங்கில் ஜானகிராமன் தான் விஸ்வரூபம் எடுத்து தெரிகிறார் என்று சொன்ன விஷயம் கி. ரா வையும் இ. பா. வையும் புண்படுத்தியிருக்கும் "


திருப்பூர் கிருஷ்ணன் 'தமிழின் தரமான எழுத்தாளர்களை விரல் மடக்கி எண்ண ஆரம்பித்தால் முதல் விரலையே ஜானகிராமனுக்காக தான் மடக்க வேண்டியிருக்கும்" என்று கணையாழியில் எழுதியிருந்ததையும் கூட முன்னதாக நான் வெளியிட்டிருந்த தி. ஜா. நினைவு மதிப்பீட்டு மடலில் சேர்த்திருந்தேன். 


நான் வெளியிட்டிருந்த அந்த நினைவு மதிப்பீட்டு மடல் பார்த்து விட்டுத் தான் துணை வேந்தர்

 இந்த கருத்தரங்கம் நடத்த ஆணையிட்டார். 


திருப்பூர் கிருஷ்ணன் சென்னை சென்ற பிறகு இந்த புகைப்படம் அனுப்பி வைத்தேன். 


அன்போடு பதில் கடிதம் எழுதினார் 

'என் மனைவி ஜானகியிடமும், குழந்தை அரவிந்தனிடமும் புகைப்படத்தில் உங்களை காட்டி 

"இவர் தான் ராஜநாயஹம் "என்று சொன்னேன்"


.. 


ஜானகிராமன் பிறந்த தினம் ஜூன் 28.

ஜூன் மாதம் 28ம் தேதி, 1921ம் ஆண்டு. 


காலச்சுவடு வெளியிட்டுள்ள சிறுகதை தொகுப்பில் பிறந்த தேதி தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தகவல் பிழை. 

தி. ஜா  பிறந்த ஊர் தேவங்குடி தான்.        அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். 


அம்மாவின் சொந்த ஊரில் தானே பிரசவம் எப்போதுமே நடக்கும். அது தான். தேவங்குடி ஜானகிராமனின் அம்மாவின் ஊர். 


தஞ்சை ஜில்லா. 


அவருடைய அப்பா தஞ்சையில் குடும்பத்துடன் செட்டில் ஆகியிருக்கிறார்.


 அதனால் தி. ஜா.வின் பால்யமெல்லாம் தஞ்சையில் தான்.


 பள்ளிப்படிப்பு காலம். 


கல்லூரி படிப்பு கும்ப கோணத்தில். 


தஞ்சையில் தி. ஜா.வின் தகப்பனார் பிரவச்சனம் செய்தார். ஒரே டெக்ஸ்ட் வால்மீகி ராமாயணத்தை சம்ஸ்கிருதத்திலிருந்து வரி, வரியா விளக்கி தமிழில் ஹரி கதா செய்வது தான் பிரவச்சனம். 


ஜானகிராமன் தகப்பனாரை ராமாயண பாகவதர் என்று க.நா.சுப்ரமண்யம் குறிப்பிடுவார். 


ஜானகிராமனுக்கு அண்ணன் பெயர் ராமச்சந்திரன். 


அவர் மாயவரம் ஸ்கூலில் தமிழ் பண்டிட். 


வேத பாடசாலையில் சம்ஸ்கிருதமும் படித்தவர் இந்த தமிழ் பண்டிட். 


ஜானகிராமனின் இரு சகோதரிகளுக்கு ஒரே கணவர். அவர் பெயரும் ராமச்சந்திரன் தான். 


'கமலம்' குறுநாவல் தொகுப்பை 


"இந்த குறுநாவல்களில் ஒன்றில் ஒரு கதாபாத்திரமாக வரும் என் இரண்டு சகோதரிகளின் கணவர் ஸ்ரீ ராமச்சந்திரன் அவர்களுக்கு சமர்ப்பணம் " என்று குறிப்பிட்டிருந்தார்.


 மீனாட்சி பதிப்பகம் வெளியிட்ட போது கமலம் தொகுப்பில் இந்த சமர்ப்பணம் இருந்தது. 


இந்த அத்திம்பேர் ராமச்சந்திரன் நிலபுலன்களுடன் 


வாழ்ந்த ஊர் தான் 'கீழவிடயல் கருப்பூர்'. 


அன்றைய தஞ்சை ஜில்லாவில் வலங்கைமானுக்கு அருகில் இருக்கிற ஊர். 


முதிய வயதில் ஜானகிராமனின் பெற்றோர் இந்த மருமகன் வீட்டில் தான் செட்டில் ஆனார்கள். 


ஜானகிராமன் டெல்லியில் இருந்த காலத்தில் இந்த கீழ விடயல் கருப்பூருக்குத் தான் பெற்றோரை காண்பதற்கு


 வர வேண்டியிருந்தது. 


ஜானகிராமன் பிள்ளைகள் சாகேத ராமனுக்கு, ரமணனுக்கு, உமா சங்கரி மூவருக்கும் தாத்தா, பாட்டி ஊர் என்றால் அத்தைகள் ஊர் தான். 


ஜானகிராமன் டெல்லி போகுமுன் சென்னை மயிலாப்பூர் ராக்கியப்ப முதலித் தெருவில் குடியிருந்தார்.


இறக்கும்போது சென்னை திருவான்மியூர் வீட்டு வசதி வாரியம் வீட்டில் குடியிருந்தார்.


தி.ஜானகிராமன் இறந்த போது அவருக்கு வயது அறுபத்திரண்டு தான். இறக்க வேண்டிய வயதா?


ஆனால் ஜானகிராமன் ’வயசானா இருக்கக்கூடாது. அறுபது வயதுக்கு மேல் இருக்கக்கூடாது’ என்று அடிக்கடி சொல்வாராம்.


ஜானகிராமனுக்கு இரண்டு புத்ரர்கள் சாஹேதராமன், ரமணன்.

ஒரு புத்ரி. உமாசங்கரி. உமா சங்கரி மாமியின் கணவர் நரேந்திரநாத்.

தன் கணவர் பற்றி உமா சொல்வார்: ரொம்ப அற்புதமான மனிதர்.

உமா சங்கரியின் அண்ணன்கள் சாஹேத ராமன், ரமணன், கணவர் நரேந்திர நாத் மூவருமே ரொம்ப நாள் வாழ வேண்டும் என்று தான் ஆசைப்பட்டவர்கள். ஆனால் போய்விட்டார்கள்.


There is nothing serious in mortality.

Life is a walking shadow…

- Shakespeare in ‘Macbeth’


ஹைத்ராபாத்தில் இருக்கும் தி.ஜா மகள் உமா சங்கரிக்கு இரண்டு மகள்கள். ஒருவர் அமெரிக்காவில். இன்னொருவர் ஹைத்ராபாத்தில்.


... 


கூத்துப்பட்டறையில் பயிற்சியாளராக பல முறை              ஒரு சிறுகதை தேர்ந்தெடுத்து உரக்க வாசித்து விரிவாக பேசியிருக்கிறேன். 

தி.ஜானகிராமனின் ’தவம்’, ’பரதேசி வந்தான்’, ’தீர்மானம்’ அசோகமித்திரனின் ‘காந்தி’, ’கடன்’.

அடர்த்தியான கதைகள்.


தி.ஜானகிராமனைப்பற்றி, அசோகமித்திரனைப்பற்றி

நிறைய சொல்லியிருக்கிறேன். 


தி.ஜானகிராமனையும் அசோகமித்திரனையும் தான் எத்தனை முறை மறு வாசிப்பு செய்திருக்கிறேன். பிரமிப்பு விலகாத விசேஷமான அனுபவமாகவே ஒவ்வொரு முறையும்.

தி.ஜா ’தீர்மானம்’ கதையை வெள்ளிக்கிழமை வாசித்தேன்.

நான் கண் கலங்குவது, அழுவது எல்லாம் தனிமையில் தான்.

Sorrows find relaxation in solitude. 

Every man has his secret sorrows.

மற்றவர்கள் முன் இளகி கலங்குவதில்லை.

தீர்மானம் கதையை வாசிக்கும் போது அடக்க முடியாமல் விம்மினேன். கண்ணில் இருந்து நீர் வடிந்து விடாமல் இருக்க கைக்குட்டையால் துடைத்துக்கொண்டேன். தொண்டை தழதழக்க மேலே வாசிக்க முடியாமல் நிறுத்தினேன்.


Charles Dickens, in his novel Great Expectation says

“We need never be ashamed of our tears.”


Shakespeare in Julius Ceasar “If you have tears, prepare to shed them now."

பத்து வயது விசாலம் எனும் சிறுமி தான் எப்பேர்ப்பட்டவள். தாயில்லா பிள்ளை. தந்தையுடன், அவருடைய சகோதரியின் பராமரிப்பில் இருப்பவள்.


 அந்த அத்தை வாழாவெட்டியா, விதவையா?


ஆறு வயதில் விசாலிக்கு பால்ய விவாகம். அப்போது கணவனுக்கு இருபத்திரெண்டு வயது என்பது அவன் இப்போது அவளை அழைத்து வரச்சொல்லி இவள் வீட்டுக்கு வந்துள்ள கணவனின் உறவினர்கள் அவன் வயது இருபத்தாறு என்று சொல்வதிலிருந்து தெரிகிறது.


வந்திருப்பவர்கள் கணவனின் அண்ணா, பெரியப்பா, சித்தப்பா ஆகியோர். கணவனுக்கு அம்மா, அப்பா கிடையாது.


பத்து வயது குழந்தையை புகுந்த வீட்டுக்கு அழைத்துச்செல்ல வந்திருக்கிறார்கள்.


குழந்தை தன் தோழி ராதையுடன் சோலி விளையாடக் காத்திருந்தவள்.


அப்பா வீட்டில் இல்லை. நான்கு வருடங்களுக்கு விசாலியின் திருமணத்தின் போதே அப்பாவுக்கும் கணவன் வீட்டார்க்கும் மனஸ்தாபம்.

 உறவு கெட்டுப் போய் விட்டது.


அத்தை தன் சகோதரன் வரட்டுமே என்று தவித்து அங்கலாய்க்கிறாள் இப்போது.


கணவன் வீட்டாரோ பச்சை தண்ணீர் கூட இந்த வீட்டில் குடிக்கத் தயாராயில்லை. சாப்பிட வேண்டிய குழந்தை விசாலியை அழைத்துக்கொண்டு வண்டியில் கிளம்ப தயாராகிறார்கள்.


