Share

Showing posts with label எஸ். பி. பி. Show all posts
Showing posts with label எஸ். பி. பி. Show all posts

Oct 28, 2020

சிவகுமாருக்கு பாலு பாடல்கள்

 பாலுவின் முதல் பாடல் ஓட்டல் ரம்பா படத்தில். 

எல். ஆர். ஈஸ்வரியுடன் பாடிய "அத்தானோடு இப்படி இருந்து எத்தனை நாளாச்சு" பாடல்

 படம் ரிலீஸ் ஆகாததால் 

காணாமலே போய் விட்டது. 

எஸ். பி. பி. முயன்று தேடியும் 

கிடைக்காமல் போய் விட்டது. 


இப்போது நடிகர் சிவகுமார் இதை சொல்வதை 

ஒரு வீடீயோ பதிவில் பார்த்தேன். 


சாந்தி நிலையம் ' இயற்கை எனும் இளைய கன்னி'

முதலில் ரிக்கார்ட் செய்யப்பட்டு விட்டது. 


 பால் குடம் படம்  1969, ஜனவரி பொங்கலிலேயே வெளிவந்தது. 

அப்படி பார்த்தால் பாலுவுக்கு தமிழில் முதல் பாடல்

' மல்லிகைப் பூ வாங்கி வந்தேன் ' தான். 


 நானும் இப்படித்தான் சொல்லுவேன். 


ஆனால் அதே பொங்கலில் தான் ஜெமினியின் குழந்தையுள்ளமும் ரிலீஸ். "முத்துச்சிப்பிக்குள்ளே ஒரு பூவண்டு" பாலு பாடல். 


சாந்தி நிலையமும், அடிமைப்பெண்ணும் 

 1969 மே மாதம் தான் ரிலீஸ் ஆகின.


அதே 1969ல் செப்டம்பரில் 'கன்னிப்பெண்' 

சூப்பர் ஹிட் பாடல் "பௌர்ணமி நிலவில், பனி விழும் இரவில் கடற்கரை மணலில் இருப்போமா?" சிவகுமாருக்கு இரண்டாவதாக எஸ். பி. பி. 


1970ல் நவக்கிரகம் படத்தில் "உன்னை தொட்ட காற்று வந்து என்னை தொட்டது" சுசிலா பாடலில்

 எஸ் பி பி பிரமாதமாக சிவகுமாருக்கு ஹம்மிங் கொடுத்தார். 


1971ல் கண்காட்சியில் 'அனங்கன் அங்கஜன் அன்பன்' அருமையான சந்தப்பாடல். 

இந்த பாடலை நான் ஏ. பி. என் தொகையறாவுடன்

"வெண்ணிலவை  குடை பிடித்து " துவங்கி உச்சரிப்புக்காக  நடிப்பு பயிற்சி மாணவர்களுக்கு சொல்லி தந்திருக்கிறேன். 


அதே வருடம் 'மூன்று தெய்வங்கள்' முள்ளில்லா ரோஜா பாடல். (ஆனால் இது தான் தனக்கு பாலு பாடிய முதல் பாடல் என்று அவர் சீரியஸாக இருக்கும் போது சிவகுமார் சொன்னார்) 

பாலு இறந்த பிறகு "மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்" தனக்கு முதல் பாடல் என்றார். 

இது தான் உண்மை. 


அதன் பிறகு சிவகுமாருக்கு எத்தனையோ பாடல்கள் பாலு பாடி விட்டார். 

"உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி "

குறிப்பிடத்தக்கது. 

ஒரு பெரிய பட்டியலாக பாடல்கள். 


நடிகர் சிவகுமார் எண்பத்தேழு நடிகைகளுக்கு ஜோடியாக நடித்தவர். 

அவருடைய திரையுலக வாழ்க்கை 

ஒரு வித்யாசமான 'சீர்த்தன்மை' கொண்டது. 


அனுபவங்கள் விசேஷமானவை. 

'இது ராஜபாட்டை அல்ல ' என்ற நூல் அவரை எழுத்தாளராக அடையாளம் காட்டுகிறது. 


 காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் ஓவியர். 

ஒரு ஹீரோவுக்கு இசைந்து வராத இயல்பு ஓவியம் வரைவது. அந்த வகையில் மற்ற கதாநாயக நடிகர்களிடமிருந்து வேறுபட்டவர். 


