Share

Dec 30, 2008

குழந்தைகளை தவித்து ஏங்க விட்டு

குழந்தைகள் பார்க்கும்படியாக சாப்பிடுவது ஒரு வகையான அநீதி .பஸ்ஸில் ,ரயிலில் குழந்தைகள் பார்க்கும்போது சில பெரியவர்கள் விவஸ்தையில்லாமல் ருசியான பலகாரங்கள் சாப்பிடுவார்கள் .

ஆனால் ஒன்று.இந்த காலத்தில் ரயிலில் இப்படி பிஸ்கட் , பழங்கள் , சாக்லெட் மற்றவர்களுக்கு நாம் கொடுத்தால் கூட நம்மை சந்தேக கண் கொண்டு பார்த்துவிடுவார்கள் . மயக்க மருந்து தடவி கொடுக்கும் கொள்ளைக்காரனோ என பயப்படுவார்கள். காலம் கெட்டுப்போச்சி !

வீட்டிற்கு வரும் விருந்தாளிக்கு சாப்பிடகொடுப்பதை அவர்களிடம் கேட்கக்கூடாது என்று குழந்தைகளை பெற்றவர்கள் மிரட்டி வைப்பார்கள் .

முத்துலிங்கத்தின் சிறுகதை

" முதல் விருந்து , முதல் பூகம்பம் , முதல் மனைவி "

அதில் அவர் இந்த நிகழ்வை விவரிக்கிற அழகு .

" பெரியய்யா கோழியையும் , அது இட உத்தேசித்திருந்த முட்டைகளையும் ருசித்து சாப்பிட்டார் . நாங்கள் ஏழு பேர் அவரைச்சுற்றி வர நின்றோம் . அவருடைய உணவில் யாரும் பங்கு கேட்க கூடாது என்று நாங்கள் அறிவுருத்தப்பட்டிருந்ததால் மறுப்பதற்கு தயாராகவே இருந்தோம். அது அவருக்கு எப்படியோ தெரிந்து விட்டது . அவர் ஒரு வாய் கூட கொடுக்கவில்லை "

யூமா வாசுகியின் 'ரத்த உறவு ' நாவலிலும் இது போல குழந்தைகளை தவித்து ஏங்க விட்டு, அவர்கள் முன் சாப்பிடும் பெரியவர்கள் உண்டு.

இந்த வருடம் மார்ச் மாத ஆனந்த விகடன் இதழ் ஒன்றில்

" கழுதைவண்டிசிறுவன் " என்று ஒரு சிறுகதை அமுத்துலிங்கம் எழுதியிருந்தார் . அதை படித்த போது நெஞ்சே உறைந்து விட்டது .

" கழுதைவண்டியை ஒட்டியபடி ஆப்பிரிக்கசிறுவன்.சின்னபையன்.

அவன் கேட்ட பணத்தைக்கொடுத்துப்பாலை வாங்கினேன் .

அடுத்த நாளும் அங்கே தங்குவேணா என்று விசாரித்தான் .

'அப்போ இரண்டு லிட்டர் பால் வாங்கிகொள்ளுங்கள்'

'ஏன் ? '

'நாளைக்கு நான் வர முடியாது .'

'ஏன் ?'

'நாளைக்கு என் அம்மா செத்து விடுவார் .'

'யார் சொன்னது '

'டாக்டர் சொன்னார் '

' அம்மாவை யார் பார்த்துக்கிறது '

' என்னுடைய தங்கச்சி '

அது புத்தாண்டு கொண்டாட்ட நேரம் . அன்று மாலை புத்தாண்டு கொண்டாட்டம் !

Happy new year!

Millennium Celebration!

31st Dec 1999 to 1st Jan 2000

..

Millennium Celebration!

31st Dec 1999 to 1st Jan 2000

புத்தாயிரம் கொண்டாட்டம் . 20நூற்றாண்டிலிருந்து 21நூற்றாண்டு . ஆயிரம் வருடங்கள் முடிந்து இன்னொரு ஆயிரம் வருடங்களுக்கான தொடக்கம் என்பது எவ்வளவு அபூர்வமானது .

.....

என்னை விமான நிலையத்துக்கு அழைத்து சென்ற வாகன ஒட்டி , கடந்த இரவு கடந்த இரவு கழுதை வண்டி சிறுவனின் தாயார் இறந்து போனதைச்சொன்னார் . இப்போது நினைத்து ப்பார்க்கும்போது அந்தத்தாயார் எந்த நூற்றாண்டில் இறந்து போனார் என்பதை நான் கேட்டு தெரிந்து கொள்ளவில்லை என்பது ஞாபகத்திற்கு வருகிறது "

இப்படி முடித்திருக்கிறார் அமுத்துலிங்கம் .

........ ....... ......

New year!

....

Another year ! Another deadly blow!

-Wordsworth

Month follows month with woe,
And year wakes year to sorrow

-Shelley



Considering the legacy the 2008 has left, there is no great reason to feel any cheer
At the beginning of this new year .

New year!

5 comments:

  1. Bit sarcastic I would say. But as usual a good one. Nothing personal, [no offense meant]just thought of quoting it here,

    ''An optimist stays up until midnight to see the New Year in. A pessimist stays up to make sure the old year leaves''

    :-))

    Wish you a happy new year and keep going.

    Cheers,
    --Nokia Fan

    ReplyDelete
  2. படித்த கணத்தில் தோன்றிய எதிர்வினை:
    கடந்து போன நிமிஷத்திற்கு தெரியாது
    எது 2008 2009 yendru
    நாளை மற்றுமொரு நாளே
    கழுதை வண்டி பைய்யன்
    தொடர்கிறான் மறுநாளும்
    தன் தங்கையின் பசிபோக்க


    We can shout 31st nite in roads... the same f__kin words ...........
    happy new yeaaaaaarrrrrrrrrrr??????

    ReplyDelete
  3. Sir,
    Wishing you and your family a wonderful year ahead..

    Wishing myself a prosperous year interms of your blogposts!!!

    ReplyDelete
  4. Let us wish for the best....
    ..hope for the needy..
    ...and fair play for all..
    If this is not possible to attain in 2009
    ...I am sure there is always 2010.,2011........

    ReplyDelete
  5. Wish you Happy Year. Nice and honest account of your life. Keep up the good work.

    Kannan
    CBE

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.