விசாலி உடனே தீர்மானிக்கிறாள். 

’அத்தை, அப்பா கிட்ட நான் கிளம்பிட்டேன்னு சொல்லிடு.’

கணவன் வீட்டுக்கு கிளம்ப ஆயத்தமாகிறாள். என்ன ஒரு தீர்மானம்.


என்னால் மேலே உரக்க வாசிக்கவே முடியவில்லை. கண்ணை நீர் மறைக்கிறது. தொண்டையில் இருந்து குரல் வரவில்லை.


ஒரு வழியாக சில நிமிடங்கள் உறைந்து விட்டு நிலை கொண்டு மீண்டும் கவனமாக வாசித்து முடிக்க முயன்றும் சிரமமாகவே இருந்தது.


என்ன ஒரு கதை. எத்தனை முறை வாசித்த கதை.

எத்தனை வருடங்கள் கழித்து வாசித்தாலும் நெஞ்சை அடைக்கும் கதை.

இதெல்லாம் சென்ற நூற்றாண்டின் கதை. இது இப்ப தேவையா? என்றெல்லாம் விகார மூளைகள் விவாதம் செய்யட்டும்.


தி.ஜாவின் கதைகள் அந்த கால கட்டங்களின் வரலாற்று ஆவணங்கள். உன்னத மனத்தால் மட்டுமே இப்படி காட்சிப்படுத்த முடியும்.


..


'தி.ஜானகிராமன் எனும் உன்னத அதி மானிடன்'


- எழுத்தாளர் R. P. ராஜநாயஹம் 


2021 ஜூன் மாதம் #புரவி இதழில்...


சந்தா மற்றும் விபரங்களுக்கு:


கார்த்திகேயன் - 9942633833

அருண் - 9790443979


புரவி - கலை இலக்கிய மாத இதழ் 

#வாசகசாலை

Jun 20, 2021

ஒவ்வொருத்தனும் ரொம்ப பெரிய ஆளுக

 மதுரை கீழ மாரட் வீதியில் மெட்டடோர் வேன் நிற்கும் போது ஏதேனும் ட்ரிப் கிடைக்கும். 

புரோக்கர் பாக்கியம் ட்ரிப் கிளம்பும் முன்னே கமிஷன் வாங்கிக் கொள்வான். 

அப்படி ஒரு முறை மதுரையொட்டிய மலையடிவாரத்தில் இருந்து ஒரு பார்ட்டி. 

நாள் வாடகை இவ்வளவு என்று

 பேசி அனுப்பி வேன் வைக்கப்பட்டது. 


டிரைவர் மூன்று நாட்கள் கழித்து ஒரு நாள் வாடகைக்கும் ரொம்ப குறைவாக மட்டுமே கிடைத்தது என்று வந்து நின்றான். 'பெட்ரோலுக்கு தான் அந்த பணம் அப்பப்ப கொடுத்தாங்கெ. ' 


ஐயப்பன் கோயிலுக்கு இந்த சரக்கு வேனில் 

சாமி கும்பிட பத்து பேர் போயிருக்கிறார்கள். 

மதுரை மலையடிவாரத்தில் இறங்கியவுடன் அவனவன் சொல்லிக் கொள்ளாமல் நழுவிவிட்டானாம். 


போன் வசதி கூட அன்று இல்லாத கிராமம். 


நேரே நானே டிரைவருடன் அங்கு போனேன். 

டிரைவர் சொன்னது உண்மை தான். 

ஒரு ரெண்டு நாள் கழித்து வாருங்கள், பணம் வசூல் செய்து தந்து விடுகிறோம் என்று 

ஐயப்பன் கோயிலுக்கு போய் வந்த சாமிகளின் 

 தலை குருசாமி சொல்லும் போதே அவன் கண்கள் கிடந்து அல்லாடின. 

எல்லா பயலும் கோயில்ல தான் ஒக்காந்திருந்தானுங்க. நெத்தியில பட்டையடிச்சு, நடுவுல குங்குமம் வச்சி,  சூடத்த கொளுத்தி,  தேங்காய ஒடச்சி,  பூஜ, புனஸ்காரம். 


அடுத்த முறை போன போது ஒரு ரெண்டு மணி டைம் கொடுங்க என்றான். 


வேனை மெயின் ரோட்டிற்கு கொண்டு வந்து,  மறுபுறம் இருந்த தெருவில் நிறுத்தி விட்டு 

காத்திருந்த போது தெருவில் வீட்டு முன் ஈசி சேரில் உட்கார்ந்திருந்த ஒரு பெரியவர் அவருக்கு எதிராக இருந்த நாற்காலியில் என்னை உட்காரச்சொன்னார். 

என்ன, ஏது என்று விசாரித்தவர் தன் திருவாய் மலர்ந்தார் : "அய்யோ, சல்லிக்காசு கூட ஒங்களுக்கு கெடைக்காது. 

அவன் பெரிய அயோக்கியன் ஆச்சே. 

நானே பெருந்தொகை கொடுத்து ஏமாந்து நிற்கிறேன். அந்த ஊரே முழுக்க அயோக்கியனுங்க. தெய்வ பக்தி மட்டும் அளவுக்கு அதிகம். 

நான் நீங்க சொல்ற ஆளு கிட்ட சொன்னேன். 

'ஒங்கிட்ட கொடுத்த தொகைக்கு நீ அஞ்சு வட்டி போட்டு அஞ்சு மாசத்துக்கு எடுத்துக்க.  அதோட ஒன் செருப்ப கழட்டி என்ன நாலடி அடிச்சுக்க. குடுக்கறத குடு' ன்னு.  அஞ்சு பைசா கூட என்னால வாங்க முடியல. இவனுங்க எல்லாம் சாதாரண ஆளுக கிடையாது. ரொம்ப பெரியவங்கெ. ஒவ்வொருத்தனும் அஞ்சு பேருக்கு பொறந்தவனுங்க "


...

Jun 18, 2021

சசிகலா பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது

 ஜெயலலிதா இறந்த பின் அப்போது சசிகலா பொது செயலாளராக கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட போது நான் எழுதிய பதிவு :


"அண்ணா திமுக என்ற கட்சிக்கு புதிய பொதுச்செயலாளர் பதவிக்கு நியமனம் பற்றி அறிவு ஜீவிகள், மற்றும் தங்களை கொஞ்சம் விவரமான ஆளாக நினைக்கும் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட என்ன இருக்கிறது? 

இந்த கட்சி எந்த நடைமுறை நியாயத்திற்கும் கட்டுப்படாத கட்சி என்பது ஊரறியத் தெரியக்கிடக்கிறது.


எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலிருந்து இந்த கட்சி இப்படித்தான் இருந்திருக்கிறது. ஜெயலலிதா அரசியலுக்கு வந்த காலத்தில் தான் வெண்ணிற ஆடை நிர்மலா காரணமாக மேல் சபையே கலைக்கப்பட்டது.

கட்சியில் எம்.ஜி.ஆருக்கு பிறகு முன்னிறுத்த 

எந்த ஆண் தான் அப்போது இருந்தார்?


இன்று மட்டும் அந்த அதிமுகவிற்கு திடீரென்று ரட்சகர் எங்கிருந்து வந்து குதிக்க முடியும்?


தமிழகத்தில் ஜெயலலிதாவுடன் அரசியல் செய்ய வேண்டியிருக்கிறதே என்று சங்கடப்பட்ட காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிக்காரர்கள் வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள்.


திராவிட இயக்கம் பெரியாரில் ஆரம்பித்து பாப்பாத்தி ஜெயலலிதாவில் வந்து நிற்கிறதே என்று திகைத்து அங்கலாய்த்தவர்கள் 

எவ்வளவோ பேர்.


ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே ’மன்னார்குடிகள்’ கையில் தானே கட்சி இருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், பழ.கருப்பையா உள்பட மன்னார்குடி கும்பல் அட்டகாசம், ஆர்ப்பாட்டம் பற்றி பிலாக்கணம் வைக்கத்தானே செய்தார்கள்.


இன்று சசிகலா பொதுச் செயலாளர் என்பதில் என்ன பெரிய ஆச்சரியம்,திகைப்பு, அங்கலாய்ப்பு வேண்டியிருக்கிறது?


கருணாநிதியை எதிர்ப்பவர்கள் எல்லோருக்குமே, ஜெயலலிதாவை ஆதரிப்பவர்கள் அனைவருக்குமே, துக்ளக் சோ உள்பட மன்னார்குடி கூட்டத்தார் பற்றி ஒரு Wilful blindness இருக்கத்தானே செய்தது.


What areas of the skull must be traumatized to cause Selective Amnesia?!


ஜெயலலிதாவுடன் அவ்வப்போது கூட்டணி வைத்த காங்கிரஸ், பா.ஜ.க., நல்லகண்ணு உள்ளிட்ட கம்யூனிஸ்ட்கள், ராமதாஸ், திருமாவளவன், வைகோ, விஜயகாந்த் போன்றவர்களுக்கும் மன்னார்குடி சசிகலா பற்றி ஒரு Selective Amnesia இல்லாமலா இருந்தது?


"O wonder !

How many goodly creatures are there here!

How beauteous Mankind is!

O brave new world!

That has such people in it!"


-Shakespeare in ‘ Tempest’


2011 டிசம்பரில் சசிகலா போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்ட போது இதற்கு காரணம் சோ ராமசாமி தான் என்றார் சசிகலா.


 ஜெயலலிதா திட்டி வெளியே போகச் சொன்ன போது அங்கே சிரித்துக்கொண்டு சோ நின்றிருந்தாராம். 

மீண்டும் ’ஜெயலலிதா- சசிகலா உத்தர ராமாயணம்’ 2012 மார்ச்சில் முடிவுக்கு வந்த போது அதை சோ எதிர்த்து விட்டாரா என்ன?


ஹெலி காப்டரை பார்த்து சாஸ்டாங்க நமஸ்காரம் செய்யும் போது அதிமுக மந்திரிகளும், எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும் 

ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலாவுக்கும் தான் மரியாதை செய்திருக்கிறார்கள்.


அதிமுக என்ற ஒரு கட்சி அகில இந்தியாவைப் பொருத்தவரை 

மிகவும் ஒரு விசித்திரமான அமைப்பு.


