Share

Showing posts with label வி.நாகையா. Show all posts
Showing posts with label வி.நாகையா. Show all posts

Oct 12, 2019

அசோகமித்திரனின் 'பாண்டி பஜார் பீடா'




சித்தூர் வி. நாகையா,
சி. எஸ். ஆர் என்ற சிலகலபுடி சீதாராம ஆஞ்சநேயலு இருவரை வைத்து அசோகமித்திரன் ஒரு சிறுகதை ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார்.
'பாண்டி பஜார் பீடா. ' நாகையா இன்று சிலையாக நிற்கிற பனகல் பார்க் அருகிலுள்ள பாண்டி பஜார் தான் கதைக்களம்.

சி. எஸ். ஆர். பாதாள பைரவியில் மகாராஜாவாக நடித்தவர்.

கதையில் நாகையா வெங்கையாவாக. சி. எஸ். ஆர் அதே பெயரில்.
அப்பொழுதுதான்
இருவருக்குமே அசதியான காலம்.


நாகையா பீடா வாங்க வரும்போதே பீடா கடை கோபால கிருஷ்ணா' முதல் போணியாகட்டும் '.
அர்த்தம் - கடனுக்கு முதல் பீடா தரமுடியாது.

நாகையா காசு கொடுத்தே முதல் போணி செய்து விட்டு மீதி காசை வாங்க மறுத்து நாளைக்கு பீடா வுக்கு அவனிடமே இருக்கட்டும்.

கீதா கபே முன் நிற்கிறார்.

அந்த எட்டணா இருந்தால் டிபன் காபி சாப்பிட்ட பிறகு பீடா போட்டிருக்க முடியும். பீடாக்கடைக்காரனிடம் ரோஷப்பட்டதன் விளைவு.

பழைய கார் ஒன்றில் சி. எஸ். ஆர் வருகிறார்.

டிரைவர் தன்னை ரிலீவ் பண்ணச்சொல்லி எரிச்சல் படுகிறான். சி. எஸ். ஆர் காபி சாப்பிட்ட பின் வீட்டில் அவரையும் காரையும் வீட்டில் விட்ட பிறகு தான் அவன் கிளம்ப முடியலாம். கவனிக்க டிரைவருக்கு காபி கிடையாது.

நாகையா கீதா கபேக்குள் சி. எஸ். ஆர் தயவில்.
'சி. எஸ். ஆர் எங்கிட்ட ஒரு காசு கிடையாது. '
' பயப்படாதே. நான் பாத்துக்கிறேன் '

ரெண்டு பிளேட் இட்லி சாம்பார்.

' ஜீவிதம் ' தெலுங்கு படத்தில் நல்ல பேரும் பிரபலமும் பார்த்த சி. எஸ். ஆர் என்பது நாகையாவிற்கு ஞாபகம் வருகிறது.

வருத்தப்படுகிறார். பணம் வந்த போது, ஏன் ஜாக்கிரதையா இல்லை. நானாவது மூன்று படங்கள் எடுத்து வசதியை தொலைத்தேன். சி. எஸ். ஆர்., அவனாக ஒரு படம் கூட எடுக்கவில்லை.

இட்லிக்கு பிறகு ஒரே ஒரு கப் காபியை இருவரும் பகிர்ந்து குடிக்கிறார்கள். பில்லுக்கு சி. எஸ். ஆர் பணம் கொடுக்கிறார்.

'உங்களை வீட்டுல விட்டுட்டு போறேன். '

நாகையா பதில்' இங்கே நிக்கிறேன். எவனாவது கர்ணன் மாதிரி வருவான். '

சி. எஸ். ஆர் போன பின் நாகையா கொஞ்சம் நடந்து சலூன் பக்கம் வருகிறார்.

ஒரு இளைஞன் இவர் பாதங்களை தொட்டு வணங்குகிறான்.

சவுண்ட் அசிஸ்டெண்ட். சித்தூர் தான் அவனுக்கும்.
அமெரிக்கா வரை நாகையா பிரபலம் பற்றி சவுண்ட் எஞ்சினியர் அவனிடம் சொன்னதை குறிப்பிடுகிறான். பால் முனி கூட இவர் பாட்டை கேட்டு உருகியிருக்கிறார்.

நாகையா உடைந்து போய் சொல்வது " இந்த மாதிரி பேச்செல்லாம் நான் நிறைய கேட்டிருக்கேன். இதுக்கெல்லாம் அர்த்தமே கிடையாது."

இளைஞனுடைய அம்மாவுக்கு இவர் தான் யோகி வேமனா.

சித்தூருக்கு எங்க சவுண்ட் இஞ்சினியர் கார்லயே போவோம். என் அம்மா, அப்பா உங்கள பாத்தா சந்தோஷப்படுவாங்க.

