Share

Showing posts with label ஜெயகாந்தன். Show all posts
Showing posts with label ஜெயகாந்தன். Show all posts

Oct 17, 2019

யார் தான் குழந்தை?



ஜெயகாந்தனும் கண்ணதாசனும் இணைந்து பல அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்ட துண்டு. ஆட்சி கட்டிலில் ஏறியிருந்த தி. மு. க வை இருவரும் காரசாரமாக எதிர்த்தனர்.


அப்போதெல்லாம் தி. மு. க தொண்டர்களுக்கு ஜெயகாந்தன், கண்ணதாசன் பெயரைச் சொன்னாலே முகம் சுளித்து எரிச்சல் படுவார்கள். 'குடிகாரப்பயலுக காந்தி கட்சில' என ஏளனம் பேசுவார்கள். இருவரின் வெளிப்படைத் தன்மை தான் இப்படி கிண்டல் செய்ய வழி வகுத்தது.


ஜெயகாந்தன் நிகழ்ச்சிகளுக்காக செல்லும் போதெல்லாம் கண்ணதாசனுடன் அவருடைய பிள்ளைகளும் வருவார்களாம். அந்த பிள்ளைகள் ஜெய காந்தனுக்கு மிகவும் உவப்பானவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

கண்ணதாசன் பேசி உரையாடும் போது 'ஜெயா' என்று ஜெயகாந்தனை அழைப்பாராம்.

காமராஜரின் செல்லப்பிள்ளைகளாகவே இருந்தவர்கள்.

காங்கிரஸ் கட்சி 1969ல் உடைந்தது. அப்போது கண்ணதாசன் அடிக்கடி மாறிய விஷயம் காமராஜருக்கு  செய்த துரோகம் தான். காலா காந்தி புண் பட்டுப் போயிருப்பார்.

ஜெயகாந்தன் இந்த துரோகத்தை வெறுத்தார்.

இந்த அரசியல் நிகழ்வு பற்றி ஜெயகாந்தன் 'இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்' தொகுப்பிலேயே வேதனையுடன் குறிப்பிட்டார்.

" கண்ணதாசனை நான் ஒரு குழந்தை என்று நினைத்தேன். ஆனால் அவரோ என்னைத் தன்னை விடவும் ஒரு குழந்தை என்று கருதினார். எனவே, அவர் குழந்தை அல்ல என்று நான் கண்டு கொண்டேன்.

கார்ல் மார்க்ஸ், சே குவேரா வரை கவியுள்ளமும் கவிதை சஞ்சாரமும் கொண்டு மொழிக்காதலர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.
ஆனால் கண்ணதாசன்?
போக ப்ரியர், நிலையான புத்தியில்லாதவர்"

‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி’ என்று காமராஜரிடம் சரணாகதி அடைந்தவர் இரண்டு வருடங்களுக்குப் பின், காமராஜருக்கு இக்கட்டான சூழ்நிலையில் ஆதரவாக நில்லாமல் கண்ணதாசன் இந்திரா காங்கிரஸில் இணைந்ததெல்லாம்
ஜெயகாந்தனை எப்படி வருத்தப்படாமல் இருக்கச் செய்யும்?

உடன்பாட்டு பதில்களும் எதிர் மறை கருத்துக்களும் எல்லா நிலைப்பாடுகளுக்கும் எப்போதுமே உண்டு.

......


(கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் , இயக்குனர் சி. வி. ராஜேந்திரன், கண்ணதாசன், ஜெயகாந்தன், எம். எஸ். வி
(நன்றி : The Hindu))


Apr 30, 2015

Cock a snook at Mother




 அல்டாப்பு வலம்புரி ஜான் ஒரு பத்திரிக்கைக்கு ஆசிரியராய் இருந்தார். பத்திரிக்கையின் பெயர் "தாய்"!  எம்.ஜி.ஆர் – ஜானகியின் வளர்ப்பு மகன் அப்பு என்ற ரவீந்திரன் தான் பத்திரிக்கை அதிபர்.
 ஜெயகாந்தன் மடத்திற்கு போயிருந்த வக்கீல் ஹபீப் ராஜா (’ஏழாவது மனிதன்’ படத்தின் அசிஸ்டண்ட் டைரக்டர்) ஜெயகாந்தனின் அடைமழை பிரசங்கத்தின் இடையில் கொஞ்சம்  கேப் கிடைத்த போது “இந்த ‘தாய்’ பத்திரிக்கையில ஒங்களைப் பத்தி..” 

