Share

May 24, 2019

ந.முத்துசாமி எனும் உன்னத அதி மானிடன்


ந.முத்துசாமி எனும் உன்னத அதி மானிடன்

சென்ற வருடம் அக்டோபர் 24 தேதியில் முத்துசாமி மறைந்த போது ஏற்பட்ட துக்கம் வாழ்நாளில் காணாதது. நொறுங்கிய நிலை.

வேப்பிலை சாறு குடித்தால் இழப்பின் பெருந்துக்கம் குறையும் என்று பலமுறை குடிக்க வேண்டியிருந்தது.
ஒரு பெரியவர் ”இப்படி தாங்க முடியாத துயரம் ஆறு மாதம் வரை மனதை ரொம்ப வருத்தும். அதற்கு பிறகு நிவாரணம் உண்டு” என்றார்.

இன்று முத்துசாமி சார் இறந்து 7 மாதம் முடிந்து விட்டது.
துக்கம் கொஞ்சமும் நீங்கிய பாடில்லை. இழப்பின் துயரம் அகலவில்லை.
உதாரணப்படுத்திக்காட்டவே முடியாத அளவிற்கு, எவரோடுமே ஒப்பிட்டு காட்ட முடியாத ஒரு அற்புத மனிதர்
Muthuswamy's death leaves a heartache no one can heal.
His special face, his special smile ...

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.