Share

Showing posts with label வடிவேலு. Show all posts
Showing posts with label வடிவேலு. Show all posts

Jun 17, 2019

நகைச்சுவை மகா கலைஞர்கள்


கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மீது ஜெயகாந்தனுக்கு மிகுந்த பிரமிப்பு இருந்திருக்கிறது. ’நல்ல தம்பி’ படம் பார்த்து விட்டு ஒரு ரசிகனாக பாராட்டு கடிதம் கூட எழுதியிருந்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட தினத்தில் அவரை சந்திக்க வருவதாக அதில் தெரிவித்திருந்தார். ஏற்கனவே தோழர் ஜீவாவுடன் என்.எஸ்.கேயை சந்தித்தவர் தான் ஜெயகாந்தன். அதனால் தி.நகர் வெங்கட்ராமய்யர் தெருவில் இருந்த நட்சத்திர நடிகரின் இல்லத்துக்கு போயிருந்திருக்கிறார். அவருக்கு மிகவும் அதிர்ச்சி.

“நடிகர்கள், கலைஞர்கள் ஆகிய இந்தப் பிரபலங்கள் பிறருக்குச் சொல்லுகிற நெறிகளுக்கும் உபதேசங்களுக்கும், தாங்கள் அமைத்துக்கொண்டிருக்கிற சொந்த வாழ்க்கைக்கும் இடையே எவ்வளவு பெரிய இழிந்த இருண்ட பாதாளம் போன்ற இடைவெளியையும் அன்று கண்டேன். அங்கே நான் கண்ட காட்சியை என்னவென்று இங்கு விவரிக்கப்போவதில்லை” என்று ‘ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ நூலில் சொல்கிறார் ஜெயகாந்தன்.

எம்.ஜி.ஆர் முதலமைச்சராய் இருந்த போது “என்.எஸ்.கே இன்று உயிரோடு இருந்தால் அவரல்லவோ முதலமைச்சர்” என்று பூரிப்புடன் பெருமைப்பட்டார்.

சந்திரபாபுவின் திறமைகளைப் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
அவருடைய ஸ்டைல், டான்ஸ், பாடல்கள் evergreen.
நகைச்சுவை நடிகர்களில் பாபு ஒரு peculiar phenomenon.

சந்திரபாபு தன்னை என்ன பாடு படுத்தினார் என்பதை கண்ணதாசனின் ‘மனவாசம்’ விரிவாக கூறுகிறது. சந்திரபாபுவை வைத்து ’கவலையில்லாத மனிதன்’ படம் எடுத்ததற்கு உலகத்தில் உள்ள அவ்வளவு கவலைகளையும் தான் அனுபவித்ததாக கவிஞர் எழுதியிருந்தார்.
சந்திரபாபு தான் என் குருநாதர் ந.முத்துசாமிக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை கலைஞர். அவரிடம் இருந்த தனித்துவத்தை மிகவும் முத்துசாமி சிலாகிப்பார்.