அந்த சவுண்ட் அசிஸ்டெண்ட் தான் அன்று அவருடைய பால் கடனை தீர்க்கிறான்.

.........

புகைப்படத்தில் இரண்டாவதாக நாகையா நிற்கிறார். அதே வரிசையில் ஆறாவதாக நிற்கிற நடிகர்
சி. எஸ். ஆர்.
இந்த புகைப்படம் 1940களில் எடுக்கப்பட்டிருக்கிறது.


கால கண்ணாடியில் ஒரு அபூர்வ காட்சி.
எவ்வளவு கலைஞர்கள்.
தில்லானா மோகனாம்பாள் எழுதிய கொத்தமங்கலம் சுப்பு, வி. நாகையா,
ஆறாவதாக
சி. எஸ். ஆர்.
தண்டபாணி தேசிகர் அருகே கே. ஆர். ராமசாமி, ரஞ்சன், டி. ஆர். ராமச்சந்திரன்,
கடைசியில் நிற்பவர் டைரக்டர் கே. சுப்ரமணியம். (பத்மா சுப்பிரமணியம் அப்பா)
உட்கார்ந்து இருக்கும் பெண்கள் புஷ்ப வல்லி(ஜெமினி மனைவி, ரேகா அம்மா), பாதாள பைரவி கதாநாயகி மாலதி
நடுவில்
டி. ஆர். ராஜகுமாரி, சாந்தகுமாரி, பி. பானுமதி,
கீழே சுந்தரிபாய் கொத்தமங்கலம் மனைவி.
........
இந்த புகைப்படம் எனக்கு அனுப்பி பிரமிக்க வைத்தவர் சித்ரா சம்பத். அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
கிருஷ்ணன் நம்பியின் தம்பி வெங்கடாசலம் கூட என் கவனத்துக்கு கொண்டு வந்தார்.





Apr 1, 2018

வி. நாகையா - வித்யாவதி


வித்யாவதி சினிமாவில் நடிகையாக அக்கா சந்தியாவுக்கு முன்னதாகவே நுழைந்தவர். அவர் தான் பின் அக்காவையும் சினிமா நடிகையாக உதவியவர். ஜெயலலிதாவின் தாயார் சந்தியா.
கல்யாண்குமார் என்னிடம் சொன்ன ஒரு தகவல். 1954ல் கல்யாண்குமார் கதாநாயகனாக கன்னடப்படத்தில் அறிமுகமான போது அவருக்கு முதல் படத்தில் ஜோடி வித்யாவதி தான். ஜெயலலிதாவுடனும் கல்யாண்குமார் பின்னால் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.
1953ம் ஆண்டு நடிகர் வி.நாகையா தயாரித்த ’என் வீடு’ படத்தில் வில்லியாக வித்யாவதி நடித்தார்.

வாழ்க்கையிலும் இருவரும் இணைந்தனர். நாகையாவின் அபிமான தாரமாக வித்யாவதி ஆகிப்போனார்.
வி. நாகையா கண்ணியமான பாத்திரங்களில் படங்களில் வருபவர்.
1956ம் ஆண்டு ’அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ படத்தில் எம்.ஜி.சக்ரபாணிக்கு ஜோடியாக நடித்தார். விசிறியால் விசிறிக்கொண்டு வரும் வில்லி.
ஃபியட் கார் செல்ஃப் ட்ரைவிங். சிகரெட் புகைத்த நடிகை வித்யாவதி.
சந்தியாவும் வித்யாவதியும் கூட இணைந்து நடித்திருக்கிறார்கள்.
நாமக்கல் சேஷையங்காரின் சிஷ்யர்களில் பிரதானமானவர் சித்தூர் வி நாகய்யா.
நாகய்யா பற்றி ... எம். எஸ் . சுப்புலக்ஷ்மிக்கு ஜோடியாக ' மீரா ' படத்தில் நடித்தவர்.
புஷ்பவல்லிக்கும் ஒரு படத்தில்(கோரகும்பர் ) ஜோடியாக நடித்தவர். அந்த புஷ்பவல்லி -நாகய்யா படத்தில் ஒரு சின்ன ரோல் ஜெமினி கணேசன் செய்திருக்கிறார்.
தெலுங்கு, தமிழ் படங்களில் சிறந்த நடிகராக நாகையா அறியப்பட்டிருந்தார். நல்ல உயரமான நடிகர்.
சொந்தப்படம் எடுக்கிற ஆசை இவரை நஷ்டப்படுத்தி பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்பும் நிலைக்கு ஆளாக்கியது.