காமராஜர் உயிருடன் இருந்த போது ஸ்தாபன காங்கிரஸ் தான் எதிர்கட்சி என்றிருந்த போது, அடுத்த பொதுத் தேர்தலில் எப்படியும் காமராஜர் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருந்த நிலையில் எம்.ஜி.ஆர் அண்ணா தி.மு.க ஆரம்பித்து அமோகமாக கட்சி எழுந்தது.


கூத்தாடி கையில், தமிழன் அல்லாத ஆள் கையில் தமிழ் நாடு போகிறதே என்ற பதைப்பு, அங்கலாய்ப்பு, புலம்பல் தி.மு.கவுக்கு மட்டுமின்றி ஸ்தாபன காங்கிரசுக்கும் தான் அன்று இருந்தது.


 வலது கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரம் மட்டும் எம்.ஜி.ஆருக்கு பக்கவாத்தியம்.

திட்ட திட்ட திண்டுக்கல், வைய, வைய வைரக்கல்.


 திண்டுக்கல் இடைத்தேர்தலில் அண்ணா திமுகவின் விஸ்வரூபம் காண முடிந்தது. திண்டுக்கல் பெருவெற்றி என்பது நுட்பமானது. மக்கள் செல்வாக்கை அன்று சுத்தமாக இழந்திருந்த கருணாநிதியை அல்ல, நல்ல செல்வாக்கு பெற்றிருந்த காமராஜரையே பின்னுக்கு தள்ளி விட்டு எம்.ஜி.ஆர் 

எழுந்து நின்றார். 

காமராஜரின் அரசியல் வாழ்வை இல்லாமலாக்கியதில் பெரும்பங்கு 

அதிமுகவிற்கு தான்.


தீப்பொறி ஆறுமுகமும், வெற்றி கொண்டானும், சாதாரண லோக்கல் பேச்சாளனும் கூட அர்ச்சனை செய்தது ஒரு பக்கம்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த பின் துக்ளக் சோ ராமசாமியால் எம்.ஜி.ஆர் எப்படியெல்லாம் நையாண்டி அர்ச்சனை செய்யப்பட்டார்.’எம்.ஜி.ஆர் ஒரு சரியான காமெடியன்!’


அன்று படிக்காத பாமரனும், கிராமத்துப்பெண்களும் மட்டுமே எம்.ஜி.ஆரை கொண்டாடி அதிமுகவை மனையில் தூக்கி வைத்து விட்டார்கள்.


எம்.ஜி.ஆர் காலத்தில் அவருடைய மந்திரிசபையிலிருந்த க.ராஜா முகமது முன்னாள் மந்திரியான பின் “வண்ண மயில்” என்று ஒரு பத்திரிக்கை நடத்தியதுண்டு. பல இலக்கியத்தரமான விஷயங்கள் அதில் பிரசுரமாகியிருக்கின்றன.

ஜி. நாகராஜனின் “ ஓடிய கால்கள்” கதை அதில் வெளியிட்டிருந்தார்கள்.


ஜெயலலிதா காலத்தில் நடராஜன் ( சசிகலாவின் கணவர்) ’புதிய பார்வை’ என்ற தரமான பத்திரிக்கை நடத்தியிருக்கிறார். நிறைய எழுத்தாளர்கள் இதிலும் எழுதியிருக்கிறார்கள்.

புதிய பார்வை இன்னும் வருகிறதோ என்னவோ? அவரை ’புதியபார்வை’ ஆசிரியர்  நடராஜன் என்று தான் இப்போதும் குறிப்பிடுகிறார்கள்.


ஜெயலலிதா போல் போராட வேண்டிய அவசியமே இல்லாமல் இன்று சசிகலா கையில் கட்சி.


Cake walk! It happened to be an easy accomplishment for her to become a leader of the biggest party! Very Strange! 

முதலமைச்சராகவும் வரவேண்டும் என்று முழு கட்சியும் மன்றாடுகிறது. மன்றாடாத யாரும் கட்சியில் இருக்கவே முடியாதே. 

சசிகலாவான்னு முகம் சுளிக்கிறவனெல்லாம் அதிமுகவுக்கு வெளியே இருக்கறவனும், கட்சியை விட்டு வெளியேற வேண்டியவனும் தான்.


கருணாநிதி திமுக தலைவரானப்ப கூட முகம் சுளித்தவர்கள் இல்லையா என்ன? சோனியா காங்கிரஸ் தலைவர் ஆனப்ப வெளி நாட்டுக்காரியா தலைவி என்ற 

முக சுளிப்பும் அருவருப்பும். 

பிஜேபிக்கு மோடி தலைவரானப்ப முக சுளிப்பு இல்லையா?( பிஜேபிக்கு பிரசிடெண்ட் யாராயிருந்தாலும் பிரதமர் மோடிக்கு கீழே தானே? தலைமைப்பதவி மோடிக்குத்தானே?)

 எந்த கட்சியில் தான் தலைமைப் பதவி

ஆயாசமின்றி, சலிப்பின்றி நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.


’சசிகலா குரல் கூட கேட்க கிடைத்ததே இல்லை. இவர் பேட்டி கொடுப்பாரா?கட்சி கூட்டத்தில் பிரசங்கம் செய்வாரா’ என்றெல்லாம் வியாக்னங்கள்…

பொதுச் செயலாளர் நியமனத்திற்குப் பின் மேடைப்பேச்சு. கன்னிப்பேச்சு. குரல் சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்துள்ளது!


அண்ணா திமுக ஒரு வினோத உலகம். கட்சியின் இரண்டாவது தலைவரும் பெண். இன்று மூன்றாவது தலைவரும் பெண்.


இன்றைய தமிழக முதல்வர் உட்பட கட்சியின் பிற இரண்டாம், மூன்றாம் மட்டத்தலைவர்கள் தரை மட்டமானவர்கள்.

கீழ் படிதல் என்பது இவர்களை பொருத்தவரை        ”தலை” கீழ் படிதல். விசுவாசத்தின் விரிவான தன்மையை மட்டுமே போட்டி போட்டுக்கொண்டு வெளிப்படுத்தக்கூடியவர்கள். 


ஒருத்தன் தும்பிக்கய தரையில ஊனி நாலு காலையும் தூக்கி சங்கு சக்கரமா சுத்தினா, இன்னொருத்தன் மரத்தில வால தொங்கப் போட்டு ஊஞ்சலாடுவான்.


எதிர் நிலை எடுக்கவே மாட்டார்கள். 

புளி மூட்டைகள்.

Consistency is the hallmark of Mediocrity.


வைகோ தீவிரமாக அதிமுக ஏஜண்ட் ஆக செயல் படுவதால் தான் நாஞ்சில் சம்பத் வெளியேறும் நிலை! இது தான் உண்மை. ரோஷம், தன்மானம் எல்லாம் கிடையாது! ஏற்கனவே கட்சியில் ஜெயலலிதாவால் தலையில் குட்டுப்பட்டு இருந்தவர் தான் Innocent Innova!


பா.ம.க, மதி.மு.க, தே.மு.தி.க, போல Booth, Stall, kiosk என்றால் ரோஷப்பட்டு பெரும், கடும் அறிக்கை விட்டு மயிரே போச்சுன்னு வெளியேறலாம்.


(தமிழக) காங்கிரஸ், (தமிழக) பா.ஜ.க போல அதிமுக என்ன ஓட்டை வண்டியா?


துபாய் போல கொழிக்க வழி வகையுடைய ரெட்டை இலையை விட்டு வெளியேற பைத்தியமா பிடித்திருக்கிறது? என்ன வேண்டுமானாலும் எவன் வேண்டுமானாலும் “ அடிமை” என்று ஏசிக்கொள்ளட்டும்.


உண்மையில் அதிமுகவில் சுகம் அனுபவிக்கும் மந்திரிகள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களா அடிமைகள்? அவர்களால் ஆளப்படும்

 இழி நிலையிலிருக்கும் 

இந்த ’எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்’ அல்லவோ அடிமைகள். 


’சோரம் செய்திடாமே, தீமை செய்திடாமே ஊரை ஆளும் முறைமை ஓர் புரத்திலும் இல்லை’ பாரதி சொல்லியிருக்கிறானே?


சசிகலா ஒரு Soft Target. ஒரு வகையில் எவ்வளவு ஆண்டுகளாக மிகக் கடும் விமர்சனங்கள். இன்று அதன் உச்சம். எல்லார் வாயிலும் விழுந்து கொண்டு…

முதல்வர் ஓ.பி.எஸ் மற்றொரு soft target. ஆனாலும் பதிலுக்கு சவாலாக, கோபமாக ஒரு வார்த்தை பேசி இன்று வரை பார்த்ததில்லை. ’பவ்யம் பாவ்லா’ பன்னீர் செல்வம். 

வெட்டிபயலெல்லாம் என்னமா சவடால் விடுறான்.

பன்னீர் எப்போதும் சித்தர் போல ஒரு பார்வை."


...

When Harry met Sally

 When Harry met Sally...(1989 movie) 



ஜேம்ஸ் ஜாய்ஸ் தான் சொன்னார். 

'ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் உறவு தவிர்த்த வெறும் சிநேகிதம் சாத்தியமே இல்லை.' 

' A painful case' சிறுகதையில்.


ஜாய்ஸுக்கு முன்னாலேயே 

ஆஸ்கார் வைல்ட் கூட 

இப்படி சொன்னதுண்டு.

"Between a man and a woman there is no friendship possible. There is passion, worship, love, enmity, hostility, but no friendship."


...........


Men and women can't be friends because the sex part always gets in the way.


This film “When Harry met Sally...” chronicles this dilemma through the eleven year relationship between 

Harry and Sally.


Sally: I have a number of men friends and there is no sex involved.


Harry: No you dont.


Sally: You say I'm having sex with these men without my knowledge.


Harry: No.What I am saying is 'they all WANT to have sex with you. 

Because no man can be friends with a woman

 that he finds attractive. 

He always wants to have sex with her.


சேல்லியாக நடித்த ஹாலிவுட் நடிகை

 மெக் ரையான் இந்தப் படத்தில் நடித்ததற்குப் பின் தான் டாம் ஹாங்க்ஸ் உடன்

'Sleepless in Seattle' (1993),

 ' You've got mail' (1998)என்று

 இரண்டு படங்கள் நடித்தார்.


ரொமாண்டிக் காமெடி என்பதற்கு சரியான உதாரணம் When Harry met Sally...

