Share

Showing posts with label ஆதவன். Show all posts
Showing posts with label ஆதவன். Show all posts

Oct 7, 2020

காலத்தை எதிர்த்து நீச்சு போடும் தி. ஜா

 தி. ஜானகிராமன் பற்றி ஆதவன் 

"புராதன இலக்கியக் கலை வடிவங்களுக்கும் நவீன இலக்கியக் கோட்பாடுகளுக்குமிடையே ஓர் ஒருங்கிணைப்பை உருவாக்க முயலும் நுட்பமான பரிசோதனைகளாக அவருடைய படைப்புகளில் பல எனக்குத் தோன்றுகின்றன. 

அதாவது இன்றையத் தேவைகளுக்கேற்ற 

ஓர் இந்திய இலக்கிய பாரம்பரியத் தொடர்ச்சியை இனம் கண்டு நிறுவும் முயற்சிகளாக. "


தி. ஜா இறந்த போது 'கணையாழி'யில் 

இப்படி ஆதவன் எழுதியிருந்தார். 


இதை 1989ல் ஜானகிராமனுக்கு நான் வெளியிட்டிருந்த நினைவு மதிப்பீட்டு மடலில் இணைத்திருந்தேன். 


ஆதவன் அப்போது இல்லை.

 1987ல் யதார்த்தமாகவே அவரை 

காலவெள்ளம் அடித்துக் கொண்டு போய் விட்டது. 


அந்த கணையாழி இரங்கலில்

 இன்னும் சில வார்த்தைகள் கூட சொல்லியிருந்தார். 

பசுமரத்தாணி போல பதிந்து விட்ட ஒரு வரி :

" ஜானகிராமன் என்ற மனிதர் பற்றியும் பேசத் தோன்றுகிறது. ஆனால் இந்த ரசனையற்ற உலகில் பவித்ரமான நினைவுகளை அரங்கேற்றுவானேன் என்றும் தோன்றுகிறது. "


க. நா. சு 'கொட்டு மேளம்' தி. ஜானகிராமன் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டதையும் நினைவு மதிப்பீட்டு மடலில் சேர்த்திருந்தேன். 

" காலத்தை எதிர்த்து நீச்சுப் போடுவதென்பது சிரமமான காரியம். அதை இலக்கியப் பூர்வமாகவும், ஒரு அலட்சிய பாவத்துடனும் செய்திருக்கிறார் ஜானகிராமன். " 


க. நா. சு 1950களில் சொன்ன வார்த்தைகள். 

காலத்தை எதிர்த்து எப்போதும் நீந்திக் கொண்டே இருக்கும் படைப்புகளை தந்துவிட்டுப் போயிருக்கிறார். தி. ஜா. 


இதே தி. ஜா நினைவு மதிப்பீட்டு மடலில் வண்ணதாசன் எழுதிய வரிகள் ஒரு கடிதத்தில் எழுதப்பட்டதாகும். 


வண்ணதாசனுக்கும், வண்ணநிலவனுக்கும் வாலிபக்காலத்தில் உற்சாகமாக கடிதம் எழுதியிருக்கிறேன். இருவரிடமும் இருந்து 

பதிலே வரவில்லை. 

வண்ணதாசன் அப்பா தி. க. சி 

அடிக்கடி கடிதம் எழுதுவார். 


பழனியில் நான் அக்கவுண்ட் வைத்திருந்த பேங்க் மேனேஜர் ஒருவர் ஆர்வமாக கவிதை எழுதிக்கொண்டிருந்தார். அவருக்கு அன்னம் 

நவ கவிதை வரிசையில் 

கல்யாண்ஜியின் 'புலரி' 

நம்பிராஜன் 'ஆகாசம் நீலநிறம்' 

வண்ண நிலவன் 'மெய்ப்பொருள்' 

மூன்றும் கொடுத்து படிக்கச் சொன்னேன். 