பின்னால் 1960களிலும் 1970களின் ஆரம்பத்திலும் அப்பா ரோல்,மாமனார் ரோல்களிலும் சாமியார் ரோல்களிலும் தமிழ் படங்களில் வந்து இடைவேளைக்கு முன் அல்லது படம் முடியுமுன் பெரும்பாலும் செத்துப்போவார், பாவம்.
எத்தனையோ நல்ல பாடல் காட்சிகள்.
’சின்ன சின்ன ரோஜா, சிங்கார ரோஜா, அன்ன நடை நடந்து அழகாய் ஆடி வரும் ரோஜா’ குழந்தையாக குட்டி பத்மினி. பி.பி.எஸ். பாடல்.
’நம்பினார் கெடுவதில்லை, நான்கு மறை தீர்ப்பு’
’அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்பான் கீதையிலே கண்ணன்’

ஒரு பெரியவர் சொன்னார். ஒரு படம் செகண்ட் ஷோ போயிருக்கிறார்.
அந்த படத்தில் நாகய்யா இடைவேளையின் போதோ, அதன் பின்னரோ,என்ன எழவோ நாகய்யா இருமி அழுது கண்ணீர் விட்டு,நடுங்கும் குரலில் உருக்கமாக பேசிவிட்டு வழக்கம்போல செத்துப்போயிருக்கிறார்.
படம் முடிந்து வீட்டுக்கு வந்து இரண்டரை மணி போல இந்த பெரியவர் தூங்கிவிட்டு காலை ஏழு மணிக்கு எழுந்து தினசரியைப் பிரித்தால் மூன்றாம் பக்கம் சின்ன புகைப்படத்துடன் " பத்மஸ்ரீ வி.நாகய்யா மரணம் " என்று செய்தி சின்ன அளவில்.
செய்தி படித்த பெரியவருக்கு அதிர்ச்சி கிஞ்சித்தும் இல்லை. வருத்தமும் கொஞ்சம் கூட இல்லை.
ஒரு ஐம்பது படத்திலாவது நாகய்யாவின் மரணத்தைப் பார்த்து சலித்திருந்த தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு யாருக்குமே இது செய்தியாக அப்போது சலனமேதும் ஏற்படுத்தவே இல்லை.
ஆனால் நாகய்யா பன்முக ஆற்றல் நிறைந்தவர். திரை இசைப் பாடல்களில் கூட இவர் சொந்தக்குரலில் பாடிய " திருமுருகா என ஒரு தரம் சொன்னால் உருகுது நெஞ்சம் " இன்றும் கேட்கக்கிடைக்கும்.
இப்போது தி நகர் பனகல் பார்க்கில் சிலையாக இன்று நிற்கிறார்!
அசோகமித்திரன் கடைசி கால கதையொன்று ஆனந்த விகடனில் வெளியானது.
நான் அவருக்கு போன் பண்ணி சொன்னேன்.
இதில் முக்கிய கதாபாத்திரம் சித்தூர் வி. நாகையா.
”அடேடே..ஆமாம்” என்றார்.
அந்தக் கதை ‘பாண்டி பஜார் பீடா’
தன்னை சிலாகித்து புகழ்ந்து பேசும் ரசிகனிடம் “இந்த மாதிரி பேச்செல்லாம் நான் நிறைய கேட்டிருக்கேன். இதுக்கெல்லாம் அர்த்தமே கிடையாது” என்று சொல்லும் நடிகர் வெங்கையா தான் நாகையா.
’பாண்டி பஜார் பீடா’ கதையில் வரும் சி.எஸ்.ஆர் என்ற ஸ்டார் நடிகர் சி. எஸ். ஆர். பாதாள பைரவியில் மகாராஜாவாக நடித்தவர்.  தெலுங்கு நடிகர்.

‘பாத்திரத்தின் முன் மாதிரியை அடையாளம் கண்டு கொள்வது ஒரு தனித்தேர்ச்சியின் பேரில் வருவது’   
- அசோகமித்திரன் 


Oct 22, 2009

நாமக்கல் சேஷையங்கார்

நாமக்கல் நரசிம்ம ஐயங்காரின் பிரதான சிஷ்யன் சேஷையங்கார். இவர் திருக்குருங்குடியை சேர்ந்தவர் . ராமநாதபுரம்,கோயம்புத்தூர் ,சென்னை போன்ற ஊர்களில் சேஷையங்கார் வாழ்ந்தார். அவர் குருநாதர் ஊர் இவர் பெயருடன் சேர்ந்து நாமக்கல் சேஷையங்கார் என்றே அறியப்பட்டார் . வாத்தியார்களுக்கேல்லாம் வாத்தியார் என அந்தக்கால வித்வான்கள் நாமக்கல் சேஷையங்கார் பற்றி குறிப்பிடுவார்கள். இவர் மச்சினியும் வளர்ப்பு மகளுமாகிய எம் .எஸ் சௌந்தரம் பெற்ற மூத்த மகள் சியாமளா பாலகிருஷ்ணன் . பத்மாசுப்ரமணியத்தின் மூத்த அண்ணா தான் பாலகிருஷ்ணன்.