மெக் ரையான் நாயகனாக பில்லி கிறிஸ்டல்.


ஹோட்டலில் லஞ்ச் சாப்பிடும்போது 

மெக் ரையான் நடித்துக்காட்டுகிற

 'Faking an orgasm' 

இந்தப் படத்தில் Infamous scene. 


'Faking an orgasm' என்பதை எப்படி விளக்குவது?

 " நிலா காயுதே நேரம் நல்ல நேரம் நெஞ்சில் பாயுதே காமன் விடும் பாணம்" பாட்டில் எஸ் .ஜானகி இந்த 

'Faking an orgasm' என்பதை அனர்த்திக்காட்டியிருக்கிறார். 


பெண்ணின் காம இன்பப்பரவச 

உச்ச நிலையை நடித்துக்காட்டுவது. 


சரி தான், ஜானகியின் 

இழுவை அனத்தல் மாதிரி என 

நினைத்து விடாதீர்கள்.


நிஜமாகவே பெண்ணின் பரவச உச்சத்தை அட்டகாசமாக மெக் ரையான் செய்துகாட்டுவார்.


பப்ளிக்காக பில்லி கிறிஸ்டல் முன் இதை நடித்துக்காட்டிவிட்டு சாப்பிட ஆரம்பிக்கும்போது பக்கத்து டேபிளில் அமர்ந்திருக்கும் 

ஒரு வயதான அம்மணி (படத்தின் இயக்குனர் ராப் ரீனர் - இவருடைய தாயார் ) வெயிட்டரிடம்

"I'll have what she's having." என்று சொல்கிற வசனம் ஹாலிவுட் படங்களில் வந்த 

மிக முக்கிய வசனங்களில் ஒன்று.


AFI's 10 Top 10 வரிசையில் ரொமாண்டிக் காமெடி படங்கள் பத்தில் ஆறாவது ரேங்கில் 

When Harry met Sally... இருத்தப்பட்டிருக்கிறது. 


மியூசிகல் மூவி."It Had to Be You"


According to the Random House Historical Dictionary of American Slang, "high-maintenance" was popularized by “When Harry met Sally...”


1."high-maintenance" describes a system which requires a high degree of maintenance to ensure proper functioning and without which it is likely to break down.


2.(figuratively, of a person) Who requires 

a lot of attention.


...........................

Jun 17, 2021

'வைத்தி' நாகேஷ் - என்னா ஒரு வில்லத்தனம்

 என்னா ஒரு வில்லத்தனம். 


புதுமைப்பித்தன் சொல் திறன்.


மனித ஜென்மத்தை குறிப்பிடும்போது சுருக்கமாக ’இந்த இரண்டு கால் ஓநாய்’ என்பார்.

 

(ஜி.நாகராஜனின் நம்பிக்கையில்லா தீர்மானம் – மனுசன் மகத்தான சல்லிப்பயல்.)


தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி எனும் ரெண்டு கால் ஓநாயாக வரும் நாகேஷ் ஆசுவாசம்

“ அப்பாடா, மைனர் போயிட்டாரேன்னு பக்குன்னு ஆயிடுச்சு, மிட்டாதார் கெடச்சவுன்னே ஜில்லுன்னு ஆயிடுச்சு.”

மகாராஜா நம்பியாரை பார்த்து விட்டு நாகேஷ்

“பெரிய தலப்பாவா கிடச்சிருக்கான்”


வைத்தி கேரக்டர் நாகேஷின் நகாசு வேலையில் நேர்த்தியாக நெய்யப்பட்டிருந்தது. Vaithi planned ruthlessly to cope with his clumsy world.

(மாமாக்காரப்பயன்னு போட்டு உடைச்சிற வேண்டியது தானேய்யா)

எச்சிக்கலை வைத்தி கேரக்டர் வில்லத்தனம்  பற்றி விளக்கமா சொல்ல கொஞ்சம் கடுமை காட்ட வேண்டும். 

கழுதை பொச்சுல வடியிற தேன கூட நக்குறவன் தான் தில்லானா மோகனாம்பாள் வைத்தி.


என்னா ஒரு வில்லத்தனம்!


கலைக் கோவில் 1964ம் வருடம் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளி வந்த படம்.

இதற்கு முன் ‘காதலிக்க நேரமில்லை’ அதே வருடம் சக்கை போடு போட்ட படம்.

கலைக் கோவில் படுதோல்வியடைந்த படம்.

இருபத்தி ஆறு நாளில் எடுக்கப்பட்டதாம்.

பாலமுரளி கிருஷ்ணாவின் ‘தங்கரதம் வந்தது வீதியிலே’ பி.பி.எஸ் “ முள்ளில் ரோஜா” “நான் உன்னை சேர்ந்த செல்வம்” பாடல்கள்.

”தேவியர் இருவர் முருகனுக்கு”


இன்ஸ்பெக்டர் சாந்தாவுக்கு ’வரவேண்டும் ஒரு பொழுது, வராமலிருந்தால் சுவை தெரியாது’ கிளப் டான்ஸ். நாகேஷுடன் சர்வர் சுந்தரம் படத்தில் ’அவளுக்கென்ன அழகிய முகம்’ பாடலில் கலக்கிய இன்ஸ்பெக்டர் சாந்தா.




சிட்டிபாபுவின் வீணை.

முத்துராமன் ரோலை செய்ய வீணை பாலசந்தர் ஆசைப்பட்டிருக்கிறார். ஸ்ரீதர் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் சிட்டிபாபுவின் வீணை படத்தில் இசை பொழிந்தது.



கலைக் கோவில் சுப்பு பாத்திரம் நாகேஷுக்கு.

”லோகம்னு இருந்தா துரோகம்னு இருக்கத்தான் இருக்கும். ஏன்டாப்பா முதல் முதல்ல உங்கிட்ட அவள அறிமுகப் படுத்தும் போது நளாயினின்னா சொன்னேன்”


நாகேஷின் கலைக் கோவில் சுப்பு பாத்திரம் 

அதன் பின்னர் நான்கு வருடங்களில் ஏ.பி.நாகராஜனின் தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாகேஷ் செய்த வைத்தி மாஸ்டர்பீஸ் ரோலுக்கு அண்ணன்.


இரண்டு கதாபாத்திரமும் ஒன்றே எனும் அளவுக்கு ஒற்றுமை.

எஸ்.வி.சுப்பையா, முத்துராமன், ராஜஸ்ரீ, சந்திரகாந்தா, வி.கோபாலகிருஷ்ணன் யாரும் ஜொலிக்கவில்லை.

சுப்பையா, முத்துராமன் தூங்கு மூஞ்சித்தனமாக நடிப்பு.

நாகேஷ் மட்டும் அமர்க்களம். என்ன ஒரு Form!

 இந்த படம் ஓடியிருந்தால் வைத்தி பாத்திரம் சுப்புவின் காப்பி என்று கூட சொல்லியிருந்திருப்பார்கள்.

“இந்த வைத்தி இல்லன்னா இந்த லோகத்தில நல்லதும் நடக்காது..கெட்டதும் நடக்காது.”

’கலைக் கோவில்’ தயாரிப்பாளர்களில் ஒருவரான எம்.எஸ்.வி இசை பிரமாதம். அந்த அளவுக்கு ஸ்ரீதர் அவ்வளவாக மெனக்கிடவில்லை. தண்டவாளத்தை விட்டு தடம்புரண்ட மாதிரி இயக்கம்.

Jun 16, 2021

சாமியார் யார்? போலி சாமியார் யார்?


" சாமியார் என்பவர் மொதல்ல 

சாமியார் மட்டுமே தான். 

மாட்டிக்கிட்டா தான் 'போலி'  சாமியார்." 

இப்படி மறைந்த விஸ்வேஸ்வரம் ( சிட்டியின் மூத்த மகன்) சொன்னதை 

2008ல் நான் ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

Jun 14, 2021

கூத்துப்பட்டறை நடிகர் பசுபதி

 


2016ல் கூத்துப்பட்டறைக்கு  ந,முத்துசாமி சாரை பார்க்க நடிகர் பசுபதி வந்திருந்தார். அவருடைய மனைவியும் உடன் வந்திருந்தார்.

புதிதாக மூன்று நாட்களுக்கு முன் தத்து எடுத்திருந்த மராட்டி பெண் குழந்தையை முத்துசாமி சாரிடம் 

காட்டி ஆசி பெறுவதற்காக. மூன்றரை வயது குழந்தை. 


பசுபதி பற்றி முத்துசாமி சார் நிறைய சொல்வார்.                          

  பதினேழு ஆண்டுகள் கூத்துப்பட்டறையின் 

நடிகராக இருந்தவர் பசுபதி. 

எங்கே ட்ரெயினிங் அனுப்பினாலும் 

உடனே சென்று வருவார்.


2017ல்  மயிலாப்பூர் கற்பகம் ஹோட்டல் வளாகத்தில் நடிகர் பசுபதியின் குழந்தைக்கு 

பிறந்தநாள் விழாவுக்கு முத்துசாமி, நடேஷ், பேராசிரியர் ரவீந்திரன் மற்றும் நான் போயிருந்தோம். 


எனக்கு ஒரு பழைய நினைவு.

 1989ல் கற்பகம் ஹோட்டலில்

 நான் தங்கியிருந்த போது என்னை சந்திக்க பிரமிள், அப்புறம் ஜெயந்தன் இருவரும் வந்த விஷயம். 

இதைப்பற்றி  எழுதிய கட்டுரை 

இப்போது "மணல் கோடுகளாய் "நூலில் கடைசியில் இடம் பெற்றிருக்கிறது. 


 அப்புறம் முத்துசாமி இறந்த போதும், 

குஞ்சலி மாமி இறந்த போதும் பசுபதி கூத்துப்பட்டறைக்கு வந்திருந்தார். 


நடிகர் சங்க தேர்தலில்

 அரசியல்வாதி கராத்தே தியாகராஜனும்

 ஓட்டு போட்டதைப் பற்றி உரையாடும் போது பசுபதி சொன்னார்.


ஆமாம்  கராத்தே தியாகராஜன் 

நடிகர் சங்க உறுப்பினர். திரைப்படங்களிலும் நடித்திருக்கிறாராம். 

எந்த படம் என்று கேட்க கூடாது. 

நக்கீரன் தொடரில் கூட நடிகர் கராத்தே தியாகராஜன் பற்றி குறிப்பிட்டு 

ராதா ரவி எழுதியிருந்தார்.