ஜெயகாந்தனோ வாக்கியம் முடியுமுன்னே மின்னலாக சீறினார் “அந்த  ‘த்தாயோளி’ பத்திரிக்கையெல்லாம் நீங்க ஏன் படிக்கிறீங்க?”
.............................

‘அம்மா வந்தாள்’ நாவல் தி.ஜானகிராமனின் மிகப்பிரபலமான நாவல்.
‘மோகமுள்’ நாவலை பிரமாதமாக புகழ்ந்த க.நா.சுவுக்கு ‘அம்மா வந்தாள்’ பிடிக்கவில்லை. 

டெல்லியில் ‘THOUGHT’ ஆங்கிலப்பத்திரிக்கையில் அம்மா வந்தாளுக்கு எழுதிய விமரிசனத்திற்கு க.நா.சு கொடுத்த தலைப்பு ‘Janakiraman’s Mother’. அம்மா வந்தாள் படித்திருந்தால் தான் இந்த தலைப்பின் வக்கிரம் புரியும்.
.....................

ஹேம்லட் தன் தாய் மீதான வெறுப்பை உமிழ்ந்த போது சொன்ன வார்த்தை - "Frailty! Thy name is woman!" - One of the mighty lines of Shakespeare - one of the memorable expressions. 

..............................................


த்ரூஃபோ ( Francois Truffaut ) எடுத்த படம் Bed and Board.  படம் பார்க்கும்போது அதில் ஒரு சுவாரசியமான தகவல். “Mother’s day” was invented by the German Nazis, During  the second world war!

Dec 29, 2014

வாசன்,பாலன்,ஜெயகாந்தன்



ஆனந்த விகடன் (31.12.2014 தேதியிடப்பட்டது) ஜெயகாந்தன் பேட்டி குறித்து சில வார்த்தைகள்.
ஜெயகாந்தன் அந்தக்காலத்தில் எஸ்.எஸ்.வாசன் குறித்து சொன்னதையெல்லாம் இந்தப்பேட்டியில் மகன் எஸ்.எஸ்.பாலன் மேல் ஏற்றி சொல்கிறார்.

ஆனந்த விகடன்  முதலாளி வாசன் இவருக்கு எழுத வாய்ப்பு  கொடுத்த போது ஜெயகாந்தன் வயது 20 எனில் அது 1954ம் ஆண்டு.


இந்த விஷயம் " அது தான் வருத்தமாக இருக்கிறது பாலு!" பேட்டியில் பாலன் வாய்ப்பு கொடுத்ததாக பதிவாகியிருக்கிறது.
இது ஜெயகாந்தன் தவறாக இல்லாமல் இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
பேட்டியை எழுத்தாக்கம் செய்துள்ள தமிழ்மகன் செய்துள்ள தவறாக இருக்கவும் வாய்ப்புண்டு.
 
பாலன் மீதுள்ள அதீத விசுவாசம் காரணமாக வாசன் பற்றி குறிப்பிட்ட விஷயத்தையெல்லாம் பாலன் மீதேற்றியிருக்கலாம்.
பேட்டியில் முன்பகுதியில் உள்ள விஷயங்கள் வாசன் சம்பந்தப்பட்டவை.

முத்திரைக்கதைகள் பத்தாண்டு காலம் எழுதியதெல்லாம் வாசன் உபகாரம்.'அக்னிப்ரவேசம்' கதை கொந்தளிப்பின் போது  'நீங்கள் எழுதுங்கோ' என்று பச்சைக்கொடி காட்டிய பண்பாளர் வாசன் தான்.
அதெல்லாம் இந்தபேட்டியில் பாலன் என்பது போல பதிவாகியிருக்கிறது.