அப்புறம் நவ கவிதை வரிசையில் வராத         கலாப்ரியா 'மற்றாங்கே' 


படித்து விட்டு கவிதை வேறு மாதிரி என்று பேங்க்கர் புரிந்து கொண்டார். 


அப்புறம் அவர் எழுதிய கவிதையொன்றை மா. அரங்கநாதனின் 'முன்றில்' பத்திரிக்கை விலாசம் கொடுத்து அனுப்ப சொன்னேன். 

முன்றிலில் பிரசுரமானது. 


வண்ண தாசன் பேங்க் ஆஃபிசர். அம்பாசமுத்திரத்தில் வேலை பார்க்கிறார் என்று நான் சொன்னேன். உடனே பழனி பேங்க் மேனேஜர் அவருக்கு கடிதம் போட்டார். எனக்கு பதில் எழுதாத வண்ணதாசன் இவருக்கு உடனே பதில் எழுதினார். ஒரே மனவாடு. இவரும் பேங்க்க்கு. அவரும் பேங்க்க்க்க்கு. ஸ்டேட்டஸ். .?! 

நானோ பேக்கு. 


வண்ணதாசன் அந்த பழனி அமெச்சூர் கவிஞருக்கு எழுதிய பதிலில் எழுதியிருந்ததையும் 

தி. ஜானகிராமன் மதிப்பீட்டு மடலில் சேர்த்தேன். 


அந்த கடித வரிகள் " புதுமைப்பித்தனும் 

தி. ஜானகிராமனுமான மனமும் வாழ்வும் நமக்கு அமைந்தால் போதும். இரண்டு பேரின் அக்கறையையும் வீச்சையும் தாண்டி, நம் வாழ்வோ அல்லது இலக்கியமோ ஒரு அங்குலம் கூட அப்புறம் நகர்ந்து விடப்போவதில்லை."

Sep 19, 2008

காலமும் நேரமும் மரணமும்

சில்வியா பிளாத் எழுதிய அற்புத நாவல் The Bell Jar. இந்த நாவலை அவள் பெயரை தன் புனை பெயராக்கி சில்வியா வாக அறியப்பட்ட எம். டி . முத்து குமார சுவாமி இந்த நாவலை தமிழ் படுத்தினால் பலரும் படிக்கலாமே . சில்வியா பிளாத் பற்றி விரிவாக அவர் ஏதேனும் எழுதியிருக்கிறாரா தெரிய வில்லை .
'பிறந்த நாள் பரிசு ' கவிதையில் அவள் ' இந்த வருடம் என் பிறந்த நாளுக்கு பெரிதாய் பரிசு எதுவும் வேண்டாம் . ஏன்னா , நான் உயிரோடு இருப்பதே விபத்து மாதிரி தற்செயல் தான் ' என்று சலித்து போய் சொல்கிறாள் .
தாய்மை உணர்வை மரணத்தின் போதும் காட்டியவள் . தூங்கும் குழந்தைகள் பாதுகாப்புக்கு உறுதி செய்து விட்டு , குழந்தைகளை நனைந்த துணிகளாலும் , ஈரமான துண்டுகளாலும் நன்கு மூடி விட்டு அடுத்த அறையில் எரிவாயு திறந்து விட்டு அதன் பின்னரே அடுப்பில் தலை யை விட்டாள் சில்வியா பிளாத்.
அவள் நாவல் நாயகி எஸ்தர் கூட தற்கொலைக்கு முயல்பவள் தான் . அவள் தன்னிடம் திட்டங்கள் எதுவும் இல்லை . தனக்கு எதுவும் தெரியாது என உணர்கிறாள் . அமேசான் ஓட்டல் கூரையில் ஏறி தன் ஆடை யை துண்டு துண்டாக கிழித்து வீசுகிறாள் .
தற்கொலை செய்து கொள்ளும் மன நிலை !
ஏன் ?
ஆத்மாநாம் !

விபத்துக்கள் ஏன் ?

