Share

Aug 3, 2019

ரெண்டு ரூவா காசு


கொல்லம் எக்ஸ்பிரஸ். திருநங்கை கைதட்டி 'அப்பா' என்று கைநீட்டினாள். பத்து ரூபாய் கொடுத்ததை பெற்றுக்கொண்டபின் ஒரு இரண்டு ரூபாய் காயினைக்கொடுத்தாள். 'இதை பத்திரமா வச்சுக்கங்க அப்பா. செல்வம் கொழிக்கும் . இத ஒங்க பூஜையறையில வைங்க.
 உங்களுக்கு ரொம்ப அதிர்ஷ்டம் பெருகும்.தொலச்சிடாதீங்க . வீட்டுல பீரோக்குள்ற வச்சாலும் யோகம் தான். ஒங்களுக்கு பணக்கஷ்டமே வராது. நம்புங்க.'                                                                                           

நான் 'சரிம்மா '
                                                                                                                                               அடுத்து ரயில்ல கை நீட்டிய ஒரு பாவப்பட்ட ஜீவனுக்கு அந்த ரெண்டு ரூவா காச கொடுத்தேன்.

..

இந்த ’ரெண்டு ரூவா’ சமாச்சாரத்தில் ’அதியமான் நெல்லிக்கனி’, கர்ண கொடை ரேஞ்சுக்கெல்லாம் எதுவுமேயில்லை.

தேய்ந்த சொற்களை அடுத்த இரண்டு வரியாக இங்கே உபயோகப்படுத்த வேண்டியுள்ளது.
எனக்கு எப்போதும்மூட நம்பிக்கை கிடையாது.
ஏன் கடவுள் நம்பிக்கையே இல்லை.
திருநங்கை சொன்னதை நான் நம்பவேயில்லை.
தன் அன்பையும் மரியாதையையும் இப்படி வெளிப்படுத்தினாள். சற்றும் இது போன்ற விஷயங்களுக்கு புல்லரிக்காத இயல்பினால் அதை அடுதத பிச்சைக்காரருக்கு கொடுத்து விட்டேன்.
Very simple incident.

http://rprajanayahem.blogspot.com/2019/03/blog-post_13.html





No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.