Share

Showing posts with label Lorca. Show all posts
Showing posts with label Lorca. Show all posts

May 25, 2021

Federico Garcia Lorca

 Federico Garcia Lorca's Drawings


Although Lorca's drawings dont receive attention,

 he was also a talented artist.


ஸ்பானிய ஃப்ராங்கோவின் தேசீயவாத சக்திகளால் 1936ல் 

லோர்க்கா கைது செய்யப்பட்ட 

சில மணி நேரத்திலேயே 

சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார். 

அவர் உடல் கூட கண்டுபிடிக்கப்படவில்லை.


38 வயது தான் அப்போது.


Federico Garcia Lorca 

met the violent fate he had foreseen 

when he wrote: 


"Then I realized I had been murdered

They looked for me in cafes, cemetaries and churches

But they did not find me

They never found me?

No, they never found me!"


நம்முடைய மகாகவி பாரதியை விடவும் 

இளைய வயதில் மறைந்திருக்கிறார் லோர்க்கா.


ஸ்பானிஷ் கவிஞன் லோர்க்கா 

 நாடகாசிரியர், இயக்குனரும் கூட. 


.......


http://rprajanayahem.blogspot.in/2016/05/blog-post_23.html

Aug 29, 2019

அறியாத குழந்தை இழுத்துச் சப்பும் நினைவில் இறவாத முலை


“பழகாத சொல்
ஒன்றுக்கு
பதறி
பாலிடால் குடித்து
செத்துப்போனாள்
பச்சைப் பிள்ளைக்காரி.
அறியாத குழந்தை
நினைவில்
இறவாத முலையை
இழுத்துச் சப்பும்
இன்னும்..”
- போகன் சங்கர்
லோர்க்கா நாடகக்காட்சியையும், கு.அழகிரிசாமி சிறுகதை நிகழ்வையும் இணைத்து இந்த வருடம் மே மாதம் நான் “ தாயின் பிணத்துடன் பாலகர்கள்” பதிவு எழுதினேன்.
லோர்க்காவின் ”தலைப்பில்லாத ஒரு நாடகம்”.
இதில் ஷூ பாலீஷை தின்று விட்டு இறந்த தாயின் முலையின் மீது படுத்து தூங்கிப்போகும் குழந்தைகள்.
பச்சை பாலகர்களை பரிதவிக்க விட்டு இறந்து போகிற பரிதாபமான தாய் பற்றிய சிறுகதை கு.அழகிரிசாமியின்
“ இருவர் கண்ட ஒரே கனவு.”
’அம்மா செத்துப்போகாதே அம்மா, செத்துப்போகாதே அம்மா’ என்று பிணத்தைப்போட்டு அடிஅடி என்று அடிக்கும் பாலகர்களின் ஓலம்.
போகன் சங்கர் கவிதைக்கு கூட தாயின் பிணத்துடன் பாலகர்களுடன் ஒரு Relevance இருக்கிறதை காணலாம்.

May 11, 2019

தாயின் பிணத்துடன் பச்சை பாலகர்கள்


அழகான ஒரு பேரிளம் தாயும், வயது வந்த பதின்பருவ மகளும் எதிர்ப்பட்டால் ஒரு பரவசமான வாலிப உற்சாக கமெண்ட்
“தாயும் சேயும் நலம்.”
தாய போல பிள்ள, நூல போல சேல
Like mother, like daughter.
பச்சை பாலகர்களை பரிதவிக்க விட்டு இறந்து போகிற பரிதாபமான தாய் பற்றிய கதை கு.அழகிரிசாமியின் “ இருவர் கண்ட ஒரே கனவு”