ஆதவன் அப்படி நிஜமாகவே கால வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது ஏன் ?
ஆதவன் நீரில் மூழ்கி விபத்தில் மறையாமல் உயிரோடு இப்போது இருந்தால் .. அந்த காகித மலர்கள் , என் பெயர் ராம சேஷன் , அந்த அற்புதமான சிறுகதைகள் . ..
இன்னும் என்னவெல்லாம் சாதித்திருப்பார் . என்னை அதிகம் பாதித்த விஷயங்களில் ஆதவன் மரணமும் ஒன்று . இருபத்தொரு வருஷமாகி விட்டது இன்று .
ஆதவனே போய்விட்டார் .
ஜெய காந்தன் இப்படி இவர் மாதிரி நாற்பதுகளில் போயிருந்தால் அவருக்கு எவ்வளவோ நல்ல பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கும் .பாரதிக்கு கிடைத்த மரியாதை .
A useless life is an early death -கதே சொன்னான்.
46 வயதுக்கு மேல் சாதிக்க நிறைய ஆதவனுக்கு இருந்தது. ஆனால் அப்படி ஜெயகாந்தனுக்கு என்ன இருந்தது?எதுவுமே இல்லை என்பதை காலம் காட்டிவிட்டது .எழுத்தை பொறுத்த வரை இலக்கிய உலகின் அசுர குழந்தைக்கு பால்ய யோகம் தான் . ஜெயகாந்தனுடைய வாழ்வின் விருத்தாப்பியம் ,பின்பகுதி நிறமிழந்த ஒன்று . அபத்தமானதும் கூட .அந்திம காலம் அசிங்கமாவது பெரிய சோகம் .

பலர் தாமதமாகவும் சிலர் வெகு சீக்கிரமாகவும் மரணமடைகிறார்கள். சித்தாத்தங்கள்வித்தியாசமாகஒலிக்கின்றன.’சரியான சமயத்தில் செத்துப் போ!’
One should die proudly when it is no longer possible to live proudly.
- Nietzsche


ஆனால் ஒன்று நிச்சயம்.ஜெயகாந்தன் கொடியவர் அல்ல, அயோக்கியன்,பித்தலாட்டகாரன் அல்ல ஜெயமோகன் போல. அவருடைய நேர்மைக்கு,உண்மைக்கு, அந்தக்கால பராக்கிரமத்துக்கு, வீரத்துக்கு ஜெயமோகன் கால் தூசு பெறக்கூடிய ஆள் அல்ல. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் . Hyperion To A Satyr!

 ஸ்தாபன காங்கிரஸ் கூட்டத்தில் பேச ஜெயகாந்தன் வருகிறார்.
கூட்டத்தில் ஜெயகாந்தனின் பேச்சு பிரமிக்க அடிக்கிறது. ‘ஏண்டா நீங்க திறந்து விட்டா நாங்க குடிக்கனும். நீங்க திடீர்னு மூடிட்டா உடனே நாங்க காந்தியாயிடனுமா?’ என்று கருணாநிதி அரசை எதிர்த்து முழங்கினார். சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் அது. மேடையில் மகாத்மா காந்தி, காமராஜர் படங்களுக்கு நடுவே சிவாஜி கணேசனின் படத்தை வைத்திருந்தார்கள்.

‘இது யாரு? தேசப் பிதா. அது யாரு ? கர்ம வீரர் காலா காந்தி நடுவிலே யாருடா இது? திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு சைத்தானை வளர்த்தார்கள். அது சில குட்டிச் சாத்தான்களை சேர்த்துக் கொண்டு வெளியே வந்து அண்ணா தி.மு.க. என்று ஒரு கட்சியை ஆரம்பித்துவிட்டது. ஸ்தாபன காங்கிரஸிலும் நீங்கள் ஒரு சைத்தானை வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று துணிச்சலுடன் பகிரஙகமாக ஜெயகாந்தன் சிங்கம்போல கர்ஜித்தார்.