இன்னொரு விஷயம். 'இதயம் பேசுகிறது' மணியன் ஆனந்த விகடனில் வேலை பார்த்த போது தான் ஜெயகாந்தனின் முதல் சிறுகதைத்தொகுப்பை  முதலாளி பார்வைக்கு வைத்து அதை வாசித்த வாசன் ஜெயகாந்தனுக்கு முத்திரைக்கதைகள் எழுத வாய்ப்பு கிடைத்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

1954ல் ஜெயகாந்தனுக்கு 20 வயது என்றால் எஸ்.எஸ். பாலனுக்கு
அப்போது 19 வயது தான்!
பத்தாண்டு காலம் முத்திரைக்கதைகள் எழுதியுள்ளார். வாசன் மறைந்த ஆண்டு 1969.
அப்பாவுக்கு உதவியாக பட்டத்து இளவரசர் சகல அதிகாரத்துடன் இருந்திருக்கலாம் தான். ஏவிஎம் செட்டியார் காலத்தில் சரவணன் பட வேலைகளையெல்லாம் பார்த்தவர் தான். அது போல ஸ்டுடியோ நிர்வாகத்திலும், பத்திரிக்கையிலும் பாலன் செயல் பட்டிருக்கலாம்.

ஜெமினியின் தரமான தயாரிப்புகளான 'மோட்டார் சுந்தரம் பிள்ளை', 'வாழ்க்கைப்படகு' பாலன் இயக்கிய படங்கள் தான். வாசன் இறப்பதற்கு  நான்காண்டுகளுக்கு முன் வந்த படங்கள்.

சிவாஜி,ஜெமினி கணேசன் இருவரையும் இயக்கியவர்.
1974ல் எம்.ஜி.ஆர் படம் 'சிரித்துவாழவேண்டும்' பாலன் இயக்கம் தான்.

ஆனால் ஜெயகாந்தன் எப்போதும் வாசனையே தன் வாழ்க்கைக்கு வழி திறந்தவர் என்பதாக  நிறுவியிருக்கிறார். அதோடு வாசன் காலத்திற்கு பின் பாலன் நிர்வகித்த ஆனந்த விகடன் பத்திரிக்கை மீது மிகுந்த அதிருப்தியை வெளிப்படுத்தியவர்.


வாசன் பற்றி அதிகம் நினைவு கூர்ந்த தமிழ்படைப்பாளிகள் இருவர்.

ஒருவர் ஜெயகாந்தன். பத்திரிக்கை அதிபர் வாசன் பற்றி பேசியவர்.

மற்றொருவர் அசோகமித்திரன். ஸ்டுடியோ அதிபர் சினிமாக்காரர் ஜெமினி வாசன் பற்றி பேசியவர்.

Dec 28, 2014

A double drop



Willful ignorance 

ஆனந்த விகடனில் ஜெயகாந்தன் கொடுத்துள்ள பேட்டியில் மறைந்த ஆசிரியர் பற்றி அஞ்சலியாக ரொம்ப உயர்வாக சொல்லியிருக்கிறார். சரிதான்.

http://nadappu.com/wp-content/uploads/2014/07/jayakand_1.jpg

  


ஆனால் 1970களில் ஆனந்தவிகடனைப் பற்றி குறிப்பிட்டு சொல்லும்போது
 " அன்று எஸ்.எஸ்.வாசனின் ஆனந்த விகடனில் ஜெயகாந்தனுக்கு இருந்த மரியாதை கம்பனுக்கு மன்னன் குலோத்துங்கன் செய்த மரியாதைக்கு சமம்." என்று வாசனைப்பற்றி மிக உயர்வாக  குறிப்பிட்டு பின் எஸ்.பாலசுப்ரமணியன்  நிர்வகித்த ஆனந்த விகடன் மீது தன் கடுமையான அதிருப்தியை அடிக்கடி அரசியல் மேடையில் கூட வெளிப்படுத்தியிருக்கிறாரே!'

 Tactical stupidity!What areas of the skull must be traumatized to cause selective amnesia?!


"Facts do not cease to exist because they are ignored."
—Aldous Huxley


................................