...

Jun 11, 2021

கொண்டாடி கொடமுடைச்சி

 ஊரும் உலகமும் சேர்ந்து ஒருவரை புனிதர் ஆக்கி கொண்டாடி கொடமுடைச்சி.. 


 Reputation is an idle and most false imposition, oft got without merit and lost without deserving.

- Shakespeare in ‘Othello’


திருச்சி செயிண்ட் ஜோசப்ஸில் எழுத்தாளர் சுஜாதாவின் க்ளாஸ்மேட் தான் அப்துல் கலாம். 

கலாமின் புகழ் அவர் தகுதிக்கு ரொம்ப அதிகம் என்பதாக சுஜாதாவே அவருடைய பாணியில் மேலோட்டமாக, கொஞ்சம் பூடகமாக ஒரு முறை குறிப்பிட்டிருக்கிறார். ’மிகையான புகழ்’. ஊதிப்பெருக்க வைக்கப்பட்ட பிராபல்யம். அப்போதும் அதை எவரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. சகா பற்றிய புகைச்சல், பொறாமை என்று நினைத்தவர்கள் கூட இருந்திருக்கலாம் தான்.


......


“மறுதுறை மூட்டம்” நூலில் நாகார்ஜுனன் சொல்வது: 


” தமிழ் நாட்டில் பிறந்து எஞ்ஜினியரான ஒருவர் இந்திய அரசின் ஏவுகணைப் பரிசோதனைகளில் ஈடுபட்டபோது, அவர் செல்லும் திசையை ’அக்னி’ பற்றிய என் கட்டுரையில் கணித்து எழுதினேன். அணுகுண்டு பரிசோதனை நடத்தியதில் பங்கேற்ற ஒரு technician என்ற நிலையில் இருந்த அவரை எல்லோரும் விஞ்ஞானியாக்கி விட்டார்கள்! இப்படி அவர் குடியரசுத் தலைவராகவே மாறினார். ஓய்வு பெற்றும் அணுமின்சக்தி வேண்டுமென்று சாகும்வரை பிரச்சாரம் செய்தார். தமிழ்நாட்டில் உள்ளவை மட்டுமின்றி இந்தியாவில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் அவர் ஹீரோ….இப்போது கடற்கரைச் சாலை ம்யூஸியத்தில் பங்கேற்கப் போகிறார். சில வேளையில் அவரைப் பார்த்த போது ஜெர்மனியின் Pied piper of Hamlin கதை வேறு நினைவில் வந்து தொலைத்தது…”


(1.the hero of a German folk legend, popularized in The Pied Piper of Hamelin (1842) by Robert Browning. 2. (sometimes lowercase) a person who induces others to follow or imitate him or her, especially by means of false or extravagant promises.)


.....

Jun 10, 2021

பேராசிரியர் டாக்டர் செ.ரவீந்திரன்

 பேராசிரியர் டாக்டர் செ. ரவீந்திரன் தன் பெயரை              ஐம்பது வருடங்களுக்கு முன்பு

 "இரவீந்திரன்" 

என்று தான் எப்போதுமே குறிப்பிட்டு, எழுதியும் வந்திருந்திருக்கிறார். 


தமிழ் படிக்க வந்த ஒரு அமெரிக்க பெண் 

"இரவு இந்திரன்" என்று ஸ்பஷ்டமாக உச்சரித்திருக்கிறார். 


அப்புறம் தான் 'ரவீந்திரன்' ஆகியிருக்கிறார். 


பேசும்போது புன்னகையுடன் 

இப்படி அள்ளி தெளித்துக் கொண்டே இருப்பார். 


அந்த காலத்தில இவருக்கு பல பெரும்புலவர்கள் எதிரிகளானார்கள். 

இவர் மீது தாக்குதல் நடத்த முயற்சி நடந்ததுண்டு.


பேராசிரியர் செ.ரவீந்திரன் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்று பாண்டிச்சேரியில் வசித்து வருகிறார்.


அவரை முதலில் 

சந்தித்த போது எனக்கு 

ஐன்ஸ்டீன் ஞாபகமும் வந்தது.

 டி.கே.சி ஞாபகமும் வந்தது.

 ரவீந்திரனின் கண்கள் சிரிக்கிறது. 

புருவம் சிரிக்கிறது. மீசை சிரிக்கிறது. 

அவரது தலை முடி சிரிக்கிறது.


ந. முத்துசாமியின் மூத்த மகன் 

ஓவியர் மு. நடேஷுக்கு எத்தனையோ குருநாதர்கள். 

நாடக மேடை ஒளியமைப்புக்கு குரு 

செ.ரவீந்திரன் தான். 


 ” 'நீராகாராம்'அருந்திக்கொண்டிருக்கிறேன்"

என்று செல்பேசியில் அவர் சொன்ன போது முதலில் புரியவில்லை. 


”மது”வைத் தான் ”நீராகாரம்” என்கிறார். 

 ”நீரின்றி அமையாது உலகு” என்றார்.

 

அவரைப்பொறுத்தவரை

 “When your pocket and body permit,

 you can go on drinking”


.... 



Jun 9, 2021

ஹாலிவுட் நடிகர் சித்தார்த் தனஞ்செய்

 நம்பியின் தம்பி பேரன் சித்தார்த் தனஞ்செய்


தமிழின் முக்கிய எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் தம்பி கிருஷ்ணன் வெங்கடாசலம். 

‘பயாஸ்கோப்’ என்று சிறப்பான ஒரு நூல் எழுதியிருக்கிறார். ஐம்பது பழைய திரைப்படங்கள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்.

 இன்னொரு சிறிய நூல் ’மாயலோகத்தில் சினிமாவுக்குப் போன சில படைப்பாளிகள்.’


இவருடைய ஒரு பேரன் சித்தார்த் தனஞ்செய்.


ஹாலிவுட் படங்களில் நடித்த இந்திய நடிகர்கள் என்றால் ஐ.எஸ்.ஜோஹர், கபீர் பேடி போன்ற நடிகர்கள் உடனே நினைவுக்கு வருவார்கள்.


காந்தி படத்தில் நிறைய இந்திய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

ரோஹினி ஹட்டங்காடி, சயீத் ஜாஃப்ரி, ஓம்பூரி,அம்ரீஷ் பூரி, ரோஷன் சேத்.

பென் கிங்க்ஸ்லி கூட ஆங்கிலோ இந்தியன்? இவருடைய அப்பா ஒரு குஜராத்தி.


ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் அனில் கபூர் உட்பட இந்திய நடிகர்கள்.


ஆங்கில படங்களில் நடிப்பது என்பது ஒரு ஸ்டேட்டஸ். ஜெயலலிதா ஆங்கிலப்படம் ஒன்றில் நடித்தார். சிவாஜி மகன் பிரபு ஆங்கிலப்படமொன்றில் நடித்தார் என்றெல்லாம் சொல்லப்படுவதுண்டு. அவையெல்லாம் ஹாலிவுட் படங்களல்ல.


கிருஷ்ணன் வெங்கடாச்சலத்தின் பேரன் சித்தார்த் தனஞ்செய் இப்போது அமெரிக்க நடிகர். ராப் பாடகர்.

இவர் ராப் பாடல்கள் அமெரிக்காவில் பிரபலமாகியதால் ஹாலிவுட்டில்  ’பேட்டி கேக்ஸ்’ படத்தில் 2017ல் நடித்திருக்கிறார்.


ஹாலிவுட் படங்களில் தலை காட்டுவது பெரிய விஷயமா? பேட்டி கேக்ஸில் சித்தார்த் தனஞ்செய் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது தான் சிறப்பு.


‘Dhananjay the first’ என்று ராப் பாடல்களை யூட்யுபில் பார்க்கமுடியும்.


Patti Cake$  கேன்ஸ் ஃபெஸ்டிவலுக்கு அனுப்பப்பட்ட படம். சன்டேன்ஸ் ஃபெஸ்டிவலில் பங்கு பெற்றபடம். Musical movie.


ஒரு தமிழ் நடிகர் ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார் என்பது சந்தோஷமான விஷயம்.


Vin Diesel நடித்த  BLOOD SHOT என்கிற படத்திலும் சொல்லும் படியான ஒரு முக்கிய பாத்திரத்தில் சித்தார்த் தனஞ்செய் நடித்திருக்கிறார். 


http://rprajanayahem.blogspot.com/2019/04/funny-and-wacky-isjohar.html


http://rprajanayahem.blogspot.com/2019/05/blog-post_30.html


http://rprajanayahem.blogspot.com/2013/02/blog-post.html   


http://rprajanayahem.blogspot.com/2019/04/blog-post_10.html                                                                                

Jun 8, 2021

புலி வால்

எழுத்தாளரோட மகன் ஒர்த்தன் 

"எங்கப்பாவ படிக்கிற. அவரப் பத்தி எவ்வளவோ எழுதுற. நான் எழுதுனத ஏன்டா படிச்சு என்னய பத்தி எழுத மாட்டேன்ற? "ன்னு

 என் கிட்ட கடும் பகையாயிட்டான்.

நடிகையர் திலகம் சாவித்திரி பற்றி நான் குமுதத்தில் எழுதியதை படித்து விட்டு, 

"என்னய பத்தி எழுதுங்க "ன்னு அனத்துன 

ஒரு பிரபல எழுத்து பிராணி கூட உண்டு.



புலி வால்


ஃபேஸ்புக் ஃப்ரண்ட்ஸ் லிஸ்ட் ஐயாயிரம் தாண்டி இன்று இரண்டு வருடமாகிறது. (ஜூன் 2019). 


யோசிக்காம  கையில் அகப்பட்டவர்களை அன்ஃப்ரண்ட் செய்து கொண்டு இருக்கும் போதே தினமும் புது ஃப்ரண்ட் ரிக்வஸட் வந்து கொண்டே தான் இருக்கிறது. 

களையெடுக்கும் போது பயிரும் அடி வாங்குவது நடக்காமலிருக்குமா? 


ஐயாயிரம் மீ்ண்டும் மீண்டும் நிரம்பி வழிகிறது. 


போன வாரம் அன்ஃப்ரண்ட் செய்யும் போது  Stress. 


ஐயாயிரம் ஃப்ரண்ட்ஸ் ல நாலாயிரத்து தொள்ளாயிரம் பேர் யாரென்றே தெரியாது. இவர்களில் பெரும் பகுதி dead account என்பதும் தெரிந்தது தானே. 


