உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த திலீபன் துவங்கி எத்தனை விடுதலைப்புலிகளின் மரணங்களை பார்த்து விட்டோம்.
நேற்று அந்த கர்னல் ரூபன், லெப்டினன்ட் கர்னல் சிரித்திரன் இருவரும் சிரித்தவாறு பிரபாகரனோடு நிற்கும் அந்த புகைப்படம் ஏற்படுத்தி விட்ட மன வியாகுலம் சொல்லும் தரமன்று.
சென்ற வெள்ளியன்று இருவரும் ஜெட் விமானத்தில் கொழும்பு கிளம்பு முன் தங்கள் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் உலகம் மறக்க முடியாத புகைப்படங்களுள் ஒன்று.
ரூபனின் அகன்ற புன்னகை, சிரித்திரனின் கண்கள்,மூக்கு, மீசை, வாய் அனைத்திலும் வியாபித்து விட்ட அந்த சிரிப்பு ..
எங்ஙனம் இது சாத்தியம் .. மரணத்தை தழுவ கிளம்பு முன் இப்படி மகிழ்ச்சியை வெளிப்படுத்த இயலுமா?
அந்த இரு இளைஞர்கள் நீர்க்குமிழி வாழ்வு பற்றி அந்த புகைப்படம் சொல்லும் கவிதையை யாராலும்,எப்பேர்ப்பட்ட கொம்பாதி கொம்பனான மகா கவியாலும் வடித்துவிடமுடியுமா?
படைப்பு, படைப்பாளி, காவியம், திரைக்காவியம்,ஓவியம், இசை, அனைத்தையுமே கேலி செய்யும் அந்த இளைஞர்களின் ஆனந்த சிரிப்பு கண்டு வாய் விட்டு அழுதேன். விம்மி,விம்மி அழுதேன்.
ரூபன், சிரித்திரன் இருவரும் மரணமடையும்போது துயரம் அவர்களை கவ்வியிருக்கும். ஏனெனில் இருவரின் நோக்கமும் நிறைவடையாமலே வானத்திலேயே அவர்களின் ஊர்தி வீழ்த்தப்பட்டிருக்கிறது.
நேற்று அந்த கர்னல் ரூபன், லெப்டினன்ட் கர்னல் சிரித்திரன் இருவரும் சிரித்தவாறு பிரபாகரனோடு நிற்கும் அந்த புகைப்படம் ஏற்படுத்தி விட்ட மன வியாகுலம் சொல்லும் தரமன்று.
சென்ற வெள்ளியன்று இருவரும் ஜெட் விமானத்தில் கொழும்பு கிளம்பு முன் தங்கள் தலைவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் உலகம் மறக்க முடியாத புகைப்படங்களுள் ஒன்று.
ரூபனின் அகன்ற புன்னகை, சிரித்திரனின் கண்கள்,மூக்கு, மீசை, வாய் அனைத்திலும் வியாபித்து விட்ட அந்த சிரிப்பு ..
எங்ஙனம் இது சாத்தியம் .. மரணத்தை தழுவ கிளம்பு முன் இப்படி மகிழ்ச்சியை வெளிப்படுத்த இயலுமா?
அந்த இரு இளைஞர்கள் நீர்க்குமிழி வாழ்வு பற்றி அந்த புகைப்படம் சொல்லும் கவிதையை யாராலும்,எப்பேர்ப்பட்ட கொம்பாதி கொம்பனான மகா கவியாலும் வடித்துவிடமுடியுமா?
படைப்பு, படைப்பாளி, காவியம், திரைக்காவியம்,ஓவியம், இசை, அனைத்தையுமே கேலி செய்யும் அந்த இளைஞர்களின் ஆனந்த சிரிப்பு கண்டு வாய் விட்டு அழுதேன். விம்மி,விம்மி அழுதேன்.
ரூபன், சிரித்திரன் இருவரும் மரணமடையும்போது துயரம் அவர்களை கவ்வியிருக்கும். ஏனெனில் இருவரின் நோக்கமும் நிறைவடையாமலே வானத்திலேயே அவர்களின் ஊர்தி வீழ்த்தப்பட்டிருக்கிறது.
