Share

Showing posts with label கமலஹாசன். Show all posts
Showing posts with label கமலஹாசன். Show all posts

Nov 11, 2016

குழந்தை நட்சத்திரம் கமல்



சென்ற வாரம் வெள்ளியன்று தினத்தந்தியில் ஏ.வி.எம் சரவணன் எழுதியதைப் படிக்க வாய்த்தது. டாக்டர் சாரா ராமச்சந்திரன் கமலை ஏவிஎம் வீட்டுக்கு கூட்டி வந்த போது, செட்டியார் பையனை மறு நாள் ஜெமினி சாவித்திரியிடம் காட்டச்சொன்ன விஷயத்தை குறிப்பிட்டிருக்கிறார்.
எனக்கு உடனே இதன் தொடர்ச்சி பற்றி ஜெமினி கணேசன் சொன்னதெல்லாம் நினைவில் வந்தது.



சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஜெமினியுடன் காரில் வந்து கொண்டிருக்கிறோம். “ பாட்டு பாடவா, பார்த்துப் பேசவா” பாடலைத் தொடர்ந்து
“ கண்களின் வார்த்தைகள் புரியாதோ, காத்திருப்பேன் என்று தெரியாதோ” பாடல் காரில் இருந்த டேப் ரிக்கார்டரில் ஒலித்த போது உற்சாகமாக “ சாவித்திரி படம்!” என்றார்.
”இதற்கு மியூசிக் யாருன்னு மறந்து போச்சே”
நான் உடனே நினைவு படுத்தினேன். “சுதர்ஸனம்”
அவருக்கு இன்னொரு விஷயம் கூட ஞாபகமில்லை. தேவரின் ”வாழ வைத்த தெய்வம்” படத்தில் சிலம்புச் சண்டை பற்றி பேச்சு வந்தது. அந்தப் படத்தில் ஜெமினிக்கு அப்பாவாக நடித்தவர் எஸ்.வி. சுப்பையா. இதை நான் சொன்ன போது கொஞ்சம் யோசித்து விட்டு தலையை ஆட்டினார்.“ அப்படியா! ஞாபகமில்ல…மறந்துடுச்சி..”


“ கண்களின் வார்த்தைகள் புரியாதோ” பாட்டு ஷூட்டிங் போது தான் கமல் வந்தான். அவனோட அண்ணா சந்திர ஹாசன்னு ஒர்த்தன். அவன் தான் இவன கூட்டிண்டு வந்திருந்தான். சாவித்திரி உடனே கமல தூக்கிக் கொஞ்சினா. நான் பிள்ளையாண்டான தூக்கி கொஞ்சினேன். விளையாண்டேன். முன்னால ’யார் பையன்’ல நடிச்ச டெய்சி இரானிக்கு பதிலா இந்த பையன படத்தில போடலாமான்னு செட்டியாருக்கு ஒரு யோசனை. ஏவிஎம் செட்டியார் சொன்னார்: ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் பையன பிடிச்சிப்போச்சி. இவனயே களத்தூர் கண்ணம்மாவில குழந்தையா நடிக்க வச்சுடலாம்!”









சந்திர ஹாசனை நான் திருச்சியில் சந்தித்த போதினில் ஜெமினி சொன்ன இந்த விஷயம் பற்றி சொல்லியிருக்கிறேன்.



கமல் தொடர்ந்து “ பார்த்தால் பசி தீரும்”,” பாதகாணிக்கை”. ”வானம்பாடி”, ”ஆனந்த ஜோதி” ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரம்.



அப்புறம் ”மாணவன்”!
” விசிலடிச்சான் குஞ்சிகளா, குஞ்சிகளா! வெம்பி பழுத்த பிஞ்சிகளா, பிஞ்சிகளா!” பாடல் காட்சியில் குட்டி பத்மினியுடன்!
…………………………………………………………………