இரண்டு காட்சிகள்
      

"சொல்லத்தான் நினைக்கிறேன்" படத்தில் ஸ்ரீவித்யா எழுதும் காதல் கடிதங்களை படிக்காமலே சிவ்குமார் போஸ்ட் செய்வார்.
தன்னை காதலிக்கவில்லை என்பது தெரியவரும்போது சிவகுமாரிடம் மெதுவாக கேட்பார். "நான் உங்க கிட்ட போஸ்ட் செய்யச்சொன்ன கடிதங்களை ஒரு தடவை கூட படிக்கனும்னு உங்களுக்கு தோணவே இல்லையா சார்"
'அதெப்படிங்க.. நீங்க இன்னொருவருக்கு எழுதிய கடிதத்தை நான் படிக்க முடியும்!' - சிவகுமார் பதில்.
இந்த பதிலால் இழப்பின் பரிமாணம் அதிகமாகி விட்ட சோகத்தையும் தாங்கிக்கொண்டு ஸ்ரீவித்யா சொல்வது :" நீங்க ஒரு ஜெண்டில் மேன் சார்.."
சொல்லத்தான் நினைக்கிறேன்
உள்ளத்தால் துடிக்கிறேன்
வாய் இருந்தும் சொல்வதற்கு
வார்த்தையின்றி தவிக்கிறேன்.
கே.பாலச்சந்தர் படக்காட்சிகளில் மேன்மையான ஒன்று இது.
படு நாடகத்தனமான காட்சி ஒன்று
"புதுப்புது அர்த்தங்கள்" படத்தில்
சித்தாரா தன் கணவன் சத்யனுடன் ( நடிகர் ராஜேஷின் தம்பி) மீண்டும் இணையும்போது முடவனான கணவன் தன் கால்களான இரு கட்டைகளையும் உடனே,உடனே தூக்கி வீசிவிடுவது! ஏன் தூக்கி வீசவேண்டும்!?
.....................

Oct 12, 2012

பிரசாதம் செய்த மாயம்

 

திருச்சி செயிண்ட் ஜோசப் பள்ளி பத்தாம் வகுப்பு மாரல் இன்ஸ்ட்ரக்‌ஷன் பீரியட். நீதிபோதனை செய்து கொண்டே வகுப்பில் உலாவி வரும் போது ஆசிரியர் என்னைக் கவனிக்கிறார். நான் ஆர்வமாக, தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கிற புத்தகத்தை என்னிடமிருந்து வாங்கி பார்க்கிறார். சரோஜாதேவி எழுதிய வாடாமல்லி. அவருக்கு அதிர்ச்சி. புத்தகத்தை உயர்த்திக் காட்டுகிறார். ‘மாரல் இன்ஸ்ட்ரக்‌ஷன் வகுப்பிலே செக்ஸ் புக் படிக்கிறான்யா’ வகுப்புத் தலைவனிடம் கொடுத்து உடனே புத்தகத்தை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்கச் சொல்கிறார். அவன் மூன்றாவது மாடி வெராண்டாவில் ஓட ஆரம்பிக்கிறான். அழுது கொண்டே இறைஞ்சிக் கொண்டு நிற்கிறேன் நான். ஆசிரியர் என்ன நினைத்தாரோ இன்னொரு பையனை அனுப்பி வகுப்புத் தலைவனை உடனே திரும்ப அழைத்து வரச் சொல்லி புத்தகத்தை வாங்கி என்னிடமே திரும்பக் கொடுத்து விடுகிறார். அடிக்கவில்லை. உதைக்கவில்லை. என்னை அமரச் சொல்லி விட்டு வகுப்பைத் தொடர்ந்து நடத்துகிறார். நீதிபோதனை ஆசிரியர் வில்சன்.

ஜெகசிற்பியன் எத்தனை புத்தகம் படித்திருக்கிறேன். நா.பார்த்தசாரதியின் ‘பொன் விலங்கு’ படித்துக் கொண்டிருந்தபோது நான் ஆசிரியரிடம் மாட்டியிருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும். அண்ணாத்துரையின் ‘கம்பரசம்’ ‘ரோமாபுரி ராணிகள்’ படித்தபோது நான் சிக்கியிருந்தால் கூட தேவலாம் தான். வகுப்பில் பாடம் நடத்தும் போது கதைப் புத்தகம் படிப்பதே கடுமையான ஒழுங்கீனம். இப்போது நான் செய்திருப்பதென்ன ?

A BLUNDERING BOY ! 7ம் வகுப்பு படிக்கும்போதே சிகரெட் பழக்கம். 8ம் வகுப்பில் சிகரெட் இல்லாமல் முடியாது என்று ஆகி சிகரெட்டுக்கு பணம் இல்லையே என்று நான் பட்ட கவலையை காண சகியாமல் சக மாணவன் மனிதாபிமானத்தோடு ஒரு பாக்கெட் COOL சிகரெட் வாங்கித் தந்தான்.

