Share

Aug 29, 2019

அறியாத குழந்தை இழுத்துச் சப்பும் நினைவில் இறவாத முலை


“பழகாத சொல்
ஒன்றுக்கு
பதறி
பாலிடால் குடித்து
செத்துப்போனாள்
பச்சைப் பிள்ளைக்காரி.
அறியாத குழந்தை
நினைவில்
இறவாத முலையை
இழுத்துச் சப்பும்
இன்னும்..”
- போகன் சங்கர்
லோர்க்கா நாடகக்காட்சியையும், கு.அழகிரிசாமி சிறுகதை நிகழ்வையும் இணைத்து இந்த வருடம் மே மாதம் நான் “ தாயின் பிணத்துடன் பாலகர்கள்” பதிவு எழுதினேன்.
லோர்க்காவின் ”தலைப்பில்லாத ஒரு நாடகம்”.
இதில் ஷூ பாலீஷை தின்று விட்டு இறந்த தாயின் முலையின் மீது படுத்து தூங்கிப்போகும் குழந்தைகள்.
பச்சை பாலகர்களை பரிதவிக்க விட்டு இறந்து போகிற பரிதாபமான தாய் பற்றிய சிறுகதை கு.அழகிரிசாமியின்
“ இருவர் கண்ட ஒரே கனவு.”
’அம்மா செத்துப்போகாதே அம்மா, செத்துப்போகாதே அம்மா’ என்று பிணத்தைப்போட்டு அடிஅடி என்று அடிக்கும் பாலகர்களின் ஓலம்.
போகன் சங்கர் கவிதைக்கு கூட தாயின் பிணத்துடன் பாலகர்களுடன் ஒரு Relevance இருக்கிறதை காணலாம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.