Share

Aug 7, 2019

திருப்பூரில் ஒரு நாள்


திருப்பூரில் இருந்த போது அங்கு வந்திருந்த கௌதம சித்தார்த்தனை பார்க்க போயிருந்த  போது
ராம் அவருடன் இருந்தார்.
டீ,சிகரெட், டீ, சிகரெட் அடிக்கடி ராமுக்கு தேவைப்பட்டதை காண நேர்ந்தது.
சிவப்பு சட்டையில் புகைப்படத்தில் இருப்பவர் கவிஞர் காயாதவன். 
அடையார் ஆனந்த பவன் வாசலில் நின்று பேசும்போது காஃபி ஆர்டர் செய்தேன். குடித்து முடித்த ஐந்தாம் நிமிடம் ராம் ‘இன்னொரு காஃபி வேண்டும் என்றார். மீண்டும் ஒரு காஃபி வாங்கிக்கொடுத்தேன். இந்த இரண்டு காஃபிக்கிடையிலும் அடுத்தும் சிகரெட் பற்ற வைக்க அவர் மறக்கவில்லை.
...

ஷெல்லி சலித்துப் போய் “Hell is a city much like London” என்றான்.
ஆல்பர் காம்யு -“Paris is a dingy sort of town.” என்று ‘The Outsider’ நாவலில் முகம் சுழிப்பான்.
என்னைக் கேட்டால் நான் சொல்வேன்.
“Hell is a city much like Tiruppur”.
“Tiruppur is a dingy sort of town”
பன்னிரெண்டு வருட திருப்பூர் வாழ்க்கை.

இந்த புகைப்படத்தில் இடது ஓரத்தில் இருக்கும் கவிஞர், எழுத்தாளர் ஃபக்ருதின் அலி அகமதை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தென்காசியில் சந்தித்தேன்.
முருக்கு, மடக்கு பனியாரம், மகிழம்பூ என்று தெக்கத்தி பலகாரம் கொடுத்தார். ஆஹா என்ன சுவை,ருசி.
ஃபக்ருதின் பாய் காலை 9மணி முதல் இரவு 7 மணி வரை சைக்கிளில் பாயாசம் விற்கிறார். அதன் பிறகு இரவு 9 மணி போல தான் அவர் வந்து என்னை சந்தித்தார்.
தென்காசி போன்ற நல்ல ஊரை விட்டு வந்து திருப்பூரில் அன்று ஏன் இவர் பனியன் கம்பெனி வேலையில் இருந்தார்.

பத்தாண்டுகளுக்கு முந்தைய திருப்பூர் புகைப்படங்கள்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.