முல்லைக்குடி என்ற ஊருக்கு பிக்னிக் சென்ற போது வயல்காட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். மது ருசி ஏற்கனவே அறிந்தவன் நான். கூடவே நான்கு பையன்கள். நான் மட்டும் குடித்தால் காட்டிக் கொடுத்து விடுவார்கள். அவர்களுக்கு ஆளுக்கு ஒரு மடக்கு ஒரே டம்ளரில் வாங்கிக் கொடுத்து விட்டு நான் ஒருவனே மூன்று டம்ளர் விழுங்கினேன். சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த குடிமகன்கள் எனக்கு மாலை போடாத குறைதான். குடித்த சந்தோஷத்தில் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி வந்து மாஹிக்ரவுண்டில் ஒரு ரவுண்டு ஓடித்தான் நிறுத்தினேன்.

எட்டாம் வகுப்பு நான் படிக்கும் போது எனக்கு ஐந்து இளைய சகோதரர்களும், இரண்டு இளைய சகோதரிகளும்.

 பள்ளிக் கூட காலங்களில் அந்த வயதுக்கேற்றாற் போல எம்.ஜி.ஆர். ரசிகராகத் தான் இருந்தேன். அண்ணாத்துரை இறந்த போது தேம்பித் தேம்பி அழுது சாப்பிட மறுத்து விட்டேன்.

S.S.L.Cயில் 82% மார்க் எடுத்து தேர்வு பெற்ற போது டாக்டராகி விடுவேன் என்று எல்லோருமே எதிர்பார்த்தார்கள்.
  P.U.C யில் மெஜிரா காலேஜில் 3ம் வகுப்பில் தான் தேறினேன். அப்போது தமிழில் பாடத்திட்டத்தில் தி.ஜானகிராமனின் அக்பர் சாஸ்திரி பாடமாக வைக்கப்பட்டிருந்தது. பின்னாளில் தி.ஜாவின் பரமரசிகனாக முத்திரை குத்தப்பட்ட நான் அப்போது ‘அக்பர் சாஸ்திரி’ சிறுகதைத் தொகுப்பை புரட்டிக் கூட பார்ககவில்லை. P.U.C படிக்கும்போது சிகரெட், மதுவோடு இன்னொரு பழக்கமும் இருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் LEBATON, MANTRAX போன்ற போதை மாத்திரைகளை விழுங்கினேன். இந்த போதை மாத்திரைகளைப் போட்டு கொண்ட பின் முள் மரங்களைப் பார்த்தால் கூட ரொம்பச் சந்தோஷமாயிருக்கும்.
பி.ஏ., பட்டப்படிப்பு ஆங்கில இலக்கியம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலாமாண்டிலேயே ஜெயகாந்தனின் ‘ஒரு பிடிச் சோறு’ துவங்கி ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ வரை அத்தனை நூல்களையும் படித்து முடித்து என் இயல்புபடி Revise செய்துவிட்டேன். English Fiction என்ற அளவில் James Hadleychase, Alistair Maclean, Denise Robins, Agathachristie என்று படித்துகொண்டிருந்த நான் அப்போது தமிழில் மட்டும் ஜெயகாந்தனை முழுமையாக ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்ததை இப்போது நினைத்துப் பார்க்கும் போது முரண் நகையாகத் தோன்றுகிறது.
எம்.ஜி.ஆர். ரசிகனாக இருந்த நான் அ.தி.மு.க. கட்சி தோன்றிய பிறகு தி.மு.க. காரனாக கருணாநிதியின் தொண்டனாக மாறியிருந்தேன்.

நாங்கள் வசித்த பகுதியில் ஸ்தாபன காங்கிரஸ் கூட்டத்தில் பேச ஜெயகாந்தன் வருகிறார்.
அப்போது ‘குருபீடம்’ நூலில் ஜெயகாந்தனிடம் கையெழுத்து வாங்குகிறேன். சிரிக்காமல் சிடு, சிடு வென்று அவசரமாக பலருக்கும் ஆட்டோகிராப் செய்து கொண்டிருந்த ஜெயகாந்தன் அவருடைய நூலில் கையெழுத்து வாங்கும் என்னை நிமிர்ந்து பார்த்து புன்னகைக்கிறார். அந்தப் புன்னகை கோடி பெறும்.
  கூட்டத்தில் ஜெயகாந்தனின் பேச்சு பிரமிக்க அடிக்கிறது. ‘ஏண்டா நீங்க திறந்து விட்டா நாங்க குடிக்கனும். நீங்க திடீர்னு மூடிட்டா உடனே நாங்க காந்தியாயிடனுமா?' - கருணாநிதி அரசை எதிர்த்து முழங்கினார்.

 சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் அது. மேடையில் மகாத்மா காந்தி, காமராஜர் படங்களுக்கு நடுவே சிவாஜி கணேசனின் படத்தை வைத்திருந்தார்கள்.

‘இது யாரு? தேசப் பிதா! அது யாரு ? கர்ம வீரர் காலா காந்தி! நடுவிலே யாருடா இது? திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒரு சைத்தானை வளர்த்தார்கள். அது சில குட்டிச் சாத்தான்களை சேர்த்துக் கொண்டு வெளியே வந்து அண்ணா தி.மு.க. என்று ஒரு கட்சியை ஆரம்பித்துவிட்டது. ஸ்தாபன காங்கிரஸிலும் நீங்கள் ஒரு சைத்தானை வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று துணிச்சலுடன் பகிரஙகமாக ஜெயகாந்தன் கர்ஜித்தபோது ஒரு சிங்கத்தை பார்த்தாற்போலவே இருந்தது. அதன் பிறகு நான் படித்த அமெரிக்கன் கல்லூரி தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பாக அவர் அழைக்கப்பட்டு வந்து உரையாற்றிய போதும் SHOCK VALUE அவருடைய பேச்சில் இருந்தது. ‘KANJA IS MY SOUL. LIQUOR IS MY BODY ‘ என்றார்.

கஞ்சாப் பழக்கம் என்னையும் தொற்றிவிட்டது. அரசரடி – ஆரப்பாளையம் பகுதியில் அந்தக் காலத்தில் கஞ்சா என்பது டீ, காபி சாப்பிடுவது மாதிரி சகஜமான விஷயம். அமெரிக்கன் கல்லூரியிலும் மரத்தடி மகாராஜாக்கள் எப்போதுமே கஞ்சா புகை சூழ இருப்பது தான் அப்போது இயல்பான விஷயம். பாரதி கஞ்சா அடித்தவர். என்னுடைய அபிமான எழுத்தாளரே கஞ்சா அடிப்பவர். ஜெயகாந்தன் தான் எழுத்தாளர். வேறு யாரையும் படிக்கவே மாட்டேன் என்ற பிடிவாதம் ஏற்பட்டுபோனது.

 பி.ஏ. இரண்டாமாண்டு என் தம்பியொருவன் அப்போது ‘பிரசாதம்’ என்று ஒரு புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு வந்திருந்தான். ‘சுந்தர ராமசாமி’ என்று பெயர் போட்டிருந்தது. அந்தப் புத்தகத்தை அசுவாரசியமாகப் புரட்டினேன். முன்னுரையை வாசித்தேன். ‘வாழ்வின் கதி நதியின் பிரவாகம். நம்முடைய திட்டம், தத்துவம், அனுமானம், ஹேஸ்யம், ஜோஸ்யம் இத்தனைக்கும் ‘பெப்பே’ காட்டிவிட்டு ஓடுகிறது. எனக்கு என் வாழ்க்கை என்றாலே என் அனுபவம் மட்டும் தானே. ஆக, இது தான் வாழ்க்கை என்று நான் ‘பிடித்து’ வைத்துக் கோடு கீச்சுகிற போதே நான் சற்றும் எதிர்பாராத விதமாய், என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வண்ணமாய் இவ்வுலகம் புதுக்கோலம் கொண்டு இயங்குகிறதே. அது தான் வாழ்க்கையா?’ என்றெல்லாம் விரிந்த அந்த முன்னுரை என்னைச் செயலோயச் செய்துவிட்டது.
முதல் சிறுகதை ‘பிரசாதம்’ படித்தவுடனே உற்சாகம் ஏற்பட்டது. ‘சன்னல்’ கதையைப் படித்து முடித்தபோது பித்துப் பிடித்தாற் போல் ஆகிவிட்டது. எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் தான் கிணற்றுத் தவளை. என்னுடைய நம்பிக்கை உடைந்து விட்டது. அப்புறம் மறு நாள் தான் ‘லவ்வு’ கதையைப் படித்தேன். கிடாரி, ஒன்றும் புரியவில்லை,வாழ்வும் வசந்தமும் ஆகிய கதைகள் என்னை ஒரு புரட்டு புரட்டிப் போட்டுவிட்டன. எல்லாக் கதைகளுமே ஸ்டாம்பு ஆல்பம், சீதை மார்க் சீயக்காய்த் தூள், மெய்+பொய்=மெய் எல்லாமே ரொம்ப வித்தியாசமான அனுபவத்தைத் தந்தன. எதுவுமே சோடையில்லை.