கணக்கிலடங்காத முகவர்களை block செய்தாகி விட்டது. 


மீண்டும் மீண்டும் ஐயாயிரம் லிஸ்டில் வந்து விடுகிறது.


 ஃப்ரண்ட் லிஸ்ட்டில் இல்லாதவர்கள் பலர் 

என்னை வாசிக்கிறார்கள். சிலர் கமெண்ட் போடவும் செய்கிறார்கள். 


ஃப்ரண்ட் லிஸ்டில் இருப்பவர்களிலும்

 லைக் கொடுக்காமல்,

 கமெண்ட் போடாமல் 

வாசிக்கிறவர்கள் இருக்கிறார்கள். 

படிக்காமலே லைக் கொடுக்கிறவர்கள் கூட. 


 ஃபேஸ்புக்கில் என்னை மட்டுமே படிக்கும்

 சிலர் உண்டு.  ஒவ்வொரு பதிவு பற்றியும் சொல்வார்கள். லைக் கொடுப்பதில்லை. 

ஏன் லைக் கொடுக்கவில்லை, கமெண்ட் போடுவதில்லை என்று நான் கேட்டதேயில்லை.

என்னுடைய மிகச்சிறந்த வாசகர்கள் சிலர் கமெண்ட், லைக் ஒரு தடவை கூட போட்டதேயில்லை தெரியுமா? 

என் ஃப்ரண்ட் லிஸ்டிலும் அவர்கள் கிடையாது. 

 சிலர் இங்கே படித்து விட்டு வாட்ஸ் அப்பில் கமெண்ட் போடுவார்கள். 

பதிவு போட்ட அந்த சில நிமிடங்களில் படிப்பவர்களை அறிவேன்.


எனக்கு லைக், கமெண்ட் தேவையில்லை என்று   இரண்டு ஸ்டேட்டஸாக 

கடந்த ஐந்து வருடங்களில் போட்டிருக்கிறேன். 


ராஜநாயஹம் blog hit முப்பத்திரெண்டு லட்சத்தை நெருங்குகிறது . Blog 24 மணி நேரம் வாசிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில். 

ஃபேஸ்புக்கில் இல்லாதவர்கள் ப்ளாக்கில் தான் படிக்கிறார்கள். யாரும் அதுல பின்னூட்டம் செய்ய முடியாது. 


ட்விட்டரில் படிக்கிறார்கள்.


ஃபேஸ்புக் என்பதே 


புலி வால புடிச்ச கத.


தினமும் என் மொபைல் நம்பர் ஃபேஸ்புக் மெஸஞ்சர் பாக்ஸில் கேட்கிறார்கள். 

ஃபேஸ்புக் மெஸஞ்சர் மூலமாக கால் போட முயற்சிக்கிறார்கள். 


போன் போட்டவர்கள் ரெண்டு மணி நேரம் 

பேசி விட்டு 'சாரி சார், போன்ல சார்ஜ் போயிடுச்சி' 


தன் வலைத்தளத்தை படிக்க வேண்டும் என்று நூற்றுக்கணக்கில் கேட்கிறார்கள். 


வீடீயோ தினமும் அனுப்பி, அதை பார்க்கச் சொல்கிறார்கள். அபிப்ராயம் சொல்லவில்லை என்று சடைக்கிறார்கள். 


எழுத்தாளர்கள், கவிஞர்கள் தங்கள் புத்தகங்கள் 

அனுப்ப வேண்டி, விலாசம் கேட்கிறார்கள். 


'ராஜநாயஹம் நீங்க நல்லா எழுதுறீங்க. 

உங்க விலாசம் கொடுங்க. என்னோட அஞ்சு புத்தகங்கள அனுப்புறேன்.. '


புத்தகங்கள் அனுப்பியவர்கள் 'இன்னேரம் நொறுங்கியிருக்கணுமே' என்று 'ஏன் இன்னும் விமர்சனம் செய்யவில்லை' என்ற எரிச்சலில். 


ஏதோ, நான் கடன் வாங்கி விட்டாற் போல. 


ரொம்ப பெரிய எழுத்தாளர் மகன் ஒர்த்தன் 

 தான் எழுதியுள்ள  புத்தகங்கள

 ராஜநாயஹம் படிக்கலன்னு 

கடும் பகையாயிட்டான். 

ரொம்ப பெரிய எழுத்தாளர படிச்சதுக்கு இப்படியெல்லாம் தண்டனை. 

"எங்கப்பாவ படிச்ச. ஏன்டா நான் எழுதுனத படிக்க மாட்டேன்ற. என்னய பத்தி எழுத மாட்டேன்ற.. அயோக்யா. ஒன் கூட 'டூ'. போடா"ன்னுட்டான். 

நடிகையர் திலகம் சாவித்திரி பற்றி நான் குமுதத்தில் எழுதியதை படித்து விட்டு, 

"என்னய பத்தி எழுதுங்க "ன்னு அனத்துன 

ஒரு பிரபல எழுத்து பிராணி கூட உண்டு.


Internet magazines : 'எங்களுக்கு ஒரு ஆர்ட்டிக்கிள் எழுதியனுப்பவும். நீங்கள் புதிதாக எழுதியதாக இருக்க வேண்டும்.' 


தங்களின் எதிர்பார்ப்பை நான் ஈடேற்றாததால் 

வருத்தத்திலும் கோபத்திலும் வேறுவிதமாக வினையாற்றுகிறார்கள். 

எதிரிகளாகிறார்கள். 


'ராஜநாயஹம் தலக்கனம் பிடிச்ச ஆளு.' 


என் போராட்டமான வாழ்க்கை முறை, 

மற்றவர்கள் எதிர் பார்ப்புக்கு 

ஈடு கொடுக்கும் 

நிலையிலெல்லாம் இல்லை. 


இவர்கள் யாரையுமே' என்னை படியுங்கள் ' என்று நான் கேட்டதேயில்லை. 


எல்லோருமே என்னை படித்தவர்கள். 

பரஸ்பரம் வேண்டுகிறார்கள்.


ம்ஹூம். மாட்டேன், போ. 


..

Jun 6, 2021

கு. அழகிரிசாமி வேகாத வெந்தழல்

 புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி,

தொ. மு. சி. ரகுநாதன் மூன்று பேரும் பேசிக்கொண்டிருக்கும் போது புதுமைப்பித்தன் "தமிழ் நாட்டில் இன்று யாருக்கு ஐயா கதை எழுத வருகிறது, நம் மூன்று பேரைத் தவிர்த்து?" 

இப்படி சொல்லி விட்டு அரை நிமிட மௌனத்திற்கு பின் வாய் விட்டுச் சிரித்தவாறு தடாலடியாக சொன்னாராம் "நம் மூன்று பேர் என்று தாட்சண்யத்துக்காகத் தான் சொன்னேன். என்னைத் தவிர்த்து யார் கதை எழுதுகிறார்கள்?" 


கு. அழகிரிசாமி, ரகுநாதன், அங்கிருந்த இன்னும் இருவர் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்களாம்.

 அழகிரிசாமியே இதை 

கல்மிசமின்றி எழுதியிருக்கிறார். 


அழகிரிசாமி கதைகள் மீது பெரு மதிப்பு கொண்டிருந்தவர் புதுமைப்பித்தன். 

'வெந்தழலால் வேகாது' என்ற அழகிரிசாமி கதையை புதுமைப்பித்தன் தான்

 கலைமகள் பத்திரிகையில் வெளிவரச்செய்தவர்.              கு. அழகிரிசாமி பற்றி "என் எதிர்கால நம்பிக்கை" என்று புதுமைப்பித்தன் பெருமிதம் கொண்டிருந்தார். 

கு. அழகிரிசாமி கதைகளுக்கு பழ. அதியமான் எழுதிய முன்னுரையில் இப்படி பல விஷயங்களைச் சொல்கிறார். 


'வெந்தழலால்  வேகாது ' கதையில் 

நக்கீரன், நெற்றிக்கண் சுந்தரர் சமாச்சாரம்.

அகத்தியர், கபிலர், பரணர், தருமி எல்லாம் கதாபாத்திரங்கள். 1946ல் அழகிரிசாமி எழுதியிருக்கிறார். 


"பள்ளியறையிலே வைத்து ஒருவன்

 தன் மனைவியின் நகத்துக்குக் கூட 

இயற்கை மணம் இருக்கிறது என்று புகழலாம். அப்படிப்பட்ட விஷயங்களை பௌதிக சாஸ்திர உண்மையாக்கி விட சிவன் இவ்வளவு பயங்கரமான நடவடிக்கையைக் கைக்கொண்டது மிகவும் அருவருப்பாக இருக்கிறது " என்று பரணர் வயது முதிர்ந்த கபிலரிடம் சொல்கிறார். 


புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் ஆகியோர் எழுத்தை உயர்வாக கருதியவர் அழகிரிசாமி.

 மௌனி, லாசரா எழுத்து அவருக்கு பிடிக்காது. 

அழகிரிசாமி மகன் சாரங்கன் ஒரு சின்ன படம் மௌனி பற்றி எடுத்தார். Generation gap? 


105 சிறுகதைகள் எழுதியுள்ள அழகிரிசாமி 

ஒரு 35 கதைகள் என்ற அளவில் தான் கரிசல் மண்ணை வைத்து எழுதியிருக்கிறார். மற்ற கதைகள் அவருடைய பரந்து பட்ட அனுபவங்களின் சாரத்தில் விளைந்தவை. 


சிறுகதைகளில் சாதனை செய்தவர். அவர் எழுதியதாக நாவல்கள் வந்திருக்கின்றன. 

நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒரு பேராசிரியர் அந்த நாவல்களைப் பற்றி துடுக்காக "ஒரு வேளை அழகிரிசாமி மனைவி சீதாம்மா இந்த நாவல்களை எழுதியிருக்கிறாரோ, என்னமோ?" என்று என்னிடம் 

மதுரை மீனாட்சி நிலையத்தில் பேசும் போது சந்தேகம் தெரிவித்தார். 


அ.சீதா என்ற பெயரில் அழகிரிசாமி கட்டுரை எழுதியவர் தான். 


தி. ஜானகிராமன்  நாவல்களிலும் சாதித்தது போல அழகிரிசாமியால் சாதிக்க முடியவில்லை. 


..