நாகேஷின் ஈடு இணையில்லாத சாதனை.
ஸ்ரீவித்யா முதல் முதலாக ராமண்ணாவின் ’மூன்றெழுத்து’ படத்தில் நடிக்க ஸ்டுடியோவிற்குள் நுழைந்த அன்று நாகேஷ் குடித்து விட்டு செய்த கலாட்டாவைப் பார்த்து மிரண்டு ச்சீ என்று அருவருத்து வெறுக்க நேர்ந்ததாக சொல்லியிருக்கிறார்.
1971ல் அவரை பெரிய இயக்குனர்கள் கைவிட்டார்கள்.
ஸ்ரீதர் அவரை ஓஹோ ப்ரொடக்ஸன்ஸ் செல்லப்பாவாக்கியவர். 1971ல் ’அவளுக்கென்று ஓர் மனம்’ நாகேஷிற்கு இடம் கொடுக்கவில்லை.
’பணமா பாசமா’வில் நாகேஷை தூக்கிப்பிடித்த கே.எஸ்.ஜி. 1971ல் ‘மாலதி’ யில் இடம் தரவில்லை.
திருவிளையாடல் தருமி, தில்லானா மோகனாம்பாள் வைத்தி என்று என்று அழகு பார்த்த ஏ.பி.என் 1971ல் சுருளிராஜனை வைத்து “கண்காட்சி’’ எடுத்தார்.
எம்.ஜி.ஆரே ரொம்ப முன்னரே நாகேஷை ஒதுக்கி வைத்திருந்தார். தேடி வந்த மாப்பிள்ளை, என் அண்ணன் படங்களெல்லாம் நாகேஷ் இல்லாமல் தான். 1971ல் குமரிக்கோட்டம், ரிக்‌ஷாக்காரன், நீரும் நெருப்பும். எதிலும் நாகேஷ் கிடையாது.
நாகேஷ் இயக்குனர் பாலச்சந்தரையே என்ன பாடு படுத்தினார். 1972ல் ’கண்ணா நலமா’வில் நாகேஷ் கிடையாது. எம்.ஆர்.ஆர். வாசு தான். ’வெள்ளி விழா’வில் தேங்காய் சீனிவாசனை நடிக்க அழைத்தார்.
நாகேஷின் கால பிரமாணம் எத்தகைய ஆச்சரியகரமானது. அவருடைய மின்னல் வேகம்.
இன்றும் தமிழ் திரையின் நகைச்சுவைக்கு ஒட்டு மொத்த சாதனை என்றால் நாகேஷ், கவுண்டமணி, வடிவேல் மூவரும் தானே.
எப்பவும் காண்ட்டுலேயே இருக்கும் கவுண்டமணி கலக்கல்.
எத்தனை தடவை நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு நகைச்சுவை காட்சிகளை பார்த்தாலும் சலிப்பதேயில்லை.
ஒரு ப்ரொடக்ஸன் அஸிஸ்டண்ட் அரண்டு சொன்ன விஷயம். “அய்யோ கவுண்டமணி தண்ணி போட்டுட்டா மிருகம். உயிர எடுத்துடுவான். கை நீட்டிடுவான். அடிச்சிடுவான்”

ஆர்.சுந்தர் ராஜனுக்கும் கவுண்டமணிக்கும் நிகழ்ந்த மோதல்.


வடிவேலு பற்றி இன்றைய காலத்தில் யாருக்கும் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அளப்பரிய சாதனை. பிரமிக்கத்தக்க நடிப்பு.
அனைவர் வாழ்விலும் ஒன்றி விட்ட கலைஞன்.
எல்லாருக்கும் vocabulary எவ்வளவு supply செய்து விட்டார் வடிவேலு.
எவ்வளவு சாதாரண படத்திலும் அவருடைய விஸ்வரூபம்.
மார்க்கெட் போய் விட்டதாம். தினமும் வடிவேலு தானே சஞ்சாரம்.
கதாநாயகர்கள் உட்பட இன்று வரை வந்துள்ள மிகப்பெரிய நடிகர்கள் அனைவரையும் நடிப்பில் மிஞ்சிய வடிவேலுவின் ஈடு இணையற்ற ஃபார்ம்.
எம்.ஆர்.ராதா ஒருவர் தான் இன்றும் வடிவேலுவுக்கு சவாலான அமரத்துவ கலைஞர்.

வடிவேலு பற்றி தான் எவ்வளவு பரபரப்பு.
நம்பிராஜன் என்ற சின்னாளப்பட்டிக்கார நடிகர், ஜெயமணி ஆகியோருடன் கைகலப்பு.
சிங்கமுத்து ரியல் எஸ்டேட் வில்லங்கம்.
விஜயகாந்த் வீட்டு இழவு ஒன்றில் காரை எடுக்கச்சொல்லி கலவரம். அடி கூட வடிவேலுக்கு விழுந்ததாமே.
வாழ்வு கொடுத்த ராஜ்கிரணிடம் நன்றி காட்டவில்லை.
ஜி.வி. தற்கொலை செய்து கொண்ட போது அவரிடம் வாங்கிய ஐந்து லட்சத்தை வடிவேலு பாவப்பட்ட ஜி.வி குடும்பத்திற்கு கொடுக்க மறுத்தது.
தயாரிப்பாளர் ஒருவரிடம் விமானத்தில் போய் வர எட்டு மணி நேரம் ஆனதற்கும் ஒரு கால்ஷீட் கணக்காக்கி ரெட்டை இலக்க இலட்சத்தில் வடிவேலு சம்பளம் கேட்ட விவகாரம்.







...

Jan 26, 2009

மத்திய அரசு பத்ம விருதுகள் .