நல்ல வாசகர். 

நவீன தமிழ் இலக்கிய பரிச்சயமுள்ளவர். 

ஓவியர்களில் வாசக குணம் அபூர்வம். 

நடிகர்களிலும் வாசிப்பு என்பது அரிதான விஷயம். 


பேச்சாளர். 


இதெல்லாமே சிவகுமாரின் ஆளுமைக்கு

 சிறப்பான அந்தஸ்தைப் பெற்றுத் தருகின்றன. 


இரண்டு பிரபல நடிகர்களின் தந்தை. 

அவருடைய மருமகள் கூட பெருமைக்குரிய நடிகை. 


கொடுத்து வைத்தவர் என்று

 எல்லோரும் மலைக்கும்படியான வாழ்க்கை.


Fotos 


1. Sivakumar 


2, 3. S. P. Balasubramaniam


https://m.facebook.com/story.php?story_fbid=2808815829331865&id=100006104256328

Sep 25, 2020

சாவித்திரியம்மாவுக்கு பிடித்த எஸ்.பி.பி பாடல்

 நாற்பது வருடங்களுக்கு முன்பு 

ஒரு வார பத்திரிகை பின்னணி பாடகர்களின் வாழ்க்கைத்துணைவர்களிடம் ஒரு கேள்வியை முன் வைத்து பதில் பெற்று வெளியிட்டது. 


எஸ். பி. பாலசுப்பிரமணியம் மனைவி சாவித்திரி அவர்களிடமும் அந்த கேள்வி கேட்கப்பட்டது. 

'உங்கள் கணவர் பாடிய பாடல்களில் உங்களுக்கு பிடித்த பாடல் எது? '


சாவித்திரியம்மா சொன்ன பதில் 

" 'கேட்டதெல்லாம் நான் தருவேன். 

எனை நீ மறவாதே' என்ற பாடல் "


'திக்கு தெரியாத காட்டில்' என்ற படத்தில்            பாலுவும் சுசிலாவும்,                                 முத்துராமனுக்கும் ஜெயலலிதாவுக்குமாக           பாடிய பாடல் அது. 

1972ல் வந்த வண்ணப் படம். 


இந்த பாடலை விட எத்தனையோ சிறப்பான பாடல்களை அந்த நேரத்தில் எஸ். பி. பி பாடியிருந்தார் தான். ஆனால் அவர் மனைவிக்கு இதன் முத‌ல் இரண்டு வரிகள் 

ரொம்ப முக்கியம் அல்லவா? 

'கேட்டதெல்லாம் நான் தருவேன். 

எனை நீ மறவாதே '


.. 


டி. எம். எஸ் மார்க்கெட் போன பின் ரொம்ப விரக்தியில் இருந்தார். ரொம்ப புலம்ப ஆரம்பித்து விட்டார். மார்க்கெட் போய் ரொம்ப காலமான பின்னும் புலம்பல் நிற்கவில்லை. 

பேட்டி கொடுக்கும் போதெல்லாம் தன்னை பாட யாரும் அழைப்பதில்லை. பாட வாய்ப்பு தருவதில்லை என்று ஆவலாதி சொல்லிக் கொண்டே இருந்தார். 


எஸ். பி. பாலசுப்பிரமணியம் என்ன செய்தார் தெரியுமா? சௌந்தர்ராஜன் வீட்டுக்குப் போய் அவரை சந்தித்தார். 

"நீங்க நெறய்ய சாதிச்சிட்டீங்க. ரொம்ப பெரிய பின்னணி பாடகர் அண்ணே நீங்க. 

ஒங்க பாட்டு எல்லாமே சாகா வரம் பெற்றவை. 

உங்களுக்கு ஒண்ணு சொல்றேன்.

 வெளி நாட்டுல கச்சேரி செய்யப் போகும் போதெல்லாம் நானும் என் மகன் சரணும் இணைந்து 

ஒங்களோட ' பொன்னொன்று  கண்டேன், 

பெண் அங்கு இல்லை, 

என்னென்று நான் சொல்லலாகுமா?' பாடலைப் பாடி கைத்தட்டு வாங்குவோம். 

