Share

May 11, 2019

தாயின் பிணத்துடன் பச்சை பாலகர்கள்


அழகான ஒரு பேரிளம் தாயும், வயது வந்த பதின்பருவ மகளும் எதிர்ப்பட்டால் ஒரு பரவசமான வாலிப உற்சாக கமெண்ட்
“தாயும் சேயும் நலம்.”
தாய போல பிள்ள, நூல போல சேல
Like mother, like daughter.
பச்சை பாலகர்களை பரிதவிக்க விட்டு இறந்து போகிற பரிதாபமான தாய் பற்றிய கதை கு.அழகிரிசாமியின் “ இருவர் கண்ட ஒரே கனவு”

மாட்டு தொழுவில் ஐந்தாறு ஓலைகளை வைத்துக் கட்டிய மறைவுக்கு இந்தப்புறம் மாடுகளும், அந்தப்புறம் வெள்ளையம்மாளும் அவளுடைய ஆறு வயதும் ஐந்து வயதும் ஆன இரு பாலகர்களும் வசிக்கிறார்கள்.
கூலி வேலைக்கு செல்லும் பெண் அவள்.
தொழுவில் குடியிருக்க வெள்ளையம்மாள் தொழுவின் சொந்தக்காரர் வீட்டில் இலவசமாக வேலை செய்து வர வேண்டியிருக்கிறது. அப்படி அவள் அழைக்கப்படும் தினத்தில் கூலி வேலைக்கும் போக முடியாது.
அவள் இப்போது கூலி வேலைக்கு போக முடியாததற்கு காரணம் குளிர் காய்ச்சல் மட்டுமல்ல. உடுத்திக்கொள்ளக்கூட துணி இல்லாமல் போனதும் தான்.
பசியில் துடிக்கும் குழந்தைகள். வேலப்பன் வீட்டில் கிடைத்த கஞ்சியையும் தரைக்கு தாரை வார்க்க வேண்டியிருக்கிறது. பசி என்பதற்காக அடுத்த வீட்டில் கஞ்சி வாங்கிக் குடிப்பது கேவலம் என்று அவர்களுக்கு அம்மா சொல்லி வந்திருந்தாள்.
தொழுவை நோக்கி ஓடி வந்தார்கள். அம்மா கிழிந்து போன பழைய கோணியின் கந்தலைப் போர்த்திக்கொண்டு கிடந்தாள். கண்கள் பாதி மூடி உடம்பில் அசைவில்லாமல்.
அம்மா எத்தனையோ தடவை செத்துப்போகும் விளையாட்டை ஆடியிருக்கிறாள். அம்மா செத்துப்போகாதே அம்மா, செத்துப்போகாதே அம்மா என்று பிணத்தைப்போட்டு அடிஅடி என்று அடித்தார்கள். செத்துப்போகாதே என்று பாலகர்கள் ஓலம்.
லோர்க்காவின் நாடகம் “ Play without a title”.

In a small room, a woman died of hunger. Also,her two starving children were playing with the dead woman’s hands, tenderly, as if they were two loaves of yellow bread. When the night came, the children uncovered the dead woman’s breasts and went to sleep upon them while eating a can of shoe polish.
ஷூ பாலீஷை தின்று விட்டு இறந்த தாயின் முலையின் மீது படுத்து தூங்கிப்போகும் குழந்தைகள்.
இடைச்செவலாயிருந்தாலென்ன. ஸ்பெயினில் ஒரு ஊராய் இருந்தாலென்ன.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.