ஏ ஆர் ரஹ்மான் குளோபல் அவார்ட் வாங்கி ஆஸ்கார் விருது வாங்கி விடவும் வாய்ப்பு வந்திருக்கிறது .
தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் பத்ம பூஷன் விருது பெறுகிறார் . அடுத்த வருடம் அசோகமித்திரனுக்கு கொடுக்க வேண்டும் . செய்வார்களா ? அசோகமித்திரனுக்கு ஞான பீட விருது வேறு இன்னும் தரப்படாமலே இருக்கிறது . எழுத்து , எழுத்தாளர் என்றதகுதி அளவுகோலில்
ஒரு அசோகமித்திரன் பத்து ஜெயகாந்தனுக்கு சமம் .
கிட்டத்தட்ட உத்தேசமாக
நாற்பது வருடங்களுக்கு முன்னரே தி.ஜானகிராமன் ,
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் சுந்தர ராமசாமி , கி .ராஜநாராயணன் , அசோகமித்திரன்,நகுலன் ,இந்திரா பார்த்தசாரதி ,
இருபத்தைந்து வருடங்களுக்கு முன் ஆதவன்
ஜெயகாந்தனை முந்தி சென்று விட்டார்கள்.
அருணா சாய்ராம் பத்ம ஸ்ரீ விருது பெறுகிறார் .கர்நாடக சங்கீதம் செய்த புண்ணியம் அருணா சாய்ராம் . எம் .எஸ் .சுப்புலக்ஷ்மி திறமைக்கு சற்றும் குறைந்தவரல்ல அருணா . இது என் அசைக்க முடியாத நம்பிக்கை .
அந்த காலத்தில் சிவாஜி கணேசன் , ஜெமினி கணேசன் ,வி நாகையா போன்ற நடிகர்கள் பத்ம ஸ்ரீ விருது வாங்கினார்கள் . எம்ஜியார் ரிக்க்ஷாகாரன் " ஓதம்! ஓதம்! "நடிப்பிற்கு (!)பாரத் விருது வாங்கினார் .ஆனால் எம் ஆர் ராதா, எஸ் வி ரங்காராவ் போன்ற உன்னத கலைஞர்கள் அரசு விருதுகள் கௌரவமின்றி தான் மறைந்தார்கள் . Unsung ! Unhonoured!! Unwept!!!
இன்று வரை வந்துள்ள நகைச்சுவை நடிகர்களில் சத்தியமாக முதன்மையானவர் நாகேஷ் !
எழுத்தாளர் சுஜாதாவின் வார்த்தைகள் -நாகேஷ் பற்றி -'காலபிரமானம் ! மின்னல் வேக மாற்றம் !'
நாகேஷுக்கு ஈடு என அதன் பின் யாரும் கிடையாது . இன்றும் நாகேஷ் நடிக்கிறார் என்றாலும் 1962 துவங்கி 1970வரை நாகேஷின் உச்ச பட்ச சாதனை ! இவர் அந்த காலத்தில் பத்மஸ்ரீ அவார்ட் வாங்க முடியவில்லை . இன்னும் காலதாமதமில்லை . மிக சிறந்த விருது கொடுத்து மத்திய அரசு கௌரவிக்கவேண்டிய மகத்தான கலைஞன் நாகேஷ் ! அவருக்கு கிடைக்காத கௌரவம் இன்று விவேக் பெற்றுள்ளார். வடிவேலு விடம் உள்ள Inbuilt Humour அவரை விவேக்கை விட முன்னணியில் நிறுத்துகிறது. வடிவேலுக்கும் இந்தபத்மஸ்ரீ விருது கிடைக்கவேண்டும். அடுத்த வருடங்களில் வாங்கி விடுவார் .
கலைவாணர் என் எஸ் கே ,தங்கவேலு ,சந்திரபாபு , சோ ,தேங்காய் சீனிவாசன் ,சுருளிராஜன் , கௌண்டமணி ,எஸ்.வி.சேகர் , வடிவேலு ,விவேக் போன்ற கலைஞர்களுக்கு ஈடாக இந்தியாவில் மற்றமொழி காமடியன்கள் யாருமே கிடையாது . உரைபோட ஆள் கிடையாது . தமிழனின் நகைச்சுவை உணர்வின் தரம் அப்படி .