மாட்டு தொழுவில் ஐந்தாறு ஓலைகளை வைத்துக் கட்டிய மறைவுக்கு இந்தப்புறம் மாடுகளும், அந்தப்புறம் வெள்ளையம்மாளும் அவளுடைய ஆறு வயதும் ஐந்து வயதும் ஆன இரு பாலகர்களும் வசிக்கிறார்கள்.
கூலி வேலைக்கு செல்லும் பெண் அவள்.
தொழுவில் குடியிருக்க வெள்ளையம்மாள் தொழுவின் சொந்தக்காரர் வீட்டில் இலவசமாக வேலை செய்து வர வேண்டியிருக்கிறது. அப்படி அவள் அழைக்கப்படும் தினத்தில் கூலி வேலைக்கும் போக முடியாது.
அவள் இப்போது கூலி வேலைக்கு போக முடியாததற்கு காரணம் குளிர் காய்ச்சல் மட்டுமல்ல. உடுத்திக்கொள்ளக்கூட துணி இல்லாமல் போனதும் தான்.
பசியில் துடிக்கும் குழந்தைகள். வேலப்பன் வீட்டில் கிடைத்த கஞ்சியையும் தரைக்கு தாரை வார்க்க வேண்டியிருக்கிறது. பசி என்பதற்காக அடுத்த வீட்டில் கஞ்சி வாங்கிக் குடிப்பது கேவலம் என்று அவர்களுக்கு அம்மா சொல்லி வந்திருந்தாள்.
தொழுவை நோக்கி ஓடி வந்தார்கள். அம்மா கிழிந்து போன பழைய கோணியின் கந்தலைப் போர்த்திக்கொண்டு கிடந்தாள். கண்கள் பாதி மூடி உடம்பில் அசைவில்லாமல்.
அம்மா எத்தனையோ தடவை செத்துப்போகும் விளையாட்டை ஆடியிருக்கிறாள். அம்மா செத்துப்போகாதே அம்மா, செத்துப்போகாதே அம்மா என்று பிணத்தைப்போட்டு அடிஅடி என்று அடித்தார்கள். செத்துப்போகாதே என்று பாலகர்கள் ஓலம்.
லோர்க்காவின் நாடகம் “ Play without a title”.

In a small room, a woman died of hunger. Also,her two starving children were playing with the dead woman’s hands, tenderly, as if they were two loaves of yellow bread. When the night came, the children uncovered the dead woman’s breasts and went to sleep upon them while eating a can of shoe polish.
ஷூ பாலீஷை தின்று விட்டு இறந்த தாயின் முலையின் மீது படுத்து தூங்கிப்போகும் குழந்தைகள்.
இடைச்செவலாயிருந்தாலென்ன. ஸ்பெயினில் ஒரு ஊராய் இருந்தாலென்ன.

May 23, 2016

Lorca's "Play without a Title"








லோர்க்கா ஒரு ஸ்பானிஷ் கவிஞன், நாடகாசிரியர், இயக்குனர்.  கவனம் பெறாத ஓவியன்.

 (Lorca's two portraits by Salvador Dali )


மிக பிரபலமான ஓவியன் சால்வடார் டாலியின் நெருக்கமான பரிச்சயம் பெற்ற லோர்க்கா.



லோர்க்கா எழுதிய பரிட்சார்த்த நாடகம்
“ தலைப்பில்லாத நாடகம்” நாடகத்தின் தலைப்பே “Play without title” நாடகத்தில் ஆடியன்ஸிலுள்ள ஸ்பெக்டேட்டர்ஸ் அதாவது பார்வையாளர்கள், வசனத்தை எடுத்துக்கொடுக்கிற ப்ராம்ப்டர் எல்லாம் கதாபாத்திரங்களாக வருவார்கள். ’நாடக மேடை’க்கும் ’அரங்கு’க்கும்இடையிலான பாரம்பரிய எல்லைக்கோட்டை லோர்க்கா இதில் அகற்றி விட்டார்!
லோர்க்கா இதை மூன்று அங்கங்கள் கொண்ட நாடகமாக எழுதத்திட்டமிட்டு இருந்தார். நாடகத்தின் தலைப்பு! –
“The dream of life” இதை முழுமையாக எழுதவில்லை. நாடகம் incomplete ஆக ஒரு அங்கம் தான் எழுத முடிந்தது. நாடகம் 1935 வாக்கில் எழுதப்பட்டதாக இருக்கவேண்டும். ஆனால் 1978ல் தான் அச்சு வடிவம் பெற்ற புத்தகமானது.