எதைப்பற்றியும் கவலைப்படாம நீங்க சந்தோஷமா இருங்கண்ணே. நீங்க எவ்வளவு பெரிய ஆளு "


டி. எம். எஸ்ஸிற்கு பிரமாதமாக கவுன்சலிங் செய்து உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

கமல் - பாலு

 அமிதாப் பச்சன் தாதா சாகேப் விருது பெற்றிருக்கிறார் எனும் போது 

அடுத்து இந்த விருது பெற தகுதியானவர்

 கமல் ஹாசன். 


 ஒரு டி. வி. நிகழ்ச்சியில் 

எஸ். பி. பாலசுப்பிரமணியம்,

 கமலுடன் கலந்து கொண்ட போது 

'கம்பன் ஏமாந்தான்' பல்லவியை பாடினார். 

கமல் அதற்கு நேர்த்தியாக உடன்  வாயசைத்தார். 

பாலு உணர்ச்சி வசப்பட்டு  சொன்னார். 

"The one and only actor, with whom 

I always feel comfortable when I sing "


கவலைக்கிடமாக இருந்த எஸ். பி. பி. உடல் நிலை பற்றி விசாரிக்க மருத்துவ மனைக்கு சென்ற கமல்ஹாசன். 


இன்று பாலு போய் விட்டார். 


கமல் பாரத ரத்னா பெறவும் தகுதியானவர். 

ஏழு வருடம் முன்னரே எழுதியிருக்கிறேன்.


இன்று அரசியலில் இறங்கியிருக்கிற நிலையில் அவருக்கு இந்த கௌரவங்கள் 

கொடுக்க முன் வர மாட்டார்கள். 


.. 


பரோட்டா சூரி சொல்வது " மற்ற நடிகர்கள் 

எந்த மொழியிலும் நடித்து விடலாம். 

காமெடி நடிகர்கள் பிற மொழிகளில் 

நடிக்க முடியாது" 


நகைச்சுவைக்கு வட்டார வழக்கு முக்கியம். தாய்மொழி வட்டார வழக்கு பேச்சு மொழி. 


இதையும் கூட ஒரு காமெடி நடிகர் உடைத்திருக்கிறார். 


இயக்குநர் ராதா மோகன் படம் 'மொழி' படத்தில் நடித்த பிரம்மானந்தம். 

"எனக்கு ஒர்த்தர பிடிக்கலன்னா மூஞ்சயே

 நான் பாக்க மாட்டேன்.. " 


விஷேச திறமை கொண்ட பிரம்மானந்தம் 

பல தமிழ் படங்களில் கலக்கியிருக்கிறார். 

Scene Stealer. 


.. 


 ஹிண்டு பார்க்கும் போது ஆபிச்சுவரி எப்போதுமே கவனிப்பேன்.

 இன்று பார்த்துக் கொண்டிருக்கும் போது பழசானதெல்லாம் ஞாபகம் வந்தது. 


1992ல Hindu Obituary column பார்த்து இந்திரா மாமி மறைந்த விஷயம் தற்செயலாக தெரிய வந்தது. இந்திரா பார்த்தசாரதியின் மனைவி. 


1999ம் ஆண்டு ஹிண்டு ஆபிச்சுவரியில் தான் நடிகை சந்திர கலா மரணம் பற்றி பார்த்தேன்.


 அந்த இரங்கலில் இன்னொரு செய்தி தெரிந்தது. சந்திர கலா முஸ்லிமாக மதம் மாறி வாழ்ந்தவர். அந்த முஸ்லிம் பெயர் அதில் இருந்தது. 


பிராப்தம் எல் ஆர் ஈஸ்வரி பாடல் 'இது மார்கழி மாதம், முன் பனி காலம், கண்ண மயக்குது மோகம், ஏன் நடுங்குது தேகம் ' சந்திர கலா. 


'வசந்தத்தில் ஓர் நாள், மணவறை கோலம், 

வைதேகி காத்திருந்தாளாம் '

 மூன்று தெய்வங்கள் 


எம். ஜி. ஆருடன் 'தங்கத்தோணியிலே, 

தவழும்  பெண்ணழகே' 


புகுந்த வீடு ஏ. எம். ராஜா, ஜிக்கி 'செந்தாமரையே, செந்தேன் இதழே' 


சந்திர கலா வீடும், 

இயக்குநர் புட்டன்னா வீடும்

 சென்னையில் 

அடுத்தடுத்து இருந்து, 

முன்னே நான் பார்த்த நினைவு. 


..