SERENDIPITIOUS HAPPY DISCOVERY ! யார் இந்த சுந்தர ராமசாமி? ஜெயகாந்தனின் அத்தனை நூல்களிலுமிருந்து மாறுபட்ட உயர்ந்த வாசிப்பு அனுபவத்தை ஒரு சிறுகதைத் தொகுப்பிலேயே தந்து விட்ட சுந்தர ராமசாமி. ஜெயகாந்தனிடம் காணக் கிடைக்காத LITERARY CLEVERNESS வேறு தூக்கலாக இவரிடம் தெரிகிறது. இப்போது நினைக்கிறேன். எனக்கு வாசகனாக ஒரு TRANSFORMATION சுந்தர ராமசாமியின் ‘பிரசாதம்’ மூலமே கிடைத்தது.

மிக தற்செயலாக என் வாழ்வில் நடந்த SUBLIMATION பற்றியும் சொல்ல வேண்டும். இப்போது 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிகரெட், கஞ்சா, குடி எதுவுமே கிடையாது. விளையாட்டாகக் கூட நான் தொட்டதேயில்லை.

....................




Sep 14, 2008

ஜெயகாந்தனின் பயம்!

ஜெயகாந்தன் பாவம் ஒரு விஷயத்திற்காக ரொம்ப பயந்திருக்கிறார் . தசாவதாரம் பார்த்து விட்டு கமல் ஹாசனிடம் தன்னுடைய கலக்கத்தை வெளியிட்டிருக்கிறார் .
" படம் ஓடுமா ? ஏன்னா எனக்கு படம் ரொம்ப பிடிச்சிருக்கு . அதனால் தான் பயமா இருக்கு . ஏன்னா எனக்கு பிடிச்ச படம் ஓடாது ."
ஜெயகாந்தன் கவலை, பயம் எல்லாம் இப்ப இப்படி தானே ? காஞ்சி சங்கர மட கௌரவத்தை காப்பாத்த " ஹர ஹர சங்கர '' எழுதி தவிச்சவர் ....
சமீபத்தில் கருணாநிதி முன் கூழை கும்பிடு , ஏழை சிரிப்பு , கோழை பவ்யம் எல்லாம் காட்டி இவர் நிற்கும் காட்சியை செய்தித்தாளில் பார்க்க முடிந்தது .
நீர்த்து போனது கூட பரவாயில்லை . மத்திய வயதிலேயே இவருடைய எழுத்து குருவி முட்டையை தான் போட்டது .
ஆனால் இப்படி தசாவதாரம் வசூல் பற்றி கவலைப்பட்டு கொண்டிருக்கும்படி ஆகிவிட்டதே !
கமல் அதற்கு பதிலாக 'சித்தாள் எல்லாம் பாக்க வர்றாங்க . எம்ஜியார் படத்துக்கு கூட்டம் வர்ற மாதிரி வர்றாங்க' என்று சொல்லி ஜெயகாந்தனை தேற்றி ஆறுதல் சொல்லியிருக்கிறார் .
ஜெயகாந்தனும் எம்ஜியார் பட ரசனை உள்ளவர் தான் , எம்ஜியார் ரசிகனின் தரத்தை சேர்ந்தவர் என்பதை தெளிவாக சொல்லி ஜெய காந்தன் 'சினிமாவுக்கு போன சித்தாளு ' குறுநாவலை எந்த காரணத்திற்கு எழுதினார் என்பதையே பகடி செய்து விட்டார் கமல்.
எம்ஜியார் படங்கள் எப்படி கலாச்சார சீரழிவுக்கு வழி வகுத்தன என்பதை பேசிய நாவல் '. சினிமாவுக்கு போன சித்தாளு '. தமிழ் வர்த்தக சினிமாவையும் எம்ஜியாரையும் கடுமையாக விமர்சித்த நாவல் .
வரலாற்றின் குரங்குத்தனம் !

There is no salvation in becoming adapted to a world which is crazy.
--Henry Miller.