http://rprajanayahem.blogspot.in/…/left-handed-compliment.h…

http://rprajanayahem.blogspot.in/…/loose-words-are-gold-coi…

http://rprajanayahem.blogspot.in/2012/08/blog-post_2678.html

http://rprajanayahem.blogspot.in/2016/06/blog-post_4.html

http://rprajanayahem.blogspot.in/2016/11/blog-post_4.html


Nov 4, 2016

கமல் ஹாசனின் சொந்த வாழ்க்கை


ஒரே விஷயம் ( ஒரு மாநிலம்?) குறித்து இருவேறு அபிப்ராயங்கள்.
கமல் ஹாசன் தான் ஓய்வு பெற்ற பின் வாழ விரும்பும் பூமி என்று குறிப்பிட்டது கேரளாவை தான். அமைதியும் நிம்மதியும் அங்கு தான் தனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை.
நான்கு வருடங்களுக்கு முன் மோகன்லால் ஸ்டேட்மெண்ட்
“ கேரளாவில் வசிப்பதற்கே எனக்கு தயக்கமாகவும் அச்சமாகவும் உள்ளது. பைத்தியக்காரர்களின் மாநிலமாக கேரளா மாறி வருகிறதோ என தோன்றுகிறது.”
Opinion differs.
கமல் பற்றி பேச இன்று வேறு ஏதுமில்லையா?

கே.பாலச்சந்தரின் ’அவர்கள்’ படத்தில் கமல் அன்று பேசிய வசனம். நடிகை சுஜாதாவிடம் உருக்கமாக, கலக்கத்துடன் ஏங்கி சொல்வார்: ’’சிலருக்கு வாழ்க்கையில ’கல்யாண பாக்யம்’ கிடையாதுங்க’’

வாணி இவரை விட்டுப் பிரிந்த போது சாருஹாசன் ஒரு வட நாட்டு ஆங்கிலப் பத்திரிக்கைக்கு கொடுத்த பேட்டி : “My brother Kamal is always promiscous.”
சாரு ஹாசன், சுஹாசினி இருவரும் வாணியை விட்டுப் பிரிந்ததை சிலாகிக்கவில்லை. Their sympathy and solidarity were with Vani.இதனால் மூத்த சகோதரருடன் மனஸ்தாபம் தான். சுஹாசினி வெறுப்போடு சரிகா பற்றி பேசி அது பத்திரிக்கையொன்றில் வந்திருந்தது.


பெரும்பாலும் ஆண்களுக்கு மூன்றாவது புருஷார்த்தத்தில் எப்போதுமே மிகுந்த வேகம் உண்டு.
”ஒரு தார மரபு என்பது நம் கலாச்சாரத்திலேயே கிடையாது.
நம்முடைய தெய்வங்களே அதற்கு உதாரணம்” என்று எழுத்தாளர் பாலகுமாரன் தன் இரண்டாவது திருமணத்திற்கு காரணம் சொன்னதுண்டு.

ஒரு திரைப்பட நடிகனின் வாழ்வு எப்போதும் Erotic ஆனது.
கமலால் எப்போதுமே ’ஒக்க மாட்ட ஒக்க பாணம் ஒக்க பத்னி’ கண்ணியமெல்லாம் காட்ட முடியாத நிலை. அதனால் தான் இன்று கௌதமி பிரிவுக்கும் காரணம் முதிர்ந்த நடிகரின் புதிய காதல் தான் என்று ஒரு வதந்தியும் உழவும் சூழல்.

எவ்வளவோ கதாநாயகிகள் இந்த இளைய நடிகருக்காக அன்று ஏங்கிய போது
குட்டி பத்மினி சொன்ன வார்த்தைகள் : ” கமல் கழுவுகிற மீனில் நழுவுகிற மீன். அவன் யார் கையிலும் சிக்க மாட்டான்.”

பாரதிராஜா கதாநாயக பஞ்சம் பற்றி சலித்துப் போய் சொன்னார்.: ”தமிழ் திரையுலகின் துரதிர்ஷ்டம். இங்கே கமல் ஹாசன் ஒருவன் தான் அழகான ஒரே நடிகன்.”

மண வாழ்வு விஷயத்தில் உஷார் பேர்வழி. ” உறவுகள் எனக்கென இருந்தது தான். கனவுகள் பாதியில் கலைந்தது தான்.”