சரவணன் மாணிக்கவாசகம் இன்று எழுதியுள்ள பதிவு

 சரவணன் மாணிக்கவாசகம் இன்று( 06..06.2021) 

எழுதியுள்ள பதிவு 


"தமிழில் எழுத்தாளன் விமர்சகனாகும் போது தன்னுடைய எழுத்துலக வாழ்க்கையின் வெற்றி தோல்விகளை சுமந்து கொண்டே மற்ற இலக்கியப்படைப்பை அணுகுகிறான். 90 சதவீதம் இப்படித்தான் இருக்கிறது. தன்னைவிட சாதனை புரிந்தவனைப் பற்றி எழுதுகையில், அவனது அந்தராத்மாவிற்கு அது தெரிகையில், வரும் பயம் தான் சாக்கடையை அந்தப்படைப்புகளில் வீசச்செய்கிறது. எழுத்தாளர்கள் தமிழ் இலக்கியம் குறித்து எழுதுவதை நம்பாதீர்கள். 

R. P. ராஜநாயஹம் போல வெகு நேர்மையாக எழுதுபவர் வெகுசிலர். அவர்களைத் தேடிப்பின் தொடருங்கள். 


அயல்நாட்டு இலக்கியத்தையும் வாசியுங்கள். இங்கே பீடத்தில் இருப்பவர் எல்லோரையும் நீங்கள் கல்லூரி சென்றபின் உங்களுக்கு ஒன்றாம்வகுப்பு எடுத்த ஆசிரியரைப் பார்ப்பது போல் பார்ப்பீர்கள். Happy reading."





சந்தம் தப்பாது, தாளம் தப்பாது

 சந்தம் தப்பாது


அந்த படத்தின் பூஜையோடு பாடல் பதிவு.

 நான் பாடல் ரெகர்ஸல் நடப்பதை பார்க்கிறேன்.                   எம் எஸ் விஸ்வநாதன் இசை. ஜானகி பாடலை

 பாடி பயிற்சி செய்துகொண்டிருக்கிறார். 

அந்த படத்தில் முதல் நாள். எனக்கு வாகினி ஸ்டூடியோ புதிது. சினிமா ஸ்டூடியோ அன்று தான் நுழைகிறேன். உதவி இயக்குனராக. 


பாடல் நகல்களை பார்க்கிறேன். நெருடுகிறது. 'சங்கம் தப்பாது தாளம் தப்பாது'

 என்ற முதல் வரி.

எம் எஸ் வி உற்சாகமாக ஜானகிக்கு ஆர்மோனியம் வாசித்தபடி சொல்லி தருகிறார். 

சத்தமாக " சங்கம் தப்பாது,தாளம் தப்பாது " பாடிக்காட்டுகிறார். ஜானகி அதை திருப்பி பாடுகிறார். கண்ணதாசன் பாட்டு. 


நான் அசோசியட் இயக்குனரை அழைத்து " முதல் வரி தப்பாயிருக்கிறது .அது 'சங்கம்' இல்லே. அது 'சந்தம்' " என்கிறேன். 

அவர் முறைக்கிறார். 'கண்ணதாசன் பாட்டுப்ப்பா '


நான் ' நகலெடுக்கும் போது 

தவறு நடந்திருக்கும்போல '


அவர் கோபமும் நம்பிக்கையின்மையுமாக 

'சும்மா இருப்பா '


வந்து முதல் நாளே புத்திசாலித்தனத்தை காட்டாதே என அர்த்தம். 


எம் எஸ் வி 'சங்கம் தப்பாது ' 

என பாடிக்காட்டி கொண்டிருந்தார்.

அவரை குற்றம் சொல்ல முடியாது. 

கண்ணதாசன் சொல்வார் " தம்பி விசுவநாதன் குழந்தை போல். ' ஊமை துரை வெள்ளைக்காரனா அண்ணே' ன்னு கேட்பான். இசை தவிர அவனுக்கு ஜெனரல் நாலேட்ஜ் எல்லாம் தெரியாது. "


நான் கொஞ்சம் தைரியமாக இன்னும் சிலரிடம் அந்த தவறை பிரஸ்தாபித்தேன்.


'சந்தம் தப்பாது , தாளம் தப்பாது என்ற வரி தவறுதலாக சங்கம் என்று எழுதப்பட்டு விட்டது .'


 இயக்குனர் பயங்கர பிசி. 

அவருடைய நண்பர் ரமணியிடம் 

இதை சொன்னேன். (இசையமைப்பாளராக இருந்து நடிகரான

 விஜய் ரமணி என்ற ராகவேந்தர்) 

அவர் இயக்குனரிடம் சொன்னார். 


தயாரிப்பாளர் ஹிண்டு ரங்கராஜன். 

கொஞ்ச நேரத்தில் கண்ணதாசன் வந்தார்.

அவர் "சந்தம் தப்பாது " என்பதை உறுதிபடுத்தினார். பின்னர் பாடல் பதிவு நடந்தது.


அப்போதுகூட அசோசியேட் இயக்குனர் 

என்னை முறைத்துகொண்டே தான்

 தவறை திருத்தினார். 


'சந்தம் தப்பாது, தாளம் தப்பாது 

சுகமான இவள் ஆடும் ஆட்டம் '

 ஜானகி பாட பதிவானது .


அதே மெட்டு அமைந்த வேறொரு பாடல் 

எம் எஸ் வி இசையில் பால சந்தர் படம் "வறுமையின் நிறம் சிவப்பு " படத்தில் அதே நேரத்தில் இடம் பெற்று அந்த பாடல் பிரபலமானது. 


"ரங்கா ரங்கையா " பாடல்

சொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும்

 சொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும் 

- R. P. ராஜநாயஹம் 


சந்தம் தப்பாது பாடல் பதிவான மறு நாள். 

எஸ். பி. பி, சுசிலா பாடிய பாடல் பதிவு.


எம். எஸ். வி இசையமைப்பது, 

தன் முதல் படம் போல ரொம்ப அனுபவித்து செய்வார். பரபரப்பு ரொம்ப காட்டுவார். 

பின்னணி பாடகர்களை பாட சொல்லி கேட்கும்போது சின்ன நடனமிடுவார். 

ஆர்கெஸ்ட்ரா ஆட்களை வேலை வாங்குவதை பார்ப்பதே ரொம்ப சுவையான அனுபவம். 


'டே தபேலா அடக்கி வாசி.'


" பாலு, இப்படி பாடு 

' ஆடட்டும் தோகைஎன்று பாடட்டும் மேகம் இன்று ' 


' தழைக்கும் சுகமே நம் கனவு ' -இப்படிப்பா '


கண்ணதாசன் பாடல். 


"சொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும்


அது எங்கெங்கோ பறந்து பறந்து சிரிக்கும்.


அடிக்கடி தேடி தேடி உலகெங்கும் ஓடியாடி சிரிப்பது காதலன்றோ?"


என்ற அந்த பாடல் பாடும்போது அவரிடம்

 எஸ். பி. பி, ஏன் சுசிலா கூட 

 திட்டு வாங்கினார்கள். 


"பிழைப்பு விஷயத்தில் மானம் பார்த்தால் குடும்பம் பாழாகி விடும் "-வள்ளுவர் வாக்கு. 


"மேளத்தின் பக்கம் ரெண்டு


தாளத்தில் ஓசை உண்டு


நடிப்பது உந்தன் கண்கள்


துடிப்பது எந்தன் கைகள்


இணைப்பது காதலன்றோ?"


'டே பாலு தேவைக்கு மேலே ஏன் ஹம்மிங் கொடுக்கிற? '

கோபத்தில் எம். எஸ். வி முகம் கடுகடு என்று

 சுண்டி விடும்.


"ஏம்மா சுசிலா ஏன் இந்த பாடு படுத்துறீங்க? 

நான் சொன்ன மாதிரி பாட முடியாதா? "


அருகில் நின்று கொண்டிருந்த ஹிந்து ரங்கராஜனிடம் சொன்னார் சத்தமாக

 ' ஜாலி ஆப்ரகாம் ன்னு ஒரு பையன். சங்கீதம் தெரியாது. ஆனா கேள்வி ஞானத்திலேயே நான் நினைக்கிறதை, சொல்றதை அப்படியே பாடுவான். இதுங்க எல்லாம் மண்டைகனம் பிடிச்சதுகள் "


 சுசிலாவை நேரடியாக இப்படி திட்டினார் .


அப்போது நடந்த ஒரு சம்பவம். பெக்கட்டி சிவராம் அந்த கூடத்திற்கு வந்தார்.

அவர் பிரபல கன்னட இயக்குனர். 

நடிகர் பிரசாந்துடைய அம்மாவின் தகப்பனார். அப்போது நடிகை ஜெயந்தியும் அவருடைய இரண்டாவது மனைவி. 


அவரை சந்தோசமாக ஹிந்து ரங்கராஜனிடம் எம் எஸ் வி அறிமுகப்படுத்தினார். 


'இவர் பெக்கட்டி சிவராம். 

பெரிய கன்னட டைரெக்டர் "


பெக்கட்டி சிவராம் படு தோரணையுடன் ஹிந்து ரங்கராஜனை நோக்கி " ஹலோ " என்று சொல்லியவாறு கைகுலுக்க கை நீட்டினார். 


ஹிந்து ரெங்கராஜன் பின்னால் கட்டிய கைகளை எடுக்கவே இல்லை. 

முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டார். 

பதிலுக்கு கைநீட்டவில்லை. வர்ஜனம். 


"சொந்தங்கள் திரும்ப திரும்ப பிறக்கும் " பாடல் ஒரு வழியாக நீண்ட நேரத்திற்கு பின் தான் பதிவானது. 


பாடல் பதிவு முடிந்து வெளியே வந்த போது சுசிலா                 வாய் விட்டு ஆயாசத்துடன் சொன்னார் :


"என் வாழ்க்கையில் இந்த பாடல் பாட கஷ்டப்பட்டது போல வேறு எந்த பாடலுக்கும் கஷ்டப்பட்டதில்லை. ஐயோ என் உயிரே போயிடுச்சு.. "


சொல்லும்போதே தன் காதுகளை இரு கைகளால் மூடிக்கொண்டார். 

கண்களையும் இமைகளால் மூடினார் சிறிது நேரம்.

முதல் தடுப்பூசி

 காடு, மலை, பென்னியோட வீடு.. 

ஆறு, பாறை, முதலையோட ஏரி.. 