நாமக்கல் சேஷையங்காரின் சிஷ்யர்களில் பிரதானமானவர் சித்தூர் வி நாகய்யா.
நாகய்யா பற்றி ... எம். எஸ் . சுப்புலக்ஷ்மிக்கு ஜோடியாக ' மீரா ' படத்தில் நடித்தவர். புஷ்பவல்லிக்கும் ஒரு படத்தில்(கோரகும்பர் ) ஜோடியாக நடித்தவர் . அந்த புஷ்பவல்லி -நாகய்யா படத்தில் ஒரு சின்ன ரோல் ஜெமினி கணேசன் செய்திருக்கிறார். பின்னால் 1960களிலும் 1970களின் ஆரம்பத்திலும் அப்பா ரோல்,மாமனார் ரோல்களிலும் சாமியார் ரோல்களிலும் தமிழ் படங்களில் வந்து இடைவேளைக்கு முன் அல்லது படம் முடியுமுன் பெரும்பாலும் செத்துப்போவார் பாவம் . ஒரு பெரியவர் சொன்னார் . ஒரு படம் செகண்ட் ஷோ போயிருக்கிறார் . அந்த படத்தில் நாகய்யா இடைவேளையின் போதோ , அதன் பின்னரோ , என்ன எழவோ நாகய்யா இருமி அழுது கண்ணீர் விட்டு,நடுங்கும் குரலில் உருக்கமாக பேசிவிட்டு வழக்கம்போல செத்துப்போயிருக்கிறார் . படம் முடிந்து வீட்டுக்கு வந்து இரண்டரை மணி போல இந்த பெரியவர் தூங்கிவிட்டு காலை ஏழு மணிக்கு எழுந்து தினசரியைப் பிரித்தால் மூன்றாம் பக்கம் சின்ன புகைப்படத்துடன் " பத்மஸ்ரீ வி நாகய்யா மரணம் " என்று செய்தி சின்ன அளவில். செய்தி படித்த பெரியவருக்கு அதிர்ச்சி கிஞ்சித்தும் இல்லை . வருத்தமும் கொஞ்சம் கூட இல்லை . ஒரு ஐம்பது படத்திலாவது நாகய்யாவின் மரணத்தைப் பார்த்து சலித்திருந்த தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு யாருக்குமே இது செய்தியாக அப்போது சலனமேதும் ஏற்படுத்தவே இல்லை . ஆனால் நாகய்யா பன்முக ஆற்றல் நிறைந்தவர் . திரை இசைப் பாடல்களில் கூட இவர் சொந்தக்குரலில் பாடிய " திருமுருகா என ஒரு தரம் சொன்னால் உருகுது நெஞ்சம் " இன்றும் கேட்கக்கிடைக்கும். இப்போது தி நகர் பனகல் பார்க்கில் சிலையாக இன்று நிற்கிறார்!

நாமக்கல் சேஷையங்காரிடம் வைஜயந்தி மாலாவின் அம்மா வசுந்தரா இசை பயின்றிருக்கிறார் . டைகர் வரதாச்சாரியாரின் சிஷ்யன் பிரபல நடிகர் ரஞ்சன் கூட நாமக்கல் சேஷையங்காரிடம் பாடம் பயின்றவர் தான். அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் இவரிடம் வந்து பல கீர்த்தனைகளை பாடம் கேட்டிருக்கிறார் .
நாமக்கல் சேஷையங்கார் அவர்களின் குருநாதர் நரசிம்ம ஐயங்கார் வீட்டுக்கு உஸ்தாத் அப்துல் கரீம்கான் கூட வந்து சங்கீத சர்ச்சைகளில் ஈடுபட்டிருக்கிறார் .

1955 ல் ஒரு நாள் வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்து மாலை நேரம் சந்தியாவந்தனம் , காயத்திரி, ராம ஜெபம் செய்து விட்டு கண் மூடிய நிலையில் பிரார்த்தித்த நிலையில் நாமக்கல் சேஷையங்கார் அமர்ந்திருக்கும்போது ,கோதுமைக்கஞ்சி இவருக்காக இவர் வீட்டு மாமி ( எம் .எஸ் . சௌந்தரத்தின் மூத்த சகோதரி ) எடுத்து வந்தபோது இவர் உயிர் பிரிந்தது .

நேர்மையான வாழ்க்கை சேஷையங்காரிடம் இருந்தது . ரொம்ப ஆச்சாரமான வாழ்வு வாழ்ந்திருக்கிறார் .