Once bitten, twice shy. அதனால் தான் இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை சரிகாவுக்கு மனைவி அந்தஸ்து கொடுக்கவில்லை. அப்படியிருந்தும் வேர்த்து விறுவிறுத்துப் போய் பிரியத்தான் வேண்டியிருந்தது.

அதனால் தான் ரொம்ப பிரமாதமான முன் ஜாக்கிரதையுடன் கௌதமிக்கு திருமண அந்தஸ்தே தரவேயில்லை. கௌதமிக்கு குழந்தையும் இவருக்கு பிறக்கவில்லை.

தன் ஒரே மகள் வாழ்க்கைக்காகத்தான் இந்த முடிவு என்று கௌதமி பிரகடனம். Lame Excuse! பதிமூன்று வருடங்களுக்குப் பின் இந்த ஞானம்! பாபநாசம்??

’பாரத ரத்னா’ விருது பெற தகுதியுள்ள ஒரே இந்தியத் திரைப்பட நடிகனின் சொந்த வாழ்க்கை பலருக்கும் ’அவல்’ ஆகிப்போன அவலம். கலாச்சாரம், பண்பாடு கூப்பாடு……


சாதனைப்பயணம் திரையில் தொடர்வதில் எந்த தடை இருக்கிறது?
…………………………………………………………………………

http://rprajanayahem.blogspot.in/2013/01/blog-post_24.html

http://rprajanayahem.blogspot.in/…/loose-words-are-gold-coi…

http://rprajanayahem.blogspot.in/2016/06/blog-post_4.html






Sep 14, 2008

ஜெயகாந்தனின் பயம்!

ஜெயகாந்தன் பாவம் ஒரு விஷயத்திற்காக ரொம்ப பயந்திருக்கிறார் . தசாவதாரம் பார்த்து விட்டு கமல் ஹாசனிடம் தன்னுடைய கலக்கத்தை வெளியிட்டிருக்கிறார் .
" படம் ஓடுமா ? ஏன்னா எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு . அதனால் தான் பயமா இருக்கு . ஏன்னா எனக்கு பிடிச்ச படம் ஓடாது ."
ஜெயகாந்தன் கவலை, பயம் எல்லாம் இப்ப இப்படி தானே ? காஞ்சி சங்கர மட கௌரவத்தை காப்பாத்த " ஹர ஹர சங்கர '' எழுதி தவிச்சவர் ....
சமீபத்தில் கருணாநிதி முன் கூழை கும்பிடு , ஏழை சிரிப்பு , கோழை பவ்யம் எல்லாம் காட்டி இவர் நிற்கும் காட்சியை செய்தித்தாளில் பார்க்க முடிந்தது .
நீர்த்து போனது கூட பரவாயில்லை . மத்திய வயதிலேயே இவருடைய எழுத்து குருவி முட்டையை தான் போட்டது .
ஆனால் இப்படி தசாவதாரம் வசூல் பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்கும்படி ஆகிவிட்டதே !
கமல் அதற்கு பதிலாக 'சித்தாள் எல்லாம் பாக்க வர்றாங்க . எம்ஜியார் படத்துக்கு கூட்டம் வர்ற மாதிரி வர்றாங்க' என்று சொல்லி ஜெயகாந்தனை தேற்றி ஆறுதல் சொல்லியிருக்கிறார் .
ஜெயகாந்தனும் எம்ஜியார் பட ரசனை உள்ளவர் தான் , எம்ஜியார் ரசிகனின் தரத்தை சேர்ந்தவர் என்பதை தெளிவாக சொல்லி ஜெய காந்தன் 'சினிமாவுக்கு போன சித்தாளு ' குறுநாவலை எந்த காரணத்திற்கு எழுதினார் என்பதையே பகடி செய்து விட்டார் கமல்.
எம்ஜியார் படங்கள் எப்படி கலாச்சார சீரழிவுக்கு வழி வகுத்தன என்பதை பேசிய நாவல் '. சினிமாவுக்கு போன சித்தாளு '. தமிழ் வர்த்தக சினிமாவையும் எம்ஜியாரையும் கடுமையாக விமர்சித்த நாவல் .
வரலாற்றின் குரங்குத்தனம் !

There is no salvation in becoming adapted to a world which is crazy.
--Henry Miller.