காடு, வரையிற பாலம், 

கோட்டை, பென்னியோட குட்டி வீடுன்னு.. 

ஏரி, சுரங்கப் பாதை, வானவில்லுன்னு                            இங்க சென்னைக்கு வந்ததில இருந்து ஆறு வருஷமா ஒவ்வொரு விஷயத்துக்கும், ஒவ்வொரு எடம்             கண்டு பிடிக்க 

டோராவோட பயணங்கள் மாதிரி தான். 


தடுப்பூசி எப்படி போட்டுக் கொள்வது என்பது தலையாய பிரச்சினையாகி அதற்கான தேடலும் முயற்சியும் தொடர்ந்து தோல்வியடைந்து, 

பிரைவேட் ஹாஸ்பிடல்களில் விசாரித்தும் இல்லை என்றாகி போரூர்ல போடுறாங்க, வளசரவாக்கத்துல, ராமாவரத்தில

 முகாம் நடக்குது ன்னு காடு, ஆறு, மலைன்னு தாண்டி 

இங்கே நாங்க குடியிருக்கிற பெரும்பாக்கம் பகுதிக்கான பிரைமரி ஹெல்த் சென்ட்டர் மூலம் கன்ஃபர்மேசன் வந்து உடனே கேன்சலேசன் வந்த போது விரக்தி நிலை தான். 

என்ன செய்வது என்றே தெரியாத கண்ண கட்டி காட்டுல விட்ட கதை. 


இரண்டு நாட்களுக்கு முன்பு பெரும்பாக்கம் பஞ்சாயத்து கம்யூனிட்டி ஹாலில் தடுப்பூசி போடுகிறார்கள் என்று ஊர்ஜிதமாகாத செய்தி வந்த போது இந்த கம்யூனிட்டி ஹால் எங்க இருக்குன்னு டுவிட்டரில எல்லாம் விசாரிச்சப்ப 

work from home ல இருக்கிற மகன் அஷ்வத்துக்கு ஆஃபிஸில் இருந்து மெயில். 11.45 A. M. 

12 மணியிலிருந்து 4 மணி வரை தடுப்பூசி அஷ்வத் ஆஃபிஸிலேயே. 

வேலை மும்முரத்திலும் இந்த மெயில் கண்ணில் பட்டது அதிர்ஷ்டம். உடனே பக்கத்தில் ELCOTல் இருக்கிற அஷ்வத் வேலை பார்க்கிற அலுவலகத்தில் தடுப்பூசி First dose போட்டுக் கொண்டு விட்டோம்.

இனி அடுத்து 84 நாளில் அடுத்த second dose. 


மிக சிறப்பாக தடுப்பூசி போடுவதை நிர்வகித்திருந்தார்கள். It was a cakewalk. கூட்டமில்லாமல் இப்படி சுலபமாக இந்நிகழ்வு கண்ணியமான முறையில் மரியாதையுடன் நிறைவேறும் என்று நினைக்கவேயில்லை. Miracle just happened. 


For this relief, much thanks.

Jun 5, 2021

அண்ணையா - தம்புடு

 அண்ணையா பாலு - தம்புடு கமல் 


ஒரு டி. வி. நிகழ்ச்சியில் 


எஸ். பி. பாலசுப்பிரமணியம்,


 கமலுடன் கலந்து கொண்ட போது 


'கம்பன் ஏமாந்தான்' பல்லவியை பாடினார். 


கமல் அதற்கு நேர்த்தியாக உடன்  வாயசைத்தார். 


பாலு உணர்ச்சி வசப்பட்டு  சொன்னார். 


"The one and only actor, with whom 


I always feel comfortable when I sing "

ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே

 'உனக்கு மட்டும் உனக்கு மட்டும் 

ரகசியம் சொல்வேன். 

அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே' 

சுசிலா பாடிய பாடல்களில் பிடித்த ஒன்று. 

ஈ. வி. சரோஜாவுக்காகவும் தான். 

பொம்மையோடு பேசுவதென்பதே கவித்துவமானது.

'அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே' என்று பொம்மையிடம் மருகுவதில் இலக்கிய நயம்


https://m.youtube.com/watch?v=amzet82AHqY



Jun 3, 2021

"அரசியல் பிழைத்தோர்" சமர்ப்பணம் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு

 R. P. ராஜநாயஹம் "அரசியல் பிழைத்தோர்" 

சமர்ப்பணம் 


கடந்த காலங்களில் தமிழக அரசியலில் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் ஐந்து பேர். 


காமராஜர், அண்ணா, கருணாநிதி, 

எம். ஜி.ஆர், ஜெயலலிதா 


இவர்களில் கருணாநிதியின் விசேஷ  தனித்துவம் 

மற்ற நான்கு தலைவர்களுடனும் 

அரசியல் செய்தவர் என்பது தான். 


எழுபது ஆண்டு காலத்தைத் தாண்டிய  

தீவிர அரசியல் வாழ்வுக்கு 

சொந்தக்காரரான 

கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு 

இந்த நூல் சமர்ப்பணம்.

ராஜன் குறை பின்னூட்டத்திற்கு ராஜநாயஹம் பதில்

 ராஜன் குறை : ராஜநாயஹம், இவ்வளவு விஷயம் தெரிந்த நீங்கள் கூட "ஐம்பெரும் தலைவர்கள்" என்று எழுதுவது வியப்பாக இருக்கிறது. 

தி.மு.க வரலாற்றில் அப்படி ஒரு சொல்லாட்சிக்கு பொருள் கிடையாது. 

மும்முனை போராட்டத்தில் சென்னையில் நிகழ்ந்த மறியலுக்கு தலைவர்களாக அறிவிக்கப்பட்டு கைதான ஐவரை அப்படி ஒரு நாளிதழ் குறிப்பிட்டது; அவ்வளவுதான். அதே மூம்முனை போராட்டத்தில் கல்லக்குடியில் வரலாறு படைத்தவர் கலைஞர். தி.மு.க துவங்கியது முதல் கலைஞர் செய்த பங்களிப்பு இயல்பாகவே அவரை அண்ணாவிற்கு அடுத்த தலைவராக நிலைநிறுத்தியது. எழுத்து, பேச்சு, களப்பணி, கட்சி அமைப்பு உருவாக்கம், நாடகம், சினிமா என அவருடைய பன்முக ஆற்றலே, கடும் உ‌ழைப்பே அவரை தலைவராக்கியது. இதையெல்லாம் ஆதாரபூர்வமாகவே படித்தறிய முடியும். நன்றி.


R. P. ராஜநாயஹம் பதில் : ராஜன் குறை சார், 

2008 ல் இது எழுதப்பட்டது. 

கலைஞர் யோக்யதை என்பது 

இந்த ஐம்பெரும் தலைவர்கள் யாரும் நெருங்கவே முடியாதது என்பதை நான் declare செய்தவன். இதில் உள்ள ரிஸ்க் தெரிந்தும் அப்படி சொன்னவன். ஸ்தாபக தலைவரை விடவும் கலைஞர் மகத்தானவர் என்று தயக்கம் இல்லாமல் சொல்வேன். 


இந்த 'அரசியல் பிழைத்தோர்' நூலையே கலைஞருக்கே சமர்ப்பணம் செய்திருக்கிறேன். 


இந்த ஐம்பெரும் தலைவர்களில் 1950களிலேயே சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன், என். வி. நடராசன் ஆகியோர் யாருமே கலைஞர் என்ற மலைச்சிகரத்தின் பக்கத்தில் மடு போன்றவர்கள். 

'இந்த ஐம்பெரும் தலைவர்கள்' என்ற 'செத்த சொல்லாட்சி' யை ஊதிப்பெரிதாக்கியவர்கள் யாரெல்லாம் என்றால் 1969ல் காங்கிரஸாரும் 1973ல் அதிமுகவினரும் தான். (கலைஞர் முதல்வரான போதும், எம். ஜி.ஆர் கட்சி துவங்கிய போதும்) 

ஆனால் வரலாறை எழுதும் போது ஐம்பெரும் தலைவர்கள் என்ற வேடிக்கை பற்றி எப்படி குறிப்பிடாமல் இருக்க முடியும்

R. P. ராஜநாயஹம் பற்றி T. சௌந்தர்

 R.P.ராஜநாயஹம் பற்றி T. சௌந்தர் 

TSounthar Sounthar


கலை ஈடுபாடு ,பரந்தவாசிப்பு மட்டுமல்ல அரிய தகவல்கள் நிறைந்த சுவாரஸ்யமான ,ரசனைமிகுந்த, பல்துறை அனுபவ எழுத்துக்கு சொந்தக்காரர்.


புகைநுழையாத இடத்திலெல்லாம் புகுந்து வருவது போல ஆச்சர்ய அனுபவம் மிகும் எழுத்து.


அவர் வழி தனி வழி.


சில வருடங்களாக இவரது பதிவுகளை எப்போதும் மிகுந்த ஆர்வத்துடன் படித்து வருகிறேன். தோழர் யமுனா ராஜேந்திரன் தனது பதிவொன்றில்  "ராஜநாயஹம்   எழுத்தாளர்களின்  எழுத்தாளர் " என்று கூறியிருப்பது மிக உண்மை.


இன்று எனது முகநூல் நண்பராக இருப்பது

 பெரு மகிழ்ச்சி.


.. 

Jun 2, 2021

இன்னக்கி ரெண்டு விஷயம்

 கண்ணதாசன் பிறந்த சிறுகூடல் பட்டியில் 


 ஒரு இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் 

கவிஞருக்கு நடந்த விழாவில் பேசிய

 இளைய ராஜா 

"இளமையெல்லாம் வெறும் கனவு மயம்

அதில் மறைந்தது சிலகாலம் 

முடிவும் அறியாது, தெளிவும் புரியாது 

மயங்குது எதிர் காலம் "என்ற 

கண்ணதாசன் வரிகளைக் குறிப்பிட்டுப்

 பேசிய போது தேம்பியழுதார்.

... 



கமல் ஹாசன் மட்டும் கட்டாயம் சட்டசபைக்கு போயிருக்கனும். 

மனசு ஆறவே மாட்டேங்குது. 


சிவாஜி கணேசன் திருவையாறுல்ல தோத்தாரு. 

முப்பத்து ரெண்டு வருஷம் கழிச்சி 

கோவை தெற்குல அது போல ஒரு முக்கிய தோல்வி. 


திருவையாற விட இது பல மடங்கு சோகம். 


....