Lorca’s play is showing you a tiny corner of reality.Lorca is shouting the simplest truths that you do not wish to hear. The play analyses issues of class and idealogical division, of intolerence and hatred.
 நடிகர்கள் பார்வையாளர்களாக, பார்வையாளர்களோ நடிகர்களாக!

Why must we always go to theater to see what is happening and not what is happening to us. The spectator's mind is at ease because he knows that the play is not going to be focussing on him, but how beautiful it would be if they summoned him to the boards and made him to speak!

ஷேக்ஸ்பியரை தொடாமல் முடியுமா?
Play without title நாடகத்தில் ஷேக்ஸ்பியரின் ’மிட்சம்மர் நைட்’ஸ் ட்ரீம்’ பற்றி லோர்க்கா சொல்வது: ”இந்த மிட்சம்மர் நைட்’ஸ் ட்ரீம் நாடகம் மகிழ்ச்சி சம்பந்தப்பட்டதல்ல. இந்த நாடகத்தின் ஒவ்வொரு அம்சமும் சுட்டிக்காட்டுவது என்னவென்றால், காதலென்பது, எத்தகைய காதல் என்றாலும் ஒரு தற்செயல் நிகழ்வு, ஒரு விபத்து தான். அது நம்மை சார்ந்த விஷயமேயல்ல. The plot of the play is somber !
மக்கள் ஒதெல்லோ பார்க்கும்போது அழமுடிகிறது. ’டேமிங் ஆஃப் த ஷ்ரூ’ பார்த்து விட்டு சிரிக்க முடிகிறதெல்லாம் சரி. ஆனால் மிட்சம்மர் நைட்’ஸ் ட்ரீம் பார்க்கும்போதும் அந்த நாடகத்தின் தன்மை புரியாமல் சிரிப்பது அபத்தம்!”
ஸ்பானிய ஃப்ராங்கோவின் தேசீயவாத சக்திகளால் 1936ல் லோர்க்கா கைது செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார். அவர் உடல் கூட கண்டுபிடிக்கப்படவில்லை.
38 வயது தான் அப்போது.

Federico Garcia Lorca met the violent fate he had foreseen when he wrote: 
"Then I realized I had been murdered
They looked for me in cafes, cemetaries and churches
But they did not find me
They never found me?
No, they never found me!"



நம்முடைய மகாகவி பாரதியை விடவும் இளைய வயதில் மறைந்திருக்கிறார் லோர்க்கா.
குறைப்பட்ட நிலையில் ”வாழ்க்கையின் கனவு” நாடகம் இன்று
“ தலைப்பில்லாத நாடகம்” என்ற தலைப்பில் அறியப்படுகின்றது!

Perhaps life is Just that….a dream and a fear ...
ஓரு கனவு ... ஓரு பயம்...ஒருவேளை இது தான் வாழ்க்கையோ - ஜோசப் கான்ராட் தான் இப்படி கவலைப்பட்டான் ..

......................................................................

Although Garcia Lorca's drawings dont receive attention, he was also a talented artist.

Lorca's drawings

 

................................................................................

http://rprajanayahem.blogspot.in/2008/08/blog-post_18.html

http://rprajanayahem.blogspot.in/…/edward-albees-zoo-story.…

https://www.facebook.com/rprajanayahem/posts/1781202672093191?pnref=story

http://rprajanayahem.blogspot.in/2009/08/blog-post_22.html

https://www.facebook.com/rprajanayahem/posts/1781202672093191

.........................................................................